என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
தொடர் விடுமுறையை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்கள் படையெடுத்தனர். இதனால் 3½ மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடாக விளங்கும் பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். சுபமுகூர்த்தம், வாரவிடுமுறை மற்றும் விசேஷ நாட்களில் பக்தர்கள் வருகை இருமடங்கு அதிகரித்து காணப்படும்.
அந்தவகையில் தமிழ் புத்தாண்டு, புனிதவெள்ளி என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை விடப்பட்டு உள்ளது. இதனால் பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய கார், வேன், பஸ் என ஏராளமான வாகனங்களில் பக்தர்கள் பழனிக்கு வந்த வண்ணம் உள்ளனர். அதேபோல் நேற்று கேரள புத்தாண்டான சித்திரை விஷு என்பதால் கேரள பக்தர்கள் வருகையும் அதிகம் இருந்தது. அவர்கள் முடிக்காணிக்கை செய்து வழிபட்டனர்.
குறிப்பாக அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு செல்லும் நுழைவு வாயிலான பாதவிநாயகர் கோவில் பகுதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் ரோப்கார், மின்இழுவை ரெயில்நிலையம் மற்றும் தரிசன வழிகளில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். அவர்கள் 3½ மணி நேர காத்திருந்து, பின்னரே சாமி தரிசனம் செய்ய முடிந்தது.
பழனி பகுதியில் நேற்று பகல் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் வெயிலின் தாக்கம் இல்லை. எனவே பக்தர்கள் சாமி தரிசனம் செய்த பின் வெளிப்பிரகாரம், படிப்பாதை மற்றும் அடிவாரம் செல்பி ஸ்பாட் ஆகிய இடங்களில் நின்று புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
அந்தவகையில் தமிழ் புத்தாண்டு, புனிதவெள்ளி என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை விடப்பட்டு உள்ளது. இதனால் பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய கார், வேன், பஸ் என ஏராளமான வாகனங்களில் பக்தர்கள் பழனிக்கு வந்த வண்ணம் உள்ளனர். அதேபோல் நேற்று கேரள புத்தாண்டான சித்திரை விஷு என்பதால் கேரள பக்தர்கள் வருகையும் அதிகம் இருந்தது. அவர்கள் முடிக்காணிக்கை செய்து வழிபட்டனர்.
குறிப்பாக அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு செல்லும் நுழைவு வாயிலான பாதவிநாயகர் கோவில் பகுதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் ரோப்கார், மின்இழுவை ரெயில்நிலையம் மற்றும் தரிசன வழிகளில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். அவர்கள் 3½ மணி நேர காத்திருந்து, பின்னரே சாமி தரிசனம் செய்ய முடிந்தது.
பழனி பகுதியில் நேற்று பகல் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் வெயிலின் தாக்கம் இல்லை. எனவே பக்தர்கள் சாமி தரிசனம் செய்த பின் வெளிப்பிரகாரம், படிப்பாதை மற்றும் அடிவாரம் செல்பி ஸ்பாட் ஆகிய இடங்களில் நின்று புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் பங்குனி திருவிழாவையொட்டி தங்க ஆபரணங்கள், மலர் மாலைகளுடன் கருட வாகனத்தில் ஆதிகேசவ பெருமாள், கிருஷ்ணசாமி ஆகியோர் எழுந்தருளினர்.
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் பங்குனி திருவிழா கடந்த 6-ந் தேதி தொடங்கியது. விழா நாட்களில் சிறப்பு பூஜைகள், சாமி நாற்காலி, பல்லக்கு வாகனங்களில் எழுந்தருளல், கதகளி போன்றவை நடந்தது. நேற்று முன்தினம் சாமி பள்ளி வேட்டைக்கு எழுந்தருளல் நடந்தது.
விழாவில் நேற்று ஆராட்டு விழா நடந்தது. இதையொட்டி இரவில் தங்க ஆபரணங்கள், மலர் மாலைகளுடன் கருட வாகனத்தில் ஆதிகேசவ பெருமாள், கிருஷ்ணசாமி ஆகியோர் எழுந்தருளினர். சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் கிழக்கு வாசல் வழியாக ஆராட்டு ஊர்வலம் தொடங்கியது.
திருவிதாங்கூர் மன்னரின் பிரதிநிதி உடை வாளுடன் முன் செல்ல மேளதாளம் முழங்க சாமி ஊர்வலம் புறப்பட்டது. அப்போது துப்பாக்கி ஏந்திய ஆயுதப்படை போலீசார் மரியாதை செய்தனர்.
மேலும் ஊர்வலத்துக்கு வழிநெடுக பக்தர்கள் வரவேற்பு அளித்தனர். ஊர்வலம் கழுவன்திட்டை, தோட்டவாரம் வழியாக மூவாற்றுமுகம் ஆற்றை அடைந்தது. அங்கு ஆராட்டு விழா நடந்தது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும், பக்தர்களும் இணைந்து செய்திருந்தனர்.
விழாவில் நேற்று ஆராட்டு விழா நடந்தது. இதையொட்டி இரவில் தங்க ஆபரணங்கள், மலர் மாலைகளுடன் கருட வாகனத்தில் ஆதிகேசவ பெருமாள், கிருஷ்ணசாமி ஆகியோர் எழுந்தருளினர். சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் கிழக்கு வாசல் வழியாக ஆராட்டு ஊர்வலம் தொடங்கியது.
திருவிதாங்கூர் மன்னரின் பிரதிநிதி உடை வாளுடன் முன் செல்ல மேளதாளம் முழங்க சாமி ஊர்வலம் புறப்பட்டது. அப்போது துப்பாக்கி ஏந்திய ஆயுதப்படை போலீசார் மரியாதை செய்தனர்.
மேலும் ஊர்வலத்துக்கு வழிநெடுக பக்தர்கள் வரவேற்பு அளித்தனர். ஊர்வலம் கழுவன்திட்டை, தோட்டவாரம் வழியாக மூவாற்றுமுகம் ஆற்றை அடைந்தது. அங்கு ஆராட்டு விழா நடந்தது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும், பக்தர்களும் இணைந்து செய்திருந்தனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதால் அதை காண லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரையில் குவிந்துள்ளனர்.
மதுரை:
உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழா கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கடந்த 12-ந்தேதி பட்டாபிஷேகமும், 13-ந்தேதி திக்குவிஜயமும், நேற்று முன்தினம் மீனாட்சி அம்மன்- சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும், நேற்று தேரோட்டமும் நடைபெற்றது. சித்திரைத் திருவிழாவில் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபம் இன்று காலை நடைபெற்றது.
இதற்காக அழகர்மலையில் இருந்து சுந்தரராஜப்பெருமாள், கள்ளழகர் வேடம் பூண்டு தங்கப்பல்லக்கில் நேற்று முன்தினம் மாலை 6 மணி அளவில் மதுரைக்கு புறப்பட்டார். அங்கு கள்ளழகரை வரவேற்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடந்தது. நேற்று இரவு 10 மணியளவில் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலுக்கு அழகர் வந்தார். பின்னர் இரவு 12 மணி அளவில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து பக்தர்களுக்கு அழகர் காட்சி அளித்தார்.
இன்று அதிகாலை 2.30 மணி அளவில் தல்லாகுளம் கருப்பணசாமி கோவிலுக்கு வந்த கள்ளழகர் தங்கக்குதிரையில் அமர்ந்து ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளினார்.
#WATCH | Tamil Nadu: A huge crowd of devotees witness the entry of Lord Kallazhagar into the Vaigai River, for the unity & amity of the Saiva-Vaishnava, as part of the #MaduraiChithiraiFestival2022 festival, in Madurai pic.twitter.com/9zDL92LaOD
— ANI (@ANI) April 16, 2022
காலை 6.20 மணிக்கு பச்சை பட்டு உடுத்தி, தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளினார். வண்டியூர் வீரராகவப் பெருமாள் கள்ளழகரை வரவேற்றார்.
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதால் அதை காண குவிந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோஷமிட்டும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
சுமார் 4,000 போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப் பட்டிருந்தன.
இதையும் படியுங்கள்...
திருவண்ணாமலைக்கு 1000 சிறப்பு பஸ்கள்- சித்ரா பவுணர்மியையொட்டி ஏற்பாடு
நாளை இரவு ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஏழுமலையான், சீதா தேவி சமேத ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயர், ருக்மணி தேவி சமேத கிருஷ்ணர் ஆகிய உற்சவ மூர்த்திகள் திருவீதி உலா ஒரே நேரத்தில் நடைபெறுகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் கோடை கால தொடக்கத்தில் வசந்த உற்சவம் 3 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக வசந்த உற்சவம் நடைபெறவில்லை. இந்த ஆண்டுக்கான வசந்த உற்சவம் நேற்று தொடங்கியது. இதை முன்னிட்டு கோவில் பின்புறமுள்ள வசந்த உற்சவ மண்டபத்தை சேஷாசலம் வனப்பகுதியை போல் தேவஸ்தான தோட்டத் துறையினர் அலங்கரித்தனர்.
நேற்று உற்சவர் ஏழுமலையான், ஸ்ரீதேவி, பூதேவி சமேதரராக கோவில் மாட வீதிகளின் வழியாக வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார்.
இதைதொடர்ந்து ஏழுமலையானுக்கு தர்பார் நடத்தப்பட்டது. மதியம் உற்சவ மூர்த்திகளுக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம் தேன், இளநீர், பன்னீர் உள்ளிட்ட சுகந்த திரவியங்களால் விசேஷ அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து நடந்த பல சமர்ப்பணங்களுக்கு பின்னர் உற்சவ மூர்த்திகள் மாட வீதிகள் வழியாக கோவிலை அடைந்தனர். 2-வது நாளான இன்று காலை கோவில் மாட வீதிகளில் ஏழுமலையான் தங்கரத உற்சவத்தில் வலம் வந்தார்.
நாளை இரவு ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஏழுமலையான், சீதா தேவி சமேத ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயர், ருக்மணி தேவி சமேத கிருஷ்ணர் ஆகிய உற்சவ மூர்த்திகள் திருவீதி உலா ஒரே நேரத்தில் நடைபெறுகிறது.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக வசந்த உற்சவம் நடைபெறவில்லை. இந்த ஆண்டுக்கான வசந்த உற்சவம் நேற்று தொடங்கியது. இதை முன்னிட்டு கோவில் பின்புறமுள்ள வசந்த உற்சவ மண்டபத்தை சேஷாசலம் வனப்பகுதியை போல் தேவஸ்தான தோட்டத் துறையினர் அலங்கரித்தனர்.
நேற்று உற்சவர் ஏழுமலையான், ஸ்ரீதேவி, பூதேவி சமேதரராக கோவில் மாட வீதிகளின் வழியாக வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார்.
இதைதொடர்ந்து ஏழுமலையானுக்கு தர்பார் நடத்தப்பட்டது. மதியம் உற்சவ மூர்த்திகளுக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம் தேன், இளநீர், பன்னீர் உள்ளிட்ட சுகந்த திரவியங்களால் விசேஷ அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து நடந்த பல சமர்ப்பணங்களுக்கு பின்னர் உற்சவ மூர்த்திகள் மாட வீதிகள் வழியாக கோவிலை அடைந்தனர். 2-வது நாளான இன்று காலை கோவில் மாட வீதிகளில் ஏழுமலையான் தங்கரத உற்சவத்தில் வலம் வந்தார்.
நாளை இரவு ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஏழுமலையான், சீதா தேவி சமேத ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயர், ருக்மணி தேவி சமேத கிருஷ்ணர் ஆகிய உற்சவ மூர்த்திகள் திருவீதி உலா ஒரே நேரத்தில் நடைபெறுகிறது.
சித்ரா பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலை நகரம் மற்றும் கிரிவலப்பாதை உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் கற்பூரம் ஏற்றுவதற்கும், மலை மீது ஏறுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றி பவுர்ணமி நாட்கள் மட்டுமின்றி விஷேச நாட்களில் பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர்.
இதில் சித்ரா பவுர்ணமி மிகவும் விஷேசமாக கருதப்படுகிறது. இந்த ஆண்டிற்கான சித்ரா பவுர்ணமி நாளை (சனிக்கிழமை) அதிகாலை 2.33 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 1.17 மணிக்கு நிறைவடைகிறது.
விடுமுறை தினத்தில் சித்ரா பவுர்ணமி வருவதால் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் செல்ல திருவண்ணாமலைக்கு வருவார்கள் என்று எதிர்பாக்கப்படுகிறது.
திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமியன்று 3 ஆயிரத்து 242 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
மேலும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட உள்ளது. திருவண்ணாமலை நகரை சுற்றி 9 தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. 37 இடங்களில் கார் பார்க்கிங் வசதி செய்யப்பட்டு உள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் கிரிவலப்பாதையில் 15 சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
அருணாசலேவரர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் வயது முதிர்ந்த பக்தர்களை அழைத்து செல்ல 3 பேட்டரி கார்களும், மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
கிரிவலம் செல்லும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக 39 இருசக்கர வாகன பேட்ரோல் போலீசார் கிரிவலப்பாதையில் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். மருத்துவ உதவிக்காக இரு சக்கர வாகன ஆம்புலன்சு வாகனமும் ரோந்து பணியில் இருக்கும்.
திருவண்ணாமலை நகரம் மற்றும் கிரிவலப்பாதை உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் கற்பூரம் ஏற்றுவதற்கும், மலை மீது ஏறுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை நகருக்கு வரும் 9 சாலைகளின் முகப்பு பகுதிகளில் வேளாண்துறை சார்பில் 42 விவசாய பம்பு செட்டுகளில் பக்தர்கள் குளிப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
தனிநபர் மற்றும் தொண்டு நிறுவனங்கள், தொண்டு அமைப்புகள் சார்பில் கிரிவல பக்தர்களுக்கு அன்னதானம் செய்ய 40 இடங்களில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை நகரைச்சுற்றி அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பஸ் நிலையங்களில் அன்னதானம் செய்ய விரும்பபுவர்களுக்கு உரிய அனுமதியும், இடமும் அளிக்கப்படும்.
தற்காலிக பஸ் நிலையம் மற்றும் வாகன நிறுத்தும் இடத்தில் இருந்து திருவண்ணாமலை கிரிவலப்பாதை மற்றும் முக்கிய பகுதிகளுக்கு செல்ல இலவச பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.
தற்காலிக பஸ் நிலையத்திலிருந்து கிரிவலப்பாதை மற்றும் நகருக்குள் உள்ள பகுதிகளுக்கு வர தனிநபர் ஆட்டோ கட்டணமாக ரூ.30 முதல் ரூ.50 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கிரிவலத்திற்கு வரும் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அனைத்து அரசு துறைகளின் சார்பில் செய்யப்பட்டுள்ள வசதிகளை பயன்படுத்தி பாதுகாப்புடன் கிரிவலம் சென்று வரலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றி பவுர்ணமி நாட்கள் மட்டுமின்றி விஷேச நாட்களில் பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர்.
இதில் சித்ரா பவுர்ணமி மிகவும் விஷேசமாக கருதப்படுகிறது. இந்த ஆண்டிற்கான சித்ரா பவுர்ணமி நாளை (சனிக்கிழமை) அதிகாலை 2.33 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 1.17 மணிக்கு நிறைவடைகிறது.
விடுமுறை தினத்தில் சித்ரா பவுர்ணமி வருவதால் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் செல்ல திருவண்ணாமலைக்கு வருவார்கள் என்று எதிர்பாக்கப்படுகிறது.
திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமியன்று 3 ஆயிரத்து 242 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
மேலும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட உள்ளது. திருவண்ணாமலை நகரை சுற்றி 9 தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. 37 இடங்களில் கார் பார்க்கிங் வசதி செய்யப்பட்டு உள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் கிரிவலப்பாதையில் 15 சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
அருணாசலேவரர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் வயது முதிர்ந்த பக்தர்களை அழைத்து செல்ல 3 பேட்டரி கார்களும், மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
கிரிவலம் செல்லும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக 39 இருசக்கர வாகன பேட்ரோல் போலீசார் கிரிவலப்பாதையில் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். மருத்துவ உதவிக்காக இரு சக்கர வாகன ஆம்புலன்சு வாகனமும் ரோந்து பணியில் இருக்கும்.
திருவண்ணாமலை நகரம் மற்றும் கிரிவலப்பாதை உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் கற்பூரம் ஏற்றுவதற்கும், மலை மீது ஏறுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை நகருக்கு வரும் 9 சாலைகளின் முகப்பு பகுதிகளில் வேளாண்துறை சார்பில் 42 விவசாய பம்பு செட்டுகளில் பக்தர்கள் குளிப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
தனிநபர் மற்றும் தொண்டு நிறுவனங்கள், தொண்டு அமைப்புகள் சார்பில் கிரிவல பக்தர்களுக்கு அன்னதானம் செய்ய 40 இடங்களில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை நகரைச்சுற்றி அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பஸ் நிலையங்களில் அன்னதானம் செய்ய விரும்பபுவர்களுக்கு உரிய அனுமதியும், இடமும் அளிக்கப்படும்.
தற்காலிக பஸ் நிலையம் மற்றும் வாகன நிறுத்தும் இடத்தில் இருந்து திருவண்ணாமலை கிரிவலப்பாதை மற்றும் முக்கிய பகுதிகளுக்கு செல்ல இலவச பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.
தற்காலிக பஸ் நிலையத்திலிருந்து கிரிவலப்பாதை மற்றும் நகருக்குள் உள்ள பகுதிகளுக்கு வர தனிநபர் ஆட்டோ கட்டணமாக ரூ.30 முதல் ரூ.50 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கிரிவலத்திற்கு வரும் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அனைத்து அரசு துறைகளின் சார்பில் செய்யப்பட்டுள்ள வசதிகளை பயன்படுத்தி பாதுகாப்புடன் கிரிவலம் சென்று வரலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
8-ல் சனி இருந்தாலும்,8-ம் இடத்தைச் சனி பார்த்தாலும், 8-ம் அதிபதியுடன் சனி இணைந்தால் மட்டுமே மாங்கல்ய தோஷம் வாழ்நாள் முழுவதும் தொடரும்.
ஜாதகப் பொருத்தம் பொதுவாக தம்பதிகளின் ஜனன கால ஜாதகத்தில் 7, 8-ம் இடங்கள் இருவருக்கும் சுத்தமாக அமைவது மிகவும் உத்தமம். லக்னம் ,8-ம் இடம் பலம் குறைந்து பாவ கிரகங்களின் ஆளுமைக்கு உட்பட்டால் ஆயுள் கேள்விக்குரியதாகும்.பெண்ணின் ஜாதகத்தில் 7, 8-ம் இடம் பலமாக அமைந்து சுபகிரகங்கள் சம்பந்தம் பெற்றால் ஆணின் ஆயுள் நீடிக்கும்.அதே போல் ஆணின் ஜாதகத்தில் 2, 7-ம் இடம் வலுவாக இருந்தால் பெண் நூறு ஆண்டு வாழ்வாள்.
இவ்வாறு வலுவாக உள்ள ஜாதகத்தை திருமண பந்தத்தில் இணைத்தால் பாதிப்பைத் தடுக்கலாம். 8-ம் இடம் மிகவும் வலுப்பெற்ற ஜாதகர்கள் முரட்டுப் பிடிவாதம், முன் கோபம், கடுமையான வார்த்தைகளால் பிறரை நோகச் செய்யும் இயல்பு உடையவர்களுக்கு சகிப்புத் தன்மை நிறைந்த சுபக்கிரக ஆளுமையும், வசியமும் கூடிய ஜாதகத்தை இணைத்தால் மண வாழ்க்கை பாதிக்காது.
2, 8-ம் இட ராகு-கேதுக்கள் பிரச்சினையான மணவாழ்க்கை, குடும்ப சண்டை வீதிக்கு வந்து அவமானம், வாழ்க்கை துணையின் பேச்சும் செயலும் மன வருத்தம் தரும்படியாகவும் அமையும். 2, 8-ல் ராகு,கேது அமர்ந்த வாழ்க்கைத் துணையை இணைத்தால் சுமூகமான மணவாழ்க்கை உண்டாகும்.
8-ல் செவ்வாய் இருப்பவர்களுக்கு 2, 7, 8-ம் இடங்களில் செவ்வாய் இருக்கும் ஜாதகத்தை இணைப்பது சிறப்பு. 8-ல் சனி இருந்தாலும்,8-ம் இடத்தைச் சனி பார்த்தாலும், 8-ம் அதிபதியுடன் சனி இணைந்தால் மட்டுமே மாங்கல்ய தோஷம் வாழ்நாள் முழுவதும் தொடரும். இவர்கள் தீர்க்கமான ஆயுள் நிரம்பிய ஒருவரை மணந்தால் திருமண பந்தம் நூறு ஆண்டுகள் நீடிக்கும்.
இவ்வாறு வலுவாக உள்ள ஜாதகத்தை திருமண பந்தத்தில் இணைத்தால் பாதிப்பைத் தடுக்கலாம். 8-ம் இடம் மிகவும் வலுப்பெற்ற ஜாதகர்கள் முரட்டுப் பிடிவாதம், முன் கோபம், கடுமையான வார்த்தைகளால் பிறரை நோகச் செய்யும் இயல்பு உடையவர்களுக்கு சகிப்புத் தன்மை நிறைந்த சுபக்கிரக ஆளுமையும், வசியமும் கூடிய ஜாதகத்தை இணைத்தால் மண வாழ்க்கை பாதிக்காது.
2, 8-ம் இட ராகு-கேதுக்கள் பிரச்சினையான மணவாழ்க்கை, குடும்ப சண்டை வீதிக்கு வந்து அவமானம், வாழ்க்கை துணையின் பேச்சும் செயலும் மன வருத்தம் தரும்படியாகவும் அமையும். 2, 8-ல் ராகு,கேது அமர்ந்த வாழ்க்கைத் துணையை இணைத்தால் சுமூகமான மணவாழ்க்கை உண்டாகும்.
8-ல் செவ்வாய் இருப்பவர்களுக்கு 2, 7, 8-ம் இடங்களில் செவ்வாய் இருக்கும் ஜாதகத்தை இணைப்பது சிறப்பு. 8-ல் சனி இருந்தாலும்,8-ம் இடத்தைச் சனி பார்த்தாலும், 8-ம் அதிபதியுடன் சனி இணைந்தால் மட்டுமே மாங்கல்ய தோஷம் வாழ்நாள் முழுவதும் தொடரும். இவர்கள் தீர்க்கமான ஆயுள் நிரம்பிய ஒருவரை மணந்தால் திருமண பந்தம் நூறு ஆண்டுகள் நீடிக்கும்.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் வருகிற 18-ந்தேதி கருடசேவை உற்சவம் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 22-ந்தேதி நடக்கிறது.
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் இந்த ஆண்டுக்கான சித்திரை மாத பிரம்மோற்சவ விழா நாளை 16-ந்தேதி (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இதையொட்டி தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள், உற்சவங்கள் நடைபெறுகின்றன. வருகிற 18-ந்தேதி கருடசேவை உற்சவம் நடக்கிறது. 20-ந்தேதி நாச்சியார் கோலத்தில் பல்லக்கு சேவை நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 22-ந்தேதி நடக்கிறது. அன்று காலையில் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க இருக்கிறார்கள். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.
23-ந்தேதி வெண்ணை தாழி கண்ணன் கோலத்தில் பல்லக்கு சேவை நடைபெறுகிறது. 24-ந்தேதி காலை 11 மணிக்கு தீர்த்தவாரி உற்சவம் நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு கண்ணாடி பல்லக்கு சேவை நடைபெறுகிறது. 25-ந்தேதி கொடி இறக்கத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது.
இதையொட்டி தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள், உற்சவங்கள் நடைபெறுகின்றன. வருகிற 18-ந்தேதி கருடசேவை உற்சவம் நடக்கிறது. 20-ந்தேதி நாச்சியார் கோலத்தில் பல்லக்கு சேவை நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 22-ந்தேதி நடக்கிறது. அன்று காலையில் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க இருக்கிறார்கள். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.
23-ந்தேதி வெண்ணை தாழி கண்ணன் கோலத்தில் பல்லக்கு சேவை நடைபெறுகிறது. 24-ந்தேதி காலை 11 மணிக்கு தீர்த்தவாரி உற்சவம் நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு கண்ணாடி பல்லக்கு சேவை நடைபெறுகிறது. 25-ந்தேதி கொடி இறக்கத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது.
ஏசு சிலுவையில் அறையப்பட்ட இந்த நாளை ஒவ்வொரு கிறிஸ்தவர்களும் துயரத்துடன் அணுசரித்தனர். நாளை (சனிக்கிழமை) நள்ளிரவு உயிர்த்தெழுதல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
சென்னையில் புனித வெள்ளி வழிபாடு எழுச்சியுடன் நடைபெற்றது. கொரோனா தொற்று பாதிப்பால் 2 வருடத்திற்கு பிறகு ஆலயங்களில் வழிபாடு நடந்ததால் கிறிஸ்தவர்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர்.
புனித வெள்ளி ஆராதனை ஒவ்வொரு கிறிஸ்தவ ஆலயங்களிலும் வெவ்வேறான நேரங்களில் தொடங்கி நடைபெற்றது. கத்தோலிக்க திருச்சபைகளில் பிற்பகல் 3 மணிக்கு பிறகு சிறப்பு வழிபாடு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.
சாந்தோம், பாரிமுனை அந்தோணியார், பெரம்பூர் லூர்து, பெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி, பரங்கிமலை தோமையார், எழும்பூர் திரு இருதய திருத்தலம் உள்ளிட்ட பல்வேறு கத்தோலிக்க திருச்சபைகளில் சிலுவையை சுமந்து ஊர்வலமாக எடுத்து செல்வார்கள்.
திரளான மக்கள் கண்ணீருடன் பின் தொடர்ந்து செல்வர். பின்னர் திருப்பலி நடைபெறும். ஏசு சிலுவையில் அறையப்பட்ட போது கடைசியில் கூறிய வார்த்தைகள் குறித்து தியானிக்கப்படும். கடைசியாக சிலுவையை முத்தமிட்ட செல்வார்கள். இந்த நிகழ்வு அனைத்து கத்தோலிக்க ஆலயங்களில் நடக்கிறது.
தென்னிந்திய திருச்சபை சென்னை பேராயத்தில் உள்ள ஆலயங்களில் காலை 11 மணிக்கு சிறப்பு வழிபாடு தொடங்கி நடந்தது.
மும்மணி தியானம் என்று இதனை அழைப்பதால் 3 மணி நேரம் ஏசு சிலுவையில் கூறிய 7 வார்த்தைகள் குறித்து தியானித்தனர்.
“பிதாவே இவர்களை மன்னியும் தாங்கள் செய்வது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே” இன்றைக்கு நீ என்னுடனே பரதேசலிருப்பாய், ஸ்திரியே அதோ உன் மகள்-அதோ உன் தாய்...
“ஏலி ஏலிலாமா ஜெபக்தானி” “தாகமாக இருக்கிறேன்...”, “முடிந்தது”, பிதாவே உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்படைக்கிறேன்...” ஆகிய வார்த்தைகள் குறித்து தியானம் செய்தனர்.
சென்னை சி.எஸ்.ஐ. பேராயர் ஜார்ஜ் ஸ்டீன் தலைமையின் கீழ் அனைத்து ஆலயங்களிலும் புனித வெள்ளி ஆராதனை நடந்தது.
கதீட்ரல் பேராலயம், பிராட்வே, சூளை, வேப்பேரி, எழும்பூர், பெரம்பூர், மாதவரம், அண்ணாநகர், விருகம்பாக்கம், வேளச்சேரி, தாம்பரம், சேலையூர், மயிலாப்பூர் உள்ளிட்ட சி.எஸ்.ஐ. ஆலயங்களில் புனித வெள்ளி வழிபாடு நடைபெற்றது. இவ்வாராதனையில் வெள்ளை நிற உடை அணிந்து கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
இதே போல லூத்தரன், மெத்தடிஸ்ட், இ.சி.ஐ. பெந்தே கோஸ்து உள்ளிட்ட பிற கிறிஸ்தவ அமைப்பு ஆலயங்களில் காலையில் வழிபாடு தொடங்கி மதியம் முடிந்தது.
ஏசு சிலுவையில் அறையப்பட்ட இந்த நாளை ஒவ்வொரு கிறிஸ்தவர்களும் துயரத்துடன் அணுசரித்தனர். நாளை (சனிக்கிழமை) நள்ளிரவு உயிர்த்தெழுதல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
கத்தோலிக்க திருச்சபைகளில் நள்ளிரவு முதல் ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டம் தொடங்கி விடும். சி.எஸ்.ஐ. உள்ளிட்ட பிற கிறிஸ்தவ திருச்சபைகளில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கு ஆராதனை நடைபெறும்.
புனித வெள்ளி ஆராதனை ஒவ்வொரு கிறிஸ்தவ ஆலயங்களிலும் வெவ்வேறான நேரங்களில் தொடங்கி நடைபெற்றது. கத்தோலிக்க திருச்சபைகளில் பிற்பகல் 3 மணிக்கு பிறகு சிறப்பு வழிபாடு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.
சாந்தோம், பாரிமுனை அந்தோணியார், பெரம்பூர் லூர்து, பெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி, பரங்கிமலை தோமையார், எழும்பூர் திரு இருதய திருத்தலம் உள்ளிட்ட பல்வேறு கத்தோலிக்க திருச்சபைகளில் சிலுவையை சுமந்து ஊர்வலமாக எடுத்து செல்வார்கள்.
திரளான மக்கள் கண்ணீருடன் பின் தொடர்ந்து செல்வர். பின்னர் திருப்பலி நடைபெறும். ஏசு சிலுவையில் அறையப்பட்ட போது கடைசியில் கூறிய வார்த்தைகள் குறித்து தியானிக்கப்படும். கடைசியாக சிலுவையை முத்தமிட்ட செல்வார்கள். இந்த நிகழ்வு அனைத்து கத்தோலிக்க ஆலயங்களில் நடக்கிறது.
தென்னிந்திய திருச்சபை சென்னை பேராயத்தில் உள்ள ஆலயங்களில் காலை 11 மணிக்கு சிறப்பு வழிபாடு தொடங்கி நடந்தது.
மும்மணி தியானம் என்று இதனை அழைப்பதால் 3 மணி நேரம் ஏசு சிலுவையில் கூறிய 7 வார்த்தைகள் குறித்து தியானித்தனர்.
“பிதாவே இவர்களை மன்னியும் தாங்கள் செய்வது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே” இன்றைக்கு நீ என்னுடனே பரதேசலிருப்பாய், ஸ்திரியே அதோ உன் மகள்-அதோ உன் தாய்...
“ஏலி ஏலிலாமா ஜெபக்தானி” “தாகமாக இருக்கிறேன்...”, “முடிந்தது”, பிதாவே உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்படைக்கிறேன்...” ஆகிய வார்த்தைகள் குறித்து தியானம் செய்தனர்.
சென்னை சி.எஸ்.ஐ. பேராயர் ஜார்ஜ் ஸ்டீன் தலைமையின் கீழ் அனைத்து ஆலயங்களிலும் புனித வெள்ளி ஆராதனை நடந்தது.
கதீட்ரல் பேராலயம், பிராட்வே, சூளை, வேப்பேரி, எழும்பூர், பெரம்பூர், மாதவரம், அண்ணாநகர், விருகம்பாக்கம், வேளச்சேரி, தாம்பரம், சேலையூர், மயிலாப்பூர் உள்ளிட்ட சி.எஸ்.ஐ. ஆலயங்களில் புனித வெள்ளி வழிபாடு நடைபெற்றது. இவ்வாராதனையில் வெள்ளை நிற உடை அணிந்து கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
இதே போல லூத்தரன், மெத்தடிஸ்ட், இ.சி.ஐ. பெந்தே கோஸ்து உள்ளிட்ட பிற கிறிஸ்தவ அமைப்பு ஆலயங்களில் காலையில் வழிபாடு தொடங்கி மதியம் முடிந்தது.
ஏசு சிலுவையில் அறையப்பட்ட இந்த நாளை ஒவ்வொரு கிறிஸ்தவர்களும் துயரத்துடன் அணுசரித்தனர். நாளை (சனிக்கிழமை) நள்ளிரவு உயிர்த்தெழுதல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
கத்தோலிக்க திருச்சபைகளில் நள்ளிரவு முதல் ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டம் தொடங்கி விடும். சி.எஸ்.ஐ. உள்ளிட்ட பிற கிறிஸ்தவ திருச்சபைகளில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கு ஆராதனை நடைபெறும்.
இங்கு மூலவரான திருமூலநாதர், சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இவரது சன்னிதி மேற்கு பிரகாரத்தின் மேலே அமைந்துள்ளது. இருப்பினும் நடராஜரே, இங்கு பிரதானமானவர்.
பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத் தலமாக வணங்கப்படும், சிதம்பரம் நடராஜர் ஆலயத்தைப் பற்றி இங்கே பார்க்கலாம்..
மூலவர்: திருமூலநாதர் (சபாநாயகர், கூத்தப்பெருமான், விடங்கர், மேருவிடங்கர், பொன்னம்பல கூத்தன்)
அம்பாள்: உமையாம்பிகை (சிவகாமசுந்தரி)
தல விருட்சம்: தில்லை மரம்
தீர்த்தம்: சிவகங்கை, பரமானந்த கூபம், வியாக்கிரபாத தீர்த்தம், அனந்த தீர்த்தம், நாகச்சேரி, பிரம்ம தீர்த்தம்
தங்கத்தால் வேயப்பட்ட கூரையின் கீழ் நடராஜர் வீற்றிருக்கிறார். இந்த சன்னிதியின் அமைப்பு, மனித உடல் அமைப்போடு ஒப்பிட்டு அமைக்கப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு.
தேவாரப் பாடல் இடம்பெற்ற தமிழ்நாட்டின் 274 சிவாலயங்களில், முதன்மையானதாக இந்த சிதம்பரம் நடராஜர் திருத்தலம் உள்ளது.
இங்கு மூலவரான திருமூலநாதர், சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இவரது சன்னிதி மேற்கு பிரகாரத்தின் மேலே அமைந்துள்ளது. இருப்பினும் நடராஜரே, இங்கு பிரதானமானவர்.
நடராஜர் சன்னிதி அருகிலேயே, 108 திவ்ய தேசங்களில் ஒன்றான கோவிந்தராஜப் பெருமாளின் தலம் இருப்பது சிறப்புக்குரியது.
நடராஜர் சன்னிதி எதிரே உள்ள மண்டபத்தில் நின்றபடி அருளும், பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய மூவரையும் தரிசிக்கலாம்.
சிற்சபையில் சபாநாயகரின் வலது பக்கத்தில் ஒரு சிறு வாசல் இருக்கும். அதில் உள்ள திரை அகற்றப்பட்டு திறந்த வெளி பகுதிக்கு தீபாராதனை காட்டப்படும். இங்கு இறைவன் ஆகாயமாக இருப்பதாக ஐதீகம். இதுவே ‘சிதம்பர ரகசியம்’ என்றும் சொல்லப்படுகிறது.
மூலவரே வீதி உலா வரும் ஆலயமாக சிதம்பரம் மட்டுமே உள்ளது. இங்குள்ள நடராஜர், தேரில் பவனி வருவார்.
திருவாரூரில்பிறந்தால் முக்தி, திருவண்ணாமலையை நினைத்தால் முக்தி என்பதுபோல, வாழ்வில் ஒரு முறையேனும் சிதம்பரம் ஆலயத்திற்கு வந்து தரிசித்தாலே முக்தி கிடைத்து விடும்.
இத்தல இறைவனை வேண்டினால் மன நிம்மதி கிடைக்கும். கலைகளில் தேர்ச்சி பெற விரும்புவோர், இத்தல இறைவனையும், இறைவியையும் வணங்கலாம்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் நடராஜர் கோவிலானது, கடலூரில் இருந்து 44 கிலோமீட்டர் தொலைவிலும், மயிலாடு துறையில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.
மூலவர்: திருமூலநாதர் (சபாநாயகர், கூத்தப்பெருமான், விடங்கர், மேருவிடங்கர், பொன்னம்பல கூத்தன்)
அம்பாள்: உமையாம்பிகை (சிவகாமசுந்தரி)
தல விருட்சம்: தில்லை மரம்
தீர்த்தம்: சிவகங்கை, பரமானந்த கூபம், வியாக்கிரபாத தீர்த்தம், அனந்த தீர்த்தம், நாகச்சேரி, பிரம்ம தீர்த்தம்
தங்கத்தால் வேயப்பட்ட கூரையின் கீழ் நடராஜர் வீற்றிருக்கிறார். இந்த சன்னிதியின் அமைப்பு, மனித உடல் அமைப்போடு ஒப்பிட்டு அமைக்கப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு.
தேவாரப் பாடல் இடம்பெற்ற தமிழ்நாட்டின் 274 சிவாலயங்களில், முதன்மையானதாக இந்த சிதம்பரம் நடராஜர் திருத்தலம் உள்ளது.
இங்கு மூலவரான திருமூலநாதர், சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இவரது சன்னிதி மேற்கு பிரகாரத்தின் மேலே அமைந்துள்ளது. இருப்பினும் நடராஜரே, இங்கு பிரதானமானவர்.
நடராஜர் சன்னிதி அருகிலேயே, 108 திவ்ய தேசங்களில் ஒன்றான கோவிந்தராஜப் பெருமாளின் தலம் இருப்பது சிறப்புக்குரியது.
நடராஜர் சன்னிதி எதிரே உள்ள மண்டபத்தில் நின்றபடி அருளும், பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய மூவரையும் தரிசிக்கலாம்.
சிற்சபையில் சபாநாயகரின் வலது பக்கத்தில் ஒரு சிறு வாசல் இருக்கும். அதில் உள்ள திரை அகற்றப்பட்டு திறந்த வெளி பகுதிக்கு தீபாராதனை காட்டப்படும். இங்கு இறைவன் ஆகாயமாக இருப்பதாக ஐதீகம். இதுவே ‘சிதம்பர ரகசியம்’ என்றும் சொல்லப்படுகிறது.
மூலவரே வீதி உலா வரும் ஆலயமாக சிதம்பரம் மட்டுமே உள்ளது. இங்குள்ள நடராஜர், தேரில் பவனி வருவார்.
திருவாரூரில்பிறந்தால் முக்தி, திருவண்ணாமலையை நினைத்தால் முக்தி என்பதுபோல, வாழ்வில் ஒரு முறையேனும் சிதம்பரம் ஆலயத்திற்கு வந்து தரிசித்தாலே முக்தி கிடைத்து விடும்.
இத்தல இறைவனை வேண்டினால் மன நிம்மதி கிடைக்கும். கலைகளில் தேர்ச்சி பெற விரும்புவோர், இத்தல இறைவனையும், இறைவியையும் வணங்கலாம்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் நடராஜர் கோவிலானது, கடலூரில் இருந்து 44 கிலோமீட்டர் தொலைவிலும், மயிலாடு துறையில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.
கள்ளழகர் மதுரை வந்துவிட்டதை அனைவருக்கும் நினைவுபடுத்தும் வகையில் மதுரை நகர சாலைகளில் கள்ளழகர் வேடமணிந்த பக்தர்கள் தோல் பையில் நீரை வைத்து தெளித்துக் கொண்டே செல்வதை காண முடிந்தது.
உலக புகழ்பெற்ற இந்த நிகழ்ச்சிக்காக அழகர் கோவில் மலையில் இருந்து சுந்தரராஜ பெருமாள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ நேற்று மாலை புறப்பட்டார். பக்தர்கள் “கோவிந்தா... கோவிந்தா....” என்ற கோஷத்துடன் அழகரை வரவேற்றனர்.
தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள பதினெட்டாம்படி கருப்பண சுவாமி கோவில் முன்பு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன. அதன் பிறகு சுந்தரராஜ பெருமாள் கண்டாங்கி பட்டுடுத்தி கள்ளர் வேடத்தில் கைகளில் நேரிக்கம்பு ஏந்தி தங்க பல்லக்கில் மதுரைக்கு புறப்பட்டார்.
வழிநெடுக அவருக்கு பக்தர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பொய்கை கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன்திருப்பதி பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த மண்டகப்படிகளில் அழகர் எழுந்தருளினார்.
அவருக்கு பக்தர்கள் நெல் உள்ளிட்ட தானிய வகைகளை காணிக்கையாக செலுத்தினர். அதனை ஏற்றுக் கொண்டு பக்தர்கள் வெள்ளத்தில் கள்ளழகர் இன்று காலை மூன்று மாவடி வந்தார். அங்கு அவரை பக்தர்கள் எதிர்கொண்டு அழைத்துச் செல்லும் எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். அவர்கள் “கோவிந்தா” கோஷம் எழுப்பி அழகரை தரிசனம் செய்தனர். 2 ஆண்டுகளுக்கு பிறகு கள்ளழகர் மதுரை மாநகருக்குள் வருவதால் பக்தர்கள் அதிக அளவில் திரண்டனர். அவர்கள் சர்க்கரை செம்பில் சூடம் ஏற்றி, விளக்கேற்றி கள்ளழகரை வரவேற்றனர்.
தொடர்ந்து புதூர் உள்பட பல இடங்ளிலும் கள்ளழகருக்கு எதிர்சேவை நடைபெற்றது. அவர் பல்வேறு மண்டகப்படிகளிலும் எழுந்தருளினார். அனைத்து இடங்களிலும் பக்தர்கள் அழகரை தரிசித்தனர்.
இரவில் தல்லாகுளம் பெருமாள் கோவிலுக்கு கள்ளழகர் வந்து சேருகிறார். அங்கு சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன. அங்கிருந்து அதிகாலை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை மற்றும் பட்டு வஸ்திரங்களை அணிந்து கொண்டு பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
தொடர்ந்து ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளி தங்கக்குதிரை வாகனத்தில் வைகையாற்றில் இறங்க புறப்படுகிறார். வழியில் கருப்பண்ண சுவாமி கோவிலில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
நாளை அதிகாலை 5.50 மணி முதல் 6.20 மணிக்குள் வைகையாற்றில் கள்ளழகர் இறங்குகிறார். இந்த நிகழ்ச்சியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி உள்ளனர். போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கள்ளழகர் மதுரை வந்துவிட்டதை அனைவருக்கும் நினைவுபடுத்தும் வகையில் மதுரை நகர சாலைகளில் கள்ளழகர் வேடமணிந்த பக்தர்கள் தோல் பையில் நீரை வைத்து தெளித்துக் கொண்டே செல்வதை காண முடிந்தது.
இதையும் படிக்கலாம்....மதுரையில் இன்று காலை சித்திரை திருவிழா தேரோட்டம்: லட்சக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள பதினெட்டாம்படி கருப்பண சுவாமி கோவில் முன்பு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன. அதன் பிறகு சுந்தரராஜ பெருமாள் கண்டாங்கி பட்டுடுத்தி கள்ளர் வேடத்தில் கைகளில் நேரிக்கம்பு ஏந்தி தங்க பல்லக்கில் மதுரைக்கு புறப்பட்டார்.
வழிநெடுக அவருக்கு பக்தர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பொய்கை கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன்திருப்பதி பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த மண்டகப்படிகளில் அழகர் எழுந்தருளினார்.
அவருக்கு பக்தர்கள் நெல் உள்ளிட்ட தானிய வகைகளை காணிக்கையாக செலுத்தினர். அதனை ஏற்றுக் கொண்டு பக்தர்கள் வெள்ளத்தில் கள்ளழகர் இன்று காலை மூன்று மாவடி வந்தார். அங்கு அவரை பக்தர்கள் எதிர்கொண்டு அழைத்துச் செல்லும் எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். அவர்கள் “கோவிந்தா” கோஷம் எழுப்பி அழகரை தரிசனம் செய்தனர். 2 ஆண்டுகளுக்கு பிறகு கள்ளழகர் மதுரை மாநகருக்குள் வருவதால் பக்தர்கள் அதிக அளவில் திரண்டனர். அவர்கள் சர்க்கரை செம்பில் சூடம் ஏற்றி, விளக்கேற்றி கள்ளழகரை வரவேற்றனர்.
தொடர்ந்து புதூர் உள்பட பல இடங்ளிலும் கள்ளழகருக்கு எதிர்சேவை நடைபெற்றது. அவர் பல்வேறு மண்டகப்படிகளிலும் எழுந்தருளினார். அனைத்து இடங்களிலும் பக்தர்கள் அழகரை தரிசித்தனர்.
இரவில் தல்லாகுளம் பெருமாள் கோவிலுக்கு கள்ளழகர் வந்து சேருகிறார். அங்கு சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன. அங்கிருந்து அதிகாலை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை மற்றும் பட்டு வஸ்திரங்களை அணிந்து கொண்டு பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
தொடர்ந்து ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளி தங்கக்குதிரை வாகனத்தில் வைகையாற்றில் இறங்க புறப்படுகிறார். வழியில் கருப்பண்ண சுவாமி கோவிலில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
நாளை அதிகாலை 5.50 மணி முதல் 6.20 மணிக்குள் வைகையாற்றில் கள்ளழகர் இறங்குகிறார். இந்த நிகழ்ச்சியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி உள்ளனர். போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கள்ளழகர் மதுரை வந்துவிட்டதை அனைவருக்கும் நினைவுபடுத்தும் வகையில் மதுரை நகர சாலைகளில் கள்ளழகர் வேடமணிந்த பக்தர்கள் தோல் பையில் நீரை வைத்து தெளித்துக் கொண்டே செல்வதை காண முடிந்தது.
இதையும் படிக்கலாம்....மதுரையில் இன்று காலை சித்திரை திருவிழா தேரோட்டம்: லட்சக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
கேரள முறைப்படி சித்திரை விஷூ நிகழ்ச்சி இன்று நடந்தது. சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் கேரள முறைப்படி கனி காணும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தமிழ் புத்தாண்டையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் நேற்று கனி காணும் நிகழ்ச்சி நடந்தது.
இதையடுத்து மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடந்தது. கேரள முறைப்படி சித்திரை விஷூ நிகழ்ச்சி இன்று நடந்தது. சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் கேரள முறைப்படி கனி காணும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கோவிலில் பல்வேறு விதமான காய்கறிகள் குவித்து வைக்கப்பட்டிருந்தது. தாணுமாலய சுவாமி, ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகளும் நடந்தது. தாணுமாலய சுவாமிக்கு தங்க குடத்தில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தங்கம், வெள்ளி நகைகள் அடுக்கி வைக்கப்பட்டது.
சாமி தரிசனத்திற்கு அதிகாலையிலேயே பக்தர்கள் வரத்தொடங்கினார்கள். இதனால் கோவிலில் கூட்டம் அலைமோதியது. குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு காய், கனிகள், கைநீட்டமும் வழங்கப்பட்டது. வெளிநாட்டையைச் சேர்ந்த பக்தர்களும் இன்று கோவிலில் தரிசனம் செய்தனர்.
அப்போது அவர்கள் காய், கனிகள் குவித்து வைக்கப்பட்டிருப்பதை பார்த்து வியப்பு அடைந்தனர். இதற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் கண்காணிப்பாளர் சிவக்குமார், ஆய்வர் ராமலெட்சுமி, கோவில் மேலாளர் ஆறுமுக தரன், கணக்கர் கண்ணன் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
இதையடுத்து மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடந்தது. கேரள முறைப்படி சித்திரை விஷூ நிகழ்ச்சி இன்று நடந்தது. சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் கேரள முறைப்படி கனி காணும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கோவிலில் பல்வேறு விதமான காய்கறிகள் குவித்து வைக்கப்பட்டிருந்தது. தாணுமாலய சுவாமி, ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகளும் நடந்தது. தாணுமாலய சுவாமிக்கு தங்க குடத்தில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தங்கம், வெள்ளி நகைகள் அடுக்கி வைக்கப்பட்டது.
சாமி தரிசனத்திற்கு அதிகாலையிலேயே பக்தர்கள் வரத்தொடங்கினார்கள். இதனால் கோவிலில் கூட்டம் அலைமோதியது. குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு காய், கனிகள், கைநீட்டமும் வழங்கப்பட்டது. வெளிநாட்டையைச் சேர்ந்த பக்தர்களும் இன்று கோவிலில் தரிசனம் செய்தனர்.
அப்போது அவர்கள் காய், கனிகள் குவித்து வைக்கப்பட்டிருப்பதை பார்த்து வியப்பு அடைந்தனர். இதற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் கண்காணிப்பாளர் சிவக்குமார், ஆய்வர் ராமலெட்சுமி, கோவில் மேலாளர் ஆறுமுக தரன், கணக்கர் கண்ணன் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
நமது இறையச்சத்தின் காரணமாக இறைவனின் திருப்தியையும் அவனது அருளையும் ஒருங்கே பெறுகின்றோம். அதனால்தான் இறைவன் “நோன்பிற்கு நானே கூலி வழங்குவேன்” என்று கூறுகின்றான்.
எந்தநேரமும் இறைவன் நம்மை பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்கிற உள்ளுணர்வுடன் செயல்படுகிறார்கள். எந்தநிலையிலும் இறைக்கட்டளைக்கு முதலிடம், இறை உவப்பே தனது இலக்கு என்கிற பயிற்சியினைப் பெறுகிறார்கள்.
பகலில் நோன்பு நோற்பதன் மூலமும், இரவில் தொழுகையின் மூலமும், இப்பயிற்சியினைப் பெறுகின்றார்கள். குர்ஆனுடன் ஏற்படும் நெருங்கிய தொடர்பும் மிக முக்கிய காரணம் ஆகிறது. குர்ஆனை ஓதுதல், கேட்டல், புரிதல் ஆகியவற்றின் மூலமாக பயிற்சி மெருகூட்டப்படுகிறது.
வழக்கமாக உணவு உண்ணும் வேளைகளில் உணவை உண்ணாமலும், ஆழ்ந்து தூங்கக் கூடிய நேரத்தில் உண்ணுவது என்ற அளவில் நமது செயல்பாடுகளை இறைக் கட்டளைகளுக்காக மாற்றிக் கொள்கின்றோம். அவ்வண்ணமே தாம்பத்ய வாழ்விலும் சில மாற்றங்களை ஏற்றுக் கொள்கின்றோம், இறைவன் கட்டளை என்பதால். அவன் நம்மை கண்காணித்துக் கொண்டு இருக்கின்றான் என்கிற உள்ளுணர்வு நம்முள் உண்டாகின்றது.
இவ்வாறான நமது இறையச்சத்தின் காரணமாக இறைவனின் திருப்தியையும் அவனது அருளையும் ஒருங்கே பெறுகின்றோம். அதனால்தான் இறைவன் “நோன்பிற்கு நானே கூலி வழங்குவேன்” என்று கூறுகின்றான்.
இம்மாதத்தில் செய்யப்படும் நற்செயலுக்காக கூலி பன்மடங்காக இறைவன் வழங்குகின்றான். இறைநம்பிக்கையாளர்கள் இந்த நல்வாய்ப்பை பயன்படுத்தி கூடுதலாக நன்மைகளை அறுவடை செய்கின்றார்கள். அதனால்தான் பெருமானார் (ஸல்) அவர்கள் நோன்பு திறக்கும் போது இவ்விதமாக பிரார்த்தனை செய்வார்கள்:
“தாகம் தீர்ந்தது, நரம்புகள் நனைந்தன, கூலி உறுதியாகிவிட்டது, அல்லாஹ் நாடினால்”.
நோன்பாளியின் அனைத்து செயல்களும் இறைவனின் கூலியை எதிர்பார்த்துதான் இருக்கின்றன. நோன்பு திறக்க நமது பள்ளிவாசல்களில் செய்யப்படும் ஏற்பாடுகளும், மக்கள் அதற்காக செலவு செய்ய போட்டி போடுவதுமாக - இறைநம்பிக்கையாளர்கள் இறையருளை பெற காட்டும் ஆர்வம்தான் என்ன! கிடைக்கும் வாய்ப்புகள் அனைத்தையும் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
ஆக, நன்மையான செயல்களை தொடருவோம். நன்மை தட்டை கனக்கச் செய்வோம். பெற்ற பயிற்சியை தொடர்ந்து கடைப்பிடிப்போம். அதுதான் நாம் ரமலான் மாதத்தின் மூலம் பெறக் கூடிய ‘தக்வா’ என்ற இறையச்சமாக திகழ முடியும்.
நசீர் அதாவுல்லாஹ், சென்னை.
பகலில் நோன்பு நோற்பதன் மூலமும், இரவில் தொழுகையின் மூலமும், இப்பயிற்சியினைப் பெறுகின்றார்கள். குர்ஆனுடன் ஏற்படும் நெருங்கிய தொடர்பும் மிக முக்கிய காரணம் ஆகிறது. குர்ஆனை ஓதுதல், கேட்டல், புரிதல் ஆகியவற்றின் மூலமாக பயிற்சி மெருகூட்டப்படுகிறது.
வழக்கமாக உணவு உண்ணும் வேளைகளில் உணவை உண்ணாமலும், ஆழ்ந்து தூங்கக் கூடிய நேரத்தில் உண்ணுவது என்ற அளவில் நமது செயல்பாடுகளை இறைக் கட்டளைகளுக்காக மாற்றிக் கொள்கின்றோம். அவ்வண்ணமே தாம்பத்ய வாழ்விலும் சில மாற்றங்களை ஏற்றுக் கொள்கின்றோம், இறைவன் கட்டளை என்பதால். அவன் நம்மை கண்காணித்துக் கொண்டு இருக்கின்றான் என்கிற உள்ளுணர்வு நம்முள் உண்டாகின்றது.
இவ்வாறான நமது இறையச்சத்தின் காரணமாக இறைவனின் திருப்தியையும் அவனது அருளையும் ஒருங்கே பெறுகின்றோம். அதனால்தான் இறைவன் “நோன்பிற்கு நானே கூலி வழங்குவேன்” என்று கூறுகின்றான்.
இம்மாதத்தில் செய்யப்படும் நற்செயலுக்காக கூலி பன்மடங்காக இறைவன் வழங்குகின்றான். இறைநம்பிக்கையாளர்கள் இந்த நல்வாய்ப்பை பயன்படுத்தி கூடுதலாக நன்மைகளை அறுவடை செய்கின்றார்கள். அதனால்தான் பெருமானார் (ஸல்) அவர்கள் நோன்பு திறக்கும் போது இவ்விதமாக பிரார்த்தனை செய்வார்கள்:
“தாகம் தீர்ந்தது, நரம்புகள் நனைந்தன, கூலி உறுதியாகிவிட்டது, அல்லாஹ் நாடினால்”.
நோன்பாளியின் அனைத்து செயல்களும் இறைவனின் கூலியை எதிர்பார்த்துதான் இருக்கின்றன. நோன்பு திறக்க நமது பள்ளிவாசல்களில் செய்யப்படும் ஏற்பாடுகளும், மக்கள் அதற்காக செலவு செய்ய போட்டி போடுவதுமாக - இறைநம்பிக்கையாளர்கள் இறையருளை பெற காட்டும் ஆர்வம்தான் என்ன! கிடைக்கும் வாய்ப்புகள் அனைத்தையும் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
ஆக, நன்மையான செயல்களை தொடருவோம். நன்மை தட்டை கனக்கச் செய்வோம். பெற்ற பயிற்சியை தொடர்ந்து கடைப்பிடிப்போம். அதுதான் நாம் ரமலான் மாதத்தின் மூலம் பெறக் கூடிய ‘தக்வா’ என்ற இறையச்சமாக திகழ முடியும்.
நசீர் அதாவுல்லாஹ், சென்னை.






