என் மலர்
ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்
60 வயதைக் கடந்தவர்கள் அடிக்கடி நோய்களின் தாக்கங்களுக்கு ஆளாகாமல் தப்பிக்க வேண்டுமென்றால் சில முக்கியமான ஊட்டச்சத்துக்களை தினசரி நம் உணவில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவேண்டும்.
நம் நாட்டில் 60 வயதைக் கடந்து விட்டால் ‘முதியோர்’ என்கிறார்கள். ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, சுவீடன், டென்மார்க் போன்ற பல நாடுகளில் 60 வயதையெல்லாம் ஒரு வயதாகவே கருதுவது இல்லை. இந்த வயதில் உள்ளவர்களை அங்கெல்லாம் நடுத்தர வயதுக்காரர்கள் என்றுதான் அழைக்கிறார்கள்.
நமக்கெல்லாம் 60 வயதிலேயே உடல் ஆட்டம் கண்டுவிடுகிறது. இதற்கு ஊட்டச்சத்துக்களும், வைட்டமின்களும், மினரல்களும் கிடைக்காதது தான் காரணம் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக 60 வயதைக் கடந்தவர்கள் அடிக்கடி நோய்களின் தாக்கங்களுக்கு ஆளாகாமல் தப்பிக்க வேண்டுமென்றால் சில முக்கியமான ஊட்டச்சத்துக்களை தினசரி நம் உணவில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவேண்டும்.
முதுமைக்குத் தேவையான சத்துக்களுள் பீட்டாகரோட்டின் என்பதும் ஒன்று. இது பச்சை நிறம் கொண்ட காய்கறிகள், பழங்கள், கீரைகள், கேரட், பீட்ரூட், தக்காளி, பப்பாளிப்பழம், மாம்பழம், ஆரஞ்சு பழம் போன்றவற்றில் கிடைக்கிறது.அடுத்து வைட்டமின் சி என்பதும் முக்கியமானது. இது முளைகட்டிய தானியங்கள், கீரைகள், முட்டைக்கோஸ், காலிபிளவர், உருளைக்கிழங்கு மற்றும் புளிப்புத்தன்மை கொண்ட பழங்களிலும் கிடைக்கிறது.

அடுத்து வைட்டமின் ஈ உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைத் தருவதில் சிறப்பாகச் செயல்படுகிறது. இது பாதாம் பருப்பு, பசலைக்கீரை, சூரியகாந்தி விதை, வேர்க்கடலை போன்றவற்றில் அதிகமாக இருக்கிறது. செலீனியம் என்ற மினரல் முதுமையில் இருப்பவர்களுக்கு அவசியமான தாகும். இது முட்டை, கோழி, மீன், காளான், சிவப்பு அரிசி, வெண்ணெய், சோயாபீன்ஸ், எள் போன்ற உணவுகளில் கிடைக்கிறது.முதுமையில் துத்தநாக குறைபாடு ஏற்படுவது இயல்பாக இருக்கிறது. இது பூசணி விதை, வெள்ளரி விதை, வறுத்த வேர்க்கடலை, காராமணி, ஆட்டு ஈரல் ஆகியவற்றில் அதிகமாக இருக்கிறது.
முதுமையில் இரும்புச்சத்து குறைபாடு இல்லாமல் பார்த்துக்கொள்வது அவசியம். இரும்புச்சத்து ஆட்டுக்கல்லீரல், இறால் மீன், பசலைக்கீரை, பீட்ரூட், மாதுளை, ஆப்பிள், தர்ப்பூசணி, பேரீச்சம் பழம் ஆகியவற்றில் கிடைக்கிறது. இவைகளை நாம் முடிந்த வரையில் அன்றாடம் உணவில் சேர்த்துக்கொண்டால் முதுமையையும், முதுமைக்கால நோய்களையும் தடுக்கலாம்.இவற்றுடன் தினமும் காலையிலோ, மாலையிலோ முக்கால் மணி நேரத்திற்குக் குறையாமல் நடைப்பயிற்சி மேற்கொள்வது அவசியம். .இவைகளைக் கடைப்பிடித்து வந்தால், முதுமையை வெல்லலாம். 80-90 வயதுகளிலும் ஆரோக்கியமாக வாழலாம்.
மு.பெரியசாமி, திருத்துறைப்பூண்டி
நமக்கெல்லாம் 60 வயதிலேயே உடல் ஆட்டம் கண்டுவிடுகிறது. இதற்கு ஊட்டச்சத்துக்களும், வைட்டமின்களும், மினரல்களும் கிடைக்காதது தான் காரணம் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக 60 வயதைக் கடந்தவர்கள் அடிக்கடி நோய்களின் தாக்கங்களுக்கு ஆளாகாமல் தப்பிக்க வேண்டுமென்றால் சில முக்கியமான ஊட்டச்சத்துக்களை தினசரி நம் உணவில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவேண்டும்.
முதுமைக்குத் தேவையான சத்துக்களுள் பீட்டாகரோட்டின் என்பதும் ஒன்று. இது பச்சை நிறம் கொண்ட காய்கறிகள், பழங்கள், கீரைகள், கேரட், பீட்ரூட், தக்காளி, பப்பாளிப்பழம், மாம்பழம், ஆரஞ்சு பழம் போன்றவற்றில் கிடைக்கிறது.அடுத்து வைட்டமின் சி என்பதும் முக்கியமானது. இது முளைகட்டிய தானியங்கள், கீரைகள், முட்டைக்கோஸ், காலிபிளவர், உருளைக்கிழங்கு மற்றும் புளிப்புத்தன்மை கொண்ட பழங்களிலும் கிடைக்கிறது.

அடுத்து வைட்டமின் ஈ உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைத் தருவதில் சிறப்பாகச் செயல்படுகிறது. இது பாதாம் பருப்பு, பசலைக்கீரை, சூரியகாந்தி விதை, வேர்க்கடலை போன்றவற்றில் அதிகமாக இருக்கிறது. செலீனியம் என்ற மினரல் முதுமையில் இருப்பவர்களுக்கு அவசியமான தாகும். இது முட்டை, கோழி, மீன், காளான், சிவப்பு அரிசி, வெண்ணெய், சோயாபீன்ஸ், எள் போன்ற உணவுகளில் கிடைக்கிறது.முதுமையில் துத்தநாக குறைபாடு ஏற்படுவது இயல்பாக இருக்கிறது. இது பூசணி விதை, வெள்ளரி விதை, வறுத்த வேர்க்கடலை, காராமணி, ஆட்டு ஈரல் ஆகியவற்றில் அதிகமாக இருக்கிறது.
முதுமையில் இரும்புச்சத்து குறைபாடு இல்லாமல் பார்த்துக்கொள்வது அவசியம். இரும்புச்சத்து ஆட்டுக்கல்லீரல், இறால் மீன், பசலைக்கீரை, பீட்ரூட், மாதுளை, ஆப்பிள், தர்ப்பூசணி, பேரீச்சம் பழம் ஆகியவற்றில் கிடைக்கிறது. இவைகளை நாம் முடிந்த வரையில் அன்றாடம் உணவில் சேர்த்துக்கொண்டால் முதுமையையும், முதுமைக்கால நோய்களையும் தடுக்கலாம்.இவற்றுடன் தினமும் காலையிலோ, மாலையிலோ முக்கால் மணி நேரத்திற்குக் குறையாமல் நடைப்பயிற்சி மேற்கொள்வது அவசியம். .இவைகளைக் கடைப்பிடித்து வந்தால், முதுமையை வெல்லலாம். 80-90 வயதுகளிலும் ஆரோக்கியமாக வாழலாம்.
மு.பெரியசாமி, திருத்துறைப்பூண்டி
நம் உடலில் உள்ள உறுப்புகளில் கண்களின் பணி மிகவும் முக்கியமானது. இன்று கண்களை பாதுகாக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை பார்க்கலாம்.
கண்களை பாதுகாக்க தொலைக்காட்சிக்கு அருகில் உட்கார்ந்து பார்க்காதீர்கள். உங்கள் தொலைக்காட்சியின் செங்குத்தான உயர அளவு 10 அங்குலம் இருந்தால் நீங்கள் 10 அடி தொலைவில் இருந்து டி.வி. பாருங்கள்.
மங்கலான வெளிச்சத்தில் புத்தகங்களை படிக்காமல், பின்புறத்தில் இருந்து விளக்கின் வெளிச்சம் பிரகாசமாக புத்தகத்தின் மீது விழும் நிலையில் படிப்பது எளிதாக இருக்கும்.
குழந்தைகளுக்கு மாறுகண் தானாகவே சரியாகாது. அது அதிர்ஷ்டமும் அல்ல. தொடக்க நிலையிலேயே முறையான சிகிச்சை மற்றும் பயிற்சி இருந்தால் மாறுகண் சரியாகும் வாய்ப்பு உள்ளது. ஆனால், அலட்சியமாக இருந்தால் பார்வை பறிபோய் விடும்.
கேரட்டில் வைட்டமின் ஏ சத்து அதிகம் உள்ளதால், பார்வைத் திறனை பாதுகாக்கும் சக்தி அதற்கு உண்டு. ஆனால், கேரட் சாப்பிடுவதன் மூலம் இழந்த பார்வைத்திறனை மேம்படுத்த முடியாது.
இறந்தவர்களின் கண் தானமாக கிடைத்தபிறகு, தேவைப்படுவோருக்கு முழு கண்ணும் மாற்றுச் சிகிச்சை செய்யப்படுவதில்லை. மாறாக தானமாக பெற்ற கண்ணில் உள்ள விழி வெண்படலம் (கார்னியா) மட்டுமே மாற்றுச் சிகிச்சையில் பொருத்தப்படுகிறது.
மங்கலான வெளிச்சத்தில் புத்தகங்களை படிக்காமல், பின்புறத்தில் இருந்து விளக்கின் வெளிச்சம் பிரகாசமாக புத்தகத்தின் மீது விழும் நிலையில் படிப்பது எளிதாக இருக்கும்.
குழந்தைகளுக்கு மாறுகண் தானாகவே சரியாகாது. அது அதிர்ஷ்டமும் அல்ல. தொடக்க நிலையிலேயே முறையான சிகிச்சை மற்றும் பயிற்சி இருந்தால் மாறுகண் சரியாகும் வாய்ப்பு உள்ளது. ஆனால், அலட்சியமாக இருந்தால் பார்வை பறிபோய் விடும்.
கேரட்டில் வைட்டமின் ஏ சத்து அதிகம் உள்ளதால், பார்வைத் திறனை பாதுகாக்கும் சக்தி அதற்கு உண்டு. ஆனால், கேரட் சாப்பிடுவதன் மூலம் இழந்த பார்வைத்திறனை மேம்படுத்த முடியாது.
இறந்தவர்களின் கண் தானமாக கிடைத்தபிறகு, தேவைப்படுவோருக்கு முழு கண்ணும் மாற்றுச் சிகிச்சை செய்யப்படுவதில்லை. மாறாக தானமாக பெற்ற கண்ணில் உள்ள விழி வெண்படலம் (கார்னியா) மட்டுமே மாற்றுச் சிகிச்சையில் பொருத்தப்படுகிறது.
மாலை சத்தான சுவையான ஸ்நாக்ஸ் சாப்பிட விரும்பினால் பேரீச்சம்பழம் குழிப்பணியாரம் செய்து சாப்பிடலாம். இன்று இந்த பணியாரம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பதப்படுத்திய அரிசி மாவு - 2 கப்,
பேரீச்சம்பழம் - 20,
காய்ந்த திராட்சை - 10,
தேங்காய்த்துருவல் - 1/4 கப்,
பொடித்த முந்திரி - 1 டீஸ்பூன்,
வெல்லம் - சிறிதளவு,
உப்பு - சிறிது,

செய்முறை :
பேரீச்சம்பழத்தை கொட்டை நீக்கி அதனுடன் காய்ந்த திராட்சை சேர்த்து 10 நிமிடம் தண்ணீரில் ஊறவைத்து மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.
கடைசியாக அதனுடன் அரிசி மாவை சேர்த்து ஒரு சுற்று சுற்றி அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் தேங்காய்த்துருவல், வெல்லம், முந்திரி, உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து தோசை மாவு பதத்தில் கலந்து அரைமணி நேரம் ஊறவைக்கவும்.
குழிப்பணியார கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் குழிக்கரண்டியால் மாவை ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு பொரித்தெடுத்து பரிமாறவும்.
சூப்பரான சத்தான பேரீச்சம்பழம் பணியாரம் ரெடி.
பதப்படுத்திய அரிசி மாவு - 2 கப்,
பேரீச்சம்பழம் - 20,
காய்ந்த திராட்சை - 10,
தேங்காய்த்துருவல் - 1/4 கப்,
பொடித்த முந்திரி - 1 டீஸ்பூன்,
வெல்லம் - சிறிதளவு,
உப்பு - சிறிது,
பொரிக்க எண்ணெய் - தேவைக்கு.

செய்முறை :
பேரீச்சம்பழத்தை கொட்டை நீக்கி அதனுடன் காய்ந்த திராட்சை சேர்த்து 10 நிமிடம் தண்ணீரில் ஊறவைத்து மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.
கடைசியாக அதனுடன் அரிசி மாவை சேர்த்து ஒரு சுற்று சுற்றி அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் தேங்காய்த்துருவல், வெல்லம், முந்திரி, உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து தோசை மாவு பதத்தில் கலந்து அரைமணி நேரம் ஊறவைக்கவும்.
குழிப்பணியார கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் குழிக்கரண்டியால் மாவை ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு பொரித்தெடுத்து பரிமாறவும்.
சூப்பரான சத்தான பேரீச்சம்பழம் பணியாரம் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
ஆண் குழந்தையோ பெண் குழந்தையோ, அம்மாவும் அப்பாவும் தான் அவர்களின் முதல் நண்பர்கள். குழந்தைகளிடம் வெளிப்படையாக இருப்பது அவர்களில் வாழ்க்கையில் நல்ல எண்ணங்களை வளர்க்க உதவும்.
பெற்றோர் மற்றும் குழந்தைகளிடையே நல்ல வார்த்தைப் பிரயோகம் (கம்யுனிகேஷன்) இருப்பது மிகவும் அவசியம். இதை எப்படி செய்யலாம் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
நாம் இன்று பிஸியான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறோம். காலையில் குழந்தை எழுவதற்கு முன்பே, அம்மாவும் அப்பாவும் தங்கள் வேலைக்குக் கிளம்பி விடுகிறார்கள். அல்லது நீண்ட தூரத்தில் இருக்கும் பள்ளிக்குச் செல்ல, குழந்தை காலை உணவையும் டப்பாவில் கட்டிக் கொண்டு ஓட வேண்டி இருக்கிறது. ஒரு நாளைக்கு ஒரு வேளையாவது குடும்பமாக ஒன்று கூடி அமர்ந்து சாப்பிட வேண்டும் என்று வைத்துக்கொள்ளுங்கள்.
இது நிச்சயம் பல சிக்கலை சமாளிக்க உதவும். ஒருவரை ஒருவர் தினமும் பார்த்துக் கொள்வது கடினமாகும் போது உறவிற்கு நடுவே இடைவெளியும் அதிகரிக்கும். என்ன தான் பிஸியாக இருந்தாலும் அரை மணி நேரமாவது ஒதுக்கி ஒன்றாக சாப்பிடுங்கள். ஞாயிறு கிழமைகளில் லேப் டாப், வேலை என்று இருக்காமல், குடும்பத்தோடு ஒரு லாங் ட்ரைவாவது செல்லுங்கள்.
ஆண் குழந்தையோ பெண் குழந்தையோ, அம்மாவும் அப்பாவும் தான் அவர்களின் முதல் நண்பர்கள். அவர்களிடம் அவர்கள் வெளிப்படையாக இருப்பது அவர்களில் வளரும் நாட்களில் நல்ல ஒரு பாதிப்பை கொண்டிருக்கும். மேலும் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பிறகு குழந்தைகளிடம் நம்முடைய குடும்ப விஷயங்கள் அனைத்தையும் பற்றி பேசுவது, விவாதிப்பது, ஆலோசனைகள் செய்வது, தீர்மானம் எடுப்பது, பொதுவான விஷயங்களை மனம் விட்டு பேசுவது; நல்லது கெட்டதை விவாதிப்பது ; குடும்பத்தில் நன்மையே உண்டாக்கும். பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும் நெருக்கத்தை உண்டாக்குவது மட்டு மல்லாமல் பிள்ளைகள் சமுதாயத்தில், பொது இடங்களில் பேச, பழக தைரியத்தையும் உண்டாக்கும்.
நாம் இன்று பிஸியான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறோம். காலையில் குழந்தை எழுவதற்கு முன்பே, அம்மாவும் அப்பாவும் தங்கள் வேலைக்குக் கிளம்பி விடுகிறார்கள். அல்லது நீண்ட தூரத்தில் இருக்கும் பள்ளிக்குச் செல்ல, குழந்தை காலை உணவையும் டப்பாவில் கட்டிக் கொண்டு ஓட வேண்டி இருக்கிறது. ஒரு நாளைக்கு ஒரு வேளையாவது குடும்பமாக ஒன்று கூடி அமர்ந்து சாப்பிட வேண்டும் என்று வைத்துக்கொள்ளுங்கள்.
இது நிச்சயம் பல சிக்கலை சமாளிக்க உதவும். ஒருவரை ஒருவர் தினமும் பார்த்துக் கொள்வது கடினமாகும் போது உறவிற்கு நடுவே இடைவெளியும் அதிகரிக்கும். என்ன தான் பிஸியாக இருந்தாலும் அரை மணி நேரமாவது ஒதுக்கி ஒன்றாக சாப்பிடுங்கள். ஞாயிறு கிழமைகளில் லேப் டாப், வேலை என்று இருக்காமல், குடும்பத்தோடு ஒரு லாங் ட்ரைவாவது செல்லுங்கள்.
ஆண் குழந்தையோ பெண் குழந்தையோ, அம்மாவும் அப்பாவும் தான் அவர்களின் முதல் நண்பர்கள். அவர்களிடம் அவர்கள் வெளிப்படையாக இருப்பது அவர்களில் வளரும் நாட்களில் நல்ல ஒரு பாதிப்பை கொண்டிருக்கும். மேலும் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பிறகு குழந்தைகளிடம் நம்முடைய குடும்ப விஷயங்கள் அனைத்தையும் பற்றி பேசுவது, விவாதிப்பது, ஆலோசனைகள் செய்வது, தீர்மானம் எடுப்பது, பொதுவான விஷயங்களை மனம் விட்டு பேசுவது; நல்லது கெட்டதை விவாதிப்பது ; குடும்பத்தில் நன்மையே உண்டாக்கும். பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும் நெருக்கத்தை உண்டாக்குவது மட்டு மல்லாமல் பிள்ளைகள் சமுதாயத்தில், பொது இடங்களில் பேச, பழக தைரியத்தையும் உண்டாக்கும்.
குண்டான உடல்வாகு கொண்ட பெண்கள் தீவிர உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும். குண்டான பெண்கள் எந்த மாதிரியான உடற்பயிற்சியையும், டயட்டையும் கடைபிடிக்க வேண்டும் என்று பார்க்கலாம்.
குண்டான உடல்வாகு கொண்ட பெண்கள் தோள்பட்டையைவிட அகலமான இடுப்பை பெற்றிருப்பார்கள். கீழ்வயிறு, இடுப்பு, தொடைப் பகுதியில் கொழுப்பு சேரும். அவர்கள் சில குறிப்பிட்ட உடற்பயிற்சிகளையும், உணவுகட்டுப்பாட்டையும் கடைபிடித்தால் விரைவில் நல்ல பலனை காணலாம்.
குண்டான உடல்வாகு கொண்ட பெண்கள் தீவிர உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும். கொழுப்பை எரித்து செலவிடும் வகையில் உடல் இயக்க செயல்பாட்டை மாற்ற கடும் உடற்பயிற்சி தேவை. எல்லாம் கலந்த உடற்பயிற்சி முறை ஏற்றது.
தனுராசனம், நவ்காசனம், புஜங்காசனம் ஆகியவை ஏற்றது. பயிற்சி முடிக்கும் போது சர்வாசனம், பிராணாயாமம் செய்யலாம். பெரிய உடல்வாகு கொண்ட பெண்கள் காயமடையும் வாய்ப்பு கொண்டவர்களாக இருப்பதால் இந்த பயிற்சியை முறைவான வழிக்காட்டுதலின் கீழ் மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.
கார்டியோ: மற்ற உடல்வாகு கொண்டவர்களை விட எடை குறைப்புக்கு அதிக கார்டியோ செய்ய வேண்டும். சுறுசுறுப்பான நடை, தோள் பட்டை, கைகள், கழுத்து, முதுகு, இடுப்பு, தொடை உள்ளிட்ட பகுதிகளை வலுவாக்கும் வகையில் சில நிமிட ஸ்டிரெச்சிங் மற்றும் வலுவாக்கும் பயிற்சியை கார்டியோ உள்ளடக்கியிருக்க வேண்டும். ஸ்பாட் ஜாகிங், கழுத்து சுழற்சி, தோள்பட்டை பயிற்சி, பாதங்களை தொடுவது, பக்கவாட்டில் குனிவது ஆகியவை காயமடைதல், சுளுக்கு பாதிப்பை குறைத்து மூட்டு, தசைகளின் இயக்கத்தை சீராக்கும். வாரத்திற்கு ஐந்து முதல் ஆறு முறை 45 நிமிட தீவிர ஏரோபிக் பயிற்சியும் பரிந்துரைக்கப்படுகிறது.
குண்டான உடல் வாகு கொண்டவர்கள் பருமனாகும் வாய்ப்பு அதிகம் உள்ளதால் ஒவ்வொரு முறை சாப்பிடும் போதும் ஊட்டச்சத்தை அதிகமாக்கி, கொழுப்பைக் குறைக்க வேண்டும். அதிக கலோரி உணவும் சர்க்கரையும் கொண்ட கொழுப்பை உண்டாக்கும் உணவுப்பொருட்களை தவிர்க்கவும். இந்த வகையினர் எடை குறைப்பது கடினமானது என்பதால் சரியான உணவு என்பது 30 சதவித கலவையான மாவுச்சத்து, 45 சதவீத நல்ல புரதம், 25 சதவீத ஆரோக்கியமான கொழுப்பு கொண்டிருக்க வேண்டும்.
எல்லா வகையான சர்க்கரைப் பொருட்களையும் (வாழைப் பழம், மாம்பழம், திராட்சையில் இருப்பவை சேர்த்து) வெள்ளை மாவு பொருட்கள், அரிசி, பாஸ்தா, உருளை ஆகியவற்றை தவிர்க்கவும். இவை இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்யும். இதனால், இன்சுலின், கொழுப்பை சேமிக்கும் ஹார்மோன் அதிகம் சுரக்கும். உங்கள் உடல் இயக்க அளவை அதிகமாக வைத்திருக்க உணவு அளவை சிறு பகுதிகளாக்கி உட்கொள்ளவும். பசியோடு இல்லாமல் ஒவ்வொரு 2-&-3 மணி நேரத்திற்கும் ஏதாவது சாப்பிடவும்.
குண்டான உடல்வாகு கொண்ட பெண்கள் தீவிர உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும். கொழுப்பை எரித்து செலவிடும் வகையில் உடல் இயக்க செயல்பாட்டை மாற்ற கடும் உடற்பயிற்சி தேவை. எல்லாம் கலந்த உடற்பயிற்சி முறை ஏற்றது.
தனுராசனம், நவ்காசனம், புஜங்காசனம் ஆகியவை ஏற்றது. பயிற்சி முடிக்கும் போது சர்வாசனம், பிராணாயாமம் செய்யலாம். பெரிய உடல்வாகு கொண்ட பெண்கள் காயமடையும் வாய்ப்பு கொண்டவர்களாக இருப்பதால் இந்த பயிற்சியை முறைவான வழிக்காட்டுதலின் கீழ் மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.
கார்டியோ: மற்ற உடல்வாகு கொண்டவர்களை விட எடை குறைப்புக்கு அதிக கார்டியோ செய்ய வேண்டும். சுறுசுறுப்பான நடை, தோள் பட்டை, கைகள், கழுத்து, முதுகு, இடுப்பு, தொடை உள்ளிட்ட பகுதிகளை வலுவாக்கும் வகையில் சில நிமிட ஸ்டிரெச்சிங் மற்றும் வலுவாக்கும் பயிற்சியை கார்டியோ உள்ளடக்கியிருக்க வேண்டும். ஸ்பாட் ஜாகிங், கழுத்து சுழற்சி, தோள்பட்டை பயிற்சி, பாதங்களை தொடுவது, பக்கவாட்டில் குனிவது ஆகியவை காயமடைதல், சுளுக்கு பாதிப்பை குறைத்து மூட்டு, தசைகளின் இயக்கத்தை சீராக்கும். வாரத்திற்கு ஐந்து முதல் ஆறு முறை 45 நிமிட தீவிர ஏரோபிக் பயிற்சியும் பரிந்துரைக்கப்படுகிறது.
குண்டான உடல் வாகு கொண்டவர்கள் பருமனாகும் வாய்ப்பு அதிகம் உள்ளதால் ஒவ்வொரு முறை சாப்பிடும் போதும் ஊட்டச்சத்தை அதிகமாக்கி, கொழுப்பைக் குறைக்க வேண்டும். அதிக கலோரி உணவும் சர்க்கரையும் கொண்ட கொழுப்பை உண்டாக்கும் உணவுப்பொருட்களை தவிர்க்கவும். இந்த வகையினர் எடை குறைப்பது கடினமானது என்பதால் சரியான உணவு என்பது 30 சதவித கலவையான மாவுச்சத்து, 45 சதவீத நல்ல புரதம், 25 சதவீத ஆரோக்கியமான கொழுப்பு கொண்டிருக்க வேண்டும்.
எல்லா வகையான சர்க்கரைப் பொருட்களையும் (வாழைப் பழம், மாம்பழம், திராட்சையில் இருப்பவை சேர்த்து) வெள்ளை மாவு பொருட்கள், அரிசி, பாஸ்தா, உருளை ஆகியவற்றை தவிர்க்கவும். இவை இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்யும். இதனால், இன்சுலின், கொழுப்பை சேமிக்கும் ஹார்மோன் அதிகம் சுரக்கும். உங்கள் உடல் இயக்க அளவை அதிகமாக வைத்திருக்க உணவு அளவை சிறு பகுதிகளாக்கி உட்கொள்ளவும். பசியோடு இல்லாமல் ஒவ்வொரு 2-&-3 மணி நேரத்திற்கும் ஏதாவது சாப்பிடவும்.
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் அடிக்கடி உணவில் ஓட்ஸ் சேர்த்து கொள்வது நல்லது. இன்று ஓட்ஸில் தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
அரிசி மாவு - ஒரு கப்
ஓட்ஸ் - 100 கிராம்
பச்சை மிளகாய் - 1
கடுகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன்
இஞ்சி - சிறிது அளவு
கொத்தமல்லி - சிறிதளவு
வெங்காயம் - 2

செய்முறை :
கொத்தமல்லி, ப.மிளகாய், வெங்காயம், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஓட்ஸை வெறும் கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து ஆறியதும் பொடித்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் பொடித்த ஓட்ஸ், அரிசி மாவு, கொத்தமல்லி போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு சேர்த்து தாளித்த பின்னர் நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், இஞ்சி, சீரகம் சேர்த்து வதக்கி கரைத்த மாவுடன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுத்து பரிமாறவும்.
அரிசி மாவு - ஒரு கப்
ஓட்ஸ் - 100 கிராம்
பச்சை மிளகாய் - 1
கடுகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன்
இஞ்சி - சிறிது அளவு
கொத்தமல்லி - சிறிதளவு
வெங்காயம் - 2
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :
கொத்தமல்லி, ப.மிளகாய், வெங்காயம், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஓட்ஸை வெறும் கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து ஆறியதும் பொடித்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் பொடித்த ஓட்ஸ், அரிசி மாவு, கொத்தமல்லி போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு சேர்த்து தாளித்த பின்னர் நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், இஞ்சி, சீரகம் சேர்த்து வதக்கி கரைத்த மாவுடன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுத்து பரிமாறவும்.
சத்தான ஒட்ஸ் - வெங்காய தோசை ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பாலூட்டும் தாய் தனது குழந்தைக்கும் சேர்த்து உணவை சாப்பிட வேண்டும். தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
பாலூட்டும் தாய் தனது குழந்தைக்கும் சேர்த்து உணவை சாப்பிட வேண்டும். சத்தான உணவே ஆரோக்கியமான குழந்தைக்கு வழிவகுக்கும். தாய்மார்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
* ஓட்ஸ், முழு கோதுமை, கீன்வா, பார்லி, ரை மற்றும் இதுபோன்ற பல முழு தானியங்கள் வைட்டமின் பி மற்றும் சிக்கலான கார்போஹைட்ரேட்களின் முக்கியமான ஆதாரமாக இருக்கின்றன. குழந்தையைப் பராம ரிப்பதில் உடலுக்கு ஏற்படும் ஆற்றல் இழப்புகளை ஈடுசெய்ய உதவும். இவற்றில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், உங்கள் உடலின் வளர்சிதை மாற்றமும் மேம்படும். அவை, ரத்த சர்க்கரை அளவுகளைக் குறைத்து, குடல் ஆரோக்கியமாக இருப்பதையும் உறுதிசெய்யும் - இவை எல்லாமே நல்ல தரமான பால் உற்பத்திக்கு வழி வகுக்கும்.
* பால் உற்பத்தியை அதிகரிக்கும் உணவுகளில் விதைகள் மிகவும் சிறந்தவையாகும். இந்திய பாரம்பரிய மரபு வழிமுறைகளில், பால் உற்பத்தியை மேம்படுத்த விதைகள் தலைமுறை தலைமுறையாக முக்கியமான விஷயமாகக் கூறப்பட்டு வந்திருக்கிறது. இவற்றில், வெந்தயம், சீரகம், எள் மற்றும் கசகசா போன்றவையும் அடங்கும்.
இவற்றை உங்களுடைய காலைநேர கஞ்சி, கறி வகைகளின் டாப்பிங்காக சேர்த்து அல்லது தினசரி ஒரு ஸ்பூன் அளவுக்கு அப்படியே சாப்பிட்டு வரலாம். வறுத்துப் பொடியாக்கிக் கொண்டும், மற்ற உணவுகளில் சேர்த்து சாப்பிடலாம். தண்ணீரில் கலந்து குடிப்பது, நீர்ச்சத்தைப் பராமரிக்க உதவுவதோடு, உங்களுடைய மற்றும் உங்கள் குழந்தையின் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவக்கூடியது.
சோம்பு, சீரகம் அல்லது வெந்தயத்தைப் பயன்படுத்தலாம். இவற்றில் ஏதேனும் ஒன்றை இரண்டு டீஸ்பூன்கள் எடுத்துக்கொண்டு, அரை லிட்டர் தண்ணீரில் சேர்த்து அதன் நிறமும் சுவையும் மாறும் வரை கொதிக்க வைக்கவும். தண்ணீரை ஆற வைத்து, வாட்டர் பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொண்டு குடிக்கலாம். சிறந்த முடிவுகளைப் பெற, இந்த விதைகளை தினமும் ஒருமுறையாவது குடிக்க வேண்டும்.

* தண்ணீரில் எந்தவொரு ஊட்டச்சத்தும் இல்லாமல் இருக்கலாம். ஆனால் பல காரணங்களுக்காகத் தண்ணீர் தாய்ப்பாலூட்டும் தாய்மார்களுக்கு அத்தியாவசியமானது. முதலில், நீர்ச்சத்து குறையாமல் இருக்கவும், உங்கள் உடலின் ஆற்றல் குறைந்துப்போகாமல் இருக்கவும் தண்ணீர் தேவை. இரண்டாவதாக, உடலின் பால் உற்பத்தியை தண்ணீர் அதிகரிக்கும். தாகம் எடுத்தால் உடனடியாகத் தண்ணீர் குடித்திடுங்கள், சோம்பல் காரணமாக ஒத்திப்போடவோ, வேறுவேலைகளால் குடிக்காமல் இருக்கவே கூடாது. ஃப்ரெஷ் சூப்கள், பழங்கள், காய்கறிகளின் ஜூஸ்கள் மற்றும் தேங்காய் தண்ணீர் போன்றவற்றையும் நிறைய எடுத்துக் கொள்ளலாம்.
* சிக்கன் மற்றும் வான்கோழி போன்ற இறைச்சிகள், தாய்ப்பாலூட்டும் தாய்மார்களுக்கு புரதச்சத்தை அதிகரிக்க உதவும். ஆனாலும், சிக்கனை அதன் தோல்நீக்காமல்தான் நீங்கள் சமைக்க வேண்டும். சிக்கன் தோலில் நிறையவே நல்ல விஷயங்கள் இருக்கின்றன. பார்ஸ்லே, பூண்டு, ஆலிவ் ஆயில் போன்றவற்றால் அதை ஃப்ளேவர் கூட்டி சாப்பிடலாம்.
புரதத்தின் நல்ல மூலமாக இருப்பதில் முட்டைகளும் மற்றொரு சிறந்த பொருள், புரதத்தைத் தவிர அதில், ஃபோலேட், வைட்டமின் பி12 ஆகியவையும் அதிக அளவில் உள்ளன. உங்கள் டயட்டில் போதுமான அளவு பி12 இல்லையென்றால், குழந்தைக்கும் அதேபோல குறைவு ஏற்படும் என்பதை மறக்காதீர்கள். இதை சரிசெய்ய முட்டைகள் சரியான வழிமுறையாகும்.
* முழுக்கொழுப்பு பால் பாலூட்டும் தாய்மார்களுக்கு சிறந்தது. தினமும் இரண்டு கிளாஸ் பாலைக் குடிப்பதால், புரதம் மற்றும் கால்சியம் போன்றவை அதிகரிக்கும். மேலும் இதில் “நல்ல கொழுப்பு” இருப்பதால், உடலில் ஏற்படும் ஆற்றல் குறைபாடுகளை ஈடுசெய்ய மிகவும் உதவுகிறது. மிகவும் சூடான அல்லது குளிர்ந்த பாலை விட, இதமான சூட்டில் உள்ள பால் எப்போதுமே சிறந்தது.
உங்களுக்கு மாட்டுப்பாலைச் செரிமானம் அடைவதில் சிக்கல் இருந்தால், ஆட்டுப்பாலை முயற்சி செய்து பாருங்கள். வீகன் உணவுமுறையில் இருப்பவர்கள், சோயா பால் அல்லது நட் மில்க் போன்றவற்றை முயற்சி செய்யலாம். இவற்றில் போதுமான அளவு ஊட்டச்சத்துகள் கிடைக்கும். குழந்தைப் பிறப்பும், பாலூட்டுதலும் எலும்புகளை பலவீனமாக்கும், அதனால் போதுமான அளவு பால் குடிப்பதால், எலும்புகளும் பற்களும் வலிமையாக இருக்கும்.
மேலும் குழந்தைக்கும் நல்லது. சீஸில் நல்ல கொழுப்புகள் இருக்கின்றன. தினமும் போதுமான அளவு ஊட்டச்சத்துகள் கிடைக்க, நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய மற்றும் ஒரு பால் தயாரிப்பு நெய் ஆகும். வீட்டில் தயாரிக்கும் நெய்யில், ஒமெகா 3 கொழுப்பு அமிலமான டிஎச்ஏ இருக்கிறது. இது குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு நல்லது. இயற்கையான,கலப்படம் இல்லாத வெண்ணெயையும் உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
* ஓட்ஸ், முழு கோதுமை, கீன்வா, பார்லி, ரை மற்றும் இதுபோன்ற பல முழு தானியங்கள் வைட்டமின் பி மற்றும் சிக்கலான கார்போஹைட்ரேட்களின் முக்கியமான ஆதாரமாக இருக்கின்றன. குழந்தையைப் பராம ரிப்பதில் உடலுக்கு ஏற்படும் ஆற்றல் இழப்புகளை ஈடுசெய்ய உதவும். இவற்றில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், உங்கள் உடலின் வளர்சிதை மாற்றமும் மேம்படும். அவை, ரத்த சர்க்கரை அளவுகளைக் குறைத்து, குடல் ஆரோக்கியமாக இருப்பதையும் உறுதிசெய்யும் - இவை எல்லாமே நல்ல தரமான பால் உற்பத்திக்கு வழி வகுக்கும்.
* பால் உற்பத்தியை அதிகரிக்கும் உணவுகளில் விதைகள் மிகவும் சிறந்தவையாகும். இந்திய பாரம்பரிய மரபு வழிமுறைகளில், பால் உற்பத்தியை மேம்படுத்த விதைகள் தலைமுறை தலைமுறையாக முக்கியமான விஷயமாகக் கூறப்பட்டு வந்திருக்கிறது. இவற்றில், வெந்தயம், சீரகம், எள் மற்றும் கசகசா போன்றவையும் அடங்கும்.
இவற்றை உங்களுடைய காலைநேர கஞ்சி, கறி வகைகளின் டாப்பிங்காக சேர்த்து அல்லது தினசரி ஒரு ஸ்பூன் அளவுக்கு அப்படியே சாப்பிட்டு வரலாம். வறுத்துப் பொடியாக்கிக் கொண்டும், மற்ற உணவுகளில் சேர்த்து சாப்பிடலாம். தண்ணீரில் கலந்து குடிப்பது, நீர்ச்சத்தைப் பராமரிக்க உதவுவதோடு, உங்களுடைய மற்றும் உங்கள் குழந்தையின் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவக்கூடியது.
சோம்பு, சீரகம் அல்லது வெந்தயத்தைப் பயன்படுத்தலாம். இவற்றில் ஏதேனும் ஒன்றை இரண்டு டீஸ்பூன்கள் எடுத்துக்கொண்டு, அரை லிட்டர் தண்ணீரில் சேர்த்து அதன் நிறமும் சுவையும் மாறும் வரை கொதிக்க வைக்கவும். தண்ணீரை ஆற வைத்து, வாட்டர் பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொண்டு குடிக்கலாம். சிறந்த முடிவுகளைப் பெற, இந்த விதைகளை தினமும் ஒருமுறையாவது குடிக்க வேண்டும்.

* தண்ணீரில் எந்தவொரு ஊட்டச்சத்தும் இல்லாமல் இருக்கலாம். ஆனால் பல காரணங்களுக்காகத் தண்ணீர் தாய்ப்பாலூட்டும் தாய்மார்களுக்கு அத்தியாவசியமானது. முதலில், நீர்ச்சத்து குறையாமல் இருக்கவும், உங்கள் உடலின் ஆற்றல் குறைந்துப்போகாமல் இருக்கவும் தண்ணீர் தேவை. இரண்டாவதாக, உடலின் பால் உற்பத்தியை தண்ணீர் அதிகரிக்கும். தாகம் எடுத்தால் உடனடியாகத் தண்ணீர் குடித்திடுங்கள், சோம்பல் காரணமாக ஒத்திப்போடவோ, வேறுவேலைகளால் குடிக்காமல் இருக்கவே கூடாது. ஃப்ரெஷ் சூப்கள், பழங்கள், காய்கறிகளின் ஜூஸ்கள் மற்றும் தேங்காய் தண்ணீர் போன்றவற்றையும் நிறைய எடுத்துக் கொள்ளலாம்.
* சிக்கன் மற்றும் வான்கோழி போன்ற இறைச்சிகள், தாய்ப்பாலூட்டும் தாய்மார்களுக்கு புரதச்சத்தை அதிகரிக்க உதவும். ஆனாலும், சிக்கனை அதன் தோல்நீக்காமல்தான் நீங்கள் சமைக்க வேண்டும். சிக்கன் தோலில் நிறையவே நல்ல விஷயங்கள் இருக்கின்றன. பார்ஸ்லே, பூண்டு, ஆலிவ் ஆயில் போன்றவற்றால் அதை ஃப்ளேவர் கூட்டி சாப்பிடலாம்.
புரதத்தின் நல்ல மூலமாக இருப்பதில் முட்டைகளும் மற்றொரு சிறந்த பொருள், புரதத்தைத் தவிர அதில், ஃபோலேட், வைட்டமின் பி12 ஆகியவையும் அதிக அளவில் உள்ளன. உங்கள் டயட்டில் போதுமான அளவு பி12 இல்லையென்றால், குழந்தைக்கும் அதேபோல குறைவு ஏற்படும் என்பதை மறக்காதீர்கள். இதை சரிசெய்ய முட்டைகள் சரியான வழிமுறையாகும்.
* முழுக்கொழுப்பு பால் பாலூட்டும் தாய்மார்களுக்கு சிறந்தது. தினமும் இரண்டு கிளாஸ் பாலைக் குடிப்பதால், புரதம் மற்றும் கால்சியம் போன்றவை அதிகரிக்கும். மேலும் இதில் “நல்ல கொழுப்பு” இருப்பதால், உடலில் ஏற்படும் ஆற்றல் குறைபாடுகளை ஈடுசெய்ய மிகவும் உதவுகிறது. மிகவும் சூடான அல்லது குளிர்ந்த பாலை விட, இதமான சூட்டில் உள்ள பால் எப்போதுமே சிறந்தது.
உங்களுக்கு மாட்டுப்பாலைச் செரிமானம் அடைவதில் சிக்கல் இருந்தால், ஆட்டுப்பாலை முயற்சி செய்து பாருங்கள். வீகன் உணவுமுறையில் இருப்பவர்கள், சோயா பால் அல்லது நட் மில்க் போன்றவற்றை முயற்சி செய்யலாம். இவற்றில் போதுமான அளவு ஊட்டச்சத்துகள் கிடைக்கும். குழந்தைப் பிறப்பும், பாலூட்டுதலும் எலும்புகளை பலவீனமாக்கும், அதனால் போதுமான அளவு பால் குடிப்பதால், எலும்புகளும் பற்களும் வலிமையாக இருக்கும்.
மேலும் குழந்தைக்கும் நல்லது. சீஸில் நல்ல கொழுப்புகள் இருக்கின்றன. தினமும் போதுமான அளவு ஊட்டச்சத்துகள் கிடைக்க, நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய மற்றும் ஒரு பால் தயாரிப்பு நெய் ஆகும். வீட்டில் தயாரிக்கும் நெய்யில், ஒமெகா 3 கொழுப்பு அமிலமான டிஎச்ஏ இருக்கிறது. இது குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு நல்லது. இயற்கையான,கலப்படம் இல்லாத வெண்ணெயையும் உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
தூக்கம் வராமல் இருப்பதற்கு மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்கள் ஒரு முக்கிய காரணம் என்றாலும், வேறு சில காரணங்களும் இருக்கின்றன.
வயதானாலே தூக்கம் குறைந்துவிடும் என்பது எல்லோருக்கும் தெரியும். பிறந்த குழந்தை ஒரு நாளுக்கு 20 மணிநேரம் தூங்கும். வயதாக ஆக தூக்கத்தின் அளவு நான்கைந்து மணிநேரமாகக் குறைந்துவிடும். தூக்கத்தின் அளவு மட்டுமின்றி, தூக்கத்தின் ஆழமும் குறையத் தொடங்கும். அடிக்கடி விழிப்பு ஏற்படுவது, சிறிய சத்தம் கேட்டால்கூட விழித்துக்கொள்வது என்று இருக்கும்.
அவ்வாறு தூக்கம் வராமல் இருப்பதற்கு மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்கள் ஒரு முக்கிய காரணம் என்றாலும், வேறு சில காரணங்களும் இருக்கின்றன. முதன்மை காரணம், எந்த செயல்பாடுகளும் இல்லாமல் சும்மாவே இருப்பது. அலுவலகத்திற்கு வேலைக்கு செல்வது, வீடு திரும்புவது, தொழில் செய்பவராக இருந்தால் கடையை திறப்பது, அடைப்பது என்று அன்றாட பல விஷயங்கள் குறிப்பிட்ட நேரத்தில் சரியாக நடக்கும். இதை ஆங்கிலத்தில் டைம் மேக்கர்ஸ் (நேரக் குறிப்பான்கள்) என்று அழைக்கிறார்கள். இந்த செயல்கள் நடைபெறும் போது, நம் உடல் குறிப்பிட்ட செயல்களைச் செய்துவிட்டுத் தூங்கப் பழகியிருக்கும். வயதான பின்பு இந்த செயல்பாடுகள் இல்லை எனும் போது தூக்கம் வராமல் அவதிப்பட நேரிடுகிறது.
ஆகவே ஒரு அட்டவணைப்படித் தினமும் காலையிலிருந்து குறிப்பிட்ட செயல்களைக் குறிப்பிட்ட நேரத்தில் செய்து பழக வேண்டும். அதன்படி மாலை வெளியே சென்று வருவது, டைரி எழுதுவது, பேரன், பேத்திக்குக் கதை சொல்வது என்று குறிப்பிட்ட செயல்களைச் செய்த பின் தூங்குவது என்று வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.
தூக்கம் வரவில்லை என்று படுக்கையிலேயே புரண்டு கொண்டிருக்காமல் எழுந்து விட வேண்டும். நல்ல புத்தகங்களைப் படிக்கலாம். தூங்குவதற்கு முன்பு அதிக சிந்தனையோ, கவலையோ கூடாது. மெகா சீரியல்களில் அதிக கவனம் எடுத்து கொண்டு, அடுத்து என்ன நடக்குமோ என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்கக் கூடாது. நடைப்பயிற்சி அவசியம். காபி, டீ போன்றவற்றை அதிகம் குடித்தால் தூக்கம் கெடுவது உறுதி. குறிப்பாக, தூக்கம் வரவில்லையே என்று கவலைப் பட்டால், இருக்கும் தூக்கமும் போய்விடும். தேடுவதை நிறுத்துங்கள். தேடியது கிடைக்கும் என்பது ஓஷோவின் வாக்கு. பணம், புகழ் போல் அது தூக்கத்துக்கும் பொருந்தும்.
அவ்வாறு தூக்கம் வராமல் இருப்பதற்கு மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்கள் ஒரு முக்கிய காரணம் என்றாலும், வேறு சில காரணங்களும் இருக்கின்றன. முதன்மை காரணம், எந்த செயல்பாடுகளும் இல்லாமல் சும்மாவே இருப்பது. அலுவலகத்திற்கு வேலைக்கு செல்வது, வீடு திரும்புவது, தொழில் செய்பவராக இருந்தால் கடையை திறப்பது, அடைப்பது என்று அன்றாட பல விஷயங்கள் குறிப்பிட்ட நேரத்தில் சரியாக நடக்கும். இதை ஆங்கிலத்தில் டைம் மேக்கர்ஸ் (நேரக் குறிப்பான்கள்) என்று அழைக்கிறார்கள். இந்த செயல்கள் நடைபெறும் போது, நம் உடல் குறிப்பிட்ட செயல்களைச் செய்துவிட்டுத் தூங்கப் பழகியிருக்கும். வயதான பின்பு இந்த செயல்பாடுகள் இல்லை எனும் போது தூக்கம் வராமல் அவதிப்பட நேரிடுகிறது.
ஆகவே ஒரு அட்டவணைப்படித் தினமும் காலையிலிருந்து குறிப்பிட்ட செயல்களைக் குறிப்பிட்ட நேரத்தில் செய்து பழக வேண்டும். அதன்படி மாலை வெளியே சென்று வருவது, டைரி எழுதுவது, பேரன், பேத்திக்குக் கதை சொல்வது என்று குறிப்பிட்ட செயல்களைச் செய்த பின் தூங்குவது என்று வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.
தூக்கம் வரவில்லை என்று படுக்கையிலேயே புரண்டு கொண்டிருக்காமல் எழுந்து விட வேண்டும். நல்ல புத்தகங்களைப் படிக்கலாம். தூங்குவதற்கு முன்பு அதிக சிந்தனையோ, கவலையோ கூடாது. மெகா சீரியல்களில் அதிக கவனம் எடுத்து கொண்டு, அடுத்து என்ன நடக்குமோ என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்கக் கூடாது. நடைப்பயிற்சி அவசியம். காபி, டீ போன்றவற்றை அதிகம் குடித்தால் தூக்கம் கெடுவது உறுதி. குறிப்பாக, தூக்கம் வரவில்லையே என்று கவலைப் பட்டால், இருக்கும் தூக்கமும் போய்விடும். தேடுவதை நிறுத்துங்கள். தேடியது கிடைக்கும் என்பது ஓஷோவின் வாக்கு. பணம், புகழ் போல் அது தூக்கத்துக்கும் பொருந்தும்.
ரெப்ரிஜிரேட்டர் சரிவர பராமரித்தால்தான் அதன் குளுமை திறன் மற்றும் உணவு பொருட்கள் வீணாவது தடுக்க முடியும். அந்த வகையில் ரெப்ரிஜிரேட்டர் பராமரிக்க தேவையான வழிமுறைகளை பார்க்கலாம்.
அனைவரின் வீட்டிலும் தற்போது ரெப்ரிஜிரேட்டர் பயன்பாடு உள்ளது. சிறியது, பெரியது என்ற அவரவர் விருப்பத்திற்கு ஏற்ற அளவுகளில் ரெப்ரிஜிரேட்டர்கள் உள்ளன. அதிக விலை கொடுத்து வாங்கும் ரெப்ரிஜிரேட்டர்களை சரியாக பராமரிப்பது மூலமே சரிவர இயங்குவதற்கும், அதன் ஆயுட்காலம் நீட்டிப்பதற்கும் வழிவகை செய்யமுடியும். அதுபோல் ரெப்ரிஜிரேட்டர் சரிவர பராமரித்தால்தான் அதன் குளுமை திறன் மற்றும் உணவு பொருட்கள் வீணாவது தடுக்க முடியும். அந்த வகையில் ரெப்ரிஜிரேட்டர் பராமரிக்க தேவையான வழிமுறைகள் இதோ:-
கண்டென்ஸர் காயில்களை சுத்தப்படுத்தவும்
ரெப்ரிஜிரேட்டரின் சரியான இயக்கத்திற்கும், மின் செலவிற்கும் உதவுவது கண்டென்ஸர் காயில்கள்தான். இதில் அதிக தூசு மற்றும் அழுக்கு படிந்து விட்டால் இதன் இயக்கம் சரிவர நடைபெறாது. அதன் மூலம் அதிக மின் செலவு ஏற்படும். எனவே மூன்று மாதத்திற்கு ஒருமுறை தூசு விரட்டி (அ) வாக்யூப் கிளினர் வாயிலாக கண்டென்ஸர் காயிலை சுத்தம் செய்திட வேண்டும். கண்டென்ஸர் காயில் என்பது பிரிட்ஜின் பின்புறம் (அ) கீழ் பகுதியில் இருக் கும்.
டிரையின் ஹோல் சுத்தம் செய்தல்

கேஸ்கட்டை சுத்தம் செய்திட வேண்டும்
கேஸ்கட் என்பது ரெப்ரிஜிரேட்டர் கதவு மற்றும் பிரிசர் கதவுகளில் உள்ளது. இதுவே ரெப்ரிஜிரேட்டரின் உட்பகுதி குளுமை வெளியேறாமல் பாதுகாக்கும். இந்த கேஸ்கட் வெடிப்புகள் மற்றும் பிளவு ஏற்பட்டு இருக்கிறதா என்பதை அவ்வப்போது சோதித்திட வேண்டும். மேலும் இந்த கேஸ்கட்டை சுலபமாக வெளியே கழட்டி விடமுடியும். அவ்வாறு கழட்டி அதனை சோப்பு பவுடர் கொண்டு சுத்தம் செய்திட்டு பின் மாட்டி விடலாம். இதன் மூலம் கேஸ்கட் சுத்தமாவதுடன் அதில் வெடிப்பு, பிளவு ஏற்படாது.
உட்புற டெம்பரேச்சர் அளவை கண்காணித்தல்
அவ்வப்போது பிரிட்ஜின் உட்புற டெம்பரேச்சர் அளவை பரிசோதித்து சரி செய்திடல் வேண்டும். அதிக பொருட்கள் உள்ளபோது 37 முதல் 40 டிகிரி வரை பாரன்ஹிட் அளவு உள்ளவாறு பராமரித்தல் வேண்டும். பிரிஸரின் டெம்பரேச்சர் என்பது 0-5 பாரன்ஹீட் அளவு இருந்திட வேண்டும். டெம்பரேச்சர் சரியாக பராமரித்தல் மூலம் மின் செலவு குறையும்.
வாட்டர் பில்டரை மாற்றவும்
தற்போது வரும் ரெப்ரிஜிரேட்டர்களில் ஐஸ் மேக்சன் மற்றும் ராட்டர் டிஸ்பென்சர்கள் உள்ளன. அதில் வாட்டர் பில்டர்கள் உள்ளன. அவற்றை சரியான கால இடைவெளியில் மாற்றிட வேண்டும். பெரும்பாலும் 6 மாதத்திற்கு ஒருமுறை வாட்டர் பில்டர்களை மாற்றுவது அவசியம். அப்படியெனில் பிரிட்ஜ் நிறுவனம் வழங்கிய மேனுவலில் உள்ள அறிவுரைப்படி மாற்றுதல் வேண்டும்.
பிரிட்ஜ் பயன்பாட்டில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்
அதிக சூட்டுடன் உணவு பொருட்களை பிரிட்ஜ் உட்புறம் வைத்தல் கூடாது. அவ்வப்போது பிரிட்ஜ் கதவுகளை திறந்து மூடவோ, அதிக நேரம் கதவை திறந்து வைத்து இருப்பதோ கூடாது. இதன் மூலம் அதிக மின் செலவு மற்றும் பிரிட்ஜ் அதிக இயக்கத்திறனை கட்டுப்படுத்திட முடியும். பிரிட்ஜ் உட்புறத்தையும் அவ்வப்போது தூய்மை செய்திடவேண்டும். ரெப்ரிஜிரேட்டர் தயாரிப்பு நிறுவனங்களில் அளித்துள்ள பராமரிப்பு குறிப்புகளை படித்து பார்த்து அதன்படி அவ்வப்போது தூய்மை மற்றும் மாற்றவேண்டிய உபகரணங்களை மாற்றிடுதல் வேண்டும்.
வினிகர் கொண்டு கேஸ்கட் மற்றும் உட்புற பகுதிகளை தூய்மை செய்வது மிக சிறப்பானதாக இருக்கும்.
கண்டென்ஸர் காயில்களை சுத்தப்படுத்தவும்
ரெப்ரிஜிரேட்டரின் சரியான இயக்கத்திற்கும், மின் செலவிற்கும் உதவுவது கண்டென்ஸர் காயில்கள்தான். இதில் அதிக தூசு மற்றும் அழுக்கு படிந்து விட்டால் இதன் இயக்கம் சரிவர நடைபெறாது. அதன் மூலம் அதிக மின் செலவு ஏற்படும். எனவே மூன்று மாதத்திற்கு ஒருமுறை தூசு விரட்டி (அ) வாக்யூப் கிளினர் வாயிலாக கண்டென்ஸர் காயிலை சுத்தம் செய்திட வேண்டும். கண்டென்ஸர் காயில் என்பது பிரிட்ஜின் பின்புறம் (அ) கீழ் பகுதியில் இருக் கும்.
டிரையின் ஹோல் சுத்தம் செய்தல்
புதிய மாடல் ரெப்ரிஜிரேட்டரில் சில வகையில் டிரையின் ஹோல் இருக்காது. ஆனால் சில மாடல்களில் தண்ணீர் வெளியேற வழிப்பாதையிருக்கும். அதனை அவ்வப்போது சுத்தம் செய்திட வேண்டும். அதுபோல் டிரிப் பேன்-யை வெளியில் எடுத்து கழுவி பொருத்த வேண்டும். நாம் உணவு பொருட்களின் துகள்கள் டிரையின் ஹோல்களில் அடைத்துக்கொண்டு துர்நாற்றம் ஏற்படவும், தண்ணீர் வழிந்து பிரிட்ஜ் உட்புறம் பரவும் வழி ஏற்படும். எனவே, அவ்வப்போது டிரையின் ஹோலை சுத்தம் செய்திடவேண்டும்.

கேஸ்கட்டை சுத்தம் செய்திட வேண்டும்
கேஸ்கட் என்பது ரெப்ரிஜிரேட்டர் கதவு மற்றும் பிரிசர் கதவுகளில் உள்ளது. இதுவே ரெப்ரிஜிரேட்டரின் உட்பகுதி குளுமை வெளியேறாமல் பாதுகாக்கும். இந்த கேஸ்கட் வெடிப்புகள் மற்றும் பிளவு ஏற்பட்டு இருக்கிறதா என்பதை அவ்வப்போது சோதித்திட வேண்டும். மேலும் இந்த கேஸ்கட்டை சுலபமாக வெளியே கழட்டி விடமுடியும். அவ்வாறு கழட்டி அதனை சோப்பு பவுடர் கொண்டு சுத்தம் செய்திட்டு பின் மாட்டி விடலாம். இதன் மூலம் கேஸ்கட் சுத்தமாவதுடன் அதில் வெடிப்பு, பிளவு ஏற்படாது.
உட்புற டெம்பரேச்சர் அளவை கண்காணித்தல்
அவ்வப்போது பிரிட்ஜின் உட்புற டெம்பரேச்சர் அளவை பரிசோதித்து சரி செய்திடல் வேண்டும். அதிக பொருட்கள் உள்ளபோது 37 முதல் 40 டிகிரி வரை பாரன்ஹிட் அளவு உள்ளவாறு பராமரித்தல் வேண்டும். பிரிஸரின் டெம்பரேச்சர் என்பது 0-5 பாரன்ஹீட் அளவு இருந்திட வேண்டும். டெம்பரேச்சர் சரியாக பராமரித்தல் மூலம் மின் செலவு குறையும்.
வாட்டர் பில்டரை மாற்றவும்
தற்போது வரும் ரெப்ரிஜிரேட்டர்களில் ஐஸ் மேக்சன் மற்றும் ராட்டர் டிஸ்பென்சர்கள் உள்ளன. அதில் வாட்டர் பில்டர்கள் உள்ளன. அவற்றை சரியான கால இடைவெளியில் மாற்றிட வேண்டும். பெரும்பாலும் 6 மாதத்திற்கு ஒருமுறை வாட்டர் பில்டர்களை மாற்றுவது அவசியம். அப்படியெனில் பிரிட்ஜ் நிறுவனம் வழங்கிய மேனுவலில் உள்ள அறிவுரைப்படி மாற்றுதல் வேண்டும்.
பிரிட்ஜ் பயன்பாட்டில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்
அதிக சூட்டுடன் உணவு பொருட்களை பிரிட்ஜ் உட்புறம் வைத்தல் கூடாது. அவ்வப்போது பிரிட்ஜ் கதவுகளை திறந்து மூடவோ, அதிக நேரம் கதவை திறந்து வைத்து இருப்பதோ கூடாது. இதன் மூலம் அதிக மின் செலவு மற்றும் பிரிட்ஜ் அதிக இயக்கத்திறனை கட்டுப்படுத்திட முடியும். பிரிட்ஜ் உட்புறத்தையும் அவ்வப்போது தூய்மை செய்திடவேண்டும். ரெப்ரிஜிரேட்டர் தயாரிப்பு நிறுவனங்களில் அளித்துள்ள பராமரிப்பு குறிப்புகளை படித்து பார்த்து அதன்படி அவ்வப்போது தூய்மை மற்றும் மாற்றவேண்டிய உபகரணங்களை மாற்றிடுதல் வேண்டும்.
வினிகர் கொண்டு கேஸ்கட் மற்றும் உட்புற பகுதிகளை தூய்மை செய்வது மிக சிறப்பானதாக இருக்கும்.
பெண்கள் விரும்பி அணியும் ஆடைகளில் ஒன்றான சல்வார் சூட் என்பதை அணியாத பெண்களே கிடையாது எனலாம். சல்வார் சூட் பெண்கள் அணிவதற்கு ஏதுவான, வெகுவான, கச்சிதமான ஆடை வகையாகும்.
இந்தியாவில் பெண்களை பாரம்பரிய உடைகள் அணியாமல் காண்பது என்பது அரிது. குறிப்பாக பெண்கள் விரும்பி அணியும் ஆடைகளில் ஒன்றான சல்வார் சூட் என்பதை அணியாத பெண்களே கிடையாது எனலாம். சல்வார் சூட் பெண்கள் அணிவதற்கு ஏதுவான, வெகுவான, கச்சிதமான ஆடை வகையாகும்.
இதனை அனைத்து விழாக்கள் மற்றும் நிகழ்வுகளுக்கும் அணிந்து செல்லலாம். எனவே சல்வார் சூட்தான் அணிகின்றோம் என்பவருக்கு பலவிதமான சல்வார் சூட்கள் கிடைக்கின்றன என்பதும் அறிதல் வேண்டும். சல்வார் சூட்கள் என்பதில் 13 முதல் 18 வகையிலானவை உள்ளன. அவற்றில் சிலவற்றை பாருங்கள்.
தோத்தி சல்வார்:- பெண்கள் தோத்தி அணிவதா என்ற கேள்வி, எழும் முன்னறே பல பெண்கள் இதனை தங்கள் விருப்ப ஆடையாக அணிய தொடங்கிவிட்டனர். கீழ் பகுதி பேண்ட் அமைப்பு என்பது பஞ்ச் கச்ச வேஷ்டி அமைப்பு போன்று பிரில் வைத்து தைக்கப்பட்டுள்ளன. இதன் வேட்டி அமைப்புக்கு ஏற்றவகையில் வண்ணமயமான மேற்புற சட்டை நீளமான குர்தியாக உள்ளது. கை நீண்ட அமைப்புடன், குர்தியின் கீழ் பகுதி சுருக்கங்கள் வைத்து அழகுடன் தைக்கப்பட்டுள்ளன. இது தவிர பிளைன் குர்தியும் தோத்தி சல்வார்க்கு இணையாக கிடைக்கின்றன.
பெட்டல் பேண்ட்:- கண்களுக்கு விருந்தாகும் துலீப் பூக்களை அடிப்படையாக கொண்டது. அகலமாக தொடங்கி கீழ் வர வர துலீப் பூ போன்று குவிந்த வகையில் தைக்கப்பட்டுள்ளது. இதில் மேற்புற துணியமைப்பு தைக்கப்படாதவாறு பிரிந்த வகையில் இதழ்கள் போன்ற அமைப்புடன் சுழலவிடப்பட்டுள்ளன. இதழ் வடிவமைப்பு என்பது ஓரப்பகுதி, முன்பகுதி மற்றும் நடுப்பகுதியில் வரும் வகையில் தைக்கப்பட்டு தரப்படுகிறது. இதில் நமது விருப்பம் எதுவோ அதனை வாங்கி கொள்ளலாம். இதற்கு இணையான மேல் சட்டையாக குர்தி (அ) அனார்கலி ஒன்றை அணிந்திடலாம்.

ஆப்கான் சல்வார்:- இதனை அலாதீன் சல்வார் என்றும் கூறுவர். பாட்டியாலா போன்ற அமைப்புடன் இருப்பினும் இதன் கணுக்கால் பகுதி இறுக்கி பிடித்தபடி மாறுபட்ட பார்டர் உள்ளவாறு தைக்கப்பட்டிருக்கும். மிக அகலமான கால்பட்டை கொண்ட சல்வார்களும் கிடைக்கின்றன. இந்த சல்வாருக்கு அழகே கணுக்கால் பகுதி வண்ணபட்டைதான்.
பலாஸோ:- விதவிதமான பலாஸோ பேண்ட்கள் வருகின்றன. கணுக்கால் பகுதிவரை அகலமான குழல் வடிவில் இந்த பேண்ட் பல பெண்களின் விருப்பமான சல்வாராக உள்ளது. இதனை சுலபமாக அணிய முடியும் என்பதுடன் எந்த விதமான மேல் சட்டைக்கு ஏற்ற இணைப்பாக உள்ளது. குறிப்பாக நீள குர்தி மற்றும் அனார்கலி மேலாடைக்கு ஏற்றதாக உள்ளது.
ஷகாராஸ்:- இது பாகிஸ்தானிய வகை சல்வார், இது பேண்ட் போன்ற அமைப்புடன் அதிக பிரில் கொண்ட பாவாடை அமைப்புடன் உள்ளது. அதாவது இரு கால் பகுதியில் வண்ணபட்டை வைத்து தைக்கப்பட்டிருக்கும். அதிக வண்ணமயமான ஆடை என்பதுடன் சிறப்புமிகு விழாக்களுக்கு அணிய ஏற்ற வகையாகவும் உள்ளது. தூரத்தில் இருந்து பார்க்கும் போது பாவாடை போன்று தோன்றும் அருகில் வந்தால்தான் அத சல்வார் என்பது தெரியும்.
இதனை அனைத்து விழாக்கள் மற்றும் நிகழ்வுகளுக்கும் அணிந்து செல்லலாம். எனவே சல்வார் சூட்தான் அணிகின்றோம் என்பவருக்கு பலவிதமான சல்வார் சூட்கள் கிடைக்கின்றன என்பதும் அறிதல் வேண்டும். சல்வார் சூட்கள் என்பதில் 13 முதல் 18 வகையிலானவை உள்ளன. அவற்றில் சிலவற்றை பாருங்கள்.
தோத்தி சல்வார்:- பெண்கள் தோத்தி அணிவதா என்ற கேள்வி, எழும் முன்னறே பல பெண்கள் இதனை தங்கள் விருப்ப ஆடையாக அணிய தொடங்கிவிட்டனர். கீழ் பகுதி பேண்ட் அமைப்பு என்பது பஞ்ச் கச்ச வேஷ்டி அமைப்பு போன்று பிரில் வைத்து தைக்கப்பட்டுள்ளன. இதன் வேட்டி அமைப்புக்கு ஏற்றவகையில் வண்ணமயமான மேற்புற சட்டை நீளமான குர்தியாக உள்ளது. கை நீண்ட அமைப்புடன், குர்தியின் கீழ் பகுதி சுருக்கங்கள் வைத்து அழகுடன் தைக்கப்பட்டுள்ளன. இது தவிர பிளைன் குர்தியும் தோத்தி சல்வார்க்கு இணையாக கிடைக்கின்றன.
பெட்டல் பேண்ட்:- கண்களுக்கு விருந்தாகும் துலீப் பூக்களை அடிப்படையாக கொண்டது. அகலமாக தொடங்கி கீழ் வர வர துலீப் பூ போன்று குவிந்த வகையில் தைக்கப்பட்டுள்ளது. இதில் மேற்புற துணியமைப்பு தைக்கப்படாதவாறு பிரிந்த வகையில் இதழ்கள் போன்ற அமைப்புடன் சுழலவிடப்பட்டுள்ளன. இதழ் வடிவமைப்பு என்பது ஓரப்பகுதி, முன்பகுதி மற்றும் நடுப்பகுதியில் வரும் வகையில் தைக்கப்பட்டு தரப்படுகிறது. இதில் நமது விருப்பம் எதுவோ அதனை வாங்கி கொள்ளலாம். இதற்கு இணையான மேல் சட்டையாக குர்தி (அ) அனார்கலி ஒன்றை அணிந்திடலாம்.
பாட்டியாலா:- பஞ்சாப் பெண்களின் விருப்பமான சல்வார் வகை பாட்டியாலா. அதிக மடிப்புகளுடன் அகலமான வடிவமைப்புடன் இந்த வகை சல்வார் நல்ல காற்றோட்டமான ஆடை வகை. எனவே கோடைகாலத்தில் அணிய ஏற்றதாக உள்ளது.

ஆப்கான் சல்வார்:- இதனை அலாதீன் சல்வார் என்றும் கூறுவர். பாட்டியாலா போன்ற அமைப்புடன் இருப்பினும் இதன் கணுக்கால் பகுதி இறுக்கி பிடித்தபடி மாறுபட்ட பார்டர் உள்ளவாறு தைக்கப்பட்டிருக்கும். மிக அகலமான கால்பட்டை கொண்ட சல்வார்களும் கிடைக்கின்றன. இந்த சல்வாருக்கு அழகே கணுக்கால் பகுதி வண்ணபட்டைதான்.
பலாஸோ:- விதவிதமான பலாஸோ பேண்ட்கள் வருகின்றன. கணுக்கால் பகுதிவரை அகலமான குழல் வடிவில் இந்த பேண்ட் பல பெண்களின் விருப்பமான சல்வாராக உள்ளது. இதனை சுலபமாக அணிய முடியும் என்பதுடன் எந்த விதமான மேல் சட்டைக்கு ஏற்ற இணைப்பாக உள்ளது. குறிப்பாக நீள குர்தி மற்றும் அனார்கலி மேலாடைக்கு ஏற்றதாக உள்ளது.
ஷகாராஸ்:- இது பாகிஸ்தானிய வகை சல்வார், இது பேண்ட் போன்ற அமைப்புடன் அதிக பிரில் கொண்ட பாவாடை அமைப்புடன் உள்ளது. அதாவது இரு கால் பகுதியில் வண்ணபட்டை வைத்து தைக்கப்பட்டிருக்கும். அதிக வண்ணமயமான ஆடை என்பதுடன் சிறப்புமிகு விழாக்களுக்கு அணிய ஏற்ற வகையாகவும் உள்ளது. தூரத்தில் இருந்து பார்க்கும் போது பாவாடை போன்று தோன்றும் அருகில் வந்தால்தான் அத சல்வார் என்பது தெரியும்.
ஹோட்டலில் பிஸிபேளாபாத் சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வீட்டிலேயே எளிய முறையில் பிஸிபேளாபாத் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பச்சரிசி - ஒரு கப்,
துவரம்பருப்பு - அரை கப்,
சின்ன வெங்காயம் - 50 கிராம்,
தக்காளி - 3,
புளி - ஒரு சிறிய உருண்டை,
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் -அரை டீஸ்பூன்,
நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
வறுத்துப் பொடிக்க:
காய்ந்த மிளகாய் - 6,
தனியா - ஒரு டேபிள்ஸ்பூன்,
கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்,
வெந்தயம் - கால் டீஸ்பூன்,
சீரகம் - அரை டீஸ்பூன்,
கொப்பரை துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.
தாளிக்க:
கடுகு - அரை டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்,
எண்ணெய் - 2 டீஸ்பூன்,

செய்முறை:
அரிசியையும் பருப்பையும் நாலரை கப் தண்ணீர், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து குக்கரில் வைத்து, இரண்டு விசில் வந்ததும் தீயைக் குறைத்து, 5 நிமிடம் கழித்து இறக்குங்கள்.
வெங்காயத்தை தோல் உரித்து, இரண்டாக நறுக்குங்கள்.
தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள்.
வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களில், கொப்பரையைத் தவிர, மீதி எல்லாவற்றையும் வெறும் வாணலியில் போட்டு சிவக்க வறுத்தெடுங்கள்.
கடைசியில் கொப்பரை துருவலையும் சேர்த்து, வறுத்து இறக்கி ஆறவிட்டுப் பொடித்துக்கொள்ளுங்கள்.
புளியை ஒரு கப் தண்ணீரில் நன்கு கரைத்து வடிகட்டுங்கள்.
குக்கரில் இருக்கும் சாதத்தை, அப்படியே (குக்கரோடு) மீண்டும் அடுப்பில் வைத்து, புளிக்கரைசலை அதோடு சேர்த்து, நெய், பெருங்காயத்தூள் சேர்த்து, குறைந்த தீயில் 5 நிமிடம் நன்கு கிளறுங்கள்.
பிறகு, பொடித்து வைத்துள்ள தூளை அதில் தூவுங்கள்.
மற்றொரு கடாயில் எண்ணெய், நெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, வெங்காயம் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்குங்கள்.
பிறகு, தக்காளி சேர்த்து, நன்கு கரைய வதக்கி சாதத்தில் சேருங்கள்.
எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து, 10 நிமிடம் கழித்து இறக்குங்கள்.
விருப்பம் உள்ளவர்கள் கடைசியில் 2 டீஸ்பூன் நெய் ஊற்றிக் கிளறி இறக்குங்கள்.
சூப்பரான பிஸிபேளாபாத் ரெடி.
பச்சரிசி - ஒரு கப்,
துவரம்பருப்பு - அரை கப்,
சின்ன வெங்காயம் - 50 கிராம்,
தக்காளி - 3,
புளி - ஒரு சிறிய உருண்டை,
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் -அரை டீஸ்பூன்,
நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
வறுத்துப் பொடிக்க:
காய்ந்த மிளகாய் - 6,
தனியா - ஒரு டேபிள்ஸ்பூன்,
கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்,
வெந்தயம் - கால் டீஸ்பூன்,
சீரகம் - அரை டீஸ்பூன்,
கொப்பரை துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.
தாளிக்க:
கடுகு - அரை டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்,
எண்ணெய் - 2 டீஸ்பூன்,
நெய் - 2 டீஸ்பூன்.

செய்முறை:
அரிசியையும் பருப்பையும் நாலரை கப் தண்ணீர், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து குக்கரில் வைத்து, இரண்டு விசில் வந்ததும் தீயைக் குறைத்து, 5 நிமிடம் கழித்து இறக்குங்கள்.
வெங்காயத்தை தோல் உரித்து, இரண்டாக நறுக்குங்கள்.
தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள்.
வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களில், கொப்பரையைத் தவிர, மீதி எல்லாவற்றையும் வெறும் வாணலியில் போட்டு சிவக்க வறுத்தெடுங்கள்.
கடைசியில் கொப்பரை துருவலையும் சேர்த்து, வறுத்து இறக்கி ஆறவிட்டுப் பொடித்துக்கொள்ளுங்கள்.
புளியை ஒரு கப் தண்ணீரில் நன்கு கரைத்து வடிகட்டுங்கள்.
குக்கரில் இருக்கும் சாதத்தை, அப்படியே (குக்கரோடு) மீண்டும் அடுப்பில் வைத்து, புளிக்கரைசலை அதோடு சேர்த்து, நெய், பெருங்காயத்தூள் சேர்த்து, குறைந்த தீயில் 5 நிமிடம் நன்கு கிளறுங்கள்.
பிறகு, பொடித்து வைத்துள்ள தூளை அதில் தூவுங்கள்.
மற்றொரு கடாயில் எண்ணெய், நெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, வெங்காயம் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்குங்கள்.
பிறகு, தக்காளி சேர்த்து, நன்கு கரைய வதக்கி சாதத்தில் சேருங்கள்.
எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து, 10 நிமிடம் கழித்து இறக்குங்கள்.
விருப்பம் உள்ளவர்கள் கடைசியில் 2 டீஸ்பூன் நெய் ஊற்றிக் கிளறி இறக்குங்கள்.
சூப்பரான பிஸிபேளாபாத் ரெடி.
குறிப்பு: கொப்பரை என்பது தண்ணீர் சத்து இல்லாமல் இருக்கும். அது கிடைக்காத பட்சத்தில், தேங்காய் துருவலை, தண்ணீர் சத்து போக வெறும் வாணலியில் போட்டு நன்கு சிவக்க வறுத்துச் சேர்க்கலாம்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
இன்றைய பிள்ளைகள் சமையல் என்றாலே ஓடுபவர்களாக இருக்கிறார்கள். உங்கள் பிள்ளைகளுக்கு சிறுவயதிலேயே சமையல் கற்றுக் கொடுப்பது மிகவும் அவசியம்.
பல குடும்பங்களில் வீட்டில் மனைவிக்கு உடல் நிலை சரியில்லாமல் போகும்போது அங்கே உணவு சமைப்பது யார் என்ற மிகப்பெரிய கேள்வி எழுகிறது. இது போன்ற இக்கட்டான நிலையை தவிர்க்க உங்கள் பிள்ளைகளுக்கு சிறுவயதிலேயே சமையல் கற்றுக் கொடுப்பது மிகவும் அவசியம். 12 வயதிலிருந்து அவர்களை சமையல் செய்யத் தயார்படுத்தலாம்.
மகள் மட்டுமின்றி மகனையும் சமையலுக்கு பழக்கலாம். ஆனால் இன்றைய பிள்ளைகள் சமையல் என்றாலே தூரம் ஓடுபவர்களாக இருக்கிறார்கள். இதனால் பிள்ளைகளை சமையல் செய்ய பழக்கும்போது, படிப்படியாகத்தான் கற்றுத் தரவேண்டும். எடுத்த எடுப்பிலேயே அதைச் செய், இதைச் செய் என்று அதட்டி வேலை வாங்காமல் சிறு சிறு வேலைகளை அவர்களுக்கு கொடுக்கவேண்டும்.

இதற்கு பழக்கிய பின்னர் அரிசி களைவது, காய்கறிகளை நறுக்குவது, கழுவுவது, மசாலாப் பொருட்களை ஒன்று சேர்ப்பது போன்ற வேலையை செய்யச் சொல்லலாம். நான்காவது கட்டமாக அவற்றை குக்கர்-வாணலியில் எந்த நேரத்தில் போடவேண்டும், எந்த நேரத்தில் இறக்கவேண்டும், வாணலியில் வறுப்பது என்றால் எந்தெந்த நேரத்தில் எல்லாம் காய்கறிகளை கிளறிவிடவேண்டும் என்பதைச் சொல்லித் தரலாம்.
இதேபோல் சமையலுக்கு பயன்படுத்தும் பொருட்களின் அளவிற்கேற்ப பாத்திரங்களை கையாள்வது பற்றி பிள்ளைகளுக்கு எடுத்துக் கூறவேண்டும். பொருட்களின் அளவை நீங்கள் எடுத்துக் கொடுக்காமல் அவர்களிடமே அந்த பொறுப்பை விடவேண்டும். சமையலைக் கற்றுத் தரும்போது அருகிலேயே நீங்கள் இருந்து விளக்கவேண்டும்.
எண்ணெயை உபயோகிக்கும்போது அதை அவர்கள் சரியான அளவில் ஊற்றுவதற்கும் சொல்லித் தரவேண்டும். சாதம் வடிப்பதற்கு தேவைப்படும் தண்ணீரின் அளவு, குடும்ப நபர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தேவைப்படும் அரிசியின் அளவு, காய்கறிகளை வேக வைப்பதற்கு போதுமான தண்ணீர், சாம்பார் பொடி, மசாலாப் பொடி எவ்வளவு தேவை என்பதையும் சுயமாக தேர்ந்தெடுக்கும் வகையில் பழக்கவேண்டும். கத்தி, அரிவாள் மனையை அவர்களாகவே கையாளும் அளவிற்கு பழக்கவேண்டாம்.
மகள் மட்டுமின்றி மகனையும் சமையலுக்கு பழக்கலாம். ஆனால் இன்றைய பிள்ளைகள் சமையல் என்றாலே தூரம் ஓடுபவர்களாக இருக்கிறார்கள். இதனால் பிள்ளைகளை சமையல் செய்ய பழக்கும்போது, படிப்படியாகத்தான் கற்றுத் தரவேண்டும். எடுத்த எடுப்பிலேயே அதைச் செய், இதைச் செய் என்று அதட்டி வேலை வாங்காமல் சிறு சிறு வேலைகளை அவர்களுக்கு கொடுக்கவேண்டும்.
முதலில் கியாஸ், மண்எண்ணெய் அடுப்பு என்றால் பாதுகாப்பான முறையில் அவற்றை பற்ற வைக்க கற்றுத் தரவேண்டும். தண்ணீர் சுட வைப்பது, பால் காய்ச்சுவது, டீ-காபி போடுவது, தோசை சுடுவது, ஆம்லெட் போடுவது, முட்டையை வேக வைப்பது போன்றவற்றை செய்ய பழக்கவேண்டும். இந்த மாதிரி சிறுசிறு வேலைகளில் எல்லா பிள்ளைகளுக்குமே ஆர்வம் இருக்கும்.

இதற்கு பழக்கிய பின்னர் அரிசி களைவது, காய்கறிகளை நறுக்குவது, கழுவுவது, மசாலாப் பொருட்களை ஒன்று சேர்ப்பது போன்ற வேலையை செய்யச் சொல்லலாம். நான்காவது கட்டமாக அவற்றை குக்கர்-வாணலியில் எந்த நேரத்தில் போடவேண்டும், எந்த நேரத்தில் இறக்கவேண்டும், வாணலியில் வறுப்பது என்றால் எந்தெந்த நேரத்தில் எல்லாம் காய்கறிகளை கிளறிவிடவேண்டும் என்பதைச் சொல்லித் தரலாம்.
இதேபோல் சமையலுக்கு பயன்படுத்தும் பொருட்களின் அளவிற்கேற்ப பாத்திரங்களை கையாள்வது பற்றி பிள்ளைகளுக்கு எடுத்துக் கூறவேண்டும். பொருட்களின் அளவை நீங்கள் எடுத்துக் கொடுக்காமல் அவர்களிடமே அந்த பொறுப்பை விடவேண்டும். சமையலைக் கற்றுத் தரும்போது அருகிலேயே நீங்கள் இருந்து விளக்கவேண்டும்.
எண்ணெயை உபயோகிக்கும்போது அதை அவர்கள் சரியான அளவில் ஊற்றுவதற்கும் சொல்லித் தரவேண்டும். சாதம் வடிப்பதற்கு தேவைப்படும் தண்ணீரின் அளவு, குடும்ப நபர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தேவைப்படும் அரிசியின் அளவு, காய்கறிகளை வேக வைப்பதற்கு போதுமான தண்ணீர், சாம்பார் பொடி, மசாலாப் பொடி எவ்வளவு தேவை என்பதையும் சுயமாக தேர்ந்தெடுக்கும் வகையில் பழக்கவேண்டும். கத்தி, அரிவாள் மனையை அவர்களாகவே கையாளும் அளவிற்கு பழக்கவேண்டாம்.






