என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    கர்ப்பகாலத்தில் தொண்டை வலி ஏற்படுவதற்கான காரணங்கள் நிறைய உண்டு. தொண்டை வலி ஏற்படுவதற்கான காரணத்தையும், தீர்வையும் அறிந்து கொள்ளலாம்.
    கர்ப்பகாலத்தில் தொண்டை வலி ஏற்படுவதற்கான காரணங்கள் நிறைய உண்டு. கிருமி தொற்று அல்லது பாக்டீரியா தொற்று காரணமாக அல்லது காய்ச்சல் மற்றும் சளி காரணமாக தொண்டையில் உண்டாகும் அழற்சியால் தொண்டை வலி உண்டாகிறது. ஒவ்வாமை, தொண்டை தசையில் வலி, சைனஸ், ரசாயனம் அல்லது மாசு போன்றவற்றின் வெளிப்பாடு போன்றவற்றின் காரணமாக இந்த தொண்டை வலி ஏற்படலாம்.

    கர்ப்பகாலத்தில், ஈஸ்ட்ரோஜென் மற்றும் ப்ரோஜெஸ்ட்ரோன் ஆகியவற்றில் மாறுபாடு தோன்றுவதன் காரணமாக மற்ற பாதிப்புகளான குமட்டல், தலைவலி ஆகியவற்றுடன் இணைந்து தொண்டை வலியும் உண்டாகலாம். கர்ப்பகாலத்தில் உண்டாகும் தொண்டை வலி அடுத்த 7 நாட்களில் தானாக மறைந்து விடும், அதைப் பற்றி கவலை கொள்ளத் தேவையில்லை. தொண்டை வலியால் ஒரு சிறு எரிச்சல் மட்டுமே உண்டாகும். வேறு எந்த ஒரு பெரிய பாதிப்பும் ஏற்படாது.

    ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் 1/2 ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும். ஒரு நிமிடம் முழுவதுமாக இந்த ஒரு கப் நீரை கொஞ்சம் கொஞ்சமாக வாயில் ஊற்றி தொண்டையில் படுமாறு கொப்பளிக்கவும். தினமும் ஒரு நாளில் மூன்று முறை இதனை செய்து வருவதால் தொண்டை வலியிலிருந்து விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

    நீராவி உட்செலுத்துதலால் சளி சவ்வுகளில் ஈரப்பதம் அதிகரித்து தொண்டை வலிக்கு விரைந்து நிவாரணம் கிடைக்கிறது. இதனால் உங்களால் எளிதில் மூச்சு விட முடிகிறது, மேலும் சௌகரியமாக தூங்க முடியும். இதனால் உடல் எளிதில் குணமாகும்.

    கர்ப்பகாலத்தில் உண்டாகும் அசிடிட்டியைத் தடுக்க இஞ்சி ஒரு சிறப்பான மருந்தாக செயல்படுகிறது. அசிடிட்டியுடன் கூடிய குமட்டல் மற்றும் வாந்தி ஆகியவற்றையும் கட்டுப்படுத்த இஞ்சி உதவுகிறது. கர்ப்பகாலத்தின் போது குமட்டல் மற்றும் வாந்தியால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இஞ்சி ஒரு பாதிப்பில்லாத மற்றும் சாத்தியமான பயனுள்ள மாற்று விருப்பமாக கருதப்படுகிறது.

    தொண்டை வலியால் கர்ப்பகாலத்ல் அவதிப்படும்போது, உங்கள் தொண்டைக்கு ஓய்வு கொடுக்கும் விதமாக பேசுவதைக் குறைத்துக் கொள்ளவும். மேலும், கர்ப்பகாலங்களில் உங்கள் உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் காரணத்தினால், கிருமிகள் மற்றும் பாக்டீரியாவுடன் போராட உங்கள் உடல் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்.

    ஆகவே உங்கள் உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு உதவ ஓய்வு மிகவும் அவசியம். இதனால் உங்க உடலுக்கு ஆற்றல் அதிகம் கிடைத்து விரைந்து உடல் குணமாகும். 
    கோடைக்காலங்களில் தான் மோரை அதிகம் பருகுவோம். இங்கு அத்தகைய மோரை எப்படி சுவையாக செய்து குடிப்பது என்று கொடுக்கப்பட்டுள்ளது.
    தேவையான பொருட்கள்:

    கெட்டித் தயிர் - 1 கப்
    தண்ணீர் - 1 கப்
    கொத்தமல்லி - 2 டீஸ்பூன்
    மோர் மிளகாய் - 1
    உப்பு - தேவையான அளவு

    தாளிப்பதற்கு...

    எண்ணெய் - 1 டீஸ்பூன்
    கடுகு - 1/4 டீஸ்பூன்

    அரைப்பதற்கு...

    பச்சை மிளகாய் - 1/2
    கறிவேப்பிலை - 3 இலை
    இஞ்சி - 1/4 இன்ச்



    செய்முறை:

    தயிரை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதனை நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    மிக்ஸியில் பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் இஞ்சி சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

    அரைத்த விழுதை மோரில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். அதே எண்ணெயில் மோர் மிளகாயை வறுத்துக் கொள்ள வேண்டும்.

    வறுத்த மோர் மிளகாயை மோரில் உடைத்து போட்டு, தாளித்ததையும் ஊற்றி, கொத்தமல்லியைத் தூவி தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து பரிமாறினால், சூப்பரான மசாலா மோர் ரெடி!!!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    சாதாரண உடற்பயிற்சிகளை விட ஏரோபிக்ஸ் உடற்பயிற்சி சற்று வித்தியாசமானது. ஏரோபிக்ஸ் (Aerobics) எக்சர்சைஸ் செய்வதால் எலும்பு, தசைகள் வலுவடைவதைப் போலவே இதயம், நுரையீரலும் வலுவாகும்.
    சாதாரண உடற்பயிற்சிகளை விட ஏரோபிக்ஸ் உடற்பயிற்சி சற்று வித்தியாசமானது. இதயத் துடிப்பையும், சுவாசத்தையும் தூண்டி இதயத்துக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தை சீர்படுத்துவதால் இதனை கார்டியோ எக்சர்சைஸ் என்றும் சொல்லலாம்.

    ‘‘ஏரோபிக்ஸ் (Aerobics) எக்சர்சைஸ் செய்வதால் எலும்பு, தசைகள் வலுவடைவதைப் போலவே இதயம், நுரையீரலும் வலுவாகும். உடலின் கெட்ட கொழுப்பு கரையும்; டைப் 2 நீரிழிவும் கட்டுக்குள் வரும். தொடர்ந்து ஏரோபிக்ஸ் செய்வதன் மூலம் உடலில் உள்ள அதிகப்படியான சதையை விரைவில் கரைக்கலாம்.

    தோல் சுருக்கமடைவதை தடுப்பதால் வயதான தோற்றத்திலிருந்தும் விடுபடலாம்.

    இருந்த இடத்திலேயே Jogging excercise செய்வதால் கால்கள் நன்கு வலுவடைகின்றன. கைகள் இரண்டையும் தலைக்கு மேலே தூக்கி செய்யும் Hand excercise கைகளில் உள்ள தளர்வடைந்த தசைகளை இறுக்கமடையச் செய்யும்.

    குழந்தை பிறப்புக்குப் பிறகு இளம் தாய்மார்களுக்கு இடுப்பு மடிப்புகளில் சதை போட்டு விடும். இவர்கள் கைகள் இரண்டையும் இடுப்பில் வைத்துக் கொண்டு இரண்டு புறமும் பக்க வாட்டில் திரும்பி வேகமாக இடுப்புக்கான பயிற்சியை செய்தால் ஸ்லிம் இடுப்பழகு கிடைத்து விடும்.

    வலது கையால் இடது காலையும், இடதுகையால் வலது காலையும் மாற்றி, மாற்றி டான்ஸ் ஆடுவது போல வேகமாக செய்தால் அடிவயிற்று பகுதியில் இருக்கும் சதை குறையும்.

    தற்போது அதிக நேரம் கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்களுக்கு மணிக்கட்டு, தோள் பட்டைகளில் வலி ஏற்படுகிறது. மேலும், இருசக்கர வாகனங்களில் நெடுந் தொலைவு பயணம் செய்பவர்களுக்கும் இடுப்பு, தோள்பட்டை வலி வருகிறது.

    இதற்கெல்லாம் தனியாக பயிற்சிகள் இருக்கிறது. வீடியோக்களையும் பார்த்து செய்வதை விட பயிற்சியாளர்களிடம் முறையாகக் கற்றுக் கொண்டு செய்யவேண்டும் என்பது முக்கியம்.

    ஏனெனில், ஒவ்வொருவரின் உடல் செயல்பாடும் (Metabolism) வேறு வேறு. அதற்குத் தகுந்தவாறு பயிற்சியாளர் கற்றுக் கொடுப்பார் என்பதே அதற்கு காரணம்.

    ‘இவற்றுடன் ஏரோபிக்ஸில் முக்கியமான ஒரு ப்ளஸ்…. வழக்கமான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளும் போது சலிப்பு ஏற்பட்டு விடும் வாய்ப்பு உண்டு. அதனாலேயே தொடர முடியாமல் கொஞ்ச காலத்தில் விட்டு விடுவோம்.

    ஆனால், ஏரோபிக்ஸ் பயிற்சிகள் கற்றுக் கொள்வதற்கும், பயிற்சி செய்வதற்கும் சந்தோஷமாகவும், ஆர்வத்தைத் தூண்டும் வகையிலும் இருக்கும் என்பதால் தொடர்ந்து மிஸ் பண்ணவே மாட்டோம். ஏரோபிக்ஸில் இது முக்கியமான விஷயம்’’.
    பெண்கள் அதிகளவு சந்திக்கும் ஓர் பிரச்சனை தான் தலைமுடி உதிர்வது. கோடையில் தலைமுடி உதிர்வதற்கான காரணங்களையும் அதற்கான தீர்வையும் காண்போம்.
    தலைமுடி உதிர்வதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. அதில் பரம்பரை முதுமை, காயங்கள், ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் போன்றவை குறிப்பிடத்தக்கவை. சில சமயங்களில் காலநிலை மாறுதல்களாலும் தலைமுடி உதிர்வது என்பது அதிகமாக இருக்கும். இதற்கு வேறு சில காரணங்களும் உள்ளன. இப்போது கோடையில் தலைமுடி உதிர்வதற்கான காரணங்களையும் அதற்கான தீர்வையும் காண்போம்.

    கோடையில் முடி எப்படி அதிகம் உதிருமோ, அதேபோல முடியின் வளர்ச்சியும் அதிகமாக இருக்கும். மற்ற காலங்களை விட கோடையில் உடலில் இரத்த ஓட்டம் அதிகமாக இருக்கும். இதற்கு வெப்பமான காலநிலையில் உடலின் வெப்பம் அதிகமாக இருக்கும். இதனால் உடலில் இரத்த ஓட்டமும் அதிகமாக இருக்கும். ஆகவே இக்காலத்தில் முடி வளர்வதற்கு தேவையான பராமரிப்புகளை மேற்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.

    கோடையில் தலைமுடி உதிர்வதற்கு முக்கிய காரணம் வியர்வை. கோடையில் அதிகம் வியர்ப்பதால் முடியின் கால்கள் வலிமையின்றி இருக்கும். இந்த சமயத்தில் சீப்பு கொண்டு அளவுக்கு அதிகமாக சீவினால், தலைமுடியை வேரோடு கையில் பெறவேண்டியது தான். கோடையில் தினமும் தலைக்கு குளிப்பதனால் தலையில் வியர்வையினால் சேர்ந்த அழுக்குகள் முழுமையாக வெளியேற்றப்படும்.

    ஆனால் தினமும் தலைக்கு ஷாம்பு போடாதீர்கள் இல்லாவிட்டால் தலைமுடி அதிகம் உதிர்வதோடு, ஸ்கால்ப்பில் உள்ள இயற்கை எண்ணெய்களும் நீங்கிவிடும். முக்கியமாக கோடையில் சூரியக்கதிர்கள் நேரடியாக தலைமுடியைத் தாக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதற்கு வெளியே செல்லும் போது தலைக்கு ஏதேனும் துணியை சுற்றிக்கொண்டோ அல்லது தொப்பி அணிந்து கொண்டோ, குடைபிடித்துக்கொண்டோ செல்லலாம்.

    இன்று பெரும்பாலானவர்களுக்கு இருக்கும் பிரச்சினைகளில் ஒன்று ஸ்ட்ரெஸ் என்று சொல்லப்படும் மன அழுத்தம். இது உளவியல் ரீதியாக மட்டுமின்றி உடலியல் ரீதியாகவும் மனிதர்களை பாதிக்க செய்கிறது.
    இன்று பெரும்பாலானவர்களுக்கு இருக்கும் பிரச்சினைகளில் ஒன்று ஸ்ட்ரெஸ் என்று சொல்லப்படும் மன அழுத்தம். இது உளவியல் ரீதியாக மட்டுமின்றி உடலியல் ரீதியாகவும் மனிதர்களை பாதிக்க செய்கிறது. மகிழ்ச்சியை தொலைத்து விட்டு நிம்மதியின்றி தவிப்பவர்கள் அதற்கு காரணமாக சொல்வது இந்த மனஅழுத்ததைத்தான்.!

    மன அழுத்தம் மக்களை எந்த வகையில் பாதிக்கிறது?

    நம் முன்னோர்கள் இருப்பதைக் கொண்டு நிம்மதியாக வாழ்ந்தார்கள். போதுமென்ற மனம் அவர்களிடம் இருந்தது. எதிலும் பேராசையோ பரபரப்போ இருந்ததில்லை. இதனால் மன அழுத்தமும் இல்லை. இன்றைய காலத்து மக்கள் எந்திரத்தனமான அவசர உலகில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். எனவே குடும்பம், வேலை, தொழில், பணம், படிப்பு என எதுவானாலும் இவற்றின் அன்றாட செயல்களில் கொஞ்சம் மாறினாலோ அல்லது அதிகரித்தாலோ உடனே ஏதோ பெரிய பிரச்சினை வந்து விட்டதாக நினைத்து மூச்சு திணறி போகிறார்கள். அது தொடர்பாக யாராவது கேள்வியோ விளக்கமோ கேட்டு விட்டால்போதும் நெஞ்சு படபடத்து “எனக்கு மட்டும் ஏன் இத்தனை கஷ்டம்” என்று புலம்புகிறார்கள்.

    இந்த மனஅழுத்தம்தான் அவர்களை துயரத்துக்குள் அமிழ்த்தி விடுகிறது. வாழ்க்கையே இருண்டு விட்டது,எதிர்காலம் என்ன ஆகுமோ என்று அச்சப்படுகிறார்கள். இதனால் கையில் இருக்கும் வாழ்வை அனுபவிக்காமல் நழுவ விட்டு விடுகிறார்கள்.

    வாழ்க்கை இனிதாக அமைய மன அழுத்தத்தை எவ்வாறு மடைமாற்றம் செய்ய வேண்டும்?

    மன அழுத்தம் குறித்து அமெரிக்காவில் பல ஆண்டுகாலமாக பல்லாயிரம் பேர்களிடம் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. இதில் “மன அழுத்தம் என்பது நண்பனுக்கு நண்பன், விரோதிக்கு விரோதி. அதனை சாதகமாகவும் பயன்படுத்தி கொள்ளலாம். பாதகமாகவும் ஆக்கிக் கொள்ளலாம்” என்று கண்டறியப்பட்டது. அதாவது ஒரு வேலையை விரும்பி செய்யும் போது பாஸிட்டிவ் ஆன மன அழுத்தம் ஏற்படுகிறது. இதனால் பாதிப்பில்லை. மாறாக அப்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படும் திறனை அதிகரிக்க செய்கிறது. அந்த வேலையை செய்து முடிப்பதற்கான ஆற்றலை, புத்துணர்ச்சியை கொடுக்கிறது. இதனால் ஸ்ட்ரெஸ்ஸாக எண்ணக்கூடிய அந்த வேலையை மகிழ்ச்சி தரக்கூடியதாக மாற்றி விடுகிறது.

    அதையே சுமையாக நினைத்து செய்யும் போது நெகட்டிவ் ஸ்ட்ரெஸ் ஏற்பட்டு நமது செயல் திறனை முடக்கி விடுகிறது. இதனால் உடலும் மனமும் பாதிக்கப்பட்டு சோர்ந்து விடுகிறது. மன அழுத்தத்தின் விளைவு குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் பிரச்சினைகளோ, சூழ்நிலைகளோ உங்களுக்கு எந்த கெடுதலையும் தராது. எந்த நேரத்திலும் உங்கள் மனநிலையை நேர்மறையாக வைத்திருந்தால் போதும், அதுவே எந்த பிரச்சினைகளையும் சமாளித்து அந்த சூழலை மகிழ்ச்சியானதாக மாற்றி விடும்.

    பொதுவாக மன அழுத்தத்தில் இருக்கும் பலரும் அந்த சமயத்தில் தங்களுக்கு யாராவது ஆறுதல் சொல்ல மாட்டார்களா? என்று எதிர்பார்ப்பார்கள். அல்லது அப்படி பட்டவர்களை தேடிச் செல்வார்கள். அங்கு ஆறுதல் கிடைத்தால் சரி, இல்லை என்றால் மன அழுத்தம் மேலும் அதிகரித்து மோசமான விளைவை ஏற்படுத்திவிடும்.

    இதற்கு காரணம் என்னவென்றால் நம் உடலில் உள்ள பிட்யூட்டரி சுரப்பியில் இருந்து சுரக்கும் ஆக்ஸிடோசின் ஹார்மோன்தான். இந்த ஹார்மோன் தான் யாராவது நம்மை கவனிக்க மாட்டார்களா? என்ற ஏக்கத்தை நம் மனதில் உண்டாக்குகிறது. மன அழுத்தம் இருக்கும் சமயத்தில் நீங்கள் ஆறுதலைத்தேடி செல்ல வேண்டியதில்லை. அதற்கு பதிலாக வேறு யாரிடமாவது நீங்கள் பரிவு காட்டினாலே போதும், உங்கள் மனம் அமைதி அடைந்து விடும். ஏன் என்றால் இந்த ஆக்ஸிடோசின் ஹார்மோனுக்கு தேவை ‘கவனித்தல்’ மட்டுமே. அதை நீங்கள் பெறுவதாகவும் இருக்கலாம். கொடுப்பதாகவும் இருக்கலாம்.

    இதற்கு பர்மாவில் நடந்த சம்பவத்தில் இருந்து ஒரு உதாரணத்தை காட்ட முடியும். பர்மாவில் உள் நாட்டு கலவரம் நடந்த போது ஏராளமான மக்கள் தங்கள் வீடு, வாசல், உறவுகள், உடமைகளை இழந்து தவித்தனர். பாதிக்கப்பட்ட இந்த மக்கள் உயிர் பிழைத்தால் போதும் என்ற அச்சத்துடன் நாட்டை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தார்கள்.

    அடர்ந்த காடு, மலை, மேடு, பள்ளங்கள் வழியாக நடுக்கத்தோடு கடந்து கொண்டிருந்த அந்த கூட்டத்தில் இருந்த முதியவர் ஒருவர் மற்றவர்களுக்கு ஈடுகொடுத்து நடக்க முடியாமல் தள்ளாடினார். தன் மகனை பார்த்து “என்னால் இதற்கு மேல் நடக்க முடியாது, எனவே என்னை பற்றி கவலைப்படாமல் நீங்கள் தொடர்ந்து செல்லுங்கள்” என்றார்.

    மகன் பலவாறு வற்புறுத்தியும் அந்த இடத்தை விட்டு நகர மறுத்தார். தந்தையால் நடக்க முடியவில்லைதான், ஆனால் ஆபத்தான சூழலில் அவரை எப்படி விட்டு செல்வது என்று யோசித்த மகன் ஒரு உபாயம் செய்தான். தன் சிறு வயது மகனை அவரிடம் கொடுத்தான். அப்பா இவனாலும் நடக்க முடியவில்லை. அவனை தூக்கிக்கொண்டு போவது எனக்கு சிரமமாக இருக்கிறது. அதனால் அவனையும் உங்களுடன் இங்கே வைத்துக் கொள்ளுங்கள். இனி இவன் உங்கள் பொறுப்பு என்று சொல்லி விட்டு வேகமாக நடக்க தொடங்கினான்.

    அவ்வளவுதான் தன் உயிரை பற்றி கவலைப்படாத அந்த பெரியவர் தன் பேரப்பிள்ளையை மகன் விட்டுச் செல்ல போகிறான் என்றவுடன் பதைபதைத்து போனார். “இவனை அழைத்துக் கொண்டு செல்ல உனக்கு சிரமமாக இருந்தால் நீ போ... நான் கூட்டிக்கொண்டு வருகிறேன்” என்று சொன்னபடி குழந்தையை வாரி அணைத்துக்கொண்டார். பேரனை காப்பாற்ற வேண்டுமென்ற உந்துதல் அவர் மனதில் ஏற்பட்டது. அந்த அழுத்தம் காரணமாக மற்றவர்களைவிட வேகமாக நடந்தார். பத்திரமாக நாடு கடந்தார்.

    இந்த உண்மை சம்பவம் நமக்கு சொல்லும் பாடம் ஒன்றுதான். விருப்பமும் பொறுப்பும் இருந்தால் அழுத்தத்தால் நன்மையே விளையும். அதுவே நம் மனதில் உடலில் திடத்தையும் வேகத்தையும் அளிக்கும். நம்முன் தோன்றும் எந்த சவாலையும் எதிர்கொண்டு வெற்றி பெறும் ஆற்றலை கொடுக்கும்.

    பிரச்சினைகளை எப்படி சமாளிப்பது?

    உங்கள் மனப்பிரச்சினை களுக்கு இறக்கை கொடுங்கள். அவை உங்களை விட்டு எங்காவது பறந்துச் செல்லட்டும் என்கிறார் அறிஞர் டெர்ரி கில்மெட்.
    பிரச்சினைகளை கையாளத் தெரிந்தவர்களுக்கு எதுவுமே பிரச்சினை இல்லை. வாழ்க்கை உங்களை அழுத்தி நீங்கள் கொஞ்சம் தர்மச் சங்கடமாக உணரும் சமயத்தில் ஒரு விசயத்தை நினைவுப்படுத்திக் கொள்ளுங்கள். வெற்றியின் ஒரு பகுதியே அந்த அழுத்தம். அழுத்தம் இல்லை என்றால் வைரம் இல்லை என்கிறார் அறிஞர் எரிக் தாமஸ்.

    அழுத்தம்தான் குப்பைகளை உரமாக மாற்றுகிறது. அழுத்தம்தான் கரியை வைரமாக மாற்றுகிறது. அதுபோல் உங்களுக்குள் ஏற்படும் மன அழுத்தத்தையும் திடமும் ஆற்றலும் கொடுக்கும் வகையில் மாற்றிக் கொள்ளலாம். ஆகவே உங்களுக்கு அழுத்தம் ஏற்படும் போதெல்லாம் விழிப்புணர்வோடு செயல்பட்டால் நன்மை பயக்கும் வகையில் அதனை சாதகமாக மாற்றிக்கொள்ளலாம். அப்படி செய்தால் அழுத்தமே ஆனந்தமாக மாறும். அதில் மகிழ்ச்சி என்னும் பூ மலரும்.
    Email:fajila@hotmil.com
    நாண், புலாவ், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த பாலக் - பன்னீர் சப்ஜி. இன்று இந்த சப்ஜியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்
    தேவையான பொருட்கள் :

    பாலக்கீரை - ஒரு சிறிய கட்டு
    வேகவைத்த பச்சைப்பட்டாணி - 1 கப்
    மிளகாய்த் தூள் - 1/2 டீஸ்பூன்
    பன்னீர் - 100 கிராம்
    வறுத்து பொடித்த சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
    வெங்காயம், தக்காளி பெரியது - தலா 1
    முழு முந்திரிப்பருப்பு - 6
    கரம் மசாலாத்தூள் - தலா 1/2 டீஸ்பூன்
    உப்பு - தேவைக்கு
    சீரகம், எண்ணெய், வெண்ணெய் - தாளிக்க



    செய்முறை :

    முந்திரியை ஊறவைத்து அரைத்து கொள்ளவும்.

    வெங்காயம், தக்காளியை தனித்தனியாக அரைத்து கொள்ளவும்.

    பாலக்கீரையை சூடு தண்ணீரில் 10 நிமிடங்கள் போட்டு வைத்த பின்னர் மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.

    பன்னீரையும் கொதிக்கும் தண்ணீரில் போட்டு எடுத்து வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய், வெண்ணெய் போட்டு சூடானதும் சீரகம் போட்டு தாளித்த பின்னர் அரைத்த வெங்காயம், தக்காளியை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.

    அடுத்து அதில் பொடித்த சீரகத்தூள், கரம் மசாலாத்தூள், மிளகாய்த் தூள், வேக வைத்த பட்டாணியை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் அரைத்த முந்திரி விழுது, பாலக்கீரை விழுது, உப்பு சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் பன்னீரை சேர்த்து கொதி வந்ததும் இறக்கி விடவும்.

    சூப்பரான பாலக் - பன்னீர் சப்ஜி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    கணவன்- மனைவி இடையே ஏற்படும் சண்டையில் நண்பர்கள் தலையிட்டு விவாதிக்கக்கூடாத விஷயங்கள் என்று சில இருக்கின்றன. அவை என்னவென்று பார்க்கலாம்.
    மனிதர்களைவிட அவர்கள் பேசும் வார்த்தைகள் வலிமையானதாக இருக்கின்றன. அதனால் பேசிய மனிதர்களை மன்னித்தாலும், அவர்கள் பேசிய வார்த்தைகளை மன்னி்க்க முடியாமல் பலரும் தவிக்கிறார்கள். இப்படி காயப்படுத்தும் வார்த்தைகள் தம்பதிகளிடையே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அதுவே அவர்கள் பிரிந்துபோகவும் காரணமாக அமைந்துவிடுகிறது.

    கருத்துவேறுபாடுகள் இல்லாத குடும்பங்கள் இல்லை. கருத்துவேறுபாடுகளின் தொடக்கம், விவாதம். அந்த விவாதத்தின் மூலம் கருத்துவேறுபாட்டிற்கு முற்றுப்புள்ளிவிழுந்துவிட்டால் அது சாதாரண விஷயமாகிவிடும். அந்த விவாதம், வாக்குவாதமாகிவிட்டால் சாதாரண விஷயங்கள்கூட பிரச்சினையாகிவிடும். தற்போது அதிகரித்து வரும் மணமுறிவுகளுக்கு கணவன்-மனைவி இடையே ஏற்படும் வாக்குவாதங்களே காரணமாக அமைகின்றன.

    பொதுவாக தம்பதிகளிடையே ஏற்படும் வாக்குவாதங்கள், இரு வரையும் வேண்டாத வார்த்தைகளை பேசவைத்துவிடுகின்றன. அத்தகைய கடுமையான வார்த்தைகள் தங்களுக்கு எந்த பலனையும் கொடுத்துவிடாது என்பது இருவருக்குமே தெரியும். ஆனாலும் ஆத்திரத்துடன் அத்தகைய வார்த்தைகளை பயன்படுத்திவிடுகிறார்கள். ஆத்திரம் அறிவை மழுங்கடித்து, அசிங்கமான வார்த்தைகளைக்கூட உதிர்க்கச் செய்துவிடுகின்றன.

    ‘நாம் வேறு.. அவர் வேறு அல்ல! அப்படியிருக்க நாம் ஏன் தேவையற்ற வார்த்தைகளைப் பேசி ஒருவரை ஒருவர் காயப்படுத்தவேண்டும்!’ என்று கணவரும்- மனைவியும் நினைத்துவிட்டால் அவர் களுக்குள் எழும் விவாதம், வாக்குவாதத்தை நோக்கி செல்லாது. சில தம்பதிகளில் யாராவது ஒருவர் கடுமையான வார்த்தையை பிரயோகித்துவிடும்போது, இன்னொருவர் அதை கேட்டு அதிர்ச்சியடைந்துவிடுகிறார். தானும் அதுபோன்ற வார்த்தைகளை பேசவேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்படுகிறார். கடைசியில் பிரச்சினை முற்றிப்போக அந்த வார்த்தைகள்தான் காரணமாக இருக்கும். ‘பேசியவரை நான் மன்னித்துவிட்டேன். ஆனால் அவர் பேசிய வார்த்தையை என்னால் மன்னிக்க முடியவில்லை’ என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறோம். அதனால் வார்த்தைகளை நிதானித்து, கவனமாக பேசுங்கள். சில வார்த்தைகள் குண்டுகளைவிட மோசமானது என்பதை நினைவில் வைத்திருங்கள்.

    கணவன்- மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படும்போது, நண்பர்கள் என்ற பெயரில் பின்னால் ஒட்டிக்கொண்டிருக்கும் மூன்றாம் நபர்களிடம் விவாதிப்பது இன்று அதிகரித்து வருகிறது. அந்த மூன்றாம் நபர்கள் அனுபவஸ்தர்களாகவோ, பக்குவமானவர்களாகவோ இருப்பதில்லை. ஆலோசனை கேட்பவரின் குடும்ப நிலை என்ன என்பதையும் புரிந்துகொள்வதில்லை. பிரச்சினையின் ஆழத்தை புரிந்துகொள்ளாமலும், தெள்ளத்தெளிவாக தெரிந்துகொள்ளாமலும் ‘ஆலோசனை’ சொல்லும் மூன்றாம் நபர்களால் இன்று பெரும்பாலான தம்பதிகளிடையே புயல் வீசுகிறது.

    குடும்பங்களில் பிரச்சினைகள் தோன்றும்போது சிறிது காலம் சும்மா இருந்தாலே அந்த பிரச்சினை ஆறிப்போய், சாதாரணமாகிவிடும். ஆனால் சாதாரண விஷயங்களைக்கூட நண்பர்களிடம் கொண்டுபோய், ஆலோசனை கேட்டு விபரீதமாக்கிவிடுகிறவர்கள் ஏராளம்.

    கணவன்- மனைவி இடையே நண்பர்கள் தலையிட்டு விவாதிக்கக்கூடாத விஷயங்கள் என்று சில இருக்கின்றன. அந்த விஷயங்களில் நண்பர்கள் ஒருபோதும் தலையிடக்கூடாது. அத்தகைய விஷயங்களை கணவன்- மனைவி இருவரும் மட்டுமே விவாதிக்கவேண்டும். அவர்களால் மட்டும்தான் அதற்கு தீர்வு காணமுடியும். இல்லாவிட்டால், அதற்குரிய நிபுணர்களிடம் ஆலோசனையை பெறவேண்டும்.

    கணவன்- மனைவி இருவருக்குமான ரகசியங்கள் என்று சில உண்டு. அந்த ரகசியங்கள் நண்பர்களிடம் விவாதிக்கக்கூடியவை அல்ல. அத்தகைய ரகசியத்தில் ஒன்றை, கணவர் தனது நண்பரிடம் கூறி அது மனைவியின் காதுகளுக்கு வந்தால், அதை அவள் தனது சுயமரியாதைக்கு விடப்பட்ட சவாலாக நினைத்துவிடுகிறாள். கணவருக்கு தன்னைவிட அந்த நண்பன் உயர்ந்தவனாகிவிட்டான் என்ற எண்ணம் உருவாகிவிடும். பின்பு அவள் கணவரை பற்றி, தனது தோழிகளிடம் சில ரகசியங்களை சொல்வாள். இப்படி இரு வரும் நடந்துகொள்ளும்போது, குடும்ப அந்தரங்கங்கள் எல்லாம் வீதிக்கு வந்து சந்தி சிரிக்கத்தொடங்கிவிடும். இதனால் கணவன்-மனைவி இருவருமே அவமானத்தை எதிர்கொள்ளவேண்டியதிருக்கும்.

    இப்படி கணவனும், மனைவியும் அடுத்தவர்களிடம் விவாதிக்கக்கூடாத விஷயங்கள் என்னென்ன தெரியுமா?

    - படுக்கை அறை பிரச்சினைகள்.

    - தனிப்பட்ட பலகீனங்கள்.

    - கணவன் அல்லது மனைவியின் பழைய உறவுத் தொடர்புகள்.

    - இரு குடும்பத்தாரின் பிரச்சினைக்குரிய பழைய விஷயங்கள்.

    - மற்றவர்களிடம் ஏமாந்த சம்பவங்கள்.

    - பிரச்சினைக்குரிய சில நோய்த்தன்மைகள்.

    - மற்றவர்களால் அவமரியாதை செய்யப்பட்ட விஷயங்கள்.

    இப்படி வௌிப்படுத்தக்கூடாத விஷயங்கள் நிறைய இருக்கின்றன. அவைகளை எக்காரணத்தைக்கொண்டும் கணவனும்- மனைவியும் மூன்றாம் நபர்களிடம் சொல்லக்கூடாது. ஒருவேளை அவர்கள் ஆத்திரத்தில் சொல்லிவிட்டாலும் மூன்றாம் நபர்கள், அவர்கள் குடும்ப நலன்கருதி அதில் தலையிடாமல் இருப்பதுதான் நல்லது. ஏன்என்றால் கணவன்-மனைவி இடையே அது பிரச்சினையை உருவாக்கும்போது அந்த மூன்றாம் நபர் அதற்கு சாட்சியாகவேண்டியதிருக்கும். கணவனும், மனைவியும் பிரியும் சூழ்நிலை ஏற்பட்டால் அந்த மூன்றாம் நபர் குற்றவாளியாகிவிடக்கூடும்.

    முந்தைய காலங்களில் பெண்கள் வீட்டுக்குள்ளே புலம்பி, அடைபட்டு கிடந்தார்கள். இன்று அப்படி இல்லை. வெளியே பெண்கள் செல்கிறார்கள். வேலைக்கும் செல்கிறார்கள். செல்லும் இடங்களில் எல்லாம் பலரை சந்திக்கிறார்கள். அதில் சிலரிடம் தன்னை மறந்து, தங்கள் குடும்ப பிரச்சினைகளை சொல்லத் தொடங்கிவிடுகிறார்கள். அது குடும்ப பிரிவுக்கு மட்டுமல்ல, பல்வேறு புதுப்புது பிரச்சினைகளுக்கும் காரணமாகிவிடுகின்றன.

    இந்த விஷயத்தில் அறிவியலும் சதி செய்திருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். முன்பெல்லாம் தெரிந்த ஒரு சிலரிடம் மட்டும் புலம்பியவர்கள், இப்போது சமூக வலைத்தளங்களிலும் புலம்பிக்கொண்டிருக்கிறார்கள். செல்போன்களிலும் நேரங்காலம் தெரியாமல் புலம்பிக்கொண்டிருக்கிறார்கள். எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் அது மூன்றாவது நபருக்கு தெரியாமல் இருப்பதுதான் பாதுகாப்பு. மூன்றாம் நபருக்கு தெரியும்போது எப்படி வேண்டுமானாலும் அது உருமாறலாம். மூன்றாவது நபரால் குடும்ப வாழ்க்கையை சீர்குலைத்துக்கொண்டவர்கள் ஏராளம். தற்கொலை செய்துகொண்டவர்களும் அதிகம். அதனால் குற்றச்சாட்டுகளை குறைக்கவேண்டும். விவாதிக்கக்கூடாத விஷயங்களை விவாதிக்காமலே தவிர்க்கவேண்டும். அப்படியே விவாதம் உருவானாலும் அது வாக்குவாதமாக மாறாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். மற்ற அனைத்து உறவுகளைவிடவும் கணவன்- மனைவி இடையேயான உறவு பலமானது என்பதை நிரூபிக்கவேண்டும்.

    மாரடைப்பு வருவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. மாரடைப்பு வருவதற்கான காரணங்களையும் அறிகுறியையும் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    இதய தசைகளுக்கும் தேவையான உணவையும், ஆக்சிஜனையும் எடுத்துச் செல்ல மூன்று முக்கிய ரத்தக்குழாய்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் இதயத்தின் வெவ்வேறு பாகங்களுக்கு ஆக்சிஜன் கலந்த ரத்தத்தை எடுத்து செல்கின்றன. இந்த ரத்தக்குழாய்களின் ரத்த ஓட்டத்திற்கு தடையாக முதலில் சிறியதாக தடைக்கற்கள் போல அடைப்புகள் ஏற்படுகின்றன.
     
    சில காரணங்களால் இத்தடை கற்கள் பெரிதாகி உடைந்து, அதன்மேல் ரத்தம் உறைந்து ரத்தக்குழாயை முழுமையாக அடைத்து  விடுகிறது.  இதனால் இந்த இரத்தக் குளாய் மூலம் ரத்தத்தைப் பெறும் இதயத்தின் தசைப் பகுதி ஆக்ஸிஜனையும் ஊட்டச் சத்துகளும் கிடைக்கப் பெறாததால் செயலிழக்கிறது. இதுவே மாரடைப்பு.
     
    உயர் ரத்த அழுத்தம், அதிகக் கொழுப்புச் சத்து, சர்க்கரை நோய், புகைபிடித்தல், மன அழுத்தம் போன்றவற்றால்கூட ரத்த நாளத்தின் உட்சுவர் பாதிக்கப்படுகிறது. உட்சுவர் கரடுமுரடாகி, அதன் மீது ரத்தத்தில் மிதக்கும் கொழுப்புத் திவலைகள்  படிந்துகொண்டே வரும். ரத்த ஓட்டத்துக்கான பாதை குறுகலாகி, ரத்த ஓட்டம் தடைபடும். பிறகு இதய நாளத்தில் விறைப்பு அல்லது உறைகட்டி  ஏற்பட்டால், ரத்த ஓட்டம் முழுவதுமாகத் தடைபடும். இதயத் தசைக்கு ரத்த ஓட்டம் தடைபடுவதால், அவை செயலிழக்கின்றன.
     
    புகைபிடித்தல், அதிகமாக உணர்ச்சிவசப்படுதல், அளவுக்கு அதிகமானக் கடின உழைப்பு போன்றவற்றால், இது ஏற்படலாம். அடைப்பு அதிகமாகும்போது, இறுக்கம் அல்லது தீவிர மாரடைப்பு ஏற்படுகிறது.
     
    அறிகுறிகள்:
     
    ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கும் ஒருவருக்கு அவருடைய ரத்த நாளங்களில் 50 சதவிகிதம் அடைப்பு இருந்தால்கூட இதயத்துக்குத் தேவையான சுத்த ரத்தம் கிடைத்துவிடுகிறது. அதனால் அவருக்கு எந்த விதமான அறிகுறியும் தெரியாது.
     
    கடினமான உழைப்பில் ஈடுபடும்போது குறுகிப்போன நாளங்கள் வழியாகப் போதுமான ரத்தம் இதயத்துக்குக் கிடைப்பது இல்லை. அப்போது மார்பு இறுக்கம் போன்ற அறிகுறி தோன்றும். ஓய்வு எடுத்துக்கொண்டால், இதயத்துக்குத் தேவையான ரத்தமும்  பிராண வாயுவும் கிடைக்கும். நெஞ்சு வலியும் மறைந்துவிடும்.
     
    மாரடைப்புக்கு ஆரம்ப அறிகுறியே மார்பு இறுக்கம்தான். மார்பு இறுக்கம் மார்பின் நடுப்பகுதியில் நெஞ்சு எலும்புக்குப் பின்புறம்  தோன்றும். இரு தோள்களில் முக்கியமாக இடது தோளில் ஆரம்பித்து கைகள், கழுத்து, தாடை, முதுகு போன்ற பகுதிகளுக்கும்  வலி பரவலாம். சில சமயங்களில் குறிப்பிட்டப் பகுதியில் மட்டுமே வலி தோன்றலாம். பொதுவாக நோயாளிகள் இதை வாயுக்  கோளாறு என்று அசட்டையாக இருந்துவிடுவார்கள். இந்த மார்பு இறுக்கத்தால் இதயத் தசைகள் சேதம் அடைவதில்லை. ஆனால் எந்த நேரத்திலும் ரத்த நாளங்கள் தடைபட்டு மாரடைப்பு ஏற்படலாம். சாதாரண மார்பு இறுக்கமா அல்லது மாரடைப்பு என்று மருத்துவரால்தான் கண்டறிய இயலும்.
     
    கடுமையான மார்பு இறுக்கம் போன்ற வலி 15 நிமிடங்களுக்கு மேல் நீடிக்கும். மார்பு வலியுடன் உடல் எங்கும் திடீர் வியர்வை, மூச்சுத்திணறல், வாந்தி, பலவீனம், தலைச்சுற்றல், மயக்கம், வேகமான நாடித்துடிப்பு ஆகியனவும் ஏற்படலாம். அறிகுறிகளே  இல்லாமல் மாரடைப்பு போன்றவையும் ஏற்படுவதும் உண்டு.
    வெயில் காலத்தில் உடல் ஆரோக்கியத்திற்கு தினமும் ஜூஸ் குடிப்பது நல்லது. இன்று பாலப்பழம், தேங்காய்ப்பால் சேர்த்து ஸ்மூர்த்தி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பலாப்பழம் - 10
    தேங்காய்ப் பால் - 1 கப்
    பாதாம், முந்திரி, பிஸ்தா ஆகியவை பொடித்தது (நட்ஸ் பொடி) - 1 ஸ்பூன்
    தேன் - சுவைக்கேற்ப (தேவைப்பட்டால்)



    செய்முறை :

    மிக்சியில் பலாப்பழத்தையும், தேங்காய்ப் பாலையும் சேர்த்து நன்கு அரைக்கவும்.

    அரைத்த ஜூஸில் நட்ஸ் பொடி சேர்த்துக் கலக்கவும்.

    இதை அப்படியே கிளாஸில் ஊற்றிக் கொடுக்கலாம்.

    தேவைப்பட்டால் தேன் சேர்த்துக் கொடுக்கலாம்.

    சூப்பரான பலாப்பழம் நட்ஸ் ஸ்மூர்த்தி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    குழந்தைகளை தூங்க வைப்பது பெரும் கஷ்டம் என இப்போதைய பெற்றோர் சொல்கின்றனர். இந்த அறிகுறிகள் தென்பாட்டாலே குழந்தைக்கு தூக்கம் வந்துவிட்டது என அர்த்தம்.
    குழந்தைகளை தூங்க வைப்பது பெரும் கஷ்டம் என இப்போதைய பெற்றோர் சொல்கின்றனர். தூக்கம் வரும் முன் குழந்தைகளின் செயல்களை அறிந்து கொள்ளுங்கள். இந்த அறிகுறிகள் தென்பாட்டாலே குழந்தைக்கு தூக்கம் வந்துவிட்டது என அர்த்தம்.

    குழந்தைகளின் உடல் மொழியை எப்படி புரிந்து கொள்வது?

    குழந்தையின் தூக்க நேரத்தை முதலில் கவனியுங்கள். அந்த தூக்க நேரத்தில் அதிகமாக குழந்தைக்கு விளையாட்டு காட்ட கூடாது. குழந்தையை தூங்க வைக்கும் முயற்சியில் தான் இருக்க வேண்டும்.

    தூங்கும் நேரத்தில் குழந்தைக்கு விளையாட்டு காட்டினால் குழந்தைகள் தூங்காமல் சுறுசுறுப்பாகி விடுகின்றனர். பின்னர் தூக்கம் கலைந்துவிடும். தூங்கும் நேரத்திலும் அதற்கும் முன்னும் குழந்தையிடம் விளையாட கூடாது.சிறு குழந்தைகள் நன்கு பால் குடித்தால் தூக்கம் வந்துவிடும். சில குழந்தைகள் பால் குடிக்கும்போதே தூங்கிவிடும்.

    குழந்தைக்கு தூக்கம் வருவதை எப்படி கண்டறிவது?

    மூக்கு, கண்களை கைகளால் குழந்தை தேய்க்க ஆரம்பிக்கும். உட்காராமல் சாய்ந்து கொள்ளும். நடவடிக்கைகள் மெதுவாக காணப்படும். தூக்கம் வருவதன் அறிகுறியாக சில வித்தியாசமான ஒலிகளையும் எழுப்பலாம். கைகள் அல்லது ஏதாவது பொருளை சப்பத் தொடங்கும்.

    இந்த மாதிரி அறிகுறிகள் தென்பட்டவுடன் தொட்டலிலோ மெத்தையிலோ மடியிலோ போட்டு லேசாக தட்டி கொடுத்தால் போதும். குழந்தை தூங்கி விடும்.

    தூங்க வைக்க சில டிப்ஸ்

    இரவில் வயிறு நிறைய பால் கொடுப்பது நல்லது. இதனால் குழந்தைகள் நன்கு தூங்கும்.

    தாய்ப்பால் கொடுப்பவர்கள், புட்டிப்பால் தருபவர்கள் லைட்டை அணைத்து விட்டு இருளில் பால் கொடுக்கலாம். அல்லது குறைந்த வெளிச்சம் உள்ள லைட்களைப் பொருத்திய ரூமில் பால் தரலாம்.

    வெளிச்சம் அதிகமாக உள்ள இடத்தில் குழந்தையை தூங்க வைக்க கூடாது.

    குழந்தைகளின் தூங்கும் இடத்தை அடிக்கடி மாற்றகூடாது. ஒரே இடத்தில் தூங்க வைக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

    லேசாக குழந்தையை ஆட்டி தாலாட்டு பாடலாம். சத்தம் போட்டு கொஞ்சினால், குழந்தையின் தூக்கம் களையும்.

    மெதுவாக குழந்தையை வருடிவிட்டாலும் குழந்தை தூங்கும். குழந்தையை தூங்க வைக்க முதுகில் லேசாக தட்டி கொடுக்கலாம். 
    ஒரு பெண்ணுக்கு குறைப்பிரசவம் நடக்கப்போவதை சில அறிகுறிகளின் மூலம் அறிந்து கொள்ளலாம். கீழே கூறப்பட்டுள்ள அறிகுறிகள் கர்ப்பிணிகளுக்கு தென்பட்டால், உடனடியாக மகப்பேறு மருத்துவரைச் சந்திப்பது நல்லது.
    பிரசவத்தில் மிகவும் சிக்கலானது குறிப்பிட்ட தேதிக்கு முன்பாக நிகழும் பிரசவம். அதாவது 37 வாரங்களுக்கு முன்னதாக நடக்கும் இத்தகைய பிரசவம் குறைப்பிரசவம் என்று அழைக்கப்படுகிறது. இதனைக் குறை பிள்ளைப்பேறு என்றும், இப்படி குறைப் பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளை குறைமாதக் குழந்தை என்றும் அழைப்பார்கள்.

    ஆரோக்கிய குறைபாடு, சுவாசிப்பதில் சிரமம், போன்ற பாதிப்புகள், மஞ்சள் காமாலை, நிமோனியா போன்ற தொற்று பாதிப்புகள் போன்றவற்றை இந்த குறைபிரசவ குழந்தைகள் எதிர்கொள்ளும் வாய்ப்பு உண்டு.

    குறை மாத பிரசவத்திற்கான அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள் ஆகியவற்றை புறக்கணிக்க வேண்டாம். கீழே கூறப்பட்டுள்ள அறிகுறிகள் கர்ப்பிணிகளுக்கு தென்பட்டால், உடனடியாக மகப்பேறு மருத்துவரைச் சந்திப்பது நல்லது.

    கர்ப்பகாலத்தின் கடைசி கட்டங்களில் இந்த கருப்பை சுருக்கம் உண்டாகும். இந்த சுருக்கம் மற்றும் அதனால் ஏற்படும் வலி அதிகரித்த அளவு இருந்தால் அது குறை மாத பிரசவ அறிகுறியாக இருக்கலாம். வயிற்றைச் சுற்றி இறுக்கமாக ஒரு கயிற்றால் கட்டுவது போன்ற வலி தோன்றும். இந்த வலி விட்டு விட்டு வரும். கீழே படுப்பதால் அல்லது உங்கள் அங்க நிலைகளை மாற்றுவதால் இந்த பிரசவ வலி குறையாது.

    கர்ப்பகாலத்தின் கடைசி கட்டங்களில் இடுப்பில் ஒரு வித அழுத்த அவ்வப்போது உண்டாகும். ஆனால் இந்த அழுத்தம் மிக அதிகம் உணரப்படும்போது, அது குறை மாத பிரசவ வலியின் அறிகுறியாக இருக்கலாம். இடுப்பு வலி ஏற்படுவதன் காரணம், குழந்தை வெளியில் வர முயற்சிப்பது ஆகும். குழந்தை பிறக்கக் கூடிய நிலைக்கு வந்துவிட்டதை இந்த வலி உணர்த்தும்.

    பிறப்புறுப்பில் திடீரென்று அதிக நீர் வெளியேற்றம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியம். குறைமாத பிரசவத்தின் மற்றொரு அறிகுறி, சிவப்பு இரத்தம் வெளியேற்றம் அல்லது நீர் வெளியேற்றம். கர்ப்பப்பை வாய் அல்லது பிறப்புறுப்பு வாய் திறந்து கொள்வதால் இந்த நீர் வடிதல் ஏற்படலாம்

    மாதவிடாய் வலியை ஒத்த வலி பிரசவத்தின் அறிகுறியாகும். மோசமான வயிற்று வலியைப் போல் தொடங்கும் இந்த வலி பிரசவ வலியின் ஆரம்ப அறிகுறியாகும். அடுத்த சில மணி நேரத்தில் இந்த வலி குறையாது.

    முதுகுத் தண்டின் கீழ் பகுதியில் அதிக வலி, மற்றும் உங்களால் எங்கும் அசைய முடியாத வலி, உட்கார முடியாமல் நிற்க முடியாமல் வலி ஆகியவை இருந்தால் மருத்துவரிடம் செல்வது நல்லது. வலியுடன் கூட, கீழ் முதுகு பகுதியில் ஒரு வித அழுத்தத்தை நீங்கள் உணர முடியும். அதிக பாரத்தை சுமக்கும்போது உண்டாகும் உணர்வு போல் இந்த உணர்வு இருக்கும்
    சத்து மாவு நிறைய தானியங்களைக் கொண்டு செய்யப்படுவதால், இதனை அன்றாடம் உட்கொண்டு வருவது உடலுக்கு ஆரோக்கியமானது. இந்த சத்து மாவு உருண்டை செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    சத்து மாவு - 1 கப்
    வெல்லம்/கருப்பட்டி - 1/3 கப்
    நெய் - 2 டேபிள் ஸ்பூன்
    ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை



    செய்முறை:

    சத்து மாவை ஒரு வாணலியில் போட்டு அடுப்பில் வைத்து, 8-10 நிமிடம் நன்கு மணம் வெளிவரும் வரை வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    வெல்லம்/கருப்பட்டியை தட்டி/துருவிக் கொண்டு, ஒரு வாணலியில் போட்டு, அதில் 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் ஊற்றி, வெல்லம் நன்கு கரைந்து, சற்று கெட்டியாக தேன் போன்ற பதத்திற்கு வரும் போது அதனை இறக்கி, குளிர வைக்க வேண்டும்.

    பாகை வறுத்து வைத்துள்ள சத்து மாவில் சேர்த்து, அத்துடன் ஏலக்காய் பொடியையும் சேர்த்து கிளறி விட வேண்டும்.

    பிறகு நெய்யை சூடேற்றி, அதனையும் சத்து மாவுடன் சேர்த்து நன்கு கிளறி உருண்டைகளாகப் பிடித்தால், சத்து மாவு உருண்டை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×