என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஆராட்டு விழா
Byமாலை மலர்16 April 2022 3:24 AM GMT (Updated: 16 April 2022 3:24 AM GMT)
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் பங்குனி திருவிழாவையொட்டி தங்க ஆபரணங்கள், மலர் மாலைகளுடன் கருட வாகனத்தில் ஆதிகேசவ பெருமாள், கிருஷ்ணசாமி ஆகியோர் எழுந்தருளினர்.
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் பங்குனி திருவிழா கடந்த 6-ந் தேதி தொடங்கியது. விழா நாட்களில் சிறப்பு பூஜைகள், சாமி நாற்காலி, பல்லக்கு வாகனங்களில் எழுந்தருளல், கதகளி போன்றவை நடந்தது. நேற்று முன்தினம் சாமி பள்ளி வேட்டைக்கு எழுந்தருளல் நடந்தது.
விழாவில் நேற்று ஆராட்டு விழா நடந்தது. இதையொட்டி இரவில் தங்க ஆபரணங்கள், மலர் மாலைகளுடன் கருட வாகனத்தில் ஆதிகேசவ பெருமாள், கிருஷ்ணசாமி ஆகியோர் எழுந்தருளினர். சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் கிழக்கு வாசல் வழியாக ஆராட்டு ஊர்வலம் தொடங்கியது.
திருவிதாங்கூர் மன்னரின் பிரதிநிதி உடை வாளுடன் முன் செல்ல மேளதாளம் முழங்க சாமி ஊர்வலம் புறப்பட்டது. அப்போது துப்பாக்கி ஏந்திய ஆயுதப்படை போலீசார் மரியாதை செய்தனர்.
மேலும் ஊர்வலத்துக்கு வழிநெடுக பக்தர்கள் வரவேற்பு அளித்தனர். ஊர்வலம் கழுவன்திட்டை, தோட்டவாரம் வழியாக மூவாற்றுமுகம் ஆற்றை அடைந்தது. அங்கு ஆராட்டு விழா நடந்தது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும், பக்தர்களும் இணைந்து செய்திருந்தனர்.
விழாவில் நேற்று ஆராட்டு விழா நடந்தது. இதையொட்டி இரவில் தங்க ஆபரணங்கள், மலர் மாலைகளுடன் கருட வாகனத்தில் ஆதிகேசவ பெருமாள், கிருஷ்ணசாமி ஆகியோர் எழுந்தருளினர். சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் கிழக்கு வாசல் வழியாக ஆராட்டு ஊர்வலம் தொடங்கியது.
திருவிதாங்கூர் மன்னரின் பிரதிநிதி உடை வாளுடன் முன் செல்ல மேளதாளம் முழங்க சாமி ஊர்வலம் புறப்பட்டது. அப்போது துப்பாக்கி ஏந்திய ஆயுதப்படை போலீசார் மரியாதை செய்தனர்.
மேலும் ஊர்வலத்துக்கு வழிநெடுக பக்தர்கள் வரவேற்பு அளித்தனர். ஊர்வலம் கழுவன்திட்டை, தோட்டவாரம் வழியாக மூவாற்றுமுகம் ஆற்றை அடைந்தது. அங்கு ஆராட்டு விழா நடந்தது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும், பக்தர்களும் இணைந்து செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X