என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
சித்திரை திருவிழாவையொட்டி திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. பல்வேறு சிறப்பு பெற்ற இந்த கோவிலில்சித்திரை திருவிழா கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடைபெற்று வந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. முன்னதாக அலங்கரிக்கப்பட்ட தேரில் விநாயகர், அமிர்தகடேஸ்வரர், அபிராமி, முருகன், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் தனித்தனியாக எழுந்தருளினர்.
இதனையடுத்து தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். மேல வீதியில் இருந்து புறப்பட்டு வடக்கு வீதி, கீழவீதி தெற்கு வீதி வழியாக சென்று நிலையை அடைந்தது.
இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை பொறையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு மற்றும் போலீசார் செய்திருந்தனர். தேரோட்டத்தையொட்டி நான்கு வீதிகளிலும் குளிர்பானங்கள், நீர் மோர் வழங்கப்பட்டது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. முன்னதாக அலங்கரிக்கப்பட்ட தேரில் விநாயகர், அமிர்தகடேஸ்வரர், அபிராமி, முருகன், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் தனித்தனியாக எழுந்தருளினர்.
இதனையடுத்து தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். மேல வீதியில் இருந்து புறப்பட்டு வடக்கு வீதி, கீழவீதி தெற்கு வீதி வழியாக சென்று நிலையை அடைந்தது.
இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை பொறையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு மற்றும் போலீசார் செய்திருந்தனர். தேரோட்டத்தையொட்டி நான்கு வீதிகளிலும் குளிர்பானங்கள், நீர் மோர் வழங்கப்பட்டது.
கேரளாவில் தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் முழுமையாக விலக்கி கொள்ளப்பட்டுள்ளதால் பக்தர்கள் வருகை வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.
திருவனந்தபுரம் :
கேரளாவில் மலையாள மாதமான மேடம் மாதம் நேற்று பிறந்தது.
மேடம் மாதத்தின் முதல் நாளில் தான் சித்திரை விஷூ கனிகாணும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு பஞ்சாங்கப்படி இன்று சித்திரை விஷூ கனிகாணும் நிகழ்ச்சி நடந்தது.
இந்த நாளில் கோவில்களில் காய், கனிகள் குவித்து வைக்கப்பட்டிருக்கும். கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு இன்று காய். கனி பிரசாதமாக வழங்கப்படும். இதுபோல பெரியவர்கள். சிறியவர்களுக்கு கைநீட்டம் எனப்படும் பணமும் வழங்குவர்.
சித்திரை விஷூ நாளில் சபரிமலை ஐயப்பன் கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இதற்காக கோவில் நடை கடந்த 10-ந் தேதி மாலை திறக்கப்பட்டது. மறுநாள் முதல் கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
இன்று அதிகாலை கோவிலில் சித்திரை விஷூ கனி தரிசனம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 7 மணி வரை கனிகாணும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு கோவில் தந்திரிகளும், மேல்சாந்திகளும் கைதிட்டம் வழங்கினர்.
கேரளாவில் தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் முழுமையாக விலக்கி கொள்ளப்பட்டுள்ளதால் பக்தர்கள் வருகை வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. நேற்று இரவு முதலே பம்பை முதல் சன்னிதானம் வரை இருமுடி கட்டி வந்த பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
இன்று காலையில் அவர்கள் சரணகோஷம் முழங்க 18-ம் படி ஏறி ஐயப்பனை தரிசனம் செய்தனர். கனிகாணும் நிகழ்ச்சி முடிந்த பின்னரே அவர்கள் வெளியே வந்தனர்.
சித்திரை விஷூ பண்டிகைக்காக 10-ந் தேதி திறக்கப்பட்ட கோவில் நடை வருகிற 18-ந் தேதி அடைக்கப்படுகிறது.
அதன்பின்பு மே மாத பூஜைகளுக்காக மே 14-ந்தேதி திறக்கப்படுகிறது. வழக்கமான மாத பூஜைகள் முடிந்த பின்னர் மே மாதம் 19-ந் தேதி நடை அடைக்கப்படுகிறது.
கேரளாவில் மலையாள மாதமான மேடம் மாதம் நேற்று பிறந்தது.
மேடம் மாதத்தின் முதல் நாளில் தான் சித்திரை விஷூ கனிகாணும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு பஞ்சாங்கப்படி இன்று சித்திரை விஷூ கனிகாணும் நிகழ்ச்சி நடந்தது.
இந்த நாளில் கோவில்களில் காய், கனிகள் குவித்து வைக்கப்பட்டிருக்கும். கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு இன்று காய். கனி பிரசாதமாக வழங்கப்படும். இதுபோல பெரியவர்கள். சிறியவர்களுக்கு கைநீட்டம் எனப்படும் பணமும் வழங்குவர்.
சித்திரை விஷூ நாளில் சபரிமலை ஐயப்பன் கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இதற்காக கோவில் நடை கடந்த 10-ந் தேதி மாலை திறக்கப்பட்டது. மறுநாள் முதல் கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
இன்று அதிகாலை கோவிலில் சித்திரை விஷூ கனி தரிசனம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 7 மணி வரை கனிகாணும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு கோவில் தந்திரிகளும், மேல்சாந்திகளும் கைதிட்டம் வழங்கினர்.
கேரளாவில் தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் முழுமையாக விலக்கி கொள்ளப்பட்டுள்ளதால் பக்தர்கள் வருகை வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. நேற்று இரவு முதலே பம்பை முதல் சன்னிதானம் வரை இருமுடி கட்டி வந்த பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
இன்று காலையில் அவர்கள் சரணகோஷம் முழங்க 18-ம் படி ஏறி ஐயப்பனை தரிசனம் செய்தனர். கனிகாணும் நிகழ்ச்சி முடிந்த பின்னரே அவர்கள் வெளியே வந்தனர்.
சித்திரை விஷூ பண்டிகைக்காக 10-ந் தேதி திறக்கப்பட்ட கோவில் நடை வருகிற 18-ந் தேதி அடைக்கப்படுகிறது.
அதன்பின்பு மே மாத பூஜைகளுக்காக மே 14-ந்தேதி திறக்கப்படுகிறது. வழக்கமான மாத பூஜைகள் முடிந்த பின்னர் மே மாதம் 19-ந் தேதி நடை அடைக்கப்படுகிறது.
கல்வி உள்ள இடத்தில் லட்சுமியாக செல்வமும் சேரும் என்பதாலேயே, ஹயக்ரீவர் தன்னுடைய மடி மீது லட்சுமி தேவியை அமர்த்தியிருப்பதாகவும் காரண காரியம் சொல்லப்படுகிறது.
சரஸ்வதியோடு சேர்த்து அவருடைய குருவான ஹயக்ரீவரையும் வணங்கி வந்தால், படிக்கும் பிள்ளைகளுக்கு ஞானம் விருத்தியாகும் என்பது ஐதீகம். பிள்ளைகளுக்கு கல்வி சம்பந்தப்பட்ட தோஷம் இருந்தாலோ, கல்வியில் பின்தங்கியிருந்தாலோ மாதந்தோறும், திருவோண நட்சத்திரத்தில் ஹயக்ரீவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்து வழிபாடு செய்ய வேண்டும். மேலும் ஏலக்காய் மாலை அணிவித்து, நோட்டு, பேனாவை பூஜையில் வைத்து வணங்க வேண்டும். தேன் கொண்டு அபிஷேகம் செய்து, அந்த தேனை படிக்கும் பிள்ளைகளின் நாக்கில் தடவி, ஹயக்ரீவரின் மந்திரத்தை உச்சரிக்கச் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் பிள்ளைகள் அறிவிலும், ஞானத்திலும் சிறந்து விளங்குவர்.
மந்திரம்
ஞானானந்தமயம் தேவம்
நிர்மல ஸ்படிகாக்கிருதிம்
ஆதாரம் ஸர்வவித்யானாம்
ஹயக்ரீவ முபாஸ்மஹே
பொருள்:- ஞானம், ஆனந்தம் ஆகியவற்றின் வடிவமாக இருப்பவரும், எந்த மாசும் இல்லாத ஸ்படிக மணியைப் போன்ற திருமேனியைப் பெற்றவரும், எல்லாக் கலைகளுக்கும் உறைவிடமாக விளங்குபவரும், குதிரை போன்ற திருக்கழுத்தைக் கொண்டவருமான ஹயக்ரீவ பெருமாளை வணங்குகிறோம்.
மந்திரம்
ஞானானந்தமயம் தேவம்
நிர்மல ஸ்படிகாக்கிருதிம்
ஆதாரம் ஸர்வவித்யானாம்
ஹயக்ரீவ முபாஸ்மஹே
பொருள்:- ஞானம், ஆனந்தம் ஆகியவற்றின் வடிவமாக இருப்பவரும், எந்த மாசும் இல்லாத ஸ்படிக மணியைப் போன்ற திருமேனியைப் பெற்றவரும், எல்லாக் கலைகளுக்கும் உறைவிடமாக விளங்குபவரும், குதிரை போன்ற திருக்கழுத்தைக் கொண்டவருமான ஹயக்ரீவ பெருமாளை வணங்குகிறோம்.
ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.
திருஞானசம்மந்தரால் பாடல் பெற்ற இக்கோவில் நவக்கிரகங்களில் குருபகவானுக்கு பரிகார தலமாக விளங்குகிறது. ஆண்டுதோறும் குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடையும் நாளில் இந்த கோவிலில் குருப்பெயர்ச்சி விழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு குருபகவான் கும்ப ராசியில் இருந்து மீனராசிக்கு நேற்று அதிகாலை 4.16 மணிக்கு பெயர்ச்சியடைந்தார். இதனை முன்னிட்டு இந்த கோவிலில் குருப்பெயர்ச்சி விழா வெகு சிறப்பாக நடந்தது. குருபகவானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.
குருபகவான் தங்ககவசத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மூலவர் குருபகவான் சன்னதிக்கு எதிரில் தங்ககவச அலங்காரத்தில் உற்சவர் தெட்சிணாமூர்த்தி எழுந்தருளினார்.
கலங்காமற்காத்த விநாயகர், ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார் குழலியம்மன், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், சனீஸ்வர பகவான் சன்னதிகளில் சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
நேற்று முன்தினம் நள்ளிரவு முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலில் வந்து குவிந்தனர். அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து நீண்ட வரிசையில் நின்று குருபகவானை தரிசனம் செய்தனர்.
நன்னிலம் தொகுதி எம்.எல்.ஏ. ஆர்.காமராஜ், தஞ்சை சரக டி.ஐ.ஜி. கயல்விழி, திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் மற்றும் பல்வேறு துறை உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
பக்தர்களின் நலன் கருதி திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவின்பேரில் அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் சிறப்பு வசதிகளை செய்யப்பட்டு இருந்தது. அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. போக்குவரத்தை ஒழுங்கு படுத்தும் பணியிலும், பாதுகாப்பு பணியிலும் ஏராளமான போலீசார் ஈடுபட்டனர்.
விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் மற்றும் அறநிலையத்துறை உதவி ஆணையர் ஹரிஹரன், கோவில் செயல் அலுவலர் தமிழ்ச்செல்வி மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். குருப்பெயர்ச்சியையொட்டி 2-வது கட்ட லட்சார்ச்சனை வருகிற 18-ந் தேதி தொடங்கி 22-ந் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த ஆண்டு குருபகவான் கும்ப ராசியில் இருந்து மீனராசிக்கு நேற்று அதிகாலை 4.16 மணிக்கு பெயர்ச்சியடைந்தார். இதனை முன்னிட்டு இந்த கோவிலில் குருப்பெயர்ச்சி விழா வெகு சிறப்பாக நடந்தது. குருபகவானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.
குருபகவான் தங்ககவசத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மூலவர் குருபகவான் சன்னதிக்கு எதிரில் தங்ககவச அலங்காரத்தில் உற்சவர் தெட்சிணாமூர்த்தி எழுந்தருளினார்.
கலங்காமற்காத்த விநாயகர், ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார் குழலியம்மன், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், சனீஸ்வர பகவான் சன்னதிகளில் சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
நேற்று முன்தினம் நள்ளிரவு முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலில் வந்து குவிந்தனர். அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து நீண்ட வரிசையில் நின்று குருபகவானை தரிசனம் செய்தனர்.
நன்னிலம் தொகுதி எம்.எல்.ஏ. ஆர்.காமராஜ், தஞ்சை சரக டி.ஐ.ஜி. கயல்விழி, திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் மற்றும் பல்வேறு துறை உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
பக்தர்களின் நலன் கருதி திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவின்பேரில் அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் சிறப்பு வசதிகளை செய்யப்பட்டு இருந்தது. அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. போக்குவரத்தை ஒழுங்கு படுத்தும் பணியிலும், பாதுகாப்பு பணியிலும் ஏராளமான போலீசார் ஈடுபட்டனர்.
விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் மற்றும் அறநிலையத்துறை உதவி ஆணையர் ஹரிஹரன், கோவில் செயல் அலுவலர் தமிழ்ச்செல்வி மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். குருப்பெயர்ச்சியையொட்டி 2-வது கட்ட லட்சார்ச்சனை வருகிற 18-ந் தேதி தொடங்கி 22-ந் தேதி வரை நடைபெறுகிறது.
உயிரை விடுவதற்கு முன்பாக சிலுவையில் ரத்தம் சிந்தியவாறு அவர் கூறும் வார்த்தைகள் பற்றி இன்று சிறப்பு வழிபாடாக நடைபெறுவது வழக்கம்.
இயேசு 40 நாட்கள் வனாந்தரத்தில் உபவாசம் இருந்து ஜெபித்த நாட்களைதான் தபசு காலம், வசந்தகாலம் என்று திருமறையில் குறிப்பிடப்படுகிறது. அந்த வகையில் இன்று பெரிய வியாழன் அனுசரிக்கப்படுகிறது.
இயேசு தனது சீடர்களுடன் இந்த நாளில் இரவு விருந்து அருந்துவார். இதுவே அவரது கடைசி இரவு உணவாகும். சிலுவையில் அடித்து கொல்லப்படுவதற்கு முந்தைய நாளான இன்று 12 சீடர்களின் கால்களை கழுவுவார். நான் கழுவுவது போல ஏழைகளின் கால்களை கழுவ வேண்டும் என்று கூறினார். அந்த நாளை நினைவு கூறும் வகையில் பெரிய வியாழன் நேற்று அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.
இந்த ஆராதனையில் கிறிஸ்தவர்கள் மிகுந்த பய பக்தியுடன் இவ்வாராதனையில் பங்கேற்று சாக்கிரமந்தை (அப்பம், திராட்சை ரசம்) பெற்றார்கள்.
இதனைத் தொடர்ந்து இன்று பெரிய வெள்ளி எனப்படும் புனித வெள்ளி அனுசரிக்கப்படுகிறது. ஏசுவை கொல்கொதா மலைக்கு இழுத்து சென்று அங்கு சிலுவையில் அவரை ஆணிகளால் அடித்தும், தலையில் முள் கிரீடம் சூட்டியும் பிதாவின் சித்தத்தின்படி உயிரை மாய்க்கும் முன் 7 வார்த்தைகளை சிலுவையில் ஏசு கூறுவார். அந்த 7 வார்த்தைகள் பற்றி ஆலயங்களில் போதனை நடைபெறும்.
உயிரை விடுவதற்கு முன்பாக சிலுவையில் ரத்தம் சிந்தியவாறு அவர் கூறும் வார்த்தைகள் பற்றி இன்று சிறப்பு வழிபாடாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆராதனை 3 மணி நேரம் தியாணிக்க கூடிய வகையில் நடைபெறுவதால் இதற்கு மும்மணி தியான ஆராதனை என்று கிறிஸ்தவர்கள் கூறுவார்கள்.
கத்தோலிக்க திருச்சபைகளிலும், தென்னிந்திய திருச்சபைகளிலும், லுத்தரன், மெத்தடிஸ்ட், பெந்தே கோஸ்து உள்ளிட்ட பல்வேறு பிரிவு கிறிஸ்தவ அமைப்புகளிலும் புனித வெள்ளி அனுசரிக்கப்படுகிறது.
அந்த நாளில் உபவாசம் இருந்து வழிபாடுகளில் பலர் பங்கேற்பார்கள். அதனை தொடர்ந்து பெரிய சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை உயிர்த்தெழுந்த திருநாள் கொண்டாடப்படுகிறது.
இயேசு தனது சீடர்களுடன் இந்த நாளில் இரவு விருந்து அருந்துவார். இதுவே அவரது கடைசி இரவு உணவாகும். சிலுவையில் அடித்து கொல்லப்படுவதற்கு முந்தைய நாளான இன்று 12 சீடர்களின் கால்களை கழுவுவார். நான் கழுவுவது போல ஏழைகளின் கால்களை கழுவ வேண்டும் என்று கூறினார். அந்த நாளை நினைவு கூறும் வகையில் பெரிய வியாழன் நேற்று அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.
இந்த ஆராதனையில் கிறிஸ்தவர்கள் மிகுந்த பய பக்தியுடன் இவ்வாராதனையில் பங்கேற்று சாக்கிரமந்தை (அப்பம், திராட்சை ரசம்) பெற்றார்கள்.
இதனைத் தொடர்ந்து இன்று பெரிய வெள்ளி எனப்படும் புனித வெள்ளி அனுசரிக்கப்படுகிறது. ஏசுவை கொல்கொதா மலைக்கு இழுத்து சென்று அங்கு சிலுவையில் அவரை ஆணிகளால் அடித்தும், தலையில் முள் கிரீடம் சூட்டியும் பிதாவின் சித்தத்தின்படி உயிரை மாய்க்கும் முன் 7 வார்த்தைகளை சிலுவையில் ஏசு கூறுவார். அந்த 7 வார்த்தைகள் பற்றி ஆலயங்களில் போதனை நடைபெறும்.
உயிரை விடுவதற்கு முன்பாக சிலுவையில் ரத்தம் சிந்தியவாறு அவர் கூறும் வார்த்தைகள் பற்றி இன்று சிறப்பு வழிபாடாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆராதனை 3 மணி நேரம் தியாணிக்க கூடிய வகையில் நடைபெறுவதால் இதற்கு மும்மணி தியான ஆராதனை என்று கிறிஸ்தவர்கள் கூறுவார்கள்.
கத்தோலிக்க திருச்சபைகளிலும், தென்னிந்திய திருச்சபைகளிலும், லுத்தரன், மெத்தடிஸ்ட், பெந்தே கோஸ்து உள்ளிட்ட பல்வேறு பிரிவு கிறிஸ்தவ அமைப்புகளிலும் புனித வெள்ளி அனுசரிக்கப்படுகிறது.
அந்த நாளில் உபவாசம் இருந்து வழிபாடுகளில் பலர் பங்கேற்பார்கள். அதனை தொடர்ந்து பெரிய சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை உயிர்த்தெழுந்த திருநாள் கொண்டாடப்படுகிறது.
ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 3 மணி வரை மவுன நற்கருணை ஆராதனையும், தொடர்ந்து இறை இரக்க ஆராதனையும் நடக்கிறது.
ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் ஏசுவின் இரவு உணவு வழிபாடு நேற்று நடந்தது. ஆலய பங்குத்தந்தையும் ஈரோடு மறை வட்ட முதன்மை குருவுமான ஜான் சேவியர் தலைமை திருப்பலி நிறைவேற்றினார்.உதவி பங்குத்தந்தை ராயப்ப தாஸ், அருட்தந்தை மைக்கேல் ஆகியோர் வழிபாட்டு நிகழ்ச்சிகளை நடத்தினார்கள். அருட்தந்தை ஜெயசீலன் மறையுரையாற்றினார்.கடைசி இரவு உணவின் போது ஏசு 12 சீடர்களுக்கு பாதங்கள் கழுவி தூய்மைப்படுத்தியதை நினைவுகூரும் வகையில் உதவி பங்குத்தந்தை ராயப்ப தாஸ் ஈரோடு புனித அமல அன்னை ஆலய பங்கினை சேர்ந்த 12 பேரின் கால் பாதங்களை கழுவி முத்தமிட்டார்.
திருப்பலி முடிவில் ஏசு துன்பங்களுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டதை நினைவுகூரும் வகையில் ஆலயத்தில் இருந்து நற்கருணை இடமாற்றம் செய்யப்பட்டது. தொடர்ந்து நற்கருணை ஆராதனை நடந்தது. நள்ளிரவு 12 மணி வரை இந்த ஆராதனை தொடர்ந்தது. இந்த வழிபாடுகளில் ஏராளமான கிறிஸ்தவ மக்கள் பங்கெடுத்தனர். இன்று (வெள்ளிக்கிழமை) காலை 6 மணி முதல் மவுன ஆராதனை நடக்கிறது. பகல் 11 மணிக்கு ஆலய வளாகத்தில் சிலுவைப்பாதை வழிபாடு நடக்கிறது. பின்னர் பிற்பகல் 3 மணிவரை மவுன நற்கருணை ஆராதனையும், தொடர்ந்து இறை இரக்க ஆராதனையும் நடக்கிறது. மாலை 6 மணிக்கு திருச்சிலுவை வழிபாடு நடக்கிறது.
நாளை(சனிக்கிழமை) இரவு 10 மணிக்கு ஏசு கிறிஸ்துவின் உயிர்ப்பை நினைவுகூரும் ஈஸ்டர் பெருவிழா சிறப்பு வழிபாடுகள் தொடங்குகின்றன.
ஒளி வழிபாடு, வார்த்தை வழிபாடு, பாஸ்கா வழிபாடு ஆகியவற்றை தொடர்ந்து நள்ளிரவு ஈஸ்டர் திருப்பலி நடக்கிறது.
திருப்பலி முடிவில் ஏசு துன்பங்களுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டதை நினைவுகூரும் வகையில் ஆலயத்தில் இருந்து நற்கருணை இடமாற்றம் செய்யப்பட்டது. தொடர்ந்து நற்கருணை ஆராதனை நடந்தது. நள்ளிரவு 12 மணி வரை இந்த ஆராதனை தொடர்ந்தது. இந்த வழிபாடுகளில் ஏராளமான கிறிஸ்தவ மக்கள் பங்கெடுத்தனர். இன்று (வெள்ளிக்கிழமை) காலை 6 மணி முதல் மவுன ஆராதனை நடக்கிறது. பகல் 11 மணிக்கு ஆலய வளாகத்தில் சிலுவைப்பாதை வழிபாடு நடக்கிறது. பின்னர் பிற்பகல் 3 மணிவரை மவுன நற்கருணை ஆராதனையும், தொடர்ந்து இறை இரக்க ஆராதனையும் நடக்கிறது. மாலை 6 மணிக்கு திருச்சிலுவை வழிபாடு நடக்கிறது.
நாளை(சனிக்கிழமை) இரவு 10 மணிக்கு ஏசு கிறிஸ்துவின் உயிர்ப்பை நினைவுகூரும் ஈஸ்டர் பெருவிழா சிறப்பு வழிபாடுகள் தொடங்குகின்றன.
ஒளி வழிபாடு, வார்த்தை வழிபாடு, பாஸ்கா வழிபாடு ஆகியவற்றை தொடர்ந்து நள்ளிரவு ஈஸ்டர் திருப்பலி நடக்கிறது.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மழை பெய்து வருவதாலும், ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்து உள்ளதாலும் பக்தர்களுக்கு வழங்கிய அனுமதியை வனத்துறை ரத்து செய்தது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சித்ரா பவுர்ணமியையொட்டி 4 நாட்கள் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இதற்கிடையே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மழை பெய்து வருவதாலும், ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்து உள்ளதாலும் பக்தர்களுக்கு வழங்கிய அனுமதியை வனத்துறை ரத்து செய்தது.
நேற்று முன்தினம் காலையில் கோவில் நிர்வாகம் பக்தர்களுக்கு அனுமதி அளித்தது. ஆனால் மாலையில் வனத்துறை சார்பில் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை என தடை விதித்தது. இதனால் குழப்பமடைந்த பக்தர்கள் நேற்று காலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு தரிசனத்திற்காக வந்தனர்.
அவர்களை தாணிப்பாறை வனத்துறை கேட்டின் முன்பு போலீசார் மற்றும் வனத்துறையினர் கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை என்று கூறி அவர்களை திரும்ப செல்லுமாறு கூறினர். இதனால் ஏமாற்றம் அடைந்த பக்தர்கள் வனத்துறை கேட்டின் முன்பு விளக்கு ஏற்றி சாமி தரிசனம் செய்தனர்.
இதற்கிடையே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மழை பெய்து வருவதாலும், ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்து உள்ளதாலும் பக்தர்களுக்கு வழங்கிய அனுமதியை வனத்துறை ரத்து செய்தது.
நேற்று முன்தினம் காலையில் கோவில் நிர்வாகம் பக்தர்களுக்கு அனுமதி அளித்தது. ஆனால் மாலையில் வனத்துறை சார்பில் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை என தடை விதித்தது. இதனால் குழப்பமடைந்த பக்தர்கள் நேற்று காலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு தரிசனத்திற்காக வந்தனர்.
அவர்களை தாணிப்பாறை வனத்துறை கேட்டின் முன்பு போலீசார் மற்றும் வனத்துறையினர் கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை என்று கூறி அவர்களை திரும்ப செல்லுமாறு கூறினர். இதனால் ஏமாற்றம் அடைந்த பக்தர்கள் வனத்துறை கேட்டின் முன்பு விளக்கு ஏற்றி சாமி தரிசனம் செய்தனர்.
இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சாத்தூர் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் தமிழ் புத்தாண்டையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நேற்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. இதையடுத்து அம்மனுக்கு மஞ்சள், பால், பன்னீர், தேன் உள்பட பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சிறப்பு வழிபாட்டில் விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்ததால் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத்தலைவர் ராமமூர்த்தி தலைமையில் அறங்காவலர் குழுவினர் முன்னிலையில் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
அதேபோல சாத்தூர் பெருமாள் கோவில், ஓடைப்பட்டி விநாயகர் கோவில் மற்றும் பல்வேறு கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்ததால் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத்தலைவர் ராமமூர்த்தி தலைமையில் அறங்காவலர் குழுவினர் முன்னிலையில் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
அதேபோல சாத்தூர் பெருமாள் கோவில், ஓடைப்பட்டி விநாயகர் கோவில் மற்றும் பல்வேறு கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
சித்திரை திருவிழாவில் கண்டாங்கி பட்டு உடுத்தி தங்கப்பல்லக்கில் நேற்று இரவில் மதுரைக்கு கள்ளழகர் புறப்பட்டார். நாளை, வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார்.
உலகப் பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழா விமரிசையாக நடந்து வருகிறது. இதையொட்டி, அழகர்கோவில் விழா கடந்த 12-ந் தேதி தொடங்கியது. நேற்று கள்ளழகர் மேளதாளம் முழங்க, பரிவாரங்களுடன் கோவில் யானை முன்னே செல்ல கோவிலை விட்டு கள்ளழகர் புறப்பட்டார். மாலை 6.15 மணிக்கு பக்தர்களின் கோவிந்தா.. கோவிந்தா.. என்ற கோஷத்துடன் வெளியே வந்தார்.
இதைதொடர்ந்து பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவில் முன்பு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன.. இதையடுத்து கண்டாங்கி பட்டு உடுத்தி நேரிக்கம்பு, வளைதடிகள் ஏந்தி கள்ளர் திருக்கோலத்தில் இரவு 7 மணிக்கு தங்கப்பல்லக்கில் மதுரையை நோக்கி பக்தர்கள் வெள்ளத்தில் கள்ளழகர் புறப்பட்டார்.
மதுரை வரும் வழியில் பொய்கைகரைபட்டி, கள்ளந்திரி, அப்பன் திருப்பதி, உள்ளிட்ட பல மண்டபங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்தார். முன்னதாக பக்தர்கள் நெல் உள்ளிட்ட தானிய வகைகளை காணிக்கையாக செலுத்தினர். இன்று கள்ளழகர் மதுரை வந்தடைகிறார். பக்தர்கள் எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை மூன்றுமாவடியில் நடக்கிறது.
மேலும் இன்று இரவு தல்லாகுளம் பெருமாள் கோவிலில் குதிரை வாகனத்தில் சாத்துபடி ஆனதும் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையை அணிந்து, நாளை(சனிக்கிழமை) அதிகாலையில் 5.50 மணிக்கு மேல் 6.20 மணிக்குள் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குகிறார். 2 ஆண்டுகளுக்கு பிறகு அழகர் மதுரை வருவதால் வழி நெடுகிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
இதைதொடர்ந்து பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவில் முன்பு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன.. இதையடுத்து கண்டாங்கி பட்டு உடுத்தி நேரிக்கம்பு, வளைதடிகள் ஏந்தி கள்ளர் திருக்கோலத்தில் இரவு 7 மணிக்கு தங்கப்பல்லக்கில் மதுரையை நோக்கி பக்தர்கள் வெள்ளத்தில் கள்ளழகர் புறப்பட்டார்.
மதுரை வரும் வழியில் பொய்கைகரைபட்டி, கள்ளந்திரி, அப்பன் திருப்பதி, உள்ளிட்ட பல மண்டபங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்தார். முன்னதாக பக்தர்கள் நெல் உள்ளிட்ட தானிய வகைகளை காணிக்கையாக செலுத்தினர். இன்று கள்ளழகர் மதுரை வந்தடைகிறார். பக்தர்கள் எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை மூன்றுமாவடியில் நடக்கிறது.
மேலும் இன்று இரவு தல்லாகுளம் பெருமாள் கோவிலில் குதிரை வாகனத்தில் சாத்துபடி ஆனதும் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையை அணிந்து, நாளை(சனிக்கிழமை) அதிகாலையில் 5.50 மணிக்கு மேல் 6.20 மணிக்குள் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குகிறார். 2 ஆண்டுகளுக்கு பிறகு அழகர் மதுரை வருவதால் வழி நெடுகிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
சித்திரை விழாவின் 12-ம் நாளான நாளை (சனிக்கிழமை) மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழாவின் நிறைவாக உச்சி காலத்தில் பொற்றாமரைக் குளத்தில் தீர்த்தமும், தேவேந்திர பூஜையும் நடைபெறுகின்றன.
மதுரை :
உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி- சுந்தரேசுவரர் கோவில் சித்திரை திருவிழா கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக பக்தர்கள் பங்கேற்பு இன்றி நடைபெற்றது. இந்த ஆண்டு கொரோனா தடைகள் நீக்கப்பட்டதை தொடர்ந்து சித்திரை திருவிழா பக்தர்கள் பங்கேற்புடன் கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாக்காலங்களில் தினமும் காலை, மாலை வேளைகளில் மீனாட்சி அம்மன், பிரியாவிடை- சுந்தரேசுவரர் மதுரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். வீதி உலாவின் போது சிறுவர், சிறுமிகள் கடவுள் வேடமணிந்து கோலாட்டம் அடித்தபடி சென்றது பார்ப்பவர்களை பரவசம் அடையச்செய்தது.
மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், திக்கு விஜயம் போன்ற வைபவங்களை தொடர்ந்து 10-ம் திருநாளான நேற்று திருக்கல்யாணம் நடைபெற்றது. மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற இந்த விழாவை காண ஏராளமானோர் திரண்டனர்.
மீனாட்சி அம்மனுக்கு மங்கலநாண் அணிவிக்கப்பட்டதும் அங்கு கூடியிருந்த பெண்கள் தங்களது தாலியை புதுப்பித்துக் கொண்டனர். தொடர்ந்து அன்னதானம், மொய் விருந்து போன்றவையும் நடைபெற்றன.
சித்திரை திருவிழாவின் மற்றொரு முத்தாய்ப்பு நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக 2 தேர்களும் மலர் மாலையால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. இன்று அதிகாலை 5 மணிக்கு மீனாட்சி அம்மன், பிரியாவிடை- சுந்தரேசுவரர் ஆகியோர் முத்தம்பல முதலியார் கட்டளை மண்டகப்படி, ராமநாதபுரம் சேதுபதி மகா ராஜா மண்டகப்படிக்கு எழுந்தருளினர். அங்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.
தொடர்ந்து ஒரே பல்லக்கில் மீனாட்சி அம்மன், பிரியாவிடை- சுந்தரேசுவரர் கீழமாசி வீதியில் உள்ள தேரடிக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு தீபாராதனைகள் நடத்தப்பட்டன. அதன்பிறகு பிரியாவிடை- சுந்தரேசுவரர் பெரிய தேரிலும், மீனாட்சி அம்மன் சிறிய தேரிலும் எழுந்தருளினர். அப்போது பக்தர்கள் பக்தி கோஷம் எழுப்பினர்.
தேரோட்டம் தொடங்குவதற்கு முன்பு அங்குள்ள கருப்பண சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. தொடர்ந்து பஞ்ச வாத்தியங்கள் முழங்க பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். காலை 7.32 மணிக்கு சுவாமி தேர் இழுக்கப்பட்டது. 8.15 மணிக்கு அம்மன் தேரை பக்தர்கள் இழுத்தனர்.
தேரோட்டத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து சுவாமி -அம்மன் தேரை இழுத்துச் சென்றனர். 4 மாசி வீதிகளிலும் தேர்கள் அசைந்தாடி செல்வதை பொதுமக்கள் சாலையின் இருபுறமும் உள்ள உயர்ந்த கட்டிடங்களில் நின்றும் தரிசனம் செய்தனர். தேருக்கு முன்பாக பக்தர்கள் மீனாட்சி -சுந்தரேசுவரர் பதிகம் பாடிச் சென்றனர்.
சுவாமி-அம்மன் தேருக்கு முன்பு அலங்கரிக்கப்பட்ட யானை அழைத்துச் செல்லப்பட்டது. அதன் பிறகு விநாயகர், முருகன், நாயன்மார்கள் தனித்தனி சிறிய சப்பரங்களில் சென்றனர். பகல் 12 மணியளவில் மாசி வீதிகளை வலம் வந்த தேர்கள் நிலையை வந்தடைந்தன. அதன் பிறகு சண்டிகேஸ்வரர் வீதி உலா நடைபெற்றது.
தேரோட்ட விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றதை கருத்தில் கொண்டு தென் மாவட்ட ஐ.ஜி. அஸ்ராகார்க், போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். வெளி மாவட்டங்களில் இருந்தும் கூடுதலாக போலீசார் வரவழைக்கப்பட்டு கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டிருந்தது.
திருவிழாவை காணவரும் பக்தர்கள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கு தனி இடவசதி செய்யப்பட்டிருந்தது. மக்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய வசதியாக போக்குவரத்தில் போலீசார் மாற்றங்கள் செய்து அதனை சிறப்பாக செயல்படுத்தினர்.
தேரோட்டத்தை தொடர்ந்து இன்று மாலையில் மீனாட்சி அம்மன், பிரியாவிடை- சுந்தரேசுவரர் சப்தாவர்ண சப்பரத்தில் மாசி வீதிகளை வலம் வருகின்றனர். மாலை (16-ந் தேதி) தேவேந்திர பூஜை நடக்கிறது. உச்சி காலத்தில் பொற்றாமரை குளத்தில் தீர்த்த திருவிழா நடக்கிறது.
இரவு 9 மணிக்கு திருப்பரங்குன்றம் சுப்பிரமிணய சுவாமியும், பவளக்கனிவாய் பெருமாளும் 16 கால் மண்டபத்தில் இருந்து விடை பெற்றுச் செல்கின்றனர். இந்த நிகழ்ச்சியோடு மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.
இதையும் படிக்கலாம்...சித்ரா பவுர்ணமி விரதம் அனுஷ்டிக்கும் முறைகளும், விரதத்தின் பயன்களும்
உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி- சுந்தரேசுவரர் கோவில் சித்திரை திருவிழா கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக பக்தர்கள் பங்கேற்பு இன்றி நடைபெற்றது. இந்த ஆண்டு கொரோனா தடைகள் நீக்கப்பட்டதை தொடர்ந்து சித்திரை திருவிழா பக்தர்கள் பங்கேற்புடன் கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாக்காலங்களில் தினமும் காலை, மாலை வேளைகளில் மீனாட்சி அம்மன், பிரியாவிடை- சுந்தரேசுவரர் மதுரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். வீதி உலாவின் போது சிறுவர், சிறுமிகள் கடவுள் வேடமணிந்து கோலாட்டம் அடித்தபடி சென்றது பார்ப்பவர்களை பரவசம் அடையச்செய்தது.
மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், திக்கு விஜயம் போன்ற வைபவங்களை தொடர்ந்து 10-ம் திருநாளான நேற்று திருக்கல்யாணம் நடைபெற்றது. மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற இந்த விழாவை காண ஏராளமானோர் திரண்டனர்.
மீனாட்சி அம்மனுக்கு மங்கலநாண் அணிவிக்கப்பட்டதும் அங்கு கூடியிருந்த பெண்கள் தங்களது தாலியை புதுப்பித்துக் கொண்டனர். தொடர்ந்து அன்னதானம், மொய் விருந்து போன்றவையும் நடைபெற்றன.
சித்திரை திருவிழாவின் மற்றொரு முத்தாய்ப்பு நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக 2 தேர்களும் மலர் மாலையால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. இன்று அதிகாலை 5 மணிக்கு மீனாட்சி அம்மன், பிரியாவிடை- சுந்தரேசுவரர் ஆகியோர் முத்தம்பல முதலியார் கட்டளை மண்டகப்படி, ராமநாதபுரம் சேதுபதி மகா ராஜா மண்டகப்படிக்கு எழுந்தருளினர். அங்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.
தொடர்ந்து ஒரே பல்லக்கில் மீனாட்சி அம்மன், பிரியாவிடை- சுந்தரேசுவரர் கீழமாசி வீதியில் உள்ள தேரடிக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு தீபாராதனைகள் நடத்தப்பட்டன. அதன்பிறகு பிரியாவிடை- சுந்தரேசுவரர் பெரிய தேரிலும், மீனாட்சி அம்மன் சிறிய தேரிலும் எழுந்தருளினர். அப்போது பக்தர்கள் பக்தி கோஷம் எழுப்பினர்.
தேரோட்டம் தொடங்குவதற்கு முன்பு அங்குள்ள கருப்பண சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. தொடர்ந்து பஞ்ச வாத்தியங்கள் முழங்க பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். காலை 7.32 மணிக்கு சுவாமி தேர் இழுக்கப்பட்டது. 8.15 மணிக்கு அம்மன் தேரை பக்தர்கள் இழுத்தனர்.
தேரோட்டத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து சுவாமி -அம்மன் தேரை இழுத்துச் சென்றனர். 4 மாசி வீதிகளிலும் தேர்கள் அசைந்தாடி செல்வதை பொதுமக்கள் சாலையின் இருபுறமும் உள்ள உயர்ந்த கட்டிடங்களில் நின்றும் தரிசனம் செய்தனர். தேருக்கு முன்பாக பக்தர்கள் மீனாட்சி -சுந்தரேசுவரர் பதிகம் பாடிச் சென்றனர்.
சுவாமி-அம்மன் தேருக்கு முன்பு அலங்கரிக்கப்பட்ட யானை அழைத்துச் செல்லப்பட்டது. அதன் பிறகு விநாயகர், முருகன், நாயன்மார்கள் தனித்தனி சிறிய சப்பரங்களில் சென்றனர். பகல் 12 மணியளவில் மாசி வீதிகளை வலம் வந்த தேர்கள் நிலையை வந்தடைந்தன. அதன் பிறகு சண்டிகேஸ்வரர் வீதி உலா நடைபெற்றது.
தேரோட்ட விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றதை கருத்தில் கொண்டு தென் மாவட்ட ஐ.ஜி. அஸ்ராகார்க், போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். வெளி மாவட்டங்களில் இருந்தும் கூடுதலாக போலீசார் வரவழைக்கப்பட்டு கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டிருந்தது.
திருவிழாவை காணவரும் பக்தர்கள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கு தனி இடவசதி செய்யப்பட்டிருந்தது. மக்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய வசதியாக போக்குவரத்தில் போலீசார் மாற்றங்கள் செய்து அதனை சிறப்பாக செயல்படுத்தினர்.
தேரோட்டத்தை தொடர்ந்து இன்று மாலையில் மீனாட்சி அம்மன், பிரியாவிடை- சுந்தரேசுவரர் சப்தாவர்ண சப்பரத்தில் மாசி வீதிகளை வலம் வருகின்றனர். மாலை (16-ந் தேதி) தேவேந்திர பூஜை நடக்கிறது. உச்சி காலத்தில் பொற்றாமரை குளத்தில் தீர்த்த திருவிழா நடக்கிறது.
இரவு 9 மணிக்கு திருப்பரங்குன்றம் சுப்பிரமிணய சுவாமியும், பவளக்கனிவாய் பெருமாளும் 16 கால் மண்டபத்தில் இருந்து விடை பெற்றுச் செல்கின்றனர். இந்த நிகழ்ச்சியோடு மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.
இதையும் படிக்கலாம்...சித்ரா பவுர்ணமி விரதம் அனுஷ்டிக்கும் முறைகளும், விரதத்தின் பயன்களும்
இந்த வருடம் சித்ரா பௌர்ணமி அன்று காலையில் சித்திரகுப்தரின் படத்திற்கு முன் பேனா, காகிதம் முதலியவற்றை வைத்து மலர்களால் பூஜித்து வணங்கலாம்.
ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி வரும். ஆனால் மற்ற எந்தப் பவுர்ணமிக்கும் இல்லாத சிறப்பு, சித்ரா பவுர்ணமிக்கு உண்டு. அனைத்து மாதங்களிலும் பவுர்ணமியில் முழுநிலவு அழகாக ப் பிரகாசித்தாலும் அதில் உள்ள களங்கங்கள் மிக மெலிதாகக் காணக்கிடைக்கும்.
ஆனால் சித்ராபவுர்ணமி அன்று நிலவு தனது கிரணங்களை பூரணமாகப் பொழிந்து. கொஞ்சம்கூட களங்கமே காணப்படாமல் காட்சி அளிக்கும் அதனால் தான் சித்ரா பவுர்ணமி சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அதோடு தமிழ்ப்புத்தாண்டில் முதன்முதலாக வரும் முழுநிலவு நாள் என்பதாலும் இதற்குச் சிறப்பு சேர்கிறது.
பண்டைத் தமிழகத்தில் சித்திர புத்திர நயினா ர் நோன்பு மிகப் பிரபலமான ஒன்று அன்று விரதமிருந்து கோயில் சென்று அங்கே கூட்ட மாகவோ, தனியாவோ அமர்ந்து இவரது கதையைப் படிப்பார்கள். அவ்வாறு செய்தால் தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவங்களின் பலன் குறையும் உடல் நலம் சீராக இருக்கும். புண்ணியம் கூடும். வாழ்வில் செல்வம் செழிக்கும் என்பது ஐதிகம்.
இந்த நோன்புக்கு ஒரு புராணக் கதை உண்டு:
பல காலம் முன்பாக முக்திபுரி என்ற ஊரில் கலாவதி என்ற இளம்பெண் வாழ்ந்து வந்தாள். ஒரு நாள் அவள் தன் தோழியரோடு வனத்தின் அழகைக் காணச் சென்றாள். காட்டின் நடுவில் ஒரு சிறு கோயில் இருந்தது. அங்கு சில தேவ கன்னியர் பூஜை செய்து கொண்டிருந்தனர். அதில் ஒருத்தி சித்திரகுப்த நயினாரின் கதையைப் படித்துக் கொண்டிரு ந்தாள். அதிசயமும் ஆச்சரியமும் அடைந்த கலாவதி வெளியில் காத்து நின்றாள். பூஜை முடிந் ததும் தேவகன்னியர் வந்தனர். அவர்க ளில் ஒருத்தி கலாவதியைப் பார்த்துவிட்டு அவள் அருகில் வந்தாள்.
தேவி! நீங்கள் அனைவரும் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? தேவ கன்னியர்களான நீங்கள் யாரை வழிபட்டீர்கள்? என்று பணிவா கக் கேட்டாள். அதற்கு அக்கன்னி, பெண்ணே! இன்று சித்திரா பவுர்ணமி. சித்திர குப்தனின் நாளான இன்று அவரது அவதாரக் கதையைப் படித்து விரதம் இருந்து பூஜிப்பவர்களுக்கு வாழ்வில் செல்வம் செழித்தோங்கும்; நல்ல கணவன், நல்ல குழந்தை என அரிய வாழ்க் கைக் கிடைக்கும். ஆண்கள் இதைச் செய் தால் எண்ணிய காரியங்களில் வெற்றியும், இனிமையான இல்லறமும் வாய்க்கும் என்றாள்.
உடனே கலாவதி அந்த பூஜை முறையை எங்க ளுக்கும் கற்றுத் தந்தருள வேண்டும் என்று வேண்டினாள். அந்த தேவகன்னியும் அவ்வா றே செய்தாள். அது முதல் கலாவதி சித்திர புத்திர நயினார் நோன்பைக் கடைப்பிடித்தாள்.
அதன் பலனாக ஆகமபுரியின் அரசன் வீரசேனனின் மனைவியாகும் பலனைப் பெற்றாள். சித்திரகுப்த நயினார் நோன்பு கடைப்பிடித்த தால் தான் தனக்கு செல்வச் செழிப்பும், புகழும் மிக்க வாழ்வு கிடைத்தது எனக் கருதி அந்த நோன்பை தரணியெங்கும் பரப்பினாள் கலாவதி.
சித்ரா பௌர்ணமியன்று செய்யப்படும் விரிவான பூஜையைப் பற்றி பல நூல்கள் தெரிவித்திருந்தாலும், நாம் எளிமையாக ஒரு கலசம் அல்லது விக்ரகத்தின் தேவதையை ஆவாஹனம் செய்து
சித்ர குப்தம் மஹாப்ராக்ஞம் லேகனீபுத்ர தாரிணம்.
சித்ரா ரத்னாம்பரதாரம் மத்யஸ்தம் ஸர்வ தேஹினாம்
என்ற சித்ரகுப்தனின் ஸ்லோகத்தை தியானம் செய்து தீபம், தூபம் மற்றும் பூக்களால் அர்ச்சிப்பதுடன், நாம் செய்த தவறுகளை மன்னிக்க மனதார பி ரார்த்தனை செய்ய வேண்டும். வாசனைப் பொருள் கலந்த சாதம் நைவேத்தியம் செய்ய வேண்டும். மேலும் இந்த நாளில் உப்பு, பசும்பால், தயிர் இவைகளை நீக்கி நாம் விரதம் இருப்பதுடன் ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்து இறைவனின் பரிபூரண அருளைப் பெறுவோம்.
இந்த வருடம் சித்ரா பௌர்ணமி நாளை வருகிறது. நாளை சித்திரகுப்தரின் படத்திற்கு முன் பேனா, காகிதம் முதலியவற்றை வைத்து மலர்களால்பூஜித்து வணங்கலாம். பானகம், நீர் மோர் போன்றவற்றை நிவேதனமாகப் படைத்து அருந்தலாம்...
ஆனால் சித்ராபவுர்ணமி அன்று நிலவு தனது கிரணங்களை பூரணமாகப் பொழிந்து. கொஞ்சம்கூட களங்கமே காணப்படாமல் காட்சி அளிக்கும் அதனால் தான் சித்ரா பவுர்ணமி சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அதோடு தமிழ்ப்புத்தாண்டில் முதன்முதலாக வரும் முழுநிலவு நாள் என்பதாலும் இதற்குச் சிறப்பு சேர்கிறது.
பண்டைத் தமிழகத்தில் சித்திர புத்திர நயினா ர் நோன்பு மிகப் பிரபலமான ஒன்று அன்று விரதமிருந்து கோயில் சென்று அங்கே கூட்ட மாகவோ, தனியாவோ அமர்ந்து இவரது கதையைப் படிப்பார்கள். அவ்வாறு செய்தால் தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவங்களின் பலன் குறையும் உடல் நலம் சீராக இருக்கும். புண்ணியம் கூடும். வாழ்வில் செல்வம் செழிக்கும் என்பது ஐதிகம்.
இந்த நோன்புக்கு ஒரு புராணக் கதை உண்டு:
பல காலம் முன்பாக முக்திபுரி என்ற ஊரில் கலாவதி என்ற இளம்பெண் வாழ்ந்து வந்தாள். ஒரு நாள் அவள் தன் தோழியரோடு வனத்தின் அழகைக் காணச் சென்றாள். காட்டின் நடுவில் ஒரு சிறு கோயில் இருந்தது. அங்கு சில தேவ கன்னியர் பூஜை செய்து கொண்டிருந்தனர். அதில் ஒருத்தி சித்திரகுப்த நயினாரின் கதையைப் படித்துக் கொண்டிரு ந்தாள். அதிசயமும் ஆச்சரியமும் அடைந்த கலாவதி வெளியில் காத்து நின்றாள். பூஜை முடிந் ததும் தேவகன்னியர் வந்தனர். அவர்க ளில் ஒருத்தி கலாவதியைப் பார்த்துவிட்டு அவள் அருகில் வந்தாள்.
தேவி! நீங்கள் அனைவரும் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? தேவ கன்னியர்களான நீங்கள் யாரை வழிபட்டீர்கள்? என்று பணிவா கக் கேட்டாள். அதற்கு அக்கன்னி, பெண்ணே! இன்று சித்திரா பவுர்ணமி. சித்திர குப்தனின் நாளான இன்று அவரது அவதாரக் கதையைப் படித்து விரதம் இருந்து பூஜிப்பவர்களுக்கு வாழ்வில் செல்வம் செழித்தோங்கும்; நல்ல கணவன், நல்ல குழந்தை என அரிய வாழ்க் கைக் கிடைக்கும். ஆண்கள் இதைச் செய் தால் எண்ணிய காரியங்களில் வெற்றியும், இனிமையான இல்லறமும் வாய்க்கும் என்றாள்.
உடனே கலாவதி அந்த பூஜை முறையை எங்க ளுக்கும் கற்றுத் தந்தருள வேண்டும் என்று வேண்டினாள். அந்த தேவகன்னியும் அவ்வா றே செய்தாள். அது முதல் கலாவதி சித்திர புத்திர நயினார் நோன்பைக் கடைப்பிடித்தாள்.
அதன் பலனாக ஆகமபுரியின் அரசன் வீரசேனனின் மனைவியாகும் பலனைப் பெற்றாள். சித்திரகுப்த நயினார் நோன்பு கடைப்பிடித்த தால் தான் தனக்கு செல்வச் செழிப்பும், புகழும் மிக்க வாழ்வு கிடைத்தது எனக் கருதி அந்த நோன்பை தரணியெங்கும் பரப்பினாள் கலாவதி.
சித்ரா பௌர்ணமியன்று செய்யப்படும் விரிவான பூஜையைப் பற்றி பல நூல்கள் தெரிவித்திருந்தாலும், நாம் எளிமையாக ஒரு கலசம் அல்லது விக்ரகத்தின் தேவதையை ஆவாஹனம் செய்து
சித்ர குப்தம் மஹாப்ராக்ஞம் லேகனீபுத்ர தாரிணம்.
சித்ரா ரத்னாம்பரதாரம் மத்யஸ்தம் ஸர்வ தேஹினாம்
என்ற சித்ரகுப்தனின் ஸ்லோகத்தை தியானம் செய்து தீபம், தூபம் மற்றும் பூக்களால் அர்ச்சிப்பதுடன், நாம் செய்த தவறுகளை மன்னிக்க மனதார பி ரார்த்தனை செய்ய வேண்டும். வாசனைப் பொருள் கலந்த சாதம் நைவேத்தியம் செய்ய வேண்டும். மேலும் இந்த நாளில் உப்பு, பசும்பால், தயிர் இவைகளை நீக்கி நாம் விரதம் இருப்பதுடன் ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்து இறைவனின் பரிபூரண அருளைப் பெறுவோம்.
இந்த வருடம் சித்ரா பௌர்ணமி நாளை வருகிறது. நாளை சித்திரகுப்தரின் படத்திற்கு முன் பேனா, காகிதம் முதலியவற்றை வைத்து மலர்களால்பூஜித்து வணங்கலாம். பானகம், நீர் மோர் போன்றவற்றை நிவேதனமாகப் படைத்து அருந்தலாம்...
திருக்கல்யாணத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன. பக்தர்கள் அனைவருக்கும் குடிநீர் பாட்டில் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
மதுரை:
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா உலக பிரசித்திபெற்றது. 12 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின்போது தினமும் காலை மற்றும் மாலையில் மாசி வீதிகளில் சுவாமி வீதி உலா நடைபெறும்.
சித்திரை திருவிழாவில் பங்கேற்க மதுரை மாவட்ட மக்கள் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் வருவார்கள். இதனால் மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டிருக்கும். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மதுரை சித்திரை திருவிழா பக்தர்கள் பங்கேற்பின்றி நடந்தது.
இதனால் கடந்த 2 ஆண்டுகளும் மதுரை சித்திரை திருவிழாகளை இழந்தது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 2 ஆண்டுகளுக்கு பிறகு சித்திரை திருவிழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சித்திரை திருவிழா தொடங்கியதிலிருந்து காலை மற்றும் மாலையில் மாசி வீதிகளில் நடந்த சுவாமி வீதி உலாவில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நேற்று முன்தினம் இரவு நடந்தது.
அப்போது மதுரையின் அரசியாக மீனாட்சிக்கு பட்டம் சூட்டப்பட்டது. அதனைத்தொடர்ந்து மீனாட்சி அம்மன் பட்டத்தரசியாக போரில் தேவர்களை வென்று, இறுதியில் சுந்தரேசுவரரிடம் போர் புரியும் திக்குவிஜயம் நிகழ்ச்சி நேற்று இரவு நடந்தது.
அதனைத் தொடர்ந்து திருக்கல்யாண விழா தொடங்கி மாப்பிள்ளை அழைப்பு நடந்தது. அப்போது சுந்தரேசுவரருக்கு கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் சார்பில் ஏராளமான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன. இந்தநிலையில் இன்று காலை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடந்தது.
கோவிலில் உள்ள வடக்குமேற்கு ஆடி வீதியில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் திருக்கல்யாணம் நடைபெற்றது. முன்னதாக அதிகாலை 4 மணி அளவில் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் வெள்ளி சிம்மாசனத்தில் சித்திரை வீதிகளில் வலம் வந்தனர். அப்போது அம்மன் சிவப்பு நிறத்தில் பட்டாடை உடுத்தி இருந்தார்.
ஊட்டி, பெங்களூரு மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்ட ரூ. 25 லட்சம் செலவில் 10 டன் வண்ணவண்ண மலர்களால் திருமண மேடை அலங்கரிக்கப்பட்டு இருந்தது. திருமண மேடையில் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை மற்றும் பவளக்கனிவாய் பெருமாள் ஆகியோர் தயாராக இருந்தனர்.
இதனைத் தொடர்ந்து சுவாமி முத்துராமய்யர் மண்டபத்தில் கன்னி ஊஞ்சல் ஆடி திருக்கல்யாண மணமேடையில் எழுந்தருளினார். இதையடுத்து 10:35 மணிக்கு மேல் 10:59 மணிக்குள் மிதுன லக்கினத்தில் மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெற்றது. திருக்கல்யாணம் முடிந்ததும் மீனாட்சி அம்மனும், சுவாமியும் திருக்கல்யாண கோலத்தில் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
திருக்கல்யாணத்தில் பக்தர்கள் பங்கேற்க பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதன்படி ரூ.500 கட்டணச் சீட்டில் 2,500 பேர், ரூ.200 கட்டண சீட்டில் 3,500 பேர் என 6 ஆயிரம் பேர் கட்டண அடிப்படையிலும், 6ஆயிரம் பக்தர்கள் இலவச அனுமதி அடிப்படையிலும் திருக்கல்யாணத்தில் பங்கேற்றனர்.
மொத்தம் 12 ஆயிரம் பக்தர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள், அதிகாரிகள் 3000 பேர் என மொத்தம் 15 ஆயிரம் பேர் திருக்கல்யாணத்தில் கலந்துகொண்டனர். திருக்கல்யாணத்தில் பங்கேற்பதற்காக பக்தர்கள் அதிகாலையிலேயே கோவிலில் திரண்டனர். அவர்கள் காலை 7 மணிமுதல் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
இலவச அனுமதி பெற்றவர்கள் தெற்கு கோபுரம் வழியாகவும், முக்கிய பிரமுகர்கள் உபயதாரர்கள், கட்டளைதாரர்கள் மற்றும் கட்டண சீட்டு வாங்கியவர்கள் மேற்கு கோபுரம் வழியாகவும் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் அதிகாலையில் இருந்தே நீண்ட வரிசையில் காத்து நின்று கோவிலுக்குள் சென்றனர்.
திருக்கல்யாணத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன. பக்தர்கள் அனைவருக்கும் குடிநீர் பாட்டில் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
மேலும் திருக்கல்யாணத்தை பக்தர்கள் தெளிவாக பார்க்கும் வகையில் கோவில் வளாகம் மற்றும் மாசி வீதிகளில் 20 இடங்களில் பிரமாண்ட கணினி திரைகள் அமைக்கப்பட்டிருந்தன. அதன் மூலமாகவும் திருக்கல்யாணத்தை பக்தர்கள் கண்டு ரசித்தனர்.
திருக்கல்யாணத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சுமார் 3,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் கோவில் வளாகம் மாசி வீதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கண்காணிக்கும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
திருக்கல்யாணத்தில் பங்கேற்பதற்கான அனுமதிச் சீட்டு பெற்றவர்கள் மட்டுமே அங்கு அனுமதிக்கப்பட்டனர். திருக்கல்யாணத்திற்கு வரும் பக்தர்களுக்கு மதுரை சேதுபதி பள்ளியில் திருக்கல்யாண விருந்து வழங்கப்பட்டது. அதிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மதுரை சித்திரை திருவிழாவில் நாளை தேரோட்டம் நடைபெறுகிறது சுந்தரேசுவரர் பிரியாவிடையுடன் பெரிய தேரிலும், மீனாட்சி அம்மன் சிறிய தேரிலும் எழுந்தருளுகின்றனர். காலை 6:30 மணி தேரோட்டம் நடைபெறுகிறது.
மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் நாளை மறுநாள் நடைபெறுகிறது. இதற்காக அழகர் மலையிலிருந்து அழகர் இன்று மாலை மதுரைக்கு புறப்படுகிறார். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அனுமதி வழங்கப்பட்டு இருப்பதால் தேரோட்டம் மற்றும் மற்றும் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதற்கும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா உலக பிரசித்திபெற்றது. 12 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின்போது தினமும் காலை மற்றும் மாலையில் மாசி வீதிகளில் சுவாமி வீதி உலா நடைபெறும்.
சித்திரை திருவிழாவில் பங்கேற்க மதுரை மாவட்ட மக்கள் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் வருவார்கள். இதனால் மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டிருக்கும். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மதுரை சித்திரை திருவிழா பக்தர்கள் பங்கேற்பின்றி நடந்தது.
இதனால் கடந்த 2 ஆண்டுகளும் மதுரை சித்திரை திருவிழாகளை இழந்தது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 2 ஆண்டுகளுக்கு பிறகு சித்திரை திருவிழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சித்திரை திருவிழா தொடங்கியதிலிருந்து காலை மற்றும் மாலையில் மாசி வீதிகளில் நடந்த சுவாமி வீதி உலாவில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நேற்று முன்தினம் இரவு நடந்தது.
அப்போது மதுரையின் அரசியாக மீனாட்சிக்கு பட்டம் சூட்டப்பட்டது. அதனைத்தொடர்ந்து மீனாட்சி அம்மன் பட்டத்தரசியாக போரில் தேவர்களை வென்று, இறுதியில் சுந்தரேசுவரரிடம் போர் புரியும் திக்குவிஜயம் நிகழ்ச்சி நேற்று இரவு நடந்தது.
அதனைத் தொடர்ந்து திருக்கல்யாண விழா தொடங்கி மாப்பிள்ளை அழைப்பு நடந்தது. அப்போது சுந்தரேசுவரருக்கு கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் சார்பில் ஏராளமான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன. இந்தநிலையில் இன்று காலை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடந்தது.
கோவிலில் உள்ள வடக்குமேற்கு ஆடி வீதியில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் திருக்கல்யாணம் நடைபெற்றது. முன்னதாக அதிகாலை 4 மணி அளவில் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் வெள்ளி சிம்மாசனத்தில் சித்திரை வீதிகளில் வலம் வந்தனர். அப்போது அம்மன் சிவப்பு நிறத்தில் பட்டாடை உடுத்தி இருந்தார்.
ஊட்டி, பெங்களூரு மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்ட ரூ. 25 லட்சம் செலவில் 10 டன் வண்ணவண்ண மலர்களால் திருமண மேடை அலங்கரிக்கப்பட்டு இருந்தது. திருமண மேடையில் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை மற்றும் பவளக்கனிவாய் பெருமாள் ஆகியோர் தயாராக இருந்தனர்.
இதனைத் தொடர்ந்து சுவாமி முத்துராமய்யர் மண்டபத்தில் கன்னி ஊஞ்சல் ஆடி திருக்கல்யாண மணமேடையில் எழுந்தருளினார். இதையடுத்து 10:35 மணிக்கு மேல் 10:59 மணிக்குள் மிதுன லக்கினத்தில் மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெற்றது. திருக்கல்யாணம் முடிந்ததும் மீனாட்சி அம்மனும், சுவாமியும் திருக்கல்யாண கோலத்தில் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
திருக்கல்யாணத்தில் பக்தர்கள் பங்கேற்க பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதன்படி ரூ.500 கட்டணச் சீட்டில் 2,500 பேர், ரூ.200 கட்டண சீட்டில் 3,500 பேர் என 6 ஆயிரம் பேர் கட்டண அடிப்படையிலும், 6ஆயிரம் பக்தர்கள் இலவச அனுமதி அடிப்படையிலும் திருக்கல்யாணத்தில் பங்கேற்றனர்.
மொத்தம் 12 ஆயிரம் பக்தர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள், அதிகாரிகள் 3000 பேர் என மொத்தம் 15 ஆயிரம் பேர் திருக்கல்யாணத்தில் கலந்துகொண்டனர். திருக்கல்யாணத்தில் பங்கேற்பதற்காக பக்தர்கள் அதிகாலையிலேயே கோவிலில் திரண்டனர். அவர்கள் காலை 7 மணிமுதல் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
இலவச அனுமதி பெற்றவர்கள் தெற்கு கோபுரம் வழியாகவும், முக்கிய பிரமுகர்கள் உபயதாரர்கள், கட்டளைதாரர்கள் மற்றும் கட்டண சீட்டு வாங்கியவர்கள் மேற்கு கோபுரம் வழியாகவும் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் அதிகாலையில் இருந்தே நீண்ட வரிசையில் காத்து நின்று கோவிலுக்குள் சென்றனர்.
திருக்கல்யாணத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன. பக்தர்கள் அனைவருக்கும் குடிநீர் பாட்டில் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
மேலும் திருக்கல்யாணத்தை பக்தர்கள் தெளிவாக பார்க்கும் வகையில் கோவில் வளாகம் மற்றும் மாசி வீதிகளில் 20 இடங்களில் பிரமாண்ட கணினி திரைகள் அமைக்கப்பட்டிருந்தன. அதன் மூலமாகவும் திருக்கல்யாணத்தை பக்தர்கள் கண்டு ரசித்தனர்.
திருக்கல்யாணத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சுமார் 3,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் கோவில் வளாகம் மாசி வீதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கண்காணிக்கும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
திருக்கல்யாணத்தில் பங்கேற்பதற்கான அனுமதிச் சீட்டு பெற்றவர்கள் மட்டுமே அங்கு அனுமதிக்கப்பட்டனர். திருக்கல்யாணத்திற்கு வரும் பக்தர்களுக்கு மதுரை சேதுபதி பள்ளியில் திருக்கல்யாண விருந்து வழங்கப்பட்டது. அதிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மதுரை சித்திரை திருவிழாவில் நாளை தேரோட்டம் நடைபெறுகிறது சுந்தரேசுவரர் பிரியாவிடையுடன் பெரிய தேரிலும், மீனாட்சி அம்மன் சிறிய தேரிலும் எழுந்தருளுகின்றனர். காலை 6:30 மணி தேரோட்டம் நடைபெறுகிறது.
மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் நாளை மறுநாள் நடைபெறுகிறது. இதற்காக அழகர் மலையிலிருந்து அழகர் இன்று மாலை மதுரைக்கு புறப்படுகிறார். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அனுமதி வழங்கப்பட்டு இருப்பதால் தேரோட்டம் மற்றும் மற்றும் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதற்கும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.






