
இதையொட்டி தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள், உற்சவங்கள் நடைபெறுகின்றன. வருகிற 18-ந்தேதி கருடசேவை உற்சவம் நடக்கிறது. 20-ந்தேதி நாச்சியார் கோலத்தில் பல்லக்கு சேவை நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 22-ந்தேதி நடக்கிறது. அன்று காலையில் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க இருக்கிறார்கள். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.
23-ந்தேதி வெண்ணை தாழி கண்ணன் கோலத்தில் பல்லக்கு சேவை நடைபெறுகிறது. 24-ந்தேதி காலை 11 மணிக்கு தீர்த்தவாரி உற்சவம் நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு கண்ணாடி பல்லக்கு சேவை நடைபெறுகிறது. 25-ந்தேதி கொடி இறக்கத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது.