என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    கர்ப்பம் தரிக்காமல் இருப்பதற்கு பெண்மைத்தன்மை குறைவது மட்டுமே காரணம் என்றும் சொல்லிவிட முடியாது. இன்னும் பல உடல் நலப்பிரச்னைகளும் அதில் இருக்கின்றன.
    ஆண்மையும் பெண்மையும் குறைபாடு ஏற்படுவதற்கான காரணங்கள் பல உண்டு. அதன் முதல் அறிகுறியே குழந்தையின்மை தான். கர்ப்பத்தடை சாதனங்கள் ஏதும் பயன்படுத்தாமல் ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரையிலும் உடலுறவு கொண்டும் குழந்தை பிறக்கவில்லை என்றால் நிச்சயம் மருத்துவரை சந்திப்பது நல்லது. பெண்கள் இதுபோன்று தடையேதுமின்றி உறவு கொள்ளும்போதும் கர்ப்பமடையாமல் இருந்தால் கட்டாயம் மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்வது நல்லது.

    ஆனால் கர்ப்பம் தரிக்காமல் இருப்பதற்கு பெண்மைத்தன்மை குறைவது மட்டுமே காரணம் என்றும் சொல்லிவிட முடியாது. இன்னும் பல உடல் நலப்பிரச்னைகளும் அதில் இருக்கின்றன.

    பெண்மைத்தன்மை குறைவதற்கான அறிகுறிகள்

    பெண்களுக்கு மாதவிலக்கு சுழற்சியில் இருந்து தான் இந்த பிரச்னை தொடங்கும்.  எப்போதும் போல் மாதவிலக்கு இருக்காது. ரத்தப் போக்கு வழக்கத்தைவிட அதிகமாகவோ குறைவாகவோ இருக்கும்.

    முறையற்ற மாதவிலக்கு சுழற்சி உண்டாகும்.

    சில சமயங்களில் பல மாதங்களுக்கு மாதவிலக்கு ஏற்படாது. திடீரென நின்றுவிடும்.

    முதுகுவலியும் தாங்கமுடியாத வயிற்று வலியும் உண்டாகும்.

    ஹார்மோன் மாற்றங்கள் நிகழும் என்பதால் கருமுட்டை வளர்ச்சி குறைவாகவோ அல்லது வயிற்றில் கருமுட்டை தங்காமலோ இருக்கும்.
    தீபாவளி பலகாரங்களில் இனிப்புகளை போன்று கார வகைகள் அதிகமாக இடம் பெறுகின்றன. இந்த தீபாவளிக்கு மகிழம்பூ முறுக்கு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    அரிசி மாவு - 2 கப்,
    பாசிப்பருப்பு மாவு - ½ கப்,
    பொடித்த சர்க்கரை - 2 டீஸ்பூன்,
    நெய் - 2 டீஸ்பூன்,
    தேங்காய் பால் - ¼ கப்,
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :

    வறுத்த பயத்தம் பருப்பை நன்றாக மாவாக்கி எடுத்து கொள்ளவும்.

    அரிசி மாவு, பயத்தம் மாவு, உப்பு, தேங்காய் பால், சர்க்கரை, நெய் சேர்த்து நன்றாக கலந்து தண்ணீர் விட்டு முறுக்கு மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை நட்சத்திர வடிவிலான அச்சில் போட்டு வட்டவடிவமாக பிழிந்து விட்டால் மகிழம்பூ முறுக்கு தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சளி, காய்ச்சல், உடல்வலியால் அவதிப்படுபவர்கள் இந்த மூலிகை டீயை போட்டு குடித்தால் உடலுக்கு மிகவும் நல்லது. இன்று இந்த டீயை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    சுக்கு - 20 கிராம்,
    தனியா - 20 கிராம்,
    இஞ்சி - 30 கிராம்,
    திப்பிலி - 1 டீஸ்பூன்,
    புதினா - ஒரு கொத்து,
    மிளகு - 1 டேபிள்ஸ்பூன்,
    பனை வெல்லம் - 200 கிராம்,
    தண்ணீர் - 1 லிட்டர்.



    செய்முறை

    வெறும் கடாயில் தனியாவை வறுத்து ஆறியதும இடித்து கொள்ளவும்.

    பாத்திரத்தில் 1 லிட்டர் தண்ணீர் விட்டு, அதில் தட்டிய இஞ்சி, மிளகு, திப்பிலி, சுக்கு, தனியா சேர்த்து கொதிக்க விடவும்.

    பின்பு மிக்சியில் புதினா, சிறிது நீர் விட்டு அரைத்து புதினா சாறு எடுத்து கொதிக்கும் தேநீரில் ஊற்றவும்.

    இறுதியாக பனை வெல்லம் போட்டு கொதிக்க வைத்து இறக்கி வடித்து பரிமாறவும்.

    சூப்பரான மூலிகை தேநீர் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பெண்கள் வைரத்தில் செய்த நெக்லஸ்கள் மீது அதிக ஆர்வம் கொண்டுள்ளனர். அதற்கேற்ப நகை வடிவமைப்பாளர்கள் தனிக் கவனத்துடன் மேம்பட்ட வடிவமைப்பு உத்தியை பயன்படுத்தி விதவிதமான வைர நெக்லஸ்களை தயார் செய்து தருகின்றனர்.
    வைரம் ரத்தின கற்களில் தனிச்சிறப்பு பெற்றது. அதன் ஜொலிப்பும், வெண்மை பிரகாசமும் அனைவரையும் மடக்கிட செய்கிறது. வைரம் பூமிக்கடியில் வெட்டி எடுப்பது முதல் நகையில் பதிப்பது வரை அதிக படியான பணி நிலைகளை கடந்து வருகிறது. ஏனெனில் வைரம் ஜொலிக்க செய்ய பட்டை தீட்டும் பணிகள் அதிக மெனக்கெடல் உடன் செய்யப்படுகிறது.

    தரமான வைரம் என்பது பலவிதமான சோதனைகளுக்குப்பின் ஆய்வு செய்து அதற்கு என சர்வதேச தர குறியீடு தரப்படுகிறது. நாம் விரும்பி அணிகின்ற பலவிதமான ஆபரணங்கள் என்பதில் வைரம் பதித்தும், தனிப்பட்ட வைர நகைகள் என்றவாறும் விலை மதிப்புமிக்க வைர நகைகள் தயார் செய்யப்படுகிறது. இதில் பதியப்படும் வைரங்கள் என்பது ஒவ்வொரு விதமான உருவ அமைப்பிலும், அதன் மதிப்பை காட்டும் காரட் அளவீடுகளை கொண்டே வகைப்படுத்தப்படுகின்றன. முந்தைய நாளில் வைரங்கள் என்பதில் போலியும், தோஷமும், அதிகமாக காணப்பட்டன. இன்றைய நாளில் தர சான்றுதலுடன் கூடிய தோஷம் நீக்கப்பட்ட வைரங்கள் கிடைக்கின்றன.

    வைர நகைகள் என்பது தங்கம், பிளாட்டினம் போன்றவற்றில் பதியப்பட்டு கிடைக்கின்றன. அதுபோல் 18 காரட் வெள்ளை தங்கம், ரோஸ் கோல்டு, 18 காரட் தங்கம் போன்ற உலோகங்களும் வைர நகைகள் செய்ய பயன்படுத்தப்படுகின்றன. வைரம் எப்படியாயினும் வடிவமைத்தாலும் அதன் அழகே அதன் சிறப்பை உயர்த்தி பிடிக்கின்றது.

    வைரத்தின் உருவ அமைப்புகள்:

    வைர நகைகளில் பதியப்பட்டுள்ள வைரத்தின் வடிவம், உருவ அமைப்பு எப்படி இருக்கின்றன என்பதை அறிந்திட வேண்டும். வைரங்கள் வட்டம், ரேடியண்ட், பிரின்ஸஸ், பியர், ஓவல், மார்குயிலி, இதயம், எமரல்டு, குஷன், கிரவுன்ஸ்டார், அஸ்சர் என்றவாறு ஒவ்வொரு விதமான உருவ அமைப்பில் வைரங்கள் பட்டை தீட்டப்ட்டு விற்பனைக்கு வருகின்றன. சர்வதேச அளவில் நிறைய வைர நிறுவனங்கள் நகை தயாரிப்பிற்கு என பிரத்யேகமான சிறிய மற்றும் பெரிய வைரக் கற்களை தயாரித்து வழங்குகின்றன.



    ஆர்வத்தை தூண்டும் வைர நெக்லஸ்கள்

    பெண்கள் வைரத்தில் செய்த நெக்லஸ்கள் மீது அதிக ஆர்வம் கொண்டுள்ளனர். அதற்கேற்ப நகை வடிவமைப்பாளர்கள் தனிக் கவனத்துடன் மேம்பட்ட வடிவமைப்பு உத்தியை பயன்படுத்தி விதவிதமான வைர நெக்லஸ்களை தயார் செய்து தருகின்றனர். தங்க செயின் அமைப்பின் நடுநடுவே வைர பூக்கள், வைர தொங்கல்கள் கொண்டவாறும், முற்றிலும் அதிகபட்ச வைரங்கள் பதியப்பட்டு அடுக்கடுக்கான வளைவுகளுடன் கூடிய நெக்லஸ்கள் வரை ஆர்வத்தை தூண்டும் விதத்தில் கிடைக்கின்றன.

    தங்க செயின் பின்னணியில் இடைவெளி விட்டு நட்சத்திர பூக்கள் உள்ளன. ஒவ்வொரு பூவிலும் ஏழு வைர கற்கள் என்றவாறு மொத்தம் ஐந்து பூக்களிலும் 35 வைரக்கற்கள் பதியப்பட்ட நெக்லஸ் அழகின் உச்சம். ஏனெனில் தங்க செயின் வளைவின் மேற்புற அமைப்பில் ஜொலிக்கும் நட்சத்திர பூக்கள் கண்கவர் தோற்ற பொலிவை தருகின்றது.

    சூரிய கதிர்கள் போன்று விரியும் நெக்லஸ்

    காலை எழுந்தவுடன் சூரியனை பார்க்கும்போது அதன் கதிர்கள் மேலெழுந்து வரும் அழகு தனிச்சிறப்பு. அந்த அரை வட்ட சூரிய ஒளிக்கதிர்கள் போன்ற அமைப்புடன் நெக்லஸ் உருவாக்கம் உள்ளது. மெல்லிய இருபக்க செயின் அமைப்பு அரை வட்ட வடிவில் மேலிருந்து கீழிறங்க நீளமான ஒளிக்கதிர்கள் போல் வைரம் பதியப்பட்டு தொங்க விடப்பட்டுள்ளன. வட்டமான சிறு வைரகற்கள், மேற்பகுதியிலும், கீழ் தொங்கும் அமைப்பில் பியர் வைரக்கற்கள் பதியப்பட்டும் கலை நயத்துடன் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஒளிக்கதிர்கள் பிரகாசத்தை வைரக்கற்கள் தத்ரூபமாக வழங்குவதால் கழுத்து பகுதி அதிகபட்ச ஒளிப்பிரகாசத்துடன் ஜொலிக்கிறது.

    பெரிய பூக்களாய் தொங்கும் வைர காதணிகள்

    சிறுசிறு வைரக்கற்கள் பதியப்பட்ட சிறுகாதணிகள் என்பதுடன் பெரிய வைரக்கற்கள் பதித்த காதணிகளும் பிரம்மாண்ட அமைப்பில் உள்ளன. பெரிய பூ விதழ்கள் கொண்ட பூ அமைப்பு வண்ண கற்கள் இணைப்புடன் ஜொலிக்கும் பூக்களாய் காட்சித் தருகின்றது. இதன் பிற வடிவங்களாய் மெல்லிய கம்பி இணைப்பு, ஜல்லடை அமைப்பு, கணித அமைப்பு போன்றவைகளும் பெரிய காதணிகளாய் உலா வருகின்றன. நவீன கால பெண்களின் ரசனையை பூர்த்தி செய்யும் வடிவில் காட்சியளிக்கின்றன.
    உடற்பயிற்சிகளை போல் யோகாசனத்திற்கு நேரமோ, செலவோ செய்ய வேண்டியதில்லை. அதன் மூலம் மன நலமும், உடல் நலமும், பொருளாதார நிலையும் மேம்படும்.
    ‘‘பெண்களில் பெரும்பாலானோர் முதுகுவலி பிரச்சினையால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். முன்பெல்லாம் வயதானவர்கள், குழந்தை பெற்ற பெண்கள்தான் முதுகுவலி பாதிப்புக்கு ஆளானார்கள். இப்போது வயது வித்தியாசமின்றி அனைத்து தரப்பினரையும் முதுகுவலி அவதிப்பட வைத்துக்கொண்டிருக்கிறது. அதற்கு காரணம் உடலுழைப்பு குறைந்துபோனதுதான். முன்பு பார்த்த வேலைகளிலெல்லாம் உடற்பயிற்சியும் சேர்ந்தே இருந்தது. இப்போது எல்லா வேலைக்கும் இயந்திரத்தை சார்ந்திருக்கிறோம். துணி துவைப்பது, மசாலா அரைப்பது என வீட்டுவேலைகளையெல்லாம் இயந்திரங்களிடம் கொடுத்துவிட்டு உடலுழைப்பை இழந்து சோம்பேறியாகிவிட்டோம். வீட்டிலும், அலுவலகத்திலும் நிறைய பேர் நேராக உட்காருவதில்லை. வளைந்து, குனிந்து இஷ்டம்போல் அமர்கிறார்கள். அந்த பழக்கம் முதுகுதண்டுவடத்தை பலவீனமாக்கிவிடுகிறது’.

    சர்ப்பாசனம், மகராசனம், சலபாசனம், யான் ஆசனம், புஜங்காசனம், ஜெய்ஸ்டிகாசனம், அடவாசனம் ஆகிய 7 ஆசனங்களை செய்துவந்தால் போதும். முதுகுவலி பிரச்சினையில் இருந்து விடுபட்டுவிடலாம். இவை எளிமையான ஆசனங்கள்தான். ஒருவர் வயதான காலத்திலும் ஆரோக்கியமாக இருப்பதற்கு அவருடைய முதுகுத் தண்டுவடம் வலிமையாக இருப்பதுதான் காரணம். யோகாசனம் மூலம் முதுகுத்தண்டுவடத்தை வலுப்படுத்தலாம்.

    யோகாசனம் கற்றுக்கொள்பவர்களிடம் மனத்தெளிவு இருக்கும். சிந்திக்கும் ஆற்றல் மேம்படும். மனதை கட்டுப்படுத்தும் பக்குவம் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரேனும் பிரச்சினை செய்தால் எதிர்த்து வாதாடாமல் பக்குவமாக அவர்களை அணுகும் சுபாவத்தை யோகாசனம் கற்றுக்கொடுக்கும். பிரச்சினையை எப்படி சுமுகமாக தீர்ப்பது என்ற சிந்தனையை மேலோங்கச் செய்யும். குடும்பத்தில் உள்ள அனைவரும் யோகாசனம் கற்றுக்கொண்டால் அவர்களுக்குள் எந்த சச்சரவும் எழாது.

    ‘‘நாம் சத்தான உணவுகளை சாப்பிட்டாலும் ஜீரணம் சரியாக நடந்தால்தான் அந்த சத்துக்கள் நமது உடலில் சேரும். செரிமானம் சீராக நடைபெறுவதற்கு மூச்சு பயிற்சி உதவும். நாடிசோதனம் எனும் மூச்சு பயிற்சியை செய்து வந்தால் நுரையீரலில் சேரும் மாசுகளும் நீங்கும். ரத்தமும் சுத்திகரிக்கப்படும். நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். நடு விரலை நெற்றியில் வைத்துக் கொண்டு கட்டை விரலால் மூக்கின் ஒரு பகுதியை அழுத்திப் பிடித்துக் கொண்டு மூச்சை உள்ளிழுத்து வெளியிட வேண்டும். அதேபோல் மற்றொரு மூக்கின் பகுதியையும் விரலால் அழுத்தி பிடித்துக்கொண்டு மூச்சை இழுத்து சுவாசிக்க வேண்டும். எவ்வளவு வேகமாக மூச்சை உள்ளே இழுக்கிறோமோ அதிலிருந்து இரண்டு மடங்கு மெதுவாக மூச்சை வெளியேற்ற வேண்டும். தினமும் ஆறு ஏழுமுறை முறை இவ்வாறு செய்து வந்தால் ஜீரணம் சரியாக நடக்கும்.

    தேவையற்ற கொழுப்புகள் வெளியேறாமல் உடலில் அப்படியே தங்கிவிடுவதால் உடல் குண்டாகும். உடல் குண்டானால் ஜீரண பிரச்சினையும் தோன்றும். மூச்சு பயிற்சி மேற்கொள்ளும்போது ஜீரணம் தடையின்றி நடந்து தேவையற்ற கழிவுகள் உடலில் இருந்து வெளியேற்றப்பட்டு விடும். பிறந்த குழந்தை சரியாக மூச்சை உள்ளே இழுத்து வெளியே விட்டுக்கொண்டிருக்கும். அதுதான் சரியான மூச்சுபயிற்சி முறை. நாம் வளர்ந்து ஆளானதும் சுவாசிக்கும் முறையில் தவறு செய்து விடுகிறோம். சுவாசம் சரியான முறையில் நடந்தாலே உடல் உபாதைகள் ஏற்படாது’’. இன்றைய தலைமுறையினர் கட்டாயம் யோகாசனம் கற்றுக்கொள்ள வேண்டும்.

    உடற்பயிற்சிகளை போல் யோகாசனத்திற்கு நேரமோ, செலவோ செய்ய வேண்டியதில்லை. ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்வதாக இருந்தால் அங்கு செல்வதற்கு தயாராகுவதற்கு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கவேண்டியிருக்கும். திரும்பி வரு வதற்கும் அதேபோல் நேரம் செலவழிக்க வேண்டியிருக்கும். ஆனால் யோகாசனத்தை இருந்த இடத்தில் இருந்தே செய்துவிடலாம். அதன் மூலம் மன நலமும், உடல் நலமும், பொருளாதார நிலையும் மேம்படும். உறவுச்சிக்கல்களும் நீங்கும்.
    தீபாவளிக்கு இனிப்பு, காரம் மிகவும் ஸ்பெஷல். இந்த தீபாவளிக்கு எளிய முறையில் வீட்டிலேயே பாசிப்பருப்பு லட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாசிப் பருப்பு -1 கப்
    பொடித்த சர்க்கரை - 1 கப்
    நெய் - 100 கிராம்
    ஏலக்காய் - 4
    முந்திரி பருப்பு -10



    செய்முறை :

    வாணலியில் பாசிப்பருப்பை போட்டு வறுத்து மிக்சியில் மாவாக்கிக்கொள்ளவும். அதனை சலித்துக் கொள்ளவும்.

    ஏலக்காய் மற்றும் முந்திரி பருப்பை நெய்யில் வறுத்து மிக்சியில் பொடித்துக் கொள்ளவும்.

    பின்னர் அவற்றை பாசிப் பருப்பு மாவுடன் சேர்த்து கிளறிக்கொள்ளவும்.

    பின்னர் அதனுடன் பொடித்த சர்க்கரையை சேர்த்து கிளறிக்கொள்ளவும்.

    வாணலியில் நெய்யை ஊற்றி அதனை உருக்கி மாவு மீது ஊற்றி சூடு பொறுக்கும் அளவுக்கு இருக்கும் போதே லட்டுகளாக பிடிக்கவும்.

    ருசியான பாசிப்பருப்பு லட்டு தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தீபாவளிக்கு இனிப்பு, காரம் மிகவும் ஸ்பெஷல். இந்த தீபாவளிக்கு தேன்குழல் முறுக்கை எளிய முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சரிசி - அரை கிலோ
    தோல் நீக்கிய முழு உளுந்து - 150 கிராம்
    சீரகம் - ஒரு டீஸ்பூன்
    பெருங்காயத்தூள் - சிறிதளவு
    உப்பு - தேவைக்கு
    எண்ணெய் - தேவைக்கு



    செய்முறை :

    பச்சரிசியை தண்ணீரில் அலசி கழுவிவிட்டு நிழலில் உலர்த்திக்கொள்ளவும்.

    உளுந்தை பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.

    பின்னர் இரண்டையும் மாவாக இடித்து சலித்துக்கொள்ளவும்.

    பின்னர் மாவுடன் பெருங்காயத்தூள், சீரகம், உப்பு ஆகியவற்றை சேர்த்து கிளறிக்கொள்ளவும்.

    அதனுடன் சிறிதளவு சூடான எண்ணெயும், தண்ணீரும் சேர்த்து பிசைந்து அச்சில் போட்டு கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை கொதிக்கும் எண்ணெயில் பிழிந்து எடுக்கவும்.

    சூப்பரான தேன்குழல் முறுக்கு ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இப்போது பல வீடுகளில் குழந்தைகள் எந்த நேரமும் செல்போன்களில் மூழ்கிக்கிடப்பதையே காணமுடிகிறது. செல்போனை வெகுநேரம் பார்ப்பதால் சிறுவயதிலேயே கண்பார்வை பாதிக்கும் வாய்ப்பு அதிகமாகிறது.
    இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட் செல்போன்கள் எல்லோரின் ‘செல்லப்பிள்ளைகள்’ போல் மாறிவிட்டன. இணைய தகவல்களை அள்ளிக் கொண்டு வருவது முதல், செல்பி, போட்டோக்கள், வீடியோக்கள், விளையாட்டுகள் என அத்தனை வாய்ப்புகளையும் ஸ்மார்ட்போன்கள் வாரி வழங்குகின்றன.

    இதனால் ஸ்மார்ட் போன் வைத்திருப்போரின் சுட்டுவிரலுக்கும் வேலைப்பளு அதிகமாகிவிட்டது. வாட்ஸ்-அப், முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் நொடிக்கு நொடி, நிமிடத்துக்கு நிமிடம் என்று ஸ்மார்ட் போன்களில் வரும் தகவல்கள், செய்திகள், அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்-நடிகையர் பற்றிய விமர்சன மீம்ஸ்களை பார்க்கும் ஆர்வம் மக்களிடையே ஆக்கிரமித்து இருப்பதே அதற்கு காரணம்.

    செல்போன் நிறுவனங்களின் வியாபார போட்டிகள், உற்பத்தி அதிகரிப்பு, விலை மலிவு போன்றவற்றின் காரணமாக அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் போன்கள் வலம் வருகின்றன. இப்படி வீடுகள்தோறும் ஆதிக்கம் செலுத்தி வரும் ஸ்மார்ட் போன்களால் எந்த அளவுக்கு நல்ல விஷயங்கள் இருக்கிறதோ, அதற்கு நேர்மாறாக பிரச்சினைகளும் கூடவே உள்ளன. குறிப்பாக குழந்தைச் செல்வங்கள், பள்ளிகளுக்கு செல்லும் சிறுவர், சிறுமியர் செல்போன்களில் உள்ள விளையாட்டுகளுக்கு அடிமையாகிப் போகிறார்கள்.

    பெற்றோரின் கைகளில் செல்போனை பார்த்துவிட்டால் போதும். வெடுக்கென பிடுங்கிக் கொண்டு ஓடுவது, பெற்றோருக்கு தெரியாமல் செல்போனை எடுத்துக் கொண்டு தனியிடத்துக்கு சென்று விளையாட்டுகளை பார்ப்பது என்று சிறுவயதினரின் சேட்டைகள் சகஜமாகிவிட்டது. அவ்வாறு தூக்கிக்கொண்டு ஓடும் குழந்தைகளின் கைகளில் இருந்து செல்போன்கள் கீழே விழுந்தும், சில குழந்தைகள் கோபத்தில் செல்போனை தூக்கி எறிந்தும் பெற்றோருக்கு செலவு வைத்துவிடுவதும் உண்டு. தங்களது குழந்தைகளுக்கு விளையாடுவதற்கு செல்போனை கொடுத்துவிட்டு அதைப்பார்த்து மகிழும் சில பெற்றோரும் உண்டு. ஆனால் அதுவே, பிள்ளைகளை ஆக்கிரமித்துக் கொள்ளும் என்பதை ஏனோ அவர்கள் உணருவதில்லை.

    முன்பெல்லாம் சிறுகுழந்தைகள் வீட்டு முற்றங்களில் நன்றாக ஓடி விளையாடுவது உண்டு. உடல் தசைகள் இறுக்கம் கொள்ளவும், அவர்களை திடகாத்திரமானவர்களாக அது மாற்றவும் உதவியது. அதனால்தான் முண்டாசுக் கவிஞன் பாரதி, ‘ஓடி விளையாடு பாப்பா...நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா’ என்று மழலைகளுக்கு விளையாட்டு ஆர்வத்தை ஏற்படுத்தினார். ஆனால் இன்றைய நிலை ‘செல்லுக்குள் முடங்காதே பாப்பா...நீ செயலிழந்துபோவாய் பாப்பா’ என்று பாடவேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது.



    இப்போது பல வீடுகளில் குழந்தைகள் எந்த நேரமும் செல்போன்களில் மூழ்கிக்கிடப்பதையே காணமுடிகிறது. நகரங்களில் மட்டுமல்ல...கிராமங்களிலும்கூட இந்த நிலை வந்துகொண்டிருக்கிறது. கிராமங்களுக்கே உரித்தான ஓடிப்பிடிக்கும் விளையாட்டு, பம்பரம் சுற்றுதல், கண்ணாமூச்சி ஆட்டம், கில்லி, எறிபந்து, நொண்டியடித்தல், போலீஸ்-திருடன் விளையாட்டு, கோலிக்குண்டு போன்ற விளையாட்டுகள்கூட இந்தக்கால குழந்தைகளுக்கு எட்டாக்கனியாகிவிட்டது.

    இதனால் மழலைகளின் உடல் போதிய வலுப்பெறுவதில்லை. சுறுசுறுப்பு குறைந்து, இயல்பான செயல்பாடுகளில் மந்த நிலை ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது என்கின்றனர் குழந்தைகள் நல மருத்துவர்கள். மேலும் செல்போனின் கதிர்வீச்சு குழந்தைகளை எளிதாக தாக்கும். செல்போனை வெகுநேரம் பார்ப்பதால் சிறுவயதிலேயே கண்பார்வை பாதிக்கும் வாய்ப்பு அதிகமாகிறது. போதிய சுய சிந்தனை, கற்பனைத்திறனை பெறும் சக்தி அவர்களுக்கு குறைவதற்கு வாய்ப்பு ஏற்படும் என்கிறார்கள், அவர்கள்.

    அதுமட்டுமின்றி, இப்போதெல்லாம் கடும் போட்டி காரணமாக உற்பத்தி செய்யப்படும் செல்போன்களில் தரமில்லாத பல போன்கள் அவ்வப்போது வெடித்துச் சிதறவும் செய்கிறது. இதனால் உடல்சேதம் மட்டுமல்லாமல் சில சமயங்களில் உயிர்ச்சேதமும் ஏற்பட்டுவிடுகிறது. அதற்கு, குழந்தைகளிடம் செல்போன்களை தராமல் இருப்பதே அவர்களது நல்வாழ்வுக்கு நலம் என்பது மருத்துவர்களின் அறிவுரை.

    இதேபோல் குழந்தைப் பருவத்தை தாண்டி பள்ளி பருவத்தினரும், செல்போன்களை பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டிவருவதும் அதிகரித்து வருகிறது. படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டியவர்கள் செல்போனில் படம் பார்ப்பதிலும், விளையாடுவதிலுமாக இருக்கிறார்கள். இது அவர்களது நல்ல எதிர்காலத்துக்கு அவர்களே ஏற்படுத்திக் கொள்ளும் முட்டுக்கட்டையாக வாய்ப்பு உள்ளது.

    இதற்கு பெற்றோர் செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான். குழந்தைகளின் படிப்பு, எதிர்காலத்தை கருதி அவர்கள் கல்வியில் வெற்றிமகுடம் சூட்டும்வரை செல்போன்களை வாங்கிக் கொடுப்பதை தவிர்ப்பதோடு, தங்களது செல்போன்களையும் அவர்கள் பயன்படுத்தாதவாறு கண்காணிக்கலாம். ஆரோக்கியமானவர்களாக தங்களது மழலைச் செல்வங்கள் உருவாக அவர்களை நான்கு சுவற்றுக்குள் அடைத்துவிடாமல், உடலுக்கு உற்சாகத்தை தரக்கூடிய விளையாட்டுகளை விளையாட அனுமதிக்க வேண்டும்.

    அதோடு பிள்ளைகளுக்கு கற்பனைத்திறன் ஊற்றெடுக்கும் வகையில் நூல்களை படிக்க வைத்தல், கதை, கட்டுரைகளை எழுத பயிற்சி அளித்தல், தனித்திறன்களை வெளிப்படுத்த உறுதுணையாக இருத்தல், பொது அறிவை புகுத்த நூலகங்களுக்கு அனுப்பி வைத்தல், வாழ்வில் ஒழுக்கநெறி கொண்டவர்களாக உருவாக நீதிக்கதைகள், நன்னெறிக்கதைகளை கற்றுவித்தல் ஆகியவற்றில் பெற்றோர்கள் ஈடுபாடு கொள்ள வேண்டும். எதிர்கால இந்தியாவுக்கு தேவை வெறும் அறிவார்ந்தவர்கள் மட்டுமல்ல... ஆரோக்கியம், நாகரிகம், பண்பாடு ஆகியவற்றை கட்டிக்காக்கும் இளைய சமுதாயமே. மொத்தத்தில் ஓடிவிளையாட வேண்டிய வயதில் சின்னஞ்சிறுசுகள் நான்கு சுவற்றுக்குள் முடங்கும் சூழல் முடிவுக்கு வந்தால் நலம்.

    -முக்கூடற்பாசன். 
    நாள்தோறும் புதிய வியாதிகளும், பலப்பல புதிய மருந்துகளும் கண்டுபிடிக்கப்படுகின்றன. ஆனால் ‘பிசியோதெரபி’ மருத்துவத்தின் பங்கு மருத்துவத் துறையில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
    ‘இயன்முறை மருத்துவம்’ என்பது மருந்துகள் இன்றி இயற்கையாக உடற்பயிற்சியின் மூலம் உடலை பக்குவப்படுத்தும் மருத்துவ முறையாகும். இது உடல் இயக்கத்தை முறைப்படுத்தும் மருத்துவத் துறையாகும்.

    ஒருவர் காயம் அல்லது நோயால் பாதிக்கப்படும்போது உடலில் உள்ள உறுப்புகள் செயலிழக்கும். அப்போது இயன்முறை மருத்துவம் தான் உடற்பயிற்சி மூலம் உடலை இயக்க நிலைக்கு கொண்டு வந்து அனைத்து உறுப்புகளும் சீராக இயங்க துணை செய்கிறது.

    பெரும்பாலானோர் மூட்டுவலி, கழுத்துவலி, முதுகு வலி, ஆஸ்துமா போன்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றில் 75 சதவீதம் பேர் இயன்முறை மருத்துவத்தால் குணமடைந்துள்ளனர் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

    பிறக்கும் போதே சில குழந்தைகள் ஊனமாக பிறக்கின்றனர். மற்றும் கை, கால் மடிந்து அல்லது பிறந்த பிறகு கீழே விழுந்து பாதிப்படைகிறது. அப்போது அதனை மருந்தால் சரிசெய்ய இயலாது. இயன்முறை மருத்துவம் செய்யப்பட்டு அது சரி செய்யப்படுகிறது.

    விபத்தால் சிலர் கை, கால் மற்றும் எலும்பு முறிவுகளை அடைகின்றனர். அதனை மீண்டும் பழைய நிலைக்கு இயங்க வைக்க ‘பிசியோதெரபி’ முறை பயன்படுத்துகின்றனர்.

    மருந்துகள் இன்றி மருத்துவம் பயன்படுத்தும் ஒரே மருத்துவம் ‘இயன்முறை மருத்துவம்’ மட்டுமே.

    உடல் பருமனை உடற்பயிற்சி மூலமே சுலபமாக குறைக்க முடியும். அன்றாட செய்யும் உடற்பயிற்சியால் உடல் எடை மற்றும் மூட்டுவலி இருதய பிரச்சினை அனைத்தும் சரி செய்ய இயன்முறை மருத்துவம் பெரிதும் உதவுகிறது.

    நாள்தோறும் புதிய வியாதிகளும், பலப்பல புதிய மருந்துகளும் கண்டுபிடிக்கப்படுகின்றன. ஆனால் ‘பிசியோதெரபி’ மருத்துவத்தின் பங்கு மருத்துவத் துறையில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
    இரத்த தானம் செய்தால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படாது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. எந்தபாதிப்பும் இல்லாதபட்சத்தில் தாராளமாக ரத்ததானம் செய்து வரலாம்.
    ‘இரத்த தானம் செய்தால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படாது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து சீரான இடைவெளியில் ரத்த தானம் செய்து வந்தால் புற்றுநோய் பாதிப்பில் இருந்தும் விடுபடலாம், ஆக்ஸிஜனேற்ற அளவை அதிகரிக்கலாம் என்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ரத்த தானம், ஆயுளையும் அதிகரிக்க செய்யும். தொடர்ந்து ரத்த தானம் செய்வதன் மூலம் உடல் உள்ளுறுப்புகள் ஆரோக்கியமாக செயல்பட்டு வாழ்நாளை நீட்டிக்க செய்யும். நோய் எதிர்ப்பு மண்டல அமைப்பையும் வலுப்படுத்தும்.

    இரத்த தானம் செய்வதன் மூலம் ரத்த சிவப்பு அணுக்கள் புதிதாக உற்பத்தியாகும். அப்படி ரத்த சிவப்பணுக்கள் மறுசுழற்சி செய்யப்படுவதன் மூலம் உடல் புத்துணர்ச்சி பெறும். உடலில்இருந்து கார்பன் டை ஆக்ஸைடை நீக்கவும் உதவும். ஒருமுறை ரத்த தானம் செய்யும்போது உடலில் இருந்து 650 கலோரி செலவாகும். அதன் மூலம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு குறைய வாய்ப்பிருக்கிறது.

    அதே வேளையில் ரத்ததானம் செய்வதற்கு ஏதுவான உடல் அமைப்பை பெற்றிருந்தால் மட்டுமே அதை செய்ய வேண்டும். ரத்ததானம் செய்வதற்கு முன்பு நாடி துடிப்பு, ரத்த அழுத்தம், உடல் வெப்பநிலை, ஹுமோகுளோபின் அளவு போன்ற பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும். அதேபோல் ஹெபடைடிஸ் பி, ஹெபடைடிஸ் சி, எச்.ஐ.வி. பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். எந்தபாதிப்பும் இல்லாதபட்சத்தில் தாராளமாக ரத்ததானம் செய்து வரலாம். 
    சூடான சாதத்தில் மாசி கருவாட்டு தொக்கு போட்டு சாப்பிட்டால் அருமையாக இருக்கும். இன்று இந்த தொக்கு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    மாசி - 1 துண்டு (25 கிராம்)
    பெரிய  வெங்காயம் - 100 கிராம்
    பழுத்த தக்காளி - 100 கிராம்
    பச்சை மிளகாய் - 1
    மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
    மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
    எண்ணெய் - ஒரு குழிகரண்டி
    கடுகு, உளுந்து - தலா அரைடீஸ்பூன்
    கொத்தமல்லி கறிவேப்பிலை - சிறிது
    உப்பு - தேவைக்கு



    செய்முறை :

    மாசி கருவாட்டு துண்டை அம்மியில் வைத்து பொடித்து கொள்ளவும்.

    வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக்கொள்ளவும்.

    தக்காளியையும் பச்சைமிளகாயும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்து சேர்த்து தாளித்த பின்னர் கறிவேப்பிலை, பச்சைமிளகாய் சேர்த்து நன்கு பொரிந்து வந்ததும் வெங்காயம் சோத்து வதக்கவும்.

    வெங்காயம் கண்ணாடி போல் வந்ததும் மிளகாய் மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும்.

    பின்னர் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.

    தக்காளி வெந்ததும் மாசித்தூள் மற்றும் அரை டம்ளர் அளவுக்கு நீர் சேர்த்து பிரட்டவும். உப்பு சரி பார்த்துக்கொண்டு ஒரு சேர தொக்குபக்குவம் வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கவும்.

    சூப்பரான மாசி தொக்கு ரெடி.

    சாத வகைகளுடன் சாப்பிட அருமையான சைட்டிஷ் இது.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பஸ்த்ரிகா பிராணாயாமம் சுவாச, காசநோய், மார்ச்சளி நோய் போன்ற நுரையீரல் நோய்களுக்கு மிகவும் பயனுள்ளது. நுரையீரலில் இருந்து முழுமையாக கழிவுகள் அகற்றப்பட்டு சுத்தமாகும்.
    பெயர் விளக்கம் : பஸ்த்ரிகா என்றால் துருத்தி என்று பொருள். இப்பிராணாயாமத்தில் துருத்தி போன்று வேகமாக தொடர்ந்து மூச்சை இழுத்து வெளிவிடுவதால் இப்பெயர் அமைந்துள்ளது.

    செய்முறை : அனுகூலமான தியான, ஆசனத்தில் உட்காரவும். (குறிப்பாக பத்மாசனம் செய்வது சிறந்தது) இரு கைகளையும் நீட்டி, முழங்கால்களின் மேல் கை விரல்களால் சின் முத்திரை செய்யவும். கண்களை மூடவும். உடல் முழுவதும் தளர்வாக இருக்கட்டும். இரு நாசிகளின் வழியாக மூச்சுக்காற்றை வேகமாகவும், பலமாகவும் 10 முறை தொடர்ந்து உள்ளுக்கு இழுத்து வெளியே விடவும். மூச்சை இழுக்கும் போது வயிறு மேல் நோக்கியும், வெளியே விடும்போது கீழ் நோக்கியும் இறங்கட்டும்.

    10 முறை தொடர்ந்து மூச்சின் இயக்கத்தை வேகமாக நடத்திய பிறகு, ஒருமுறை மூச்சை ஆழமாக இழுத்து நிதானமாக வெளியே விடவும். இது ஒரு சுற்று பயிற்சியாகும். ஆரம்பத்தில் 2 சுற்று பயிற்சி செய்து, பழகப் பழக சுற்றுகளை அதிகரித்து 5 சுற்று வரை செய்யலாம்.

    கவனம் செலுத்த வேண்டிய இடம் : வயிற்று தசைகளின் அசைவின்மீதும், மணிப்பூர சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.

    பயிற்சிக் குறிப்பு: ஆரம்பப் பயிற்சியில் மூச்சின் இயக்கம் மெதுவாகவும், சமமாகவும் இருக்கட்டும். பிறகு ஓரளவுக்கு வேகமாக மூச்சின் இயக்கத்தை நடத்தவும். நன்கு பழகிய பிறகு மிக வேகமாகவும், பலமாகவும் மூச்சின் இயக்கத்தை நடத்தப் பழகவும்.

    தடைக்குறிப்பு : உயர் ரத்த அழுத்தம், தலை சுற்றல், குடலிறக்கம், பக்கவாதம், நுரையீரல் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் யோக நிபுணரின் அறிவுரைப்படி செய்வது நல்லது. பயிற்சியின்போது தலை சுற்றுவது போலானால் உடனே பயிற்சியை நிறுத்தி விடவும்.

    பயன்கள் :
    உடல், மன ஆரோக்கியத்திற்கும் மன ஒரு நிலைப்பாட்டிற்கும் சிறந்தது. சுவாச, காசநோய், மார்ச்சளி நோய் போன்ற நுரையீரல் நோய்களுக்கு மிகவும் பயனுள்ளது. தொண்டைக் கம்மல், வீக்கம் நீங்கும். மூக்கில் சேர்ந்திருக்கும் சளியையும், நுரையீரலில் சேர்ந்திருக்கும் கோழையையும் விரைவில் அகற்றி விடும். இப்பயிற்சியினால் உடல் வெப்பம் அதிகரிப்பதால் அடிக்கடி குளிர்ச்சியினால் ஏற்படும் தும்மல் சளியை விரைவில் குணப்படுத்துகிறது. நுரையீரலில் இருந்து முழுமையாக கழிவுகள் அகற்றப்பட்டு சுத்தமாகும்.
    ×