search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sleeping Problem"

    தூக்கம் வராமல் இருப்பதற்கு மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்கள் ஒரு முக்கிய காரணம் என்றாலும், வேறு சில காரணங்களும் இருக்கின்றன.
    வயதானாலே தூக்கம் குறைந்துவிடும் என்பது எல்லோருக்கும் தெரியும். பிறந்த குழந்தை ஒரு நாளுக்கு 20 மணிநேரம் தூங்கும். வயதாக ஆக தூக்கத்தின் அளவு நான்கைந்து மணிநேரமாகக் குறைந்துவிடும். தூக்கத்தின் அளவு மட்டுமின்றி, தூக்கத்தின் ஆழமும் குறையத் தொடங்கும். அடிக்கடி விழிப்பு ஏற்படுவது, சிறிய சத்தம் கேட்டால்கூட விழித்துக்கொள்வது என்று இருக்கும்.

    அவ்வாறு தூக்கம் வராமல் இருப்பதற்கு மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்கள் ஒரு முக்கிய காரணம் என்றாலும், வேறு சில காரணங்களும் இருக்கின்றன. முதன்மை காரணம், எந்த செயல்பாடுகளும் இல்லாமல் சும்மாவே இருப்பது. அலுவலகத்திற்கு வேலைக்கு செல்வது, வீடு திரும்புவது, தொழில் செய்பவராக இருந்தால் கடையை திறப்பது, அடைப்பது என்று அன்றாட பல விஷயங்கள் குறிப்பிட்ட நேரத்தில் சரியாக நடக்கும். இதை ஆங்கிலத்தில் டைம் மேக்கர்ஸ் (நேரக் குறிப்பான்கள்) என்று அழைக்கிறார்கள். இந்த செயல்கள் நடைபெறும் போது, நம் உடல் குறிப்பிட்ட செயல்களைச் செய்துவிட்டுத் தூங்கப் பழகியிருக்கும். வயதான பின்பு இந்த செயல்பாடுகள் இல்லை எனும் போது தூக்கம் வராமல் அவதிப்பட நேரிடுகிறது.

    ஆகவே ஒரு அட்டவணைப்படித் தினமும் காலையிலிருந்து குறிப்பிட்ட செயல்களைக் குறிப்பிட்ட நேரத்தில் செய்து பழக வேண்டும். அதன்படி மாலை வெளியே சென்று வருவது, டைரி எழுதுவது, பேரன், பேத்திக்குக் கதை சொல்வது என்று குறிப்பிட்ட செயல்களைச் செய்த பின் தூங்குவது என்று வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

    தூக்கம் வரவில்லை என்று படுக்கையிலேயே புரண்டு கொண்டிருக்காமல் எழுந்து விட வேண்டும். நல்ல புத்தகங்களைப் படிக்கலாம். தூங்குவதற்கு முன்பு அதிக சிந்தனையோ, கவலையோ கூடாது. மெகா சீரியல்களில் அதிக கவனம் எடுத்து கொண்டு, அடுத்து என்ன நடக்குமோ என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்கக் கூடாது. நடைப்பயிற்சி அவசியம். காபி, டீ போன்றவற்றை அதிகம் குடித்தால் தூக்கம் கெடுவது உறுதி. குறிப்பாக, தூக்கம் வரவில்லையே என்று கவலைப் பட்டால், இருக்கும் தூக்கமும் போய்விடும். தேடுவதை நிறுத்துங்கள். தேடியது கிடைக்கும் என்பது ஓஷோவின் வாக்கு. பணம், புகழ் போல் அது தூக்கத்துக்கும் பொருந்தும்.

    உங்களால் நன்றாக தூங்க முடியாவிட்டால், இரவில் நீங்கள் என்ன உணவு சாப்பிட்டீர்கள் என்பதிலும் கவனம் செலுத்தவேண்டும். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
    உங்களால் நன்றாக தூங்க முடியாவிட்டால், இரவில் நீங்கள் என்ன உணவு சாப்பிட்டீர்கள் என்பதிலும் கவனம் செலுத்தவேண்டும். ஏன்என்றால் இரவில் சாப்பிட்ட உணவு சரியாக ஜீரணம் ஆகாவிட்டால் உங்களுக்கு தூக்கம் வராது. அதனால் இரவில் நன்றாக தூங்க விரும்புகிறவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் சில இருக்கின்றன. அவைகளை பற்றி பார்ப்போம்!

    * இரவில் பால் குடிப்பது உடலுக்கு ஆரோக்கியமானது. ஆனால் தூங்க செல்வதற்கு சற்று நேரத்திற்கு முன்பு பால் அருந்துவதை தவிர்க்க வேண்டும். பாலில் இருக்கும் லாக்டோஸ் செரிமான தொந்தரவுகளை ஏற்படுத்தும். அதனால் ஆழ்ந்த தூக்கம் தடைப்பட்டு போகும்.

    * இரவில் சாப்பிட்ட பின்பு சாக்லேட் சுவைக்க நிறைய பேர் விரும்புகிறார்கள். ஆனால் அதில் கலந்திருக்கும் இனிப்பு சுவையும், காபினும் தூக்கத்திற்கு இடையூறு ஏற்படுத்தும். இரவில் தூங்க செல்வதற்கு முன்பு ஏதாவது முக்கியமான வேலை பார்ப்பதாக இருந்தாலும் சாக்லேட் சாப்பிடக்கூடாது. அது மந்தமான சூழ்நிலையை உருவாக்கும். ஆழ்ந்த தூக்கத்திற்கும் தடை போட்டுவிடும்.

    * இரவில் பீட்சா உணவு வகைகளை சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். அதில் அதிகமான கலோரிகள் மற்றும் கொழுப்புகள் கலந்திருக்கும். அவை செரிமானம் ஆகாமல் வயிற்றுக்குள் நீண்ட நேரம் தொந்தரவை ஏற்படுத்தும்.

    * இரவு சாப்பிட்ட பிறகு பழ ஜூஸ் அருந்துவதும் கூடாது. இரவில் 9 மணிக்கு பிறகு பழ ஜூஸ் சாப்பிட்டால் அசிடிட்டி பிரச்சினை ஏற்படக்கூடும். இதயத்திற்கும் அசவுகரியத்தை ஏற்படுத்தும்.

    * இரவில் சோடா போன்ற பானங்களை பருகவேண்டாம். அதில் வாயுக்கள் கலந்திருக்கும். அவை வயிற்றுக்கு அதிக அழுத்தம் கொடுக்கும். அதனால் செரிமானத்தில் சிக்கல் ஏற்பட்டு தூக்கம் தள்ளிப்போகும். 
    ×