என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சத்தீஸ்கர் என்கவுண்டர்"

    • பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
    • தேடுதல் பணி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

    சத்தீஸ்கரின் பஸ்தார் பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த என்கவுன்டரில் நான்கு மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். இதனை பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    நாராயண்பூர் மற்றும் தண்டேவாடா மாவட்டங்களின் எல்லையில் தெற்கு அபுஜ்மாத் காட்டில் சனிக்கிழமை மாலை ஏற்பட்ட மோதலில் தலைமைக் காவலர் சன்னு கரம் உயிரிழந்தார். பாதுகாப்புப் படையினரின் கூட்டுக் குழு மாவோயிஸ்டுகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது மாவோயிஸ்டுகள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே துப்பாக்கி சூடு துவங்கியது. நேற்றிரவு துப்பாக்கிச் சண்டை நிறுத்தப்பட்ட பின், நான்கு மாவோயிஸ்டுகளின் உடல்கள், ஏ.கே.-47 ரக துப்பாக்கி மற்றும் எஸ்.எல்.ஆர். ரக துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்டன.

    என்கவுன்டரை தொடர்ந்து அந்தப் பகுதியில் தேடுதல் பணி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

    • வனப்பகுதியில் பாதுகாப்பு படையினர் நக்சல்களை தேடி ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

    சத்தீஷ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் உள்ள கிஸ்தாராம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் பாதுகாப்புப்படையினர் நக்சல்களை தேடி ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது, அந்த பகுதியில் பதுங்கியிருந்த நக்சல்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 2 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    அங்கு தொடர்ந்து, தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

    இந்த ஆண்டில் மட்டும் இதுவரை மாநிலத்தில் ஏற்பட்ட தனித்தனி மோதல்களில் 83 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

    ×