search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Female education"

    • சுமார் 20 வருட காலத்திற்கு பிறகு தலிபான், ஆட்சியை கைப்பற்றியது
    • பெண்ணிய சிந்தனையாளர்களின் எதிர்ப்பை தலிபான் புறக்கணித்தது

    ஆப்கானிஸ்தானில் 1996 முதல் தலிபான் அமைப்பினர் ஆட்சியில் ஆதிக்கம் செலுத்தி வந்தனர்.

    ஆனால், 2001ல் அமெரிக்க ராணுவம் அவர்களை ஆட்சியிலிருந்து தூக்கியடித்ததும், அவர்கள் பலவீனமடைந்திருந்தனர்.

    கடந்த 2021ல் அமெரிக்க படைகள் அந்நாட்டை விட்டு வெளியேறின. தொடர்ந்து தலிபான் மீண்டும் ஆட்சிக்கு வந்தது.

    சுமார் 20 வருடகாலம் கடந்து ஆட்சியை கைப்பற்றிய தலிபான் அந்நாட்டு மக்களுக்கு; குறிப்பாக பெண்களுக்கு, பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

    தலிபானின் புதிய சட்டங்களின்படி பெண் குழந்தைகள் கல்வி கற்பது ஆறாம் வகுப்புடன் நிறுத்தப்படும். இதற்கு பல உலக நாடுகளும் பெண்ணிய சிந்தனையாளர்களும் எதிர்ப்பு தெரிவித்திருந்த போதிலும் அவற்றை ஆப்கானிஸ்தான் புறக்கணித்தது.

    இந்நிலையில், பதின் வயதுகளில் 6-ஆம் வகுப்பை முடிக்கவுள்ள பல சிறுமிகள் இத்துடன் தங்களுக்கு கல்வி கற்கும் வாய்ப்பு முடிந்து போவதை எண்ணி அழுகின்றனர்.

    கடந்த வாரம், இது குறித்து ஐ.நா. சபையின் சிறப்பு தூதர் ரோசா ஒடுன்பயேவா (Roza Otunbayeva), "ஒரு தலைமுறையை சேர்ந்த பெண்களின் கல்வி கற்கும் வாய்ப்பு, ஒவ்வொரு நாள் கடக்கும் நிலையில் பறிக்கப்படுகிறது" என கவலை தெரிவித்தார்.

    ஏழாம் வகுப்பிற்கு செல்வோம் என நம்பியிருந்த பல மாணவிகள் தங்கள் கல்வியே முடிவடைவதால், எதிர்காலம் குறித்த அச்சத்திலும், தாங்கள் சாதிக்க நினைத்தவற்றை இனி அடைய முடியாத துக்கத்திலும் அழுகின்றனர் என தெரிய வந்துள்ளது.

    • தாலிக்கு தங்கம் திட்டத்தை தி.மு.க. அரசு நிறுத்தியது ஏன்? என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பினார்.
    • மக்கள் சேவையில் முதன்மையாக இருந்து வருகிறது.

    மதுரை

    மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் கள்ளிக்குடி கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி கூட்டம் கூடக்கோயில், மேல உப்பிலி குண்டு, கல்லணை, கொக்குளம், வேப்பங்குளம், மருதங்குடி ஆகிய பகுதி களில் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய செயலாளர் வேப்பங்குளம் கண்ணன் தலைமை தாங்கினார். முகாமை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதய குமார் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் முருகன், முன்னாள் எம்.எல்.ஏ. கே.மாணிக்கம், மாநில அம்மா பேரவை துணை செயலாளர் வெற்றிவேல், மாநில எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர் சிவசுப்பிர மணியன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செய லாளர் துரைப்பாண்டி, மாவட்ட மீனவரணி செயலாளர் சரவணபாண்டி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சிங்கராஜ பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் ராமையா, பிரபுசங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் உதயகுமார் பேசியதாவது:-

    அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லை என்றாலும் சரி மக்கள் சேவையில் முதன்மையாக இருந்து வருகிறது.

    பெண் கல்வியை ஊக்குவிக்க தாலிக்கு தங்கம் திட்டத்தை ஜெயலலிதா கொண்டு வந்து, அதன் மூலம் தாலிக்கு 8 கிராம் தங்கம், படித்த பெண்களுக்கு 25 ஆயிரம் ரூபாய், பட்டப்படிப்பு படித்த பெண்களுக்கு 50 ஆயிரம் வழங்கினார். இதன் மூலம் 12 லட்சத்து 51 ஆயிரம் ஏழை பெண்கள் பயன் அடைந்தனர். இன்றைக்கு அந்த திட்டத்தை தி.மு.க. அரசு நிறுத்திவிட்டது. இதற்கு என்ன காரணம்?

    தி.மு.க. அரசு ரூ.3 லட்சம் கோடி கடன் வாங்கி இருக்கிறது. இந்தியாவி லேயே கடன் வாங்கிய மாநிலத்தில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பெண்கல்வி பெண்களுக்கு சமூகத்தில் தனி மரியாதையைப் பெற்றுத் தருகிறது. ஆணுக்கு இணையாகவோ, ஆண்களை விட பெரிய அளவிலோ பெண்கள் வளர பெண்கல்வியே மிகவும் தேவையாகிறது.
    மனிதனின் ஆறறிவை செழுமையாய் வைத்திருப்பதில் கல்வி மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. இந்தக் கல்விக்கு ஆணென்றும், பெண்ணென்றும் பேதமில்லை. அப்படிப்பட்ட கல்வி இன்று பெண்களுக்குக் கிடைக்கிறதா ? இதனால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் போன்றவற்றை நாம் அறிந்து கொள்ளலாம்.

    இந்தியாவின் எதிர்காலம் குழந்தைகளிடம் என்கிறோம். ஆனால் அவர்களுக்கு அடிப்படை வசதிகளே இல்லை. உணவு, உடை, உறைவிடமே இல்லாத சூழலில் கல்வியை வழங்குவது நமது தேசத்தின் முன்னால் இருக்கும் மிகப்பெரிய சவால்.

    இந்தியாவில் இன்று கல்வியறிவு பெற்ற பெண்கள் வெறும் 54.16 சதவீதம் தான். ஆண்களில் சுமார் 76 சதவீதம் பேர் அடிப்படைக் கல்வி அறிவைப் பெற்றிருக்கின்றனர். நகர்புறம், கிராமப்புறம் எனும் வேறுபாடு எதுவும் இன்றி பெண்களுக்கான கல்வி குறைவாகவே இருக்கிறது. கேரளா, தமிழகம் உட்பட சில மாநிலங்கள் கல்வியில் வளர்ச்சி நிலையை நோக்கி நகர, வட மாநிலங்களான பீகார் போன்றவை கல்வியில் மிகவும் பிந்தங்கிய நிலையிலேயே இருக்கின்றன.

    நமது சமூக அமைப்பு பெண்கல்வியை ஊக்குவிக்கவில்லை. பெண்கள் வீட்டை ஆள வேண்டும், ஆண்கள் நாட்டை ஆளவேண்டும் என பிரித்திருந்தன. எனவே பெண் என்பவள் வீட்டு வேலைகளைச் செய்து, குழந்தைகளையும் கணவனையும் கவனிப்பவராக மாறிப் போனார். ஆண்கள் கடும் உழைப்பைச் சிந்தி வீட்டுக்கான பொருளாதாரத் தேவையை நிறைவேற்றும் பணியை மேற்கொண்டார்கள். வீட்டை ஆளும் பெண்களுக்கு கல்வி தேவையில்லை என்பது ஆணாதிக்க மனநிலையாய் இருந்தது.



    இன்றைய உலகம் பெண்கல்வியை ஊக்கப்படுத்துகிறது. பெண்கள் கல்வியறிவு பெற்று பல்வேறு உயர் பதவிகளை இன்று வகிக்கின்றனர். நாட்டின் தலைவர்களாகவும், பெரிய நிறுவனங்களின் தலைவர்களாகவும் பெண்கள் இன்று இடம்பிடித்திருக்கின்றனர். சமூகத்தில் ஏற்பட்டிருக்கும் விழிப்புணர்வே இதன் காரணமாகும். இன்றைய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஆண்களுக்கு இணையான அளவு பெண் ஊழியர்களும் இருக்கின்றனர். ஆனாலும் உயர் பதவிகளைப் பொறுத்தவரை சுமார் 80 சதவீதம் பதவிகள் ஆண்கள் வசமே இருக்கின்றன என்கிறது ஒரு புள்ளி விவரம்.

    பெண்கல்வி எங்கும் கிடைக்கும் போது நமது நாட்டின் வறுமை நிலையும் மறையும். பொருளாதாரம் வளர்ச்சியடையும். சமூகம் மறுமலர்ச்சியடையும்.

    பெண்கல்வி நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான ஒன்று. குழந்தைகளை வளர்க்கும் பெரும் பொறுப்பு இன்றைக்கு பெண்களிடம் தான் இருக்கிறது. பெண்களின் கல்வியறிவு சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு சரியான அறிவையும், அறிவுரைகளையும் வழங்க உதவும். குடும்பத்தின் பொறுப்புகளைச் சுமக்கின்ற பெண் வேர்களைப் போன்றவர். வேர்கள் வலுவாக இருக்கும் போது தான் மரம் செழுமையாக இருக்க முடியும். பெண்கல்வி அந்த வேர்களை பலப்படுத்தும். இதன் மூலம் குடும்பம் வலிமையாகும். குடும்பம் வலிமையாகும் போது ஒரு சமூகம் வலிமையாகும். சமூகம் வலிமையாகும் போது நாடு வலிமையடையும்.

    பெண்கல்வி பெண்களுக்கு சமூகத்தில் தனி மரியாதையைப் பெற்றுத் தருகிறது. ஆணுக்கு இணையாகவோ, ஆண்களை விட பெரிய அளவிலோ பெண்கள் வளர பெண்கல்வியே மிகவும் தேவையாகிறது. ஆணும் பெண்ணும் சமம் எனும் நிலை சமூகத்தில் உருவாகவேண்டுமெனில் பெண் கல்வி மிகவும் அவசியம்.

    கல்வி ஒரு மனிதனுக்கு துணிச்சலைக் கொடுக்கிறது. அதிலும் குறிப்பாக மென்மையான பெண்களுக்கு கல்வி தான் மிகப்பெரிய துணிச்சல் ஆயுதமாய் இருக்கிறது.

    பெண்கள் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து குழந்தைகளை வளர்க்க வேண்டும் என்று நீதிபதி சிந்துமதி அறிவுரை கூறினார்.
    வாடிப்பட்டி:

    மத்திய சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் வாடிப்பட்டி கிரட் தன்னார்வ தொண்டு நிறுவனம் இணைந்து சிறுபான்மையினர் பெண்களுக்கு தலைமைத் துவ பயிற்சி முகாமை நடத்தின. வாடிப்பட்டி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சிந்துமதி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    மாதர்களாய் பிறப்பதற்கு மாதவம் செய்யவேண்டும் என்றும் மாதர்தம்மை இழிவுசெய்யும் மடமையை கொளுத்துவோம் என்றும் புரட்சிகவி பாரதியார் பெண்மையின் பெருமை பற்றி பாடி பெண் அடிமை விலங்கை உடைத்தெரிய கவிதைகள் மூலம் பாடுபட்டார்.

    அதனால் பெண்கள் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து குழந்தைகளை வளர்க்க வேண்டும். சாதிப்பதற்கும், வயதுக்கும் சம்பந்தமில்லை. எந்த வயதில் வேண்டுமானாலும் சாதனை செய்யலாம்.

    சுயசிந்தனை, தன்னம்பிக்கை,பொறுமை இவைகளை குழந்தைகளுக்கு கற்று கொடுங்கள் அது அவர்களின் வாழ்க்கையில் வெற்றிக் கனியை பெற்றுத்தரும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முகாமில் திருமணசட்டங்கள்mபற்றி வழக்கறிஞர் செல்வராஜ், குடும்ப நல ஆலோசகர் டாக்டர் கண்மணி பாலியல் பாகுபாடுகளில் பெண்களின் நிலை பற்றி பேசினார். இதில் குடும்ப நலம், ஊட்டச்சத்து முறைகள், குழந்தைகள் நலம் மற்றும் தடுப்பூசி முறைகள், பெண்ணுரிமை கல்வி, பெண்களுக்கு எதிரான வன்முறைகள், தன்சுத்தம் குடும்ப கட்டுபாட்டு முறைகள், சுற்றுப்புற சுகாதாரம், அரசு நலத்திட்டங்கள் பற்றி கலந்துரையாடல்களும், குழு விவாதங்களும் நடந்தன.
    ×