என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    இந்த ஆசனம் தொடர்ந்து செய்து வந்தால் கண்கள் சுத்தமாகி பிரகாசமடையும். பார்வை தெளிவாகும். உறக்கமின்மை, மன அழுத்தம், சோர்வு, படபடப்பு நீங்கும்.
    பெயர் விளக்கம்: கண்களை தூய்மைபடுத்தும் பயிற்சியே த்ராடகா.

    செய்முறை: ஒரு சிறிய முக்காலி அல்லது நாற்காலியின் மேல் எரியும் குத்து விளக்கு அல்லது மெழுகுவர்த்தி ஒன்றை வைக்கவும். அங்கிருந்து ஒரு மீட்டருக்கு பின்னால் அனுகூலமான தியான ஆசனத்தில் உட்காரவும். தீபத்தின் சுடர் கண்களுக்கு நேராக இருக்கட்டும். கைகளை நீட்டி முழங்கால்களின் மேல் கைவிரல்களால் சின் முத்திரை செய்யவும். கண்களை மூடவும். உடல் முழுவதும் தளர்வாக இருக்கட்டும்.

    மெதுவாக கண்களை திறந்து இமைக்காமல் தீபத்தின் சுடரை உற்றுப் பார்க்கவும்.  பயிற்சியின் போது தீபத்தின் சுடர் அசையாமல் ஒரே சீராக எரிய வேண்டும்.

    முதலில் 1 முதல் 2 நிமிடம் உற்றுப் பார்க்க பழகவும் தொடர்ந்த பயிற்சியில் நேரத்தை அதிகப்படுத்தி 10 முதல் 15 நிமிடம் வரை செய்யவும்.

    பயிற்சியின் இடை, இடையில் கண்களை மூடி புறத்தில் பார்த்த அக்னி சுடர், புருவ நடுவில் பிரகாசிப்பது போல் கற்பனையாக நினைத்துப் பார்க்கவும். பயிற்சியின் முடிவில் கண்களை மூடவும். உள்ளங்களையும் நன்றாக தேய்த்து மூடிய கண்களின் மேல் இரு உள்ளங்களையும் சில நிமிடம் வைத்திருக்கவும். சில நிமிடங்களுக்கு பிறகு முகத்திற்கு முன்பாக இருக்கும் கைகளை எடுத்து வலது உள்ளங்கையை கண்ணால் பார்க்கவும்.

    பயன்கள்:
    கண்கள் சுத்தமாகி பிரகாசமடையும். பார்வை தெளிவாகும். உறக்கமின்மை, மன அழுத்தம், சோர்வு, படபடப்பு நீங்கும். நினைவாற்றல் மிகும். மன ஒருநிலைப்பாடு அதிகரிக்கும். மனதின் ஆற்றல் அதிகரிக்கும்.

    அநேகர் சொல்லும் சொல்லாக நெஞ்செரிச்சல் என்ற சொல் ஆகிவிட்டது. வயிற்றின் மேற்பகுதி, நெஞ்சு இவற்றில் நெருப்பு போல் எரிச்சல் தாங்கவில்லை என அநேகர் கூறுவர். இதற்கு அநேக காரணங்கள் இருக்கின்றன.
    அநேகர் சொல்லும் சொல்லாக நெஞ்செரிச்சல் என்ற சொல் ஆகிவிட்டது. வயிற்றின் மேற்பகுதி, நெஞ்சு இவற்றில் நெருப்பு போல் எரிச்சல் தாங்கவில்லை என அநேகர் கூறுவர். இதற்கு அநேக காரணங்கள் இருக்கின்றன.

    வயிற்றில் உள்ள அமிலம் மேலேறி உணவுக் குழாய்க்கு வரும் பொழுது உணவுக்குழாயின் உள் பகுதிகளில் பாதிப்பு ஏற்படுவதால் நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது. கார மசாலா உணவுகளே நெஞ்செரிச்சலுக்கு முக்கிய காரணம் ஆகின்றன.

    * நிணிஸிஞி எனப்படும் ஆசிட் மேல் எதிர்த்து எழுதல் காரணமாக தீரா நெஞ்செரிச்சல் ஏற்படலாம்.

    * ஆஸ்ப்ரின் மற்றும் சில வலிநிவாரண மாத்திரைகளால் நெஞ்செரிச்சல் உண்டாகலாம். அதனால்தான் இந்த மாத்திரைகளை உணவுக்குப் பின்பே மருத்துவர் பரிந்துரைப்பார்.

    * ஆல்கஹால் போன்ற பிரிவுகள் வயிற்றில் ஆசிட் சுரப்பினை அதிகம் கூட்டி விடுவதன் காரணமாக நெஞ்செரிச்சல் ஏற்படலாம்.

    * புகை பிடித்தலும் மேற்கூறிய காரணத்தினைப் போன்றதே. இவைகள் உணவுக்குழாயினையே வலுவிலக்கச் செய்துவிடும்.

    * கர்ப்ப காலத்தில் கீழ் வயிற்றில் ஏற்படும் அழுத்தத்தால் அஜீரண கோளாறு மற்றும் நெஞ்செரிச்சல் ஏற்படலாம்.

    * புற்றுநோய்

    * மாரடைப்பு

    * அதிக எடை

    * மன உளைச்சல்

    * அதிக (அ) குறைந்த வயிற்று ஆசிட் இவை அனைத்துமே நெஞ்செரிச்சலுக்கு காரணமாகின்றன. மிகச் சாதாரண காரணம் முதல், மிக அபாயகரமான காரணம் வரை நெஞ்செரிச்சல் பாதிப்பு இருக்கும் என்பதனை அறிந்துகொண்டால் நாம் கவனத்துடன் இருக்க முடியும். பொதுவாக நெஞ்செரிச்சலைத் தவிர்க்க நாம் கட்டாயம் சில வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

    * அதிக உணவு உண்ணாதீர்கள். சிலர் சாப்பிடும் பொழுது அதிகமாக சாப்பிடுவார்கள். பிறகும் ஏதாவது சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள். இவர்களுக்கு உணவுக்குழாய் சதைகளே பலவீனமாகிவிடும். இத்தகையோருக்கு நெஞ்செரிச்சல் எப்பொழுதும் மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கும்.

    * எடையினை சரியான அளவில் வைத்திருங்கள்.

    * சில உணவுகள் நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும்.

    * மது, பால், சாக்லேட், காபி, பொறித்த, வறுத்த உணவுகள், சிலருக்கு பச்சை வெங்காயம், பாஸ்ட் புட்ஸ் போன்றவை நெஞ்செரிச்சலை ஏற்படுத்தக் கூடியவை.

    * காற்றடைக்கப்பட்ட குளிர்பானங்களைத் தவிருங்கள்

    * வயிற்றின் மேல் படுப்பதனைத் தவிர்த்து பக்கவாட்டில் தூங்குங்கள். தலையனை வைத்து சற்று தலையினை உயர்த்தி படுங்கள்.

    * இடது பக்கவாட்டில் படுத்து உறங்குவது நல்லது.

    * வயிறு புடைக்க உணவு உட்கொண்டு தூங்கச் செல்லாதீர்கள். தூங்குவதற்கு 3 மணிநேரம் முன்பே உணவு உட்கொள்வது சரியானது.

    * அதிக உணவு உண்ணாதீர்கள் (எப்பொழுதும்)

    * அதிக கார்போ ஹைட்ரேட்டால் வயிறு உப்புசம், நெஞ்செரிச்சல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்

    * சோற்றுக் கற்றாழையினை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள் அல்லது சோற்றுக்கற்றாழை ஜூஸ் குடியுங்கள். இது வலி நீக்கும். வீக்கத்தினைக் குறைக்கும். நெஞ்செரிச்சலை நீக்கும். நோய் எதிர்ப்புச் சக்தியினைக் கூட்டும்.

    * ஒரு லிட்டர் தண்ணீரில் 1/2 எலுமிச்சை சாறு பிழிந்து அதனை குடிநீராகப் பயன்படுத்துங்கள்.

    * இஞ்சி, சிறிது பட்டைதூள் சேர்த்து டீ குடியுங்கள்.

    * தினமும் 15 நிமிடங்களாவது நடக்க வேண்டும். இது உணவு செரிமானத்திற்கு உதவுவதோடு மூளையினை சுறுசுறுப்பாய் இயங்கச் செய்கின்றது.

    * முதுகு வலி நீக்குகின்றது.

    * இடுப்பு பருமனை  குறைக்கின்றது.

    * கால்களில் ரத்த குழாய்களில் அடைப்பு ஏற்படுவதினைத் தவிர்க்கின்றது.

    * இருதய பாதிப்பினை குறைக்கின்றது. 
    பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு சத்தான உணவுகளை சாப்பிட கொடுப்பது நல்லது. இன்று குழந்தைகளுக்கு சத்தான சிக்கன் சூப் ரைஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    நாட்டுக்கோழி - 100 கிராம்
    வேகவைத்த சாதம் இரண்டு கப் (ஓரளவு குழைந்திருந்தால் நன்றாக இருக்கும்)
    சின்ன வெங்காயம் - 10
    தக்காளி - ஒன்று
    மிளகு - ஒரு டீஸ்பூன்
    சீரகம் -  ஒரு டீஸ்பூன்
    சோம்பு - ஒரு டீஸ்பூன்
    நறுக்கிய கொத்தமல்லித்தழை - அரைக்கால் கப்
    கறிவேப்பிலை - 5 இலைகள்
    பூண்டுப் பல் - ஒன்று
    பட்டர் (அ) நல்லெண்ணெய்  - ஒரு டீஸ்பூன்
    மஞ்சள்தூள்  - அரைக்கால் டீஸ்பூன்
    கொத்தமல்லித்தழை (அலங்கரிக்க) - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    நாட்டுக்கோழியை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    பூண்டு, சீரகம், மிளகு, சோம்பு ஆகியவற்றைத் தட்டி வைத்துக்கொள்ளவும்.

    குக்கரில் பட்டர் (அ) நல்லெண்ணெய் சேர்த்து, காய்ந்ததும் பூண்டு, சீரகம், மிளகு, சோம்பு, நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் நறுக்கிய தக்காளி, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து நாட்டுக்கோழியை சேர்த்து அதனுடன் 2 கப் தண்ணீர் ஊற்றி உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கிளறவும்.

    குக்கரை மூடி, அடுப்பை மிதமான தீயில் வைத்து 25 நிமிடங்கள் வேகவிடவும்.

    பின்னர் குக்கரைத் திறந்து சூப்பை மட்டும் வடிகட்டி அதைச் சூடான சாதத்துடன் தேவையான அளவு சேர்த்து நன்றாகக் கிளறவும்.

    ரசம் சாதம் போல இருக்க வேண்டும். ருசி பார்த்து, தேவையானால் சிறிது உப்பு சேர்க்கவும்.

    கடைசியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி, லஞ்ச் பாக்ஸில் போட்டுக் கொடுத்தனுப்பவும்.

    சூப்பரான சூப்பரான சிக்கன் சூப் ரைஸ் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உடலை வளமாக வைத்திருக்க வேண்டும் எனும் ஆர்வம் எல்லோரிடமும் காணப்படுவது இயல்பு. அப்படிப்பட்டவர்கள் இந்த பத்து வழிமுறைகளை கடைபிடிப்பது பயனளிக்கும்.
    1. தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள். உடற்பயிற்சி என்பது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் செய்வதல்ல, தினசரி அலுவல்களுக்கிடையே வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் உடற்பயிற்சி செய்யலாம். படிகளில் ஏறி இறங்குவது, அடிக்கடி நடப்பது, கண்களுக்கு பயிற்சி கொடுப்பது, கைகால்களை நீட்டி மடக்குவது, மூச்சுப்பயிற்சி என எவ்வளவோ செய்யலாம்.
     
    2.தினமும் மூன்று வேளை மூக்கு முட்ட அசைவப் பொருட்களை உடலுக்குள் திணிப்பதை கொஞ்சம் ஒத்தி வையுங்கள். எல்லாம் அளவாய் இருப்பதே ஆரோக்கியமானது. தினமும் ஐந்து முறை காய்கறிகள் மற்றும் பழங்களை உண்ணுங்கள். பெரும்பாலானவை வேக வைக்காததாக இருக்க வேண்டியது முக்கியம். சில காய்கறிகள் பாதி வேக வைத்து உண்ணலாம். 

    3. சோர்வாய் இருக்கிறது ஒரு காபி குடிப்போம், போரடிக்கிறது ஒரு காபி குடிப்போம், நண்பர் வந்து விட்டார் ஒரு காபி குடிப்போம் என எதெற்கெடுத்தாலும் காபி அருந்துவதற்கு ஒரு முற்றுப் புள்ளி வையுங்கள். தூய்மையான தண்ணீர், எலுமிச்சை சாறு, செயற்கை இனிப்பு கலக்காத பழச்சாறு, கிரீன் டீ போன்றவற்றை அதற்கு மாற்றாக அருந்தப் பழகுங்கள்.

    4. நல்ல பழக்கங்களைக் கொண்டிருப்பது முக்கியம். குறிப்பாக புகைத்தலை முழுமையாய் விட்டு விடுங்கள். மது அருந்துதல், எதிர்மறை எண்ணங்களை வளர்த்தல் போன்ற அனைத்துமே உடலுக்கு ஊறு விளைவிப்பவை. எனவே நல்ல பழக்கங்கள், நல்ல சிந்தனைகள் இவை முக்கியம்.

    5. மோசமான கொழுப்பு நிரம்பிய உணவுகளை தூரமாய் ஒதுக்குங்கள். குறிப்பாக, சீஸ், சிப்ஸ், பிரன்ச் பிரைஸ், பீட்சா போன்ற அதிக கொழுப்பு உணவுகளை ஒதுக்கித் தள்ளுங்கள். நலமான வாழ்வுக்கு உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம், அதற்கு தேவையற்ற கொழுப்புப் பொருட்களை ஒதுக்குவது மிக மிக அவசியம்.



    6. உணவில் உப்பு சேர்ப்பதை மட்டுப்படுத்துங்கள். அளவுக்கு அதிகமான உப்பு உடலில் பல்வேறு நோய்களைக் கொண்டு வரும். அதிகம் உப்பை உட்கொள்ளும் போது உடலில் சோடியம் அளவு அதிகரிக்கிறது, இது மினரல்களின் சமநிலையைப் பாதிக்கிறது. உயர் குருதி அழுத்தத்துக்குக் கூட இது காரணமாகி விடுகிறது. அதிக உப்பு ரொம்ப ரொம்ப தப்பு என மனதுக்குள் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.

    7. உண்பதை நன்றாக மென்று உண்ணுங்கள். அதிக நேரம் மென்று உண்ணும் பொருள் உங்கள் உடலுக்கு அதிக பயனளிக்கும். தேவையற்ற கொழுப்பு சேர்வதிலிருந்தும், வாயுத் தொல்லை, செரிமானப் பிரச்சினை போன்ற அனைத்திலிருந்தும் அது உங்களைத் தப்புவிக்கும். நிறைய தண்ணீர் குடியுங்கள். உடலிலுள்ள அசுத்தங்களை வெளியேற்ற அது உதவும். முக்கியமாக, உணவு உண்டபின் குளிர்ந்த நீரைக் குடிக்கவே குடிக்காதீர்கள். மிதமான சூடுள்ள தண்ணீரையே அருந்துங்கள்.

    8. இனிப்புப் பொருட்களை உண்பதை அளவுடன் நிறுத்திக் கொள்ளுங்கள். உடலின் சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது கொழுப்பு, இன்சுலின், டிரைகிளைசெரிட்ஸ் போன்றவற்றின் அளவு உடலில் அதிகரித்து உடலின் எதிர்ப்புச் சக்தியை கொஞ்சம் கொஞ்சமாய் வலுவிழக்கச் செய்யும். நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் வாங்கும் பொருளில் குளுகோஸ், சுக்ரோஸ், லாக்டோஸ், கார்ன் சுகர் என எழுதப்பட்டிருப்பவை எல்லாம் இனிப்புப் பொருட்களே !

    9. எலும்புகள் வலிமையாக இருக்க வேண்டியது உடலின் மிக முக்கியமான தேவை. இல்லையேல் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு உடைவு நோய் வந்து மிகப்பெரிய சிக்கலை உருவாக்கி விடும். எனவே உடலுக்குக் கால்சியம் சத்து அதிகம் கிடைக்கக் கூடிய உணவுகளை தவறாமல் உண்ணுங்கள். எலும்பின் உறுதியை நீர்த்துப் போகச் செய்யும் குளிர்பானங்களை (கோக், பெப்ஸி வகையறாக்கள்) முழுமையாய் ஒதுங்குங்கள். காலை வெயிலிலும் கொஞ்ச நேரம் உலவுங்கள் வைட்டமின் டி இலவசமாய்க் கிடைக்கும்.

    10. தேவையான ஓய்வு, தேவையான தூக்கம், மனதை இலகுவாக்குதல் இவையெல்லாம் மிக மிக முக்கியம். வேலை வேலை என எந்நேரமும் அலையாமல் உடலுக்கும் மனதுக்கும் மகிழ்ச்சியளிக்கும் செயல்களை தினமும் சற்று நேரம் செய்யுங்கள். குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் அன்பாகவும், இனிமையாகவும் செலவிடும் நிமிடங்கள் ஆரோக்கிய உடலுக்கும் உத்தரவாதம்.
    கர்ப்பகாலத்தில் உங்கள் உடலில் ஏராளமான மாற்றங்கள் ஏற்படும். இங்கு பிரசவத்திற்கு பின்னான மாதவிடாய் சுழற்சி எப்போது துவங்கும் என்பதை பற்றி பார்க்கலாம்.
    கர்ப்பகாலத்தில் உங்கள் உடலில் ஏராளமான மாற்றங்கள் ஏற்படும். பிரசவத்தின் பின் சரியாகி விடும் என்று நினைத்தால், பிரசவத்தின் பின்னும் கூட சில மாற்றங்கள் ஏற்படும். கர்ப்பகாலம் என்பது மாதவிடாய்க்கு விடுமுறை காலம் போன்றது. கர்ப்பகாலம் முழுவதும் மாதவிடாய் ஏற்படாது. ஆனால் பிரசவத்தின் பின் ஏற்பட தொடங்கி விடும். இங்கு பிரசவத்திற்கு பின்னான மாதவிடாய் சுழற்சி எப்போது துவங்கும் என்பதை பற்றி பார்க்கலாம்.

    மாதவிடாய் என்பது கர்ப்பப்பையில் குழந்தை இல்லை என்பதற்கான அறிகுறியாகும். அதனால் கர்ப்பப்பையில் உள்ள திசுக்கள் உதிர்ந்து ரத்தமாக வெளியேறுகிறது. ஆனால் நீங்கள் கர்ப்பமான பின் மாதவிடாய் நின்று விடும். சில நேரங்களில் லேசான ரத்த போக்கு இருக்கும். ஆனால் இந்த நிலை தொடந்தாலோ அல்லது அதிக ரத்த போக்கு இருந்தாலோ உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.

    தாய்ப்பால் கொடுக்காத தாய்மார்களுக்கு பிரசவத்திற்கு பின் ஐந்து முதல் ஆறு வாரங்களில் மாதவிடாய் ஏற்படும். முழுக்க முழுக்க தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு, தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திய பிறகு மாதவிடாய் ஏற்படும். எனினும் இது ஒவ்வொரு பெண்ணிற்கும், சூழ்நிலைக்கும் ஏற்ப மாறுபடும் என்பதால், இது தான் சரி என்று இதில் வரையறுக்க முடியாது.

    பிரசவத்திற்கு பின் உங்களுக்கு மாதவிடாய் ஏற்படும் போது அது பழைய மாதிரி இருக்காது. இரத்த போக்கு லேசாகவோ அல்லது அதிகமாகவோ இருக்கும். மாதவிடாய் சுழற்சி பழைய நிலைக்கு திரும்ப சிறிது காலம் எடுக்கும். ஆனால் நீண்ட நாட்களுக்கு லேசான அல்லது அதிகமான ரத்த போக்கு நீடித்தால் நீங்கள் மருத்துவரை அணுக வேண்டும்.

    உங்கள் கருப்பையில் இருந்து முட்டை வெளியான பிறகு உடனே மாதவிடாய் சுழற்சி ஏற்படாது. அதுவும் குறிப்பாக பிரசவத்திற்கு பிறகு. இதனால் உடல் உறவு கொள்ளும் போது கவனமாக இருங்கள்.

    உங்களையும் உங்கள் சுற்றத்தையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் மாதவிடாய் நேரத்தில் சானிட்டரி நாப்கின்கள் பயன்படுத்துங்கள். மேலும் ஊட்டச்சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள்.
    பிரெட்டில் பிரெட் பட்டர் ஜாம், பிரெட் சென்னா, சான்விச் செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று பிரெட்டில் பொரியல் செய்வது எப்படி என்று பாக்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பிரெட் துண்டுகள் - 15
    நெய் - 50 கிராம்
    தக்காளி - 2
    குடை மிளகாய் - 1
    இஞ்சி விழுது - 1 ஸ்பூன்
    மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
    மல்லி தூள் - 1 ஸ்பூன்

    தாளிக்க...

    கிராம்பு - 1
    ஏலக்காய் - 1
    பட்டை - 1 சிறிய துண்டு
    சோம்பு - ½ ஸ்பூன்



    செய்முறை :

    பிரெட்டை ஓரங்களை நீக்கி விட்டு துண்டுகளா வெட்டி கொள்ளவும்.

    குடைமிளகாய், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து நெய் விட்டு சூடானதும் கிராம்பு, ஏலக்காய், பட்டை, சோம்பு தாளித்து பின் இஞ்சி விழுது சேர்தது வதக்கிய பின்னர் தக்காளி, குடமிளகாய் சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து சிறிது கிளறி அதில் பிரெட் துண்டுகளை சேர்த்து லேசாக கிளறி எடுக்கவும்.

    இதில் சிறிது சர்க்கரை சேர்த்தால் ருசியாக இருக்கும்.

    சூப்பரான பிரெட் பொரியல் ரெடி.

    தேவைப்பட்டால் கேரட், பீன்ஸ், முட்டைகோஸ் சேர்த்துக் கொள்ளலாம். இந்த பிரெட் பொரியலை மாலை நேரத்தில் ஸ்நாக்ஸ் போன்றும் சாப்பிடலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு அவர்கள் நான்கு வயதாக இருக்கும் போதே பாலியல் வன்முறைகளின் சில கூறுகளை அவர்களுக்கு விளக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.
    பெண்குழந்தையைப் பெறுவதே மடியில் நெருப்பைக் கட்டிக் கொண்டு நடப்பதற்கு சமம் என பாட்டிமார் கூறும் கூற்று இன்றைய நேயமற்ற சமூகத்தில் நிதர்சனமாகியிருக்கிறது.

    உலகெங்கும் பல்லாயிரம் குழந்தைகள் பாலியல் வன்முறையினால் உயிரையும் இழக்கின்றனர் என்பது அதிர்ச்சியளிக்கும் செய்தியாகும். பெரும்பாலான பாலியல் வன்முறைகள் பெரும்பாலும் வீட்டின் நான்கு சுவர்களுக்குள்ளேயே மறைக்கப்பட்டு விடுகின்றன. “வெளியே சொன்னால் நம் குழந்தைக்குத் தான் அவமானம்” எனும் கவலையும், பாலியல் வன்முறையில் ஈடுபட்டவர் குடும்பத்தின் நெருங்கிய நபர் எனும் நிர்பந்தமும் இத்தகைய பாலியல் வன்முறைகள் சட்டத்தின் முன் வராமல் செய்து விடுகின்றன.

    குழந்தைகளுக்கு அவர்கள் நான்கு வயதாக இருக்கும் போதே பாலியல் வன்முறைகளின் சில கூறுகளை அவர்களுக்கு விளக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள். மிக முக்கியமாக எது “நல்ல தொடுதல்”, எது “மோசமான தொடுதல்” எது “பாலியல் தொடுதல்” என்பதை குழந்தைகளுக்கு புரிய வைப்பது அன்னையின் கடமையாகும்.

    நல்ல தொடுதல் அன்னையின் அரவணைப்பைப் போல ஆனந்தமாய், பாதுகாப்பாய், உற்காசமூட்டுவதாய் இருக்கும். இவை இன்னும் மிச்சமிருக்கும் மனித நேயத்தின் வெளிப்பாடுகள். மோசமான தொடுதல் என்பதை அடித்தல், உதைத்தல், காயப்படுத்துதல் போன்ற வலி ஏற்படுத்தும் நிகழ்வுகளாகச் சொல்லிக் கொடுங்கள்.

    தினமும் குழந்தைகளிடம் அன்றைய தினம் நடந்த செயல்கள், சந்தித்த மனிதர்கள் போன்ற அனைத்தையும் விரிவாக கேட்டு அறியுங்கள். ஏதேனும் பிழை நடந்திருப்பதாக உணர்ந்தால் பதட்டப்படாதீர்கள். முழுமையாய் கேளுங்கள்.

    குழந்தை எதைச் சொன்னாலும் முழுமையாய் நம்புங்கள். பாலியல் தொந்தரவுகளை குழந்தைகள் ஒரு போதும் உருவாக்கிச் சொல்வதில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஏதேனும் “விளையாட்டு” எனும் பெயரில் குழந்தைகள் பெரும்பாலும் ஏமாற்றப்பட்டு பாலியல் தொந்தரவுக்கு ஆளாவதுண்டு என்பதை அன்னையர் கவனத்தில் கொள்ள வேண்டியது மிக அவசியம்.

    தாய்க்கும் குழந்தைக்கும் இடையேயான வெளிப்படையான, நட்புறவும் நம்பிக்கையும் கூடிய உரையாடல் மிக மிக முக்கியம். இல்லையேல் குழந்தைகள் தங்கள் பிரச்சனைகளை வெளிப்படுத்தாமலேயே போய்விடும் அபாயம் உண்டு.

    சில சூழல் அல்லது சில நபர்களுடைய அருகாமை சந்தேகத்தைத் தருவதாக இருந்தால் அந்த சூழலைத் தவிருங்கள். குறிப்பாக குழந்தை யாருடனாவது நெருங்குவதை விரும்பவில்லையெனில் சுதாரித்துக் கொள்ளுங்கள். அங்கே ஏதேனும் பிழை இருக்கலாம். உங்கள் குழந்தைகளை மூன்றாவது நபரிடம், நீங்கள் கூடவே இல்லாதபோது, ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கும் அதிகமாக செலவிட அனுமதிக்காதீர்கள்.



    உங்கள் குழந்தையின் உடல் குழந்தைக்கு மட்டுமே சொந்தமானது. அதை வேறு யாரும் தொடும் உரிமை இல்லை என்பதை வெகு தெளிவாக, அழுத்தமாகவே குழந்தைகளிடம் சொல்லுங்கள். அதை மீறி யாரேனும் தொந்தரவு கொடுத்தால் கண்டிப்பான “நோ” சொல்ல குழந்தைகளைப் பழக்குங்கள்.

    குழந்தைகளுடைய நடவடிக்கையில் பதட்டம், கோபம், மன அழுத்தம், சோகம் போன்ற உணர்வுகள் மேலோங்கியிருப்பதைக் கண்டாலோ, உடலில் ஏதேனும் அடையாளங்களைக் கண்டாலோ உஷாராகிவிடுங்கள். குழந்தைகளிடம் ஏதேனும் விரும்பத் தகாத நிகழ்வு நடந்தால் யாரைச் சந்திக்க வேண்டும், யாரிடம் பேசவேண்டும் என்பதைச் சொல்லி வையுங்கள்.

    குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கையை வளருங்கள். வீட்டில் பெற்றோர் முன்மாதிரிகையாக இருப்பதும், குழந்தைகளிடம் நேரத்தைச் செலவிட்டு அவர்களுக்கு பாதுகாப்பு உணர்வை வழங்குவதும் மிக மிக முக்கியம்.

    குழந்தைகள் தவறு செய்தால் பக்குவமாய் திருத்துங்கள். பிழை செய்வது மனித இயல்பு, அதைத் திருத்துவதில் தான் மனித மாண்பு இருக்கிறது என்பதை உணர்த்துங்கள். இல்லையேல் பிழைகளை உங்களிடமிருந்து மறைக்கும் வழியையே குழந்தைகள் யோசிக்கும்.

    திரையரங்கு, பேருந்து, பள்ளிக்கூடம், விளையாட்டுப் பூங்கா போன்ற இடங்களில் கவனமாக இருக்கவேண்டிய வழிமுறைகளை விளக்குங்கள். எதையும் பயமுறுத்தும் விதமாகச் சொல்லாமல் இருப்பது மிகவும் முக்கியம்.

    “அம்மா, அப்பாவிடம் சொல்லாதே” என யாராவது ஏதாவது சொன்னார்களா, செய்தார்களா என்பதை குழந்தைகளிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். பாலியல் விஷயத்தில் வாக்குறுதிகளை உடைப்பதில் எந்தத் தவறும் இல்லை என்பதை குழந்தைகளுக்கு புரியவையுங்கள்.

    குழந்தைகளிடம் திடீர் பாசம் பொழியும் உறவினர்கள் யாராவது இருந்தால் அவர்கள் மீது ஒரு கண் வைப்பது அவசியம். குழந்தைகளை கடைக்கு அழைத்துப் போகிறேன், திரையரங்கு அழைத்துச் செல்கிறேன் என முன்வந்தால் நாகரீகமாக தவிர்த்து விடுங்கள்.

    ஆபாசப் புத்தகங்கள், படங்கள் போன்றவற்றை குழந்தைகளுக்கு காண்பித்து அவர்களை பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்குவதும், பின்பு அதை வைத்தே அவர்களை மிரட்டி, பயமுறுத்தி தொடர் தொந்தரவுகளை கொடுப்பதும் பரவலாக நிகழும் செயல் என்பதால் எச்சரிக்கையுடன் கவனித்தல் அவசியம்.

    90 விழுக்காடு பாலியல் தொந்தரவுகளும் குழந்தைகளுக்கு நன்கு தெரிந்த நபர்களாலேயே வருகின்றன. எனவே குழந்தைகள் உண்மையை விரைவில் பெற்றோரிடம் தெரிவிப்பது மிகவும் அவசியம். தாயும், மகளுமான மிகவும் தனிமையான சூழலில் நிகழும் உரையாடலே உண்மையை முழுமையாய் வெளிக்கொணரும்.

    பெண்கல்வி பெண்களுக்கு சமூகத்தில் தனி மரியாதையைப் பெற்றுத் தருகிறது. ஆணுக்கு இணையாகவோ, ஆண்களை விட பெரிய அளவிலோ பெண்கள் வளர பெண்கல்வியே மிகவும் தேவையாகிறது.
    மனிதனின் ஆறறிவை செழுமையாய் வைத்திருப்பதில் கல்வி மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. இந்தக் கல்விக்கு ஆணென்றும், பெண்ணென்றும் பேதமில்லை. அப்படிப்பட்ட கல்வி இன்று பெண்களுக்குக் கிடைக்கிறதா ? இதனால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் போன்றவற்றை நாம் அறிந்து கொள்ளலாம்.

    இந்தியாவின் எதிர்காலம் குழந்தைகளிடம் என்கிறோம். ஆனால் அவர்களுக்கு அடிப்படை வசதிகளே இல்லை. உணவு, உடை, உறைவிடமே இல்லாத சூழலில் கல்வியை வழங்குவது நமது தேசத்தின் முன்னால் இருக்கும் மிகப்பெரிய சவால்.

    இந்தியாவில் இன்று கல்வியறிவு பெற்ற பெண்கள் வெறும் 54.16 சதவீதம் தான். ஆண்களில் சுமார் 76 சதவீதம் பேர் அடிப்படைக் கல்வி அறிவைப் பெற்றிருக்கின்றனர். நகர்புறம், கிராமப்புறம் எனும் வேறுபாடு எதுவும் இன்றி பெண்களுக்கான கல்வி குறைவாகவே இருக்கிறது. கேரளா, தமிழகம் உட்பட சில மாநிலங்கள் கல்வியில் வளர்ச்சி நிலையை நோக்கி நகர, வட மாநிலங்களான பீகார் போன்றவை கல்வியில் மிகவும் பிந்தங்கிய நிலையிலேயே இருக்கின்றன.

    நமது சமூக அமைப்பு பெண்கல்வியை ஊக்குவிக்கவில்லை. பெண்கள் வீட்டை ஆள வேண்டும், ஆண்கள் நாட்டை ஆளவேண்டும் என பிரித்திருந்தன. எனவே பெண் என்பவள் வீட்டு வேலைகளைச் செய்து, குழந்தைகளையும் கணவனையும் கவனிப்பவராக மாறிப் போனார். ஆண்கள் கடும் உழைப்பைச் சிந்தி வீட்டுக்கான பொருளாதாரத் தேவையை நிறைவேற்றும் பணியை மேற்கொண்டார்கள். வீட்டை ஆளும் பெண்களுக்கு கல்வி தேவையில்லை என்பது ஆணாதிக்க மனநிலையாய் இருந்தது.



    இன்றைய உலகம் பெண்கல்வியை ஊக்கப்படுத்துகிறது. பெண்கள் கல்வியறிவு பெற்று பல்வேறு உயர் பதவிகளை இன்று வகிக்கின்றனர். நாட்டின் தலைவர்களாகவும், பெரிய நிறுவனங்களின் தலைவர்களாகவும் பெண்கள் இன்று இடம்பிடித்திருக்கின்றனர். சமூகத்தில் ஏற்பட்டிருக்கும் விழிப்புணர்வே இதன் காரணமாகும். இன்றைய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஆண்களுக்கு இணையான அளவு பெண் ஊழியர்களும் இருக்கின்றனர். ஆனாலும் உயர் பதவிகளைப் பொறுத்தவரை சுமார் 80 சதவீதம் பதவிகள் ஆண்கள் வசமே இருக்கின்றன என்கிறது ஒரு புள்ளி விவரம்.

    பெண்கல்வி எங்கும் கிடைக்கும் போது நமது நாட்டின் வறுமை நிலையும் மறையும். பொருளாதாரம் வளர்ச்சியடையும். சமூகம் மறுமலர்ச்சியடையும்.

    பெண்கல்வி நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான ஒன்று. குழந்தைகளை வளர்க்கும் பெரும் பொறுப்பு இன்றைக்கு பெண்களிடம் தான் இருக்கிறது. பெண்களின் கல்வியறிவு சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு சரியான அறிவையும், அறிவுரைகளையும் வழங்க உதவும். குடும்பத்தின் பொறுப்புகளைச் சுமக்கின்ற பெண் வேர்களைப் போன்றவர். வேர்கள் வலுவாக இருக்கும் போது தான் மரம் செழுமையாக இருக்க முடியும். பெண்கல்வி அந்த வேர்களை பலப்படுத்தும். இதன் மூலம் குடும்பம் வலிமையாகும். குடும்பம் வலிமையாகும் போது ஒரு சமூகம் வலிமையாகும். சமூகம் வலிமையாகும் போது நாடு வலிமையடையும்.

    பெண்கல்வி பெண்களுக்கு சமூகத்தில் தனி மரியாதையைப் பெற்றுத் தருகிறது. ஆணுக்கு இணையாகவோ, ஆண்களை விட பெரிய அளவிலோ பெண்கள் வளர பெண்கல்வியே மிகவும் தேவையாகிறது. ஆணும் பெண்ணும் சமம் எனும் நிலை சமூகத்தில் உருவாகவேண்டுமெனில் பெண் கல்வி மிகவும் அவசியம்.

    கல்வி ஒரு மனிதனுக்கு துணிச்சலைக் கொடுக்கிறது. அதிலும் குறிப்பாக மென்மையான பெண்களுக்கு கல்வி தான் மிகப்பெரிய துணிச்சல் ஆயுதமாய் இருக்கிறது.

    காலையில் எளிய முறையில் சத்தான டிபன் செய்ய விரும்பினால் இந்த தயிர் சேமியாவை செய்யலாம். இன்று இந்த சேமியாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சேமியா - 250 கிராம்
    தயிர் - இரண்டு கப்
    எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
    கடுகு - கால் தேக்கரண்டி
    காய்ந்த மிளகாய் - நான்கு
    கறிவேப்பிலை - சிறிதளவு
    நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு
    வறுத்த முந்திரி - பத்து
    நெய் - ஒரு தேக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    சேமியாவை நெய் சேர்த்து வாணலியில் பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.

    இரண்டு கப் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் உப்பு மற்றும் சேமியாவை சேர்த்து ஐந்து நிமிடம் வேக வைக்கவும். சேமியா வெந்ததும் தண்ணீரை வடிகட்டி, குளிர்ந்த நீரில் அலசி மீண்டும் வடிகட்டி வைக்கவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய் 2 மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அதை சேமியாவுடன் சேர்த்து தயிர், கொத்தமல்லி, முந்திரி போட்டு கலக்கவும்.

    சுவையான தயிர் சேமியா ரெடி.

    குறிப்பு : இதில் விருப்பப்பட்டால் கேரட் துருவல், மாதுளம் பழத்தையும் சேர்த்து கொள்ளலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இந்த முத்திரையை செய்து வந்தால் மன ஒரு நிலைப்பாடு அதிகரிக்கும். கோபம் கட்டுப்படும். பலவிதமான மனக்கோளாறுகளுக்கு நன்மை அளிக்கிறது. மனம் அமைதி பெறும்.
    பெயர் விளக்கம்: ‘அகோசரம்’ என்றால் ஸ்தூலமான கண்களுக்கு புலப்படாதது என்று பொருள்படுகிறது. இம்முத்திரை புறக்கண்களுக்கு புலப்படாத சூட்சும நாடிகளில் பிராண சஞ்சாரத்தை மிகைப்படுத்தி மூலாதார சக்கரத்தை தூண்டுவதால் அகோசரி முத்திரை என்றுஅழைக்கப்படுகிறது.

    செயல்முறை: வசதியான தியான ஆசனத்தில் அமரவும். இரு கைகளையும் நீட்டி முழங்கால்களின் மேல் கைவிரல்களால் சின் முத்திரை செய்யவும். கண்களை மூடவும். உடல் முழுவதையும் தளர்த்திக் கொள்ளவும். கண்களை மெதுவாக திறந்து கருவிழி இரண்டடையும் மூக்கு நுனியை பார்க்கும்படி வைக்கவும்.

    கண் தசைகளை அழுத்தாமல் வைத்துக் கொள்ளவும். முக தசைகள் இறுக்கமடையாதபடி பார்த்துக்கொள்ளவும். சில விநாடிகளுக்குப் பிறகு கண்களை மூடி ஓய்வு பெறவும்.

    இம்முத்திரையில் மூச்சு சாதாரணமாக இருக்கட்டும். அல்லது சில விநாடிகள் மூச்சுக்காற்றை உள்ளுக்குள் இழுத்து நிதானமாக வெளியே விடவும். ஆரம்பத்தில் ஒரு சுற்றுக்கு சில விநாடியென 5 சுற்று பயிற்சி செய்யவும். தொடர்ந்த பயிற்சியால் 10 சுற்று வரை அதிகரித்து 10 நிமிடம் வரை பயிற்சி செய்யலாம்.

    கவனம் செலுத்த வேண்டிய இடம்: கருவிழிகள் இரண்டும் கீழ் நோக்கி இணைந்திருப்பதின் மீதும் ஆக்ஞா சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.

    பயன்கள்: மன ஒரு நிலைப்பாடு அதிகரிக்கும். கோபம் கட்டுப்படும். பலவிதமான மனக்கோளாறுகளுக்கு நன்மை அளிக்கிறது. மனம் அமைதி பெறும்.
    பெண்கள் விரும்பும் நவீன பொருட்களில் சிலவற்றை நீங்களும் பரிசளிக்கலாம். அல்லது உங்கள் மனைவி, சகோதரிக்கு பிறந்த நாள் மற்றும் திருமண நாளில் அன்பளிப்பாக அனுப்பலாம்.
    பரிசளிப்பது என்பது மிகவும் சிறந்த கலை. பரிசளிப்பதன் மூலம் உங்களின் அன்பை வெளிப்படுத்த முடியும். எனவே நீங்கள் விரும்புவோருக்கு பரிசளியுங்கள், அவர்களின் நன்மதிப்பை பெறுங்கள். நவீன பெண்கள் விரும்பும் நவீன பொருட்களில் சிலவற்றை நீங்களும் பரிசளிக்கலாம். அல்லது உங்கள் மனைவி, சகோதரிக்கு பிறந்த நாள் மற்றும் திருமண நாளில் அன்பளிப்பாக அனுப்பலாம்.

    மொபைல் சார்ஜிங் பர்ஸ்

    இன்றைய நவ நாகரிக யுகத்தில் ஸ்மார்ட்போன் இல்லாத பெண்களே கிடையாது. ஸ்மார்ட்போன் மற்றும் அது சார்ந்த உதிரி பொருட்களை எடுத்துச் செல்வதற்கும், அதேசமயம் மற்றவர்களின் பார்வைக்கும் அழகான தோற்றம் தருவது மொபைல் சார்ஜிங் பர்ஸ். ஸ்மார்ட்போன், சார்ஜிங் கேபிள் உள்ளிட்டவற்றை அழகாக வைக்க, இந்த வகை பர்ஸ் உதவும்.

    சென்சார் கண்ணாடி

    பெண்கள் அதிக நேரம் செலவழிப்பது கண்ணாடி முன்புதான். தங்களை அழகுபடுத்திக் கொள்வதில் அவர்கள் அதிக அக்கறை செலுத்துவர். நவீன காலத்தில் பழைய கால முகம் பார்க்கும் கண்ணாடியை விட சென்சார் என்ற உணர் கருவி கொண்ட கண்ணாடி மிகவும் ஏற்றது. இத்தகைய சென்சார் கண்ணாடி பெரும்பாலான இணையதளங்களிலும் கிடைக்கிறது.

    ஆல் இன் ஒன் ஹேர் ஸ்டைலர்

    சிகை அலங்காரத்துக்கு மிகவும் ஏற்றது ஹேர் டிரையர் உள்ளிட்ட நவீன சாதனங் களாகும். அனைத்து வகை யான கூந்தல் பராமரிப்புக்கும் ஏற்ற ஹேர் ஸ்டைலரை வாங்கி பரிசளியுங்கள். இதை விரும்பாத பெண்கள் மிக மிகக் குறைவு.

    இ-ரீடர்

    வழக்கமாக ஸ்மார்ட்போன்களில் புத்தகங்களை பதிவிறக்கம் செய்து படிப்பதை விட இ-ரீடர் எனப்படும் கிண்டில் போன்ற இ-புத்தகங்கள் மிகவும் சிறந்தது. இதுவும் பெண்களுக்கு பரிசளிக்க ஏற்றது. இதை எடுத்துச் செல்வதும் எளிது. விரும்பிய நேரத்தில் படிக்க உதவியாக இருக்கும்.

    ஸ்மார்ட் வாட்ச்

    நவீன பெண்களுக்கு நவீன கைக்கடிகாரம்தான் ஸ்மார்ட்வாட்ச். மிகவும் சிக்கலான, அதிக செயல்பாடுகளைக் கொண்ட ஸ்மார்ட் வாட்ச்களை விட, பெண்களுக்கு உதவும் வகையில், எளிய செயல்பாடு மூலம் சிறப்பாக இயங்கும் ஸ்மார்ட் வாட்ச்களை வாங்கி பரிசளிக்கலாம். இதையும் பெண்கள் விரும்புவர்.

    பரு நீக்கி (பிம்பிள் ஸாப்பர்)

    இளம் பெண்களுக்கு மிகவும் உபயோகமானது. சருமத்தில் ஊடுருவி பரு உண்டாக்கும் பாக்டீரியாவை அழித்துவிடும். பருவினால் உண்டாகும் தழும்புகளை மறையச் செய்யும். பரிசளிக்கும் பெண்ணின் சருமத்துக்கேற்ற ஸாப்பரை வாங்க வேண்டும். அதுதான் மிகவும் முக்கியம்.



    யுனிவர்சல் சார்ஜர்

    நவ-நாகரிக பெண்கள் மின்னணு சாதனங்களை அதிகம் பயன்படுத்துகின்றனர். அவர்களுக்கு மிகவும் ஏற்றது. ஒரே சமயத்தில் பல மின்னணு சாதனங்களை சார்ஜ் ஏற்ற உதவும் வகையிலான யுனிவர்சல் சார்ஜரையும் பெண்களுக்கு பரிசாக அளிக்கலாம். வயர்லெஸ் சாதனமாக இருப்பின் இது மிகவும் சிறந்தது. இதில் மிகவும் சிறந்த பிராண்டுள்ள, விரைவாக சார்ஜ் ஏறக்கூடியதை வாங்கி பரிசளிக்கலாம்.

    இயர் பட்

    காதில் தோடு அணிகிறார்களோ இல்லையே, இந்தக் கால நவ-நாகரிக பெண்கள் இயர்போன் அணிவதை பார்க்கலாம். இதனால் மிகவும் நவீனமாக, காதை உறுத்தாத, இனிய இசையை வழங்கக் கூடிய வெளிப்புற இசையை துண்டித்து, ஸ்மார்ட்போனிலிருந்து வரும் விரும்பிய இசையைக் கேட்க உதவும் இயர்போனை நீங்கள் பரிசளிக்கலாம்.

    மேக் அப் பிரஷ்

    பெரும்பாலும் விசேஷங்கள், வெளியூருக்கு பயணம் மேற்கொள்வோருக்கு மிகவும் உபயோகமானது. இத்தகைய பிரஷ்கள் பல்வேறு வண்ணங்களில் கிடைக்கின்றன. இதில் பேட்டரியில் இயங்கும் பிரஷ், நேரத்தை மிச்சப்படுத்தும். இத்தகயை பிரஷ்கள் அனைத்து ஆன்லைன் இணையதளங்களிலும் கிடைக்கிறது.

    இன்ஸ்டன்ட் கேமரா

    எவ்வளவுதான் ஸ்மார்ட்போன் வந்தாலும். புகைப்படங்களை பார்க்கும் சந்தோஷமே தனி. புகைப்படம் தரும் மகிழ்ச்சிக்கு ஈடு இணை கிடையாது.அந்த வகையில் உடனடியாக பிரிண்ட் போட்டுத் தரும் கேமராவும் பரிசளிக்க சிறந்த பொருள்தான்.

    கண் மசாஜர்

    பெண்கள் தங்கள் கண்களை பாதுகாப்பதிலும் கவனம் செலுத்துவர். இத்தகையோருக்கு மிகவும் ஏற்றது கண் மசாஜர். கண்ணில் ரத்த ஓட்டம் அதிகரிக்கச் செய்யும் இந்த மசாஜரை சிறிது நேரம் அணிந்தால் கண் புதுப் பொலிவுடன் தோற்றமளிக்கும். இதை அணிவதன் மூலம் தலைவலி போன்ற பிரச்சினையையும் தவிர்க்க முடியும். இது மன இறுக்கத்தையும் போக்க வல்லது. இதையும் பரிசளிக்கலாம்.

    பாதுகாப்பு கருவி


    பெண்கள் அழகை மேம்படுத்த மட்டுமின்றி அவர்களை பாதுகாக்க உதவும் கருவிகளுள் இதுவும் ஒன்று. தனியாக இருக்கும் சந்தர்ப்பங்கள், வெளியிடங்களுக்கு சென்று திரும்புகையில் அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கக் கூடியது. இதில் உள்ள பாதுகாப்பு பொத்தானை அழுத்தினால் அது உடனடியாக செய்தியை பாதுகாவலருக்கு அனுப்பும். பெண்களை பாதுகாக்க நினைப்பவர்கள் அவசியம் வாங்கி பரிசளிக்க வேண்டிய சாதனங்களுள் மிகவும் முக்கியமானது இது.

    பெண்களுக்கு அழகு சேர்க்கும் சாதனங்களுடன் அவர்களை பாதுகாக்கும் கருவிகளும் வந்துள்ளன. அவற்றையும் வாங்கி அளிப்பது நீங்கள் அவர்கள் மீது வைத்துள்ள அக்கறையை வெளிப்படுத்த உதவும்.
    அறிவியல் பூர்வமாகவே ஓமியோபதி ஆற்றல்மிகு மருந்தாகும். உலகெங்கும் பல கோடி மக்கள் ஓமியோபதி மருந்தால் பயனடைந்து வருகிறார்கள்.
    ஜெர்மனியை சேர்ந்த டாக்டர் சாமுவேல் ஹானிமென் என்பவரால் ஓமியோபதி மருத்துவம் உருவாக்கப்பட்டது. உலகமெங்கும் கோடிக்கணக்கான மக்கள் ஓமியோபதி மருத்துவத்தை பயன்படுத்தி வருகிறார்கள். பன்றி காய்ச்சல் என்கிற ஸ்வின்புளு என்பது சுவாச நோயாகும். வைரஸ் என்கிற நோய் நுண் கிருமிகள் சுவாச மண்டலத்தை தொற்றுகிறது.

    ஸ்வின் இன்புளுன்சா வைரஸ் குடும்பத்தில் உள்ள பலவிதமான இன்புளுன்சா வைரஸ்கள் சுவாச உறுப்புகளில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. ஸ்வின் இன்புளுன்சா வைரஸ் நோய் நுண்கிருமிகள் பன்றிகளை இருப்பிடமாக கொண்டுள்ளன. இந்த வைரஸ்கள் பல அணுமானத்தில் இருந்தபோதிலும் முக்கிய இன்புளுன்சாவான சி அதன் துணை இன்புளுன்சா ஏ இவற்றை எச்1என்1, எச்1என்2, எச்2என்1, எச்3என்2, எச்2என்3 என்று அறியப்படுகிறது.

    பன்றிக்காய்ச்சலுக்கு காரணம் இன்புளுன்சா ஏ வைரசின் வரையறுக்கப்பட்டது எச்1என்1. இவை ஏன் எச்1என்1 என்று அழைக்கப்படுகிறது என்றால் இரண்டு பெரிய ஆன்டிஜன் இந்த வைரசின் மேல் காணப்படுகிறது. அவை ஹீம்அக்லுடினின் (எச்), மற்றொன்று நியூராமினிடேஸ்(என்).

    இந்த வைரசால் 65 வயது மற்றும் அதற்கு மேல் உள்ளவர்கள், குழந்தைகள், சிறுவர்கள், சிறுமிகள், நாள்பட்ட ஆஸ்துமா, சர்க்கரை நோயாளிகள், இதய நோய் உள்ளவர்கள், கர்ப்பிணிகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். பன்றிக்காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களுக்கு சாதாரண சீதோஷ்ண நிலை மாற்றத்தால் ஏற்படும் இன்புளுயன்சா காய்ச்சல் போலவே சோர்வு, காய்ச்சல், பசியின்மை, தும்மல், இருமல், மூக்கில் நீர்வடிதல், தொண்டைவலி, தலைவலி, உடல்வலி மற்றும் இருமல் ஏற்படும். சிலருக்கு கடுமையான மூச்சு திணறல், மூச்சடைப்பு ஏற்படும். சிலருக்கு வலிப்பு உண்டாகும். நுரையீரல் கடுமையாக தொற்று கிருமியால் பாதிக்கப்படும்போது தவிர்க்க முடியாத மரணம் ஏற்படும்.

    சீதோஷ்ணநிலை மற்றும் தட்பவெப்பம் மாற்றத்தினால் ஸ்வின்புளு, பன்றிக்காய்ச்சல் ஏற்படுகிறது. கூட்ட நெரிசல் நோய் தொற்றும் வேகத்தை அதிகப்படுத்தும். கூட்டநெரிசல் இடங்களில் நோய் பாதிப்பின் அளவு அதிகமாக இருக்கும். மனிதனுக்கு சுவாச சம்பந்தமான தும்மல், இருமல், தொற்றுநோய்க்குள்ளான பொருட்களை தொடுவதால் மூக்கு, கண், வாய் இவற்றை வைரஸ் தொற்று ஏற்பட்ட கைகளால் தொடுவதால் அடுத்தவர்களுக்கு தொற்று ஏற்படுகிறது. சுவாச உறுப்புகளின் மூலமாக ஸ்வின்புளு இன்புளுன்சா வைரஸ் மனிதனின் உடலை வந்து சேர்கிறது.

    நோய் வராமல் தடுப்பதற்கு பொதுஇடங்களில் ஜன்னல், கதவுகளை திறந்து காற்றோட்டமாக வைக்க வேண்டும். பொது கூட்டங்களை தவிர்க்க வேண்டும். இன்புளுன்சா பாதிக்கப்பட்டவர்கள் மாஸ்க் எனும் முகமூடியை அணிந்து, கைக்குட்டையை கொண்டு மூக்கு, வாயை பொத்திக்கொள்ள வேண்டும். இருமல், சளி, தும்மல், களைப்பு போன்ற ஆரம்ப அறிகுறிகள் தோன்றும்போது தனி அறையில் நன்கு ஓய்வெடுக்க வேண்டும். வெளியில் நடமாடுவதை தவிர்த்து கொள்ள வேண்டும். டாக்டரை உடனடியாக அணுக வேண்டும்.

    கை, முகத்தை அடிக்கடி சோப்பு தண்ணீர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். குறிப்பாக இருமல், தும்மல் ஏற்பட்டவுடன் சோப்பு தண்ணீரில் கை மற்றும் முகத்தை வெந்நீரில் கழுவ வேண்டும்.ஓமியோபதி மருந்துகளை கொண்டு ஸ்வின்புளு என்கிற வைரஸ் இன்புளுன்சாவான பன்றிக்காய்ச்சலை வரும்முன் தடுக்கலாம். ஸ்வின்புளு மட்டும் இல்லாமல் இதுபோன்ற பிற எபிடெமிக் காய்ச்சலையும் (மலேரியா, டெங்கு), ஓமியோபதி ஜீனஸ் எபிடெமிகஸ் மருந்தை கொண்டு பெருவாரியான ஒரே மாதிரியான நோய் குறிகளை கொண்டுள்ள மக்களை நோயின்றி காப்பாற்றலாம்.

    இந்த குறிப்பிட்ட ஒத்த குறிகளை கொண்ட மருந்தை ‘ஜீனஸ் எபிடெமிக்கஸ்’ என்று ஓமியோபதி வைத்திய சாஸ்திரம் கூறுகிறது. இப்படி தேர்வு செய்யப்படும் ஓமியோபதி ஜீனஸ் எபிடெமிக்கஸ் மருந்தை கொண்டு ஆரோக்கியமான மனிதர்களுக்கு கொடுத்து வருமுன்னர் தடுக்கலாம். அறிவியல் பூர்வமாகவே ஓமியோபதி ஆற்றல்மிகு மருந்தாகும். உலகெங்கும் பல கோடி மக்கள் ஓமியோபதி மருந்தால் பயனடைந்து வருகிறார்கள்.

    ஓமியோபதி மருந்தால் பின்விளைவுகள் துளியும் ஏற்படாது. பாதுகாப்பான மருந்துகள், வேறு நோய்களுக்கு ஆங்கில மருந்துகள் உட்கொண்டாலும் ஓமியோபதி மருந்துகளை பயன்படுத்தலாம். ஆங்கில மருந்துக்கும், ஓமியோபதி மருந்துக்கும் முரண்பாடு ஏற்படாது. ஓமியோபதி மருந்துகள் எதிர்ப்பு சக்தியும், பலத்தையும் கொடுத்து காய்ச்சலை குறைப்பதோடு, பசியை ஏற்படுத்தும். ஓமியோபதி மருந்துகள் பாதுகாப்பானவை. எல்லா வயதினரும் கை குழந்தைகள் உள்பட அனைவரும் பயன்படுத்தலாம். கர்ப்பிணிகளும், பாலூட்டும் தாய்மார்களும் பயன்படுத்தலாம்.

    ஓமியோபதியில் இன்புளுன்சா எனும் புளு காய்ச்சலை குணப்படுத்த பொதுவாக 132 மருந்துகள் உள்ளன. இருப்பினும் நோய் அறிகுறிகளை கருத்தில் கொண்டு ஆராய்ந்து நடைமுறையில் உள்ள புளு நோயாளியின் அறிகுறிகளை கருத்தில் கொண்டு சரியான ஒத்த ஓமியோபதி ஜீனஸ் எபிடெமிக்கஸ் புளு மருந்தை ஓமியோபதி டாக்டர் தேர்வு செய்து கொடுப்பார். அப்படி தேர்வு செய்யப்பட்ட மருந்தை அதே பகுதியில் அதே அறிகுறிகளோடு கூடிய புளு நோயாளிகளை கண்டறிந்து ஓமியோபதி ஜீனஸ் எபிடெமிக்கஸ் மருந்தை கொடுத்தால் புளு குணமாகும். ஆரோக்கியமான மனிதர்களுக்கு கொடுத்து இன்புளுன்சா எனும் ஸ்வின்புளு என்ற பன்றி காய்ச்சலை தடுக்கலாம், குணப்படுத்தலாம்.

    தமிழ்நாடு அரசு ஓமியோபதி கவுன்சிலில் பதிவு பெற்ற ஓமியோபதி டாக்டர்களின் ஆலோசனையில்லாமல் மருந்து கடைகளில் தானாகவே ஸ்வின்புளு பன்றிக்காய்ச்சல் மருந்து வாங்கி உபயோகிக்க வேண்டாம்.

    டாக்டர் கே.கிங் (ஓமியோ),

    தமிழ்நாடு அரசு ஓமியோபதி துறை முன்னாள் கவுரவ ஆலோசகர்
    ×