என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    நாக்கை ஊறவைக்கும் சுவையான கேரளா ஸ்பெஷல் மீன் முளகிட்டது ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம். இந்த மீன் குழம்பை சூடான சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
    தேவையான பொருட்கள்

    மீன் - அரை கிலோ,
    வெங்காயம் - 2,
    சின்ன வெங்காயம் - 10,
    இஞ்சி - 2 மேசைக்கரண்டி,
    தக்காளி - 2,
    பூண்டு - 10 பல்,
    பச்சை மிளகாய் - 2,
    மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி,
    மிளகாய் தூள் - ஒன்றரை மேசைக்கரண்டி,
    மிளகுத் தூள் - அரை மேசைக்கரண்டி,
    ஊறவைத்த குடம் புளி - சிறிதளவு,
    உப்பு - தேவையான அளவு,
    தேங்காய் எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை,வெந்தயம் - தாளிக்க.



    செய்முறை

    சின்ன வெங்காயம், தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு மற்றும் வெந்தயம், சீரகம் சேர்த்து தாளித்த பின்னர் இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை, பச்சை மிளகாயைச் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.

    பின்னர் நறுக்கிய வெங்காயம், சின்ன வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

    பிறகு தூள் வகைகள் மற்றும் உப்புச் சேர்த்து பிரட்டவும். மசாலா நன்றாக சேர்ந்து வரும் போது அதனுடன் மீனை சேர்க்கவும்.

    அத்துடன் ஊற வைத்த குடம் புளிச் கரைசலைச் சேர்க்கவும்.

    பிறகு குழம்பிற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்கவிடவும்.

    பிறகு அடுப்பை சிம்மில் வைத்து மூடி போட்டு வைக்கவும்.

    15 நிமிடங்கள் கழித்து திறந்து கறிவேப்பிலை தூவி இறக்கிவிடவும்.

    சுவையான மீன் முளகிட்டது தயார்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    காதலர்கள் தங்கள் காதல் வாழ்க்கையை திருமண வாழ்க்கையாக மாற்ற நினைக்கும்போது அவர்கள் எதிர்கொள்ளும் முதல் பிரச்சனை பெற்றோர்களின் சம்மதத்தைப் பெறுவது.
    காதலர்கள் தங்கள் காதல் வாழ்க்கையில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டாலும், தங்கள் காதல் வாழ்க்கையை திருமண வாழ்க்கையாக மாற்ற நினைக்கும்போது அவர்கள் எதிர்கொள்ளும் முதல் பிரச்சனை பெற்றோர்களின் சம்மதத்தைப் பெறுவது.

    பெண்ணின் பெற்றோர்கள் தங்கள் மகளை திருமணம் செய்யும் ஆண், நல்லவராக இருக்க வேண்டும், நல்ல நிலையில் இருக்க வேண்டும் என்றே விரும்புவார்கள். அவர்கள் தங்கள் மகளின் காதலன் மீது ஆரம்பத்தில் தவறான எண்ணத்தையே வைத்திருப்பார்கள். இதனால், பெண்ணின் பெற்றோர் உடனான முதல் சந்திப்பு என்பது மிகவும் முக்கியமானது. அதில் அவர்களை எப்படி கவர்வது என்பதை இதில் தெரிந்து கொள்ளுங்கள்.

    நேரம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. உங்களுக்காக அவர்களை நீண்ட நேரம் காத்திருக்க வைப்பது அவ்வளவு நல்லதல்ல. அது முதல் பார்வையிலேயே உங்களைப் பற்றிய தவறான புரிதலை உண்டாக்கும்

    உங்கள் டிரசிங் நீங்கள் யார் என்பதை பிரதிபலிக்கும் ஒரு அம்சம். அதனால், முடிந்த வரை நேர்த்தியான உடையில் அவர்களை சந்திக்கவும்.



    உணவு உண்ணும் போது முடிந்த வரையில் மிகவும் பொறுமையாக, நாகரீகமாகவும் உணவு உட்கொள்ளவும்.

    அதிகமாக உணவு உட்கொள்வது உங்களைத் தவறான கண்ணோட்டத்தில் காண செய்யும். குறைந்தளவு மட்டும் உண்பது உங்களை கூச்ச உணர்வு கொண்டவராகக் காட்டும்.

    பெற்றோரின் முன் அவர்களின் மகளை மரியாதையுடன் நடத்துங்கள். அப்போதுதான் அவர்களுக்கு உங்கள் மீது ஒரு நம்பிக்கை உண்டாகும்.

    உங்கள் காதலியின் பெற்றோருடன் பேசி முடித்தவுடன், அங்கிருந்து சரியான நேரத்தில் கிளம்பவும். அவர்களின் நேரத்தை வீணடிக்கவோ அல்லது அங்கிருந்து அவர்களே கிளம்ப வேண்டும் என்று சொல்லும் அளவிற்கு வைத்துக்கொள்ள வேண்டாம்.
    நக சுத்தி என்பது பூஞ்சை அல்லது பாக்டீரியாவால் நகம் பாதிக்கப்படுவது ஆகும். நக சுத்தியை குணமாக்கும் எளிய வீட்டு வைத்திய முறைகளை பார்க்கலாம்.
    நக சுத்தி என்பது பூஞ்சை அல்லது பாக்டீரியாவால் நகம் பாதிக்கப்படுவது ஆகும். இதை உடனடியாக சரி செய்யாவிட்டால், செப்டிக் ஆகி விரலுக்கே ஆபத்தாக முடியும். இங்கு அதற்கான எளிய தீர்வுகளை காணலாம்.

    மிக எளிதாக கிடைக்கக் கூடிய கற்றாழைக்கு நக சுத்தை ஆற்றும் சக்தி உள்ளது. கற்றாழை சாறுடன் மஞ்சள் தூள் அரைத்து, விளக்கெண்ணெய் விட்டு சூட வைத்து, அதை நகத்தில் பூசினால் நகசுத்தி குணமாகும்

    ஆப்பிள் சீடர் வினிகர் அல்லது வெள்ளை வினிகரை நீரில் கலந்து, அந்த நீரில் விரலை 30 நிமிடங்களுக்கு வைக்க வேண்டும். இப்படி தினமும் 3 வேளை வைத்து, வைட்டமின் ஈ எண்ணெயை தேய்த்தால் உடனடி தீர்வு கிடைக்கும்

    உப்பு நீரில் பாதிக்கப்பட்ட விரலை வைத்தாலும், நக சுத்தி சரியாகும். சாதாரண கல் உப்பை கரைத்து அந்த நீரையே இதற்கு பயன்படுத்தலாம். கடல் நீரில் கால் நனைத்தாலும் நக சுத்தி சரியாகும். பின்னர். காலைத் துடைத்து விட்டு அந்த இடத்தில் வினிகரை தடவ வேண்டும்.



    சோடா உப்பு பசையை நக சுத்தி வந்த இடத்தில் தடவினால், அதில் உள்ள அலகலைன் பூஞ்சைகளை வளரவிடாமல் தடுத்து நக சுத்தியை குணமாக்குகிறது.

    எலுமிச்சை பழத்தை இரு துண்டாக வெட்டி நகத்தை புகுத்தினாலும் நக சுத்தி வராது. மருத்துவ ரீதியாக இது நிரூபணம் ஆகவில்லை என்றாலும், அனுபவத்திற்கு நிரூபணமாகியுள்ளது.

    மஞ்சளை விட மருத்துவம் எதுவும் இல்லை என்றே சொல்லலாம். நக சுத்திற்கு எளிமையான ஒரு மருத்துவம் என்னவென்றால், நீரில் மஞ்சளை கலந்து நகத்தில் தடவினால் போதும்.

    இதே போல் வேப்ப எண்ணெயை பாதிக்கப்பட்ட நகத்திலும், விரலை சுற்றிலும் தேய்த்து வர, நக சுத்தி விரைவில் குணமாகும்.
    செட்டிநாடு சமையலில் நண்டு குழம்பு செய்து சூடான சாதத்தில் போட்டு சாப்பிட்டால் அருமையாக இருக்கும். இன்று இந்த குழம்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    நண்டு - 1/2 கிலோ
    வெங்காயம் - 2
    தக்காளி - 2
    சீரகம் - 1 டீஸ்பூன்
    சோம்பு - 1 டீஸ்பூன்
    பூண்டு - 5 பல்
    மிளகு - 1 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
    மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
    தனியா தூள் - 3 டீஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிது
    கறிவேப்பிலை - சிறிது
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை :

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    நண்டை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.

    பின்பு மிக்ஸியில் சீரகம், சோம்பு, பூண்டு மற்றும் மிளகு போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும்ம் தக்காளியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் அதில் அரைத்து வைத்துள்ள சோம்பு, மிளகு கலவை சேர்த்து, அத்துடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

    அடுத்து, அதில் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.

    தண்ணீர் நன்கு கொதித்ததும், அதில் கழுவி வைத்துள்ள நண்டு சேர்த்து மூடி வைக்க வேண்டும்.

    நண்டு நன்கு வெந்த பின், அதில் கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலையைத் தூவி இறக்கினால், செட்டிநாடு நண்டு குழம்பு ரெடி!!!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கண்கள் தொடர்ந்து சோர்ந்திருந்தால், அதற்குக் கீழ் கருவளையம் உருவாகிறது. இதற்கு இயற்கை முறையை பயன்படுத்தி தீர்வு காண்பது எப்படி என்று பார்க்கலாம்.
    கண்கள் தொடர்ந்து சோர்ந்திருந்தால், அதற்குக் கீழ் கருவளையம் உருவாகிறது. இதற்கு, மனஅழுத்தம், தூக்கமின்மை, எலக்ட்ரானிக் கருவிகளை அதிகம் பயன்படுத்துதல், ஊட்டச்சத்துக் குறைபாடு எனப் பல்வேறு காரணங்கள் இருக்கலாம்.

    கருவளையத்தைப் போக்க, பால் அல்லது மூலிகை கிரீம்களைப் பயன்படுத்தி, க்ளென்சிங் செய்யப்படும். பிறகு, ஐஸ் கட்டிகள், கேரட் ஜூஸ் என, அவரவர் சருமத்துக்கு ஏற்றபடி கண்களைச் சுற்றி மிருதுவாக மசாஜ் செய்யலாம்.

    இமைகளின் மீது பஞ்சுவைத்து, அதன் மேல், வேப்பிலை, கற்றாழை, துளசி, ஆப்பிள் உள்ளிட்ட சில இயற்கை, மூலிகைப் பொருட்களால் ஆன கலவையை வைத்து, அரை மணி நேரம் அதன் சாறு சருமத்தில் இறங்கும் வகையில் விட வேண்டும். அதன் பிறகு, தூய நீர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

    இந்த சிகிச்சையினால், கண்களைச் சுற்றியுள்ள சருமப்பகுதிக்குச் சீரான ரத்த ஓட்டம் ஏற்பட்டு, கருவளையம் மறையத் தொடங்குகிறது. இந்த சிகிச்சைக்கு அரை மணி நேரம் தேவைப்படும். வாரத்துக்கு ஒரு முறை செய்துகொண்டால், இரண்டே மாதங்களில் கருவளையம் முற்றிலுமாக மறையும்.
    மாதவிடாயின் முதல் மூன்று நாட்கள் தலைக்குக் குளிப்பதால் என்ன மாதிரியான பின்விளைவுகள் ஏற்படும் என்பது குறித்து சித்த மருத்துவத்தில் விளக்கப்பட்டிருக்கிறது.
    இன்றையச் சூழலில் பெண்கள் மாதவிலக்கு நாட்களிலும் அன்றாட வீட்டுப் பணிகளையும் அலுவலகப் பணிகளையும் செய்ய வேண்டிய கட்டாயம் நிலவுகிறது. மாதவிலக்கு நாட்களில் பெண்கள் எங்கு தங்க வேண்டும்? என்ன சாப்பிட வேண்டும்? தலைக்கு குளிக்கலாமா… குளிக்கக் கூடாதா என்பதில் ஒவ்வொரு சமூகத்திலும் ஒவ்வொரு மாதிரியான நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.

    மாதவிலக்கின் முதல் மூன்று நாட்கள் தலைக்குக் குளிப்பதால் என்ன மாதிரியான பின்விளைவுகள் ஏற்படும் என்பது குறித்து சித்த மருத்துவத்தில் விளக்கப்பட்டிருக்கிறது.

    குளித்தல் என்பது வெறும் அழுக்கை நீக்குதல் என்பது அல்ல. அவ்வாறு எடுத்துக் கொண்டால் நாம் அனைவரும் இரவு நேரங்களில் தான் குளிக்க வேண்டும். இரவு முழுவதும் சூடாக இருந்த உடலை குளிர்வித்தலான நிகழ்வு குளித்தல். அச்சமயத்தில் நம் உடலில் உள்ள பித்தத்தன்மை மாறி, கபத்தன்மை ஏற்படும்.

    சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை பெண்கள் மாதவிலக்கு நாட்களில் ஓய்வாக இருந்தனர். அதனால் உடல் சூட்டின் அளவு அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருந்தது. அந்தக் காலத்தில் ஒரு விதமான மரபு பின்பற்றப்பட்டது. இன்றைய பெண்கள் பல்வேறு சூழல்களில் பணிபுரிந்து வருகின்றனர். மாதவிலக்கு நாளில் ஓய்வே இல்லை.



    இந்நாட்களில் தலைக்கு குளிக்கவே கூடாது என மொத்தமாக சொல்ல முடியாது.. ஒவ்வொரு பெண்ணின் உடல் சூழலும் மாறும். உடல் சூட்டில் இருந்து தலைக்கு குளிக்கும் போது தும்மல், மூக்கடைப்பு, சளி போன்ற தொந்தரவுகள் வரலாம். இதன் காரணமாகவே அந்த காலத்தில் மாதவிலக்கு நேரத்தில் பெண்கள் தலைக்கு குளிக்கக் கூடாது என்று சொல்லப்பட்டது.

    ஆனால் இப்போதிருக்கும் சூழ்நிலையில் உடற்சூடு என்பது பெண்களுக்கு பெண்கள் மாறுபடும். அவ்வாறு பிரச்சனைகள் உள்ள பெண்கள் தலைக்கு குளிப்பதைத் தவிர்த்துக் கொள்ளலாம். பெண்கள் தங்கள் உடல் தன்மைக்கு ஏற்ப குளிக்கும் பழக்கத்தை கடைப்பிடிக்கலாம்’

    இந்த நாட்களில் ஆரோக்கியமான, எளிதில் ஜீரணமாகும் உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம். இந்த நாட்களில் உடலானது வழக்கத்தைவிட அதிக சூடாக இருக்கும். தலைக்குக் குளிப்பதால் சிலருக்குச் சளி பிடிக்கலாம்.

    கருப்பை, நரம்புகள் பாதிக்கப்படும் என்பதற்கான அறிவியல் ஆதாரம் இல்லை. இந்த நாட்களில் நான்கு மணி நேரத்துக்கு ஒருமுறை நாப்கின் மாற்றிக்கொள்ளுதல், மனதளவில் தயாராக இருத்தல் போன்ற நடைமுறை விஷயங்களைப் பின்பற்ற வேண்டும்.

    தன் சுத்தம், சுகாதாரமான உணவு, நிறை தண்ணீர், இரும்புச்சத்து நிறைந்த காய்கறி, பழங்களை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். பால் அருந்தும் பழக்கம் இல்லாதவர்கள் இந்த நாட்களிலாவது அவசியம் பருக வேண்டும்.
    சர்க்கரை நோயாளிகள், டயட்டில் இருப்பவர்களுக்கு கோதுமை ரவை - பயத்தம்பருப்பு கஞ்சி மிகவும் நல்லது. இன்று இந்த கஞ்சியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பச்சைப் பட்டாணி - கால் கப்,
    உப்பு - தேவைக்கேற்ப.
    நெய் - சிறிதளவு,
    உருளைக்கிழங்கு - 2
    கோதுமை ரவை - 1 கப்,
    பயத்தம்பருப்பு - 50 கிராம்
    வறுத்த வேர்க்கடலை - 10 கிராம்.



    செய்முறை

    வேர்க்கடலையை கொரகொப்பாக உடைத்து கொள்ளவும்.

    வாணலியில் நெய் விட்டு கோதுமை ரவை, பயத்தம்பருப்பை தனித்தனியாக வறுக்கவும்.

    பயத்தம்பருப்பை ஒன்றிரண்டாக மிக்ஸியில் பொடித்து கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை தோல் நீக்கி சதுரமாக நறுக்கி, தனியாக வைக்கவும்.

    குக்கரில் 3 கப் நீர் விட்டு வறுத்த ரவை, பயத்தம்பருப்பு, உப்பு சேர்த்து, நறுக்கிய உருளைக்கிழங்கு, உப்பு, பச்சைப் பட்டாணியையும் சேர்த்து 2 விசில் வரும் வரை வேகவிட்டு, இறக்கவும்…

    விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து வேர்க்கடலை தூவி, சூடாக பரிமாறவும்.

    சத்து நிறைந்த கோதுமை ரவை - பயத்தம்பருப்பு கஞ்சி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இந்த ஆசனநிலை மனதை ஒருமுகப்படுத்தும். இப்பயிற்சியினால் நன்றாக நிமிர்ந்து நடக்கும் பழக்கம் உண்டாகும். இந்த ஆசனம் செய்முறையை பார்க்கலாம்.
    பெயர் விளக்கம் : ‘நமஸ்கார’ என்றால் வணக்கம் என்றும் ‘ஆசனம்’ என்றால் குறிப்பிட்ட நிலையில் அசையாமல் இருப்பது என்றும் பொருள். இந்த ஆசனத்தில் வணங்கும் நிலையில் இருப்பதால் நமஸ்காராசனம் என்று பெயர் அமைந்துள்ளது.

    செய்முறை : நேராக நிமர்ந்து நிற்கவும். பாதம் இரண்டும் சேர்ந்திருக்கட்டும். இப்போது நிதானமாக முழங்கால்களை மடக்கி இரண்டு உள்ளங்கைகளையும் ஒன்றாக சேர்த்து மார்பின் நடுப்பகுதியில் ஒட்டியபடி கை கட்டை விரல்களை வைக்கவும். கண்களை மூடவும். உடல் முழுவதும் தளர்வாக இருக்கட்டும்.
    இந்நிலையில் சாதாரண மூச்சுடன் இருக்கவும். அல்லது மூச்சை வெளியே விடவும் சூரியனை நினைத்து இந்த ஆசன நிலைக்கு உரிய மந்திரத்தைக் கூறி இந்த ஆசன நிலைக்கு உரிய சக்கரத்தை மனதால் நினைக்கவும்.

    கவனம் செலுத்த வேண்டிய இடம் : உடலை தளர்த்துவதின் மீதும் அறைவுத் சக்கத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.

    பயிற்சிக் குறிப்பு : கதிர்களற்ற உதயகால சூரியனை மட்டும் கண்களால் பார்த்தபடி இந்த ஆசன நிலையை செய்யலாம். கைகளின் மணிக்கட்டுகளுக்கு நேராக முழங்கைகள் இருக்கும்படி வைத்துக் கொள்ள வேண்டும்.

    தடைகுறிப்பு : உதயமாகி சூரிய கதிர்கள் அதிகமாக இருக்கும்போது கண்களால் சூரியனை பார்த்தபடி செய்யக்கூடாது. இதனால் கண்கள் பாதிப்படையும்.

    பயன்கள் : இந்த ஆசனநிலை மனதை ஒருமுகப்படுத்தவும், இனிவரும் ஆசனங்களை செய்வதற்கும் நம்மை தயார்படுத்தவும் உதவுகிற தோள்பட்டை, முழங்கைகள், மணிக்கட்டுகள், வலுவடையும், நடக்கும் போது கோணலாக உடலை வைத்துக் கொண்டு நடப்பவர்கள். இப்பயிற்சியினால் நன்றாக நிமிர்ந்து நடக்கும் பழக்கம் உண்டாகும்.
    சத்தான காலை உணவே குழந்தைகளின் நினைவுத்திறன், எச்சரிக்கை உணர்வு, மன ஒருமைப்பாடு, சாதுரிய மனப்பான்மைக்கு உதவியாக இருக்கும்.
    # ‘அம்முக்குட்டி... செல்லக்குட்டி... மணி ஏழரை ஆச்சு... எந்திரிமா...’ என அம்மா எழுப்ப... ‘இன்னும் கொஞ்ச நேரம்’ என அன்பு அம்மாவை கெஞ்சிவிட்டு தூங்கிவிடுகிறீர்களா?

    # பிறகு எழுந்தததும் ‘லேட் ஆயிடுச்சு மம்மி, எனக்கு டிபன் வேண்டாம், ஸ்நாக்ஸ் சாப்பிட்டுக்கிறேன்னு’ பள்ளிக்கு ஓட்டம் பிடிக்கிறீர்களா?

    # இப்படி, காலை உணவை தவிர்ப்பது எவ்வளவு தீமையானது என்பது உங்களுக்குத் தெரியுமா?

    காலை உணவின் நன்மைகளையும், அதை தவிர்ப்பதால் ஏற்படும் உடல் மன பிரச்சினைகள் பற்றியும் கொஞ்சம் தெரிஞ்சுக்கலாமா...

    95 சதவீத குழந்தைகள் சத்தான உணவை எடுத்துக் கொள்வதில்லை என்கிறது ஒரு புள்ளி விவரம். பாதி குழந்தைகள் காலை உணவில் கவனம் செலுத்துவதில்லை என்கிறார்கள் மருத்துவர்கள்.

    சத்தான காலை உணவே குழந்தைகளின் நினைவுத்திறன், எச்சரிக்கை உணர்வு, மன ஒருமைப்பாடு, சாதுரிய மனப்பான்மைக்கு உதவியாக இருக்கும். நிம்மதியாக சாப்பிட்டு மனநிறைவுடன் பள்ளிக்கு கிளம்புபவர்கள் மகிழ்ச்சியான மனநிலையுடன் எதையும் எதிர்கொள்வார்கள்.

    பசி, பட்டினியுடன் பள்ளிக்குப் போனால் படித்த பாடங்கள் நினைவுக்கு வருவதில் சிரமம் ஏற்படும். பார்ப்பவர்கள் மீது எரிச்சலுடன் பாய்வீர்கள். பள்ளி மீதும், ஆசிரியர் மீதும் வெறுப்பு வரலாம். இதற்கு அம்மாதான் காரணம் என கோபம் ஏற்படலாம். இதுபோன்ற எரிச்சல் மற்றும் எதிர்மறை மனநிலைகள் நாள் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தி அன்றைய தினத்தை சந்தோஷமற்றதாக மாற்றிவிடும் வாய்ப்பு உண்டு.

    அடிக்கடி காலை உணவை சாப்பிடாமல் கிளம்புபவர்களுக்கு வயிற்றில் சுரக்கும் ஜீரண திரவங்களால் வயிற்றில் புண் ஏற்பட்டு, ‘அல்சர்’ எனும் தீராத வயிற்றுவலி பிரச்சினையாக மாற வாய்ப்பு உண்டு.

    காலை உணவை தவிர்த்தால் அன்றைய பொழுதுக்குத் தேவையான ரத்த ஓட்டம் மூளைக்கு கிடைப்பதில் சிரமம் ஏற்படுவதால் மூளை சோர்வடையும். இதுவே நினைவுத்திறன் பாதிப்பு முதல், எரிச்சல் வரை எல்லா பிரச்சினைகளையும் கொண்டு வரும்.

    அதிகமாக காலை உணவை தவிர்த்தால் உடல் வளர்ச்சி பாதிக்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறையும். பல்வேறு நோய் பாதிப்புகள் வரலாம். எனவே வெறும் பால் அல்லது ரொட்டித் துண்டு, பிஸ்கட்டுகளை மட்டும் சாப்பிடுவதை தவிர்த்து, சுவையான, சத்தான காலை உணவை எடுத்துக் கொள்வது அவசியமாகும்.

    சாப்பிடவில்லையே என பசியைத் தள்ளிப்போட நொறுக்குத் தீனிகளை உண்டால் உடல் எடை கூடும்.



    காலை உணவு எடுத்து கொள்ளவில்லை என்றால் இரைப்பை காலியாக இருக்கும். இதனால் இரவில் இயல்பாக சுரந்துள்ள பித்தநீர் மெல்ல தலைக்கு ஏறும் அபாயம் உள்ளது. பித்தம் தலைக்கு ஏறினால் பல்வேறு உடல் நலக்கோளாறுகள் ஏற்படும்.

    காலை உணவு சாப்பிடாதவர்கள் மதிய உணவையும் திருப்தியாக சாப்பிட முடியாது. கொஞ்சம் சாப்பிட்டவுடனே வயிறு நிறைந்து விட்டது போன்ற உணர்வு ஏற்படும்..

    எல்லாம் சரி, காலை உணவு சாப்பிட முடியாமல் போக என்ன காரணம் என்பது பற்றி சிறிது யோசிப்போமா...

    காலை 7 மணியில் இருந்தே பள்ளி பேருந்துகள், பிள்ளைகளை அள்ளிச் செல்ல வீதிவலம் வந்துவிடுகின்றன. நடந்து செல்பவர்களைத் தவிர அனைவரும் 8.30க்குள் பள்ளிக்கு சென்றுவிடுகிறார்கள். இவ்வளவு சீக்கிரமாக பள்ளி செல்பவர்கள், தங்கள் பள்ளி வாகனம் வரும் நேரத்திற்கு சுமார் 2 மணி நேரத்திற்கு முன்பு படுக்கையை விட்டு எழுந்தால்தான், பரபரப்பின்றி அனைத்து பணிகளையும் முடித்து, நிம்மதியாக சாப்பிட்டுவிட்டு பள்ளிக்கு கிளம்ப முடியும்.

    நீங்கள் 8.30க்குள் வீட்டிலிருந்து கிளம்ப வேண்டுமென்றால், 6.30 முதல் 7 மணிக்குள் எழுந்தாக வேண்டும். இவ்வளவு சீக்கிரம் எழுந்திருக்க வேண்டுமா? என்று நீங்கள் யோசித்தால், உங்கள் அம்மாவின் சிரமத்தை எண்ணிப் பாருங்கள். உங்களுக்கும் 2 மணி நேரம் முன்னதாகவே எழுந்து எல்லாப் பணிகளையும் முடித்தால்தான் நீங்கள் நிம்மதியாக கிளம்ப முடியும்.

    காலைக்கடன்கள், பள்ளிப் பாடங்கள், குளித்தல், சாப்பிடுதல், சீருடை அணிதல், துணி துவைத்தல், இஸ்திரி செய்தல் என ஒவ்வொருவருக்கும் எண்ணற்ற பணிகள் இருக்கலாம். தாமதமாக எழுந்திருப்பதால் சின்னச்சின்ன வேலைகளும் நேரத்தை விழுங்கும். பரபரப்பில் பல பணிகளை மறந்துபோகவும் வாய்ப்பு உண்டு.

    பள்ளி முடிந்து வந்ததும் வீட்டுப் பாடங்களை முடித்து வைப்பதுடன், பேனா பென்சில் முதல் ஐ.டி. கார்டு வரை அனைத்தையும் ஒரே இடத்தில் எடுத்து வைத்திருந்தால் காலையில் கொஞ்சம் பரபரப்பு இல்லாமல் கிளம்பலாம். இல்லாவிட்டால் கடைசி நேரத்தில் ‘அய்யோ. .. வீட்டுப் பாடம் முடிக்கலையே,’ ‘இந்த ஐ.டி. கார்டை எங்கே வச்சேன்னு தெரியலையே’ என பரபரப்பில் எரிச்சல் ஏற்பட்டு, கோபம் தலைக்கேறி சாப்பிடாமல் ஓட வேண்டி வரலாம். சீக்கிரம் எழுந்துவிட்டால் இந்த சிரமங்கள் இல்லை. 
    கலங்கல் நீரினைத் தூய்மைப்படுத்தும் திறன் தேற்றா எனப்படும் தேற்றாங்கொட்டைக்கு உண்டு என்பதே ஆகும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    நல்ல தண்ணீருக்காக நம் மக்கள் படும் அல்லல் என்பது பல இடங்களில் அன்றாட நிகழ்வாகிவிட்டது. இருக்கின்ற நீரும் மாசுடன் திகழ்வதால் அந்நீரினைத் தூய்மைப் படுத்துவதற்குப் பல ஆயிரங்கள் செலவிட்டுக் கருவிகளை வாங்கி வைத்துக்கொள்கிறோம். மேலும் பாட்டிலில் அடைக்கப்பட்ட நீரினை விலைகொடுத்து வாங்கி அருந்தவேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளோம். இன்று பரவும் பல நோய்கள் நீரின் மூலமே பரவுவதால் இத்தகு நிலை ஏற்பட்டுள்ளது.

    ஆனால் அன்றைய மக்கள் ஆறுகள், குளங்கள், பொதுக் கிணறுகள் இவற்றிலிருந்தே குடிப்பதற்கு நீரை எடுத்துப் பயன்படுத்தி வந்தனர். அப்பொழுது நீர் அனைத்து இடத்திலுமே தூய்மையாகத்தான் இருந்தது. அன்றும் சில நீர்நிலைகளில் மாசுகள் இருக்கத்தான் செய்தன. அவற்றைப் போக்கியே மக்கள் குடிநீராகப் பயன்படுத்தினர். அந்த வகையில் கலங்கல் நீரினைத்தூய்மைப்படுத்திய பழந்தமிழர்களின் நுட்பத்தை இங்கு காண்போம்.

    ஆற்று நீர் இயல்பாக தூய்மையாகவேதான் இருக்கும். ஓடுகின்ற நீர் மணல்களுக்கு இடையே உருண்டு, திரண்டு ஓடும்பொழுது நீரிலுள்ள கசடுகள் மணலால் உறிஞ்சப்பட்டு ஆறுகளில் கலக்கின்ற மாசுகள் நீக்கப்பட்டு நீரானது தூய்மையடைகின்றது. சில ஆண்டுகளுக்கு முன் டெல்லியில் நடைபெற்ற உலக அளவில் நீர்வளங்களைக் காப்பது, நீர் மாசுபடுவதை களைவது, குறித்து உலக நீரியல் வல்லுநர்கள் கலந்துகொண்ட மாநாட்டில் தமிழகத்தின் தொன்மைத்திறன் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டு அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பெற்றது.

    அது என்ன வெனில் கலங்கல் நீரினைத் தூய்மைப்படுத்தும் திறன் தேற்றா எனப்படும் தேற்றாங்கொட்டைக்கு உண்டு என்பதே ஆகும். அகரமுதலியில் இல்லம் என்பதற்கு வீடு, மனைவி, இல்வாழ்க்கை என்பதோடு தேற்றா மரம் என்ற பொருளும் கொள்ளப்பெறுகின்றது. தேற்றான் கொட்டை உடலை தேற்றும் குணம் கொண்டதாலும்,நீரைத் தெளிய வைப்பதாலும் தேற்றான் என்று சொல்லப்படுகிறது. பத்து லிட்டர் தண்ணீரில் இரண்டு தேற்றாங்கொட்டைகளைப்போட்டு வைத்தால் 2 மணி நேரத்தில் நீர் சுத்தமானதாகி விடும். இது தவிர இது மருந்தாகவும் பயன்படுகிறது. இதில் இருந்து தயாரிக்கப்படும் லேகியம் பசியைத்தூண்டி விடுகிறது.இதை சாப்பிட்டால் உடல் மெலிந்தவர்கள் தேறி விடுவார்கள்.

    ‘தேற்றாங்கொட்டையிட்டுத் தேற்று மைந்தரை’ எனத் தமிழ் மருத்துவர்கள் இதன் அருமையான மருத்துவப் பயன்களுக்குச் சான்றளித்துள்ளனர். வீட்டிலுள்ள கலங்கிய நீரானாலும் சரி, நிலக்கரிச் சுரங்கத்தில் கரிப்பொடி கலந்த நீரானாலும் சரி, நீரினைத்தெளியவைக்கும் பண்புடைய கொட்டை இதுவாகும். கண்மாய்களில் தேக்கிய நீரைக் குடிநீராகப் பயன்படுத்தும் இடங்களில், தொன்றுதொட்டு நீரைத் தெளியவைக்க, சட்டியிலேயே தேற்றான்கொட்டையைத் தேய்ப்பது வழக்கம். சில நிமிடங்களில் நீர் தெளிந்துவிடும்.

    நீரில் மிதக்கும் கரித்துகள்கள் படிந்துவிடும். நிலக்கரிச் சுரங்கங்களில் நீரில் கலந்த நிலக்கரித் துகள்களைத் தனித்துப் பிரித்திட படிகாரத்துடன் சிறிது தேற்றாங் கொட்டைப் பொடியினையும் சேர்த்திடுவர். உடனடியாக துகள்களெல்லாம் படிந்திடும். நீரைத் தெளியவைக்கும் பண்பு இக்கொட்டையில் நச்சில்லா பொருட்கள் இருப்பதால் ஏற்படுகிறது.இன்று அறிவியலாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இதன் சிறப்பு சங்க நூலான கலித்தொகையின் 142ஆம் பாடலில் உவமையாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. அப்பாடல்,

    இனைந்து நொந்து அழுதனள்: நினைந்து நீடு உயிர்த்தனள் எல்லையும் இரவும் கழிந்தன என்று எண்ணி : எல் இரா நல்கிய கேள்வன் இவன் மன்ற! மெல்ல மணியுள் பரந்த நீர் போலத் துணிவாம் கலம்சிதை இல்லத்துக் காழ்கொண்டு தேற்றக் கலங்கிய நீர்போல் தெளிந்து நலம் பெற்றாள் நல்லெழில் மார்பனைச் சார்ந்து.

    என்பதாகும். இதன்பொருள் “என்னைத் துன்புறுத்தும் காமமும் ஊராரின் பழிச்சொல்லும் என் உயிரைக் காவடியாகக் கொண்டு இருபுறமும் பாரமாகத் தொங்கி என்னை நலிவுறச் செய்கின்றன. என் உயிரும் உடலும் மெலிகின்றன. யான் இறப்பதற்கு முன் என் துன்பத்தை நீக்குவீராக” என்று கூறினாள். வருந்தி அழுதாள் பகலும் இரவும் பயனின்றிக் கழிகின்றன என்று நெடிது நினைத்து, நொந்து பெருமூச்சுவிட்டாள்.

    அந்நிலையில் ஓர் இரவில் அவள் அருகில் அன்போடு அமர்ந்திருக்கும் ஒருவனைக் கண்டோம். அவன்தான் அவளுக்கு அன்பு செய்யும் தலைவன் போலும்! அவள் இவனது மிக்க அழகிய மார்பைத் தழுவி, தேற்றாங்கொட்டையினால் தெளிவிக்கப்பட்ட தண்ணீரைப் போலத் துன்பம் நீங்கி, நலம் பெற்றாள். யாமும் ரத்தினமும், அதன் ஒளியும் போல் இவர்கள் ஒருவரின் ஒருவர் வேறல்லர் என்று மெல்லத் தெளிந்து கொண்டோம் என்று கண்டோர்கள் கூறினர்.

    இத்தேற்றான் கொட்டையின் மருத்துவ குணமாக சரசுவதி மகால் நூலகம் வெளியிட்டுள்ள பதார்த்த குணபாடம் எனும் சித்த மருத்துவ நூலில் பிரமேகம், வெட்டை, உட்சூடு, வயிற்றுக்கடுப்பு, மூத்திர எரிச்சல் போன்ற நோய்களைக் குணமாக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

    மணி. மாறன், தமிழ்ப்பண்டிதர்,

    சரசுவதி மகால் நூலகம், தஞ்சாவூர்.

    நாட்டுக்கோழியை ஆந்திரா ஸ்டைலில் குழம்பு செய்து சாப்பிட்டால், ருசி அவ்வளவு அருமையாக இருக்கும். இன்று ஆந்திரா ஸ்டைல் நாட்டுக்கோழி குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போம்.
    தேவையான பொருட்கள்:

    நாட்டுக்கோழி - 1 கிலோ
    வெங்காயம் - 3,
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்,
    தக்காளி - 2
    தயிர் -2 டேபிள் ஸ்பூன்,
    பச்சை மிளகாய் - 3-4 ,
    மல்லி (தனியா)- 1 டேபிள் ஸ்பூன்,
    சீரகம் - 1/2 டேபிள் ஸ்பூன்,
    தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்,
    பூண்டு - 3 பல்
    மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்,
    மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்,
    கரம் மசாலா - 1 டீஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு,
    எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்,
    கொத்தமல்லி - சிறிது,
    தண்ணீர் - 1 கப்



    செய்முறை :

    வெங்காயம், கொத்தமல்லி, தக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    நாட்டுக்கோழியை நன்றாக சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    மல்லி, சீரகம், தேங்காய், பூண்டு ஆகியவற்றை வாணலியில் போட்டு வறுத்து, குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ள வேண்டும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து, 5 நிமிடம் நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.

    அடுத்து தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் அரைத்து வைத்துள்ள பேஸ்ட், கரம் மசாலா, தயிர் மற்றும் உப்பு சேர்த்து, 5 நிமிடம் வதக்க வேண்டும்.

    பின்பு கழுவி வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து, மசாலா சிக்கனில் படுமாறு நன்கு பிரட்டி, தண்ணீர் ஊற்றி, தீயை குறைவில் வைத்து, மூடி வைத்து 20 நிமிடம் சிக்கனை வேக வைக்க வேண்டும்.

    சிக்கனானது நன்கு வெந்த பிறகு, அதனை இறக்கி, அதில் கொத்தமல்லியை தூவினால், சுவையான ஆந்திரா ஸ்டைல் நாட்டுக்கோழி குழம்பு ரெடி.

    இந்த ஆந்திர ஸ்டைல் நாட்டுக்கோழிக் குழம்பை சூடான சாதத்துடனும், இட்லி, தோசை, சப்பாத்தி என எதனுடன் வைத்து சாப்பிட்டாலும், பக்காவாக இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    அனைவரும் விரும்பி குடிக்கும் பானம் லெமன் ஜூஸ். இந்த லெமன் ஜூஸில் இருக்கும் நன்மைகளைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?. அதைப் பற்றி இங்கு பார்ப்போம்.
    அனைவரும் விரும்பி குடிக்கும் பானம் லெமன் ஜூஸ். இந்த லெமன் ஜூஸில் இருக்கும் நன்மைகளைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?. அதைப் பற்றி இங்கு பார்ப்போம்.

    இது ரத்த ஓட்டத்தைக் கட்டுப்படுத்துகிறது.

    தோலில் ஏற்படக்கூடிய கரும்புள்ளி மற்றும் சுருக்கங்களைக் குறைக்கிறது.

    டீ மற்றும் காபி குடிக்கும் பழக்கத்தை நீக்குகிறது.

    உடல் எடையைக் குறைக்கிறது.

    மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது.

    நுரையீரல் தொற்றுகளைக் குறைக்கிறது.

    சிறுநீரக அமைப்பைச் சுத்திகரிக்கிறது.
    ×