என் மலர்
ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்
சர்க்கரை நோயாளிகள் வாரம் ஒருமுறை பாகற்காய் சூப் குடிப்பது உடலுக்கு மிகவும் நல்லது. இன்று இந்த பாகற்காய் சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பெரிய பாகற்காய் - 1
எலுமிச்சம்பழம் - பாதி
காய்ச்சிய பால் - 1/2 கப்
மஞ்சள் தூள் - சிறிதளவு
எண்ணெய் - 1 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 1
மிளகு தூள் - 1 ஸ்பூன்
தாளிக்க :
சோம்பு - 1/4 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி
பட்டை - 1
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது

செய்முறை :
பாகற்காயை பொடியாக நறுக்கி தண்ணீரில் அலசி சிறிது மஞ்சள் தூள் சேர்த்து 2 விசில் போட்டு வேக வைத்து கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சோம்பு, உளுத்தம் பருப்பு, பட்டை, கறிவேப்பிலை போட்டு தாளிக்க வேண்டும். அத்துடன் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
தக்காளி, வெங்காயம் நன்றாக வதங்கியதும் இத்துடன் வெந்த பாகற்காய் போட்டு கிளறி தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து ஒரு விசில் விட்டு இறக்க வேண்டும்.
விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து அதனுடன் உப்பு, மிளகு தூள் சேர்த்து, எலுமிச்சம்பழம் பிழிய வேண்டும்.
கடைசியாக பால் சேர்த்து கொத்துமல்லி தூவி பரிமாற வேண்டும்..
பெரிய பாகற்காய் - 1
எலுமிச்சம்பழம் - பாதி
காய்ச்சிய பால் - 1/2 கப்
மஞ்சள் தூள் - சிறிதளவு
எண்ணெய் - 1 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 1
மிளகு தூள் - 1 ஸ்பூன்
தாளிக்க :
சோம்பு - 1/4 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி
பட்டை - 1
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது
உப்பு - தேவையான அளவு

செய்முறை :
பாகற்காயை பொடியாக நறுக்கி தண்ணீரில் அலசி சிறிது மஞ்சள் தூள் சேர்த்து 2 விசில் போட்டு வேக வைத்து கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சோம்பு, உளுத்தம் பருப்பு, பட்டை, கறிவேப்பிலை போட்டு தாளிக்க வேண்டும். அத்துடன் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
தக்காளி, வெங்காயம் நன்றாக வதங்கியதும் இத்துடன் வெந்த பாகற்காய் போட்டு கிளறி தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து ஒரு விசில் விட்டு இறக்க வேண்டும்.
விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து அதனுடன் உப்பு, மிளகு தூள் சேர்த்து, எலுமிச்சம்பழம் பிழிய வேண்டும்.
கடைசியாக பால் சேர்த்து கொத்துமல்லி தூவி பரிமாற வேண்டும்..
சத்தான பாகற்காய் சூப் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குழந்தைகளே நீங்கள் செல்போனில் விளையாடுவதை சந்தோஷமாக நினைக்கிறீர்கள், ஆனால் அதன் மூலமாக உங்களுக்கு என்னென்ன பாதிப்புகள் வரும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
குட்டீஸ், உங்களுக்கு மிக மிகப் பிடித்த விளையாட்டுப் பொருள் என்றால், அது அம்மாவின் செல்போன்தானே. உங்களைப்போலவே உங்கள் தோழிகளும், நண்பர்களும் அம்மாவின் போன்களில் விளையாடுவதாக பெற்றோர்கள் வருத்தத்துடன் கூறுகிறார்கள். நீங்கள் செல்போனில் விளையாடுவதை சந்தோஷமாக நினைக்கிறீர்கள், ஆனால் அதன் மூலமாக உங்களுக்கு என்னென்ன பாதிப்புகள் வரும் என்று தெரியுமா?
செல்போனில் விளையாடும் நீங்கள் ஓடி விளையாட மறந்து வருகிறீர்கள். அதன் மூலம் கிடைக்கும் பயனையும் இழந்து வருகிறீர்கள். கிரிக்கெட், செஸ், கேரம், கால்பந்து, பேட்மிட்டன் போன்ற இன்னும் பல பாரம்பரிய விளையாட்டுகள் ஆரோக்கியம் தரக்கூடியவை. ஆனால் இந்த விளையாட்டுகளை செல்போன், கணினியில் விளையாடுவதால் எந்த பயனும் இல்லை. புதையல் எடுத்தல், ஷூட்டிங், குக்கிங், டெம்பிள்ரன், ரேஸ் என செல்போனில் நீங்கள் விளையாடும் அத்தனை விளையாட்டுகளும் சுவாரஸ்யமானவைதான். அவை உங்கள் மூளை வளர்ச்சியைத் தூண்டும் வேகத்தைப்போலவே மன அழுத்தத்தை ஏற்படுத்தும் வேகமும் அதிகமாக இருக்கிறது.
“குழந்தைகளின் மூளை வளர்ச்சி, முதல் மூன்று வயது வரை வேகமாக இருக்கும் இருக்கும்.. அப்போது மூளையைத் தூண்டிவிடும் விளையாட்டுகளை விளையாடும் போது குழந்தைகளின் கற்பனைத்திறன், கூர்ந்து கவனிக்கும் திறன் மேம்பட்டுப் படைப்பாளியாக மாறுவார்கள். ஆனால், டிவி, கணினி, செல்போன் போன்ற சாதனங்கள், குழந்தைகளை முடக்கினால் ஒரு ரோபோ போல உருவாகி எதிர்காலத்தில் யாரிடம் எப்படி பேசவேண்டும், பழக வேண்டும் எனத் தெரியாமல் தவறான முடிவு எடுப்பவர்களாக மாறும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்” என்று நிபுணர்கள் வருத்தத்துடன் கூறுகிறார்கள்.

கணினி மற்றும் போன்களை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு முதலில் ஏற்படுவது பார்வைக் கோளாறுதான். தொடர்ச்சியாக திரையைப் பார்ப்பதால் கண் எரிச்சல், தலைவலி ஏற்படும். இமைக்காமல் விளையாடுவதே இதற்கு காரணமாகும். சிறுவயதில் கண்ணாடி போடுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு செல்போன் விளையாட்டுகளே முக்கிய காரணமாக இருக்கிறது. அதேபோல காதுகளையும் வெகுவாகப் பாதிக்கிறது.
விளையாடும்போது ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பதால் கொழுப்பு சேர்ந்து உடல் பருமன் அதிகரிக்கும். எலும்புகளின் பலம் குறைந்து எலும்பு தேய்மானம், முதுகு வலி, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவை ஏற்பட வாய்ப்பு உள்ளது.
அது உங்கள் கவனத்தை இழுத்து மற்றவற்றில் உங்கள் மனதை ஈடுபடாத மனச்சிதைவை உண்டாக்குகிறது, நட்பை பாழாக்குகிறது, உறவுகளையும் சிதைக்கிறது. இன்னும் பல ஆரோக்கியப் பிரச்சினைகளுக்கு அடித்தளம் அமைக்கிறது. செல்போன் கதிர்வீச்சுகள் இதயம், மூளை, சிறுநீரகத்தை பாதிப்பதாக அறிவுறுத்தப்படுகிறது.
செல்போன் விளையாட்டுகளின் தோல்வியும், அம்மா போனை வாங்கிக் கொண்டால் வரும் ஏக்கமும், கோபமும், நாளைடைவில் மன பாதிப்பை உருவாக்குகிறது. அது தனிமைப்படவும், தன்னம்பிக்கை இழந்த மனிதராக நீங்கள் வளரவும் காரணமாக அமைகிறது. இரவில் விளையாடுவதால் தூக்கம் கெடுகிறது. அது மறுநாள் பள்ளிப்பாடங்களை எழுதுவது படிப்பது, பள்ளியில் பாடங்கள் கவனிப்பது போன்ற அனைத்தையும் பாதிக்கிறது. இதுபோன்ற தொடர்பாதிப்புகளால் கண்ணுக்குத் தெரியாமலே உங்கள் எதிர்காலம் பாழாகிறது.
இப்படி பல வழிகளிலும் பாதிப்பை உருவாக்கும் செல்போன்களையும், செல்போன் விளையாட்டுகளையும் ஒதுக்கி வைப்பது புத்திசாலித்தனமாகும். நீங்கள் சமர்த்துக்குட்டி, இனி அதிகமாக செல்போனில் விளையாட மாட்டீர்கள்தானே!
செல்போனில் விளையாடும் நீங்கள் ஓடி விளையாட மறந்து வருகிறீர்கள். அதன் மூலம் கிடைக்கும் பயனையும் இழந்து வருகிறீர்கள். கிரிக்கெட், செஸ், கேரம், கால்பந்து, பேட்மிட்டன் போன்ற இன்னும் பல பாரம்பரிய விளையாட்டுகள் ஆரோக்கியம் தரக்கூடியவை. ஆனால் இந்த விளையாட்டுகளை செல்போன், கணினியில் விளையாடுவதால் எந்த பயனும் இல்லை. புதையல் எடுத்தல், ஷூட்டிங், குக்கிங், டெம்பிள்ரன், ரேஸ் என செல்போனில் நீங்கள் விளையாடும் அத்தனை விளையாட்டுகளும் சுவாரஸ்யமானவைதான். அவை உங்கள் மூளை வளர்ச்சியைத் தூண்டும் வேகத்தைப்போலவே மன அழுத்தத்தை ஏற்படுத்தும் வேகமும் அதிகமாக இருக்கிறது.
“குழந்தைகளின் மூளை வளர்ச்சி, முதல் மூன்று வயது வரை வேகமாக இருக்கும் இருக்கும்.. அப்போது மூளையைத் தூண்டிவிடும் விளையாட்டுகளை விளையாடும் போது குழந்தைகளின் கற்பனைத்திறன், கூர்ந்து கவனிக்கும் திறன் மேம்பட்டுப் படைப்பாளியாக மாறுவார்கள். ஆனால், டிவி, கணினி, செல்போன் போன்ற சாதனங்கள், குழந்தைகளை முடக்கினால் ஒரு ரோபோ போல உருவாகி எதிர்காலத்தில் யாரிடம் எப்படி பேசவேண்டும், பழக வேண்டும் எனத் தெரியாமல் தவறான முடிவு எடுப்பவர்களாக மாறும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்” என்று நிபுணர்கள் வருத்தத்துடன் கூறுகிறார்கள்.

கணினி மற்றும் போன்களை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு முதலில் ஏற்படுவது பார்வைக் கோளாறுதான். தொடர்ச்சியாக திரையைப் பார்ப்பதால் கண் எரிச்சல், தலைவலி ஏற்படும். இமைக்காமல் விளையாடுவதே இதற்கு காரணமாகும். சிறுவயதில் கண்ணாடி போடுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு செல்போன் விளையாட்டுகளே முக்கிய காரணமாக இருக்கிறது. அதேபோல காதுகளையும் வெகுவாகப் பாதிக்கிறது.
விளையாடும்போது ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பதால் கொழுப்பு சேர்ந்து உடல் பருமன் அதிகரிக்கும். எலும்புகளின் பலம் குறைந்து எலும்பு தேய்மானம், முதுகு வலி, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவை ஏற்பட வாய்ப்பு உள்ளது.
அது உங்கள் கவனத்தை இழுத்து மற்றவற்றில் உங்கள் மனதை ஈடுபடாத மனச்சிதைவை உண்டாக்குகிறது, நட்பை பாழாக்குகிறது, உறவுகளையும் சிதைக்கிறது. இன்னும் பல ஆரோக்கியப் பிரச்சினைகளுக்கு அடித்தளம் அமைக்கிறது. செல்போன் கதிர்வீச்சுகள் இதயம், மூளை, சிறுநீரகத்தை பாதிப்பதாக அறிவுறுத்தப்படுகிறது.
செல்போன் விளையாட்டுகளின் தோல்வியும், அம்மா போனை வாங்கிக் கொண்டால் வரும் ஏக்கமும், கோபமும், நாளைடைவில் மன பாதிப்பை உருவாக்குகிறது. அது தனிமைப்படவும், தன்னம்பிக்கை இழந்த மனிதராக நீங்கள் வளரவும் காரணமாக அமைகிறது. இரவில் விளையாடுவதால் தூக்கம் கெடுகிறது. அது மறுநாள் பள்ளிப்பாடங்களை எழுதுவது படிப்பது, பள்ளியில் பாடங்கள் கவனிப்பது போன்ற அனைத்தையும் பாதிக்கிறது. இதுபோன்ற தொடர்பாதிப்புகளால் கண்ணுக்குத் தெரியாமலே உங்கள் எதிர்காலம் பாழாகிறது.
இப்படி பல வழிகளிலும் பாதிப்பை உருவாக்கும் செல்போன்களையும், செல்போன் விளையாட்டுகளையும் ஒதுக்கி வைப்பது புத்திசாலித்தனமாகும். நீங்கள் சமர்த்துக்குட்டி, இனி அதிகமாக செல்போனில் விளையாட மாட்டீர்கள்தானே!
இரவில் சரியாக தூக்கம் இல்லை என்றால் சோர்வு ஏற்படும். எப்போதும் சோர்வாக தோன்றுபவர்கள் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
எப்போதும் சோர்வாக தோன்றுபவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்:
தூங்குவதற்கு உபயோகப்படுத்தும் தலையணையை குறைந்த பட்சம் ஆண்டுக்கு ஒருமுறையாவது மாற்றிவிட வேண்டும்.
மெத்தையை ஒன்பது ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது மாற்றியமைக்க வேண்டும்.
படுக்கை அறையில் நிலவும் வெப்பநிலையும் தூக்கத்திற்கு இடையூறை ஏற்படுத்தும். அங்கு மிதமான வெப்பநிலை நிலவுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
இரவு நேரங்களில் செல்போனில் அதிக நேரம் செலவழிப்பதை தவிர்க்க வேண்டும். இரவு பொழுதில் கண்களில் அதிக வெளிச்சம்படக்கூடாது. செல்போனில் இருந்து உமிழப்படும் வெளிச்சம் தூக்கத்தை வரவழைக்கும் ஹார்மோனின் உருவாக்கத்தை தடுத்துவிடும்.
அதனால் படுக்கை அறைக்குள் செல்போனுக்கு இடம் கொடுக்காமல் இருப்பது நல்லது.
மதுப்பழக்கமும் தூக்கத்தை தடுத்து சோர்வை ஏற்படுத்திவிடும். மதுக்குடிக்கும்போது அதிலிருக்கும் ஆல்கஹால் தூக்கத்தை தூண்டும் வகையில் செயல்படும். சில மணி நேரங்களிலேயே எதிர்மறையாக செயல்பட்டு தூக்கத்தை தடுத்து சோர்வை உண்டாக்கிவிடும்.
அதிகம் தண்ணீர் பருகுவதும் அவசியமானது. அது சோர்வை விரட்டி உடலை புத்துணர்ச்சிக்குள்ளாக்கும்.
தூங்கும் நேரத்தையும் முறைப்படுத்திக்கொள்ள வேண்டும். குறிப்பிட்ட நேரத்துக்குள் தூங்க சென்றுவிட வேண்டும். விடுமுறை நாட்களாக இருந்தாலும் அதில் மாற்றம் செய்யக்கூடாது.
தூங்குவதற்கு உபயோகப்படுத்தும் தலையணையை குறைந்த பட்சம் ஆண்டுக்கு ஒருமுறையாவது மாற்றிவிட வேண்டும்.
மெத்தையை ஒன்பது ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது மாற்றியமைக்க வேண்டும்.
படுக்கை அறையில் நிலவும் வெப்பநிலையும் தூக்கத்திற்கு இடையூறை ஏற்படுத்தும். அங்கு மிதமான வெப்பநிலை நிலவுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
இரவு நேரங்களில் செல்போனில் அதிக நேரம் செலவழிப்பதை தவிர்க்க வேண்டும். இரவு பொழுதில் கண்களில் அதிக வெளிச்சம்படக்கூடாது. செல்போனில் இருந்து உமிழப்படும் வெளிச்சம் தூக்கத்தை வரவழைக்கும் ஹார்மோனின் உருவாக்கத்தை தடுத்துவிடும்.
அதனால் படுக்கை அறைக்குள் செல்போனுக்கு இடம் கொடுக்காமல் இருப்பது நல்லது.
மதுப்பழக்கமும் தூக்கத்தை தடுத்து சோர்வை ஏற்படுத்திவிடும். மதுக்குடிக்கும்போது அதிலிருக்கும் ஆல்கஹால் தூக்கத்தை தூண்டும் வகையில் செயல்படும். சில மணி நேரங்களிலேயே எதிர்மறையாக செயல்பட்டு தூக்கத்தை தடுத்து சோர்வை உண்டாக்கிவிடும்.
அதிகம் தண்ணீர் பருகுவதும் அவசியமானது. அது சோர்வை விரட்டி உடலை புத்துணர்ச்சிக்குள்ளாக்கும்.
தூங்கும் நேரத்தையும் முறைப்படுத்திக்கொள்ள வேண்டும். குறிப்பிட்ட நேரத்துக்குள் தூங்க சென்றுவிட வேண்டும். விடுமுறை நாட்களாக இருந்தாலும் அதில் மாற்றம் செய்யக்கூடாது.
பெண் குழந்தைகள் இறப்புக்கு முக்கியமான காரணம் பாலினப் பாகுபாடு. பெண்களின் எண்ணிக்கை குறைந்து வருவது இந்திய ஜனநாயகத்திற்கு நிச்சயம் ஆரோக்கியமானது அல்ல.
கண்ணுக்குத் தெரியாமல் இந்தியாவில் காணாமல் போய்விட்ட பெண்களின் எண்ணிக்கை 6 கோடியை தொட்டுவிட்டது என்கிறார் இங்கிலாந்தை சேர்ந்த கட்டுரையாளர் சன்னி ஹண்டல். 2014-ம் ஆண்டு வெளியான ‘இந்தியா டிஸ்கானர்‘ என்ற தனது புத்தகத்தில் இதை அம்பலப்படுத்தி உள்ளார்.
இது இங்கிலாந்து மொத்த மக்கள்தொகை அளவுக்கு நிகரானது. பெண்கள் இனம் அழிந்து கொண்டிருப்பதை முதலில் பதிவு செய்தவர் நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை அமர்தியா சென். 1990-ம் ஆண்டு உலகம் முழுவதும் 10 கோடி பெண்களுக்கு மேல் காணாமல் போய்விட்டதாக அவர் முதன்முதலில் குறிப்பிட்டார்.
இன்று, அது இந்தியாவில் மட்டும் 6 கோடியாக உயர்ந்திருக்கிறது. இந்த 6 கோடி பெண்கள் எங்கே போனார்கள்? நமது மக்கள் தொகை கணக்கெடுப்பை புரட்டிப் பார்த்தால் அதிர்ச்சி அளிக்கிறது. இந்தியாவில் பிறக்கும் 1.2 கோடி பெண் குழந்தைகளில் 10 லட்சம் குழந்தைகள் ஒரு வருடம் கூடத் தாக்குப் பிடிப்பதில்லை. மேலும் 30 லட்சம் குழந்தைகள் 15 வயதிற்குள் மரணம் அடைகின்றனர்.

பெண் குழந்தைகளுக்கு வழங்கப்படும் கல்வி, மருத்துவம் போன்றவற்றிலும் இந்தப் பாகுபாடு உள்ளது. ஐக்கிய நாடுகளின் மக்கள்தொகை நிதியமைப்பு உலகிலேயே அதிக அளவிலான பாலினப் பாகுபாடு இந்தியாவில் இருப்பதாக சொல்கிறது. பெண் குழந்தைகள் இறப்புக்கான மற்றொரு காரணம் சிசுக்கொலை.
ஸ்கேன் சோதனை செய்து ஆண் குழந்தையா, பெண் குழந்தையா? என்று சொல்வது குற்றம் என சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனாலும் கருக்கலைப்பு செய்வது இப்போதும் நடந்து வருகிறது. ஆண் குழந்தை மோகத்தால், பிறந்த பிறகும் பெண் குழந்தைகளைக் கொல்வது நடக்கிறது. இந்த விகிதாசார குறைபாடுகளை வெறும் எண்களாக நினைத்து நாம் கடந்துவிட முடியாது.
இது நேரடியாக பல விதத்தில் பெண்களின் வளர்ச்சியை பாதிக்கக்கூடியது. கலாசாரம், பண்பாடு என்ற பெயர்களில் பெண்கள் மீது நிகழ்த்தும் வன்முறைகளை தடுக்க ஆக்கபூர்வமான எந்த செயல்பாட்டையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. உலக வங்கியின் பாலின ஒற்றுமை விகிதக் கணக்கீட்டில் இந்தியா மிகவும் பின்தங்கியுள்ளது. பெண்கள் சிறுபான்மையினராக மாறும்போது நாட்டின் திட்டங்களிலும் அவர்கள் பின்னுக்குத் தள்ளப்படும் அபாயம் இருக்கிறது. எனவே பெண்களின் எண்ணிக்கை குறைந்து வருவது இந்திய ஜனநாயகத்திற்கு நிச்சயம் ஆரோக்கியமானது அல்ல.
இது இங்கிலாந்து மொத்த மக்கள்தொகை அளவுக்கு நிகரானது. பெண்கள் இனம் அழிந்து கொண்டிருப்பதை முதலில் பதிவு செய்தவர் நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை அமர்தியா சென். 1990-ம் ஆண்டு உலகம் முழுவதும் 10 கோடி பெண்களுக்கு மேல் காணாமல் போய்விட்டதாக அவர் முதன்முதலில் குறிப்பிட்டார்.
இன்று, அது இந்தியாவில் மட்டும் 6 கோடியாக உயர்ந்திருக்கிறது. இந்த 6 கோடி பெண்கள் எங்கே போனார்கள்? நமது மக்கள் தொகை கணக்கெடுப்பை புரட்டிப் பார்த்தால் அதிர்ச்சி அளிக்கிறது. இந்தியாவில் பிறக்கும் 1.2 கோடி பெண் குழந்தைகளில் 10 லட்சம் குழந்தைகள் ஒரு வருடம் கூடத் தாக்குப் பிடிப்பதில்லை. மேலும் 30 லட்சம் குழந்தைகள் 15 வயதிற்குள் மரணம் அடைகின்றனர்.
பெண் குழந்தைகள் இறப்புக்கு முக்கியமான காரணம் பாலினப் பாகுபாடு. இன்றைக்கும் பெண் குழந்தைக்கு ஒரு மாதிரியாகவும், ஆண் குழந்தைக்கு ஒரு மாதிரியாகவும் சலுகைகள் கொடுப்பது நமது வழக்கத்தில் இருக்கிறது. முந்தைய தலைமுறை வரை இந்த பாகுபாடு வெளிப்படையாகவே இருந்து வந்தது.

பெண் குழந்தைகளுக்கு வழங்கப்படும் கல்வி, மருத்துவம் போன்றவற்றிலும் இந்தப் பாகுபாடு உள்ளது. ஐக்கிய நாடுகளின் மக்கள்தொகை நிதியமைப்பு உலகிலேயே அதிக அளவிலான பாலினப் பாகுபாடு இந்தியாவில் இருப்பதாக சொல்கிறது. பெண் குழந்தைகள் இறப்புக்கான மற்றொரு காரணம் சிசுக்கொலை.
ஸ்கேன் சோதனை செய்து ஆண் குழந்தையா, பெண் குழந்தையா? என்று சொல்வது குற்றம் என சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனாலும் கருக்கலைப்பு செய்வது இப்போதும் நடந்து வருகிறது. ஆண் குழந்தை மோகத்தால், பிறந்த பிறகும் பெண் குழந்தைகளைக் கொல்வது நடக்கிறது. இந்த விகிதாசார குறைபாடுகளை வெறும் எண்களாக நினைத்து நாம் கடந்துவிட முடியாது.
இது நேரடியாக பல விதத்தில் பெண்களின் வளர்ச்சியை பாதிக்கக்கூடியது. கலாசாரம், பண்பாடு என்ற பெயர்களில் பெண்கள் மீது நிகழ்த்தும் வன்முறைகளை தடுக்க ஆக்கபூர்வமான எந்த செயல்பாட்டையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. உலக வங்கியின் பாலின ஒற்றுமை விகிதக் கணக்கீட்டில் இந்தியா மிகவும் பின்தங்கியுள்ளது. பெண்கள் சிறுபான்மையினராக மாறும்போது நாட்டின் திட்டங்களிலும் அவர்கள் பின்னுக்குத் தள்ளப்படும் அபாயம் இருக்கிறது. எனவே பெண்களின் எண்ணிக்கை குறைந்து வருவது இந்திய ஜனநாயகத்திற்கு நிச்சயம் ஆரோக்கியமானது அல்ல.
நாண், புலாவ், தோசை, சாதம், பூரி, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த கர்நாடகா வெஜிடபிள் சப்ஜி. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
காலிஃபிளவர் - 1 பூ
பட்டாணி - 1/4 கிலோ
தக்காளி - 1/4 கிலோ
கடுகு - தேவையான அளவு
பொடி செய்ய தேவையான பொருட்கள்:
கடலை பருப்பு - 100 கிராம்
உளுந்தம் பருப்பு - 100 கிராம்
தனியா (மல்லி) - 150 கிராம்
சீரகம் - 150 கிராம்
வர மிளகாய் - தேவையான அளவு
பட்டை - 25 கிராம்
இலவங்கம் (கிராம்பு) - 25 கிராம்

செய்முறை :
பொடிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை வெறும் கடாயில் போட்டு சிவக்க வறுத்து மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.
காலிஃபிளவர் பூவை சுடுதண்ணீரில் கழுவி எடுத்த பின்னர் சிறிது சிறிதாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
தக்காளியையும் பொடியாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகை போட்டு தாளித்த பின்னர் காலிஃபிளவர், தக்காளி மற்றும் பச்சை பட்டாணி போட்டு வதக்க வேண்டும்.
பின்னர் சிறிதளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும்.
காய்கள் வெந்தவுடன் பொடியாக்கப்பட்ட பொருட்களை போட்டு இளம் சூட்டில் சிறிது நேரம் கிளறி விட்டால் மண மணக்கும் கர்நாடகா வெஜிடபிள் சப்ஜி ரெடி.
காலிஃபிளவர் - 1 பூ
பட்டாணி - 1/4 கிலோ
தக்காளி - 1/4 கிலோ
கடுகு - தேவையான அளவு
பொடி செய்ய தேவையான பொருட்கள்:
கடலை பருப்பு - 100 கிராம்
உளுந்தம் பருப்பு - 100 கிராம்
தனியா (மல்லி) - 150 கிராம்
சீரகம் - 150 கிராம்
வர மிளகாய் - தேவையான அளவு
பட்டை - 25 கிராம்
இலவங்கம் (கிராம்பு) - 25 கிராம்
ஏலக்காய் - சிறிதளவு

செய்முறை :
பொடிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை வெறும் கடாயில் போட்டு சிவக்க வறுத்து மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.
காலிஃபிளவர் பூவை சுடுதண்ணீரில் கழுவி எடுத்த பின்னர் சிறிது சிறிதாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
தக்காளியையும் பொடியாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகை போட்டு தாளித்த பின்னர் காலிஃபிளவர், தக்காளி மற்றும் பச்சை பட்டாணி போட்டு வதக்க வேண்டும்.
பின்னர் சிறிதளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும்.
காய்கள் வெந்தவுடன் பொடியாக்கப்பட்ட பொருட்களை போட்டு இளம் சூட்டில் சிறிது நேரம் கிளறி விட்டால் மண மணக்கும் கர்நாடகா வெஜிடபிள் சப்ஜி ரெடி.
இந்த சப்ஜியை சப்பாத்தி, பூரி ஆகியவற்றுக்கு தொட்டுக் கொள்ளலாம்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
நல்ல சத்தான உணவினை முறையாக உண்டாலும் நான்கில் ஒருவருக்கு வைட்டமின் பி12 குறைபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.
20-ம் நூற்றாண்டில் இருந்தே மனிதன் உடல் உழைப்பினை சிறிது சிறிதாக குறைத்து வருகின்றான். சைக்கிள், கார் என வளர்ந்து இன்று ஒரு கம்ப்யூட்டர் மூலம் உலகை வலம் வருகின்றான்.
பன்னிரெண்டு மணிநேரம் கூட அமர்ந்தே இருக்கும் மனிதர்களுக்கு உடல் அசைவுகள், நடை இவை மிகக்குறையும். ஒரே காரணத்தினால் அவர்கள் ஆயுளைக் கூட அதிகம் குறைத்துக் கொள்கின்றனர் என்பதை ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.
மேஜை முன்னாடி வேலை என்றாலும் நின்று செய்ய பழகுங்கள். நான் காலையில் ஒரு மணிநேரம் நடக்கின்றேன், உடற்பயிற்சி செய்கின்றேன் என்று சொல்லி மீதி நேரம் அமர்ந்தே வேலை செய்வது உடலை வெகுவாய் பாதிக்கின்றது.
ஒரு மணிநேரத்துக்கு ஒரு முறை 250 அடிகள் நடக்க வேண்டும். 20 நிமிடங்களுக்கு ஒரு முறை 2 நிமிடங்களாவது எழுந்து நிற்கவேண்டும். நிற்பதும், நடப்பதும் உடல், மன சக்தியினை கூட்டும். உடல் செயல் பாட்டுத்திறனைக் கூட்டும். மூட்டுகளை இயல்பாய் செயல்பட வைக்கும். புற்றுநோய் தாக்குதலை குறைக்கும். மன உளைச்சலை நீக்கும். இனி அலுவலகத்தில் எல்லோருடனும் நடந்துகொண்டே வேலை செய்வீர்களா?
கைகள் வலுவடைகின்றன.
வயிறு தசைகள் இறுக்கம் பெறுகின்றன.
ஆரோக்கி யமான கால் மூட்டு கிடைக்கின்றது.
கால்கள் பலம் பெறுகின்றன.
வைட்டமின் பி12-ன் சில செய்திகளைப் பற்றி அடிக்கடி கூற வேண்டிய அவசியம் மருத்துவ உலகில் உள்ளது. நல்ல சத்தான உணவினை முறையாக உண்டாலும் நான்கில் ஒருவருக்கு வைட்டமின் பி12 குறைபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.
தண்ணீரில் கரையும் இந்த வைட்டமின் பி12 பல வருடங்கள் கூட கல்லீரலில் பாதுகாப்பாக சேகரித்து உடலை வைக்கின்றது. இது மிக அவசியம் என்பதால் இதனை பத்திரப்படுத்தி வைக்கும் இயற்கை உந்துதல் உடலுக்கு இருப்பது அதிசயத்தக்க ஒன்றே. இந்த வைட்டமின் பி12 நரம்பு மண்டலம், சீரண மண்டலம், ரத்தக் குழாய்கள், இனப் பெருக்கு மண்டலம் இவை அனைத்திற்கும் மிக முக்கியமானது.
* ஹார்மோன் சுரப்புகளை சீர் செய்யும்.
* நோய் எதிர்ப்பு சக்தியினை கூட்டும்.
* மாவுச்சத்தினை குளூகோசாக மாற்றும்.
* புரதம் உடலில் ஏற்று சீராக செயல்பட உதவும்.
* பொதுவில் சைவ உணவு உடட்கொள்பவர்களுக்கு பி12 குறைபாடு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். இவர்கள் மருத்துவ ஆலோசனைப்படி பி12 சத்து மாத்திரைகள் கண்டிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும். வயது கூடும் பொழுது பி12 சக்தியை உணவிலிருந்து உரிஞ்சு சத்து குறையும், ஏனெனில் வயிற்றில் ஆசிட் சுரக்கும் தன்மை குறையும். பொதுவில் ரத்த சோகை, கை கால்களில் குறுகுறுப்பு.
சோர்வு, மலச்சிக்கல், கண் பார்வை குறைதல், மன நலமின்மை, மறதி, நரம்பு பிரச்சினைகள் இவை பி12 குறைபாட்டின் அறிகுறிகளாக வெளிப்படும்.
உங்கள் மூளையினை சுறுசுறுப்பாக வைக்கின்றது?
* சக்தி * புரதம் * கார்பன் டை ஆக்சைட்
உங்கள் உணவினை முழுமையாய் செரிக்க உதவுவது எது?
* வயிறு மட்டுமே * சீரண மண்டலம் * மூளை
ஜீரண மண்டலத்தில் உள்ள ஏதாவது மூன்று உறுப்புகளின் பெயர் சொல்லுங்களேன் ?
உங்கள் சருமம், நகம், முடி, சதை, உள் உறுப்பு, மூளை எவற்றிலுமே புரதம் இல்லை.
* உண்மை * தவறு
வைட்டமின் டி யினைக் கூறும் மற்றொரு பெயர் என்ன?
* தூக்க வைட்டமின் * சூரிய ஒளி வைட்டமின்
நம்மை வேலை செய்ய ஏதுவாக்குகின்றது எது?
* சக்தி * ஜீரண உறுப்புகள் * நுரையீரல்
உணவில் உள்ள இதுதான் உடல் வளர்ச்சிக்கு உதவுகின்றது?
* புரதம் * நார் சத்து * கொழுப்பு சத்து
பன்னிரெண்டு மணிநேரம் கூட அமர்ந்தே இருக்கும் மனிதர்களுக்கு உடல் அசைவுகள், நடை இவை மிகக்குறையும். ஒரே காரணத்தினால் அவர்கள் ஆயுளைக் கூட அதிகம் குறைத்துக் கொள்கின்றனர் என்பதை ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.
மேஜை முன்னாடி வேலை என்றாலும் நின்று செய்ய பழகுங்கள். நான் காலையில் ஒரு மணிநேரம் நடக்கின்றேன், உடற்பயிற்சி செய்கின்றேன் என்று சொல்லி மீதி நேரம் அமர்ந்தே வேலை செய்வது உடலை வெகுவாய் பாதிக்கின்றது.
ஒரு மணிநேரத்துக்கு ஒரு முறை 250 அடிகள் நடக்க வேண்டும். 20 நிமிடங்களுக்கு ஒரு முறை 2 நிமிடங்களாவது எழுந்து நிற்கவேண்டும். நிற்பதும், நடப்பதும் உடல், மன சக்தியினை கூட்டும். உடல் செயல் பாட்டுத்திறனைக் கூட்டும். மூட்டுகளை இயல்பாய் செயல்பட வைக்கும். புற்றுநோய் தாக்குதலை குறைக்கும். மன உளைச்சலை நீக்கும். இனி அலுவலகத்தில் எல்லோருடனும் நடந்துகொண்டே வேலை செய்வீர்களா?
கைகள் வலுவடைகின்றன.
வயிறு தசைகள் இறுக்கம் பெறுகின்றன.
ஆரோக்கி யமான கால் மூட்டு கிடைக்கின்றது.
கால்கள் பலம் பெறுகின்றன.
வைட்டமின் பி12-ன் சில செய்திகளைப் பற்றி அடிக்கடி கூற வேண்டிய அவசியம் மருத்துவ உலகில் உள்ளது. நல்ல சத்தான உணவினை முறையாக உண்டாலும் நான்கில் ஒருவருக்கு வைட்டமின் பி12 குறைபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.
தண்ணீரில் கரையும் இந்த வைட்டமின் பி12 பல வருடங்கள் கூட கல்லீரலில் பாதுகாப்பாக சேகரித்து உடலை வைக்கின்றது. இது மிக அவசியம் என்பதால் இதனை பத்திரப்படுத்தி வைக்கும் இயற்கை உந்துதல் உடலுக்கு இருப்பது அதிசயத்தக்க ஒன்றே. இந்த வைட்டமின் பி12 நரம்பு மண்டலம், சீரண மண்டலம், ரத்தக் குழாய்கள், இனப் பெருக்கு மண்டலம் இவை அனைத்திற்கும் மிக முக்கியமானது.
* ஹார்மோன் சுரப்புகளை சீர் செய்யும்.
* நோய் எதிர்ப்பு சக்தியினை கூட்டும்.
* மாவுச்சத்தினை குளூகோசாக மாற்றும்.
* புரதம் உடலில் ஏற்று சீராக செயல்பட உதவும்.
* பொதுவில் சைவ உணவு உடட்கொள்பவர்களுக்கு பி12 குறைபாடு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். இவர்கள் மருத்துவ ஆலோசனைப்படி பி12 சத்து மாத்திரைகள் கண்டிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும். வயது கூடும் பொழுது பி12 சக்தியை உணவிலிருந்து உரிஞ்சு சத்து குறையும், ஏனெனில் வயிற்றில் ஆசிட் சுரக்கும் தன்மை குறையும். பொதுவில் ரத்த சோகை, கை கால்களில் குறுகுறுப்பு.
சோர்வு, மலச்சிக்கல், கண் பார்வை குறைதல், மன நலமின்மை, மறதி, நரம்பு பிரச்சினைகள் இவை பி12 குறைபாட்டின் அறிகுறிகளாக வெளிப்படும்.
உங்கள் மூளையினை சுறுசுறுப்பாக வைக்கின்றது?
* சக்தி * புரதம் * கார்பன் டை ஆக்சைட்
உங்கள் உணவினை முழுமையாய் செரிக்க உதவுவது எது?
* வயிறு மட்டுமே * சீரண மண்டலம் * மூளை
ஜீரண மண்டலத்தில் உள்ள ஏதாவது மூன்று உறுப்புகளின் பெயர் சொல்லுங்களேன் ?
உங்கள் சருமம், நகம், முடி, சதை, உள் உறுப்பு, மூளை எவற்றிலுமே புரதம் இல்லை.
* உண்மை * தவறு
வைட்டமின் டி யினைக் கூறும் மற்றொரு பெயர் என்ன?
* தூக்க வைட்டமின் * சூரிய ஒளி வைட்டமின்
நம்மை வேலை செய்ய ஏதுவாக்குகின்றது எது?
* சக்தி * ஜீரண உறுப்புகள் * நுரையீரல்
உணவில் உள்ள இதுதான் உடல் வளர்ச்சிக்கு உதவுகின்றது?
* புரதம் * நார் சத்து * கொழுப்பு சத்து
கூந்தல் வளர்ச்சிக் குறைபாட்டிற்கு சரியான உணவுப்பழக்கம் இல்லாதது ஒரு முக்கியக் காரணம். மேலும் கூந்தல் உதிர்வை தவிர்க்க சில விஷயங்களை கடைபிடிக்க வேண்டும்.
தலைமுடிதான் ஒரு மனிதனின் ஆளுமைத் தீர்மானிக்கிறது. ஆனால், முடி கொட்டி அதுவே பலரை தாழ்வு மனப்பான்மையில் தள்ளி விடுகிறது. முடி வளர்ச்சிக் குறைபாடுகளுக்குச் சரியான உணவுப்பழக்கம் இல்லாதது ஒரு முக்கியக் காரணம். நாம் உண்ணும் உணவில் இரும்பு, புரதம், துத்தநாகம் போன்ற சத்துகள் இருக்க வேண்டியது அவசியம். ஆனால், நாம் இத்தகைய சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்கிறோமா என்பது சந்தேகமே.
நாம் சாப்பிடும் உணவுகளில் போதிய புரதச் சத்து இல்லாததால் முடி வளர்ச்சிக் குறைபாடு ஏற்படுகிறது. கர்ப்ப காலத்திலும் குழந்தைப்பேற்றுக்குப் பிறகும் பெண்களில் பலருக்கு முடி உதிர்வது என்பது இயல்பான ஒன்றாகும். இந்த முடி பிரச்னை ஹார்மோன் மாற்றங்களால் நிகழக்கூடியது. இது சிறிது காலத்துக்குப் பிறகு தானாகவே சரியாகிவிடும்.
இன்றைய பெண்களில் பலர் நீளமாக முடி வளர்க்க விரும்புவதில்லை. அப்படியே வளர்த்தாலும் ஹேர் கலரிங், `ஸ்ட்ரெய்ட்டனிங்' செய்கிறார்கள். சிலர் ஹேர் டை பயன்படுத்துகிறார்கள். இதனாலும் முடி வளர்ச்சி பாதிக்கப்பட்டு முடி உதிரக்கூடும்.

சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாகக்கூட இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படலாம். அதிகரித்துவிட்ட வாகனங்களின் புகையால் காற்று மாசுபட்டு முடி கொட்டக்கூடும். முதலில் தலையில் பொடுகு ஏற்பட்டு அதன்பிறகு முடி கொட்டத் தொடங்கும். மலச்சிக்கல் உள்ளவர்களுக்குத் தலையில் பொடுகு வர வாய்ப்பு உள்ளது. சூரியஒளியில் அதிக நேரம் நிற்பதால் அல்ட்ரா வயலட் கதிர்கள் தலையை நேரடியாகப் பாதிப்பதால் தலைமுடி உடைந்து முடி கொட்டத் தொடங்கும்.
இன்றைக்கு இருசக்கர வாகனங்கள் அதிகரித்துவிட்டன. ஹெல்மெட்டில் வியர்வை தேங்குவதால் கிருமிகளின் வளர்ச்சி அதிகரித்து அது தலைமுடியைப் பாதிக்கிறது. இதனால் சிலருக்கு அளவுக்கதிகமாக முடி கொட்டுகிறது. இதைத் தவிர்க்க ஹெல்மெட்டில் ஆன்டி பாக்டீரியல் சொல்யூஷன் பயன்படுத்தலாம். வாரம் ஒருமுறையோ 10 நாள்களுக்கு ஒருமுறையோ ஹெல்மெட்டை சூரியஒளி படும்படி வைத்துப் பயன்படுத்தினால் கிருமிகளின் வளர்ச்சியைத் தடுக்கலாம். அதேபோல் ஹெல்மெட்டை அவ்வப்போது சுத்தப்படுத்தி பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கமுடியும்.
குளிக்கும் தண்ணீரில் உப்புத்தன்மை அதிகமிருந்தாலும் முடி கொட்ட வாய்ப்புள்ளது. தலைமுடியைப் பராமரிக்க உணவுப் பழக்கவழக்கங்களைச் சரியாகப் பின்பற்ற வேண்டும். உணவில் அதிகம் புரதம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். பருப்பு வகைகள், சோயா, தேங்காய்ப்பால், கொண்டைக்கடலை, வேர்க்கடலை, பப்பாளி, பச்சைப் பட்டாணி போன்றவற்றில் புரதம் நிறைந்துள்ளது. அதேபோல் பேரீச்சம்பழம், உலர்ந்த திராட்சையில் இரும்புச் சத்து நிறைந்துள்ளது. இரவில் இரண்டு பேரீச்சம்பழம், 10 உலர்ந்த திராட்சையை நீரில் ஊறவைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதன்மூலம் போதிய இரும்புச்சத்து கிடைக்கும். அத்திப்பழம், பீட்ரூட், மாதுளை, சப்போட்டா போன்ற பழங்களிலும் இரும்புச் சத்து நிறைந்துள்ளது. எள் மிட்டாய், எள்ளுருண்டை சாப்பிடுவதன்மூலமும் போதிய இரும்புச் சத்து கிடைக்கும்.
வாரத்துக்கு இரண்டு முறை முருங்கைக்கீரை சாப்பிட வேண்டும். கால்சியம், இரும்புச் சத்து, வைட்டமின் ஏ, ஃபோலிக் ஆசிட் போன்ற சத்துகள் கிடைக்கும். துத்தநாகம், வைட்டமின் ஈ, ஒமேகா 3 சத்துகள் நிறைந்த பாதாம், பிஸ்தா, வால்நட் போன்றவற்றையும் சேர்த்துக்கொள்ளலாம். கேரட், கிர்ணி, மாம்பழம், சீனிக்கிழங்கு போன்றவற்றில் வைட்டமின் ஏ நிறைந்திருக்கிறது. அவற்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
முடி கொட்டுதலுக்கு மனஅழுத்தம் காரணமாக இருப்பதால் யோகா சிறந்த தீர்வு தரும். வாரம் ஒருமுறை தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளித்தால் உடல்சூடு குறையும். சூடு காரணமாக முடி கொட்டுவதைத் தடுக்கலாம்.
நாம் சாப்பிடும் உணவுகளில் போதிய புரதச் சத்து இல்லாததால் முடி வளர்ச்சிக் குறைபாடு ஏற்படுகிறது. கர்ப்ப காலத்திலும் குழந்தைப்பேற்றுக்குப் பிறகும் பெண்களில் பலருக்கு முடி உதிர்வது என்பது இயல்பான ஒன்றாகும். இந்த முடி பிரச்னை ஹார்மோன் மாற்றங்களால் நிகழக்கூடியது. இது சிறிது காலத்துக்குப் பிறகு தானாகவே சரியாகிவிடும்.
இன்றைய பெண்களில் பலர் நீளமாக முடி வளர்க்க விரும்புவதில்லை. அப்படியே வளர்த்தாலும் ஹேர் கலரிங், `ஸ்ட்ரெய்ட்டனிங்' செய்கிறார்கள். சிலர் ஹேர் டை பயன்படுத்துகிறார்கள். இதனாலும் முடி வளர்ச்சி பாதிக்கப்பட்டு முடி உதிரக்கூடும்.
பூஞ்சைத் தொற்று (Fungal infection), வட்ட வடிவில் ஏற்படும் புழுவெட்டு (Ring infection) போன்றவை சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கக்கூடும். இவற்றிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள வேண்டுமானால், பாய், தலையணை, சீப்பு, டவல் போன்றவற்றைப் பயன்படுத்துவதில் கவனமாக இருக்க வேண்டும். பூஞ்சைத் தொற்று, புழுவெட்டால் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய பொருள்களை பயன்படுத்தினால் நம்மையும் அது பாதிக்கலாம்.

சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாகக்கூட இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படலாம். அதிகரித்துவிட்ட வாகனங்களின் புகையால் காற்று மாசுபட்டு முடி கொட்டக்கூடும். முதலில் தலையில் பொடுகு ஏற்பட்டு அதன்பிறகு முடி கொட்டத் தொடங்கும். மலச்சிக்கல் உள்ளவர்களுக்குத் தலையில் பொடுகு வர வாய்ப்பு உள்ளது. சூரியஒளியில் அதிக நேரம் நிற்பதால் அல்ட்ரா வயலட் கதிர்கள் தலையை நேரடியாகப் பாதிப்பதால் தலைமுடி உடைந்து முடி கொட்டத் தொடங்கும்.
இன்றைக்கு இருசக்கர வாகனங்கள் அதிகரித்துவிட்டன. ஹெல்மெட்டில் வியர்வை தேங்குவதால் கிருமிகளின் வளர்ச்சி அதிகரித்து அது தலைமுடியைப் பாதிக்கிறது. இதனால் சிலருக்கு அளவுக்கதிகமாக முடி கொட்டுகிறது. இதைத் தவிர்க்க ஹெல்மெட்டில் ஆன்டி பாக்டீரியல் சொல்யூஷன் பயன்படுத்தலாம். வாரம் ஒருமுறையோ 10 நாள்களுக்கு ஒருமுறையோ ஹெல்மெட்டை சூரியஒளி படும்படி வைத்துப் பயன்படுத்தினால் கிருமிகளின் வளர்ச்சியைத் தடுக்கலாம். அதேபோல் ஹெல்மெட்டை அவ்வப்போது சுத்தப்படுத்தி பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கமுடியும்.
குளிக்கும் தண்ணீரில் உப்புத்தன்மை அதிகமிருந்தாலும் முடி கொட்ட வாய்ப்புள்ளது. தலைமுடியைப் பராமரிக்க உணவுப் பழக்கவழக்கங்களைச் சரியாகப் பின்பற்ற வேண்டும். உணவில் அதிகம் புரதம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். பருப்பு வகைகள், சோயா, தேங்காய்ப்பால், கொண்டைக்கடலை, வேர்க்கடலை, பப்பாளி, பச்சைப் பட்டாணி போன்றவற்றில் புரதம் நிறைந்துள்ளது. அதேபோல் பேரீச்சம்பழம், உலர்ந்த திராட்சையில் இரும்புச் சத்து நிறைந்துள்ளது. இரவில் இரண்டு பேரீச்சம்பழம், 10 உலர்ந்த திராட்சையை நீரில் ஊறவைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதன்மூலம் போதிய இரும்புச்சத்து கிடைக்கும். அத்திப்பழம், பீட்ரூட், மாதுளை, சப்போட்டா போன்ற பழங்களிலும் இரும்புச் சத்து நிறைந்துள்ளது. எள் மிட்டாய், எள்ளுருண்டை சாப்பிடுவதன்மூலமும் போதிய இரும்புச் சத்து கிடைக்கும்.
வாரத்துக்கு இரண்டு முறை முருங்கைக்கீரை சாப்பிட வேண்டும். கால்சியம், இரும்புச் சத்து, வைட்டமின் ஏ, ஃபோலிக் ஆசிட் போன்ற சத்துகள் கிடைக்கும். துத்தநாகம், வைட்டமின் ஈ, ஒமேகா 3 சத்துகள் நிறைந்த பாதாம், பிஸ்தா, வால்நட் போன்றவற்றையும் சேர்த்துக்கொள்ளலாம். கேரட், கிர்ணி, மாம்பழம், சீனிக்கிழங்கு போன்றவற்றில் வைட்டமின் ஏ நிறைந்திருக்கிறது. அவற்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
முடி கொட்டுதலுக்கு மனஅழுத்தம் காரணமாக இருப்பதால் யோகா சிறந்த தீர்வு தரும். வாரம் ஒருமுறை தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளித்தால் உடல்சூடு குறையும். சூடு காரணமாக முடி கொட்டுவதைத் தடுக்கலாம்.
பொதுவாக, சைவ பிரியாணியில் வித்தியாசம் காட்டுவது சற்று சிரமம். இன்று கொண்டைக்கடலை, உருளைக்கிழங்கு வைத்து பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி சாதம் - 1 கப்
கொண்டைக்கடலை - 1 கப்
உருளைக்கிழங்கு - 2
வெங்காயம் - 2
நெய் - 2 ஸ்பூன்
தக்காளி சாஸ் - ½ கப்
கொத்தமல்லி இலை - 1 கைப்பிடி
புதினா - 1 கைப்பிடி
இஞ்சி பேஸ்ட் - 1 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
கொத்தமல்லி தூள் - 1 ஸ்பூன்
கரம் மசாலா - 1 ஸ்பூன்

செய்முறை :
வெங்காயம், கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கொண்டைக்கடலையை 8 மணி நேரம் ஊறவைத்து வேக வைத்து கொள்ளவும்.
உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும்.
பாசுமதி அரிசி நன்றாக கழுவி உதிரியாக வேக வைத்து கொள்ளவும்.
வாணலியில் நெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
இஞ்சி பச்சை வாசனை போனவுடன் தக்காளி சாஸ் சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் வேக வைத்த கொண்டைக்கடலை, வேக வைத்த உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
அடுத்து அதில் மிளகாய் தூள், கரம் மசாலா தூள், உப்பு, புதினா, கொத்தமல்லி சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
எல்லாம் சேர்த்து வரும் போது உதிரியாக வடித்த சாதம் சேர்த்து 5 நிமிடம் மூடி வைத்து வேகவைத்து பரிமாறவும்.
பாசுமதி அரிசி சாதம் - 1 கப்
கொண்டைக்கடலை - 1 கப்
உருளைக்கிழங்கு - 2
வெங்காயம் - 2
நெய் - 2 ஸ்பூன்
தக்காளி சாஸ் - ½ கப்
கொத்தமல்லி இலை - 1 கைப்பிடி
புதினா - 1 கைப்பிடி
இஞ்சி பேஸ்ட் - 1 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
கொத்தமல்லி தூள் - 1 ஸ்பூன்
கரம் மசாலா - 1 ஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை :
வெங்காயம், கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கொண்டைக்கடலையை 8 மணி நேரம் ஊறவைத்து வேக வைத்து கொள்ளவும்.
உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும்.
பாசுமதி அரிசி நன்றாக கழுவி உதிரியாக வேக வைத்து கொள்ளவும்.
வாணலியில் நெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
இஞ்சி பச்சை வாசனை போனவுடன் தக்காளி சாஸ் சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் வேக வைத்த கொண்டைக்கடலை, வேக வைத்த உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
அடுத்து அதில் மிளகாய் தூள், கரம் மசாலா தூள், உப்பு, புதினா, கொத்தமல்லி சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
எல்லாம் சேர்த்து வரும் போது உதிரியாக வடித்த சாதம் சேர்த்து 5 நிமிடம் மூடி வைத்து வேகவைத்து பரிமாறவும்.
சூப்பரான ஆலு சுண்டல் பிரியாணி ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் போது தாய்மார்கள் பல விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என மருத்துவத்துறை வல்லுனர்கள் கூறுகின்றனர்.
குழந்தைகளுக்கு உணவூட்டும் சிரமம் பெரும்பாலும் தந்தையர் அறியாததே! குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் தாய்மார்கள் பல விஷயங்களைக் கவனிக்க வேண்டும் என மருத்துவத் துறை வல்லுனர்கள் கூறுகின்றனர்.
1. குழந்தைகள் உணவைச் சிந்திவிட்டால் திட்டுவதோ, அடிப்பதோ, மிரட்டுவதோ கூடாது. கூடவே, குழந்தைகளுக்கு எவ்வளவு உணவு தேவையோ அந்த அளவு மட்டுமே உண்ணப் பழக்குங்கள். போதும் எனுமளவுக்கு உண்டபின் அதிகமாய் உண்ணச் சொல்லிக் கட்டாயப்படுத்த வேண்டாம்.
2. சோறு சாப்பிடு, கீரை சாப்பிடு அப்படி சாப்பிட்டால் சாக்லேட் வாங்கித் தரேன், ஐஸ்கிரீம் வாங்கித் தரேன் என்று சொல்வது தவறு. அப்படிச் சொல்வதனால் சோறு என்பது மோசமான பொருள் என்றும், சாக்லேட் மற்றும் ஐஸ்கிரீம் போன்றவை நல்ல பரிசுப் பொருட்கள் போன்ற ஒரு தோற்றம் குழந்தைகளின் மனதில் பதிந்து விடும். நாட்கள் செல்லச் செல்ல குழந்தைகளுக்கு உணவின் மீதான நாட்டம் குறையவும், இனிப்புகளின் மீதான விருப்பம் மிகைப்படவும் இது ஒரு காரணமாகிவிடுகிறது.
3. இனிப்புகளை முழுமையாய் தவிர்க்காதீர்கள். அப்படி மறுக்க மறுக்க குழந்தைகளுக்கு இனிப்புகளின் மீதான ஆர்வம் அதிகரித்துக் கொண்டே வரும். பின்பு வாய்ப்புக் கிடைக்கும் போது வட்டியும் முதலுமாய் சேர்த்து இனிப்பை உண்டு உடல்நலத்தைக் கெடுத்துக் கொள்ளும். எனவே ஒரு குறிப்பிட்ட அளவு இனிப்பு வகையறாக்களை வழங்கி வருவதே சிறப்பானது.

5. இன்றைக்கு எங்கும் பரவியிருக்கும் குளிர்பானங்கள், பதப்படுத்தப்பட்ட பழச்சாறுகள், எனர்ஜி பானங்கள் போன்றவை குழந்தைகளுக்கு எந்த நன்மையும் தருவதில்லை என்கிறது ஜெர்னல் பீடியாட்ரிக்ஸ் ஆய்வு முடிவு ஒன்று. மாறாக இவை உடல் நலத்தைக் கெடுத்து விடுகிறதாம். எனவே 100 விழுக்காடு பழச்சாறு என்றெல்லாம் கவர்ச்சிகரமாய் வரும் விளம்பரங்களை நம்பி ஏமாந்து விடாதீர்கள்.
6. பழச்சாறு போன்றவற்றுக்குப் பதிலாக தண்ணீர் அதிகமாய் அருந்துவதற்குக் குழந்தைகளை உற்சாகப்படுத்துங்கள். எல்லோரும் எல்லாவற்றையும் விரும்பமாட்டார்கள் என்பதும் நமக்கு மிகவும் பிடித்தது இன்னொருவருக்கு சுத்தமாகப் பிடிக்காமல் போகும் என்பதையும் எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். பிடிக்கவில்லை என்று சொல்வதனால் உங்கள் குழந்தையை திட்டாதீர்கள்.
7. குழந்தைகளுக்கு ஒரே மாதிரியான உணவை கொடுத்து போரடிக்காதீர்கள். ஒரே மாதிரியான உணவைக் கொடுக்க வேண்டி வந்தால் அதன் வடிவத்தையோ, சுவையையோ எதையேனும் வித்தியாசமாய் காண்பியுங்கள். வித்தியாசமானவை குழந்தைகளுக்குப் பிடிக்கும் என்பதையும், பிடித்தமான பாத்திரத்துக்காகவே குழந்தைகள் உணவை உண்பார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.
8. ஒரு கடி, ஒரு வாய் என குழந்தைகளை உற்சாகப்படுத்துங்கள். காய்கறி போன்றவற்றை தினமும் கொஞ்சம் கொஞ்சம் உண்ணப் பழக்கினாலே அவை நீண்டகால உணவுப் பழக்கமாய் மாறிவிடும். எனினும், எதையும் அளவுக்கு மீறி வற்புறுத்தாதீர்கள்.
9. குழந்தைகளுக்கு பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை பறவை, பூ, படகு என வித்தியாசமான வடிவங்களில் வெட்டிப் பரிமாறிப் பாருங்கள். குழந்தைகள் வெகுவாக விரும்பி உண்பார்கள்.
சிறு சிறு சமையல் வேலைகளில் உங்கள் குழந்தைகளை ஈடுபடுத்துங்கள். அவர்களுக்கு உணவின் மீதான நாட்டம் அதிகரிக்கும்.
1. குழந்தைகள் உணவைச் சிந்திவிட்டால் திட்டுவதோ, அடிப்பதோ, மிரட்டுவதோ கூடாது. கூடவே, குழந்தைகளுக்கு எவ்வளவு உணவு தேவையோ அந்த அளவு மட்டுமே உண்ணப் பழக்குங்கள். போதும் எனுமளவுக்கு உண்டபின் அதிகமாய் உண்ணச் சொல்லிக் கட்டாயப்படுத்த வேண்டாம்.
2. சோறு சாப்பிடு, கீரை சாப்பிடு அப்படி சாப்பிட்டால் சாக்லேட் வாங்கித் தரேன், ஐஸ்கிரீம் வாங்கித் தரேன் என்று சொல்வது தவறு. அப்படிச் சொல்வதனால் சோறு என்பது மோசமான பொருள் என்றும், சாக்லேட் மற்றும் ஐஸ்கிரீம் போன்றவை நல்ல பரிசுப் பொருட்கள் போன்ற ஒரு தோற்றம் குழந்தைகளின் மனதில் பதிந்து விடும். நாட்கள் செல்லச் செல்ல குழந்தைகளுக்கு உணவின் மீதான நாட்டம் குறையவும், இனிப்புகளின் மீதான விருப்பம் மிகைப்படவும் இது ஒரு காரணமாகிவிடுகிறது.
3. இனிப்புகளை முழுமையாய் தவிர்க்காதீர்கள். அப்படி மறுக்க மறுக்க குழந்தைகளுக்கு இனிப்புகளின் மீதான ஆர்வம் அதிகரித்துக் கொண்டே வரும். பின்பு வாய்ப்புக் கிடைக்கும் போது வட்டியும் முதலுமாய் சேர்த்து இனிப்பை உண்டு உடல்நலத்தைக் கெடுத்துக் கொள்ளும். எனவே ஒரு குறிப்பிட்ட அளவு இனிப்பு வகையறாக்களை வழங்கி வருவதே சிறப்பானது.
4. அதிக கொறித்தல் பொருட்களைக் குழந்தைகளுக்கு வழங்காமல் இருப்பதே நல்லது. குறிப்பாக குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் உணவு ஊட்டுவதும், சரியான நேரத்தில் தின்பண்டங்கள் கொடுப்பதும் நல்லது. எப்போதும் ஏதேனும் கொறித்துக் கொண்டிருக்கும் குழந்தைகள் ஆரோக்கியமான மதிய உணவையோ, இரவு உணவையோ தேவையான அளவு சாப்பிட மறுக்கும். வீடுகளில் தேவையற்ற உணவுப் பொருட்களை வாங்கி நிறைக்காதீர்கள். உங்களுக்குப் பிடிக்கும் என்பதற்காக நீங்கள் வாங்கி வைக்கும் குளிர்பானமோ, சிப்ஸோ குழந்தை சாப்பிடக் கூடாது என நீங்கள் எண்ணுவதில் அர்த்தமில்லை. குறைந்தபட்சம் குழந்தைகளிடமிருந்து அவற்றை முழுமையாய் மறையுங்கள்.

5. இன்றைக்கு எங்கும் பரவியிருக்கும் குளிர்பானங்கள், பதப்படுத்தப்பட்ட பழச்சாறுகள், எனர்ஜி பானங்கள் போன்றவை குழந்தைகளுக்கு எந்த நன்மையும் தருவதில்லை என்கிறது ஜெர்னல் பீடியாட்ரிக்ஸ் ஆய்வு முடிவு ஒன்று. மாறாக இவை உடல் நலத்தைக் கெடுத்து விடுகிறதாம். எனவே 100 விழுக்காடு பழச்சாறு என்றெல்லாம் கவர்ச்சிகரமாய் வரும் விளம்பரங்களை நம்பி ஏமாந்து விடாதீர்கள்.
6. பழச்சாறு போன்றவற்றுக்குப் பதிலாக தண்ணீர் அதிகமாய் அருந்துவதற்குக் குழந்தைகளை உற்சாகப்படுத்துங்கள். எல்லோரும் எல்லாவற்றையும் விரும்பமாட்டார்கள் என்பதும் நமக்கு மிகவும் பிடித்தது இன்னொருவருக்கு சுத்தமாகப் பிடிக்காமல் போகும் என்பதையும் எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். பிடிக்கவில்லை என்று சொல்வதனால் உங்கள் குழந்தையை திட்டாதீர்கள்.
7. குழந்தைகளுக்கு ஒரே மாதிரியான உணவை கொடுத்து போரடிக்காதீர்கள். ஒரே மாதிரியான உணவைக் கொடுக்க வேண்டி வந்தால் அதன் வடிவத்தையோ, சுவையையோ எதையேனும் வித்தியாசமாய் காண்பியுங்கள். வித்தியாசமானவை குழந்தைகளுக்குப் பிடிக்கும் என்பதையும், பிடித்தமான பாத்திரத்துக்காகவே குழந்தைகள் உணவை உண்பார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.
8. ஒரு கடி, ஒரு வாய் என குழந்தைகளை உற்சாகப்படுத்துங்கள். காய்கறி போன்றவற்றை தினமும் கொஞ்சம் கொஞ்சம் உண்ணப் பழக்கினாலே அவை நீண்டகால உணவுப் பழக்கமாய் மாறிவிடும். எனினும், எதையும் அளவுக்கு மீறி வற்புறுத்தாதீர்கள்.
9. குழந்தைகளுக்கு பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை பறவை, பூ, படகு என வித்தியாசமான வடிவங்களில் வெட்டிப் பரிமாறிப் பாருங்கள். குழந்தைகள் வெகுவாக விரும்பி உண்பார்கள்.
சிறு சிறு சமையல் வேலைகளில் உங்கள் குழந்தைகளை ஈடுபடுத்துங்கள். அவர்களுக்கு உணவின் மீதான நாட்டம் அதிகரிக்கும்.
பப்பாளி நன்றாக பழுத்த பின்னர் தினமும் 20 கிராம் அளவில் கர்ப்பிணிகள் எடுத்துக் கொள்ளலாம். இதனால் கருவுக்கோ, தாய்க்கோ எந்தப் பிரச்சனையும் வருவதில்லை.
பப்பாளி நம் ஊரில் எளிதில் கிடைக்கும் சத்துமிக்கப் பழம். இதில் உள்ள ஏ.பி. வைட்டமின்கள், மினரல்கள், பொட்டாசியம், பீட்டா கரோட்டின், போலிக் ஆசிட் போன்ற ரிச்சான சத்துகள் கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் உதவுகிறது. இயல்பிலேயே இந்தப் பழம் நெஞ்சு எரிச்சல், மலச்சிக்கல் போன்ற பிரச்னைகளுக்கு தீர்வாகிறது.
கர்ப்பகாலத்தில் ஏற்படும் ஜீரண பிரச்சனைகள் மற்றும் மலச்சிக்கலுக்கும் பப்பாளி பழம் சாப்பிடுவது கைகொடுக்கும். பப்பாளிக் காயில் உள்ள பெப்சின் லாக்டெக்ஸ் போன்ற பொருட்கள் கருவுற்ற பெண்கள் சாப்பிடுவது பாதுகாப்பற்றது என்பதை வெளிநாட்டில் செய்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டது.
கிராமப்புறங்களில் வறுமையான நிலையில் கருவுறும் பல பெண்கள் போதிய சத்துணவு எடுத்துக் கொள்ள வாய்ப்பின்றி உள்ளனர். இவர்களுக்கு பப்பாளிப் பழம் ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லாம். நம் ஊரில் இந்தப் பழத்தை சாப்பிடாமல் தவிர்ப்பது அறிவுப்பூர்வமானது அல்ல.
நன்றாக பழுத்த பின்னர் தினமும் 20 கிராம் அளவில் கர்ப்பிணிகள் எடுத்துக் கொள்ளலாம். இதனால் கருவுக்கோ, தாய்க்கோ எந்தப் பிரச்னையும் வருவதில்லை. ஒரு சிலருக்கு ஏதாவது ஒரு காய் அல்லது பழம் சாப்பிடுவதில் ஒவ்வாமை இருக்கலாம். ஒவ்வாமை பிரச்னை உள்ளவர்கள் பப்பாளியைக் காயாக எடுத்துக் கொள்ளும் போது அதில் உள்ள பால் ஒவ்வாமையாக மாற வாய்ப்புள்ளது.
ஒவ்வாமை பிரச்னை உள்ளவர்களும் காயாக சாப்பிடுவதைத் தவிர்க்கலாம். காயாக சாப்பிடத்தான் யோசிக்க வேண்டும். பழமாக சாப்பிட யோசிக்க வேண்டியதே இல்லை. எளிதாக கிடைக்கும் சத்து மிக்க பப்பாளிப்பழத்தை தவறான நம்பிக்கைகளுக்காக தவிர்க்க வேண்டாம்.
கர்ப்பகாலத்தில் ஏற்படும் ஜீரண பிரச்சனைகள் மற்றும் மலச்சிக்கலுக்கும் பப்பாளி பழம் சாப்பிடுவது கைகொடுக்கும். பப்பாளிக் காயில் உள்ள பெப்சின் லாக்டெக்ஸ் போன்ற பொருட்கள் கருவுற்ற பெண்கள் சாப்பிடுவது பாதுகாப்பற்றது என்பதை வெளிநாட்டில் செய்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டது.
கிராமப்புறங்களில் வறுமையான நிலையில் கருவுறும் பல பெண்கள் போதிய சத்துணவு எடுத்துக் கொள்ள வாய்ப்பின்றி உள்ளனர். இவர்களுக்கு பப்பாளிப் பழம் ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லாம். நம் ஊரில் இந்தப் பழத்தை சாப்பிடாமல் தவிர்ப்பது அறிவுப்பூர்வமானது அல்ல.
நன்றாக பழுத்த பின்னர் தினமும் 20 கிராம் அளவில் கர்ப்பிணிகள் எடுத்துக் கொள்ளலாம். இதனால் கருவுக்கோ, தாய்க்கோ எந்தப் பிரச்னையும் வருவதில்லை. ஒரு சிலருக்கு ஏதாவது ஒரு காய் அல்லது பழம் சாப்பிடுவதில் ஒவ்வாமை இருக்கலாம். ஒவ்வாமை பிரச்னை உள்ளவர்கள் பப்பாளியைக் காயாக எடுத்துக் கொள்ளும் போது அதில் உள்ள பால் ஒவ்வாமையாக மாற வாய்ப்புள்ளது.
ஒவ்வாமை பிரச்னை உள்ளவர்களும் காயாக சாப்பிடுவதைத் தவிர்க்கலாம். காயாக சாப்பிடத்தான் யோசிக்க வேண்டும். பழமாக சாப்பிட யோசிக்க வேண்டியதே இல்லை. எளிதாக கிடைக்கும் சத்து மிக்க பப்பாளிப்பழத்தை தவறான நம்பிக்கைகளுக்காக தவிர்க்க வேண்டாம்.
நம் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு பப்பாளி மருந்தாக அமைகிறது. இன்று சத்தான பப்பாளியை வைத்து சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பப்பாளி பழம் - சிறியது
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
வெங்காயம் - ஒன்று
காய்கறி வேக வைத்த தண்ணீர் - 3 கப்
மிளகுத்தூள் - காரத்துக்கேற்ப
கொத்தமல்லி தழை - சிறிதளவு

செய்முறை :
வெங்காயம், கொத்தமல்லி, பப்பாளி பழத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்ற சூடானதும் வெங்காயம், இஞ்சி, பப்பாளி சேர்த்து வதக்கி ஆற வைக்கவும்.
ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் காய்கறி வேக வைத்த தண்ணீருடன் இந்தக் கலவையை சேர்த்து கொதிக்க வைத்து உப்பு சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கி... மிளகுத்துள், கொத்தமல்லி தூவி பருகவும்.
சூப்பரான பப்பாளி இஞ்சி சூப் ரெடி.
பப்பாளி பழம் - சிறியது
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
வெங்காயம் - ஒன்று
காய்கறி வேக வைத்த தண்ணீர் - 3 கப்
மிளகுத்தூள் - காரத்துக்கேற்ப
கொத்தமல்லி தழை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு.

செய்முறை :
வெங்காயம், கொத்தமல்லி, பப்பாளி பழத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்ற சூடானதும் வெங்காயம், இஞ்சி, பப்பாளி சேர்த்து வதக்கி ஆற வைக்கவும்.
ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் காய்கறி வேக வைத்த தண்ணீருடன் இந்தக் கலவையை சேர்த்து கொதிக்க வைத்து உப்பு சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கி... மிளகுத்துள், கொத்தமல்லி தூவி பருகவும்.
சூப்பரான பப்பாளி இஞ்சி சூப் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பெண்கள் சமூக வலைத்தளங்களில் நமது தனிப்பட்ட விஷயங்களைப் பகிராமலும், புகைப்படங்களைப் பகிராமலும், விரோத சிந்தனைகளைப் பகிராமலும் இருந்தால் பெரும்பாலான சிக்கல்களிலிருந்து விடுபட்டு விடலாம்.
சமூக வலைத்தளங்கள் இன்றைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாய் உருமாறியிருக்கின்றன. ஒரு காலத்தில் இணையம் என்பதே தொழில்நுட்ப வல்லுநர்களுக்கானது எனும் நிலமை இருந்தது. இன்றைக்கு சமூக வலைத்தளங்களில் உலவாத மக்களே இல்லை எனும் நிலை தான் எங்கும். அதிலும் வீடுகளில் பொழுது போகாமல் இருக்கும் பெண்கள் சமூக வலைத்தளங்களை சீரியலுக்கு மாற்றாக நினைத்துக் கொள்வதுண்டு.
சமூக வலைத்தளங்களில் பெண்களுக்கு இருக்கும் மிக முக்கியமான அச்சுறுத்தல் பாதுகாப்பு தான். வலைத்தளங்களில் தங்களுடைய புகைப்படங்களை வெளியிடுவதில் பெரும்பாலான இளம் பெண்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். அதில் கிடைக்கின்ற கமென்ட்களும், லைக்களும் தங்களுக்கான அங்கீகாரம் என அவர்கள் நினைக்கின்றனர். ஆனால் கருத்து சொல்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் விஷமிகள் என்பது தான் அச்சமூட்டும் விஷயம்.
பலான தளங்களில் இருக்கும் புகைப்படங்களில் 69 சதவீதம் புகைப்படங்களும் சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரியாமல் பயன்படுத்தப்படுவது தான் என சமீபத்தில் புள்ளி விவரம் ஒன்று சொன்னது. ஒரு புகைப்படம் நல்ல தளத்தில் இருப்பதற்கும், பலான தளத்தில் இருப்பதற்கும் உள்ள வேறுபாடுகளை நீங்கள் அறிவீர்கள். அந்த தளங்களில் பயணிப்பவர்களுடைய பார்வையின் உக்கிரத்தையும், வக்கிரத்தையும் நீங்கள் உணர்வீர்கள். எனவே எந்த ஒரு புகைப்படத்தையும் பதிவேற்றும் முன் ஒரு கேள்வி கேளுங்கள். “இது அவசியம் பதிவேற்ற வேண்டுமா ?”. அவசியம் என மனம் சொன்னால் பதிவேற்றுங்கள், இல்லையேல் விட்டு விடுங்கள்.
இன்னொரு ஆபத்தான ஏரியா சேட்டிங். உரையாடுங்கள் என வசீகர அழைப்புடன் எக்கச்சக்கமான செயலிகள் இப்போது வருகின்றன. வாட்ஸப், மெசஞ்சர், டெலிகிராம் என ஏகப்பட்ட செயலிகள் இருக்கின்றன. இத்தகைய தளங்களில் உரையாடும் போதும் கவனம் அவசியம். நாம் ஒருவருக்கு அனுப்புகின்ற ஒரு செய்தி நேரடியாக அவரிடம் போவதில்லை. முதலில் நமது மொபைபில் பயணிக்கிறது, பிறகு நமது மொபைல் நெட்வர்க்கில் பயணிக்கிறது, பின்னர் அடுத்த நபரின் நெட்வர்க்கில் பயணிக்கிறது, பின் அவரது மொபைபில் போகிறது, இரண்டு மொபைல்களிலும் உள்ள ஆப் வழியாக செல்கிறது. இந்த பயணத்தின் எந்த ஒரு ஒரு இடத்தில் வேண்டுமானாலும் உங்களுடைய தகவலை சம்பந்தப் பட்ட நெட்வர்க்கோ, அல்லது மொபைல் நிறுவனமோ, அல்லது ஆப் நிறுவனமோ மிக எளிதாக எடுக்க முடியும்.
சமூக வலைத்தளங்களில் தேவையற்ற விஷயங்களைக் கொடுப்பது வம்பை விலைக்கு வாங்குவது போல. ‘பிவேர் ஆஃ டி.எம்.ஐ” என ஆங்கிலத்தில் சொல்வார்கள். ஏகப்பட்ட தகவல்களை இணையத்தில் கொட்டாமல் கவனமாய் இருங்கள் என்பது அதன் பொருள்.
நமது பெற்றோர் பெயர், விலாசம், மொபைல் நம்பர் போன்ற எதுவுமே இணையத்தில் இல்லாமல் இருப்பதே சிறந்தது. நமது பிறந்த ஊர், நம்முடைய வங்கி விவரங்கள் போன்ற தகவல்களெல்லாம் பல்வேறு தகவல் திருட்டுகளுக்குப் பயன்படலாம் என்பதில் கவனமாய் இருங்கள்.
சமூக வலைத்தளத்தை மொபைலில் வைத்திருக்கிறீர்களெனில், மொபைலுக்கு ஒரு வலிமையான பாஸ்வேர்ட் போடுங்கள். ஆப்ஸ்களை அணுக தனி பாஸ்வேர்ட் போட்டு வைப்பதும் நல்லது.
சமூக வலைத்தளங்களில் யாரேனும் தவறாய் அணுகினால் அவர்களை பிளாக் செய்யவோ, நேரடியாக “சாரி” என சொல்லி விலகிக் கொள்வதோ மிகவும் முக்கியமான தேவை. அடுத்த நபர் என்ன நினைப்பாரோ ? காயமடைவாரோ எனும் சந்தேகங்கள் தேவையில்லை.
குழந்தைகள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தாமல் இருப்பதே நல்லது. அப்படி பயன்படுத்துகிறார்களெனில் பெற்றோர் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் பிள்ளைகளை வைத்திருக்க வேண்டும். சமூக வலைத்தளச் சிக்கல்களை அவர்களுக்கு விளக்க வேண்டும். எதை செய்யலாம், எதைச் செய்யக் கூடாது என்பதை பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
சமூக வலைத்தளங்களில் நமது தனிப்பட்ட விஷயங்களைப் பகிராமலும், புகைப்படங்களைப் பகிராமலும், விரோத சிந்தனைகளைப் பகிராமலும் இருந்தால் பெரும்பாலான சிக்கல்களிலிருந்து விடுபட்டு விடலாம்.
சமூக வலைத்தளங்களில் பெண்களுக்கு இருக்கும் மிக முக்கியமான அச்சுறுத்தல் பாதுகாப்பு தான். வலைத்தளங்களில் தங்களுடைய புகைப்படங்களை வெளியிடுவதில் பெரும்பாலான இளம் பெண்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். அதில் கிடைக்கின்ற கமென்ட்களும், லைக்களும் தங்களுக்கான அங்கீகாரம் என அவர்கள் நினைக்கின்றனர். ஆனால் கருத்து சொல்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் விஷமிகள் என்பது தான் அச்சமூட்டும் விஷயம்.
பலான தளங்களில் இருக்கும் புகைப்படங்களில் 69 சதவீதம் புகைப்படங்களும் சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரியாமல் பயன்படுத்தப்படுவது தான் என சமீபத்தில் புள்ளி விவரம் ஒன்று சொன்னது. ஒரு புகைப்படம் நல்ல தளத்தில் இருப்பதற்கும், பலான தளத்தில் இருப்பதற்கும் உள்ள வேறுபாடுகளை நீங்கள் அறிவீர்கள். அந்த தளங்களில் பயணிப்பவர்களுடைய பார்வையின் உக்கிரத்தையும், வக்கிரத்தையும் நீங்கள் உணர்வீர்கள். எனவே எந்த ஒரு புகைப்படத்தையும் பதிவேற்றும் முன் ஒரு கேள்வி கேளுங்கள். “இது அவசியம் பதிவேற்ற வேண்டுமா ?”. அவசியம் என மனம் சொன்னால் பதிவேற்றுங்கள், இல்லையேல் விட்டு விடுங்கள்.
இன்னொரு ஆபத்தான ஏரியா சேட்டிங். உரையாடுங்கள் என வசீகர அழைப்புடன் எக்கச்சக்கமான செயலிகள் இப்போது வருகின்றன. வாட்ஸப், மெசஞ்சர், டெலிகிராம் என ஏகப்பட்ட செயலிகள் இருக்கின்றன. இத்தகைய தளங்களில் உரையாடும் போதும் கவனம் அவசியம். நாம் ஒருவருக்கு அனுப்புகின்ற ஒரு செய்தி நேரடியாக அவரிடம் போவதில்லை. முதலில் நமது மொபைபில் பயணிக்கிறது, பிறகு நமது மொபைல் நெட்வர்க்கில் பயணிக்கிறது, பின்னர் அடுத்த நபரின் நெட்வர்க்கில் பயணிக்கிறது, பின் அவரது மொபைபில் போகிறது, இரண்டு மொபைல்களிலும் உள்ள ஆப் வழியாக செல்கிறது. இந்த பயணத்தின் எந்த ஒரு ஒரு இடத்தில் வேண்டுமானாலும் உங்களுடைய தகவலை சம்பந்தப் பட்ட நெட்வர்க்கோ, அல்லது மொபைல் நிறுவனமோ, அல்லது ஆப் நிறுவனமோ மிக எளிதாக எடுக்க முடியும்.
சமூக வலைத்தளங்களில் தேவையற்ற விஷயங்களைக் கொடுப்பது வம்பை விலைக்கு வாங்குவது போல. ‘பிவேர் ஆஃ டி.எம்.ஐ” என ஆங்கிலத்தில் சொல்வார்கள். ஏகப்பட்ட தகவல்களை இணையத்தில் கொட்டாமல் கவனமாய் இருங்கள் என்பது அதன் பொருள்.
நமது பெற்றோர் பெயர், விலாசம், மொபைல் நம்பர் போன்ற எதுவுமே இணையத்தில் இல்லாமல் இருப்பதே சிறந்தது. நமது பிறந்த ஊர், நம்முடைய வங்கி விவரங்கள் போன்ற தகவல்களெல்லாம் பல்வேறு தகவல் திருட்டுகளுக்குப் பயன்படலாம் என்பதில் கவனமாய் இருங்கள்.
சமூக வலைத்தளத்தை மொபைலில் வைத்திருக்கிறீர்களெனில், மொபைலுக்கு ஒரு வலிமையான பாஸ்வேர்ட் போடுங்கள். ஆப்ஸ்களை அணுக தனி பாஸ்வேர்ட் போட்டு வைப்பதும் நல்லது.
சமூக வலைத்தளங்களில் யாரேனும் தவறாய் அணுகினால் அவர்களை பிளாக் செய்யவோ, நேரடியாக “சாரி” என சொல்லி விலகிக் கொள்வதோ மிகவும் முக்கியமான தேவை. அடுத்த நபர் என்ன நினைப்பாரோ ? காயமடைவாரோ எனும் சந்தேகங்கள் தேவையில்லை.
குழந்தைகள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தாமல் இருப்பதே நல்லது. அப்படி பயன்படுத்துகிறார்களெனில் பெற்றோர் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் பிள்ளைகளை வைத்திருக்க வேண்டும். சமூக வலைத்தளச் சிக்கல்களை அவர்களுக்கு விளக்க வேண்டும். எதை செய்யலாம், எதைச் செய்யக் கூடாது என்பதை பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
சமூக வலைத்தளங்களில் நமது தனிப்பட்ட விஷயங்களைப் பகிராமலும், புகைப்படங்களைப் பகிராமலும், விரோத சிந்தனைகளைப் பகிராமலும் இருந்தால் பெரும்பாலான சிக்கல்களிலிருந்து விடுபட்டு விடலாம்.






