உலகின் மிகவும் மாசுபட்ட தலைநகரம் டெல்லி: கெஜ்ரிவாலுக்கு கவர்னர் கடிதம்

உலகிலேயே மாசுபட்ட தலைநகரங்கள் பட்டியலில் டெல்லி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. இதுதொடர்பாக முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி கவர்னர் கடிதம் எழுதியுள்ளார்.
உலகின் மிகவும் மாசுபட்ட தலைநகரம் டெல்லி: கெஜ்ரிவாலுக்கு கவர்னர் கடிதம்
Published on

புதுடெல்லி:

சுவிட்சர்லாந்தில் உள்ள காற்று தர தொழில்நுட்ப நிறுவனமான ஐ.க்யு.ஏர் உலகம் முழுவதும் காற்றின் தரம் குறித்த அளவீடுகளுடன் புள்ளிவிவர பட்டியலை வெளியிட்டது. 2023ம் ஆண்டுக்கான காற்று தர அறிக்கையை நேற்று வெளியானது. அதில் உலகிலேயே மாசுபட்ட தலைநகரங்கள் பட்டியலில் டெல்லி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது என தெரிவித்தது.

இந்நிலையில், டெல்லி கவர்னர் வி.கே.சக்சேனா முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது:

இன்றைய குழப்பமான தேசிய தலைப்புச் செய்திகளுக்கு உங்கள் கவனத்தை ஈர்க்க நான் எழுதுகிறேன். டெல்லி-உலகின் மிகவும் மாசுபட்ட-மறுபடியும் மோசமான தலைநகரம்.

வரும் மாதங்களில் நீங்கள் சில உறுதியான நடவடிக்கைகளை எடுத்து, இந்த முக்கிய பிரச்சனைகளை சரிசெய்வதற்கான உங்கள் திட்டங்களை டெல்லி மக்களுடன் பகிர்ந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com