என் மலர்tooltip icon

    சத்தீஸ்கர்

    • முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 148 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய இந்தியா 149 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    ராய்ப்பூர்:

    முதலாவது சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றது.

    மொத்தம் 6 அணிகள் பங்கேற்ற இந்தத் தொடரில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

    இந்நிலையில், ராய்ப்பூரில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தேர்வு செய்தார்.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 148 ரன்கள் எடுத்தது.

    தொடக்க ஆட்டக்காரர் டுவைன் சுமித் 45 ரன்களில் ஆட்டமிழந்தார். ஓரளவு நிலைத்து விளையாடி அரை சதம் கடந்த சிம்மன்ஸ் 57 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இந்தியா சார்பில் வினய் குமார் 3 விக்கெட்டும், ஷபாஸ் நதீம் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 149 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்தியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அம்பதி ராயுடு அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார். அவர் 50 பந்தில் 74 ரன்கள் எடுத்து அவுட்டானார். சச்சின் 25 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில், இந்தியா 17.1 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 149 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. ஆட்ட நாயகன் விருது அம்பதி ராயுடுவுக்கு வழங்கப்பட்டது.

    • முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 179 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய இலங்கை அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 173 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    ராய்ப்பூர்:

    சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடரில் ராய்பூரில் நேற்று நடந்த முதல் அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 94 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா இறுதிபோட்டிக்கு முன்னேறியது.

    இந்நிலையில், இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கைபந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி ராம்தின் அதிரடி அரைசதத்தின் உதவியுடன் 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 179 ரன்கள் எடுத்தது.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் பிரையன் லாரா 41 ரன்னும், சாட்விக் வால்டன் 31 ரன்னும் எடுத்தனர்.

    இதையடுத்து, 180 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இலங்கை களமிறங்கியது. இறுதியில், இலங்கை அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 173 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் 2வது அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் டினோ பெஸ்ட் 4 விக்கெட்டும், டுவெயின் ஸ்மித் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இறுதி ஆட்டத்தில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    • சத்தீஸ்கரில் இன்று மொத்தம் 15 இடங்களில் ஒரே நேரத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
    • சோதனையின் மூலம் மதுபான ஊழல் குற்றச்சாட்டில் முன்னாள் முதல்-மந்திரி பூபேஷ் பாகல் மீதான பிடி இறுகியுள்ளது.

    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் முதல்-மந்திரியாக பூபேஷ் பாகல் இருந்தபோது கடந்த 2019 முதல் 2022-ம் ஆண்டு வரை மதுபான கொள்கையில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மதுபானங்களை சட்ட விரோதமாக விற்று சுமார் ரூ.2,100 கோடி அளவுக்கு மோசடி நடந்ததாக புகார் எழுந்துள்ளது.

    இது தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் மதுபான ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக முன்னாள் முதல்-மந்திரியும், காங்கிரஸ் தலைவருமான பூபேஷ் பாகல் மகன் சைதன்யா பாகல் வீட்டில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

    இதற்காக இன்று அதிகாலையே அமலாக்கத்துறை அதிகாரிகள் பிலாய், பத்மநகரில் உள்ள சைதன்யா பாகல் வீட்டுக்கு வந்தனர். உடனடியாக அவரது வீட்டில் சோதனை நடத்த தொடங்கினார்கள். சோதனை நடந்த போது வீட்டில் இருந்த யாரையும் வெளியே செல்ல அவர்கள் அனுமதிக்கவில்லை.

    இதேபோல் சத்தீஸ்கரில் இன்று மொத்தம் 15 இடங்களில் ஒரே நேரத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். மதுபான ஊழல் தொடர்பான குற்றச்சாட்டில் பணமோசடி செய்யப்பட்டதாக எழுந்த புகாரின் பேரின் 15 இடங்களிலும் இந்த சோதனை நடத்தப்படுகிறது.

    சைதன்யா பாகல் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். மேலும் அவருக்கு விவசாயத்திலும் ஆர்வம் உள்ளது. அவருக்கு 3 வருடங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. அவரது மனைவி கியாதியும் ஒரு விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார்.

    இந்த சோதனையின் மூலம் மதுபான ஊழல் குற்றச்சாட்டில் முன்னாள் முதல்-மந்திரி பூபேஷ் பாகல் மீதான பிடி இறுகியுள்ளது.

    • சத்தீஸ்கர் உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றது.
    • அங்கு மொத்தம் உள்ள 10 மேயர் தொகுதிகளையும் பா.ஜ.க. கைப்பற்றியது.

    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் உள்ள 10 மேயர் தொகுதிகளையும் கைப்பற்றி பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றது.

    சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தல்களில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றது. இதைத்

    தொடர்ந்து, கடந்த 11-ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதன் முடிவுகள் சமீபத்தில் வெளியாகின.

    இங்கு மொத்தமுள்ள 49 நகராட்சி கவுன்சில் தலைவர் பதவிகளில் 35 இடங்களில் பா.ஜ.க.வும், காங்கிரஸ் 8 இடங்களிலும் வென்றது. 114 நகர பஞ்சாயத்துகளில் பா.ஜ.க. 81 இடங்களிலும், காங்கிரஸ் 22 இடங்களிலும் வென்றது. நகராட்சி வார்டுக்கு நடந்த தேர்தலில் பெரும்பாலான இடங்களை பா.ஜ.க. கைப்பற்றியது.

    இதற்கிடையே, சத்தீஸ்கரின் பரஸ்வாரா கிராமத்தில் தேர்வு செய்யப்பட்ட 11 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் நேற்று பதவியேற்றனர். இதில் தேர்வான 6 பெண் உறுப்பினர்களுக்கு பதிலாக அவர்களது கணவர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

    இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானதை தொடர்ந்து பல்வேறு புகார்கள் எழுந்தது.

    இந்நிலையில், பெண் உறுப்பினர்களுக்கு பதிலாக அவர்களது கணவர்கள் பதவியேற்றது குறித்து விசாரணை நடத்துப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

    • சத்தீஸ்கரில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது.
    • பாஜகவின் பூஜா விதானியின் மேயர் பதவியேற்பு விழாவில் சத்தீஸ்கர் துணை முதல்வர் கலந்து கொண்டார்

    சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாநகரட்சி மேயராக பதவியேற்ற பாஜகவின் பூஜா விதானி பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டபோது, 'நாட்டின் இறையான்மையைக் காப்பேன்' என்பதற்குப் பதிலாக 'வகுப்புவாதத்தைக் காப்பேன்' என படித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    சத்தீஸ்கரில் சமீபத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சியான பாஜக அமோக வெற்றி பெற்றது.

    பாஜகவின் பூஜா விதானியின் மேயர் பதவியேற்பு விழாவில் சத்தீஸ்கர் மாநில துணை முதல்வர் அருண் சாவோ, மத்திய அமைச்சர் டோகன் சாஹு ஆகியோர் கலந்து கொண்டனர்.

    பூஜா விதானி மேயர் பதவியேற்பு விழாவில் 'இறையான்மை' என்பதை 'வகுப்புவாதம்' என்று தவறாக வாசித்ததை கவனித்த மாவட்ட ஆட்சியர் உடனே சுட்டிக்காட்டிய நிலையில் பூஜா விதானி மீண்டும் சரியாக வாசித்தார்.

    இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், இந்த விவகாரத்தை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது

    • வனப்பகுதியில் பாதுகாப்பு படையினர் நக்சல்களை தேடி ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

    சத்தீஷ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் உள்ள கிஸ்தாராம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் பாதுகாப்புப்படையினர் நக்சல்களை தேடி ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது, அந்த பகுதியில் பதுங்கியிருந்த நக்சல்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 2 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    அங்கு தொடர்ந்து, தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

    இந்த ஆண்டில் மட்டும் இதுவரை மாநிலத்தில் ஏற்பட்ட தனித்தனி மோதல்களில் 83 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

    • சத்தீஸ்கரில் இயற்கைக்கு மாறான உடலுறவு கொண்டதால் மனைவி உடல் நலம் பாதிக்கப்பட்டார்.
    • ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி மனைவி உயிரிழந்தார்.

    சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் கடந்த 2017-ம் ஆண்டு அவருடைய மனைவியுடன் இயற்கைக்கு மாறான உடலுறவு கொண்டதாக கூறப்படுகிறது.

    இதில் அவருடைய மனைவி கடுமையான உடல் நலம் பாதிக்கப்பட்டார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இயற்கைக்கு மாறான உடலுறவு கொண்டதாக அவருடைய கணவரை போலீசார் கைது செய்தனர்.

    இந்த வழக்கில் ஜக்தல்பூர் கூடுதல் அமர்வு நீதிமன்றம் அந்த நபருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்தது.

    இது குறித்து கணவன் சத்தீஸ்கர் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கின் விசாரணை முடிந்து நேற்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

    அதில் 2013-ம் ஆண்டு ஐ.பி.சி. பிரிவு 375-ல் செய்யப்பட்ட திருத்தத்தின்படி குற்றம் சாட்டப்பட்டவரின் செயலை குற்றமாக கருத முடியாது. மனைவி குறிப்பிட்ட வயதுக்கு மேல் இருக்கும் போது கணவன் செய்யும் எந்த ஒரு பாலியல் செயலும் பாலியல் வன்கொடுமையின் கீழ் வராது. சம்மதம் இனி முக்கியமில்லை.

    மனைவியுடன் இயற்கைக்கு மாறான உடலுறவு குற்றமில்லை.இது தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என தீர்ப்பளித்தார்.

    • இரு தரப்புக்கும் கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.
    • துப்பாக்கி சண்டையில் 2 பாதுகாப்பு படை வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

    பிஜப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் இருந்து வருகிறது. இதையடுத்து நக்சலைட்டுகள் நடமாட்டம் அதிகம் உள்ள காட்டுப்பகுதிகளில் சிறப்பு அதிரடிப்படையினர் தேடுதல் வேட்டை நடத்தி கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் துப்பாக்கி சண்டையில் நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர்.

    இந்த நிலையில் சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் இந்திராவதி தேசிய பூங்கா பகுதியில் உள்ள ஒரு வனப்பகுதியில் இன்று காலை பாதுகாப்புப் படையினர் நக்சலைட் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நக்சலைட்டுகள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து பாதுகாப்பு படையினர் எதிர்தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கும் கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 12 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    இந்த துப்பாக்கி சண்டையில் 2 பாதுகாப்பு படை வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

    இதுகுறித்து போலீசார் கூறும்போது, இந்திராவதி தேசிய பூங்கா பகுதியில் உள்ள வனப்பகுதியில் பல்வேறு பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த வீரர்கள் நக்சலைட்டுகளை தேடும் பணியில் ஈடுபட்டி ருந்தபோது துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் 12 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். அவர்கள் அனைவரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன.

    துப்பாக்கிச் சண்டையில் மாநில காவல்துறையின் மாவட்ட ரிசர்வ் காவல்படையைச் சேர்ந்த ஒருவர் மற்றும் சிறப்புப் பணிப் படையைச் சேர்ந்த ஒருவர் என 2 பாதுகாப்புப் படையினர் வீரமரணம் அடைந்தனர். 2 பேர் காயமடைந்தனர் என்றனர்.

    அப்பகுதியில் தொடர்ந்து துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.

    கடந்த ஜனவரி 16-ந்தேதி தெற்கு பிஜாப்பூர் மாவட்டத்தின் காடுகளில் நடந்த என்கவுண்டரில் 12 நக்சலைட்டுகளும், கடந்த 2-ந்தேதி பிஜாப்பூா் மாவட்டத்தின் கங்களூர் காவல் நிலையத்தின் எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த என்கவுண்டரில் 8 நக்சலைட்டுகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சலபதி என்று அழைக்கப்படும் ராமச்சந்திர ரெட்டி இயக்கத்தின் முக்கிய 7 தலைவர்களில் ஒருவர் ஆவார்.
    • அதன் பிறகே அவரது தலைக்கு ரூ.1 கோடி பரிசு அறிவிக்கப்பட்டது.

    சத்தீஸ்கரில் நடந்து வரும் நக்சல் ஒழிப்பு நடவடிக்கையில் நேற்று 20 நக்சலைட்டுகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    கரியாபண்ட் மாவட்டத்தில் சத்தீஸ்கர்-ஒடிசா எல்லையில் உள்ள மெயின்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காட்டில் திங்கள்கிழமை இரவும் நேற்றும் [செவ்வாய்க்கிழமை] பாதுகாப்புப் படையினருக்கும் நக்சல்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது.

    கொல்லப்பட்ட நக்சலைட்டுகளில் இரண்டு பெண்களும் அடங்குவர். மேலும் சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் நக்சலைட்டு இயக்க தலைவர் ஒருவரும் அடங்குவார். அவரது தலைக்கு ரூ.1 கோடி அறிவிக்கப்பட்டு இருந்தது. சலபதி என்று அழைக்கப்படும் ராமச்சந்திர ரெட்டி இயக்கத்தின் முக்கிய 7 தலைவர்களில் ஒருவர் ஆவார்.

    இராணுவ வியூகம் மற்றும் கொரில்லா போரில் நிபுணராகக் சலபதி கருதப்படுகிறார். 2004 இல், PWG மற்றும் பிற மாவோயிஸ்ட் குழுக்கள் இணைந்தபோது, சலபதி சிபிஐ (மாவோயிஸ்ட்) இல் உறுப்பினராகி இயக்கத்தில் பெரிய இடத்துக்கு வளரத் தொடங்கினார்.

    ஒடிசாவின் கந்தமால் மற்றும் காலாஹண்டி மாவட்டங்களில் சலபதி களத்தில் நக்சல் நடவடிக்கைகளைத் தொடங்கினார். 2011ல், கந்தமால் மாவட்டத்தில் உள்ள போலீஸ் ஆயுதக் கிடங்கில் கொள்ளையடிக்க அவர் மேற்கொண்ட முயற்சி, போலீசாரால் முறியடிக்கப்பட்டது.

    தொடர்ந்து ஒடிசா மற்றும் சத்தீஸ்கர் எல்லையில் செயல்பட்ட சலபதி நக்சல் நடவடிக்கைகளில் முக்கிய பங்காற்றினார். 2008 ஆம் ஆண்டு ஒடிசாவின் நயாகர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 13 போலீசார் கொல்லப்பட்டனர். இந்தத் ராமகிருஷ்ணா என்ற தலைவர் திட்டமிட்ட இந்த தாக்குதலை களத்தில் வெற்றிகரமாக நடத்தியவர் சலபதி. 

    10 வருடம் தலைமறைவாக வாழ்ந்த சலபதி தனது மனைவி அருணாவுடன் (சைதன்யா வெங்கட் ரவி) காடுகளில் பதுங்கி இருந்ததாக கூறப்படுகிறது. ஒரு நாள் கைவிடப்பட்ட ஸ்மார்ட்போனில் அருணா மற்றும் சலபதியின் செல்ஃபி கண்டுபிடிக்கப்பட்டது.

     

    இது 2016 இல் நக்சலைட்டுகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு மீட்கப்பட்டது. இந்த செல்ஃபி அவரது அடையாளத்தை வெளிப்படுத்தியது.

    அதன் பிறகே அவரது தலைக்கு ரூ.1 கோடி பரிசு அறிவிக்கப்பட்டது. இறுதியில், இந்த செல்ஃபியை ஒரு தடயமாகப் பயன்படுத்தி, சத்தீஸ்கர்-ஒடிசா எல்லையில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த என்கவுன்டரில் சலபதி கொல்லப்பட்டுள்ளார்.  

    • இரண்டு பெண் நக்சலைட்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டன.
    • வெடிமருந்துகள் மற்றும் ஐஇடிகள், செல்ப்-லோடிங் ரைபிள் உள்ளிட்டவை இதில் அடங்கும்.

    சத்தீஸ்கரில் நடந்து வரும் நக்சல் ஒழிப்பு நடவடிக்கையில் இன்று 16 நக்சலைட்டுகள் பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    கரியாபண்ட் மாவட்டத்தில் சத்தீஸ்கர்-ஒடிசா எல்லையில் உள்ள மெயின்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காட்டில் நேற்று [திங்கள்கிழமை] இரவும் இன்று [செவ்வாய்க்கிழமை] அதிகாலையும் பாதுகாப்புப் படையினருக்கும் நக்சல்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது.

    இதில் 16 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.மாவட்ட ரிகர்வ் படை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை, சத்தீஸ்கர் கோப்ரா மற்றும் ஒடிசாவை சேர்ந்த சிறப்பு படை ஆகியவை இணைந்து அந்த பகுதியில் தேடுதல் வேட்டயில்  ஈடுபட்டு வருகின்றனர்.

    என்கவுண்டரை உறுதிப்படுத்திய கரியாபண்ட் காவல் கண்காணிப்பாளர் நிகில் ரகேச்சா, திங்கள்கிழமை மாலை மெயின்பூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட காடுகளில் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையின் போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

    இரண்டு பெண் நக்சலைட்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டன. கொல்லப்பட்ட நக்சலைட்டுகளின் ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. வெடிமருந்துகள் மற்றும் ஐஇடிகள், செல்ப்-லோடிங் ரைபிள் உள்ளிட்டவை இதில் அடங்கும். 

    சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் நக்சலைட்டு இயக்க தலைவர் ஒருவரும் அடங்குவார். அவரது தலைக்கு ரூ.1 கோடி அறிவிக்கப்பட்டு இருந்தது.

    துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த ஒரு கோப்ரா ஜவான் வீரருக்கு ராய்ப்பூரில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார். கடந்த வாரம் பாதுகாப்பு படை வீரர்கள் 15-க்கும் மேற்பட்ட நக்சலைட்டுகளை சுட்டுக் கொன்று இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதனை தொடர்ந்து இன்று அதிகாலை முதல் நடந்து வரும் துப்பாக்கிச்சூட்டினால் நக்சல் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடந்து வருவதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது. 

    இதுகுறித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இதுகுறித்து கூறியதாவது:-

    நக்சலைட்டுகள் இல்லாத இந்தியாவை உருவாக்குவதில் பாதுகாப்பு படையினர் வெற்றி பெற்றுள்ளனர். நக்சலைட்டுகள் இறுதி மூச்சை எண்ணிக் கொண்டு இருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.

    • இன்று காலை முதல் நடைபெற்ற சண்டையில் நக்சலைட்டுகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.
    • கடந்த 12-ந்தேதி 5 பேர் கொல்லப்பட்ட நிலையில், இன்று 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

    சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள காட்டுப் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையில் கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இன்று காலை 9 மணிக்கு இந்த சண்டை தொடங்கியது. இன்று மாலை வரை தொடர்ந்து சண்டையில் நக்சலைட்டை சேர்ந்த 12 பேர் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

    மூன்று மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட ரிசர்வ் படை, சிஆர்பிஎஃப்-ன் ஐந்து பட்டாலியன்கள், கோப்ரா, சிஆர்பிஎஃப்-ன் 229-வது பட்டாலியன் ஆகியவற்றை சேர்ந்த வீரர்கள் இணைந்து நக்சலைட்டுகள் வேட்டையில் ஈடுபட்டனர்.

    இந்த மாதத்தில் பிஜப்பூரில் நடைபெற்ற 2-வது என்கவுண்டர் இதுவாகும். கடந்த 12-ந்தேதி நடைபெற்ற சண்டையில் ஐந்து நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். இதில் இரண்டு பேர் பெண்கள் ஆவார்கள்.

    கடந்த 6-ந்தேதி நக்சலைட்டுகள் ராணுவ வாகனம் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் 9 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து நக்சலைட்டுகளை தேடும் பணியில் வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    • கோடாரி மற்றும் குச்சிகளைப் பயன்படுத்தி சந்தோஷின் குடும்பத்தைத் அவர்கள் தாக்கினர்.
    • அம்பிகாபூர் மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    சத்தீஸ்கரில் இந்த வருட தொடக்கத்தில் பிஜப்பூர் மாவட்டத்தில் சாலை கட்டுமான ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் முகேஷ் சந்திரகர் ஒப்பந்ததாரரால் படுகொலை செய்யப்பட்டார்.

    இந்நிலையில் சத்தீஸ்கரின் சூரஜ்பூரை சேர்ந்த ஆஜ் தாக் பத்திரிகையாளர் சந்தோஷின் பெற்றோர் மற்றும் சகோதரர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சந்தோஷின் பெற்றோர்களான மகே டோப்போ (57) மற்றும் பசந்தி டோப்போ (55), அவரது சகோதரர் நரேஷ் டோப்போ (30) ஆகியோருடன் ஜகன்னாத்பூர் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் விவசாயம் செய்ய வந்தனர். இந்த நிலம் தொடர்பாக அவர்களது உறவினர்களுடன் தகராறு இருந்து வந்துள்ளது.

    இந்நிலையில் நேற்று மதியம் 1 மணியளவில், அவர்களது உறவினர்கள் ஆறு முதல் ஏழு பேர் வந்து, கடும் வாக்குவாதம் செய்துள்ளனர். வாக்குவாதத்தால் ஏற்பட்ட மோதல் விரைவில் வன்முறையாக மாறியது. கோடாரி மற்றும் குச்சிகளைப் பயன்படுத்தி சந்தோஷின் குடும்பத்தைத் அவர்கள் தாக்கினர்.

    இதில் தலையில் பலத்த காயம் அடைந்த பாசந்தி மற்றும் நரேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர், மாகே பலத்த காயமடைந்தார். அம்பிகாபூர் மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

     

    சந்தோஷின் மற்றொரு சகோதரர், உமேஷ் டோப்போ, தப்பித்து, அருகில் உள்ள கிராம மக்களிடம் உதவியை நாடியுள்ளார். தாக்குதல் நடத்தியவர்கள் முன்பு அந்த நிலத்தில் விவசாயம் செய்திருந்தனர்.

    ஆனால் நீதிமன்ற தீர்ப்பு சந்தோஷின் குடும்பத்திற்கு உரிமை வழங்கியதால் பகை வளர்ந்துள்ளது. சம்பவம் நடந்த உடனேயே குற்றவாளிகள் தப்பி ஓடிவிட்டனர். வழக்குப்பதிவு செய்த போலீஸ் அவர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.  

    ×