என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    குழந்தைகளின் காதுகளை பாதுகாப்பதில் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும். குழந்தைகளின் காது பரமாரிப்பில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை குறித்து பார்க்கலாம்.
    குழந்தையின் காதுகள் மிகவும் மிருதுவானவை. எனவே குழந்தைகளின் காதுகளை பாதுகாப்பதில் பெற்றோர்கள் தனிகவனம் செலுத்த வேண்டும். அந்தவகையில் குழந்தைகளின் காது பரமாரிப்பில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவைக் குறித்து இப்போது பார்க்கலாம்.

    காதுகளைச் சுத்தப்படுத்துகிறோம் என்ற பெயரில் குழந்தையின் காதுகளில் பட்ஸ், ஊக்கு போன்றவற்றை நுழைக்காதீர்கள். காதுகளைப் பராமரிக்க இயல்பாகவே சிபம் என்ற மெழுகு போன்ற திரவம் காதுகளில் சுரக்கும். அதனை அழுக்கு என்று தவறாக புரிந்துகொண்டு சுத்தப்படுத்தி விடாதீர்கள். காதுகளின் வெளிப்புறத்தைமட்டும் மாதம் ஒருமுறை தண்ணீர் ஊற்றி சுத்தப்படுத்துவது நல்லது.

    குழந்தையின் காதுகளில் ஏதேனும் சிறிய பூச்சி சென்றுவிட்டால், சுத்தமான எண்ணெயை அவர்களின் காதுகளில் ஊற்றி, முதலில் அந்தப் பூச்சியைச் செயலிழக்கச் செய்யுங்கள். அதன் பின்னர் காது-மூக்கு-தொண்டை சார்ந்த மருத்துவரை அணுகி, பூச்சியினை எடுத்துவிடுவது நல்லது. எக்காரணம் கொண்டும் சூடான எண்ணெய், தண்ணீரை காதில் ஊற்றாதீர்கள்.

    குழந்தைகள் காதில் பட்டாணி, காய்கறிகள் போன்று எளிதில் நீரில் ஊறக்கூடிய பொருளை நுழைத்துவிட்டால், எக்காரணம் கொண்டும் காதுகளில் தண்ணீர் ஊற்றாதீர்கள். அவை தண்ணீரில் ஊறி வெளியே எடுக்க முடியாத நிலைக்கு போய்விடலாம். எனவே உடனே மருத்துவரை அணுகுவதே நல்லது. அதேபோல காதில் சீழ் வடிவதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாதீர்கள்.



    குழந்தைகள் பாடல் கேட்க அல்லது போனில் பேச என இயர் போனைப் பயன்படுத்த அனுமதிக்காதீர்கள். தவிர்க்க முடியாத சூழலில்கூட இயர் போனுக்கு பதில் ஹெட் போன்களைப் பயன்படுத்தலாம்.

    குழந்தைகளுக்கு காது குத்தும்போது ஆசாரிகளிடம் இருக்கும் காது குத்தும் ஊசியை ஒரு முறை ஆண்ட்டி செப்டிக் மருந்தில் முக்கி எடுக்க வேண்டியது அவசியம். இதனால் குழந்தைகளுக்கு ஏற்படும் அலர்ஜியை தடுக்கலாம்.

    பச்சிளம் குழந்தைகளின் காது தசைகள் மிகவும் மென்மையானவை எனவே அவர்கள் காதினைச் சுத்தம் செய்யும்போது மிதமான சூட்டில் இருக்கும் நீரில் சுத்தமான காட்டன் துணியை நனைத்து மெதுவாக வெளிப்புறம் மட்டும் துடைத்து எடுக்கலாம்.
    சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தது சத்துமாவு பாசிப்பருப்பு அடை. இன்று இந்த அடையை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    எல்லாத் தானியங்களும் சேர்த்து அரைத்த சத்து மாவு - அரை கப்,
    பாசிப்பருப்பு - அரை கப்,
    சின்ன வெங்காயம் - 100 கிராம்,
    பூண்டு - 2,
    கொத்துமல்லித் தழை - சிறிதளவு,
    மிளகு, சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்,
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.



    செய்முறை :

    சின்ன வெங்காயம், கொத்தமல்லி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பாசிப் பருப்பை அரை மணி நேரம் ஊறவைத்து, கரகரப்பாக அரைத்து கொள்ளவும்.

    அரைத்த பாசிப்பருப்பு மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் சத்துமாவையும் சேர்த்துக் கரைத்துக்கொள்ளவும்.

    அதில் வெங்காயம், பூண்டு, கொத்துமல்லி, மிளகு, சீரகத்தூள் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக கலந்து அரை மணி நேரம் அப்படியே வைக்கவும்.  

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காயவைத்து, மாவை சிறிய அடைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய்விட்டு இரண்டு பக்கமும் வேகவைத்து எடுக்கவும்.

    அடைக்குத் தொட்டுக்கொள்ள, காரச்சட்னி அருமையாக இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், கொடுமைகளை தடுக்க கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், கொடுமைகளை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக மாவட்ட குழந்தைகள் நலன் பாதுகாப்பு அதிகாரி டி.கவிதா கூறினார்.

    கோவை மாவட்ட குழந்தைகள் நலன் பாதுகாப்பு அதிகாரி டி.கவிதா, தினத்தந்தி நிருபருக்கு பேட்டி அளித்தார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு:-

    கேள்வி:-ஆதரவற்ற நிலையில் கைவிடப்படும் பச்சிளம் குழந்தைகளை காப்பாற்ற தொட்டில் குழந்தைகள் திட்டம் எங்கெல்லாம் செயல்படுத்தப்படுகிறது?

    பதில்:-பச்சிளம் குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் கோவை அரசு ஆஸ்பத்திரி, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, மற்றும் சூலூர் அரசு ஆஸ்பத்திரிகளில் தொட்டில்கள் வைக்கப்பட்டு உள்ளன. இந்த தொட்டில்களில் போடப்படும் ஆண், பெண் பச்சிளம் குழந்தைகள் பாதுகாக்கப் படுகின்றன.

    கேள்வி:- மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்தின் பணிகள் என்ன?

    பதில்:- பாதுகாப்பும் பராமரிப்பும் இன்றி ஆதரவற்ற நிலையில் காணப்படும் குழந்தைகளை பராமரிக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்வது, இதற்கான குழந்தைகள் காப்பகங்களை முறைப்படுத்துவது, குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர், பாலியல் வன்கொடு மைகளால் பாதிக்கப்படும் குழந்தைகளை மீட்டெடுத்து அவர்களுக்கு மறுவாழ்வு அளித்தல் உள்ளிட்டவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்தின் முக்கியமான பணிகள் ஆகும்.

    கேள்வி:-குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்துவதற் காக எடுக்கப்படும் நடவடிக்கை என்ன?

    பதில்:-பெண்களுக்கான திருமண வயது 18. ஆண்களுக் கான திருமண வயது 21. இந்த வயதுக்கு கீழ் நடத்தப்படும் திருமணங்கள் குழந்தை திருமணங்கள்தான். பெற்றோர் வேலைக்கு செல்வதற்காக, வீட்டில் பெண் குழந்தைகளை பாதுகாக்க முடியவில்லை என்பதற்காக சில நேரங்களில் குழந்தை திருமணங்களை நடத்த முயற்சிக்கிறார்கள்.



    இதுதவிரமேலும் பல காரணங்கள் உள்ளன. குழந்தை திருமணங்கள் மாவட்ட சமூக நல அதிகாரியின் தலைமையில் தடுத்து நிறுத்தப்படுகிறது. மீட்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆலோசனைகள் வழங்கி மறுவாழ்வு பணிகள் மேற்கொள்ளப் படுகிறது. காவல்துறையினர் மூலமும் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இந்ததிருமணத்தை நடத்த துணை நின்றவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. குழந்தைகள் திருமணம்நடைபெற முயற்சிகள் நடைபெற்றால் இதுகுறித்து குழந்தைகள் பாதுகாப்பு மையம் மற்றும் சமூகநலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கலாம். கடந்த மாதம் கூட, ஒரு இடத்தில் குழந்தை திருமணத்துக்காக திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றன.

    அந்த திருமணம் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட்டதுடன் பெற்றோர் எச்சரிக்கப்பட்டு சிறுமி மீட்கப்பட்டு காப்பகத்துக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பெண் குழந்தையை திருமணம் செய்து கொண்ட 18 வயதுக்கு மேற்பட்ட வாலிபர் குற்றவாளி ஆவார். குழந்தை திருமணத்தை நடக்கச்செய்தவர், நடத்த தூண்டியவர், நெறிப்படுத்தியவர், நடத்தியவர் இவர்கள் அனைவரும் குற்றவாளிகள் ஆவார்கள். இது போன்ற வர்களுக்கு 2 ஆண்டு சிறை, ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப் படும்.

    பதில்:-குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்களுக்கு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டம்(போக்சோ) 2012-ன்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    வன்புணர்வு பாலியல் தாக்குதலுக்கு குறைந்தபட்சம் 7 ஆண்டு சிறை தண்டனை அல்லது ஆயுள்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட லாம். கடுமையான வன்புணர்வு பாலியல் தாக்குதலுக்கு குறைந்த பட்சம் 10 ஆண்டு சிறை தண்டனை அல்லது ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதிக் கப்படலாம். பாலியல் தாக்குதலுக்கு குறைந்த பட்சம் 3 ஆண்டு முதல் 5 ஆண்டுவரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட லாம்.

    கடுமையான பாலியல் தாக்குதலுக்கு குறைந்த பட்சம் 5 முதல் 7 ஆண்டுவரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம். பாலியல் தொந்தரவுகளுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும். ஆபாசப்படம் எடுத்தால் 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதமும் ஒருமுறைக்கு மேல் பல முறை ஆபாசப்படம் எடுத்தால் 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதமும் விதிக்க தற்போதைய சட்டப்பிரிவில் வழிவகை செய்யப் பட்டுள்ளது.

    குழந்தைகளை வேலைக்கு பயன்படுத்தக்கூடாது. அவ்வாறு பயன்படுத்தி, கொடுமைப்படுத்துபவர்கள் மீதும் குற்றவியல் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதுடன், அதுபோன்ற குழந்தைகள் மீட்கப்பட்டு காப்பகங்களில் சேர்க்கப்பட்டு கல்வி கற்க வசதி செய்து கொடுக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். 
    தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இந்த காலக் கட்டத்தில் பலர் ஆண்மைக் குறைவால் அவதிப்படுகின்றனர். இந்த பிரச்சனைக்கு உட்டியாணா யோகா நிரந்தர தீர்வை தரும்.
    தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட காலக் கட்டத்தில் உடல்நலக்குறைவால் அவதிப்படுபவர்கள் அதிகம். இதன் பாதிப்பு ஆண்மைக் குறைவு வரை கொண்டு சென்றுவிடுகிறது. இதனால் பாலியல் விஷயங்களில் ஆர்வம் குறைந்துவிடும். இதனை சரிசெய்ய எளிய உட்டியாணா ஆசனத்தை செய்யலாம்.

    செய்முறை :

    விரிப்பில் இடைவெளி விட்டு கால்களை விரித்து நிற்கவும். இரண்டு கைகளையும் தொடைகளின் மீது வைத்துக் கொள்ளவும். இடுப்புக்கு மேல் உள்ள உடல் பகுதியை மட்டும் முன் பக்கமாக சிறிது குனியும் படி வளைக்கவும்.

    இந்த நிலையில் வயிற்று பகுதியில் இறுக்கம் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டியது முக்கியம். இதனைத் தொடர்ந்து சுவாசப் பைகளில் நிரம்பியிருக்கும் காற்றை முழுவதுமாக வெளியில் விடவும். வயிற்றை உள்ளுக்குள் இழுத்து, ஐந்து அல்லது பத்து விநாடிகளுக்கு அப்படியே நிறுத்தவும்.

    மூச்சை மெதுவாக இழுத்தவாறு வயிறை தளர்த்தவும். பிறகு நிமிர்ந்து, சாதாரண மூச்சை இரண்டு மூன்று தரம் இழுத்து விட்டு மறுபடி மேற்சொன்னது போல் திரும்பவும் செய்யவும்.

    ஆசனத்தின் பலன்கள் :

    மலச்சிக்கல், அசீரணம், வாய் துர்நாற்றம், பலவீனம் ஆகியவை விலகும்.

    இடுப்பு சதைகள், இனவிருத்திக் கோளங்கள், அது தொடர்பான தாதுப்பை போன்ற உறுப்புகள் ஆரோக்கியமடையும்.

    ஆண்மை மிகுதிப்பட்டு, நமது கட்டுப்பாட்டுக்குள் வரும்.

    ஆஸ்துமா போன்ற மூச்சுக்குழல் தொடர்பான பிரச்சினைகள் இருப்பவர்களுக்கு நல்ல பலன் தரும்.

    ஆசனத்தை தவிர்க்க வேண்டியவர்கள்:

    14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் செய்யக் கூடாது.

    வயிற்றில் அறுவை சிகிச்சை, வயிற்றில் புண் இருப்பவர்கள், இதய பலவீனம் உள்ளவர்களும் ஆசனத்தை தவிர்க்க வேண்டும். 
    மூட்டு வலிக்கு வீட்டிலேயே செய்து கொள்ள கூடிய எளிய மற்றும் விரைவில் பலன் தரும் ஆய்வு ரீதியான உதவிகள் என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    மூட்டு வலிக்கு வீட்டிலேயே செய்து கொள்ள கூடிய சில ஆய்வு ரீதியான உதவிகள்:

    * இஞ்சிக்கு மருத்துவத்தில் அதிக முக்கியத்துவம் உள்ளது. ஏதோ ஒரு விதத்தில் சமையலில் இஞ்சி சேர்த்துக் கொள்ளுங்கள். சில மெல்லிய துண்டுகள் இஞ்சியினை 2 கப் நீர் 15 நிமிடங்கள் மெல்லிய தீயில் கொதிக்க விட்டு வடிகட்டி அதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து அருந்துங்கள்.

    * சோம்பு, பூண்டு இவற்றினை உணவில் சேருங்கள்.

    * கைகளுக்கு, விரல்களுக்கு வேலை கொடுங்கள். முதலில் வெதுவெதுப்பான நீரில் கையை வையுங்கள். பின்னர் சிறு சிறு சாமான்களான தட்டு, டம்ளர் இவற்றினை நீங்களே நன்கு சுத்தம் செய்யுங்கள். வலியும் குறையும். வேலை செய்வதால் உங்கள் தன்னம்பிக்கை கூடும்.

    * தவிடு ஒத்தடம், வெந்நீர் ஒத்தடம் இவைகளை வீட்டிலேயே செய்து கொள்ளலாமே.

    * காய்கறி, முழு தானியம், பழங்கள், வெங்காயம், மீன் இவை வீக்கத்தினை குறைக்கும் உணவுகள் ஆகும்.

    * முடிந்தால் நீச்சல் செய்யுங்கள்.

    * க்ரீன் டீ 2 கப் தினமும் சாப்பிடுங்கள்.

    * எலுமிச்சை, நெல்லி அதாவது வைட்டமின் ‘சி’ சத்து தினமும் தேவை.

    * சாப்பிட்ட பிறகு ஒரு கிராம்பு மெல்லுங்கள்.

    * ஓமேகா 3 மருத்துவ ஆலோசனை படி எடுத்துக் கொள்ளுங்கள்.

    * வீட்டினுள் வெறும் காலில் நனங்கள்.

    * கால்ஷியம் மாத்திரை தேவையா என்பதனைப் பற்றி மருத்துவ ஆலோசனை பெறுங்கள்.

    ஓமம்:- ஆங்கில முறை மருத்துவம் என்றால் அதில் அறிவுறுத்தும் உணவு நிபுணர்கள் பூண்டு, மஞ்சள் இவைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வலியுறுத்துகின்றனர். அவ்வகையில் ஓமம் இன்று அறிவுறுத்தப்படுகின்றது. இதன் மருத்துவ குணங்களான கிருமி நாசினியும், பூஞ்ஞை நாசினியும் வெகுவாய் மருத்துவ உலகம் அறிந்து சிபாரிசு செய்கின்றது. இதனை டீ போல் நீரில் கொதிக்க வைத்து குடிக்க

    * சிறுநீர் நன்கு செல்லுதல் (ஆனால் சிறுநீரக கோளாறு இருப்பவர்கள் மருத்துவ ஆலோசனை பெற்று செய்யவும்)

    * பல் பாதிப்பின்மை

    * ஜீரணம் சீராய் இருத்தல்

    * மனச் சோர்வின்றி இருத்தல்

    * உடல்வலி இன்றி இருத்தல்

    * உள் வீக்கங்கள் குறைதல்

    ஆகியவை ஏற்படுவதாகக் கூறுகின்றனர்.

    2 க்ளாஸ் நீரில் 1/2 டீஸ்பூன் ஓமம் போட்டு டீ போல் கொதிக்க வைத்து வாரம் இரு முறை டீக்கு பதிலாக அருந்தலாமே. 
    குழந்தைகளுக்கு இனிப்பு என்றால் மிகவும் பிடிக்கும். இன்று காபி டிகாஷன், தேங்காய் துருவல் சேர்த்து பர்ஃபி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்  :

    தேங்காய் துருவல் - 1 கப்
    காபி டிகாஷன் - அரை கப்
    சர்க்கரை - தேவைக்கு
    நெய் - 1 டேபிள் ஸ்பூன்
    முந்திரி பருப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    முந்திரி பருப்பை தூளாக்கி கொள்ளவும்.

    வாணலியில் தண்ணீர் ஊற்றி அதில் சர்க்கரையை போட்டு பாகு காய்ச்சி கொள்ள வேண்டும்.

    அடுத்து அதில் நெய், காபி டிகாஷன், தேங்காய் துருவல் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து கிளறிவிட  வேண்டும்.

    ஓரளவு கெட்டியாகி பதம் வந்ததும் இறக்கிவிட வேண்டும். அகன்ற தட்டில் நெய் தடவி விட்டு அதில் இந்த கலவையை ஊற்றி சமமாக பரப்பி விட வேண்டும்.

    பின்னர் முந்திரி பருப்பு தூளை அதன் மேல் தூவி விட வேண்டும்.

    பின்னர் விரும்பிய வடிவத்தில் வெட்டி பர்பியை ருசிக்கலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    துளசிச் செடியின் அனைத்து பாகங்களும் மருத்துவ தன்மை நிறைந்தது. துளசியை தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து தினமும் பருகினால் பல பலன்கள் கிடைக்கும்.
    துளசிச் செடியின் அனைத்து பாகங்களும் மருத்துவ தன்மை நிறைந்தது. துளசியை தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து தினமும் பருகினால் பல பலன்கள் கிடைக்கும். அவற்றில் சிலவற்றைப் பார்க்கலாம்.

    துளசி நீரை தினமும் குடித்து வந்தால் தோல் சுருக்கம் மறையும்.

    துளசியால் நரம்புகளைப் பலப்படுத்துவதால் பார்வை குணமடையும்.



    உடலின் எந்த பகுதியில் புற்றுநோய் இருந்தாலும் துளசி நீர் அதனை முழுவதும் குணமாக்கும்.

    துளசி கிருமி நாசினியாகவும் இருப்பதால் துளசி நீர் தினமும் குடிப்பதால் வாய் துர்நாற்றம் மறையும்.

    துளசி நீரைத் தொடர்ந்து பருகினால் நீரழிவு நோய் நெருங்காது.
    கணவன் - மனைவி தாம்பத்தியம் கொள்ளாமல் இருந்தால் என்ன பாதிப்புகள் வரும் என்பதையும் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம் ஆகும். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
    ஆரோக்கியமாக இருக்க உண்ணும் உணவுகளுடன் செயல்பாடுகள், வாழ்க்கை முறை, உள்ளிட்டவையும் முக்கிய பங்கு வகிக்கிறது. தாம்பத்தியம் கொள்ளாமல் இருந்தால் என்ன பாதிப்புகள் வரும் என்பதையும் தெரிந்து கொள்வது அவசியம்.

    இணையுடன் நீண்ட காலம் உறவு கொள்ளாமல் இருந்தால் உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து விடும்.

    தாம்பத்தியம் கொள்வதில் இடைவேளை ஏற்பட்டால், பாலியல் உணர்சிகளை தூண்டப்படுவதில் சிக்கலை உண்டாகும். குறிப்பாக விறைப்பு தன்மை குறையவும் வாய்ப்பு உள்ளது.

    உடலில் செக்ஸ் ஹார்மோன்கள் சுரப்பது குறைந்து விடும். பின் தாம்பத்தியம் கொள்ளும் போது மனதளவில் உடலளவில் பல சிக்கல்கள் ஏற்படும்.

    தாம்பத்தியம் கொள்ளும் போதும் கலோரிகள் எரிக்கப்படும். அப்படி தாம்பத்தியம் கொள்ளாமல் இருக்கும் போது கலோரிகள் எரிக்கப்படுவதும் குறையும் அளவில்லாமல் சாப்பிடுவது உள்ளிட்ட காரணத்தால் உடல் எடை அதிகரிக்கும்.
    பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு சத்தான மதிய உணவு செய்து கொடுக்க விரும்பினால் கொண்டைக்கடலை புலாவ் செய்வது கொடுக்கலாம். இன்று இந்த புலாவ் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பாசுமதி அரிசி - ஒரு கப்,
    தனியா - ஒரு டேபிள்ஸ்பூன்
    காய்ந்த மிளகாய் - 5,
    பச்சை மிளகாய் - 2
    பெரிய வெங்காயம் - ஒன்று
    பட்டை - சிறு துண்டு
    வெந்தயம் - அரை டீஸ்பூன்
    எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்,
    வெள்ளை கொண்டைக்கடலை - கால் கப்,
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
    நெய்யில் வறுத்த முந்திரி - தேவையான அளவு



    செய்முறை :

    முதலில் வெள்ளை கொண்டைக்கடலையை முதல் நாள் இரவு ஊறவைத்து, மறுநாள் வேகவைத்து கொள்ளவும்.

    தனியா, காய்ந்த மிளகாய், வெந்தயத்தை வெறும் வாணலியில் வறுத்து, மிக்ஸியில் பொடித்து கொள்ளவும்.

    பாசுமதி அரிசியை உதிர் உதிராக வடித்துக்கொள்ளவும்.

    வெங்காயம், பச்சை மிளகாயை மிகவும் பொடியாக நறுக்கவும்.

    அடிகனமான வாணலியில் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் வேகவைத்த கொண்டைக்கடலை, வறுத்துப் பொடித்த பொடி, எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்து நன்கு வதக்கி, உதிராக வடித்த சாதம் சேர்த்துக் கிளறி, கொத்தமல்லித்தழை, முந்திரி தூவி பின்பு பரிமாறவும்.

    சூப்பரான கொண்டைக்கடலை புலாவ் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உங்கள் குழந்தைகளின் வயதிற்கு ஏற்ப, செக்ஸ், மாதவிடாய், உடல் மீதான ஈர்ப்பு, நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் குறித்து கொஞ்சம், கொஞ்சமாக பேச ஆரம்பிக்க வேண்டும்.
    தற்கால குழந்தைகள் அதிக அறிவாற்றலுடன் திகழ்கின்றனர். அவர்களுக்கு செக்ஸ், மாதவிடாய், மனநிலை, மது, போதை உள்ளிட்டவை குறித்து தெளிவுபடுத்துவது அவசியம். ஒருவேளை நீங்கள் இதுகுறித்து குழந்தைகளுடன் பேசாவிட்டாலும், அவர்கள் இணையம் வாயிலாக அறிந்து கொள்ளத்தான் போகிறார்கள்.

    உங்கள் குழந்தைகளின் வயதிற்கு ஏற்ப, செக்ஸ், மாதவிடாய், உடல் மீதான ஈர்ப்பு, நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் குறித்து கொஞ்சம், கொஞ்சமாக பேச ஆரம்பிக்க வேண்டும். இது குழந்தைகள் உடனான நட்புறவிற்கு மிகுந்த உதவியாக இருக்கும். இதன்மூலம் குழந்தைகளுக்கு உங்கள் மீது நம்பிக்கை பிறந்து, எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ளும் மனப்பான்மை உருவாகும்.

    வயதிற்கேற்ப செக்ஸ் கல்வி அளிக்க வேண்டும். எல்லாவற்றையும் ஒரே தடவையில் கூற வேண்டாம். ஒவ்வொரு விஷயமாக கூறும் போது, அவர்கள் மெல்ல சிந்தித்து புரிந்து கொள்வார்கள். பருவமடைதலின் போது ஏற்படும் மாற்றத்தை, குழந்தைகளுக்கு தெளிவாக புரிய வைக்க வேண்டும். உடல் வளர்ச்சியின் ஒரு பகுதியே என்றும், இது ஒரு சராசரி நிகழ்வே என்றும் தெளிவாக விளக்க வேண்டும்.



    ஆல்கஹால், புகைப்பிடித்தல் ஆகியவற்றில் இருந்து குழந்தைகளை எவ்வளவு மறைத்து வைத்தாலும், ஒரு கட்டத்தில் தானாகவே அறிந்து கொள்வார்கள். இதனை தவறாக புரிந்து கொண்டு, தீய பழக்கங்கள் ஏற்படாமல் இருக்க, நண்பரைப் போல அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும். இவற்றையெல்லாம் டீன் - ஏஜ் பருவத்தில் எடுத்துரைப்பது சிறந்தது.

    உடல் சுரப்பிகளின் தூண்டுதலால், ஆர்வ மிகுதியால் எல்லாவற்றையும் முயற்சித்து பார்க்க தோன்றும். இதுபோன்ற சமயங்களில் தீய பழக்கங்களால் ஏற்படும் உடல் பாதிப்புகள் குறித்து விளக்க வேண்டும். இதுதொடர்பாக விழிப்புணர்வு செய்திகள், வீடியோக்கள் உள்ளிட்டவற்றை குழந்தைகளுக்கு காண்பித்து, அறிவுரை வழங்க வேண்டும்.

    வாழ்க்கையில் தோன்றும் ஏற்ற, இறக்கங்கள் மற்றும் வெற்றி, தோல்விகள் ஆகியவற்றை பெற்றோர்களின் வளர்ப்பின் படியே, குழந்தைகள் கையாள்வார்கள். அதாவது, பள்ளி தேர்வில் குறைந்த மதிப்பெண்கள், நிராகரிப்பதால் ஏற்படும் மனச்சிதைவு உள்ளிட்டவை இதில் அடங்கும்.

    தோல்வி என்பது, நீங்கள் சரியாகச் செயல்படவில்லை என்பதைக் குறிக்காது. இது ஒரு அனுபவம். சூழ்நிலையைப் புரிந்து கொண்டு, தேவையை நோக்கி நடைபோட வேண்டும் என்று புரிய வைக்க வேண்டும். தோல்வியடையும் சமயங்களில் குழந்தைகளை திட்டாமல், அடிக்காமல் சரியான உதாரணங்களுடன் நம்பிக்கை ஊட்ட வேண்டும். 
    சிறந்த மேனி பராமரிப்புக்கு, நம் தினசரி பழக்க வழக்கங்களில் சின்னச்சின்ன விஷயங்களிலும் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியமாகும்.
    சிறந்த மேனி பராமரிப்புக்கு, நம் தினசரி பழக்க வழக்கங்களில் சின்னச்சின்ன விஷயங்களிலும் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. அதில் முக்கியமான ஒன்று, குளியல். சில நிமிடங்கள் குளித்தாலுமேகூட மேனியைப் பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க முடியும். வெதுவெதுப்பான நீரில் குளிப்பது மட்டுமே உங்கள் சருமத்தில் சுரக்கும் இயற்கையான எண்ணெய்ப் பதத்தைத் தக்கவைக்கும்.

    தலையில் அழுக்குப் படியாமல் இருப்பதற்கும், தலைமுடியை தூய்மையாக வைத்துக்கொள்வதற்கும் தலை மற்றும் முடியின் வேர்களில் மட்டும் ஷாம்பூவைப் பயன்படுத்தினால் போதுமானது. கண்டிஷனரை முடிகளில் மட்டும் தடவுவதால், முடி வறட்சி அடையாமல் பாதுகாக்கப்படும். மாறாக, இதைத் தலையில் தேய்த்தால், தலை எண்ணெய்ப் பசையோடு இருக்கும்; அழுக்கு படிவதற்கும் வழிவகுக்கும்.

    கிருமிகள் அதிகமாகப் படியும் கைகள், கால்கள், பாதங்கள், அக்குள் போன்ற இடங்கள் மற்றும் வியர்வை மற்றும் துர்நாற்றம் வீசும் இடங்களில் சோப்பை அதிகமாகப் பயன்படுத்தலாம்.

    அதிக நுரை தரும் சோப்பு நம் சருமத்தை வறண்டதாக மாற்றிவிடும். சோப்பைத் தேர்ந்தெடுக்கும்போது, அதில் ரசாயனப் பொருட்கள் குறைந்த அளவில் சேர்க்கப்பட்டிருக்கிறதா என்பதை சரிபார்த்து வாங்க வேண்டும். கூடுமானவரைக்கும் ஆர்கானிக் சோப் அல்லது உடலின் எண்ணெய்ப் பசையைப் பாதுகாக்கும் சோப்பைப் பயன்படுத்துவது நல்லது.

    உடலில் உள்ள அழுக்குகளையும் கிருமிகளையும் நீக்க ஸ்க்ரப்பரைப் பயன்படுத்தலாம். குளித்து முடித்ததும் ஸ்க்ரப்பரை நன்கு அலசி, வெயிலில் காயவைக்க வேண்டும் அல்லது புதிய ஸ்க்ரப்பரைப் பயன்படுத்தலாம். ஆனால், அதிக அளவில் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். உண்மையில் இயற்கையான ஸ்க்ரப்பர் என்பது நம் கைகளே; அவை பாதுகாப்பானதும்கூட.

    குளித்த பிறகு, உடலை, தூய்மையான துண்டால் துடையுங்கள். அழுத்தித் துடைக்காமல், மிருதுவாகத் துடையுங்கள். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை துண்டை துவைப்பது கிருமிகள் உங்கள் உடம்பில் தொற்றிக்கொள்ளாமல் பாதுகாக்கும்.

    குளித்துவிட்டு, உடலைத் துவட்டியதும் கட்டாயமாக பாடி லோஷனைத் தடவ வேண்டும். இது, நாள் முழுவதும் உடலின் ஈரப்பதத்தைத் தக்கவைத்திருக்கும். இயற்கையான தேங்காய் எண்ணெய் அல்லது அவகேடோ எண்ணெயை நான்கு முதல் ஐந்து சொட்டுக்களை உள்ளங்கையில் எடுத்து, நன்கு தேய்த்துத் தடவிக்கொள்ளலாம். இதை தினசரி பழக்கமாக மாற்றிக்கொள்ளுங்கள். உங்கள் சருமம் என்றும் இளமை மிளிர ஜொலிக்கும்!
    உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், டயட்டில் இருப்பவர்கள் கொள்ளு - சிறுதானிய கஞ்சியை குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். இன்று கஞ்சி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    கொள்ளு - 2 டீஸ்பூன்
    சிறுதானியம் - 2 டீஸ்பூன் ( ஏதாவது ஒரு சிறுதானியம்)
    வெந்தயக்கீரை - ஒரு கைப்பிடி
    கொத்தமல்லி - சிறிதளவு
    மோர் - 2 கப்
    தண்ணீர் - 2 கப்
    உப்பு - தேவையான அளவு

    தாளிக்க

    சீரகம் - 1 டீஸ்பூன்
    கடுகு - கால் டீஸ்பூன்
    பெருங்காயத்தூள் - சிறிதளவு
    நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்



    செய்முறை :

    கொள்ளு, சிறுதானியத்தை தனித்தனியாக வெறும் கடாயில் போட்டு வறுத்து கொள்ளவும்.

    கொள்ளு ஆறியதும் மிக்சியில் போட்டு கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.

    சிறுதானிய அரிசியை நன்றாக கழுவி வைக்கவும்.

    கொத்தமல்லி, வெந்தயக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குக்கரை அடுப்பில் வைத்து பொடித்த கொள்ளு, சிறுதானிய அரிசி, தண்ணீர், வெந்தயக்கீரை சேர்த்து குக்கரை மூடி 4 விசில் போட்டு இறக்கி வைக்கவும்.

    விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து மோர், உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து கஞ்சியில் கொட்டி கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

    சூப்பரான கொள்ளு - சிறுதானிய கஞ்சி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×