என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    தோசை, பூரி, தோசை, நாண், புலாவ், சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் மட்டன் கொத்துக்கறி. இன்று இந்த கொத்துக்கறி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    மட்டன் கொத்துக்கறி - 200 கிராம்,
    எண்ணெய் தேவைக்கு.

    தாளிக்க...

    இடிச்ச பூண்டு - 3,
    இடிச்ச சின்ன வெங்காயம் - 5,
    காய்ந்த மிளகாய் - 5,
    கறிவேப்பிலை - சிறிது,
    மட்டன் மசாலா - 4 தேக்கரண்டி,
    கொத்தமல்லி, புதினா, உப்பு, நெய் - ½ தேக்கரண்டி.



    செய்முறை :

    மட்டன் கொத்துக்கறியை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.

    கொத்தமல்லி, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் இடித்த பூண்டு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் மட்டன் கொத்துக்கறி, உப்பு, மட்டன் மசாலா சேர்த்து வதக்கவும். சிறிது தண்ணீர் சேர்த்து கொத்துக்கறி வேகும் வரை மூடி வைக்கவும்.

    இறுதியாக தேவையான உப்பு சேர்த்து நெய், புதினா, மல்லி சேர்த்து பரிமாறவும்.

    சூப்பரான மட்டன் கொத்துக்கறி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ஸோஹம் தியானத்தை தொடர்ந்து செய்து வந்தால் சக்கரங்களின் ஆற்றல் அதிகரிக்கும். மன வலிமை கூடும். நினைத்த காரியத்தை செய்து முடிக்கும் ஆற்றல் உண்டாகும்.
    யோகிகளாலும், சித்தர்களாலும், ஞானிகளாலும் யோகம் மற்றும் வேதாந்தமான உபநிஷத்துக்களில் புகழ்ந்து கூறப்பட்டுள்ள ஒரு பயிற்சியாக ஸோஹம் தியானம் உள்ளது.

    ஒரு மனிதன் தனது சிறைவடிவான ஆன்மாவை அறிய ஸோஹம் தியானத்திற்கு ஒப்பான ஒரு உபாசனையோ, ஜபமோ இல்லை என்று தியான பிந்து உபநிஷத்து கூறுகிறது. முக்தி அடைய யோகிகளுக்கு ஸோஹம் தியானம் ஒரு பொக்கிஷம் போல் உள்ளது என்று ஹம்ஸோப நிஷத்து கூறுகிறது.

    சரபோக நூல்களான சிவ ஸ்வரோதயா மற்றும் ஞான சர நூலிலும் சரயோக சாற்கள் ஜீவன் முக்தி நிலையை அடைய ஸோஹம் தியானப் பயிற்சியை கூறி உள்ளது.

    பெயர் விளக்கம் :- மூச்சின் இயக்கத்தில் இயற்கையாகவே இருக்கும் ஹம்ஸோ என்ற சூட்சும நாதத்தை ஸோஹம் என்று மாற்றி ஜப தியானம் செய்வதால் ஸோவும் தியானம் என்று இப்பயிற்சி அழைக்கப்படுகிறது.

    செய்முறை-1 :- அனுகூலமான தியான ஆசனத்தில் அமரவும். முழங்கால் முட்டிகளின் மேல் இரண்டு கை விரல்களால் சின்முத்திரை செய்யவும். கண்களால் சாம்பவி (கண்களால் புருவ நடுவை பார்க்கவும்) அல்லது அகோசரி (கண்களால் மூக்கு நுனியை பார்க்கவும்) செய்யவும். உடல் முழுவதையும் தளர்வாக வைத்துக் கொள்ளவும். சுவாச இயக்கத்தில் மூச்சுக் காற்று உள்ளே செல்வதை அமைதியாக ஒரு நிமிடம் கவனிக்கவும்.

    இப்போது மூச்சுக்காற்றோடு ஸோ என்ற நாதத்தை (ஓசையை) மனதால் ஜபித்துக் கொண்டு ஆக்ஞா சக்கரத்திலிருந்து மூலாதார சக்கரம் வரை கவனம் செலுத்த வேண்டும். மூச்சுக் காற்றை வெளியே விடும்போது மூச்சுக் காற்றோடு ஹம் என்ற நாதத்தை ஜபித்துக் கொண்டு மூலாதாரத்திலிருந்து அக்ஞா சக்கரம் வரை கவனம் செலுத்த வேண்டும்.

    ஒரு சங்கிலித் தொடர் போல், உள் மூச்சில் உடலின் முன் பக்கத்தில் புருவ நடுவில் உள்ள ஆக்ஞாவி லிருந்து மூலாதாரம் வரை கவனம் செலுத்தி தொடர்ந்து வெளிமூச்சின் போது மூலாதாரத்திலிருந்து உடலின் பின் பக்கத்தில் முதுகின் வழியாக புருவ நடுவுக்கு நேராக உள்ள தலையின் பின் பகுதி வரை கவனம் செலுத்தவும்.

    இப்பயிற்சியின் போது பிராணாயாம பயிற்சி போல மூச்சுக் காற்றை ஆழமாக உள்ளுக்கு இழுக்கவோ வெளியே விடவோ கூடாது. மூச்சின் இயக்கம் இயற்கையாக இருக்க வேண்டும்.

    உங்கள் மூச்சுடன் உங்கள் உணர்வும் இணைந்து ஸோ-ஹம் என்ற நாதத்தை உண்டு பண்ண வேண்டும். அதே சமயம் சக்கரங்களை ஒன்றன்பின் ஒன்றாக தொடர்ந்து நினைக்க வேண்டும். வேகமில்லாமல் அமைதியாக எந்த அளவிற்கு மூச்சுடன் லோ-ஹம் என்ற ஆசையை முழு விழிப்புணர்வோடு உண்டு பண்ணுகிறீர்களோ, அந்த அளவிற்கு விரைவில் புலன் வழி செல்லும் புற உலக உணர்வு குறையும். நீண்ட நேரம் தியானம் செய்தாலும் சில நிமிடமே கழிந்தது போல இருக்கும்.

    செய்முறை-2 :- அனுகூலமான தியான ஆசனத்தில் அமரவும். முழங்கால் முட்டிகளின் மேல் கைவிரல்களால் சின்முத்திரை செய்யவும். கண்களால் அல்லது அகோசரி முத்திரை செய்யவும். உடல் முழுவதையும் தளர்வாக வைத்துக் கொள்ளவும். சுவாச இயக்கத்தில் முச்சுக்காற்று உள்ளே செல்வதையும் வெளியே வருவதையும் அமைதியாக ஒரு நிமிடம் கவனிக்கவும்.

    இப்போது மூலாதார சக்கரத்திலிருந்து அக்ஞா சக்கரம் வரை உடலின் முன் பக்கதத்திலிருந்து கவனம் செலுத்திக் கொண்டு வந்து ஆக்ஞாவிலிருந்து தலையின் பின் பகுதி வழியாக முதுகெலும்பின் கீழ் உள்ள மூலாதார சக்கரம் வரை கவனம் செலுத்த வேண்டும். மூலாதாரத்திலிருந்து ஆக்ஞா வரை கவனம் செலுத்தும் போது மூலா என்ற ஒன்று மேல் நோக்கி செல்வதாகவும், ஆக்ஞாவிலிருந்து மூலாதாரம் வரை கவனம் செலுத்தும் போது ஹம் என்ற ஓசை கீழ் நேக்கி செல்வதாக மனதால் நினைக்க வேண்டும். அப்படி நினைக்கும் போது  மூலாதாரத்தில் இருந்து ஆக்ஞா, ஆக்ஞாவிலிருந்து மூலாதாரம் வரை மீண்டும் மீண்டும் உங்கள் உணர்வு சக்கரங்கள் உள்ள உடல் பகுதியின் மீது மட்டுமே இருக்க வேண்டும். சுவாச இயக்கத்தின் மீது கவனம் செலுத்தக் கூடாது.

    செய்முறை 1ல் மூச்சுக் காற்றோடு இலோ-ஹம் என்ற ஒலியை உண்டாக்கிச் செய்யும் லோவும் தியானமுறை கூறப்பட்டது. செய்முறை 2-ல் மூச்சுக் காற்றோடு இணைந்து லோ-ஹம் மந்திரத்தை தியானிக்காமல் சக்கரங்களை மட்டும் நினைத்து லோ-ஹம் தியானத்தை செய்யும்படி கூறப்பட்டுள்ளது.

    பயிற்சி குறிப்பு : இந்த பயிற்சியை தினமும் காலை, மாலை இரண்டு வேளையும் செய்ய முடியாதவர்கள் செய்முறை பயிற்சி-1ஐ யோ அல்லது செய்முறை பயிற்சி 2ஐ யோ ஒரு நாளில் ஒருவேளை பயிற்சி செய்யலாம். இரண்டு தியான முறைகளையும் செய்ய முடியாதவர்கள் தொடர்ந்து ஒரு தியான முறையை கடைப்பிடிக்கலாம்.

    இந்த பயிற்சியை வெறும் வயிற்றோடு இருக்கும் போது எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். உணவு உட்கொண்ட பிறகு 4 மணி நேரம் கழித்து இந்த தியான பயிற்சியை செய்யலாம். காலை சூரிய உதயத்திற்கு முன்பும், மாலை சூரிய அஸ்தமனத்தின் போதும் இந்த தியான பயிற்சியை செய்வது சிறந்தது.

    பலன்கள் : சக்கரங்களின் ஆற்றல் அதிகரிக்கும். மன வலிமை கூடும். நினைத்த காரியத்தை செய்து முடிக்கும் ஆற்றல் உண்டாகும். மன அழுத்தம் நீங்குவதற்காக செய்யும் பவன முக்தாசனம், பிராணாயாமம், தியானம் ஆகிய முன்னேற்றம் ஒன்றன்பின் ஒன்றாக செய்ய முடியாதவர்கள் பிராணாயாமம் அல்லது தியான பயிற்சியை மட்டும் கூட செய்யலாம். பவன முக்தாசனம், பிராணாயாமம், லோ-ஹம் தியானம் ஆகிய மூன்றில் எதை பயிற்சி செய்தாலும் பயிற்சியின் முடிவில் சுவாசத்தில் ஓய்வாக 5 நிமிடம் இருக்க வேண்டும்.
    இரத்தசோகை ஏன் ஏற்படுகிறது? அதன் அறிகுறிகள், அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன? இரத்த சோகையிலிருந்து மீள என்ன செய்ய வேண்டும் என்பது விரிவாக பார்க்கலாம்.
    இந்தியாவில் பாதிக்கும் மேற்பட்ட அதாவது 51 சதவிகிதம் பெண்கள் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். 15 வயதில் இருந்து 49 வயது வரை (மாதவிடாய் தொடங்கும் பருவகாலத்தில் இருந்து மெனோபாஸ் கால கட்டம் வரை) இந்தப்பிரச்னை பெண்களை அதிகமாக பாதிக்கிறது.

    சில பெண்களுக்கு முகம், நகம் எல்லாம் வெளுத்துப்போயிருக்கும். சிலர் எப்போது பார்த்தாலும் சோர்வாக இருப்பாங்க. காரணம் இரத்தசோகை. இந்த இரத்தசோகை ஏன் ஏற்படுகிறது? அதன் அறிகுறிகள், அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன? இரத்த சோகையிலிருந்து மீள என்ன செய்ய வேண்டும் என்பது விரிவாக பார்க்கலாம்.

    இரத்த சோகைக்கான அறிகுறிகள்

    சோர்வு, தோல் வெளுத்துப்போதல், மூச்சு வாங்குதல், இதய படபடப்பு, மயக்கம், தலைவலி, நெஞ்சு வலி, குளிர்ந்த கைகள் மற்றும் பாதங்கள்.இரும்புச்சத்து குறைவாக உள்ள குழந்தைகள் சுண்ணாம்பு, சாக்பீஸ் போன்றவற்றை சாப்பிடுவார்கள். இரத்த சோகையின் ஆரம்ப அறிகுறிகளை யாரும் பெரிதாக கண்டுகொள்வதில்லை. இந்த அறிகுறிகள் அதிகமாகும் போது இரத்த சோகைப் பிரச்னையும் அதிகமாகி விடுகிறது.

    இரும்புச்சத்து குறைபாடினால் ஏற்படும் இரத்தசோகை- தேவையான அளவு இரும்புச்சத்துள்ள உணவை உட்கொள்ளாமல் இரும்புச்சத்துக் குறைபாடினால் ஏற்படும் இரத்தசோகை தான் உலகத்தில் அதிகபட்ச இரத்த சோகைக்கான காரணமாக இருக்கிறது. தேவையான அளவு இரும்புச்சத்து இல்லையென்றால் இரத்த சிவப்பணுக்களுக்கான ஹீமோகுளோபினை எலும்பு மஜ்ஜையால் உருவாக்க முடியாது.ஊட்டச்சத்துக் குறைபாடினால் ஏற்படும் இரத்தசோகை- ஆரோக்கியமான ஹீமோகுளோபின்கள் உருவாக இரும்புச்சத்தை தவிர ஃபோலேட் மற்றும் வைட்டமின் பி12 ஆகியவை தேவை. இந்த சத்துக்கள் உணவில் குறையும் போது ஹீமோகுளோபின் உற்பத்தியும் குறைகிறது. குடல் பிரச்னைகள்- இரத்த அணுக்கள் உருவாக தேவையான சத்துக்களை உறிஞ்சும் சக்தியினை தடை செய்யும் குடல் பிரச்னைகள்.

    மாதவிடாய் - இரத்த போக்கை ஏற்படுத் தும் மாதவிடாயானது பெண்களுக்கு ஆண்களை விட இரத்த சோகை அதிகம் ஏற்பட முக்கியக் காரணமாக இருக்கிறது. கர்ப்ப காலம்- கர்ப்ப காலங்களில் இரு உயிருக்கு தேவையான அளவு ஹீமோகுளோபின் கர்ப்பிணி பெண்களுக்கு வேண்டும். அதற்கேற்ற அளவு இரும்புச்சத்துள்ள உணவை உட்கொள்ளாத போது கர்ப்பிணி பெண்களுக்கு ஹீமோகுளோபின் தட்டுப்பாடு ஏற்படுவதால் இரத்தசோகை ஏற்படுகிறது. கர்ப்பிணி பெண்கள் போலிக் அமில மாத்திரைகளை எடுத்துக்கொள்ளாத போது இரத்தசோகைக்கான ரிஸ்க் அதிகரிக்கிறது. நாட்பட்ட நோய்களினால் ஏற்படும் இரத்தசோகை- கேன்சர், சிறுநீரகக்கோளாறு, கல்லீரல் கோளாறு போன்ற நாட்பட்ட நோய்களின் காரணமாக இரத்தசோகை ஏற்படுகிறது.

    நாட்பட்ட நோய்கள் மற்றும் வலி நிவாரண மருந்துகளால் ஹீமோகுளோபின் உருவாவது தடைபடுவதால் இரத்த சோகை ஏற்படுகிறது.எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள்- லுகோமியா மற்றும் மைலோஃபைப்ரோஸ் போன்ற எலும்பு சம்பந்தமான நோய்களின் காரணமாக இரத்த சிவப்பணுக்களின் உருவாக்கம் குறையும். தேவையான அளவு இரத்த சிவப்பணுக்கள் உருவாகாதது.இரத்த சிவப்பணுக்கள் விரைவில் அழிந்து போதல் - இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி வேகத்தை விட அதன் அழிவு விகிதம் அதிகமாக இருக்கும் போது இரத்த சோகை பிரச்னை ஏற்படும். இதனை ஹீமோலிடிக் அனீமியா என்பார்கள். மரபு வழியாக ஏற்படும் சில இரத்த நோய்களினால் இந்தப் பிரச்னை ஏற்படும்.
    தனிமையே தற்கொலைக்கு முதல் ஆயுதம் என்று கூறலாம். எனவே மனதளவில் பாதிப்பு ஏற்படும்போது தனிமை தற்கொலைக்கு இழுத்து செல்ல வாய்ப்புகள் அதிகம்.
    தற்கொலை செய்யும் எண்ணம் ஏன் உருவாகிறது? தற்கொலையில் இருந்து விடுபடுவது எப்படி? என்பது குறித்து தேனி மாவட்ட மனநல டாக்டர் ராஜேஷ் கூறியதாவது:-

    எந்த பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வாகாது என்ற எண்ணம் ஒவ்வொருவரின் மனதிலும் ஆழமாய் பதிய வைக்கப்பட வேண்டும். தற்கொலைக்கான உளவியல் காரணங்கள் சில உள்ளன. அதன் முதன் நிலையானது கொலை செய்ய விரும்புவது. 2-வதாக கொலை செய்யப்படுவதை விரும்புவது. 3-வதாக தன்னையே கொலை செய்து கொள்வது. ஒருவர் மீது ஏற்படும் வெறுப்பில் அவரை அழிக்க வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெறும் போது கொலையாக மாறுகிறது. அல்லது, நம்மால் என்ன செய்து விட முடியும் என்ற எண்ணத்தில் தற்கொலையை தேடிக் கொள்கின்றனர்.

    எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு உள்ளது. அந்த தீர்வை நோக்கி மனிதர்கள் தங்களின் மனதை கொண்டு செல்வது கிடையாது. சில பெரிய தலையீடுகள் தற்கொலையை பெருமளவு தடுத்துள்ளன. உதாரணமாக பூச்சிக்கொல்லிகள், விஷம் எளிதில் கிடைப்பதை தடுத்தல், தற்கொலை முயற்சி செய்தவர்களுக்கு சரியான நேரத்தில் உரிய மருத்துவ சிகிச்சை கிடைக்க செய்தல், குழப்பத்தில் உள்ளவர்களுக்கு மருத்துவ நிபுணர்களின் ஆலோசனை கிடைக்க செய்தல் போன்றவற்றால் தற்கொலை மற்றும் அதனால் உயிரிழப்புகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும்.



    தற்கொலை எண்ணம் கொண்டோருடன் பேசி அதனைத் தடுக்கக்கூடிய உதவித் தொலைபேசி எண்களை உருவாக்குதல், தற்கொலை சார்ந்த நடவடிக்கைகளை முன்கூட்டியே கண்டறிதல், நேர மேலாண்மை போன்றவற்றையும் குறிப்பிடலாம். தற்கொலையை முன்கூட்டியே கண்டறிவதற்காக கல்வி நிறுவனங்கள், பணியிடங்கள், பொதுஇடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தலாம்.

    தனிமையே தற்கொலைக்கு முதல் ஆயுதம் என்று கூறலாம். எனவே மனதளவில் பாதிப்பு ஏற்படும்போது தனிமை தற்கொலைக்கு இழுத்து செல்ல வாய்ப்புகள் அதிகம். கூடுமானவரை தனிமையை தவிர்த்தல் நல்லது. தற்கொலை தடுப்புக் கொள்கைகள், திட்டங்களை அமல்படுத்தி, அத்துடன் பொதுமக்களின் பங்கேற்பை சேர்க்கும்போது, சிரமமான சூழ்நிலைகளில் தங்கள் வாழ்க்கையை முடித்துக்கொண்டுவிடலாம் என்று மக்கள் எண்ணுகிற போக்கை தலைகீழாக மாற்றலாம், தற்கொலைகளின் எண்ணிக்கையை குறைக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி உணவில் சிறுதானியங்களை சேர்த்து கொள்வது நல்லது. இன்று தினை, காய்கறிகள் சேர்த்து கிச்சடி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    தினை - 1 கப்
    கேரட், பீன்ஸ், பட்டாணி - தேவையான அளவு
    தக்காளி - 1
    முருங்கை இலை - 1 கைப்பிடி
    இஞ்சி விழுது - சிறிதளவு
    எலுமிச்சை - ½ டீஸ்பூன்
    முந்திரி - 10
    கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு



    செய்முறை :

    தினையை வெறும் கடாயில் போட்டு வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    காய்கறிகள், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    முருங்கை கீரையை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், முந்திரி, சிவப்பு மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர் நறுக்கிய கேரட், பீன்ஸ், தக்காளி, இஞ்சி விழுது, முருங்கை இலை சேர்த்து சிறிது நேரம் வதக்கி, 2 கப் தண்ணீர் சேர்த்து கொதித்தவுடன் தினை சேர்த்து, அதில் எலுமிச்சை சாறு, உப்பு, கொத்தமல்லி சேர்த்து குக்கரில் 2 விசில் விட்டு இறக்கவும்.

    சத்தான தினை வெஜிடபிள் கிச்சடி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாணவச் செல்வங்களே வகுப்பு புறக்கணிப்பும், வேண்டாத விடுமுறையும் இப்போது இன்பம் தருவதாக இருந்தாலும், பின்னாளில் வாழ்வில் வருத்தம் உண்டாக்குவதாக அமைந்துவிடும் என்பதை மறந்துவிடாதீர்கள்.
    மாணவச் செல்வங்களே... பள்ளி - கல்லூரி வாழ்க்கையைப் பற்றிய உங்கள் அபிப்பிராயம் காலம்தோறும் மாறக்கூடியது. அதில் வகுப்பு புறக்கணிப்பும், வேண்டாத விடுமுறையும் இப்போது இன்பம் தருவதாக இருந்தாலும், பின்னாளில் வாழ்வில் வருத்தம் உண்டாக்குவதாக அமைந்துவிடும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

    தொடர்ச்சியான பாடங்களும், பயிற்சிகளும் மாணவர்களான உங்களில் சிலருக்கு சலிப்பைத் தரலாம். இதில் நன்றாகப் படிக்கும் மாணவர்கள் சிலரும் விதிவிலக்கின்றி அடங்குவர். பாடம் புரியவில்லை என்று சராசரி மாணவர்களும், தெரிந்த பாடம்தானே பிறகு படித்துக் கொள்ளலாம் என்று சிறந்த மாணவர்களும் வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபடுவது உண்டு.

    ‘இன்று அந்த ஆசிரியர்தான் வரவில்லையே ஜாலியாக வெளியே சென்று திரும்பலாம்’ என்று நினைப்பவர்கள் உண்டு. “தலைவர் படம் ரிலீஸ் ஆகிறது, முதல் ஷோ, ஸ்பெஷல் ஷோ பார்க்குறதுதான் கெத்து” என்று வகுப்பை புறக்கணிப்பதும், கூட்டாக சேர்ந்து கொண்டு விடுமுறை எடுத்து பொழுதுபோக்குவதும் சிலருக்கு இன்பமாக தெரிகிறது.

    பள்ளி- கல்லூரி வாழ்க்கையில் கிடைக்கும் சுதந்திரம் சிலருக்கு பட்டாம்பூச்சியாய் மாறிவிட்டதைப்போல உணர்வைத் தரலாம். இப்போது இஷ்டத்திற்கு வகுப்பை ‘கட்’ அடித்துவிட்டு சினிமாவிற்கோ அல்லது வேறு எங்கோ செல்வது பெரிய சாதனையாகக்கூட தெரியலாம். ஆனால் அது எதிர் காலத்தை பாதிக்கிறது என்பது இப்போது புரிவதில்லை.

    உங்களுக்காக எங்கோ உழைப்பைச் செய்து கொண்டிருக்கும் உங்கள் பெற்றோருக்கு இன்று இது தெரியாமல் இருக்கலாம். ஆனால் இறுதித் தேர்வு உங்களின் நடத்தையை தேர்வு முடிவாக காட்டும். அது வாழ்க்கைப் பாதையில் பிரதிபலிக்கும்.

    ‘இன்று வாழ்க்கையே சரியில்லை’ என்று புலம்பிக் கொண்டிருப்பவர்கள் எல்லாம், அன்று கல்விப் பருவத்தில் சரியாகப் படிக்காதவர்களாகவும், வகுப்பை புறக்கணித்து இன்பம் தேடியவர்களாகவும்தான் இருப்பார்கள். உங்கள் பெற்றோரோ, உறவினரோ கூட, “நீ நன்றாகப் படி, இல்லாவிட்டால் வாழ்க்கை கஷ்டமாகிவிடும்” என்று உதாரணம் காட்டி பேசுவதை கேள்விப்பட்டிருக்கலாம்.

    உங்களுக்கு அதுபோன்ற சிரமங்கள் ஏற்பட வேண்டாம். அந்தச் சிரமம் வேண்டாமென்றால், பள்ளி-கல்லூரிப் பருவத்தை அலட்சியத்துடன் எண்ணும் பழக்கத்தை நீங்கள் கைவிட வேண்டும். பள்ளி-கல்லூரிப் பருவம் இனிமையை, சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தி வீணாக்கிவிட்டு பின்னாளில் வருந்தக்கூடாது.

    கல்லூரிப் படிப்பை பொறுத்தவரை, ஒரு செமஸ்டருக்கு இத்தனை விடுமுறை வரை எடுத்துக் கொள்ளலாம் என்ற விதிமுறை இருக்கும். காரணமற்ற விடுமுறைகளை அனுமதிக்கமாட்டார்கள். தேவையற்ற விடு முறைக்கு அபராதம் விதிக்கவும் வாய்ப்பு உண்டு. நீங்கள் அலட்சிய எண்ணத்துடனும், தவறான நடத்தையுடன் வகுப்பு புறக்கணிப்பிலும், தேவையற்ற விடுமுறையிலும் கல்லூரிக் காலத்தை கழித்தால், தேர்வை எதிர்கொள்வதில் சிக்கல்கள் ஏற்படும். கூடுதல் விடுமுறைக்கு, தக்க அபராதம் கட்டி, ‘ஹால்டிக்கெட்’ பெற்றுக்கொள்ளும் விதிமுறை பல்கலைக்கழகங்களில் உண்டு. அதிகமான விடுமுறையால் செமஸ்டர் எழுதும் வாய்ப்பை இழந்த மாணவர்களும் இருக்கிறார்கள்.

    பள்ளி-கல்லூரிப் பருவத்தில் உயர்ந்த லட்சியத்துடன் செயல்பட வேண்டும். வேண்டாத விடுமுறையும், வகுப்பு புறக்கணிப்பும் உங்கள் வாழ்க்கையை பாதிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்!
    தேநீர் அருந்தும்போது உடலுக்கு புத்துணர்வு ஏற்படுவதுடன், உடல் ஆரோக்கியமும் மேம்படுகிறது. சில தேநீர்கள் நோய்களை குணப்படுத்தும் நோக்கிலும், மன அழுத்தம் போக்கும் வகையிலும் அருந்தப்படுகிறது.
    காலை எழுந்தவுடன் சுடச்சுட டீ அருந்துவது தான் அனைவருக்கும் பிடித்தமானது. தேயிலை கொண்டு தயாரிக்கப்படுவதை மட்டுமே டீ என அழைப்பதில்லை. வேறு பல பசுந்தழைகள் கொண்டு கொதிக்க வைத்து தரப்படும் சுவையான சுடுநீர் கூட டீ என்றுதான் அழைக்கப்படுகிறது. உலகெங்கும் விதவிதமாக டீ குடிக்கும் பழக்கம் உள்ளது.

    தேயிலையிலேயே மாறுபட்ட சில வகைகளை கொண்டும் தேநீர் உருவாக்கி தரப்படுகிறது. அவற்றிற்கு என தனி மதிப்பும், சிறப்பு குணங்களும் உள்ளன. அந்த வகையில் சில பொருட்கள் கொண்டும் தேநீர் தயாரிக்கப்பட்டு தரப்படுகிறது. இப்பொருட்களை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து தருவதை நம் முன்னோர் குடிநீர் என்றும், கசாயம் என்றும் அழைத்து வந்தனர். மாடர்ன் உலகில் எந்த மூலிகையும், பசுந்தழையும் போட்டு கொதிக்க வைத்து பரிமாறினால் அது தேநீர் வகையில் இணைக்கப்படுகிறது.

    தேயிலை தவிர்த்து இஞ்சி, புதினா, கிரீன் டீ, லாவண்டர், செம்பருத்தி, ஏலக்காய், கிராம்பு, இலவங்கப்பட்டை, ரோஸ்ஹிப், லெமன் பாம், நெட்டில், ஹாதோரன் போன்ற விதவிதமான பொருட்களை கொண்டு டீ தயாரித்துத் தரப்படுகிறது. சில நம் நாட்டு மூலிகை மற்றும் செடிகளாக காணப்படுகிறது. சில அயல்நாட்டில் கிடைக்கக்கூடிய விதைகள், பழங்கள் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இந்த தேநீர் அருந்தும்போது உடலுக்கு புத்துணர்வு ஏற்படுவதுடன், உடல் ஆரோக்கியமும் மேம்படுகிறது. சில தேநீர்கள் நோய்களை குணப்படுத்தும் நோக்கிலும், மன அழுத்தம் போக்கும் வகையிலும் அருந்தப்படுகிறது.

    எலுமிச்சை புல் தேநீர்

    எலுமிச்சை புல் தேநீர் என்பது நாம் உணவு அருந்தியபின் குடிக்க வேண்டிய தேநீர். எலுமிச்சை புல்-யை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்தபின் குடித்திட வேண்டும். இந்த தேநீரில் உள்ள சிட்ரல் குண அமைப்பு உணவு செரிமானம் அடைவதற்கு உதவி புரிகிறது. நல்ல வாசம் மிகுந்த தேநீரான இது அனைவருக்கும் பிடித்தமானது.

    பயன் நிறைந்த கிரீன் டீ

    கிரீன் டீ என்பது பிரபலமான மூலிகையாகும். இதன் தேநீரில் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. இதன் மூலம் உடலின் வயதான தோற்றம் ஏற்படுவது தடுக்கப்படும். புற்றுநோய் மற்றும் கட்டிகள் ஏற்படுவதை தடுப்பதுடன் உடலின் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவுகிறது.

    இளஞ்சூடான இஞ்சி தேநீர்

    இஞ்சி உடல் சக்தியை அதிகரிப்பதுடன், புத்துணர்வை அதிகரிக்க செய்ய உதவுகிறது. உணவு செரிமானம் அடையவும், வாய் குமட்டலை தடுக்கவும் இஞ்சி தேநீர் உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த இஞ்சி தேநீர் அருந்துவது முடக்கு வாதம் போன்ற நோய்களுக்கு மருந்தாகவும் அமைகிறது.

    புத்துணர்வுடன் கூடிய புதினா தேநீர்

    நறுமணத்துடன் கூடிய தேநீர் - ஆக புதினா தேநீர் உள்ளது. இது குமட்டல், வாந்தி மற்றும் மலச்சிக்கலை தீர்க்கும் தேநீர் ஆக உள்ளது. மேலும், உடல் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பதுடன், சளி தொந்தரவுகள், ஆஸ்துமா மற்றும் தலைவலி போன்றவற்றை நீக்கும் விதமாகவும் அருந்திடலாம். இதய நோயாளிகள் புதினா தேநீர் அருந்துவதை தவிர்த்திடல் வேண்டும்.

    சீமை சாமந்தி தேநீர்

    கெமோமில் என்ற சீமை சாமந்தி என்ற மூலிகை உலகளவில் மிக பிரபலமான ஒன்றாகும். இது மன அழுத்தம் மற்றும் வயதான தோற்றத்தை தடுக்கும் தன்மை கொண்டது. மேலும் தூக்கமின்மையை போக்கி நல்ல தூக்கத்தை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. உலகளவில் ஆர்கானிக் சீமை சாமந்தி தேநீர் தயாரிப்புகள் தயார் செய்து விற்பனைக்கு வருகின்றன.

    ரோஸ் ஹிப் தேநீர்

    ரோஜா செடியில் இருந்து கிடைக்கும் பழம் போன்ற பகுதியே ரோஸ் ஹிப் என்பதாம். இதனை கொண்டும் தேநீர் உருவாக்கப்படுகிறது. விட்டமின்-சி சத்து நிறைந்த இந்த ரோஸ் ஹிப் தேநீர் அருந்துவதன் மூலம் சரும பளபளப்பு மற்றும் சீறுநீரக செயல்பாடு சிறப்பாக இருத்தல் போன்ற பயன்கள் ஏற்படுகிறது.

    இதயத்தை பலப்படுத்தும் செம்பருத்தி தேநீர்

    செம்பருத்தி பூவின் தேநீர் என்பது காய்ந்த செம்பருத்தி பூவினை கொண்டு தயாரிக்கப்படுகிறது. செம்பருத்தி தேநீர் அருந்துவதன் மூலம் உயர் ரத்த அழுத்தம், மன அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்றவை குறைகின்றது. உடலில் செல் பாதிப்பு ஏற்படுவதை தடுப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்ததாகவும் செம்பருத்தி தேநீர் உதவுகிறது.

    லாவண்டர் பூ தேநீர் என்பதும் உலகளவில் பிரபலமான தேநீர் ஆக உள்ளது. இதனை அருந்துவதன் மூலம் காய்ச்சல், இருமல், ஆஸ்துமா போன்றவை நீங்குகிறது. மேலும் ஆறாத புண்களை கொண்டுள்ளோர் லாவண்டர் தேநீர் அருந்திவர சீக்கிரமே ஆறிவிடும்.
    மென்மை தன்மை கொண்ட இயற்கை இழையில் ஆடைகள் மேம்படுத்தும் வகையில் குறிப்பாக பெண்களின் மென்மையான சருமத்திற்கு உகந்த வகையில் இந்த இயற்கை இழை ஆடைகள் உதவுகின்றன.
    நாம் அணிகின்ற எந்தவித துணியிலான ஆடைகளும் உடலில் படும்போது ஏதேனும் ஒர் உரசலை, உறுத்தலை தரவே செய்யும். ஏனெனில் அந்த துணி நெய்யும் நூல் இழைகளில் உள்ள கட்டமைப்பே காரணமாக அமைகின்றது. குறிப்பாக செயற்கை இழை ஆடைகள் என்பவை உடலில் படும்போது அதிக தொந்தரவுகளையும், கோடை காலத்தில் அதிக எரிச்சலையும் தரும். அதனை போக்கும் விதமாக புதிய வழவழப்பும், மென்மை தன்மையும் கொண்ட இயற்கை இழையில் ஆடைகள் மேம்படுத்தும் வகையில் குறிப்பாக பெண்களின் மென்மையான சருமத்திற்கு உகந்த வகையில் இந்த இயற்கை இழை ஆடைகள் உதவுகின்றன.

    நூறு சதவீதம் இயற்கை இழை

    புதியதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த துணி என்பது முற்றிலும் இயற்கையான முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. ப்ளுயிட் பேஷன் என்றவாறு திரவ நிலையின் வளைவுகள், மென்மை தன்மை கொண்ட துணியமைப்பாக உள்ளது. எங்கும் எப்போதும் அணிய கச்சிதமான, மென்மையான சுற்று சூழலுக்கு பாதிப்பு உண்டாகாத, நூறு சதவீதம் இயற்கை முறையில் இந்த துணியமைப்பு உருவாக்கப்பட்டு உள்ளது.

    இதனை அணியும் போது அதிக சுதந்திரத்தன்மை ஏற்படுவதுடன் நல்ல காற்றோட்டமான உணர்வையும் தருகிறது. ஆடை அணியும் போது மற்ற துணிகளை போல் கனமாக தெரியாமல் எடைகுறைவான துணியமைப்பாகவே தோற்றமளிக்கும். எனவே இந்த வகையில் நெய்யப்படும் ஆடை அணியும் போது ஆடையை சுமக்க வேண்டியுள்ளது என்ற நினைப்பே ஏற்படாது. கோடைகாலம், குளிர்காலம் என அனைத்து காலங்களிலும் அணிய ஏற்ற வகையில் உள்ளது.

    மனிதனால் உருவான இயற்கை நூலிழை

    இந்த புதிய துணிவகை என்பது முற்றிலும் மரக்கூழ் கொண்டு இயற்கையான நூலிழையாக செய்யப்பட்டு தயார் செய்யப்படுகிறது. அதாவது இயற்கையாகவே மறுசுழற்சி வளத்தை மேம்படுத்தும் வகையிலான மரக்கூழ் மூலம் இதன் உருவாக்கம் உள்ளது. இதற்கென பிரத்யேகமாக வளர்க்கப்படும் மரங்கள் என்பவை எவ்வளவு மரம் வெட்டப்படுகிறதோ அதனை விட அதிக மரங்கள் உடனேயே நடப்படுகின்றன.



    இந்த வகை மரக்கூழ் நூலிழை தயாரிப்பின் முறை பருத்தி மூலம் நூலிழை தயாரிப்பைவிட புவி பாதுகாப்பு நிகழ்வு அதிகமாக பேனப்படுகிறது. ஆம் பருத்தியை விட ஆறு (அ) ஏழு மடங்கு குறைந்த நிலப்பகுதியில் இம்மரம் வளர்க்கப்படுகிறது. அத்துடன் பருத்தி வளர பயன்படும் நீரின் அளவை விட குறைவான நீரே இம்மரவளர்ச்சிக்கு பயன்படுத்தப்படுகிறது. எனவே சுற்றுச்சூழல் வளங்களை மேமம்படுத்தும் வகையில் மரம் வளர்ப்பு முதல் நூலிலை தயாரிப்பு வரை அனைத்தும் புவி பாதுகாப்பு அம்சம் நிறைந்தவையாகவே உள்ளது.

    புதிய ஆடைகள் தயாரிப்பில் இயற்கை நூலிழை

    பலதரப்பட்ட ஆடைகள் தயாரிப்புக்கு என இந்த புதிய பிராண்ட் இயற்கை நூலிழை பயன்படுத்தப்படுகிறது. அதிகபட்ச அளவில் புது ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் இப்புதிய நூலிழை கொண்டு ஆண், பெண் என இருபாலர் ஆடைகள் தயாரித்து வழங்குகின்றனர். இயற்கையான செல்லுலாஸ் நூலிழை என்பது அதிக மென்மை தன்மையுடன் ஒர் புதிய பரவச அனுபவத்தை தருகிறது என்பதால் பலரும் இதன் மீதான ஆர்வத்தை அதிகரித்து வருகின்றனர்.

    இந்த நூலிழை ஆடைகள் என்பதன் மேற்புற தோற்ற அமைப்பு அதிக பளபளப்பும், மென்மை தன்மையும் கொண்டதாக உள்ளது. எனவே இதில் நெய்யப்படும் ஆடைகள் அதிக பொலிவு மற்றும் அதிகபட்ச அழகு தன்மையை வெளிப்படுத்தும் வகையில் உள்ளன. நமது சருமத்தை பாதுகாக்கும் தன்மை கொண்ட இயற்கை நூலிழை ஆடைகள் பயன்படுத்திய பிறகும் பூமிக்கு பாரமாக அமையாத வகையில் உள்ளது.

    புதிய ப்ளுயிட் பேஷன் என்ற வகையில் அறிமுகமான இந்த வகை ஆடைகள் பெரும்பாலான பெண்களின் விருப்பமான ஆடைகளாக உள்ளது. பெண்களின் தோற்ற பொலிவை, கச்சிதமான உருவ அமைப்பை வெளிப்படுத்தும் ஆடை என்பதுடன் அவர்களின் மென்மை தன்மையை வெளிப்படுத்தும் ஆடையாகவும், இயற்கை நூலிழை ஆடைகள் உலா வருகின்றன.
    தீபாவளி பலகாரங்களில் இனிப்பு கார வகைகள் அதிகமாக இடம் பெறுகின்றன. இந்த தீபாவளிக்கு சாமை அரிசியில் அதிரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சாமை அரிசி மாவு - 3 கப்
    துருவிய வெல்லம் - 3 கப்
    ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்
    எண்ணெய் - தேவைக்கு



    செய்முறை:

    சாமை அரிசியை 2 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து பின்னர் வடிகட்டி நிழலில் உலறவைத்து அரைத்துக்கொள்ளவும்.

    பாத்திரத்தில் 3 கப் தண்ணீர் ஊற்றி வெல்லம் சேர்த்து பாகு காய்ச்சி இறக்கிக் கொள்ளவும்.

    அதனுடன் சாமை அரிசி மாவை சிறிது சிறிதாக சேர்த்து கிளறி விடவும்.

    ஏலக்காய் தூளும் சேர்த்துக்கொள்ளவும்.

    இந்த மாவு கலவையை 2 நாட்கள் அப்படியே வைத்துவிடுங்கள்.

    பின்பு அந்த மாவை அதிரசமாக தட்டி வைக்கவும்.

    தட்டி வைத்த மாவை எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்து நன்றாக எண்ணெயை வடித்து ருசிக்கவும்.

    சூப்பரான சாமை அதிரசம் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    பட்டாசுகள் பாதுகாப்பாய் வெடிப்பது முதல் அதனை வெடித்து முடித்து சுத்தம் செய்வது வரை அனைத்து நிலையிலும், மிகுந்த கவனத்துடன் செயல்படுவது அவசியம்.
    தீபாவளிக்கு பட்டாசுதான் ஒரு முழுமையை தரும். அதனால் தான் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசு இல்லாமல் தீபாவளியை கொண்டாடுவதில்லை. ஏதேனும் ஒர் வெடியோ, மத்தாப்போ, வீட்டின் முன் வைத்து வெடிப்பதன் மூலம் தீபாவளியின் முழுமையான மகிழ்ச்சி வெளிப்பாடு நிறைவேறுகிறது. மகிழ்ச்சியோடு வெடி வெடிப்பது என்பது, சில சமயம் தவறான மற்றும் எதிர்பாராத செயல்பாடுகளின் மூலம் விபத்துகளை ஏற்படுத்தி விட கூடும். எனவே மகிழ்ச்சியான தீபாவளி கொண்டாட்டத்தின் போது பட்டாசு வெடிப்பது என்பது கவனத்துடன் கையாள வேண்டும். பட்டாசுகள் பாதுகாப்பாய் வெடிப்பது முதல் அதனை வெடித்து முடித்து சுத்தம் செய்வது வரை அனைத்து நிலையிலும், மிகுந்த கவனத்துடன் செயல்படுவது அவசியம்.

    பட்டாசு வெடிக்கும் போது செய்ய கூடாதவை:-

    நாம் அணிகின்ற ஆடை என்பது எளிதில் தீப்பற்றி விடாத வகையில் இருத்தல் வேண்டும். நைலான், பாலிஸ்டர் ஆடைகள் அணிந்து கொண்டு பட்டாசு வெடித்தல் கூடாது. பருத்தி துணிகள் அணிவது பாதுகாப்பானது. பட்டாசு வெடிக்கும் போது வெளிவரும் தீப்பொறி பட்டாலும் நைலான் ஆடைகள் பொசுங்கி விட கூடும். அதுபோல், தரை வரை புரள விட்டு செல்லும் பிரமாண்ட ஆடைகள் அணிந்து பட்டாசு வெடிப்பது கூடாது. புதிய ஆடைகளை வெளியே மற்றும் விருந்தினர் வீட்டிற்கு செல்லும் போது அணிந்து சென்று பட்டாசு வெடிக்கும் போது பருத்தியிலான கச்சித மான ஆடைகள் அணிதல் வேண்டும்.

    பட்டாசுகள் கொளுத்து வதற்கு தீக்குச்சி மற்றும் லைட்டர் போன்றவற்றை பயன்படுத்த கூடாது. நீளமான குச்சியுடன் கூடிய ஊதுபத்தி, மத்தாப்பூ போன்றவை மட்டுமே பயன்படுத்திட வேண்டும். பட்டாசிற்கும் நமக்கும் சற்று இடைவெளி இருப்பது மிகவும் அவசியம்.

    வெடிக்காத பட்டாசுகளை மீண்டும் வெடிக்க செய்கிறோம் என அதனை கையில் எடுத்து ஆராய்ச்சி செய்வதும் கூடாது. ஒருமுறை தீப்பொறி பட்ட பட்டாசு என்பது சில சமயம் சற்று தாமதமாக கூட வெடிக்க கூடும். எனவே வெடிக்காத பட்டாசுகளை கையில் எடுப்பது, மீண்டும் மீண்டும் அதன் மீது நெருப்பு வைப்பது போன்ற பணிகளை செய்தல் கூடாது.

    கையில் வைத்து வெடிப்பது, பொதுமக்கள் செல்லும் போது அவர்கள் மீது தூக்கி எறிந்து பட்டாசு வெடிப்பது போன்ற செயல்களை செய்தல் கூடாது.

    வீட்டின் உட்புறம் மற்றும் வாகன நிறுத்தம் உள்ள பகுதிகளில் பட்டாசு வெடித்தல் கூடாது.

    பட்டாசுகள் வைத்திருக்கும் இடத்தில் அருகில் விளக்குகள்,வெப்பமான மின் விளக்குகள் எரிய விடக்கூடாது. அது போல் பட்டாசுகளை கையில் வைத்து கொண்டு பிற பட்டாசுகளை வெடிக்க செய்யக் கூடாது.

    நெருக்கமான வீடுகள் உள்ள பகுதியில் பட்டாசு வெடிப்பது தவிர்த்திட வேண்டும். மேலும் ஓலை வீடுகள் அருகில் ராக்கெட் போன்ற பாய்ந்து செல்லும் வெடிகளை வெடிப்பதை தவிர்த்திட வேண்டும். மத்தாப்பூ கம்பிகளை பற்ற வைத்து விட்டு ஆங்காங்கே தூக்கி எறிதல் கூடாது. பாதுகாப்பாக ஓர் பகுதியில் சேகரித்து பின்னர் அதனை வெளியேற்றிட வேண்டும்.



    பட்டாசு வெடிக்கும் போதுசெய்ய வேண்டியவை

    பட்டாசு வெடிக்கும் போது காலில் செருப்பு அணிந்து தான் வெடித்திட வேண்டும்.

    ஓரு பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் மணல் போன்றவை அருகில் வைத்திருப்பது வேண்டும்.

    எந்த ஒரு பட்டாசை வெடிக்கும் முன்னும் அதன் பெட்டியில் குறிப்பிட்டுள்ள செயல்முறைகளை படித்து பார்த்து அதற்கு ஏற்ப வெடித்திட வேண்டும்.

    பட்டாசு வாங்கும் போது அது முறையான அனுமதி பெற்று தயாரிக்கப்பட்ட தரமான பட்டாசு தானா என ஆராய்ந்து வாங்குதல் வேண்டும்.

    குழந்தைகளை பட்டாசு வெடிக்கும் பகுதியில் இருந்து தூர நிற்க வைத்து பார்க்க செய்ய வேண்டும். பெரிய வெடிகளை குழந்தைகளிடம் கொடுத்து வெடிக்க செய்கிறோம் என ஆபத்தை விலைக்கு வாங்க வேண்டாம்.

    பெரும்பாலும் திறந்த வெளி பகுதிகளில் பட்டாசு வெடிப்பது நன்மையளிக்கும். ஓரே நேரத்தில் பல வெடிகள் மற்றும் மத்தாப்பூகளை கொளுத்துவது வேண்டாம்.

    வெடிக்காத பட்டாசுகள் மீது தண்ணீர் ஊற்றி அதனை அணைத்து விட வேண்டும்.

    சாலைகளில் பட்டாசு வெடிக்கும் போது மக்கள் நடமாட்டத்தை கவனித்து பட்டாசு வெடித்தல் வேண்டும். யாரேனும் வந்தால் உடனே முன்னெச்சரிக்கையாக சைகை செய்து அவர்களை அங்கேயே தூரமாக நிற்க செய்திட வேண்டும். பட்டாசு வெடிக்கும் போது குனிந்து முகத்தை அதன் அருகில் கொண்டு சென்று பற்ற வைக்க கூடாது. நீளமான குச்சி ஊதுபத்திகள் அதிகம் பயன்படுத்திடல் வேண்டும்.

    முதலுதவி மற்றும் பாதுகாப்பபு நடவடிக்கைகள்

    பட்டாசுகள் எதிர்பாராவித மாக அதிகபடியாய் வெடித்து விபத்து ஏற்படின் வாளியில் உள்ள தண்ணீர் மற்றும் மணலை கொட்டி அணைத்திட வேண்டும்.

    நமது கால், கைகளில் ஏதேனும் தீப்பட்டு விட்டால் உடனே தண்ணீரை ஊற்றி அதனை குளிர்ச்சி படுத்திவிட்டே பின் மருத்துவரிடம் செல்ல வேண்டும்.

    கண்கள் மீது ஏதும் தீப்பொறி பட்டு விட்டால் நன்றாக தண்ணீர் விட்டு கழுவி விட வேண்டும். மெல்லிய ஆடைகள் அணிவதை தவிர்த்து கனமான ஆடைகள் அணிவது மிகுந்த நன்மையளிக்கும்.

    பெரும்பாலும் தீபாவளி சமயத்தில் வீடுகளின் ஜன்னல் களை மூடியே வைத்திருப்பது நல்லது. ஏனெனில் உயர சென்று வெடிக்கும் வெடி, ராக்கெட் போன்றவை தவறுதலாக வீட்டின் ஜன்னல் வழியே உள்ளே வர வாய்ப்பிருக்கிறது.

    விளக்குகள் ஏற்றி வைத்திருப்பின் அதன் அருகே துணிகள் மற்றும் திரை சீலைகள் படாமல் பார்த்து கொள்ளவும். குழந்தைகள் பட்டாசு வெடித்து முடித்ததும் கைகளை நன்றாக கழுவிவிட சொல்லவும். பட்டாசுகளில் இரசாயன துகள்கள் கைகளில் பட்டு ஓவ்வாமை ஏற்படவும், உணவுகளோடு சேர்ந்து உடலுக்குள் செல்லவும் வாய்ப்பு உள்ளது.

    எனவே தீபாவளியின் போது பாதுகாப்பாய் பட்டாசு வெடிப்போம். மகிழ்ச்சியோடு கொண்டாடுவோம்.
    தீபாவளி என்றதும் இனிப்புகளும் பலகாரங்களும்தான் அனைவருக்கும் பிடித்தமானது. இன்று நாவிற்கினிய இனிப்பு பூந்தி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கடலை மாவு - 1 கப்
    சர்க்கரை - 3/4 கப்,
    தண்ணீர் - கால் கப்,
    எண்ணெய் - பொரிக்க,
    உலர்ந்த திராட்சை, கிராம்பு, ஏலக்காய், முந்திரி - தேவையான அளவு.



    செய்முறை  :

    முதலில் கடலை மாவை சிறிது ஆப்ப சோடா கலந்து தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.

    நிறம் வர சிறிது வண்ண எசன்ஸ் கலந்து கொள்ளவும். வண்ணம் தேவையில்லையெனில் அது வெள்ளை கலர் பூந்தியாகவும் செய்து கொள்ளவும்.

    வாணலியில் நெய் விட்டு திராட்சை, முந்திரி, ஏலக்காய் போன்றவைகளை பொரித்து வைத்து கொள்ளவும்.

    வேறு வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், அதில் கரைத்த கடலை மாவை ஜல்லி கரண்டியில் விட்டு முத்து முத்தாய் பொரித்து எடுத்து கொள்ளவும்.

    அதன் பின் ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தண்ணீர் கலந்து சர்க்கரை பாகு தயார் செய்யவும். அதாவது கம்பி பதத்தில் சர்க்கரை பாகு வரவேண்டும்.

    இதில் பொரித்த பூந்திகளை போட்டு கிளறி உதிரியாக செய்து அதனுடன் பொரித்த முந்திரி, திராட்சைகளை கலந்து பரிமாறவும்.

    சூப்பரான இனிப்பு பூந்தி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    தென் இந்திய பகுதிகளில் கிடைக்கும் மைசூர்பாகு போன்றதுதான். இராஜஸ்தான் மற்றும் குஜராத் பகுதிகளில் மிக பிரபலமான இனிப்பான மோகன்தால் செய்வது சுலபம்.
    தேவையான பொருட்கள் :

    இதற்கு கடலை மாவு- 2 கப்,
    நெய் - 3 டீஸ்பூன்
    பால் - 3 டீஸ்பூன்,
    நெய் - 1 கப் தனியாக,
    சர்க்கரை - 1 கப்,
    தண்ணீர் - கால் கப்,
    ஏலக்காய் தூள், குங்குமப்பூ - கொஞ்சம்



    செய்முறை :

    கடலை மாவுடன் 3 டீஸ்பூன் பால் மற்றும் 3 டீஸ்பூன் நெய் விட்டு நன்கு பிசைந்து அதனை சல்லடையில் சலித்து வைத்து கொள்ளவும்.

    முதலில் வாணலியில், ஒரு கப் நெய் விட்டு சூடாக்கவும்.

    சூடான நெய்யில் இந்த கடலை மாவை போட்டு பொன்னிரமாக வரும்வரை கிளறி கொள்ளவும்.

    பின் வேறு வாணலியில் சர்க்கரை 1 கப், கால் கப் தண்ணீர் விட்டு சூடாக்கி கம்பி பதம் வரும் வரை காய்ச்சவும்.

    இதில் ஏலக்காய் தூள் போட்டு கிளறி பின் கடலை மாவை போட்டு நன்கு கிளறவும்.

    இது நன்கு கலந்து கெட்டியான பதம் வந்ததும் இறக்கி பாத்திரத்தில் கொட்டி விட்டு சூடான பதத்தில் வெட்டிக் கொள்ளவும்.

    பின் அலங்கரிக்க குங்குமப்பூவை தூவி பரிமாறவும்

    சூப்பரான மோகன்தால் இனிப்பு ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×