search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tea coffee"

    • மூலிகை டீயை பருகுவதற்கு நிறைய பேர் ஆர்வம் காட்டுகிறார்கள்.
    • முலிகை டீ பருகுவதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இருக்கின்றன.

    காபி, டீக்கு மாற்றாக மூலிகைகள் கலந்த டீயை பருகுவதற்கு நிறைய பேர் ஆர்வம் காட்டுகிறார்கள். முலிகை டீ பருகுவதிலும் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இருக்கின்றன. டீ தயாரிப்பு முறையில் செய்யும் தவறுகள் உடல்நல பாதிப்புகள் ஏற்படவும் காரணமாகிவிடும்.

    * மூலிகை டீயின் சுவைக்காக சர்க்கரை சேர்ப்பதை கூடுமானவரை தவிர்க்க வேண்டும். உடலில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதற்காக மூலிகை டீ பருகும்பட்சத்தில் சர்க்கரை சேர்ப்பது பொருத்தமாக இருக்காது. சர்க்கரைக்கு மாற்றாக தேன் சேர்த்து பருகலாம். உடல் பருமனை குறைப்பதற்கு முயற்சிப்பவர்கள் தேன் கலந்து பருகுவது நல்ல பலனை கொடுக்கும். சூடாக தயாரிக்கப்பட்ட முலிகை டீயில் ஒருபோதும் தேன் கலந்துவிடக்கூடாது. மிதமான சூடான இருக்கும்போதுதான் தேன் கலக்க வேண்டும்.

    * மூலிகை டீயை அதிக சூடாகவோ அல்லது குளிர்ச்சியான நிலையிலோ பருகக்கூடாது. மிதமான சூட்டில் பருகுவதே சிறந்தது. அதிலும் பித்தம் சார்ந்த பிரச்சினை உடையவர்கள் ஓரளவு மிதமான சூட்டில் அருந்துவதே நல்லது.

    * பெரும்பாலானவர்கள் காபியோ, டீயோ அளவுக்கு அதிகமாக தயார் செய்துவிட்டால் சில மணி நேரம் கழித்து மீண்டும் அதனை சூடுபடுத்தி குடிப்பார்கள். அதுபோல் மூலிகை டீயை ஒருபோதும் மீண்டும் சூடுபடுத்தி பருகக்கூடாது. அப்படி பருகினால் மூலிகையில் உள்ள சத்துக்கள் நீக்கிவிடும்.

    * பித்தம் சம்பந்தமான பிரச்சினை உடையவர்கள் கோடை காலங்களில் மூலிகை டீ பருகுவதை தவிர்ப்பது நல்லது. மற்ற நேரங்களிலும் அடிக்கடி பருகுவதை தவிர்க்க வேண்டும்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • மன இறுக்கத்தை போக்குவதற்கு காபி உதவியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
    • நாமே தயார் செய்து கொள்ளக்கூடிய காபிகள் குறித்து சில தகவல்கள் உங்களுக்காக:

    காபி, இந்த வார்த்தையை கேட்டாலே ஏதோ ஒரு புத்துணர்ச்சி வரத்தான் செய்யும். சிறுவயதினர் தொடங்கி பெரியவர்கள் வரையில் எல்லோருக்கும் பிடித்தமான ஒரு பானம். ஒவ்வொரு நாளும் காலை பொழுது விடிந்து, பல் துலக்கியவுடன் குடிக்கும் சூடான காபி மற்றும் நீண்ட நேர பணி சோர்வுக்கு பிறகு அருந்தும் ஒரு காபி என்பது உடலுக்கு ஒரு புத்துணர்ச்சியை தரக்கூடியதாக இருக்கிறது. மன இறுக்கத்தை போக்குவதற்கு இந்த காபி உதவியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இத்தகைய காபியில் வித, விதமான காபிகள் இருக்கிறது. இதில் நாமே தயார் செய்து கொள்ளக்கூடிய காபிகள் குறித்து சில தகவல்கள் உங்களுக்காக:

    பிராப்பே

    நீங்கள் வழக்கமாக சாப்பிடும் கோல்டு காபியைக் காட்டிலும் இது நல்ல தேர்வாக அமையும். ஆனால், இதில் கொஞ்சம் ஐஸ் சேர்க்கப்படுகிறது. இன்ஸ்டன்ட் காபி தயார் செய்து, அதில் குளிர்ந்த நீர், சர்க்கரை, பால் ஆகியவற்றை கலந்து இந்த பிரப்பே தயார் செய்கின்றனர். இதை வீட்டிலேயே நாம் எளிமையாக தயார் செய்து விடலாம். அந்த அளவுக்கு இலகுவாக தேவையோ, அந்த அளவுக்கு பிளெண்ட் செய்து கொள்ள வேண்டும். குறிப்பாக, கிளாஸ் பொங்கி வழியும் அளவுக்கு பிளெண்ட் செய்தால் சுவை தாறுமாறாக இருக்கும்.

    சாக்கலேட் காபி ட்ரபிள்

    சாக்கலேட் சாப்பிடுவதற்கு அதிக விருப்பம் இல்லாதவர்களுக்கு கூட, அதன் மணம் மிகவும் பிடிக்கும். எனவே நேரடியாக சாக்கலேட் சாப்பிடவில்லை என்றாலும், காபியுடன் அதனை மிக்சிங் செய்து கொள்ளலாம். இது இனிப்பும், கசப்பும் கலந்த சுவையில் இருக்கும்.

    டல்கோனா காபி

    தென் கொரியாவைச் சேர்ந்த டோபி என்ற பான வகை தான் டல்கோனா காபி என்று பரவலாக அறியப்படுகிறது. இதை எப்படி தயாரிக்க வேண்டும் என்றால், சூடான பாலில் சர்க்கரை சேர்த்து, காபியுடன் கலக்கவும், அதனை ஒரு கிளாசில் பாதி அளவுக்கு எடுத்துக் கொள்ளுங்கள் இப்போது மேல் பகுதியில் சில்லென்ற காபியை சேர்த்துக் கொள்ளுங்கள். இரண்டும் கலந்த அனுபவம் நம் மனதை மெய்மறக்கச் செய்யும்.

    திராமிசு

    காபி என்றால், எப்போதுமே அதை பானமாக தான் எடுத்து கொள்ள வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை. உணவு பொருளாகவும் எடுத்துக் கொள்ளலாம். இத்தாலி உணவு வகையை சேர்ந்த இந்த திராமிசுவில் முக்கிய மூலப்பொருள் காபி ஆகும். க்ரீம், சாக்கலேட், காபி ஆகியவற்றின் காம்பினேஷன் என்பது நம்மை சொர்க்கத்துக்கே அழைத்துச் செல்லும்.

    பில்டர் காபி

    பில்டர் காபி இந்த வார்த்தையை யாரும் கேட்காமல் இருந்திருக்க முடியாது. மேலும், நீங்கள் நெடுஞ்சாலைகளில் அடிக்கடி பயணம் செய்பவர்கள் என்றால், பல இடங்களில் இந்த வார்த்தையைபார்க்க முடிந்து இருக்கும். கசப்பு மற்றும் இனிப்பு, ஆகியவை சரியாக கலந்துள்ள கலவை இது. இதன் மேல் நிற்கும் நுரையே நமக்கு மிகுந்த மணத்தை தரும்.

    • காலையில் எழுந்ததும் டீ குடிக்காவிட்டால் அன்றைய பொழுதே விடியாது.
    • டீ குடிப்பது நல்லதா? கெட்டதா? என்ற விவாதம் நடந்து கொண்டே இருக்கிறது.

    காலையில் எழுந்ததும் டீ அருந்தும் வழக்கம் பலருக்கும் அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாக இருக்கிறது. கூடவே எந்த டீ பருகுவது உடல் நலனுக்கு நல்லது என்ற விவாதம் நீண்ட காலமாக நீடித்துக்கொண்டிருக்கிறது.

    அதனால் டீயில் பால் கலந்து பருகலாமா? வெறுமனே தேயிலை கலந்து 'பிளாக் டீ'யாக ருசிக்கலாமா? என்ற குழப்பம் நிறைய பேருக்கு இருக்கிறது. அதனை முன்வைத்து ஆய்வுகளும் நடந்து கொண்டிருக்கின்றன. சமீபத்திய புதிய ஆய்வு ஒன்று டீ குடிப்பது எப்படி ஆயுளுக்கு பலம் சேர்க்கும் என்ற கருத்தை முன்வைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    ஆய்வின்படி, 40 முதல் 69 வயதுடையவர்களின் உணவு பழக்கம், வாழ்க்கை முறை மற்றும் தேநீர் உட்கொள்ளல் போன்ற விஷயங்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டன. ஆய்வில் பங்கேற்றவர்களில் 85 சதவீதம் பேர் டீ பருகுவதை ஒப்புக்கொண்டனர். அதிலும் 89 சதவீதம் பேர் இரண்டு முதல் ஐந்து கப் வரை பால் கலக்காமல் 'பிளாக் டீ' பருகியுள்ளனர்.

    ஆய்வின்போது ஒரு நாளைக்கு இரண்டு கப் பிளாக் டீ அருந்துபவர்களுக்கு மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும் அபாயம் குறைவு என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

    ஒரு நாளைக்கு மூன்று கப் பிளாக் டீ பருகுவதால் இறப்பு அபாயம் 12 சதவீதம் குறைந்துள்ளது. பிளாக் டீ பருகுவது, நீரிழிவு, பக்கவாதம் மற்றும் இதய நோய் அபாயத்தை குறைக்க உதவும் என்பது ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.

    இந்த பானத்தில் பைட்டோநியூட்ரியன்கள், பாலிபினால்கள், கேட்டசின்கள் மற்றும் ஆன்டிஆக்சிடெண்டுகள் நிறைந்துள்ளன. அவை அழற்சி எதிர்ப்பு விளைவுகளைக் கொண்டுள்ளன.

    ஒரு கப் பிளாக் டீயில் 2.4 கலோரிகள் மற்றும் சிறிய அளவு கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, புரதங்கள் மற்றும் கொழுப்புகள் உள்ளன.

    • தினமும் காலையில் வெறும் வயிற்றில் தேநீர் பருகுவது நல்லதல்ல.
    • டீ ஏற்படுத்தும் சில பக்கவிளைவுகள் குறித்து பார்ப்போம்.

    காலையில் எழுந்ததும் முதல் வேலையாக டீ பருகும் பழக்கத்தை பலரும் பின்பற்றுகிறார்கள். ஆனால், வெறும் வயிற்றில் தேநீர் அருந்துவது நல்லதா என்று எப்போதாவது யோசித்து பார்த்திருக்கிறீர்களா? மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் ரோகினி பாட்டீல், தேநீர் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட பானம்தான் என்றாலும் அதனை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பருகுவது நல்லதல்ல என்கிறார்.

    தேநீரில் ஆன்டி ஆக்சிடென்டுகள் உள்ளன. அவை நோய் எதிர்ப்பு சக்தியையும், வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்கச்செய்யும். என்றாலும் காலையில் வெறும் வயிற்றில் பருகினால் வயிற்றுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். வயிற்றில் இருக்கும் அமிலங்களை தூண்டி செரிமானத்தை சீர்குலைக்கக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். காலையில் வெறும் வயிற்றில் டீ பருகும்போது வாயில் இருக்கும் பாக்டீரியாக்கள் குடலுக்கு கடத்தப்பட்டு பாதிப்பை ஏற்படுத்தும். அஜீரணம், நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சினைகளை உண்டாக்கும்.

    வெறும் வயிற்றில் பருகப்படும் டீ ஏற்படுத்தும் மேலும் சில பக்கவிளைவுகள் குறித்து பார்ப்போம்.

    தலைவலி:

    தலைவலியால் அவதிப்படுபவர்கள் அதனை கட்டுப்படுத்த டீ பருகி இருக்கலாம். ஆனால் டீயில் காபின் இருப்பதால் எதிர்பார்க்கும் பலனை தராது. டீக்கு பதிலாக தண்ணீர் அதிகம் பருகுவது தலைவலியின் வீரியத்தை குறைக்க உதவும்.

    அஜீரணம் - நீரிழப்பு:

    வெறும் வயிற்றில் தேநீர் பருகுவது செரிமான அமைப்புக்கு இடையூறை ஏற்படுத்தும். வாயு தொந்தரவையும் உண்டாக்கும். தேநீரில் இருக்கும் டையூரிடிக் சேர்மம், அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கு வழிவகுத்துவிடும். அப்படி சிறுநீர் கழிப்பது உடலில் நீரிழப்பை உண்டாகிவிடும்.

    இரவில் பல மணி நேர தூக்கம் காரணமாக ஏற்கனவே உடல் நீரிழப்புடன் காணப்படும். காலையில் எழுந்தவுடன் டீ குடித்தால், நீரிழப்பை அதிகப்படுத்திவிடும். தேநீரில் உள்ள தியோபிலின் என்ற ரசாயனப் பொருளும் நீரிழப்பை அதிகப் படுத்திவிடும். மலச்சிக்கலுக்கும் வழிவகுத்துவிடும் என்கிறார், ரோகினி பாட்டீல்.

    ஊட்டச்சத்து உறிஞ்சுதலை தடுக்கும்:

    தேநீரில் டானின் என்ற சேர்மம் உள்ளது. இது சாப்பிடும் உணவில் இருந்து உடலுக்கு இரும்புச் சத்து உறிஞ்சப்படுவதை தடுத்துவிடும். மேலும் தேநீரில் உள்ள காபினும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும் அளவை குறைத்துவிடும்.

    அசிடிட்டி பிரச்சினை ஏற்படும்

    வயிற்றில் இருக்கும் திரவங்களின் செயல்பாடுகளுக்கு தேநீர் தொந்தரவு ஏற்படுத்தும்.

    அமில, கார சம நிலையையும் சீர்குலைக்கும். அசிடிட்டி பிரச்சினை தலைதூக்கும். நெஞ்செரிச்சல் ஏற்படும். கீழ் மார்பில் வலியை உணரக்கூடும்.

    வெறும் வயிற்றில் தேநீர் அருந்துவதற்கு பதிலாக ஏதேனும் சிற்றுண்டி உட்கொள்ளலாம். குறிப்பாக சிறிதளவு நட்ஸ் வகைகளை சாப்பிட்டுவிட்டு தேநீர் அருந்துவது சிறப்பானது. தேநீரில் வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் சேர்க்கலாம். வெல்லத்தில் பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. எளிதில் செரிமானம் நடைபெறுவதற்கும் வித்திடும்.

    ''தேநீர் அருந்துவதற்கு சிறந்த நேரம் மாலை 3 மணிதான். அது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவும். காய்ச்சல் மற்றும் சளி வராமல் தடுக்கும்'' என்கிறார், டாக்டர் ரோகினி பாட்டீல்.

    • உணவுக்குழாய் புற்று நோயால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.
    • இந்தியாவில் அச்சுறுத்தும் புற்றுநோய் வகைகளில் ஆறாவது இடத்தில் இருக்கிறது.

    டீயை சூடாக பருகுவதற்கு தான் நிறைய பேர் விரும்புகிறார்கள். அப்படி பருகுவதுதான் தொண்டைக்கு இதமாக இருக்கும் என்றும் கருதுகிறார்கள். ஆனால் அதுவே தொண்டைக்கும், உணவு குழாய்க்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. மிக அதிகமான சூட்டில் அதாவது 140 டிகிரி பாரன்ஹீட் வெப்ப நிலையில் டீ பருகினால் உணவுக்குழாய் புற்றுநோய் உருவாகக்கூடும் என்கிறார், ஆய்வை மேற்கொண்ட டாக்டர் பர்ஹத் இஸ்லாமி.

    ''காபி, டீ போன்றவைகளை தயாரித்து சில நிமிடங்களாவது ஆறவைத்து மிதமான சூட்டில் பருகுவதுதான் சரியானது. டீ தயாரித்து முடிப்பதற்கும் - பருகுவதற்கும் இடையே குறைந்த பட்சம் 4 நிமிடங் களாவது இடைவெளி இருக்க வேண்டும்'' என்றும் சொல்கிறார்.

    டீ மட்டுமின்றி சூடான எந்தவொரு பானமாக இருந்தாலும் 60 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கு மேல் இருந்தால் பருகக்கூடாது. டாக்டர் பர்ஹத் இஸ்லாமி தலைமையிலான ஆய்வு குழுவினர் 40 வயது முதல் 75 வயதுக்குட்பட்ட டீ பிரியர்கள் 50,045 பேரை ஆய்வுக்கு உட்படுத்தி இருக்கிறார்கள்.

    தற்போது உணவுக்குழாய் புற்று நோயால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. அதனை கருத்தில் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. தொண்டையில் இருந்து வயிற்றுக்கு உணவு செல்லும் உணவுக் குழாயின் உள் பகுதி செல்களில் இந்த புற்றுநோய் உருவாகிறது. இது இந்தியாவில் அச்சுறுத்தும் புற்றுநோய் வகைகளில் ஆறாவது இடத்தில் இருக்கிறது.

    உடலுக்கு சுறுசுறுப்பை தரும் தேநீர் பிரியர்களுக்கு இந்த பதிவு சற்று பாதிப்பை உண்டாக்கும். ஆனாலும் தொடர்ந்து படித்து உண்மையை அறிந்து கொள்ளுங்கள்.
    தினமும் காலை வேளையை சுறுசுறுப்பாக தொடங்க வைக்கும் ஒரு முக்கிய பானம் டீ என்னும் தேநீர். இதன் சுவை நாவை வருடும் போது உண்டாகும் ஆனந்தம் டீ பிரியர்களுக்கு மட்டுமே தெரியும். ஆகவே இத்தகைய தேநீர் பிரியர்களுக்கு இந்த பதிவு சற்று பாதிப்பை உண்டாக்கும். ஆனாலும் தொடர்ந்து படித்து உண்மையை அறிந்து கொள்ளுங்கள்.

    தேநீர் தயாரிக்கும் விதத்தில் அதன் நன்மைகள் நமக்கு கிடைக்கின்றன. தேநீர் சுவை கிராம்பு, இஞ்சி, துளசி இலைகள், தேயிலை ஆகியவற்றை நீரில் கொதிக்க வைத்து தேன் சேர்த்து பருகுவது ஒரு பாரம்பரிய தேநீரின் சுவையை கொடுக்கும். இதுவே சிறந்த தேநீர் தயாரிக்கும் சரியான வழிமுறையுமாகும்.

    செரிமான மண்டலத்தின் சிறப்பான செயலாற்றல், சளி, இருமல், காய்ச்சல் போன்றவற்றை போக்க உதவுவது போன்றவற்றில் ஒரு சிறந்த தேநீர் சிறப்பாக செயல் புரிகிறது.

    தேநீர் தயாரிப்பு ஆனால் கடந்த சில காலமாக, இந்த தேநீர் தயாரிப்பு முறையில் மாற்றம் உண்டாக்கி அதில் சுவையை அதிகரிக்க பால் சேர்த்து பருகி வருகின்றனர். இதனால் இதன் சுவை உலகமெங்கும் பரவி தேநீர் பிரியர்கள் எண்ணிக்கையை உயர்த்தியுள்ளது. முன்னர் கூறிய தயாரிப்பு முறை ஒரு மருத்துவ கலவையாக இருந்த நேரத்தில், பால் சேர்த்து தயாரிக்கும் இந்த முறை ஒரு மாற்றத்தை உண்டாக்கியுள்ளது.

    ஒரு கப் தேநீர், பதட்டத்தைப் போக்க உதவுகிறது, வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது, இரத்த அழுத்தம், நீரிழிவு, கொலஸ்ட்ரால் போன்றவற்றை கட்டுப்படுத்த உதவுகிறது.

    உணவு வழிகாட்டி குழுவின் அமைப்பாளரான டாக்டர் டி. ரகுநாத் ராவ், தேநீர் மற்றும் காபி ஆகியவற்றை குறைந்த பட்சம் சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரம் முன்னும் பின்னும் பருகுவதை தவிர்க்க வேண்டும் என்று கூறுகிறார். தேநீர் மற்றும் காபியில் உள்ள டானின் என்னும் ரசாயனம், இரும்பு உறிஞ்சுதலைத் தடுக்கிறது.

    குறிப்பாக டீயில் பால் சேர்க்கப்படுவதால், சாப்பிட்ட பின் நன்மையை விட அதிக தீங்கை உண்டாக்குகிறது. குறிப்பாக செரிமானத்தில் அதிக பாதிப்பை உண்டாக்குகிறது. மேலும் மிதமான அளவிற்கு மேல் இவற்றைப் பருகுவதால் உங்கள் குடல் பகுதியில் செயல்பாடுகளை தடை செய்து, தீவிர அசிடிட்டி மற்றும் வீக்கத்தை உண்டாக்குகிறது.

    இதனால் பெருங்குடல் மற்றும் செரிமான பாதையின் ஆரோக்கியம் பாதிக்கிறது. ஆகவே தேநீர் பிரியர்கள் சாப்பிடுவதற்கு முன்னும் பின்னும் தேநீர் பருகுவதை நிறுத்திக் கொள்வது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். 
    மூலிகைகளின் ராணியான துளசி, அதன் மருத்துவ குணத்தால், ஆயுர்வேத மருத்துவத்தில் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இன்று துளசியில் டீ தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    துளசி இலை - 1/2 கப்
    தண்ணீர் - 2 கப்
    டீத்தூள் - 2 டீஸ்பூன்
    நாட்டு சர்க்கரை - தேவையான அளவு
    பால் - தேவையான அளவு



    செய்முறை :

    துளசி இலைகளை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    துளசி இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு பின் அடுப்பைக் குறைத்து 3 முதல் 4 நிமிடம் வரை விடவும்.

    பின் டீத்தூள், நாட்டு சர்க்கரை போட்டு 2 நிமிடங்கள் கழித்து வடிகட்டவும்.

    தேவையான அளவு சூடான பாலை ஊற்றி கலந்து கொள்ளவும்.

    சுவையான ஆரோக்கியமான துளசி டீ தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய 3 பொருட்களும் சித்தர் இலக்கியத்துள் திரிகடுகம் எனப்படுகிறது. உடலில் அதிக கபம் உள்ளவர்கள் திப்பிலி அடங்கிய திரிகடுகம் பால் தயாரித்து குடித்தால் கபம் நீங்கும்.
    தேவையான பொருட்கள் :

    பால் - ½ லிட்டர்
    தண்ணீர் - ½ லிட்டர்
    முந்திரி பருப்பு - 20 கிராம்
    பாதாம் பருப்பு - 20 கிராம்
    சுக்குப்பொடி - ½ தேக்கரண்டி
    மிளகுப்பொடி - ½ தேக்கரண்டி
    திப்பிலிபொடி - சிறிதளவு (ஒரு சிட்டிகை)
    மஞ்சள் பொடி - ¼ தேக்கரண்டி
    ஜாதிக்காய்த்தூள் - 1 சிட்டிகை
    ஏலக்காய்த்தூள் - ½ தேக்கரண்டி
    பனங்கல்கண்டு - தேவையானது அல்லது காய்ச்சி வடித்த வெல்லப்பாகு.



    செய்முறை :

    முந்திரிப் பருப்பு, பாதாம்பருப்பை ஊறவைத்து(ஒரு மணி நேரம்) அம்மியில் அல்லது மிக்சியில் மை போல் அரைத்துக் கொள்ளவும்.

    பாத்திரத்தில் அரை லிட்டர் தண்ணீர், அரை லிட்டர் பால் ஊற்றி அடுப்பில் வைத்துக் காய்ச்சவும்.

    பொங்கி வரும்போது தீயைக் குறைத்துக் கொண்டு அரைத்து வைத்த விழுதுகளை சேர்த்து நன்கு கலக்கவும்.

    அதன் பிறகு தயார் செய்து வைத்துள்ள எல்லா பொடிகளையும் ஒவ்வொன்றாக சேர்த்து கரண்டியில் கலக்கிக் கொண்டிருக்க வேண்டும்.

    கமகமவென்று வாசம் வரும்போது இறக்கி விடவும். சற்று ஆறவிடவும்.

    குடிக்கிற பக்குவத்தில் சூடாக இருக்கும்போது இனிப்பு கலந்து குடிக்கவும். இது சளி, இருமலுக்கு சாப்பிட நல்லது. கபத்தை கரைத்து, சுறுசுறுப்பு அளிக்கும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தேநீர் அருந்தும்போது உடலுக்கு புத்துணர்வு ஏற்படுவதுடன், உடல் ஆரோக்கியமும் மேம்படுகிறது. சில தேநீர்கள் நோய்களை குணப்படுத்தும் நோக்கிலும், மன அழுத்தம் போக்கும் வகையிலும் அருந்தப்படுகிறது.
    காலை எழுந்தவுடன் சுடச்சுட டீ அருந்துவது தான் அனைவருக்கும் பிடித்தமானது. தேயிலை கொண்டு தயாரிக்கப்படுவதை மட்டுமே டீ என அழைப்பதில்லை. வேறு பல பசுந்தழைகள் கொண்டு கொதிக்க வைத்து தரப்படும் சுவையான சுடுநீர் கூட டீ என்றுதான் அழைக்கப்படுகிறது. உலகெங்கும் விதவிதமாக டீ குடிக்கும் பழக்கம் உள்ளது.

    தேயிலையிலேயே மாறுபட்ட சில வகைகளை கொண்டும் தேநீர் உருவாக்கி தரப்படுகிறது. அவற்றிற்கு என தனி மதிப்பும், சிறப்பு குணங்களும் உள்ளன. அந்த வகையில் சில பொருட்கள் கொண்டும் தேநீர் தயாரிக்கப்பட்டு தரப்படுகிறது. இப்பொருட்களை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து தருவதை நம் முன்னோர் குடிநீர் என்றும், கசாயம் என்றும் அழைத்து வந்தனர். மாடர்ன் உலகில் எந்த மூலிகையும், பசுந்தழையும் போட்டு கொதிக்க வைத்து பரிமாறினால் அது தேநீர் வகையில் இணைக்கப்படுகிறது.

    தேயிலை தவிர்த்து இஞ்சி, புதினா, கிரீன் டீ, லாவண்டர், செம்பருத்தி, ஏலக்காய், கிராம்பு, இலவங்கப்பட்டை, ரோஸ்ஹிப், லெமன் பாம், நெட்டில், ஹாதோரன் போன்ற விதவிதமான பொருட்களை கொண்டு டீ தயாரித்துத் தரப்படுகிறது. சில நம் நாட்டு மூலிகை மற்றும் செடிகளாக காணப்படுகிறது. சில அயல்நாட்டில் கிடைக்கக்கூடிய விதைகள், பழங்கள் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இந்த தேநீர் அருந்தும்போது உடலுக்கு புத்துணர்வு ஏற்படுவதுடன், உடல் ஆரோக்கியமும் மேம்படுகிறது. சில தேநீர்கள் நோய்களை குணப்படுத்தும் நோக்கிலும், மன அழுத்தம் போக்கும் வகையிலும் அருந்தப்படுகிறது.

    எலுமிச்சை புல் தேநீர்

    எலுமிச்சை புல் தேநீர் என்பது நாம் உணவு அருந்தியபின் குடிக்க வேண்டிய தேநீர். எலுமிச்சை புல்-யை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்தபின் குடித்திட வேண்டும். இந்த தேநீரில் உள்ள சிட்ரல் குண அமைப்பு உணவு செரிமானம் அடைவதற்கு உதவி புரிகிறது. நல்ல வாசம் மிகுந்த தேநீரான இது அனைவருக்கும் பிடித்தமானது.

    பயன் நிறைந்த கிரீன் டீ

    கிரீன் டீ என்பது பிரபலமான மூலிகையாகும். இதன் தேநீரில் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. இதன் மூலம் உடலின் வயதான தோற்றம் ஏற்படுவது தடுக்கப்படும். புற்றுநோய் மற்றும் கட்டிகள் ஏற்படுவதை தடுப்பதுடன் உடலின் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவுகிறது.

    இளஞ்சூடான இஞ்சி தேநீர்

    இஞ்சி உடல் சக்தியை அதிகரிப்பதுடன், புத்துணர்வை அதிகரிக்க செய்ய உதவுகிறது. உணவு செரிமானம் அடையவும், வாய் குமட்டலை தடுக்கவும் இஞ்சி தேநீர் உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த இஞ்சி தேநீர் அருந்துவது முடக்கு வாதம் போன்ற நோய்களுக்கு மருந்தாகவும் அமைகிறது.

    புத்துணர்வுடன் கூடிய புதினா தேநீர்

    நறுமணத்துடன் கூடிய தேநீர் - ஆக புதினா தேநீர் உள்ளது. இது குமட்டல், வாந்தி மற்றும் மலச்சிக்கலை தீர்க்கும் தேநீர் ஆக உள்ளது. மேலும், உடல் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பதுடன், சளி தொந்தரவுகள், ஆஸ்துமா மற்றும் தலைவலி போன்றவற்றை நீக்கும் விதமாகவும் அருந்திடலாம். இதய நோயாளிகள் புதினா தேநீர் அருந்துவதை தவிர்த்திடல் வேண்டும்.

    சீமை சாமந்தி தேநீர்

    கெமோமில் என்ற சீமை சாமந்தி என்ற மூலிகை உலகளவில் மிக பிரபலமான ஒன்றாகும். இது மன அழுத்தம் மற்றும் வயதான தோற்றத்தை தடுக்கும் தன்மை கொண்டது. மேலும் தூக்கமின்மையை போக்கி நல்ல தூக்கத்தை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. உலகளவில் ஆர்கானிக் சீமை சாமந்தி தேநீர் தயாரிப்புகள் தயார் செய்து விற்பனைக்கு வருகின்றன.

    ரோஸ் ஹிப் தேநீர்

    ரோஜா செடியில் இருந்து கிடைக்கும் பழம் போன்ற பகுதியே ரோஸ் ஹிப் என்பதாம். இதனை கொண்டும் தேநீர் உருவாக்கப்படுகிறது. விட்டமின்-சி சத்து நிறைந்த இந்த ரோஸ் ஹிப் தேநீர் அருந்துவதன் மூலம் சரும பளபளப்பு மற்றும் சீறுநீரக செயல்பாடு சிறப்பாக இருத்தல் போன்ற பயன்கள் ஏற்படுகிறது.

    இதயத்தை பலப்படுத்தும் செம்பருத்தி தேநீர்

    செம்பருத்தி பூவின் தேநீர் என்பது காய்ந்த செம்பருத்தி பூவினை கொண்டு தயாரிக்கப்படுகிறது. செம்பருத்தி தேநீர் அருந்துவதன் மூலம் உயர் ரத்த அழுத்தம், மன அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்றவை குறைகின்றது. உடலில் செல் பாதிப்பு ஏற்படுவதை தடுப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்ததாகவும் செம்பருத்தி தேநீர் உதவுகிறது.

    லாவண்டர் பூ தேநீர் என்பதும் உலகளவில் பிரபலமான தேநீர் ஆக உள்ளது. இதனை அருந்துவதன் மூலம் காய்ச்சல், இருமல், ஆஸ்துமா போன்றவை நீங்குகிறது. மேலும் ஆறாத புண்களை கொண்டுள்ளோர் லாவண்டர் தேநீர் அருந்திவர சீக்கிரமே ஆறிவிடும்.
    லெமன் ஐஸ் டீ குடித்தால் புத்துணர்ச்சி கிடைக்கும். இன்று இந்த லெமன் ஐஸ் டீயை செய்வது எப்படி என்று பார்க்கலாம். இதை செய்வதும் மிகவும் சுலபம்.
    தேவையான பொருட்கள் :

    தேயிலைத் தூள் - 2 டீஸ்பூன்
    எலுமிச்சை - 2
    சர்க்கரை - 8 டீஸ்பூன்
    புதினா இலைகள் - சிறிது
    ஐஸ் கட்டிகள் - 1 டம்ளர்



    செய்முறை :


    இரண்டு டம்ளர் தண்ணீரை அடுப்பில் வைத்து கொதிக்க ஆரம்பித்ததும் தேயிலைத் தூளைச் சேர்த்துக் கொதிக்கவிட்டு, வடிகட்டிக்கொள்ளுங்கள்.

    ஒரு எலுமிச்சையைப் பிழிந்து சாறு எடுத்துக்கொள்ளுங்கள்.

    மற்றொரு எலுமிச்சை பழத்தை மெல்லிய வட்டத் துண்டுகளாக நறுக்கிக்கொள்ளுங்கள்.

    தேநீரில் சர்க்கரை, எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்றாகக் கலக்குங்கள்.

    கண்ணாடி டம்ளரில் ஐஸ் துண்டுகளைக் கால் பகுதி வரை நிரப்புங்கள்.

    இதில் அரை டம்ளர் அளவுக்குத் தேநீரைச் சேருங்கள்.

    பிறகு கால் டம்ளர் தண்ணீரை ஊற்றுங்கள்.

    நறுக்கிய எலுமிச்சைத் துண்டுகளையும் புதினா இலைகளையும் போட்டு, ஜில்லென்று பரிமாறுங்கள்.

    குளுகுளு லெமன் ஐஸ் டீ ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×