என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Smoothie"

    • உடலுக்கு விரைவான ஊட்டச்சத்து, ஆன்டிஆக்சிடென்டுகள் தேவைப்படும்போது ஜூஸ் பருகலாம்.
    • பழங்கள், காய்கறிகளை கொண்டு ஜூஸ் தயாரிக்க சாறு பிழிந்து வடிக்கட்டப்படும்.

    பழங்கள், காய்கறிகளை கொண்டு பானங்கள் தயாரித்து பருகாமல் அதன் தன்மையிலேயே ருசிப்பதுதான் ஆரோக்கியத்திற்கு நல்லது. ஏனெனில் அவற்றில் அதிக நார்ச்சத்து கலந்திருக்கும். ஊட்டச்சத்துக்களும் மிகுந்திருக்கும். பானங்களாக மாற்றும்போது அவை குறையக்கூடும். இருப்பினும் பழங்கள், காய்கறிகளை ஜூஸாகவும், ஸ்மூத்தியாகவும் தயாரித்து ருசிக்கவே நிறைய பேர் விரும்புகிறார்கள். இதில் எதனை பருகுவது ஆரோக்கியமானது என்ற கேள்வியும் எழாமல் இல்லை. எதில் ஊட்டச்சத்து அதிகம்? எதனை பருகுவது சிறந்தது என்பதை விரிவாக பார்ப்போம்.

    ஊட்டச்சத்து அடர்த்தி

    பழ ஜூஸில் வைட்டமின்கள், தாதுக்கள், கரோட்டினாய்டுகள் மற்றும் ஆன்டி ஆக்சிடென்டுகள் தனியாக பிரித்தெடுக்கப்படுகின்றன. பீட்டா கரோட்டின் போன்ற சில சேர்மங்கள் சாறு வடிவத்தில் மிகவும் திறமையாக உறிஞ்சப்படலாம். ஸ்மூத்திகளை பொறுத்தவரை ஆன்டி ஆக்சிடென்டுகள் நார்ச்சத்துடன் பிணைக்கப்பட்டு ஊட்டச்சத்துக்கள் பரவலாக உடலுக்கு கிடைக்க வழிவகை செய்கின்றன. ஸ்மூத்திகள் அப்படியே தயாரிக்கப்படுவதால் ஊட்டச்சத்துக்கள் இழக்கப்படுவது மிகக் குறைவு. அதனால் ஊட்டச்சத்து தேவைப்படுபவர்கள் ஸ்மூத்தி பருகுவது சிறப்பானது.

    ஆற்றல் இழப்பு

    ஜூஸ் பருகுவது இன்சுலின் மற்றும் குளுக்கோஸை விரைவாக ரத்தத்தில் அதிகரிக்கக்கூடும். அதிலும் சர்க்கரை அதிகம் கலந்த ஜூஸ் வகைகளை பருகுவது பசி, நீரிழிவு, உடல் ஆற்றல் செயலிழப்பு உள்ளிட்ட அபாயங்களுடன் தொடர்புடையது. நார்ச்சத்து, புரதம் மற்றும் கொழுப்பு உள்ளிட்டவை சம நிலையில் கலந்த ஸ்மூத்திகளை பருகுவது உடல் ஆற்றலையும், அறிவாற்றலையும், வளர்சிதை மாற்றத்தையும் மேம்படுத்தக்கூடும்.

    சர்க்கரை வெளிப்பாடு

    ஜூஸ்களில் நார்ச்சத்து இல்லாத சூழலில் பழங்களில் இருக்கும் சர்க்கரை ரத்த ஓட்டத்தில் விரைவாக கலந்து ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்துவிடும். பழ ஜூஸ்கள் பொதுவாக 65 முதல் 85-க்கு இடைப்பட்ட அளவில் கிளைசெமிக் குறியீட்டை கொண்டிருக்கும். சர்க்கரையை விரைவாக கலக்கச் செய்வதுதான் அதற்கு காரணம். ஆனால் ஸ்மூத்திகளில் இயற்கையான சர்க்கரையே அதிகம் கலந்திருக்கும். நார்ச்சத்தும் குறைவில்லாமல் இருப்பதால் சர்க்கரையை மெதுவாகவே வெளியிடும். மேலும் புரதம், ஆரோக்கியமான கொழுப்பும் கொண்டிருக்கும். ஐரோப்பிய மருத்துவ ஊட்டச்சத்து இதழில் நடத்தப்பட்ட ஆய்வில் பழங்களை விட ஸ்மூத்திகள் 57 சதவீதம் வரை ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டை மேம்படுத்துவதாகவும், செரிமானத்தை பொறுத்தவரை ஜூஸை விட பயனுள்ளதாக இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

    எது சிறந்தது?

    காலை உணவு, சிற்றுண்டி அல்லது உணவுக்கு மாற்றாக நார்ச்சத்து நிறைந்த, சமச்சீரான ஊட்டச்சத்துகள் மிகுந்த பானத்தை பருக நினைத்தால் ஸ்மூத்தி சிறந்த தேர்வாக அமையும்.

    உடலுக்கு விரைவான ஊட்டச்சத்து, ஆன்டிஆக்சிடென்டுகள் தேவைப்படும்போது ஜூஸ் பருகலாம். எனினும் அன்றாட ஆரோக்கியத்திற்கு அதிக ஆரோக்கிய நன்மைகளை ஸ்மூத்திகளே வழங்குகின்றன.

    திருப்தி

    நீண்ட நேரம் சாப்பிட்ட திருப்தி நிலைத்திருக்கவும், விரைவாக பசி எட்டிப்பார்ப்பதை தவிர்க்கவும் விரும்புபவர்கள் ஸ்மூத்தி பருகுவதே நல்லது. ஏனெனில் ஸ்மூத்தி, ஜூஸை விட அடர்த்தியாக இருக்கும். அதில் சத்துக்களும் நிறைவாக இருக்கும். ஜூஸ்களில் கலோரிகள் குறைவாக இருந்தாலும் நார்ச்சத்து திருப்தியாக இருப்பதில்லை. ஸ்மூத்தியுடன் ஒப்பிடும்போது விரைவாகவே பசி உணர்வை தூண்டிவிடும்.

    பல் ஆரோக்கியம்

    ஸ்மூத்திகள் உமிழ்நீர் உற்பத்தியைத் தூண்டும். பற்களை சுத்தப்படுத்தவும், பாதுகாக்கவும் உதவும். பழ ஜூஸ்கள் அமிலத்தன்மை கொண்டவை, சர்க்கரை நிறைந்தவை. அவை பற்களில் அரிப்பு, பல்சிதைவு உள்ளிட்ட பிரச்சினைகளை உருவாக்கக்கூடும்.

    நார்ச்சத்து

    பழங்கள், காய்கறிகளை கொண்டு ஜூஸ் தயாரிக்க சாறு பிழிந்து வடிக்கட்டப்படும். ஆனால் பழங்கள், காய்கறிகளை அப்படியே போட்டு ஸ்மூத்தி தயாரிக்கப்படும். அதனுடன் கெட்டியான பால், ஐஸ்கிரீம் உள்ளிட்ட ஊட்டச்சத்துமிக்க பொருட்கள் சேர்க்கப்படும். முக்கியமாக கரையாத மற்றும் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் தக்கவைக்கப்படும். ரத்தத்தில் சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்தவும், குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவிடும். ஜூஸை பொறுத்தவரை பழங்கள், காய்கறிகளில் இருக்கும் திரவம் மட்டுமே பிரித்தெடுக்கப்படும். அவற்றின் தசைப்பகுதிகள் வடிகட்டப்பட்டு அப்புறப்படுத்தப்படும். அதனால் நார்ச்சத்துக்கள் காணாமல் போய்விடக்கூடும்.

    நார்ச்சத்து ஏன் முக்கியமானது:

    நார்ச்சத்து செரிமானத்தை மெதுவாக்கி வயிறு நிறைந்த உணர்வை ஏற்படுத்தும். ஊட்டச்சத்து உறிஞ்சுதலுக்கும் உதவும். ஆரோக்கியமான நுண்ணுயிர்களை வளர்க்கும். உமிழ்நீர் உற்பத்தியை தூண்டி பற்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும்.

    வெயில் காலத்தில் உடல் ஆரோக்கியத்திற்கு தினமும் ஜூஸ் குடிப்பது நல்லது. இன்று பாலப்பழம், தேங்காய்ப்பால் சேர்த்து ஸ்மூர்த்தி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பலாப்பழம் - 10
    தேங்காய்ப் பால் - 1 கப்
    பாதாம், முந்திரி, பிஸ்தா ஆகியவை பொடித்தது (நட்ஸ் பொடி) - 1 ஸ்பூன்
    தேன் - சுவைக்கேற்ப (தேவைப்பட்டால்)



    செய்முறை :

    மிக்சியில் பலாப்பழத்தையும், தேங்காய்ப் பாலையும் சேர்த்து நன்கு அரைக்கவும்.

    அரைத்த ஜூஸில் நட்ஸ் பொடி சேர்த்துக் கலக்கவும்.

    இதை அப்படியே கிளாஸில் ஊற்றிக் கொடுக்கலாம்.

    தேவைப்பட்டால் தேன் சேர்த்துக் கொடுக்கலாம்.

    சூப்பரான பலாப்பழம் நட்ஸ் ஸ்மூர்த்தி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    ×