என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    மண்ணீரல் உறுப்பு ரத்தத்தை வடிகட்டுதல் உள்பட பல முக்கிய பணியை செய்தாலும், இந்த உறுப்பை அகற்றி விட்டாலும் மனிதன் உயிர் வாழலாம்.
    நம் உடலில் மண்ணீரல் என்ற ஒரு உறுப்பு உள்ளது. இதனை ஆங்கிலத்தில் ‘ஸ்பிளன்‘ என்று கூறுவார்கள். இந்த உறுப்பு ரத்தத்தை வடிகட்டுதல் உள்பட பல முக்கிய பணியை செய்தாலும், இந்த உறுப்பை அகற்றி விட்டாலும் மனிதன் உயிர் வாழலாம். அவ்வாறெனில் இந்த உறுப்பு முக்கியமில்லையா? அல்லது முக்கிய தேவையா? இதனை அகற்ற வேண்டிய அவசியம் ஏன் ஏற்படுகிறது? என்பது குறித்து காண்போம். இதுகுறித்து திண்டுக்கல் அரசு மருத்துவமனையின் பொதுநல மருத்துவர் மேரி செலஸ்டினா கூறியதாவது:-

    மண்ணீரல்

    மண்ணீரல், உடலின் முக்கிய உள்உறுப்பு ஆகும். இதயம், நுரையீரல், மூளை, கல்லீரல் போன்றே மண்ணீரலும் தன் இன்றியமையாத பணியை நாள்தோறும் செய்து வருகிறது. உடலில் இடது நுரையீரலுக்கு கீழும், இரைப்பைக்கு சற்று மேலே மண்ணீரல் அமைந்துள்ளது. ஒரு கைப்பிடியளவு இருக்கும் இந்த மண்ணீரலுக்கு பல தனித்தன்மைகள் உண்டு.

    பொதுவாக ரத்த அணுக்களின் வயது சுமார் 120 நாட்கள் ஆகும். அதற்கு மேற்பட்ட, சிதைந்த ரத்த அணுக்களை மண்ணீரல் அழித்து வடிகட்டி விடும். அவ்வாறு சிதைந்த ரத்த அணுக்களை அழித்தவுடன் அதிலிருக்கும் புரோட்டின், இரும்புச்சத்து, பிராண வாயுவை சுமந்து செல்லும் ஹீமோகுளோபின் ஆகியவற்றை மறு சுழற்சி செய்து மீண்டும் அதை ரத்தத்தில் சேர்க்கும்.

    நிமோனியா-மூளைக்காய்ச்சல்

    அதுமட்டுமின்றி உடலில் பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகள் உட்புகுந்தால் அதனை எதிர்த்து போராடும். இதற்காக ரத்தத்தில் வெள்ளை அணுக்களை உருவாக்கும். மொத்தத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதுடன், நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கும்.

    இத்தகைய நோய் எதிர்க்கும் பணியை மண்ணீரல் செய்யாவிடில் உடலில் எளிதில் நிமோனியா என்ற கிருமி தாக்கி நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டுவிடும். அதுமட்டுமின்றி எளிதில் மூளைக்காய்ச்சலும் தாக்கும். இந்த 2 நோயும் எளிதில் தாக்காமல் மண்ணீரல் கவனமாக தன் பணியை ஆற்றி வருகிறது.

    ரத்தநாளங்கள்

    இத்தகைய சிறப்பு பெற்ற மண்ணீரலில் நிறைய ரத்தநாளங்கள் உள்ளன. அதனால் இங்கு அதிக ரத்தம் தேங்கி இருக்கும். கத்திக்குத்தில் மண்ணீரலில் காயம் பட்டால் அப்போது நிறைய ரத்தம் வெளியேறும். உடனே ரத்தஅழுத்தம் குறையும். அதற்கு உடனடியாக சிகிச்சை எடுக்க வேண்டும். இல்லையென்றால் உயிரிழப்பு ஏற்படும்.

    இதுதவிர மண்ணீரல் பாதிக்கப்பட்டு நிறைய ரத்தக்கசிவு ஏற்பட்டால் வேறு வழியின்றி அதனை அகற்றுவதும் உண்டு. இதுதவிர விபத்து போன்ற பிற காரணங்களால் மண்ணீரலில் ஊமைக்காயம் ஏற்பட்டாலும் கூட அது பாதிக்கப்பட்டு வீக்கமடையும்.

    பாதிப்பு-அறிகுறி

    பொதுவாக மலேரியா, டைபாய்டு, காசநோயை உருவாக்கும் பாக்டீரியா மற்றும் வைரஸ் கிருமிகளாலும், ரத்தபுற்றுநோய், ரத்தசோகையாலும் மண்ணீரல் பாதிக்கப்படக்கூடும். அவ்வாறு பாதிக்கப்பட்டவுடன் வீக்கமடைந்து உடலில் சில எச்சரிக்கை அறிகுறிகளை வெளிப்படுத்தும். அதை நாம் சட்டென்று உணர முடியாது. அப்போது உடலில் அதிக களைப்பு ஏற்படும். சைனஸ் தொந்தரவு, சுவாசப்பாதை மற்றும் காதுகளில் அடிக்கடி பிரச்சினைகள் ஏற்படும்.


    உடலில் மண்ணீரல் இருக்கும் இடத்தை குறிக்கும் படம்.

    இதுதவிர ஒரு சிலருக்கு அடிவயிற்றில், இடது தோள் பட்டையில் லேசான வலி ஏற்படும். சில சமயங்களில் உடல் முழுவதும் வலி இருக்கும். இது தவிர உடல் எடை குறைதல், மஞ்சள் காமாலை, மூக்கில், வாயில் ரத்தக்கசிவு, மலம் கழிக்கும் போது வயிற்றில் அதிகவலி, பசியின்மை, மூச்சு விடுவதில் சிரமம் போன்றவை இதன் அறிகுறிகள் ஆகும். இவ்வாறான அறிகுறிகள் ஒரு வாரத்துக்கு மேல் இருந்தால் உடனே டாக்டரை அணுகி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இதுதவிர கல்லீரல் பாதிக்கப்பட்டு இருந்தால் அதன் பக்கவிளைவாக மண்ணீரலும் பாதிக்கப்படும். அதன் அறிகுறியாக ரத்தவாந்தி வரும்.

    தலசீமியா

    மண்ணீரலை பொறுத்தவரை, அது உடலுக்கு தேவையான முக்கிய உறுப்பே தவிர, மண்ணீரல் இருந்தால் தான் உயிர் வாழ முடியும் என்கிற கட்டாயமில்லை. அதனால் மண்ணீரல் இன்றியும் உயிர் வாழலாம். இத்தகைய முக்கிய உறுப்பு இன்றி, அல்லது அகற்றி விடுவதற்கு ஒரு சில காரணங்கள் இருக்கிறது. மண்ணீரல் பாதிக்கப்பட்டு விட்டால் எதிர்மறையான வேலைகளை செய்ய ஆரம்பித்து விடும். அப்போது அதனை அகற்றுவதை தவிர வேறு வழியில்லை.

    தலசீமியா என்பது ஒரு வகை ரத்தசோகை நோய். இதுதவிர பல வகையான ரத்தசோகை நோய்கள் இருக்கிறது. இதுபோன்ற நோய்க்கு வாழ்நாள் முழுவதும் ரத்தம் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தப்படும் ரத்தத்தை மண்ணீரல் எதிரியாக பாவித்து, அதிக வேலை செய்து அதில் உள்ள தட்டணுக்கள், வெள்ளை அணுக்கள், செல்களை அழிக்கும். அதனால் தலசீமியா போன்ற ரத்தசோகை நோயாளிகளுக்கு மண்ணீரலை அகற்றி விடுவார்கள்.

    தடுப்பூசிகள்

    இவ்வாறு மண்ணீரலை அகற்றிய நோயாளிகளை நிமோனியா கிருமி தொற்று, மூளைக்காய்ச்சல் போன்றவை எளிதில் தாக்ககூடும் என்று முதலில் பார்த்தோம். அதனால் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கொடுக்க 6 வருடத்துக்கு ஒருமுறை நிமோனியா தடுப்பூசியும், 3 வருடத்துக்கு ஒருமுறை மூளைக்காய்ச்சல் தடுப்பூசியும் வாழ்நாள் முழுவதும் போட வேண்டும். இதனை மருத்துவத்தில் ‘பூஸ்டர் டோஸ்‘ என்கிறார்கள்.

    பொதுவாக மண்ணீரலின் நோய்த்தொற்றை கண்டறிய நோயாளிக்கு நிறைய பரிசோதனைகள் செய்ய வேண்டும். அவ்வாறான பரிசோதனையில் நோயை கண்டுபிடித்து அதற்கு சிகிச்சை அளித்தால் மண்ணீரல் தானாகவே சரி ஆகிவிடும். ரத்தத்தில் இரும்புச்சத்து குறைவாக இருந்தால் மட்டுமே ரத்தசோகை நோய் உருவாகுவதில்லை. அதற்கு பதிலாக மண்ணீரல் பாதிப்பு இருந்தாலும் ரத்தசோகை நோய் வந்து விடும். அதனால் கவனமாக இருக்க வேண்டும்.

    ஆரோக்கியம்


    மண்ணீரலின் ஆரோக்கியத்தை பாதுகாக்க, நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். மூலிகை டீ, பால், கீரை, காய்கறிகள், ஆரஞ்சு, தர்பூசணி போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்கள், வெள்ளரிக்காய், நாவல்பழம் உண்பதும் நல்லது. இதனால் மண்ணீரலின் செயல்பாடுகள் அதிகரிக்கும். செரிமானம் சிறப்பாகும். நோய் எதிர்ப்பு மண்டலம் வலுப்பெறும்.

    மீன் வகை உணவுகள், சோயாபீன்ஸ் எண்ணெய், பூசணி விதை, முந்திரி போன்றவற்றை உண்பதால் நன்மை கிடைக்கும். இவற்றில் ஒமேகா-3 என்னும் ஒரு வகை கொழுப்பு அமிலங்கள் இருக்கிறது. இவை மண்ணீரலின் ஆரோக்கியத்துக்கு வழி வகுக்கும். குடைமிளகாயில் வைட்டமின்-சி உள்ளது. இது மண்ணீரலின் வீக்கத்தை குறைக்கும். இஞ்சி, ஆப்பிள், பப்பாளிசாறு, சோம்புநீர் குடிப்பதும் நல்லது. மது அருந்துவதை தவிர்க்க வேண்டும். மண்ணீரல் பிரச்சினை உள்ளவர்கள் தக்காளியை தவிர்ப்பது நல்லது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். 
    பல்வேறு விவாதங்களின் மையப்பொருளாக முட்டை இருந்துள்ளது. இன்று தினமும் முட்டை சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியமானதா என்று குறித்து அறிந்து கொள்ளலாம்.

    பல்வேறு விவாதங்களின் மையப்பொருளாக முட்டை இருந்துள்ளது. சிலர் மஞ்சள் கருவை தவிர்த்து சாப்பிட்டால் ஆரோக்கியம் என்றும், சிலர் மஞ்சள் கருவுடன் சேர்த்து சாப்பிட்டால் ஆரோக்கியம் என்று கூறுகின்றனர். பல்வேறு விவாதங்களின் முடிவுக்கு பின்னர், நாம் அறிந்து கொள்வது மஞ்சள் கரு தொடர்ந்து உட்கொள்ளக் கூடாது. இதனால் கொழுப்பின் அளவு அதிகரித்து, இதய நோய் பாதிப்பை அதிகரிக்கச் செய்கிறது.

    முட்டையில் அதிகப்படியான டயட்டரி கொழுப்பு இருப்பதை யாரும் மறுக்க முடியாது. ஒரு முட்டையில் 185 மி.கி அளவிற்கு இருக்கிறது. ஆனால் உண்மையில் கொழுப்பின் அளவின் அதிகரிப்பது, உணவில் இருக்கும் நிறைவுற்ற கொழுப்பே(saturated fat) ஆகும். உணவில் இருக்கும் சாதாரண கொழுப்பால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது.

    கொழுப்பு நிறைந்த உணவுப் பொருட்களை உட்கொண்டால், அதிலிருக்கும் கொழுப்பு பிரிந்து முழு மூலக்கூறாக உட்கிரகிக்கப்படாது. அதேசமயம் நிறைவுற்ற கொழுப்பு(saturated fat) சிறிய, சிறிய கொழுப்பு அமிலங்களாக பிரிந்து, உடல் கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது.

    டயட்டரி கொழுப்பு அதிகமுள்ள உணவுப் பொருட்களை உண்ணும் போது, உடல் கொழுப்பை சிறிதளவே அதிகரிக்கச் செய்கிறது. நாம் கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கிய விஷயம், LDL(கெட்ட கொழுப்பு) மற்றும் HDL(நல்ல கொழுப்பு) ஆகியவற்றுக்கு இடையேயான விகிதாச்சாரம் ஆகும். முட்டையானது LDLஐ விட, HDLஐ அதிகரிக்கச் செய்கிறது. இதன்மூலம் இதய பிரச்சனைகள் அதிகரிக்கிறது.

    தினசரி ஒரு முட்டை சாப்பிட்டு வந்தால், இதய பிரச்சனைகள் ஏற்பட 11% குறைந்த வாய்ப்பே உருவாகிறது. உயிரிழப்புகளில் இருந்து 18% குறைந்த வாய்ப்பை உருவாக்குகிறது. இதய அடைப்பு ஏற்படுவதில் இருந்து 26% குறைந்த பாதிப்பை ஏற்படுத்துகிறது.


    முட்டை கட்டாயம் சாப்பிட வேண்டும் என்பதற்கான காரணங்கள் நீண்ட பட்டியலாக இருக்கிறது. முட்டையில் விட்டமின் இ, போலேட், செலினியம், லுடெய்ன், புரோட்டீன், மினரல்கள் இருக்கின்றன. இந்த ஊட்டச்சத்துகள் அனைத்தும் மூளை ஆரோக்கியம், பார்வை, நோய் எதிர்ப்பு ஆகியவற்றிற்கு பெரிதும் உதவுகின்றன.

    உடல் எடையை குறைக்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு, முட்டை மிகச்சிறந்த காலை உணவாகும். முட்டையில் நிறைந்துள்ள புரோட்டீன், நீண்ட நேரத்திற்கு வயிறு நிரம்பிய உணர்வை அளிக்கிறது. கார்போஹைட்ரேட் நிறைந்த காலை உணவை உட்கொண்டால், விரைவில் பசியெடுக்கும் சூழல் உண்டாகும். அதிக நார்ச்சத்து, அதிக கார்போஹைட்ரேட் கொண்ட ஓட் மீல் உடன் முட்டை சேர்த்துக் கொள்ளலாம். இதுவே ஆரோக்கிய மற்றும் அதிகப்படியான காலை உணவாக அமைகிறது.

    வேக வைத்த முட்டைகள் மிக ஆரோக்கிய உணவாகும். இதனுடன் வேறு எதையும் சேர்த்து உண்ண வேண்டிய அவசியமில்லை.
    உடல்நலக்குறைவால் அவதிப்படுபவர்கள் அடிக்கடி சிக்கன் எலும்பு ரசம் வைத்து குடிப்பது உடலுக்கு வலிமை தரும். இன்று இந்த ரசத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சிக்கன் எலும்புடன் - 1/4 கிலோ (தோல் நீக்கியது)
    மஞ்சள் பொடி - 1 ஸ்பூன்
    தனி மிளகாய் பொடி - 1 ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    புளி - நெல்லிக்காய் அளவு
    தக்காளி - 1
    வெங்காயம் - 1
    எண்ணெய் - 2 ஸ்பூன்
    தண்ணீர் - 4 டம்ளர்
    கொத்தமல்லி தழை - சிறிதளவு

    ரசப் பொடி செய்ய :

    மிளகு - 2 ஸ்பூன்
    சீரகம் - 2 ஸ்பூன்
    பூண்டு - 2

    தாளிக்க :

    கடுகு,
    உளுத்தம் பருப்பு,
    வரமிளகாய் - 1,
    கறிவேப்பிலை



    செய்முறை :

    சிக்கன் எலும்பை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    புளியை 1 டம்ளர் தண்ணீரில் கரைத்து கொள்ளவும்.

    ரசப்பொடி செய்ய கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் கரகரப்பாக பொடித்து கொள்ளவும்.

    தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குக்கரில் சிக்கன் எலும்பை போட்டு 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி, மஞ்சள் தூள், தக்காளி, வெங்காயம், மிளகாய்த்தூள், உப்பு போட்டு வேக வைக்கவும்.

    இருப்புச்சட்டியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய்1, கறிவேப்பிலை போட்டு தாளித்து, குக்கரில் உள்ள சிக்கன் எலும்பு சாற்றை ஊற்றி, அதனுடம் கரைத்த புளிக்கரைசலை ஊற்றி, நுணுக்கி வைத்திருக்கும் ரசப்பொடியை அதில் போட்டு, ரசம் நுரைத்துக்கொண்டு வரும் பொழுது கொத்தமல்லி தழை தூவி இறக்கிவிட வேண்டும்.

    இந்த ரசத்தை சாதத்தில் ஊற்றி பிசைந்தும் சாப்பிடலாம், அல்லது அப்படியேயும் குடிக்கலாம்.

    சூப்பராக சிக்கன் எலும்பு ரசம் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கிரீன் டீ குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அந்த வகையில் யாரெல்லாம் கிரீன் டீ குடிக்கலாம், குடிக்கக்கூடாது என்று பார்க்கலாம்.
    மல்ட்டிபிள் ஸ்கெலரோசிஸ், டைப் 1 சர்க்கரை நோய், சொரியாசிஸ், ரூமட்டாய்டு ஆர்த்ரைடிஸ், பெப்டிக் அல்சர் பாதிப்பு உள்ளவர்கள் கிரீன் டீ சாப்பிடலாம்.

    அலர்ஜி, ஆஸ்துமா, சைனஸ், வைரஸ் காய்ச்சல், அல்சர், வைரஸ் தொற்று நோய்கள் உள்ளவர்கள் கிரீன் டீ சாப்பிடக் கூடாது.

    கிரீன் டீயை எப்படிக் குடிக்க வேண்டும்?

    பவுடராக வாங்காமல் பச்சை இலையாக இருக்கும் கிரீன் டீயாக வாங்கவும்.

    கிரீன் டீ இலைகளை நீருடன் சேர்த்து, கொதிக்கவைத்து வடிகட்டி, வெதுவெதுப்பான சூட்டில் அருந்துவது உடலுக்கு நல்லது. உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள், சர்க்கரை நோயாளிகள் சர்க்கரை, வெல்லம் அல்லது தேன் போன்றவற்றைச் சேர்க்காமல் குடிக்க வேண்டும்.

    தினமும் ஒன்று அல்லது இரண்டு கப் அளவுக்கு மேல் கிரீன் டீ குடிக்கக் கூடாது.

    அதிக உடல்எடை உள்ளவர்கள் கொழுப்பை குறைக்க கிரீன் டீயை குடிக்கலாம்.

    கிரீன் டீ சாப்பிடுவதால் உடலில் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுவது போல தோன்றினால், உடனே கிரீன் டீ சாப்பிடுவதை நிறுத்திவிடுவது நல்லது.
    பரு வருவதற்கான அடிப்படைக் காரணத்தை அறிந்து அதற்கான முறையான வழிமுறைகளை மருத்துவர் ஆலோசனையுடன் துவங்கினால் நிரந்தரமாக இப்பிரச்சனையில் இருந்து தப்பிக்கலாம்.
    மன அழுத்தம் இருப்பவர்களுக்கு ஹார்மோன் இன்பேலன்ஸ் காரணமாக முகப்பரு வருவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. மலச்சிக்கல் மற்றும் வயிறு தொடர்பான பிரச்சனை இருப்பவர்களுக்கும், பொடுகு பிரச்சனை உள்ளவர்களுக்கும் முகப்பரு வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது. பொடுகு மூலம் வரும் பருக்கள் நெற்றி, கழுத்து, முதுகுப் பகுதிகளில் பொறிப்பொறியாக வரும்.

    எனவே முதலில் எந்தக் காரணத்தினால் தனக்கு பரு வருகிறது என்பதைக் கண்டுபிடித்தல் மிகவும் முக்கியம். பரு வருவதற்கான அடிப்படைக் காரணத்தை அறிந்து அதற்கான முறையான வழிமுறைகளை மருத்துவர் ஆலோசனை அல்லது அழகுக்கலை நிபுணர்கள் ஆலோசனையோடு துவக்கத்திலே செய்யத் துவங்கினால் நிரந்தரமாக இப்பிரச்சனையில் இருந்து தப்பிக்கலாம்.

    * விரல்களைக் கொண்டு பரு வந்த இடத்தை அடிக்கடி தொடுதல் கூடாது.

    * பருவினை அழுத்தி எடுக்கும் முறை தவறானது.

    * பருவை விரலால் அழுத்தத் துவங்கினால் அந்த இடம் தொற்றுக்குள்ளாகி சருமத்தில் பள்ளம் தோன்றத் துவங்கும். பிறகு பள்ளம் விழுந்த தோற்றம் முகத்தில் நிர‌ந்தரமாகிவிடும்.

    * பரு உள்ளவர்கள் எலுமிச்சை, தக்காளி, ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் அமிலம் அதிகம் உள்ள பழங்களை முகத்தில் ஃபேஸ் பேக்காகப் போடுதல் கூடாது.

    முகப்பரு வந்துவிட்டால் சுயமாக எதையாவது செய்து, சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தாமல், சரும மருத்துவர்கள் அல்லது அழகு நிலையங்களில் இதற்கென முறையான பயிற்சி பெற்ற அழகுக் கலை வல்லுநர்களை அணுகி, பருவில் இருக்கும் மார்க்கை முறைப்படி மெஷின் வைத்தும் எடுக்கலாம்.
    குழந்தைகளுக்கு சீஸ், இறால் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று இந்த இரண்டையும் வைத்து சூப்பரான ஸ்நாக்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    கோதுமை மாவு - 2 கப்,
    எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,
    வெதுவெதுப்பான தண்ணீர்,
    உப்பு - தேவைக்கு.
    இறால் -  200 கிராம்,
    சீஸ் - 100 கிராம்,
    வெங்காயம் - 2,
    பெங்களூர் தக்காளி - 1,
    குடைமிளகாய் - 1/4 கப்,
    கரம்மசாலாத்தூள், மிளகாய்த்தூள், சிக்கன் மசாலாத்தூள் - தலா 1/2 டீஸ்பூன்,
    கொத்தமல்லித்தழை - 1 கைப்பிடி,
    உப்பு, எண்ணெய் - தேவைக்கு.



    செய்முறை

    கொத்தமல்லி, குடை மிளகாய், தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    இறாலை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    கோதுமை மாவில், உப்பு, எண்ணெய், வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து கலந்து நன்றாக பிசைந்து 2 மணி நேரம் ஊறவிட்டு, சப்பாத்திகளாக சுட்டு ஹாட்பாக்சில் போட்டு வைக்கவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத் போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    அடுத்து தக்காளி, குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.

    இறால், உப்பு, மசாலாத்தூள்கள் போட்டு சிறிது தண்ணீர் தெளித்து நன்கு வதக்கவும். தண்ணீர் எல்லாம் வற்றி திக்கான பதம் வந்தவுடன் அதில் கெர்த்தமல்லித்தழை தூவி கிளறி இறக்கவும்.

    சப்பாத்தியில் வெண்ணெய் தடவி இறால் கலவையை நடுவில் வைத்து அதன் மீது சீஸ் தூவி ரோல் செய்து மைக்ரோ ஓவனில் 2 நிமிடம் வைத்து இரண்டாக வெட்டி பரிமாறவும்.

    சூப்பரான இறால் சீஸ் ரோல் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தாம்பத்தியம் என்பது இரண்டு உடல்கள் இயங்குவது மட்டுமல்ல. பரஸ்பரம் புரிதல் மற்றும் தன்னவளை/ தன்னவரை மகிழ்விக்க வேண்டும் என்கிற உந்துதல் இருவருக்குமே வேண்டும்.
    எந்த ஓர் உறவும் வாழ்க்கை முழுவதும் இனித்திட அதற்கான அடிப்படை நியதிகளைப் பின்பற்ற வேண்டும். நமது வாழ்க்கைத்துணைக்கு அளிக்கக் கூடிய மிகப்பெரிய பரிசு தாம்பத்யரீதியாக ஒழுக்கமாக இருப்பதுதான்.

    திருமணத்துக்கு முன்பாக செக்ஸ் வைத்துக் கொள்வது பல வழிகளிலும் ஆரோக்கியமானதல்ல. திருமணம் வரை காமத்துக்காகக் காத்திருப்பது கணவன் - மனைவி உறவை மேலும் தித்திக்கவே செய்யும். திருமணத்துக்கு முன்பாக லிவ்விங் டுகெதர் முறையில் செக்ஸ் வைத்துக் கொள்வது கண்டிப்பாக திருமண உறவை பாதிக்கும். வெளியில் யாரிடமும் சொல்லாவிட்டாலும் அது ஒரு குற்ற உணர்வை ஒருவருக்குள் உண்டாக்கும். எனவே, ஆண் - பெண் இருவரும் இது போன்ற உறவைத் தவிர்ப்பது நல்லது.

    இன்றைய கணவன், மனைவி திருமணமான புதிதில் தனது நட்பு வட்டங்கள் குறித்துப் பகிர்ந்து கொள்கின்றனர். மேலும் திருமணத்துக்குப் பின் அந்த நட்பு வட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பது, எதிர்பாலினத்தவருடன் நட்பு காரணத்துக்காகக் கூட நெருக்கமாக இருப்பது வெளிப்படையாக காட்டிக் கொள்ளாவிட்டாலும் மன வேறுபாட்டை உண்டாக்கும்.

    இதுவே பின்னாளில் கணவன்-மனைவி உறவில் சந்தேகத்துக்கான விதையாக மாறி விஸ்வரூபமெடுக்கும். இதனால் கணவன் மனைவி உறவில் அவரவர் பிரைவஸியை அனுமதிப்பதோடு சந்தேகத்துக்கு இடமின்றியும் நடந்து கொள்ள வேண்டும்.



    ஆண் - பெண் இருவருமே திருமணத்துக்கு முன்பாக தங்களுக்கு செக்ஸுவலாக அல்லது வேறு கெட்ட பழக்கங்கள் இருப்பின் கைவிட வேண்டும். குறிப்பாக பெண்கள் புகையிலைப் பழக்கம் இருப்பின் கைவிடுவது அவசியம். ஆண்கள் மது, போதைப் பழக்கங்கள் இருப்பின் திருமணத்துக்குப் பின் இது போன்ற பழக்கங்களைக் கைவிடுவது மிக மிக முக்கியம்.

    ஏனென்றால் தாம்பத்திய உறவு, குழந்தைப் பிறப்பு இரண்டிலும் பாதிப்பை ஏற்படுத்தும். பெண்கள் ஸ்டீராய்டு மாத்திரைகள் எடுத்துக் கொள்ளும் பழக்கம் இருந்தால் கைவிட வேண்டும். சுய மருத்துவம் செய்து கொள்வதும் நல்லதல்ல. இதுபோன்ற தவறான பழக்கங்களைத் திருமணத்துக்குப் பின்பும் கடைபிடித்தால் தாம்பத்ய உறவில் நீடித்த  இன்பம் மற்றும் உச்ச நிலையை அடைவது தடைபடும்.
     
    தாம்பத்தியம் என்பது இரண்டு உடல்கள் இயங்குவது மட்டுமல்ல. அதற்கு மனமும் அன்பால் இணைந்து இன்புற வேண்டும். பரஸ்பரம் புரிதல் மற்றும் தன்னவளை/ தன்னவரை மகிழ்விக்க வேண்டும் என்கிற உந்துதல் இருவருக்குமே வேண்டும். இதற்கு உடல் மனம் இரண்டும்
    ஃபிட்டாக இருப்பது அவசியம். உடலளவில் ஆரோக்கியமாக இருப்பது நம்பிக்கை தரும்.

    தாம்பத்ய நேரத்தில் உண்டாகும் பதற்றத்தைக் குறைக்கும். தாம்பத்ய உறவின்போது நீண்ட நேரம் விளையாட உடலால் உறவாடவும் மூச்சுப்பயிற்சி உதவும். இதனால் திருமணத்துக்கு ஆறு மாதத்துக்கு முன்பிருந்தே எளிய யோகா பயிற்சிகள் செய்வது அவசியம்.
    தினமும் சால்ட் சாப்பிடுவது உடல்நலத்திற்கு மிகவும் நல்லது. இன்று சிறுதானியங்கள், முளைக்கட்டிய பயறு சேர்த்து சத்தான சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வரகு - 2 தேக்கரண்டி
    பனி வரகு - 2 தேக்கரண்டி
    தினை - 2 தேக்கரண்டி
    முளைகட்டிய பாசிப்பயறு - 3 தேக்கரண்டி
    முளைகட்டிய ராகி - 2 தேக்கரண்டி
    முளைகட்டிய வேர்க்கடலை - 1 தேக்கரண்டி
    துருவிய கேரட் - 2 தேக்கரண்டி
    உப்பு - 1 சிட்டிகை,
    எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி
    மிளகு சீரகப் பொடி - 1/4 தேக்கரண்டி



    செய்முறை :

    பாசிப்பயறு, ராகி மற்றும் வேர்க்கடலை ஆகியவற்றை முதல் நாள் காலையில் ஊறவைத்து, இரவு, வலை போல் இருக்கும் துணியில் கட்டி வைத்தால் அவை மறுநாள் காலையில் முளைத்து விடும். இவ்வாறு ராகியையும், பயிரையும் முளைகட்டிக்கொள்ள வேண்டும்.

    வரகு, பனி வரகு மற்றும் தினையை சற்று ஊறவைத்து தண்ணீருடன் சேர்த்து 5 நிமிடம் வேகவைத்தால் நன்கு வெந்துவிடும். அவற்றையும் உதிரியாக வடித்துக்கொண்டு தயாராக எடுத்துக் கொள்ளவேண்டும்.

    ஒரு பாத்திரத்தில் வேக வைத்த வரகு, பனி வரகு, தினை அரிசியை போட்டு அதனுடன் முளைக்கட்டிய பாசிப்பருப்பு, ராகி, வேர்க்கடலை, துருவிய கேரட், உப்பு, எலுமிச்சை சாறு, மிளகு தூள் சேர்த்து நன்றாக கிளறி பரிமாறவும்.

    சுவையான சிறுதானிய முளைகட்டிய பயறு சாலட்தயார்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மருத்துவக் காப்பீடு அவசியமானது, அதில் நமக்குத் தேவையான அம்சங்கள் அடங்கிய, நியாயமான பிரீமியம் செலுத்தும் திட்டத்தைத் தேர்வு செய்வதே புத்திசாலித்தனமானது.
    திடீர் திடீர் என்று தாக்கும் உடல்நல பாதிப்புகள், எகிறும் மருத்துவச் செலவுகள் என்று இன்றைய சூழலில் மருத்துவக் காப்பீடு அத்தியாவசியமாகிவிட்டது.

    உடல்நலக் குறைவு வாட்டும்போது, அதற்கு ஆகும் செலவுகளை எப்படிச் சமாளிப்பது என்ற கவலையும் சம்பந்தப்பட்டவர்களை அலைக்கழிக்கும். இந்நிலையில், மருத்துவக் காப்பீடு இருந்தால் ஓரளவு தப்பித்துக்கொள்ளலாம்.

    தனிநபர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், குடும்ப மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் என்று இதில் இரண்டு வகைகள் உண்டு.

    தனிநபர் மருத்துவக் காப்பீட்டில், பாலிசிதாரர் ஒருவர் மட்டுமே மொத்த காப்பீட்டுத் தொகையையும் உபயோகிக்க முடியும். குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாகக் காப்பீடு எடுப்பதற்குப் பதிலாக, ‘பேமிலி புளோட்டர் பாலிசி’ எனப்படும் ஒரே ஒரு குடும்பக் காப்பீடு எடுக்கலாம்.

    இதன் மூலம் அவரவர் தேவைக்குத் தகுந்தாற்போல் மொத்த காப்பீட்டுத் தொகையைப் பகிர்ந்து பயன்பெறலாம். காப்பீட்டு நிறுவனங்கள் இந்த இருவகைத் திட்டங்களையும் தருவதால் நமக்குத் தேவையான சிறந்த திட்டத்தைத் தேர்வுசெய்ய வேண்டும். பெரிய குடும்பமாக இருந்தால், குடும்பக் காப்பீடு திட்டம் நல்லது. எனினும் ஒருவர் கடுமையான நோய் பாதிப்புக்கு ஆளானால், தனிநபர் காப்பீடே சிறந்தது.

    மொத்த காப்பீட்டுத்தொகையைத் தேர்வு செய்யும்போது, உங்கள் நகரத்தில் மருத்துவத்துக்கு எவ்வளவு செலவாகும் என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும். இரண்டாம்கட்ட நகரங்களைக் காட்டிலும் பெருநகரங்களில் அதிக மருத்துவச் செலவுகள் ஏற்படும். நீங்கள் மருத்துவமனையில் சேரும்பட்சத்தில், குறைந்த காப்பீட்டுத்தொகை திட்டங்கள் எந்தப் பலனையும் தராது. ஆனால், அதிகக் காப்பீட்டுத் தொகைக்கு, பிரீமியம் தொகை அதிகம் என்பதால், நன்கு ஆராய்ந்து காப்பீட்டுத் தொகையை முடிவு செய்யவேண்டும்.



    மருத்துவக் காப்பீட்டில் ‘கோ-பே’ மற்றும் காத்திருப்புக் காலத்தையும் கவனிக்க வேண்டும். ‘கோ-பே’ என்பது பாலிசிதாரர் தனது மருத்துவச் செலவில் ஒரு பங்கை ஏற்றுக்கொள்வது. இம்முறை, காப்பீட்டுத் திட்டங்களைப் பொறுத்து கட்டாயமா, கட்டாயமில்லையா எனத் தெரியும். மூத்த குடிமக்களின் காப்பீட்டுத் திட்டங்களுக்கு இது கட்டாயமாகும். இம்முறையில் பிரீமியம் தொகை குறையும் என்பதால், ‘கோ-பே’ திட்டத்தைத் தேர்ந்தெடுத்து மருத்துவச் செலவில் ஒரு பங்கை ஏற்கலாம்.

    1 முதல் 6 ஆண்டுகள் வரை மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களில் காத்திருப்பு கால முறையும் உள்ளது. குறிப்பிட்ட வகை அல்லது ஏற்கனவே உள்ள நோய்களுக்கு 1 முதல் 6 ஆண்டுகள் வரை காத்திருப்புக் காலம் தரப்படுகிறது. ஆயினும், குறைந்த காத்திருப்புக் காலம் கொண்ட திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது நல்லது.

    ஆயுள், மருத்துவம், வாகனம் என எந்தக் காப்பீடு எடுத்தாலும், உள்ளடக்கம் மற்றும் நீங்கல்களைக் கவனித்தல் அவசியம். இவை காப்பீட்டு நிறுவனங்களைப் பொறுத்து வேறுபடும். சிலநேரங்களில் உங்களிடம் மருத்துவக் காப்பீடு இருந்தும் சில பிரிவுகள் அதில் உள்ளடங்காவிடில் சிரமப்பட நேரிடும்.

    காப்பீட்டு நிறுவனங்களும் மருத்துவமனைகளும் ஒரு வலையமைப்பில் கூட்டுச் சேர்ந்து காப்பீட்டாளர்களுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் பணமில்லா மருத்துவ வசதி போன்ற சிறப்புச் சேவைகளை வழங்குகின்றன. எனவே, காப்பீட்டுத் திட்டத்தைத் தேர்வு செய்யும்முன் குறிப்பிட்ட நிறுவனத்தின் வலையமைப்பை உறுதி செய்யவேண்டும். அதன் மூலம் அவசரகாலங்களில் எளிதாக மருத்துவ வசதி பெறலாம்.

    மருத்துவக் காப்பீடு அவசியமானது, அதில் நமக்குத் தேவையான அம்சங்கள் அடங்கிய, நியாயமான பிரீமியம் செலுத்தும் திட்டத்தைத் தேர்வு செய்வதே புத்திசாலித்தனமானது.
    அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிக்கூடங்களில், தனியார் பள்ளிக்கூடங்களுக்கு இணையாக கல்வித்தரம் இருந்தால்தான் மாணவர்கள் அதிகளவில் ‘நீட்’ தேர்வில் வெற்றி பெறமுடியும்.
    ‘இன்றைய குழந்தைகளே, நாளைய சமுதாயத்தின் நம்பிக்கை நட்சத்திரங்கள்’ என்றார் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா. அத்தகைய நம்பிக்கை நட்சத்திரங்களை உருவாக்கும் மிகப்பெரிய பொறுப்பு பள்ளிக்கூடங்களுக்குத்தான் இருக்கிறது. பள்ளிக் கூடங்களில் வழங்கும் கல்வித்தரத்தை பொறுத்துத்தான் மாணவர்கள் ஒளிவீசும் நட்சத்திரங்களாக மாறுவார்களா? அல்லது எரிநட்சத்திரங்களாக வீழ்ந்துவிடுவார்களா? என்பது அமையும்.

    அந்தவகையில், பிளஸ்-2 தேர்வுதான் அவர்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டும் வழிகாட்டியாக அமையும். நேற்று முன்தினம் மருத்துவம் மற்றும் பொறியியல் மாணவர்கள் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. மருத்துவப்படிப்புக்கு ‘நீட்’ தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தான் மாணவர் சேர்க்கை நடைபெறும். பொறியியல் படிப்புக்கு பிளஸ்-2 தேர்வில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் பொறியியல் கல்லூரிகளில் இடம் கிடைக்கும்.

    மருத்துவக்கல்லூரிகளை பொறுத்தமட்டில், தமிழ்நாட்டில் 22 அரசு மருத்துவக்கல்லூரிகள், 11 சுயநிதி மருத்துவக்கல்லூரிகளில் மொத்தம் 3,328 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன. இதுதவிர, 516 நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களும் உள்ளன. 720 மதிப்பெண்கள் கொண்ட ‘நீட்’ தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.

    இதில் மிகவும் கவலையளிக்கத்தக்க ஒருநிலை என்னவென்றால், முதல் 10 இடங்களை பெற்ற மாணவர்களில் யாரும் மாநில கல்வித்திட்டத்தின்கீழ் படித்தவர்கள் அல்ல. அவர்கள் அனைவரும் மத்திய பாடத்திட்டத்தில் படித்தவர்கள். இதில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிக்கூடங்களில் படித்தவர்களின் நிலைமை மனநிறைவு அளிக்கத்தக்க வகையில் இல்லை.

    1 முதல் 1000 வரையிலான தரவரிசை பட்டியலில் அரசு மற்றும் அரசு உதவிபெற்ற பள்ளிக்கூடங்களில் படித்தவர்கள் 4 பேர்தான் இடம் பெற்றுள்ளனர். 1001 முதல் 3000 வரையிலான தரவரிசை பட்டியலில் 8 பேரும், 3001 முதல் 5000 வரையிலான தரவரிசை பட்டியலில் 20 பேரும் மட்டுமே உள்ளனர். ஆக, ஏறத்தாழ 20 மாணவர்களுக்குத்தான் அரசு கோட்டாவில் மருத்துவப்படிப்புக்கு இடம்கிடைக்கும் என்ற நிலைமை உள்ளது.

    இந்த ஆண்டு கட்-ஆப் மார்க்கும் உயரும். பொது பட்டியலில் கடந்த ஆண்டு கட்-ஆப் மார்க் 384 என்ற நிலையிலிருந்து, இப்போது 415 ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோல ஒவ்வொரு பட்டியலிலும் கடந்த ஆண்டு கட்-ஆப் மார்க்கைவிட, 50 மதிப்பெண்கள் உயரும் நிலை உள்ளது. மொத்தத்தில், 200 மதிப்பெண்களுக்கு குறைவாக பெற்ற யாருக்கும் மருத்துவப்படிப்பில் இடம்கிடைக்காத சூழ்நிலை உருவாகியுள்ளது.

    இந்த பட்டியலை பார்க்கும்போது, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிக்கூடங்களில் நடத்திய ‘நீட்’ தேர்வு பயிற்சி மையங்களால் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. தேர்வுபெறும் மாணவர்களெல்லாம் பெரும்பாலும் தனியார் பள்ளிக்கூடங்களில் படித்தவர்களாகவே இருக்கிறார்கள். தனியார் பள்ளிக்கூடங்களை மாணவர்கள் நாடுவதற்கு இதுதான் காரணம்.

    இந்த நிலையில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிக்கூடங்களில், தனியார் பள்ளிக்கூடங்களுக்கு இணையாக கல்வித்தரம் இருந்தால்தான் மாணவர்கள் அதிகளவில் ‘நீட்’ தேர்வில் வெற்றி பெறமுடியும். எனவே, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிக்கூடங்களில் ‘நீட்’ தேர்வு பயிற்சி மையங்களை இந்த கல்வி ஆண்டின் தொடக்கத்திலேயே ஆரம்பித்து, தனியார் பயிற்சி மையங்களுக்கு இணையான பயிற்சியை வழங்கவேண்டும். 
    இந்த ஆசனம் தோள்பட்டை, கழுத்து, மார்பு, வயிறு, இடுப்பு, முதுகெலும்புக்கு பலம் கிடைக்கும். இன்று இந்த ஆசனம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    செய்முறை : பத்தாம் நிலையிலிருந்து நேராக நிமிர்ந்து கைகளை மேலே உயர்த்தவும். அதே சமயம் இடுப்பிலிருந்து தலைவரைக்கும் உள்ள உடல் பகுதியை பின்பக்கமாக வளைத்து மூச்சை உள்ளே இழுக்கவும்.

    கவனம் செலுத்த வேண்டிய இடம் : முதுகை வளைப்பதின் மீதும், விசுத்தி சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.

    பயிற்சிக் குறிப்பு : மேலே உயர்த்திய கைகளை அதிகமாக அகற்றாமல் உங்கள் புஜ அளவில் வைக்கவும். ஆரம்பப் பயிற்சியில் முதுகை பின்னால் அதிகமாக வளைக்க முடியாதவர்கள் முடிந்த அளவு முதுகை வளைத்து செய்யவும். இப்பயிற்சியில் பின்நோக்கி முதுகை வளைக்கும் போது முழங்கால்களை மடக்கக் கூடாது.

    தடைகுறிப்பு : பலகீனமான இருதயம் உடையவர்கள் தலைசுற்றல் போன்ற தொந்தரவு உள்ளவர்கள் அதிகமாக பின் வளைந்து செய்யக்கூடாது.

    பயன்கள் : தோள்பட்டை, கழுத்து, மார்பு, வயிறு, இடுப்பு, முதுகெலும்பு பலம் பெறும். 
    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் வலிப்பு நோய் வரவாய்ப்பு உள்ளது. ஒரு சில வலிப்பு நோய்கள் பரம்பரையாகவும் வருகின்றன.
    வலிப்பு வந்தவுடன், அவருக்கு சாவியை கொடுப்பதால் எவ்விதமான பயனும் இல்லை. மூளையில் உள்ள நரம்பு அணுக்களில் ஏற்படும் மின் அலை மாற்றங்களால், மூளையின் அனைத்து பாகங்களும் ஒரு முகமாக ஒரே நேரத்தில் இயங்குவதால் வலிப்பு நோய் வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் வலிப்பு நோய் வரவாய்ப்பு உள்ளது. ஒரு சில வலிப்பு நோய்கள் பரம்பரையாகவும் வருகின்றன. வலிப்பு நோய் வந்தால் உடனடியாக சாவியை கையில் கொடுப்பது போல சினிமாவில் காட்டுகின்றனர். அதனைப் பார்த்து பொதுமக்களும் வலிப்பு நோய் வந்தவுடன், அவர்களின் கையில் சாவியை கொடுக்கின்றனர்.

    வலிப்பு நோய்க்கு சாவி கொடுப்பதன் மூலம் எவ்வித பயனும் இல்லை. இதுபோன்ற மூடநம்பிக்கைகளை முழுமையாக தவிர்க்க வேண்டும். வலிப்பு வந்தவுடன், அவரை உடனடியாக இடது பக்கம் திரும்பி படுக்க வைக்க வேண்டும். அவர் பற்களை கடித்துக்கொள்ளாமல் பாதுகாக்க ரப்பர் பந்துகளை வாயில் வைக்க வேண்டும். கட்டையை வாயில் வைத்தால், பற்கள் உடைந்துவிடும். அதன்பின், அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். டாக்டர்கள் சொல்லும் மருந்து, மாத்திரைகளை வலிப்பு நோயாளிகள் பல ஆண்டுகள் சாப்பிட வேண்டும்.

    இரண்டு மாதமாக வலிப்பு வரவில்லை என்பதால், மருந்து, மாத்திரைகளை பாதியில் நிறுத்தி விடக்கூடாது. டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்து எப்போது சொல்கிறார்களோ, அப்போதுதான் மருந்து, மாத்திரைகள் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும். மருந்து, மாத்திரைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் முதலில் அடிக்கடி வரும் வலிப்பு நோய் குறையும். அதன்பின், வலிப்பு நோய் முழுவதுமாக குணமடையும். அரசு மருத்துவமனைகளில் ஆரம்பத்தில் வலிப்பு நோயாளிகளுக்கு வாரத்திற்கு ஒரு முறை மாத்திரை வழங்கப்பட்டது.

    நோயாளிகளின் நலனை கருத்தில் கொண்டு தற்போது மாதத்திற்கு ஒரு முறை மாத்திரை வழங்கப்படுகிறது. நோயின் தன்மையை பொருத்து ரூ.300 முதல் ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள ஒரு மாதத்திற்கான மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. வலிப்பு நோயாளிகள் வாகனம் ஓட்டுவது, நீச்சல் அடிப்பது மற்றும் உயரமான இடங்களில் நிற்பதை தவிர்க்க வேண்டும். முக்கியமாக வலிப்பு நோயாளிகள் கவலைப்படக்கூடாது. பதற்றம் அடையக்கூடாது. இவற்றை கடைபிடித்தால் சுலபமாக வலிப்பு நோயில் இருந்து விடுபடலாம். 
    ×