என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    தீபாவளிக்கு பெண்களுக்கு புதிய அபையா ஸ்டைல் சுடிதார் காமீஸ் என்பது வந்துள்ளது. இது பார்க்க அனார்கலி போன்றே இருந்தாலும் அதிலிருந்து மாறுபட்டது என்பதை அணிபவர் மட்டுமே அறியமுடியும்.
    தீபாவளி என்றாலே பெண்களுக்கு என பிரத்யேக ஆடைகள் வெவ்வேறு வேலைப்பாட்டுடன் அறிமுகப்படுத்தப்படும். இந்த தீபாவளிக்கு இந்த டிரஸ் தான் பெண்களின் ஆர்வத்தை தூண்டும் என ஆடைகளை உருவாக்கவே தனிப்பட்ட வடிவமைப்பாளர்கள் கூடுதல் மெனக்கெட்டு வடிவமைக்கின்றனர். அதன் காரணமாக புதிய ஆடைகள் வெளிவரும்போதே அதற்குரிய சிறப்பிடத்தை பிடித்து விடுகின்றன. அந்த வகையில் தீபாவளி பண்டிகைக்கு புதிய அபையா ஸ்டைல் சுடிதார் காமீஸ் என்பது வந்துள்ளது. இது பார்க்க அனார்கலி போன்றே இருந்தாலும் அதிலிருந்து மாறுபட்டது என்பதை அணிபவர் மட்டுமே அறியமுடியும்.

    அபையா ஸ்டைல் சுடிதார் காமீஸ் என்பது முழு நீள உடையாகும். இஸ்லாமிய பெண்கள் அணிகின்ற அபையா என்ற ஆடையை அடிப்படையாக கொண்டு அழகிய வடிவமைப்பு மேம்பாடுகள் செய்யப்பட்டு இந்த சல்வார் காமீஸ் தயாரிக்கப்பட்டுள்ளது. அபையா ஆடை என்பது அணிபவரின் முழு உடல் பகுதியை மூடும் அமைப்பில் கை மற்றும் கால்பகுதி மட்டும் தெரியும் வகையில் உள்ள ஆடை. அதிக வெட்டுதல்கள் இன்றி முழு துணி அமைப்பை தான் மாறுபட்ட வகையில் அதிக வேலைப்பாட்டுடன் கூடிய நவநாகரீக ஆடையாக மாற்றியுள்ளனர்.

    தரையில் புரளும் ஆடையின் அமைப்பு இந்திய பெண்கள் அணியும் வகையிலான வடிவில் அதிக வேலைப்பாடு மற்றும் திறன்மிகு கலையம்ச மேம்பாட்டுடன் உருவாகி உள்ளது. பார்த்தவுடன் விரும்பும் வகையில் அபையா ஆடைகள் வண்ண பொலிவும், துணிகளின் நேர்த்தியும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் அணிய ஏற்ற வகையில் உள்ளன.

    அபையா ஸ்டைல் சுடிதாரின் சிறப்புகள்:


    அபையா ஸ்டைல் சுடிதார் என்பது பல்வேறு விதமான துணிரகங்களில் உருவாக்கப்படுகிறது. இதற்கென பாக்ஸ் ஜாக்கெட் மற்றும் நெட் துணிரகங்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இந்த ஆடைகள் அனைத்தும் பல பிரிவுகள் உள்ளவாறு அதாவது திருமணம், பார்ட்டி, விழா, பண்டிகை என்பதுடன் முக்கியமான மீட்டிங் போன்றவைகளுக்கு அணிய ஏற்றவாறு தனிப்பட்ட வகையில் உருவாக்கப்படுகிறது.

    சாதாரணமாகவே அபையா ஸ்டைல் சுடிதார் காமீஸ் என்பது அதிகபட்ச வேலைப்பாட்டுடன்தான் உருவாக்கப்படுகிறது. இதன் மேம்பட்ட ஓவிய வேலைப்பாடு என்பது பார்டர், ஸ்லீவ் மற்றும் கழுத்து பகுதிகள் அனைத்திலும் அதிக சிறப்பு தன்மையுடன் நெய்யப்பட்டுள்ளது. அதாவது பாரம்பரிய எம்ப்ராய்டரி கைவினைகளைஞர்கள் கொண்டு பூ வேலைப்பாடு, கட்தானா பணி, ஜரிகை வேலைப்பாடு, கோட்டாபட்டி, தோனி எம்ப்ராய்டரி, காஷிபா, ரேஷம் எம்ப்ராய்டரி மற்றும் கல் பதியப்பட்டது என அதி உண்மையான கலையம்ச பணிகள் தனிநேர்த்தியுடன் செய்யப்படுகின்றது.

    ஆச்சர்யமூட்டும் சில வடிவமைப்புகள்

    அனார்கலியோடு ஒப்பிட்டு குழம்ப கூடாது என்பதற்கு இதில் மாறுபட்ட வடிவமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதாவது இதன் முழு கை அமைப்பு என்பது ஒரு சில மாடல்களில் மட்டுமே இருக்கும். மற்றதில் பிற வகை கை அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அதுபோல் கழுத்து பகுதி பல வித மாடல்களில் திறம்பட வளைவுகளுடன் தைக்கப்பட்டுள்ளது. எடை குறைந்த வகையில் உள்பகுதி லேயர்கள் மெல்லிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

    எம்ப்ராய்டரி ஜாக்கெட் அபையா சூட்ஸ்

    ஒற்றை வண்ண பின்னணியில் தங்க நிற கம்பிகள் பின்னப்பட்ட எம்ப்ராய்டரி வேலைப்பாட்டுடன் ஜாக்கெட் அபையா ஸ்டைல் சூட்ஸ் வருகின்றன. முழு உடையில் மார்பு பகுதி, கைப்பகுதி மற்றும் ஆடையின் கீழ்பகுதியில் அடுத்தடுத்தான எம்ப்ராய்டரி அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. நேவி ப்ளு, மெரூன், பிங்க், சிவப்பு போன்ற பிரகாசமான வண்ணங்களில் இந்த எம்ப்ராய்டரி ஜொலிக்கின்றது. ஆடையின் மார்பு பகுதி ஜொலிக்கும் கவசம் போன்ற அமைப்புடன் பின்னல் செய்யப்பட்டும் அதன் கீழ் பகுதி மலர்கள் உள்ளவாறும் நெய்யப்படுகிறது. கொடிகள், இலைகள் உள்ளவாறும், ஆடையின் கீழ்பகுதி டிரில் அமைப்பில் அடுத்தடுத்தான தோரண அமைப்பு உள்ளவாறு கூடுதல் தரத்துடன் எம்ப்ராய்டரி அமைப்பு செய்யப்பட்டுள்ளது.

    நெட் துணியில் அபையா சூட்ஸ்

    பாலி ஷன்டூன் லைனிங் அமைப்பு என்பது நூல் மற்றும் ஜரிகையில் நெய்யப்பட்டவாறு மேல் கோட் அமைப்புடன் உள்ளது. இதில் மேற்படி அழகை கூடுதல் மேம்படுத்தும் வகையில் நெட் துணியில் துப்பட்டா மற்றும் மேல்சட்டை அமைப்பு கொண்டவாறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. சைனீஸ் காலர் அமைப்புடன் மெல்லிய துணியின் மேற்பகுதி, உட்புறபகுதி பாலி ஷன்டூன் துணி அமைப்பு மெல்லிய எடை குறைந்த ஆடைக்கு உத்தரவாதம் தருகிறது. ராயல் கவுன் அமைப்பில் கம்பீர நடையுடன் பவனி வரச்செய்யும் இந்த அபையா ஸ்டைல் ஆடைகள் புதிய திரைப்படங்களில் கதாநாயகிகளின் முக்கிய ஆடையாக உலா வருகிறது. கூடிய விரைவில் அழகிய பெண்களின் அட்டகாசமான ஆடையாக வீதிகளில் அணிந்து செல்லும்போது கண்டு வியந்திடவே செய்வர். 
    ஹார்மோன் சூழ்நிலை மாறுவதால் கருப்பை கட்டிகள் போன்ற பாதிப்புகள் வரும் வாய்ப்பு அதிகமாகிறது. ஆயுர்வேதத்தில் இதற்கான தீர்வை அறிந்து கொள்ளலாம்.


    மகளிர் தம்மைக் கவனித்துக் கொள்ளாமல், நேரம் தவறி உணவு எடுத்துக் கொள்வதால், பாதிப்புகள் அதிகம் வருகின்றன. உணவைச் செரிக்கும் ஹார்மோன் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும்தான் அதன் வேலையைச் செய்யும். உணவைக் குறிப்பிட்ட பொருளாக (குளுக்கோஸ்) மாற்றி திசுக்களுக்கு அனுப்பும். நேரந்தவறும் போது உணவு உடைந்து மாறும் பொருள் வேறு வடிவமைப்பில் வேறு பொருளாக மாறுகிறது.

    அதனை திசுக்கள் ஏற்காது. அவை கழிவாக திரும்ப ரத்தத்தில் எடுத்துச்செல்லப்படும். இந்த நிகழ்வு தான் நடக்குமே தவிர திசுக்களுக்குத் தேவையான சக்தி கிடைக்காது. அதனால் உடல் சோர்வு அடையும், போஷாக்கு குறைபாடு நேரும். நோய் வரும். ஹார்மோன் சூழ்நிலை மாறுவதால் கருப்பை கட்டிகள் போன்ற பாதிப்புகள் வரும் வாய்ப்பு அதிகமாகிறது.

    மூளையின் முக்கிய அங்கம் ஹைப்போதாலமஸ் என்பது, அங்கு உருவாகும் ஹார்மோன்கள் உடலின் எல்லா ஹார்மோன்களையும் கட்டுப்படுத்தும். ஹைப்மோதாலமஸ் ஹார்மோன் எதிர்மறை எண்ணங்களில் பாதிக்கப்பட்டால் பிட்யூட்ரி சுரப்பு பாதிக்கப்படும். அதனால் கருப்பை ஹார்மோன்கள் பாதிக்கப்படும். அதனால் சீக்கிரம் மெனோபாஸ் வரலாம். கருப்பைக்குள்ளேயே கருக்கள் தங்கிவிடும் நிலை ஏற்படும். கரு உருவாகும் கருமுட்டை விரையில் அதிகம் உற்பத்தியாகி உருவாதல் நின்றுபோய் சீக்கிரம் மெனோபாஸ் வரும்.

    மாதவிலக்கு வராத நிலையில்

    எள் 1 தேக்கரண்டி கொள்ளுப்பொடி 1 தேக்கரண்டியை 1 தேக்கரண்டி வெல்லம் கலந்து, 11/2 டம்ளர் நீரில் கொதிக்கவைத்து 3/4 டம்ளர் ஆகக் குறைந்ததும் பருகலாம்.

    மாதவிலக்கின் போது உதிரப்போக்கு பல நாட்களுக்கு தொடர்ந்து வந்தால்

    4 டம்ளர் தண்ணீருடன் 1 டம்ளர் பால் கலந்து அத்துடன் தென்னம்பூ 1 பிடியை சேர்த்துக்கு கொதிக்கவைத்து 1 டம்ளராக குறைந்ததும் பருகலாம்.

    மாதவிலக்கின்போது கடுமையான வலி இருப்பின் அதை தவிர்க்க


    ப்தஸாரம் கஷாயம்
    தில குலாதாதி கஷாயம்
    ஹிங்குவசாதி சூரணம் ஆகியவற்றை பயன்படுத்தலாம்.

    மூன்று மாதங்களுக்கு மேல் மாதவிலக்கு வராதநிலையில்

    கல்யாணகம் கஷாயம்
    தில குலாதாதி கஷாயம்
    ஸ்ப்தஸாரம் கஷாயம்
    ராஜப்ரவர்த்தினி குளிகா ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.

    மாதவிலக்கு பிரச்சனை உள்ள மகளிர் பிரச்சனைகளுடன் சேர்ந்து மெலிந்த உடல்வாகுடன் இருந்தால்


    அமிர்தப்ரஷாக்ருதம்
    தாத்ரயாதி க்ருதம்
    ஸதா வரயாதி க்ருதம் ஆகியனவும்
    பருமனான உடல்வாகுடன் இருந்தால்
    வாரணாதி கஷாயம்
    காஞ்சரண குளிகா

    கனஸ தாவடி கஷாயம் ஆகியனவும் பயன்படுத்தலாம்.

    அதிகமான உதிரப்போக்கு தொடர்ந்தால்
    முசலி கடிரடி கஷாயம்
    திராசாஷாதி கஷாயம்
    அசோகா அரிஷ்டம்
    அசோகா க்ருதம்
    புஷ்ய நுக சூரணம் ஆகியவற்றை பயன்படுத்தலாம்.

    கருமுட்டை கட்டிகள் தவிர ஏற்கனவே உடலில் வேறு நோய்கள் இருப்பின் மருந்து எடுக்கும் போது அதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆகவே தகுந்த மருத்துவ ஆலோசனையுடன் செயல்படுத்தல் வேண்டும்.

    மருந்துகள் தவிர முறையாக உடற்பயிற்சி, மூச்சுப்பயிற்சி சரியான உணவு முறை, நேரந்தவறாமை, போன்றவற்றையும் சேர்த்துக் கைப்பிடித்தல் ஆரோக்கியம் மேம்படும்

    நோய் வந்தபின் இவற்றையேல்லாம் யோசிக்காமல் குழந்தை பருவத்திலிருந்தே இவற்றை அனுசரிக்கும் பழக்கத்தை கொண்டு வருவது பெற்றோரது கடமையாகும்.

    குழந்தைக்கு கல்வி செல்வம் ஆகியனவைப் பெற்றுத்தர அவையில் முந்தி இருக்க செய்யும் அளவு உடல் ஆரோக்கியம் பேணப்படுவது பற்றிய அறிவு விழிப்புணர்வு மிகவும் குறைவு. ஆகவே அதை ஒரு சமூக கடமையாக எடுத்துக்கொள்ளப்படுவது எதிர்கால இந்தியாவின் ஆரோக்கியத்துக்குத் தேவை!

    -டாக்டர். ஜெ. விஜயாபிரியா
    (போன் 0422-2367200, 2313188, 2313194)
    சிறுதானியங்களில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று சிறுதானியங்கள், முருங்கைக்கீரை வைத்து சத்தான அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கம்பு, கேழ்வரகு, சோளம், கொள்ளு, பாசி பயறு - கால் கிலோ,
    குதிரைவாலி அரிசி, சாமை அரிசி, வரகு அரிசி - கால் கிலோ,
    முழு கருப்பு, உளுந்தம் பருப்பு, கொண்டைக்கடலை - 4 டீஸ்பூன்,
    வெங்காயம், இஞ்சி, பூண்டு, முருங்கை கீரை, உப்பு, நல்லெண்ணெய் -  தேவையான அளவு.



    செய்முறை :

    முருங்கைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    வெங்காயம், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கம்பு, கேழ்வரகு, சோளம், கொள்ளு, பாசி பயறு, உளுந்தம் பருப்பு, கொண்டைக்கடலை, குதிரை வாலி அரிசி, சாமை அரிசி, வரகரிசி இவை அனைத்தையும் நன்றாக கழுவி காலையில் முதல் மாலை வரை தண்ணீரில் ஊறவைக்கவும். ஊறியதும், இரவு ஒரு வெள்ளைத் துணியில் கட்டிவைக்கவும். காலையில் முளை கட்டி இருக்கும் கலவையை இஞ்சி, பூண்டு, உப்பு, வெங்காயத்துடன் அரைத்துக்கொள்ளவும்.  

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை அடைகளாக ஊற்றி அதன் மேலே முருங்கைக் கீரையைத் தூவி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

    பலன்கள்: குதிரைவாலி, இதய நோய் உள்ளவர்களுக்கு நல்ல உணவாக இருக்கிறது. கேழ்வரகில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு சர்க்கரையின் அளவைக் குறைக்க உதவுகிறது. சாமை, முதுகெலும்பு வலியைக் குறைக்கும். வரகு, உடல் பருமன், மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பண்டிகைகளுக்கு பெரியவர்களுக்கு புத்தாடை எடுக்கிறோமோ இல்லையோ குழந்தைகளுக்கு கண்டிப்பாக புத்தாடை எடுத்து விட வேண்டும்.
    பண்டிகைகளுக்கு பெரியவர்களுக்கு புத்தாடை எடுக்கிறோமோ இல்லையோ குழந்தைகளுக்கு கண்டிப்பாக புத்தாடை எடுத்து விட வேண்டும். இல்லையென்றால் குழந்தைகள் வீட்டை தலைகீழாக மாற்றி விடுவர். முன்பு தீபாவளி பண்டிகைக்கு என ஒருசில மாடல்களில்தான் ஆடைகள் வரும். தற்போது ஆண் குழந்தைகளுக்கு என விதவிதமான ஆடைகள் புதிய வடிவங்களுடன் விற்பனைக்கு வருகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் பல வண்ணச் சேர்க்கையுடன் தனிப்பட்ட இணைப்புகள் கொண்ட ஆடைகள் வருகின்றன. தீபாவளி வரவுகள் என்பது பாரம்பரிய ஆடை, வெஸ்டர்ன், கார்ட்டூன், ஜீன்ஸ், கோட்சூட் என பலவித ரகங்களில் அள்ளி கொள்ளும் வகையில் உள்ளன.

    சுட்டி பசங்க தீபாவளியன்று அணிய பாரம்பரிய ஆடை, பள்ளிகளுக்கு அணிந்து செல்ல வெஸ்டர்ன் என இரண்டு விதமான ஆடைகளை எடுத்து கொள்கின்றனர். குழந்தைகள் ஆசை படுகிறதே என பெரியவர்களும் எவ்வளவு விலை அதிகமாக இருப்பினும் வாங்கி தந்து விடுகின்றனர்.

    பாய்ஸ் எத்னிக் ஆடைகள்

    தீபாவளி என்றாலே வண்ணங்ளுக்கு பஞ்சமில்லை. அதில் குழந்தைகள் ஆடைகள் என்றால் எல்லா வண்ணமும் நன்றாகவே நடனமாடும். எத்னிக் ஆடைகள் எனும் பைஜாமா குர்தா, ஷெர் வாணி, வேட்டி சட்டை போன்றவை பிரதான இடம் பிடிக்கின்றன. இது இந்தியா முழுக்க ஒரே வகையில் அணிய கூடிய ஆடைகளாக இருக்கின்றன.

    வேட்டி சட்டை என்பது தென்னக பகுதியில் அதிகம் விரும்பப்படுகிறது. பைஜாமா குர்தா என்பதில் பேண்ட் பகுதி சுருக்கமான மடிப்புகளுடன், நீளமான குழல் வடிவில், வேட்டி போன்று மடித்து தைக்கப்பட்ட அமைப்பு என்றவாறு வருகிறது. இதன் குர்தா மேல்சட்டை என்பதுதான் அதிக வேலைப்பாடுகளுடன் வருகிறது. இது பருத்தி துணியில் அழகிய எம்பிராய்டரி செய்யப்பட்ட நீளமான குர்தா, குட்டை குர்தா என்ற இரு பிரிவுகள் உள்ளவாறு கிடைக்கின்றன. பார்க்க பரவசமூட்டும் வண்ண கலவையுடன் சற்று பளபளப்பு தன்மையுடன் சிம்பிள் லுக் சூப்பர் டிரஸ் என்றவாறு பைஜாமா குர்தா கிடைக்கின்றன.

    ஷெர்வாணி என்பது ஆடம்பரமான ஆடை வகை, அதுபோல் சற்று கனமான ஆடையும் கூட. தீபாவளி அன்று அணிய பிரம்மாண்டமான ஆடை. அதிக ஜொலிப்பு மற்றும் பளபளப்பும் கூடிய ஷெர்வாணியின் மேல் சட்டை அமைப்பு கற்கள், மணிகள், எம்பிராய்டரி போன்றவையுடன் பிரம்மாண்ட தோற்ற பொலிவுடன் கிடைக்கின்றன. இதில் தீபாவளிக்கு என புதிய வரவுகள் பல வந்துள்ளன. அவற்றின் உருவ அமைப்பு என்பது கீழ் பகுதியில் மாறுபட்ட வெட்டுக்கள் மற்றும் வளைவுகள் உள்ளவாறு கிடைக்கின்றன. சில ஷெர்வாணிகள் உட்புற கனமான துணியமைப்பு இன்றி மெல்லிய துணியுடன் எடை குறைந்த ஷெர்வாணியாகவும் உள்ளன. ஷெர்வாணியின் அதிக வேலைப்பாடு கொண்டவை சற்று விலை கூடுதலாகவே காணப்படுகிறது.

    கார்கோ பேண்ட் கலர்புல் ஷர்ட்

    சுட்டி பசங்க போடும் ஆட்டத்திற்கு ஈடு கொடுக்கும் வகையில் சற்று கடினமான துணியில் செய்த கார்கோ பேண்ட் வருகிறது. இது எண்ணற்ற பாக்கெட், கம்பி வளையம், ஜிப்கள், பொருத்தப்பட்டு ஆர்வத்தை தூண்டும் வகையில் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த கார்கோ பேண்ட்க்கு இணைப்பான பிரிண்டட் சட்டைகள் ஒற்றை நிற பின்னணியில் வடிவமைப்பு செய்யப்பட்டு கிடைக்கின்றன. இதற்கு மேல் பகுதியில் அணிய தனிப்பட்ட விஸ்ட் கோட் உள்ளது. கரடுமுரடான அமைப்பும், கலர்புல்லான தோற்ற பொலிவும் இணைந்து பசங்களின் கம்பீரத்தை அதிகரிக்க கூடிய இந்த கார்கோ மற்றும் கலர்புல் ஷர்ட் கோட் ஆடை அதிகம் விரும்பப்படுகிறது.

    இண்டோ- வெஸ்டர்ன் டிரஸ்

    இது இந்திய எத்னிக் போன்றும், அதே நேரம் மாடர்ன் லுக் தரும் வகையில் இரு பிரிவு ஆடை கலப்பாக உள்ளது. இதன் பேண்ட் பகுதி குழல் வடிவில் இறுக பிடிக்கும் வகையிலும், சில மாடல்கள் சுருக்க அமைப்புடன் காணப்படும். மேல் சட்டை என்பது நீளமான மற்றும் குட்டை அமைப்புடன் நீண்ட கைப்பகுதியுடன் ஓர் கம்பீர அமைப்புடன் உருவாக்கம் செய்யப்படும். அதிக தங்க நிற ஜொலிப்புடன் இறுக பற்றும் கழுத்து வடிவமைப்புடன் ஓர் ராயல் தோற்றப் பொலிவை தரும் வகையில் இது உள்ளது. மெத்தென்ற மேல் சட்டை அமைப்பும், மெல்லிய பேண்ட் என்பதும் கலந்த இண்டோ- வெஸ்டர்ன் டிரஸ் அனைத்து விழாக்களுக்கும் அணிய ஏற்றது. 
    மனிதர்கள் உண்ணும் உணவில் நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் காணப்படுகின்றன என்ற அதிர்ச்சித் தகவலை விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கின்றனர்.
    மனிதர்கள் உண்ணும் உணவில் நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் காணப்படுகின்றன என்ற அதிர்ச்சித் தகவலை விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கின்றனர்.

    தங்களால் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்ட ஒவ்வொரு மாதிரியிலும், ஒன்பது வெவ்வேறு வகை பிளாஸ்டிக் பொருட்களின் சிறிய துகள்கள் காணப்பட்டதாக அவர்கள் கூறுகின்றனர்.

    உணவின் மூலம் குடலுக்குள் செல்லும் பிளாஸ்டிக் துகள்கள், உடலின் நோய் எதிர்ப்புக் கட்டமைப்பைப் பாதிப்பதோடு, தீங்கு விளைவிக்கக்கூடிய வைரஸ்களை விருத்தி செய்வதற்கும் வழிவகுக்கின்றன.

    டுனா எனப்படும் சூறை மீன், லாப்ஸ்டர் மற்றும் இறால் உணவுகளில் அதிக அளவிலான பிளாஸ்டிக் காணப்பட்டதை முந்தைய ஆய்வுகள் கண்டுபிடித்துள்ளன.

    உலகில் உற்பத்தி செய்யப்படும் பிளாஸ்டிக்கில் 5 சதவீதம் கடலில் போய்ச் சேருகிறது என்றும், அங்கு அது படிப்படியாக உடைந்து கடல்வாழ் உயிரினங்களின் உணவுடன் கலக்கிறது என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.

    உணவுகள் அடைக்கப்பட்டுவரும் பாக்கெட்டுகளின் மூலமாகவோ உணவை உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படும் நுட்பங்கள் மூலமாகவோ உணவில் பிளாஸ்டிக் சேருவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

    உலகெங்கும் பிளாஸ்டிக் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு கடிவாளம் போடப்பட்டு வருகிறது. அந்த நடவடிக்கைகள் இன்னும் வேகம் பிடிக்க வேண்டும்!
    ஆபாச செய்கைகள், அரை நிர்வாண காட்சிகள், இளைஞர்கள்-இளம்பெண்களை மட்டுமே குறிவைத்து எடுக்கப்படும் கவர்ச்சி திரைப்படங்கள் என... இந்திய சினிமாவிலும் ஆபாசம் அதிரடியாக நுழைந்திருக்கிறது.
    ‘அ டல்ட் கண்டன்ட்’, ‘18+ தகவல்கள்’, ‘போர்னோகிராபி’... போன்ற வார்த்தைகள் எல்லாம் இன்றைய தலைமுறையினருக்கு சர்வ சாதாரணமாகிவிட்டது. ஏனெனில் இளைய தலைமுறை `இணையதலைமுறை' என்பதால், அவர்களது கைகளில் இருக்கும் ஸ்மார்ட் போன்களில் ஆபாச படங்களும், அந்தரங்க கட்டுரைகளும் தாராளமாக காணக்கிடைக்கின்றன. அதுமட்டுமா..?, பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களிலும், கவர்ச்சி மீம்ஸ்களின் ஆதிக்கமே அதிகரித்திருக்கிறது. இது நவீன யுகத்தின் தலைவிதி என்றால், இக்காலத்து சினிமாவும், கவர்ச்சி டிரெண்டிங்கில் வைரலாகி வருகிறது.

    இரட்டை அர்த்த வசனங்கள், ஆபாச செய்கைகள், அரை நிர்வாண காட்சிகள், இளைஞர்கள்-இளம்பெண்களை மட்டுமே குறிவைத்து எடுக்கப்படும் கவர்ச்சி திரைப்படங்கள் என... இந்திய சினிமாவிலும் ஆபாசம் அதிரடியாக நுழைந்திருக்கிறது. பிரபல நடிகர்களும், இத்தகைய திரைப்படங்களில் நடித்து டிரெண்டிங் ஆவதுதான், இந்திய சினிமாவின் தலையெழுத்தாகிவிட்டது.

    ஒரு காலத்தில் இலை மறைகாயாக மட்டுமே நடமாடி வந்த ஆபாசம் இன்று வெளிப்படையாகவே நடமாட ஆரம்பித்துவிட்டது. குளியறையிலும், ஒதுக்கு புறமான இடத்திலும் மறைத்து மறைத்து படித்த ஆபாச கதைகளை, இன்று தங்களுடைய தனி அறையிலேயே ஏ.சி.வசதியுடனேயே படிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். கூடவே, கம்ப்யூட்டர், லேப்டாப், ஸ்மார்ட்போன்களின் மூலம் ஆபாச படங்களையும் பார்க்க பழகிவிட்டனர். படங்களை தரவிறக்கம் செய்து பார்க்கும் இந்தக்காலத்திலும், டி.வி.டி.களின் ராஜ்ஜியம் நடக்கிறது என்றால், அதற்கு ஆபாச படங்களும் ஒரு காரணமாகின்றன.

    ஆபாசத்தை ரசிக்கும் பழக்கம், இந்தியாவில் பலரது பழக்கமாக மாறியதால் இந்தியர்களை குறிவைத்தே புதுப்புது ஆபாசப் படங்களும், பிரத்யேக இணையதளங்களும் வந்து கொண்டே இருக்கின்றன. இதை பொழுதுபோக்கிற்காக பார்ப்பவர்களுடன், பணம் செலுத்தி பார்ப்பவர்களும் அதிகரித்துவிட்டனர். அவர்களுக்காகவே ஆபாச இணையதளங்கள், ரூ.30-ல் தொடங்கி ரூ.10,000 வரை கட்டணத்தை நிர்ணயித்து உள்ளன. அதிலும் மிகத்தெளிவான ஹெச்.டி. வீடியோக்கள் என்றால், நுழைவு கட்டணம் ரூ. 20 ஆயிரம் வரை நீளும். ஆபாச வீடியோக்களை பார்த்து சலித்தவர்கள், தங்களது அந்தரங்க ஆசைகளை புதுவிதமாக நிறைவேற்றி பார்க்கவும் ஆசைப்படுகிறார்கள். அதற்கும் சில இணையதளங்கள் ‘லைவ்-சாட்’ எனப்படும் நேரலை வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளன.

    இந்த இணையதளங்களில் நுழைவு கட்டணம் செலுத்தி தங்களை பதிவு செய்துகொண்டால், நம்முடைய கட்டளைக்கு தலையாட்டும் பொம்மைகளை போன்ற பெண்கள் நேரலையில் தோன்றுவார்கள். இந்தியா, ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா... போன்ற பல நாடுகளில் இருந்தும் பலர் இந்த இணைய தளங்களில் இணைந்திருப்பதால், ஆசைக்கேற்ப ஆட்களை தேர்வு செய்யமுடியும். இவை பல இளையோரின் ஆசைகளைத் தீர்க்க வழியாக அமைகின்றன. தங்களை நல்லவராக சமூகத்தில் காண்பிக்க நினைப்பவர்கள் இத்தகைய ஆபாச இணைய தளங்கள் வழியாக தங்களது அந்தரங்க ஆசைகளை தீர்த்துக்கொள்கிறார்கள்.

    மேலும் உடல் அழகை வெளிப்படுத்த விரும்பியும், ஆண்மையின் பெருமையை வெளிக்காட்டும் ஆசையாலும், ஆண், பெண் நட்புகளை உருவாக்கும் நோக்கத்துடனும், நிர்வாண உடலை பொழுதுபோக்காக காட்ட நினைத்தும் பலர் இத்தகைய இணையதளங்களில் இணைகின்றனர். சிலர் பணம் சம்பாதிக்கும் நோக்கத்திற்காகவும், இதில் இணைகிறார்கள். அதனால்தான் அந்தரங்க கதைகள், ஆபாச வீடியோக்கள், லைவ் செக்ஸ் சாட் சம்பந்தமான உலக மார்க்கெட்டில், இந்தியா முன்னேறிக்கொண்டே இருக்கிறது. இந்த வேகம் இணைய தலைமுறையினரின் எதிர்காலம் மீதான அச்சத்தை அதிகப்படுத்தியிருக்கிறது. ஏனெனில் சமீபகாலமாக அரங்கேறி வரும் காம களியாட்டங்களுக்கு, ஆபாசப் படங்களும் ஒருவித காரணமாகிவிட்டன.



    ‘போர்னோகிராபி’ என்பது, உடலுறவு சம்பந்தப்பட்ட காட்சிகளை மையப்படுத்தி எடுக்கப்படும் ஆபாச திரைப்படம். இதுபோன்ற திரைப்படங்களை எடுக்க அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் அனுமதி வழங்கப்படுகிறது. இது முழுக்க முழுக்க கற்பனை கதையில் உருவாகும் திரைப் படம் என்பதால், இதில் உறவு முறைகளை கொச்சப்படுத்தி எடுப்பதும் உண்டு. அதாவது ‘பிறர் மனை நோக்காதே’ என்பதற்கு எதிர்மறையாக உறவுமுறையிலும், வயது வித்தியாசமின்றியும் கதைக்களம் அமைத்து, உடலுறவு காட்சிகளை படம்பிடிப்பார்கள்.

    இவை கற்பனை படங்கள் என்பதை உணர்ந்தவர்கள், எளிதில் கடந்துவிடுவார்கள். ஆனால் அதை உணராதவர்கள், அந்த படத்தில் நிகழ்த்தப்பட்டதை தங்களது நிஜ வாழ்விலும், நிகழ்த்தி பார்க்க முயலும்போதுதான் பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

    குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல், ஆசிரியர்-மாணவர் இடையிலான காதல், கள்ளத்தொடர்பு, கூட்டாக நிகழும் பாலியல் வன்முறை... போன்ற பல பிரச்சினைகளுக்கு இத்தகைய ஆபாச படங்கள் காரணமாகிவிடுகின்றன. அதனால்தான் ஆபாசத்தை விரும்பும் இளையதலைமுறையினர் பற்றிய கவலை அதிகரித்திருக்கிறது.

    ஆபாச இணையதளங்கள் பலவும் மேற்கத்திய கலாசாரத்தை மற்ற நாடுகளில் திணிக்கும் ஆயுதங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. நமது சமூகத்தில் அருவருப்பாகவும், ஆபாசமாகவும் பார்க்கப்படும் பல விஷயங்கள், மேற்கத்திய நாடுகளில் கலாசாரமாக கொண்டாடப்படுகின்றன. அவர்களின் கொண்டாட்டத்தைதான் நாம் பணம் செலுத்தி, ஆபாசம் என்ற பெயரில் ரசித்துக்கொண்டிருக்கிறோம். இதை மேற்கத்திய நாடுகள் ஏற்றுக்கொள்வதில் தவறில்லை. ஆனால் இந்திய இளையதலைமுறை கொண்டாடுவதுதான் பெரும் சிக்கலாக மாறியிருக்கிறது.

    இதை உணர்ந்துகொண்ட இந்திய அரசாங்கம், இந்தியாவில் அதிகம் தேடப்படும் ஆபாச இணையதளங்களை முடக்க முயற்சி மேற்கொண்டிருக்கிறது. 2015-ம் ஆண்டு முதலே இத்தகைய முயற்சிகளில் இறங்கியிருக்கும் இந்திய அரசாங்கம், அந்த சமயத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆபாச இணையதளங்களை முடக்க முயற்சித்தது. இருப்பினும் ஆபாச இணையதளங்களின் கொட்டம் அடங்கியபாடில்லை. புதுப்புது பெயர்களில் ஆபாச வீடியோக்களையும், அந்தரங்க கதை களையும் உள்ளடக்கிய இணையதளங்கள் வந்து கொண்டே இருக்கின்றன.

    அதேசமயம் இளைஞர்களின் காமப்பசிக்கு தீனி போடும் விதமாக குறிப்பிட்ட சில தொலைத்தொடர்பு நிறுவனங்களும் இலவச மொபைல் டேட்டாக்களை வழங்குகின்றன. இதன்மூலம் செலவில்லா சீரழிவு திட்டத்தின் வாயிலாக, இலவசமாகவே ஆபாச வீடியோக்களை பார்த்து ரசித்துக்கொண்டிருக்கிறார்கள்.

    ஆபாசம் என்பதை ‘ஆடை குறைபாடு’ என்ற சொற்களில் அடக்கிவிட முடியாது. அதையும் தாண்டி, அந்தரங்கமாக மட்டுமே நிகழ வேண்டிய செயல்களை பொது இடத்தில் அரங்கேற்றுவதையே ‘ஆபாசம்’ என்ற வார்த்தையின் அர்த்தமாக கொள்ளலாம்.



    ஓர் இளைஞன் முன்பின் அறிமுகம் இல்லாத பெண்ணிடமும், ஓர் இளம்பெண் யாரென்றே தெரியாத ஆணிடமும் ‘வீடியோ சாட்’ மூலம் நிர்வாணமாகத் தன்னை அறிமுகம் செய்து கொள்வதும் ஆபாசமாக பார்க்கப்படுகிறது. இது எதிர்கால வாழ்வில் பல சிக்கல்களை உருவாக்க வாய்ப்புள்ளது.

    சிலர் தினந்தோறும் இத்தகைய இணையதளங்களில் நேரத்தை செலவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இது அவர்களது நிகழ்காலத்தை பாதித்து, எதிர்மறை சிந்தனைகளை மனதில் உருவாக்கும். திருமணத்துக்கு புறம்பான உடலுறவை ஊக்குவிக்கும் வகையிலான பல வீடியோக்களும் இத்தகைய தளங்களில் காணப்படுகின்றன.

    ஓரினச்சேர்க்கை, தகாத உறவுமுறைகள், வயது வித்தியாசமில்லாத உறவுகள்... போன்றவற்றை தூண்டுவதாக இவை அமைந்துவிடுகின்றன.

    இப்போது பெரும்பாலானோர் கேமரா உள்ள செல்போன் களையே பயன்படுத்துகின்றனர். அவர்களில் துடுக்கான சிலர் பூங்காக்கள், கடற்கரைகள் போன்ற பொது இடங்களில் அரங் கேறும் அந்தரங்ககாட்சிகளை ரகசியமாக படம்பிடித்து இத்தகைய இணையதளங்களில் பதிவேற்றம் செய்து விடுகின்றனர்.

    ஆபாச இணையதளங்களும் காப்புரிமை பற்றி எவ்வித கவலையும் இன்றி வீடியோக்களைப் பதிவேற்றம் செய்ய அனு மதிக்கின்றன. அதேசமயம் சிறந்த வீடியோக்களை பதிவேற்றம் செய்பவர்களுக்கு தக்க சன்மானமும் வழங்குகின்றன. இலவசமாக ஆபாச வீடியோக்களை காண்பித்து, அதுபோன்ற தவறான உறவுகளில் ஈடுபட வைத்து, அதை வீடியோவாக எடுத்து, தங்களுடைய இணையதளங்களை பலப்படுத்தி கொள்கின்றன.

    அமேசான் மற்றும் அந்தமான் காடுகளில் இன்றளவும் ஆடை அணியாமல் வாழும் சில பழங்குடி சமூகங்கள் கட்டுக்கோப்பான ஒழுக்கம் கொண்டவர்களாக வாழ்கின்றனர். கோவணத்துடன் வயலில் வேலை செய்யும் விவசாயிகளையோ, குறைந்த உடையுடன் சாக்கடைகளைத் தூய்மை செய்வோரையோ யாரும் ஆபாசமாக பார்ப்பதில்லை. ஆகவே, நிர்வாணமோ குறைவான ஆடையோ ஒருவரை ஆபாசம் என்ற வரம்புக்குள் கொண்டு வராது. நமது எண்ணங்களே எது ஆபாசம் என்று முடிவு செய்கிறது.

    நிர்வாணம் என்பது இயல்பாகவே தவறானது அல்ல. கெட்ட எண்ணம் கொண்ட பார்வையில் அது ஆபாசமாக மாறுகிறது. எதையும் இயல்பாக ஏற்றுக்கொள்ள முடியாத சிந்தனையே ஆபாசத்தின் எல்லையைத் தீர்மானம் செய்கிறது. சமூகத்தில் நிகழும் பாலியல் வன்முறைகளுக்கும் ஒழுக்கக்கேடுகளுக்கும் ஆபாச இணையதளங்கள் தீனி போடுகின்றன. இனப்பெருக்கத்திற்காக இயற்கை தந்துள்ள பாலுணர்வைத் தவறான வழியில் பயன்படுத்த இளையோரை அவைத் தூண்டுகின்றன என்பதில் சந்தேகம் எதுவுமில்லை.

    தனியாக இருக்கும் பிள்ளைகள் அதிக அளவில் ஆபாச இணையதளங்களுக்கு அடிமையாவதாக ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. இளம் வயதினருக்கு செல்போன்களைக் கொடுத்து வளர்க்கும் பெற்றோர்கள், அவர்கள் அவற்றை எதற்காக பயன்படுத்துகிறார்கள் என்பதை கவனிப்பது அவசியம். எது தவறு என்று சுட்டிக் காட்டுவதை விடவும், குழந்தைகள் சரியானவற்றைத் தேர்ந்தெடுத்து முன்னேற உடனிருந்து பயிற்சி அளிப்பது நன்மை பயக்கும். இளையோரும் பொறுப்புணர்வுடன் செயல்பட்டால், வருங்காலத்திலும் கட்டுப்பாடான சமூக ஒழுக்கத்தைப் பாதுகாக்க முடியும்.

    -டே. ஆக்னல் ஜோஸ்
    விருதுநகர் மட்டன் சுக்காவை தோசை, சப்பாத்தி, சாதத்துடன் சாப்பிட சூப்பராக இருக்கும். இன்று இந்த சுக்காவை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சின்னவெங்காயம் - 200 கிராம்
    எலும்பில்லாத மட்டன் - 200 கிராம்
    இஞ்சி, பூண்டு விழுது - 30 கிராம்
    சீரகத்தூள் - 40 கிராம்
    மிளகாய்த்தூள் - 20 கிராம்
    நல்லெண்ணெய் - 30 மில்லி.
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு
    கறிவேப்பிலை - சிறிதளவு
    காய்ந்த மிளகாய் - 2
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    மட்டனை நன்றாக சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக வெட்டிக்கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி, கிள்ளிய காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம், பொன்னிறமாக வந்தவுடன் மட்டனையும், மிளகாய்த்தூளையும் சேர்த்து வதக்கி, சிறிதளவு தண்ணீர் மட்டும் சேர்த்து நன்றாக வேகவைக்கவும்.

    மட்டன் நன்கு வெந்தது தண்ணீர் ஏதும் இல்லாமல் டிரையாக வந்தவுடன், சீரகத்தூளை தூவி, உப்பு சேர்த்து கலக்கி, கொத்தமல்லித்தழை தூவி இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான விருதுநகர் மட்டன் சுக்கா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பெண்களை போல் ஆண்களுக்கும் மார்பக புற்றுநோய் வருவதற்கு சாத்திய கூறுகள் உள்ளன. இதனால் பெண்களுக்கு எவ்வளவு பாதிப்பையும் வலியையும் தருமோ அதே அளவு பாதிப்பு தான் ஆண்களுக்கும் உண்டாகும்.
    பெண்களுக்கு வருகிற மார்பகப் புற்றுநோயைப் போல ஆண்களுக்கான மார்பக புற்றுநோய் அவ்வளவு எளிதாக யாருக்கும் வருவதில்லை. அது மிகவும் அரிதான ஒன்றுதான் என்றாலும், பெண்களுக்கு எவ்வளவு பாதிப்பையும் வலியையும் தருமோ அதே அளவு பாதிப்பு தான் ஆண்களுக்கும் உண்டாகும்.

    புற்றுநோயைப் பொறுத்தவரையில் விளைவுகளில் எந்தவிதமான மாற்றமும் வேறுபாடும் கிடையாது. அதனால், மார்பகப் புற்றுநோய் வந்ததைவிட அதை சரிசெய்ய முயற்சி செய்வதைவிட, வரும்முன் காப்பதற்கு முயற்சி செய்வது நல்லது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

    அறிகுறிகள்

    மார்பகப் புற்றுநோய்க்கான அறிகுறிகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒன்றுதான். ஆனால் ஆண்கள் மார்பகப் புற்றுநோய் பெண்களுக்கு மட்டும்தான் வரும் என்று நினைத்துக் கொண்டு, அது காட்டும் சில அறிகுறிகளை கண்டுகொள்ளாமல் அஜாக்கிரதையாகக் கடந்துவிடுகிறார்கள். கீழ்கண்ட அறிகுறிகள் ஏதாவது தென்பட்டால், உடனடியாக மருத்துவரை சந்தித்து ஆலோசனை செய்வது நல்லது.



    மார்பகங்களில் சின்ன சின்னதாக கட்டி வருவது

    மார்புக் காம்புகளின் வடிவத்தில் மாற்றங்கள் உண்டாதல்

    மார்புக் காம்பிலிருந்து நீர் வடிதல்

    மார்புக் காம்புகளில் வலி

    மார்பகம் சிவந்து போதல், தோல் உரிதல் (அ) மார்பில் ஏதேனும் மாற்றங்கள் உண்டாதல்

    எந்த நோயாக இருந்தாலும் அதற்கு நாம் எடுத்துக் கொள்கின்ற மருந்து, சிகிச்சை என ஒருபுறம் இருந்தாலும், அந்த சமயங்களில் நாம் எடுத்துக் கொள்கின்ற உணவுமுறை தான் நோய் குணமடையவும் அதிகமாகவும் காரணமாக அமைகிறது. அதேபோல் தான மார்பகப் புற்றுநோயும். நாம் எடுத்துக் கொள்ளும் டயட் முறை மிகமிக முக்கியம்.
     
    பெரும்பான்மையான பெண்களுக்கு பாதங்களில் ஏற்படும் பிரச்சனை பித்த வெடிப்பு. இதற்கு வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு எப்படி நிரந்தர தீர்வு காண்பது என்று பார்க்கலாம்.
    பெண்கள் தங்கள் முகத்தைப் பராமரிக்கச் செலவிடும் நேரத்தில் சில நிமிடங்கள்கூட தங்கள் பாதங்களை கவனிக்கச் செலவு செய்வதில்லை. பெரும்பான்மையான பெண்களுக்கு பாதங்களில் ஏற்படும் பிரச்சனை பித்த வெடிப்பு. என்ன மருந்து போட்டாலும் இந்த பித்த வெடிப்பு மட்டும் போகவே மாட்டேங்குது என்று அலுத்துக்கொள்பவர்கள் ஏராளம். சில டிப்ஸ்…

    * விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சம அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் சிறிது மஞ்சள் தூளை கலந்து பேஸ்ட் போல் குழைத்து அதை பாதத்தில் வெடிப்பு உள்ள இடங்களில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதால் பித்த வெடிப்பு முற்றிலும் குணமாகும்.

    * வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றுடன் சிறிதளவு சுண்ணாம்பு சேர்த்து அரைக்க வேண்டும். இந்த கலவையில் விளக்கெண்ணெய் சேர்த்து பித்த வெடிப்பு உள்ள இடங்களில் பூசினால் பித்த வெடிப்பு முற்றிலும் நீங்கும்.



    * பப்பாளி பழத்தை நன்கு நைசாக அரைத்து அதை பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதிகளில் தேய்க்க வேண்டும். அவை உலர்ந்ததும் பாதத்தை தண்ணீரில் நனைத்து தேய்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் பித்த வெடிப்பு முழுவதும் குணமாகும்.

    * மருதாணி இலைகளை நன்றாக அரைத்து பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விட வேண்டும். பின் தண்ணீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் நாளடைவில்  பித்த வெடிப்பு முழுவதும் குணமாகும்.

    * வேப்ப எண்ணெயில் சிறிதளவு மஞ்சள் பொடியை கலந்து பேஸ்ட் போல் குழைத்து பித்த வெடிப்பு உள்ள இடத்தில் தடவினால் பித்த வெடிப்பு முழுவதும் குணமாகும்.

    * இரவு நேரத்தில் தூங்கப் போவதற்கு முன் காலை நன்றாகத் தேய்த்து கழுவி சிறிது தேங்காய் எண்ணெய் தடவி தூங்கப் போகலாம். இப்படி செய்தால் பித்த வெடிப்பு வராமல் நீங்கள் தடுக்கலாம்.

    * குளித்து முடித்ததும் பாதங்களை ஈரமில்லாதவாறு துணியால் துடைக்க வேண்டும். பின்பாதத்தில் சிறிது விளக்கெண்ணெய் தேய்த்து வந்தால் பித்த வெடிப்பு வராமல் தடுக்கலாம்.
    சர்க்கரை நோயாளிகள், வயிற்றில் பூச்சி இருப்பவர்கள் அடிக்கடி பாகற்காயை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று பாகற்காய் காரக்குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாகற்காய் - 300 கிராம்,
    வறுத்த வெந்தயப்பொடி - 1/2 டீஸ்பூன்,
    சின்னவெங்காயம் - 200 கிராம்,
    நல்லெண்ணெய் - 50மி.லி.,
    தக்காளி - 2,
    புளி - எலுமிச்சைப்பழ அளவு,
    உப்பு - தேவைக்கு,
    நறுக்கிய பூண்டு - 2 டீஸ்பூன்,
    மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
    மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
    தனியாத்தூள் - 1½ டீஸ்பூன்,
    சீரகம் - 1 டீஸ்பூன்,
    தேங்காய்த்துருவல் - 100 கிராம்.




    செய்முறை :

    சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    புளியை கரைத்து கொள்ளவும்.

    தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பாகற்காயின் விதைகளை நீக்கி பொடியாகவோ அல்லது வட்டமாகவோ நறுக்கிக் கொள்ளவும்.

    சீரகம், தேங்காய்த்துருவல், தக்காளியைச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

    கடாயில் நல்லெண்ணெய் விட்டு சூடானதும் பாகற்காயைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

    நன்கு வதங்கியதும் வெங்காயத்தைச் சேர்த்து வதக்கி வெந்தயப்பொடி, பூண்டு, தனியாத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள் தூளைச் சேர்த்து கிளறவும்.

    பின் அரைத்த விழுது, சிறிது தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விடவும்.

    குழம்பு திக்கான பதத்திற்கு வந்ததும், உப்பு, புளிக்கரைசலை சேர்த்து கொதிக்க விட்டு எண்ணெய் மேலே வந்ததும் இறக்கவும்.

    சூப்பரான பாகற்காய் காரக் குழம்பு ரெடி.

    சூடாக சாதத்துடன் பரிமாறவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளுடன் கூடிய கருப்பை நீர்க்கட்டிகள் உங்களுக்கு இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
    20% பெண்களுக்கு உண்டாகும் நீர்க்கட்டிகள் தானாக மறைவதில்லை. இவற்றைப் போக்க அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது., அல்லது புற்று நோய்க்கான அறிகுறிகளாக இவை மாறுகிறது. அல்லது உடல் நலத்தில் பாதிப்பை உண்டாக்குகிறது. சில நேரங்களில் இந்த நீர்க்கட்டிகள், கருப்பை பைப்ராய்டு, அல்லது மாதவிடாய்க்கு முந்தைய பாதிப்பு(வயிறு மந்தம் மற்றும் இடுப்பு வலி) ஆகியவற்றுடன் இணைந்து கொண்டு பாதிப்பைத் தருகிறது.

    கீழே கொடுக்கப்பட்டுள்ள 6 அறிகுறிகளுடன் கூடிய கருப்பை நீர்க்கட்டிகள் உங்களுக்கு இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

    இடுப்பு பகுதிக்கு கீழே, வலது அல்லது இடது புறத்தில் வலி இருப்பது கருப்பை நீர்க்கட்டி இருப்பதற்கான பொதுவான அறிகுறியாகும். இந்த பகுதியில் அல்லது வேறு இடத்தில் திடீரென்று பாரமாக இருப்பது போல் நீங்கள் உணரலாம். உடற்பயிற்சியின் போது அல்லது பாலியல் தொடர்பின் போது இந்த கனத்தை உங்களால் உணர முடியும்.

    கனமாக இருக்கும் அந்த பகுதியில் ஒருவித வலி தொடர்ச்சியாக இருந்து கொண்டே இருக்கும். மாதவிடாய் முடிந்த பின்னும் அந்த வலி நீடித்து இருக்கும். இந்த வலி மிகவும் அதிகமாகும்போது நீங்கள் கருப்பை முறுக்கத்தால் பாதிக்கப்படுவீர்கள். இந்த கட்டி வளர்ச்சியுற்று பெரிதாகும் போது தானாக முறுக்கி, இரத்த ஓட்டத்தைத் தடுக்கிறது. இதனால் வலி இன்னும் தீவிரமடைகிறது.

    வயிறு வீக்கமடைவது என்பது ஒரு தெளிவற்ற அறிகுறி. அதன் அளவைச் சார்ந்து கருப்பை நீர்க்கட்டியுடன் இதனை தொடர்புபடுத்தலாம். பெரும்பாலான பெண்கள் 10செமீ க்கு குறைவான அளவு நீர்க்கட்டிகளைப் பெற்றிருக்கிறார்கள். அடிவயிற்று வலி மற்றும் வீக்கம் என்பது வயிறில் வேறு எதோ ஒன்று உருவாவதன் காரணமாக இருக்கலாம். வயிற்று பகுதியில் மட்டும் எடை அதிகரித்து காணப்பட்டால் அல்லது உங்கள் எடை அதிகரிப்பிற்கு காரணம் தெரியாமல் இருந்தால் அது எச்சரிக்கை மணி அடிப்பது போன்றதாகும்.



    கருப்பை பைப்ராய்டு கட்டியைப் போல் கருப்பை நீர்க்கட்டியும் வயிறு கனமான உணர்வைத் தரும். “ஒரு நீர்க்கட்டி வயிற்றின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து ஒரு அழுத்தத்தை தரும் உணர்வாகும். இது மலச்சிக்கல் போன்ற உணர்வைத் தரும். இரண்டு கருப்பையிலும் கட்டிகள் உள்ளவரை, இடுப்பின் ஒரு பக்கம் மட்டுமே இத்தகைய உணர்வு தோன்றும்.

    சிறுநீர் கழிப்பதில் அல்லது மற்ற செயல்பாடுகளில் வேறு எந்த பிரச்சனையும் இல்லாமல், ஆனால் வயிறு கனத்த உணர்வு மட்டும் தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு நீடித்தால் கருப்பையில் நீர்க்கட்டிகள் இருப்பதை உறுதி செய்து கொள்வது நல்லது என்று டாக்டர்.சாப்மன் டேவிஸ் கூறுகிறார்.

    தொற்று (ஆனால் சிறுநீர் வெளியேறாது). கருப்பையில் நீர்க்கட்டிகள் இருப்பதை வெளிப்படுத்தும் மற்றொரு அறிகுறி, அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு தோன்றுவதாகும். உங்கள் சிறுநீர்ப்பையை ஒட்டி கட்டி தோன்றியிருந்தால், உங்களுக்கு சிறுநீர் கழிக்கும் உணர்வு தோன்றும் என்று அவர் கூறுகிறார். சில பெண்கள் அடிக்கடி சிறுநீர் கழித்தாலும், ஒவ்வொரு முறை சிறுநீர் வெளியேறுவதில் சிரமம் இருக்கும். நீர்க்கட்டி சிறுநீர் பாதையை தடுப்பதால் இந்த பாதிப்பு உண்டாகும். சிறுநீரகம் தொடர்பான கோளாறுகள் தோன்றும்போது மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுவது நல்லது.

    கருப்பையில் நீர்க்கட்டிகள் பெரிதாக வளரும்போது, கருப்பைக்கு பின், சரியாக கருப்பை வாய் அருகே வளர்ந்து இருந்தால் உறவின் போது வலி தோன்றலாம். ஆகவே உடனடியாக பெண் மருத்துவரை அணுகி, உங்கள் பிரச்னைக்கு தீர்வு பெறலாம்.

    உங்கள் இடுப்பு பகுதியில் அதிக இடமில்லாத காரணத்தால், கட்டி வளர்ந்து பெரிதாகும்போது, இடுப்பில் கட்டி இருக்கும் இடத்தைப் பொறுத்து முதுகு அல்லது கால் வலி உண்டாகலாம். அதாவது, இந்த கட்டிகள், இடுப்பின் பின்புறம் ஓடும் நரம்பை சுருக்கி விடுவதாக அவர் கூறுகிறார். உங்கள் இடுப்பு வலிக்கான காரணத்தை மருத்துவரால் அறிய முடியாவிட்டால், அது நீர்கட்டியின் ஆதாரமாக இருப்பதற்கான வாய்ப்புகளாக இருக்கலாம் என்று அவர் கூறுகிறார். 
    யோக நித்திரை மனதை கட்டுப்படுத்தவும், ஒரு நிலைப்படுத்தவும், அமைதிப்படுத்தவும். உதவுகிறது. பலவிதமான மன நோய்கள் நீங்கும் பயனுள்ள பயிற்சி இது.
    பெயர்விளக்கம்: யோக நித்திரை என்றால் உடலைப் பற்றிய உணர்வு இல்லாமல் தன்னிலையில் இருப்பதே யோக நித்திரை (அரிதுயில்)

    செய்முறை: சவாகனம் செய்யவும். கீழ்க்கண்ட முறைப்படி காலிலிருந்து தலை வரை உடலின் ஒவ்வொரு பகுதியாக மனதால் நினைக்கவும். காலின் இரு பெருவிரல்கள் முதல் காலின் சிறு விரல்கள் வரை இரண்டு கால்களின் ஒவ்வொரு விரல்களாக முதலில் மனதால் நினைக்கவும், அடுத்து உள்ளங்கால்கள், குதிகால்கள், கணுக்கால்கள், பாதம் முதல் முழங்காலின் கீழ்வரை முழங்கால்கள், தொடைகள், தொடைகளின் சந்து, இடுப்பு, அடிவயிறு, மேல் வயிறு, மார்பக கழுத்து, தாடை, உதடுகள், பற்கள், நாக்கு, மூக்கு, கன்னம், கண்கள், புருவங்கள், நெற்றி, தலையின் மேல்பாகம், தலையின் பின்பக்கம், காதுகள், கழுத்தின் பின்பாகம், புஜங்கள், இரு கைகளின் அக்குள் பகுதி, இரு கைகளின் கட்டை விரல்கள், ஆள் காட்டி விரல்கள், நடு விரல்கள், மோதிர விரல்கள், சிறு விரல்கள், உள்ளங்கைகள், மணிக்கட்டுகள், கைவிரல்களில் இருந்து முழங்கைகள் கீழ்வரை, முழங்கைகள், புஜங்கள் வரை ஒவ்வொன்றாக மனதால் நினைத்துப் பார்க்கவும். அடுத்து தலை பின் பாகம், கழுத்தின் பின் பாகம், முதுகு, முதுகின் கீழ்பாகம், இடுப்பு, பிருஷ்ட பாகம், தொடைகளின் பின் பாகம், முழங்கால்களின் பின் பாகம், அங்கிருந்து உள்ளங்கால்கள் வரை ஒவ்வொன்றாக மனதால் நினைக்கவும்.

    மீண்டும் ஒரு முறை மேல்கண்ட முறைப்படி உடலுறுப்புகளை மனதால் நினைத்து பார்க்கவும். பிறகு இரு கால்கட்டை விரல்களையும், இரு கைகட்டை விரல்களையும் தலையின் உச்சிப் பகுதியையும் மனதால் ஒரே நேரத்தில் நினைக்க முயலவும். இப்படி செய்வது ஆரம்பத்தில் கடினமாக இருக்கும். அதனால் ஒன்றன்பின் ஒன்றாக கால் கட்டை விரல்களையும், கை கட்டை விரல்களையும் தலை பின் உச்சிப் பகுதியையும் 5 முறை மனதால் நினைக்கவும்.

    முடிவில் நிதானமாக கை, கால் விரல்களை அசைத்து தலையை சில முறை இடது புறமும், வலது பக்கமும் சாய்த்து வலது பக்கம் ஒருக்கலித்து சில வினாடிகள் இருந்து பிறகு இடது பக்கம் ஒருக்களித்து சில வினாடிகள் இருந்து எழுந்து உட்காரவும்.

    8 லிருந்து, 14 வயதிற்குட்பட்ட சிறு வயதினருக்கு யோக நித்திரை பயிற்சி அளிப்போர் மேற்கண்ட முறைப்படி செய்விப்பதைவிட கீழ்க்கண்ட மூன்றில் ஏதாவது ஒன்றை கற்பனையாக 10 நிமிடம் மனதால் நினைத்துப் பார்க்கச் சொல்லவும்.

    1. ஒரு தோட்டத்தில் தனியாக இருந்து கொண்டு தனக்குப் பிடித்தமான பூக்களின் அழகான வடிவை ரசித்தல்.
    2. தனக்குப் பிடித்தமான ஆலயத்திற்குப் போய் கடவுளை தரிசித்தல்.
    3. சுற்றுலா சென்ற இடங்களில் தனக்கு மிகவும் பிடித்தமான இடத்தை நினைத்துப் பார்த்தல்.

    பயன்கள் : மனதை கட்டுப்படுத்தவும், ஒரு நிலைப்படுத்தவும், அமைதிப்படுத்தவும். உதவுகிறது. உடல், மன சோர்வை, நீக்குகிறது. சிறு வயதிலிருந்து போக நித்திரை பழகும் மாணவர்கள் ஒழுக்க முடையவர்களாக அமைவார்கள். புத்தி மந்தம் நீங்கும். நினைவாற்றல் அதிகரிக்கும்.

    உயர் ரத்த அழுத்தம், இருதய பக்க கோளாறுகள், தூக்கமின்மை மற்றும் பலவிதமான மன நோய்கள் நீங்கும் பயனுள்ள பயிற்சி இது. 
    ×