search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Water Benefits"

    நாள்தோறும் போதுமான தண்ணீர் குடிப்பது மிக அவசியம். ஆனால், 'டயட்டில் இருக்கிறேன்' என்று பாட்டில் பாட்டிலாக தண்ணீர் அருந்துவது உயிருக்கே ஆபத்து என்கிறது ஆய்வு.
    சாதாரணமாக நடுத்தர வயது மனிதனின் உடலில் 60 சதவீதம் நீர் உள்ளது. மனிதன் உயிர்வாழ நீர் அவசியம். வளர்சிதை மாற்றம், பளபளப்பான சருமம் மற்றும் உடலுக்குத் தேவையான ஆற்றல் போன்றவற்றுக்கும் நாள்தோறும் போதுமான தண்ணீர் குடிப்பதும் மிக அவசியம். ஆனால், 'டயட்டில் இருக்கிறேன்' என்று பாட்டில் பாட்டிலாக தண்ணீர் அருந்துவது உயிருக்கே ஆபத்து என்கிறது ஆய்வு. தண்ணீர் குடித்து எடையை குறைக்கலாம் என்று நினைத்து அதிகமாக தண்ணீர் அருந்துவது தவறு. ஒருநாளைக்கு எவ்வளவு தண்ணீர் அருந்தலாம் என்பதை அவரவரின் எடை, செய்யும் வேலையைப் பொறுத்தே தீர்மானிக்க வேண்டும்.

    80 கிலோ எடை உள்ள ஒருவர், 200 கிலோ எடை உடையவர் அருந்தும் நீரின் அளவை எடுத்துக் கொள்ளக்கூடாது. 80 கிலோ எடை இருந்தால், சுமார் ஒன்றேகால் லிட்டர் தண்ணீர் அருந்தலாம். நீங்கள் செய்யும் வேலையைப் பொறுத்து குடிக்கும் நீரின் அளவை மாற்றிக் கொள்ளவேண்டும். ஏசி அறையில், கம்ப்யூட்டர் முன்பு மணிக்கணக்காக உட்கார்ந்து வேலை செய்பவராக இருந்தால் குறைந்த அளவே போதும். கடினமான வேலை மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்பவராக இருந்தால் ½ லிட்டர் தண்ணீரை கூடுதலாக அருந்துவது நல்லது.

    உங்களால் சரியான அளவை பின்பற்ற முடியவில்லை என்றால், இதோ இந்த சின்ன வி‌‌ஷயங்களை கடைப்பிடித்தாலே நாளொன்றுக்கு தேவையான நீரை பருக முடியும். காலை எழுந்தவுடன் 1 டம்ளர் தண்ணீர் அருந்துங்கள். உணவு வேளைக்கு அரைமணி நேரத்துக்கு முன் 2 டம்ளர் தண்ணீர் அருந்துங்கள். உணவு உண்டு முடித்தப் பின் அரைமணி நேரம் கழித்து 2 டம்ளர் நீர் அருந்துங்கள். மேலும், உறங்கச் செல்வதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பு 1 டம்ளர் தண்ணீர் அருந்துங்கள். வெளியில் செல்லும் போது உடன் ஒரு பாட்டில் தண்ணீர் எடுத்துச் செல்லுங்கள்.

    நீர்ச்சத்துள்ள காய்கறிகள் மற்றும் பழங்களிலிருந்தும் அதிகப்படியான நீர் கிடைப்பதால், நேரிடையாக அருந்தும் நீரின் அளவை குறைத்துக் கொள்ளலாம். நீர் நம் உடலுக்கு நல்லது என்றாலும் அதுவும் ஒரு குறிப்பிட்ட அளவே இருக்க வேண்டும். அதற்கும் அதிகமாக அருந்தினால் வேறு பல பிரச்சினைகள் வந்துவிடும் என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.
    நாம் வீடுகளில் ப்ளாஸ்டிக் பாத்திரங்கள், டப்பாக்கள் பயன்படுத்துகிறோம். ஆனால் உடல் ஆரோக்கியத்திற்கு இது நல்லதல்ல. இதற்கு மாற்றாக கண்ணாடிப் பொருட்களை உபயோகிப்பதால் என்ன நன்மைகள் என்று பார்ப்போம்.
    சமைத்த உணவு மட்டுமின்றி, உணவு தயாரிக்கத் தேவையான மளிகை பொருட்களையும் முறையாகவும் சுத்தமாகவும் பாதுகாத்து வைப்பது மிகவும் அவசியம். பெரும்பாலும் இன்றைய வீடுகளில் நாம் இதற்கு ப்ளாஸ்டிக் பாத்திரங்கள், டப்பாக்கள் மற்றும் குடுவைகளைத்தான் பயன்படுத்துகிறோம். ஆனால் உடல் ஆரோக்கியத்திற்கு இது நல்லதல்ல. மாற்றாக நாம் இதற்கு கண்ணாடிப் பொருட்களை உபயோகிப்பதால் என்ன நன்மைகள் என்று பார்ப்போம்.

    கண்ணாடி ப்ளாஸ்டிக்கை விட பாதுகாப்பானது

    ப்ளாஸ்டிக்கில் உள்ள ரசாயனங்கள் உணவுப் பொருட்களில் கலக்கும் வாய்ப்பு ஏற்படலாம். அதிக குளிர்ச்சி மற்றும் அதிக சூடான பொருட்களை ப்ளாஸ்டிக்கில் வைக்கும்போது, அதாவது ஃப்ரிட்ஜ் மற்றும் மைக்ரோவேவ் ஓவனில் வைக்கும்போது இந்த ரசாயன கலப்பு நடக்கும். ஆனால் கண்ணாடிப் பாத்திரங்கள் தான் மாற்றம் அடைவதில்லை. மேலும், அதன் தன்மை மற்ற பேரணுக்களை தன்னுள் அனுமதிக்காத மிகவும் கெட்டியான தன்மை கொண்டதாகும்.

    கண்ணாடி சூட்டை தாங்கக்கூடியது

    உணவை சமைத்த உடனேயே கண்ணாடி பாத்திரத்தில் மாற்றி விடலாம், பாத்திரத்தை மூடியும் வைத்துக் கொள்ளலாம். மீதம் உள்ள உணவை அப்படியே பிரிட்ஜில் சேமிக்கவும் இது பாதுகாப்பானது. நீண்ட நாட்களுக்கு மளிகை பொருட்களை சேமிக்கவும், அதன் நிறம் மற்றும் மணம் மாறாமல் இருக்கவும் கண்ணாடிக் குடுவைகள் சிறந்ததாக இருக்கும். பாத்திரத்தின் ரசாயனம் எதுவும் சூடான பொருளில் கலப்பதில்லை என்பதாலும் கண்ணாடிப் பாத்திரங்கள் நல்லது.



    பல் உபயோகம் கொண்டது கண்ணாடி

    ஒரே பாத்திரத்தில் மூடி போட்டு சேமித்தும் வைக்கலாம். சமைத்த உணவுப் பொருளை சூடாக போட்டும் வைக்கலாம் அல்லது சமைக்கவும் பயன்படுத்தலாம். அதே பாத்திரத்தை பிரிட்ஜ் அல்லது ஃப்ரீசரில் மிக குளிர்ச்சியாகவும் பாதுகாக்கலாம். கண்ணாடியில் உள்ள உணவுப் பொருளை அப்பாத்திரத்தில் வைத்தே பரிமாறலாம். இப்படி பல உபயோகங்களுக்கு கண்ணாடி பயன்படுகிறது.

    சுத்தம் மற்றும் வெளிப்படை தன்மை

    மளிகை மற்றும் உணவுப் பொருட்களை கண்ணாடிப் பாத்திரங்களில் சேமிக்கும்போது அதனை சுத்தப்படுத்துவது சுலபம். வாசனையோ, அழுக்கோ, கறையோ அதில் படிவதில்லை. மேலும் அதன் உள்ளே என்ன பொருள் இருக்கிறது என்பதை நாம் சுலபமாக தெரிந்துக் கொள்ளலாம். பொருட்கள் கெடத் துவங்கும்போதே அதை கண்டுபிடித்து அப்புறப்படுத்துவதும் சுலபம்.

    கண்ணாடிக் குடுவைகள் எவ்வளவு காலமானாலும் உடையாத வரையில் உபயோகப்படுத்தலாம். உணவுப் பொருட்களின் வாசனையையும், அது பெற்றுக் கொள்வதில்லை. பல வருடங்கள் தொடர்ந்து உபயோகப்படுத்தவும் ஏற்றது.
    குளிர்காலத்தில் வீசும் குளிர் காற்று சருமத்திற்கு வறட்சி தன்மையையும், நீரிழப்பு பிரச்சினையையும் ஏற்படுத்திவிடும். உடலில் போதுமான அளவு நீர்ச்சத்து இருந்தால்தான் நோய் எதிர்ப்பு சக்தியும் இருக்கும்.
    குளிர்காலத்தில் வீசும் குளிர் காற்று சருமத்திற்கு வறட்சி தன்மையையும், நீரிழப்பு பிரச்சினையையும் ஏற்படுத்திவிடும். உடலில் போதுமான அளவு நீர்ச்சத்து இருந்தால்தான் நோய் எதிர்ப்பு சக்தியும் இருக்கும். இல்லாவிட்டால் சளி, காய்ச்சல் போன்ற நோய் பாதிப்புகள் உருவாகக்கூடும்.

    இதனை தவிர்க்க அடிக்கடி தண்ணீர் பருகிக்கொண்டே இருக்க வேண்டும். தொடர்ந்து சீராக தண்ணீர் பருகுவதன் மூலம் உடல் வெப்பநிலையை சீராக பராமரிக்கலாம். உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்திருக்கவும் தண்ணீர் பருகுவது அவசியமானது. அது தேவையற்ற கொழுப்பையும் கட்டுப்படுத்தும்.

    சரும ஆரோக்கியத்திற்கும், அழகுக்கும் தண்ணீர் பருகுவது அவசியமானது. தண்ணீர் அதிகம் பருகினால் சரும சுருக்கம் ஏற்படாது. சருமமும் வறண்டு போகாது. குளிர்காலத்தில் குளிர்ந்த நீர் பருகுவதை தவிர்க்க வேண்டும். வெதுவெதுப்பான நீரை பருகுவதே நல்லது.

    மது குடிப்பதையும் தவிர்க்க வேண்டும். அது உடலில் உள்ள நீர்ச்சத்தை உறிஞ்சி விடும். பழங்கள், காய்கறிகளில் நீர்ச்சத்து கலந்திருப்பதால் அவை உடலில் நீரிழப்பை கட்டுப்படுத்த துணைபுரியும்.

    குளிர்காலத்தில் சூடான டீ, காபி பருகுவது இதமாக இருக்கும். உடல் வெப்பநிலையை பராமரிக்க உதவும். ஆனாலும் அதில் கலந்திருக்கும் ‘காபின்’ உடலில் இருக்கும் நீர்ச்சத்தின் அளவை குறைத்து விடும். அவற்றுக்கு பதிலாக சாலட், சூப் வகைகளை பருகலாம். அவை உடலுக்கு ஆரோக்கியம் சேர்ப்பதோடு உடலில் நீரின் அளவையும், வெப்பநிலையையும் சீராக பராமரிக்க உதவும்.
    கலங்கல் நீரினைத் தூய்மைப்படுத்தும் திறன் தேற்றா எனப்படும் தேற்றாங்கொட்டைக்கு உண்டு என்பதே ஆகும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    நல்ல தண்ணீருக்காக நம் மக்கள் படும் அல்லல் என்பது பல இடங்களில் அன்றாட நிகழ்வாகிவிட்டது. இருக்கின்ற நீரும் மாசுடன் திகழ்வதால் அந்நீரினைத் தூய்மைப் படுத்துவதற்குப் பல ஆயிரங்கள் செலவிட்டுக் கருவிகளை வாங்கி வைத்துக்கொள்கிறோம். மேலும் பாட்டிலில் அடைக்கப்பட்ட நீரினை விலைகொடுத்து வாங்கி அருந்தவேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளோம். இன்று பரவும் பல நோய்கள் நீரின் மூலமே பரவுவதால் இத்தகு நிலை ஏற்பட்டுள்ளது.

    ஆனால் அன்றைய மக்கள் ஆறுகள், குளங்கள், பொதுக் கிணறுகள் இவற்றிலிருந்தே குடிப்பதற்கு நீரை எடுத்துப் பயன்படுத்தி வந்தனர். அப்பொழுது நீர் அனைத்து இடத்திலுமே தூய்மையாகத்தான் இருந்தது. அன்றும் சில நீர்நிலைகளில் மாசுகள் இருக்கத்தான் செய்தன. அவற்றைப் போக்கியே மக்கள் குடிநீராகப் பயன்படுத்தினர். அந்த வகையில் கலங்கல் நீரினைத்தூய்மைப்படுத்திய பழந்தமிழர்களின் நுட்பத்தை இங்கு காண்போம்.

    ஆற்று நீர் இயல்பாக தூய்மையாகவேதான் இருக்கும். ஓடுகின்ற நீர் மணல்களுக்கு இடையே உருண்டு, திரண்டு ஓடும்பொழுது நீரிலுள்ள கசடுகள் மணலால் உறிஞ்சப்பட்டு ஆறுகளில் கலக்கின்ற மாசுகள் நீக்கப்பட்டு நீரானது தூய்மையடைகின்றது. சில ஆண்டுகளுக்கு முன் டெல்லியில் நடைபெற்ற உலக அளவில் நீர்வளங்களைக் காப்பது, நீர் மாசுபடுவதை களைவது, குறித்து உலக நீரியல் வல்லுநர்கள் கலந்துகொண்ட மாநாட்டில் தமிழகத்தின் தொன்மைத்திறன் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டு அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பெற்றது.

    அது என்ன வெனில் கலங்கல் நீரினைத் தூய்மைப்படுத்தும் திறன் தேற்றா எனப்படும் தேற்றாங்கொட்டைக்கு உண்டு என்பதே ஆகும். அகரமுதலியில் இல்லம் என்பதற்கு வீடு, மனைவி, இல்வாழ்க்கை என்பதோடு தேற்றா மரம் என்ற பொருளும் கொள்ளப்பெறுகின்றது. தேற்றான் கொட்டை உடலை தேற்றும் குணம் கொண்டதாலும்,நீரைத் தெளிய வைப்பதாலும் தேற்றான் என்று சொல்லப்படுகிறது. பத்து லிட்டர் தண்ணீரில் இரண்டு தேற்றாங்கொட்டைகளைப்போட்டு வைத்தால் 2 மணி நேரத்தில் நீர் சுத்தமானதாகி விடும். இது தவிர இது மருந்தாகவும் பயன்படுகிறது. இதில் இருந்து தயாரிக்கப்படும் லேகியம் பசியைத்தூண்டி விடுகிறது.இதை சாப்பிட்டால் உடல் மெலிந்தவர்கள் தேறி விடுவார்கள்.

    ‘தேற்றாங்கொட்டையிட்டுத் தேற்று மைந்தரை’ எனத் தமிழ் மருத்துவர்கள் இதன் அருமையான மருத்துவப் பயன்களுக்குச் சான்றளித்துள்ளனர். வீட்டிலுள்ள கலங்கிய நீரானாலும் சரி, நிலக்கரிச் சுரங்கத்தில் கரிப்பொடி கலந்த நீரானாலும் சரி, நீரினைத்தெளியவைக்கும் பண்புடைய கொட்டை இதுவாகும். கண்மாய்களில் தேக்கிய நீரைக் குடிநீராகப் பயன்படுத்தும் இடங்களில், தொன்றுதொட்டு நீரைத் தெளியவைக்க, சட்டியிலேயே தேற்றான்கொட்டையைத் தேய்ப்பது வழக்கம். சில நிமிடங்களில் நீர் தெளிந்துவிடும்.

    நீரில் மிதக்கும் கரித்துகள்கள் படிந்துவிடும். நிலக்கரிச் சுரங்கங்களில் நீரில் கலந்த நிலக்கரித் துகள்களைத் தனித்துப் பிரித்திட படிகாரத்துடன் சிறிது தேற்றாங் கொட்டைப் பொடியினையும் சேர்த்திடுவர். உடனடியாக துகள்களெல்லாம் படிந்திடும். நீரைத் தெளியவைக்கும் பண்பு இக்கொட்டையில் நச்சில்லா பொருட்கள் இருப்பதால் ஏற்படுகிறது.இன்று அறிவியலாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இதன் சிறப்பு சங்க நூலான கலித்தொகையின் 142ஆம் பாடலில் உவமையாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. அப்பாடல்,

    இனைந்து நொந்து அழுதனள்: நினைந்து நீடு உயிர்த்தனள் எல்லையும் இரவும் கழிந்தன என்று எண்ணி : எல் இரா நல்கிய கேள்வன் இவன் மன்ற! மெல்ல மணியுள் பரந்த நீர் போலத் துணிவாம் கலம்சிதை இல்லத்துக் காழ்கொண்டு தேற்றக் கலங்கிய நீர்போல் தெளிந்து நலம் பெற்றாள் நல்லெழில் மார்பனைச் சார்ந்து.

    என்பதாகும். இதன்பொருள் “என்னைத் துன்புறுத்தும் காமமும் ஊராரின் பழிச்சொல்லும் என் உயிரைக் காவடியாகக் கொண்டு இருபுறமும் பாரமாகத் தொங்கி என்னை நலிவுறச் செய்கின்றன. என் உயிரும் உடலும் மெலிகின்றன. யான் இறப்பதற்கு முன் என் துன்பத்தை நீக்குவீராக” என்று கூறினாள். வருந்தி அழுதாள் பகலும் இரவும் பயனின்றிக் கழிகின்றன என்று நெடிது நினைத்து, நொந்து பெருமூச்சுவிட்டாள்.

    அந்நிலையில் ஓர் இரவில் அவள் அருகில் அன்போடு அமர்ந்திருக்கும் ஒருவனைக் கண்டோம். அவன்தான் அவளுக்கு அன்பு செய்யும் தலைவன் போலும்! அவள் இவனது மிக்க அழகிய மார்பைத் தழுவி, தேற்றாங்கொட்டையினால் தெளிவிக்கப்பட்ட தண்ணீரைப் போலத் துன்பம் நீங்கி, நலம் பெற்றாள். யாமும் ரத்தினமும், அதன் ஒளியும் போல் இவர்கள் ஒருவரின் ஒருவர் வேறல்லர் என்று மெல்லத் தெளிந்து கொண்டோம் என்று கண்டோர்கள் கூறினர்.

    இத்தேற்றான் கொட்டையின் மருத்துவ குணமாக சரசுவதி மகால் நூலகம் வெளியிட்டுள்ள பதார்த்த குணபாடம் எனும் சித்த மருத்துவ நூலில் பிரமேகம், வெட்டை, உட்சூடு, வயிற்றுக்கடுப்பு, மூத்திர எரிச்சல் போன்ற நோய்களைக் குணமாக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

    மணி. மாறன், தமிழ்ப்பண்டிதர்,

    சரசுவதி மகால் நூலகம், தஞ்சாவூர்.

    ×