என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
நிறத்தால், மொழியால், பிறப்பால் உயர்வு-தாழ்வு கற்பித்தல், ஆளுக்கொரு நீதி, தாமதிக்கும் நீதி போன்றவை தான் அமைதி குலைக்கும் முக்கிய காரணிகள்.
உலகம் முழுவதும் அமைதி நிலவ வேண்டுமென நம் ஒவ்வொருவரின் உள்ளமும் எதிர்பார்க்கிறது, ஏங்குகிறது. உலக அமைதியை குலைக்கும் காரணிகளை ஒழித்தால் மட்டுமே உலகம் அமைதி பெற வாய்ப்புள்ளது.
நிறத்தால், மொழியால், பிறப்பால் உயர்வு-தாழ்வு கற்பித்தல், ஆளுக்கொரு நீதி, தாமதிக்கும் நீதி போன்றவை தான் அமைதி குலைக்கும் முக்கிய காரணிகள்.
நிறம்
ஒருவரின் தோலின் நிறம் வெள்ளையாக இருப்பதால் அவர் உயர்ந்தவர் அல்லர், கருப்பாக இருப்பதால் அவர் தாழ்ந்தவர் அல்லர். நிறம் நமது தேர்வு அல்ல. ஒரு குடும்பத்தில் பிறக்கும் சகோதரர்களிடமே நிறத்தால் வேறுபாடு இருப்பது உண்டு. தாயின் நிறம் தந்தையின் நிறம் இன்னும் மூதாதையர்களின் நிறம் கூட ஒரு குழந்தையின் நிறத்தை நிர்ணயிக்கவல்லது.
இறைவனுடைய அத்தாட்சிகளில் இவையும் ஒன்று என்று திருகுர்ஆன் இவ்வாறு கூறுகின்றது:
வானங்கள் மற்றும் பூமியைப் படைத்திருப்பதும், உங்கள் மொழிகளும், உங்கள் நிறங்களும் மாறுபட்டிருப்பதும் அவனுடைய சான்றுகளில் உள்ளவையே. திண்ணமாக, இவற்றிலெல்லாம் அறிவுடையோருக்கு நிறையச் சான்றுகள் உள்ளன. (திருக்குர்ஆன் 30:22)
மொழி
ஒருவர் தன் மொழியை நேசிப்பது, மதிப்பது இயல்பான விஷயம் தான். அதில் தவறு ஏதும் இல்லை. ஆனால் தன் மொழி மட்டும் தான் சிறந்தது, மற்ற மொழிகள் தாழ்வானவை என்ற எண்ணம் தான் தவறானது.
நபிகள் நாயகம் அவர்கள் தமது இறுதி ஹஜ்ஜி உரையில் கூறினார்கள், “ஒரு அரபி, அரபிஅல்லாதவரை விடவோ, உயர்ந்தவரோ, தாழ்ந்தவரோ அல்லர், வெள்ளையர் கருப்பரை விடவோ, கருப்பர் வெள்ளையரை விடவோ உயர்ந்தவரோ, தாழ்ந்தவரோ அல்லர்”.
மொழியாலும் நிறத்தாலும் பெருமை பேசி கொண்டிருந்த மக்களை தம் 23 ஆண்டு கால பிரச்சாரத்தின் மூலம் உயர்வு தாழ்வற்ற சமுதாயத்தை நபிகள் நாயகம் அவர்கள் உருவாக்கினார்கள்.
பிறப்பு
தான் பிறந்த இனம், குலம் உயர்ந்தது என்று ஒரு மாயை உலக அளவில் பல இடங்களில் காண முடிகிறது. இந்த மாயையை உடைத்தெறியவும் சர்வதேச சகோதரத்துவத்தை நிலைநாட்ட இறைமறையின் வசனம் கூறுவதைக் காண்போம்.
“மனிதர்களே! நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்ளும் பொருட்டு உங்களை சமூகங்களாகவும், கோத்திரங்களாகவும் அமைத்தோம். உண்மையில், உங்கள் இறைவனிடம் அதிக கண்ணியம் வாய்ந்தவர் உங்களில் அதிக இறையச்சம் கொண்டவர்கள்தாம். திண்ணமாக, அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவனாகவும், தெரிந்தவனாகவும் இருக்கின்றான். (திருக்குர்ஆன் 49:13)
உயர்ந்தவர் யாரென்றால், இறையச்சம் உடையவரே! என்று இறைவன் கூறுகின்றான். அவர் எந்த நாட்டை, மொழியை, இனத்தை, குலத்தைச் சார்ந்தவராயினும் சரியே. எனவே, எவரும் உயர்ந்தவராகலாம், இறையச்சம் உடையவராய்த் திகழ்வதன் மூலமாக என்று இறைவன் தெளிவு படுத்துகின்றான்.
ஆளுக்கொரு நீதி
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஒரு பெண்மணி திருடிவிட்டாள். அவளுக்கு தண்டனை கொடுத்தால் உயர் குலத்தைச் சார்ந்தவராக கருதப்படக்கூடிய அந்த குலத்தாருக்கே அவமானம் என்பதால், அவளுக்கு தண்டனையிலிருந்து விலக்கு அளிக்க வேண்டுமென தூது அனுப்பினார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிகுந்த கோபம் கொண்டவர்களாக கூறினார்கள், “உயர்ந்தவர்களுக்கு ஒரு நீதி, தாழ்ந்தவர்களுக்கு ஒரு நீதி என்று நடந்து கொண்டதால்தான் முன் சென்ற சமுதாயங்கள் அழிந்து போயின. எனவே, அப்படிப்பட்ட தவறைச் செய்வதற்கு நான் ஒரு போதும் அனுமதிக்க மாட்டேன். என்னுடைய மகள் பாத்திமா திருடியிருந்தாலும் அவளது கரங்களைத் துண்டிப்பேன்” என்று கூறி, ஆளுக்கொரு நீதி என்ற அநீதியைத் தடுத்தார்கள் என்பதை வரலாறு நிரூபிக்கிறது.
தாமதிக்கும் நீதி
ஒரு தவறு நடந்தால், தீமை நடந்தால் அதை விசாரித்து சாட்சியங்களைக் கொண்டு நிரூபித்துவிட்டு மிக விரைவாக உரிய தண்டனை வழங்கப்பட்டால்தான் தீமைகளைக் களைய முடியும். தவறுகள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க முடியும்.
இவ்வாறாக நிற, மொழி பாகுபாட்டைக் களைந்து பிறப்பால் அனைவரும் சமமானவர்கள் நாம் அனைவரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் என்ற உயர் கொள்கைகளை நிலை நிறுத்தி அனைவருக்கும் சமநீதி மற்றும் உரிய நேரத்தில் விரைவான நீதியை வழங்கும் போது உலக அமைதி சாத்தியமாகும்.
பி. சையத் இப்ராகீம், சென்னை.
நிறத்தால், மொழியால், பிறப்பால் உயர்வு-தாழ்வு கற்பித்தல், ஆளுக்கொரு நீதி, தாமதிக்கும் நீதி போன்றவை தான் அமைதி குலைக்கும் முக்கிய காரணிகள்.
நிறம்
ஒருவரின் தோலின் நிறம் வெள்ளையாக இருப்பதால் அவர் உயர்ந்தவர் அல்லர், கருப்பாக இருப்பதால் அவர் தாழ்ந்தவர் அல்லர். நிறம் நமது தேர்வு அல்ல. ஒரு குடும்பத்தில் பிறக்கும் சகோதரர்களிடமே நிறத்தால் வேறுபாடு இருப்பது உண்டு. தாயின் நிறம் தந்தையின் நிறம் இன்னும் மூதாதையர்களின் நிறம் கூட ஒரு குழந்தையின் நிறத்தை நிர்ணயிக்கவல்லது.
இறைவனுடைய அத்தாட்சிகளில் இவையும் ஒன்று என்று திருகுர்ஆன் இவ்வாறு கூறுகின்றது:
வானங்கள் மற்றும் பூமியைப் படைத்திருப்பதும், உங்கள் மொழிகளும், உங்கள் நிறங்களும் மாறுபட்டிருப்பதும் அவனுடைய சான்றுகளில் உள்ளவையே. திண்ணமாக, இவற்றிலெல்லாம் அறிவுடையோருக்கு நிறையச் சான்றுகள் உள்ளன. (திருக்குர்ஆன் 30:22)
மொழி
ஒருவர் தன் மொழியை நேசிப்பது, மதிப்பது இயல்பான விஷயம் தான். அதில் தவறு ஏதும் இல்லை. ஆனால் தன் மொழி மட்டும் தான் சிறந்தது, மற்ற மொழிகள் தாழ்வானவை என்ற எண்ணம் தான் தவறானது.
நபிகள் நாயகம் அவர்கள் தமது இறுதி ஹஜ்ஜி உரையில் கூறினார்கள், “ஒரு அரபி, அரபிஅல்லாதவரை விடவோ, உயர்ந்தவரோ, தாழ்ந்தவரோ அல்லர், வெள்ளையர் கருப்பரை விடவோ, கருப்பர் வெள்ளையரை விடவோ உயர்ந்தவரோ, தாழ்ந்தவரோ அல்லர்”.
மொழியாலும் நிறத்தாலும் பெருமை பேசி கொண்டிருந்த மக்களை தம் 23 ஆண்டு கால பிரச்சாரத்தின் மூலம் உயர்வு தாழ்வற்ற சமுதாயத்தை நபிகள் நாயகம் அவர்கள் உருவாக்கினார்கள்.
பிறப்பு
தான் பிறந்த இனம், குலம் உயர்ந்தது என்று ஒரு மாயை உலக அளவில் பல இடங்களில் காண முடிகிறது. இந்த மாயையை உடைத்தெறியவும் சர்வதேச சகோதரத்துவத்தை நிலைநாட்ட இறைமறையின் வசனம் கூறுவதைக் காண்போம்.
“மனிதர்களே! நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்ளும் பொருட்டு உங்களை சமூகங்களாகவும், கோத்திரங்களாகவும் அமைத்தோம். உண்மையில், உங்கள் இறைவனிடம் அதிக கண்ணியம் வாய்ந்தவர் உங்களில் அதிக இறையச்சம் கொண்டவர்கள்தாம். திண்ணமாக, அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவனாகவும், தெரிந்தவனாகவும் இருக்கின்றான். (திருக்குர்ஆன் 49:13)
உயர்ந்தவர் யாரென்றால், இறையச்சம் உடையவரே! என்று இறைவன் கூறுகின்றான். அவர் எந்த நாட்டை, மொழியை, இனத்தை, குலத்தைச் சார்ந்தவராயினும் சரியே. எனவே, எவரும் உயர்ந்தவராகலாம், இறையச்சம் உடையவராய்த் திகழ்வதன் மூலமாக என்று இறைவன் தெளிவு படுத்துகின்றான்.
ஆளுக்கொரு நீதி
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஒரு பெண்மணி திருடிவிட்டாள். அவளுக்கு தண்டனை கொடுத்தால் உயர் குலத்தைச் சார்ந்தவராக கருதப்படக்கூடிய அந்த குலத்தாருக்கே அவமானம் என்பதால், அவளுக்கு தண்டனையிலிருந்து விலக்கு அளிக்க வேண்டுமென தூது அனுப்பினார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிகுந்த கோபம் கொண்டவர்களாக கூறினார்கள், “உயர்ந்தவர்களுக்கு ஒரு நீதி, தாழ்ந்தவர்களுக்கு ஒரு நீதி என்று நடந்து கொண்டதால்தான் முன் சென்ற சமுதாயங்கள் அழிந்து போயின. எனவே, அப்படிப்பட்ட தவறைச் செய்வதற்கு நான் ஒரு போதும் அனுமதிக்க மாட்டேன். என்னுடைய மகள் பாத்திமா திருடியிருந்தாலும் அவளது கரங்களைத் துண்டிப்பேன்” என்று கூறி, ஆளுக்கொரு நீதி என்ற அநீதியைத் தடுத்தார்கள் என்பதை வரலாறு நிரூபிக்கிறது.
தாமதிக்கும் நீதி
ஒரு தவறு நடந்தால், தீமை நடந்தால் அதை விசாரித்து சாட்சியங்களைக் கொண்டு நிரூபித்துவிட்டு மிக விரைவாக உரிய தண்டனை வழங்கப்பட்டால்தான் தீமைகளைக் களைய முடியும். தவறுகள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க முடியும்.
இவ்வாறாக நிற, மொழி பாகுபாட்டைக் களைந்து பிறப்பால் அனைவரும் சமமானவர்கள் நாம் அனைவரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் என்ற உயர் கொள்கைகளை நிலை நிறுத்தி அனைவருக்கும் சமநீதி மற்றும் உரிய நேரத்தில் விரைவான நீதியை வழங்கும் போது உலக அமைதி சாத்தியமாகும்.
பி. சையத் இப்ராகீம், சென்னை.
குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா நடைபெறும் 12 நாட்களிலும் வருகிற 7, 11, 12, 13, 14 ஆகிய தேதிகளில் மட்டுமே பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் உள்ளமுத்தாரம்மன் கோவில் இந்த ஆண்டுக்கான தசரா திருவிழா நாளை (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு கோவில் முன்புள்ள கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
தொடர்ந்து கொடிமரத்திற்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. தொடர்ந்து 12 நாட்கள் திருவிழா நடக்கிறது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 10-ம் திருவிழாவான வருகிற 15-ந் தேதி நள்ளிரவில் நடக்கிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டும் சூரசம்ஹாரம் கடற்கரைக்கு பதிலாக கோவில் முன்பு நடைபெறுகிறது.
இதை காண்பதற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. திருவிழா நடைபெறும் 12 நாட்களிலும் வருகிற 7, 11, 12, 13, 14 ஆகிய தேதிகளில் மட்டுமே பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் கடற்கரை மற்றும் கோவிலை சுற்றி எந்த விதமான கலை நிகழ்ச்சிகள், தற்காலிக கடைகள் வைக்கக்கூடாது.
மேளதாளங்களுடன் தசரா பக்தர்கள் கோவிலுக்குள் வரக்கூடாது. தேங்காய், பழம், பூ போன்ற அர்ச்சனை பொருட்களை கொண்டு வரக்கூடாது. பக்தர்கள் முககவசம் அணிவதுடன் சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
தொடர்ந்து கொடிமரத்திற்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. தொடர்ந்து 12 நாட்கள் திருவிழா நடக்கிறது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 10-ம் திருவிழாவான வருகிற 15-ந் தேதி நள்ளிரவில் நடக்கிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டும் சூரசம்ஹாரம் கடற்கரைக்கு பதிலாக கோவில் முன்பு நடைபெறுகிறது.
இதை காண்பதற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. திருவிழா நடைபெறும் 12 நாட்களிலும் வருகிற 7, 11, 12, 13, 14 ஆகிய தேதிகளில் மட்டுமே பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் கடற்கரை மற்றும் கோவிலை சுற்றி எந்த விதமான கலை நிகழ்ச்சிகள், தற்காலிக கடைகள் வைக்கக்கூடாது.
மேளதாளங்களுடன் தசரா பக்தர்கள் கோவிலுக்குள் வரக்கூடாது. தேங்காய், பழம், பூ போன்ற அர்ச்சனை பொருட்களை கொண்டு வரக்கூடாது. பக்தர்கள் முககவசம் அணிவதுடன் சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
புரட்டாசி மாதத்தில் விரதம் இருந்து பெருமாளுக்கு அக்கார வடிசல் செய்து வணங்கினால் பெருமாளிடம், நாம் என்ன கேட்டாலும் கிடைக்கும்.
‘‘மாதவா, என் மனதுக்கு பிடித்த அரங்கனே எனக்கு மணவாளனாக வந்தால் நூறு அண்டா வெண்ணெயும், நூறு அண்டா அக்காரவடிசலும் உனக்கு நிவேதனமாகத் தருகிறேன்...’’ திருமாலிருஞ்சோலை அழகரிடம் ஆண்டாள் இப்படி வேண்டிக் கொண்டாள். அவள் மனம் போலவே அரங்கன் அவளுக்கு மாலை சூடி தன்னுடன் ஐக்கியம் செய்துகொண்டார்.
ஆண்டாள், தான் வேண்டியபடி நூறு அண்டா வெண்ணெயும், நூறு அண்டா அக்காரவடிசலும் பகவானுக்குக் கொடுத்தாளா, இல்லையா...? சுமார் முந்நூறு ஆண்டுகளுக்குப் பிறகு இப்படி ஒரு சந்தேகம் ராமானுஜருக்கு வந்தது. உடனே அந்த மகான் என்ன செய்தார் தெரியுமா? நூறு அண்டா வெண்ணெயும், நூறு அண்டா அக்காரவடிசலும் நிவேதனம் செய்து அழகரை ஆராதனை செய்தார். ஆண்டாளின் வேண்டுதலை தானே நிறைவேற்றினார்.
அதனால், ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அவர் வந்தபோது, வாசலுக்கே ஓடிவந்து, வாருங்கள் அண்ணா...! என்று கூப்பிட்டாளாம் ஆண்டாள். இன்றும் ஸ்ரீவில்லிபுத்தூரில் வருடத்துக்கு ஒருமுறை இந்த சம்பவத்தை உற்சவமாக கொண்டாடுகிறார்கள். அன்று அக்காரவடிசல் பிரசாதமும் உண்டு.
அக்காரை என்றால் சர்க்கரை. வடிசல் என்பது குழைய வெந்த சாதம். பார்க்க சர்க்கரைப் பொங்கல் போல இருந்தாலும் சர்க்கரைப் பொங்கலுக்கும் இதற்கும் நிறையவே வித்தியாசம் உண்டு. புரட்டாசி மாதத்தில் விரதம் இருந்து பெருமாளுக்கு அக்கார வடிசல் செய்து வணங்கினால் பெருமாளிடம், நாம் என்ன கேட்டாலும் கிடைக்கும்.
ஆண்டாள், தான் வேண்டியபடி நூறு அண்டா வெண்ணெயும், நூறு அண்டா அக்காரவடிசலும் பகவானுக்குக் கொடுத்தாளா, இல்லையா...? சுமார் முந்நூறு ஆண்டுகளுக்குப் பிறகு இப்படி ஒரு சந்தேகம் ராமானுஜருக்கு வந்தது. உடனே அந்த மகான் என்ன செய்தார் தெரியுமா? நூறு அண்டா வெண்ணெயும், நூறு அண்டா அக்காரவடிசலும் நிவேதனம் செய்து அழகரை ஆராதனை செய்தார். ஆண்டாளின் வேண்டுதலை தானே நிறைவேற்றினார்.
அதனால், ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அவர் வந்தபோது, வாசலுக்கே ஓடிவந்து, வாருங்கள் அண்ணா...! என்று கூப்பிட்டாளாம் ஆண்டாள். இன்றும் ஸ்ரீவில்லிபுத்தூரில் வருடத்துக்கு ஒருமுறை இந்த சம்பவத்தை உற்சவமாக கொண்டாடுகிறார்கள். அன்று அக்காரவடிசல் பிரசாதமும் உண்டு.
அக்காரை என்றால் சர்க்கரை. வடிசல் என்பது குழைய வெந்த சாதம். பார்க்க சர்க்கரைப் பொங்கல் போல இருந்தாலும் சர்க்கரைப் பொங்கலுக்கும் இதற்கும் நிறையவே வித்தியாசம் உண்டு. புரட்டாசி மாதத்தில் விரதம் இருந்து பெருமாளுக்கு அக்கார வடிசல் செய்து வணங்கினால் பெருமாளிடம், நாம் என்ன கேட்டாலும் கிடைக்கும்.
ஐப்பசி மாத பூஜையையொட்டி, சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது. தினமும் 15 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஐப்பசி மாத பூஜைக்காக வருகிற 16-ந்தேதி (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடையை திறந்து வைக்கிறார். 17-ந் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். அன்றைய தினம் காலையில் புதிய மேல்சாந்திகள் குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தொடர்ந்து 21-ந் தேதி வரை பூஜைகள் நடைபெறும்.
இந்தநாட்களில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், உஷபூஜை, உச்ச பூஜைக்கு பின்பு மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படும். பின்னர் மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு 6 மணிக்கு தீபாராதனை, அபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும்.
கொரோனா கட்டுப்பாடு தளர்வு காரணமாக தினசரி 15 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் முன் பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்கான ஆன்லைன் முன் பதிவு நேற்று காலை முதல் தொடங்கியது.
தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். நெகட்டிவ் சான்றிதழ் அல்லது கொரோனா தடுப்பூசி 2 டோஸ் போட்டதற்கான சான்றிதழ் கண்டிப்பாக கொண்டு வர வேண்டும். மருத்துவ சான்று மற்றும் ஆன்லைன் சான்றிதழ் ஆய்வு நிலக்கல்லில் நடைபெறும் என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
இந்தநாட்களில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், உஷபூஜை, உச்ச பூஜைக்கு பின்பு மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படும். பின்னர் மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு 6 மணிக்கு தீபாராதனை, அபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும்.
கொரோனா கட்டுப்பாடு தளர்வு காரணமாக தினசரி 15 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் முன் பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்கான ஆன்லைன் முன் பதிவு நேற்று காலை முதல் தொடங்கியது.
தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். நெகட்டிவ் சான்றிதழ் அல்லது கொரோனா தடுப்பூசி 2 டோஸ் போட்டதற்கான சான்றிதழ் கண்டிப்பாக கொண்டு வர வேண்டும். மருத்துவ சான்று மற்றும் ஆன்லைன் சான்றிதழ் ஆய்வு நிலக்கல்லில் நடைபெறும் என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
அப்பாலயகுண்டா பிரசன்ன வெங்கடேஸ்வரசாமி கோவிலில் பவித்ரோற்சவ 2-ம் நாள் விழாவையொட்டி உற்சவ மூர்த்திகள், பரிவார தேவதைகளுக்கு பவித்ரா பிரதிஷ்டை நடந்தது.
அப்பாலயகுண்டாவில் உள்ள பிரசன்ன வெங்கஸேவர சாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பவித்ரோற்சவ உற்சவ விழா நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று 2-வது நாள் விழா நடந்தது. விழாவையொட்டி பவித்ரா மலைகள் மூல விரதம் அலங்கரிக்கப்பட்டு, உற்சவ மூர்த்திகள், பரிவார தேவதைகளுக்கு பவித்ரா பிரதிஷ்டை நடந்தது.
கோவில் துணை நிர்வாக அதிகாரி கஸ்தூரி பாய், உதவி அதிகாரி பிரபாகர் ரெட்டி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கோவில் துணை நிர்வாக அதிகாரி கஸ்தூரி பாய், உதவி அதிகாரி பிரபாகர் ரெட்டி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
விவசாயிகள், விவசாயம் செழிக்க நந்தியுடன் இணைந்த விநாயகரைத் தரிசித்து செல்கின்றனர். இது தவிர புது வாகனங்களுக்கும் பூஜை செய்யப்படுகிறது.
மூலவர் - காரணவிநாயகர்
பழமை - 500 வருடங்களுக்கு முன்
ஊர் - மத்தம்பாளையம்
மாவட்டம் - கோயம்புத்தூர்
வரலாறு: காரணவிநாயகர் கோவில் ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்டது. முன்னொரு காலத்தில் இவ்வூரைத் தாண்டியுள்ள மற்றொரு கிராம மக்கள் தங்கள் ஊரில் விநாயகர் கோவில் அமைக்க விரும்பி ஒரு சிலையை மாட்டு வண்டியில் எடுத்து வந்தனர். ஓரிடத்தில் வண்டியின் அச்சு முறியவே சிலையை இறக்கிவிட்டு, பழுது பார்த்தனர். மீண்டும் வண்டியில் சிலையைத் தூக்கி வைக்க முயன்ற போது அவர்களால் அசைக்கவே முடியவில்லை. அங்கேயே சிலையை வைத்து சிறு கோவிலும் கட்டினர்.
ஒருமுறை ஆங்கிலேயர்கள் அவ்வழியே ரோடு அமைப்பதற்காக கோவிலை அகற்றும்படி மக்களிடம் கூறினர். மக்கள் மறுக்கவே, தாங்களே கோவிலை அகற்ற ஏற்பாடு செய்தனர். அன்று இரவில் ஒரு ஆங்கில அதிகாரியின் கனவில் ஏராளாமான யானைகள் அவரை விரட்டுவது போல் கனவு வந்தது. இதனால் மனம் மாறிய அந்த அதிகாரி, கோவில் இருந்த இடத்தில் மட்டும் வளைவாக ரோடு அமைக்க ஏற்பாடு செய்தார். இப்போதும் இவ்விடத்தில் ரோடு வளைவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இடத்தில் ஏதோ காரணத்தால் விநாயகர் அமர்ந்ததால் இவரை காரண விநாயகர் என்றே அழைக்கின்றனர். மேலும் இப்பகுதி மக்கள் பசு, காளைகளுடன் விவசாயப் பணிகளை நடத்தி வந்தனர். கால்நடைகளின் விருத்திக்காகவும், நோயற்ற வாழ்வுக்காகவும் சிவனின் வாகனமான நந்தியை விநாயகரின் அருகில் வைத்தனர். கருவறையிலேயே விநாயகர் அருகில் நந்தி இருப்பது விசேஷ அம்சம். இங்கு காரணமுருகன், ஆஞ்சநேயர், கரிவரதராஜா பெருமாள் சன்னதிகளும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
பிரார்த்தனை: விவசாயிகள், விவசாயம் செழிக்க நந்தியுடன் இணைந்த விநாயகரைத் தரிசித்து செல்கின்றனர். இது தவிர புது வாகனங்களுக்கும் பூஜை செய்யப்படுகிறது.
நேர்த்திக்கடன்: சிதறுகாய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
காலை 8 மணி முதல் 6 மணி வரை கோவில் நடை திறந்திருக்கும்.
பழமை - 500 வருடங்களுக்கு முன்
ஊர் - மத்தம்பாளையம்
மாவட்டம் - கோயம்புத்தூர்
வரலாறு: காரணவிநாயகர் கோவில் ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்டது. முன்னொரு காலத்தில் இவ்வூரைத் தாண்டியுள்ள மற்றொரு கிராம மக்கள் தங்கள் ஊரில் விநாயகர் கோவில் அமைக்க விரும்பி ஒரு சிலையை மாட்டு வண்டியில் எடுத்து வந்தனர். ஓரிடத்தில் வண்டியின் அச்சு முறியவே சிலையை இறக்கிவிட்டு, பழுது பார்த்தனர். மீண்டும் வண்டியில் சிலையைத் தூக்கி வைக்க முயன்ற போது அவர்களால் அசைக்கவே முடியவில்லை. அங்கேயே சிலையை வைத்து சிறு கோவிலும் கட்டினர்.
ஒருமுறை ஆங்கிலேயர்கள் அவ்வழியே ரோடு அமைப்பதற்காக கோவிலை அகற்றும்படி மக்களிடம் கூறினர். மக்கள் மறுக்கவே, தாங்களே கோவிலை அகற்ற ஏற்பாடு செய்தனர். அன்று இரவில் ஒரு ஆங்கில அதிகாரியின் கனவில் ஏராளாமான யானைகள் அவரை விரட்டுவது போல் கனவு வந்தது. இதனால் மனம் மாறிய அந்த அதிகாரி, கோவில் இருந்த இடத்தில் மட்டும் வளைவாக ரோடு அமைக்க ஏற்பாடு செய்தார். இப்போதும் இவ்விடத்தில் ரோடு வளைவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இடத்தில் ஏதோ காரணத்தால் விநாயகர் அமர்ந்ததால் இவரை காரண விநாயகர் என்றே அழைக்கின்றனர். மேலும் இப்பகுதி மக்கள் பசு, காளைகளுடன் விவசாயப் பணிகளை நடத்தி வந்தனர். கால்நடைகளின் விருத்திக்காகவும், நோயற்ற வாழ்வுக்காகவும் சிவனின் வாகனமான நந்தியை விநாயகரின் அருகில் வைத்தனர். கருவறையிலேயே விநாயகர் அருகில் நந்தி இருப்பது விசேஷ அம்சம். இங்கு காரணமுருகன், ஆஞ்சநேயர், கரிவரதராஜா பெருமாள் சன்னதிகளும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
பிரார்த்தனை: விவசாயிகள், விவசாயம் செழிக்க நந்தியுடன் இணைந்த விநாயகரைத் தரிசித்து செல்கின்றனர். இது தவிர புது வாகனங்களுக்கும் பூஜை செய்யப்படுகிறது.
நேர்த்திக்கடன்: சிதறுகாய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
காலை 8 மணி முதல் 6 மணி வரை கோவில் நடை திறந்திருக்கும்.
கோவில் வளாகத்தில் சுவாமி உள்புறப்பாடு நடைபெறும் நேரத்தை தவிர்த்து, மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை உள்ளூர் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
தேசிகர் பிரம்மோற்சவத்தையொட்டி நாளை (திங்கட்கிழமை) முதல் 17-ந் தேதி வரை திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் பொதுமக்கள் தரிசனத்துக்கு தடை விதித்து கலெக்டர் பாலசுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
கடலூர் அருகே உள்ள திருவந்திபுரத்தில் பிரசித்தி பெற்ற தேவநாதசுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் நாளை (திங்கட்கிழமை) முதல் வருகிற 17-ந் தேதி வரை தேசிகர் பிரம்மோற்சவம் மற்றும் நவராத்திரி உற்சவம் நடைபெற உள்ளது. இதையொட்டி அரசால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையான கொரோனா வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்றி கோவில் பழக்கவழக்கங்களுக்கு உட்பட்டு, கோவில் வளாகத்திற்குள் குறைந்தளவு பணியாளர்களை கொண்டு சாமி உள்புறப்பாடு நடைபெறும்.மேலும் பொதுமக்கள் வருகை அதிகமாக இருக்கும் என்பதால், கொரோனா நோய் தொற்றுக்கு வழிவகுக்கும். அதனால் பொதுமக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நாளை முதல் 17-ந் தேதி வரை சுவாமி தரிசனத்திற்கு தடை செய்யப்படுகிறது.
ஆனால் மேற்படி திருவிழா காலத்தில் கோவில் வளாகத்தில் சுவாமி உள்புறப்பாடு நடைபெறும் நேரத்தை தவிர்த்து, மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை உள்ளூர் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். கொரோனா 3-வது அலை பரவலை தடுக்கவும், மக்களின் பாதுகாப்பை கருதியும் வெளியூர் பக்தர்கள் தரிசனத்திற்கு வருவதை தவிர்க்க வேண்டும்.
மேலும் அரசு உத்தரவுபடி ஒவ்வொரு வாரமும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் தரிசனத்திற்கான தடை உத்தரவு என்பது தொடரும். அந்நாட்களிலும் பக்தர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும்.
எனவே நாளை முதல் 17-ந் தேதி வரையிலான விழா காலகட்டங்களில் சிறப்பு தரிசனத்தின் போது, கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறும் பட்சத்தில் முழுவதுமாக பொதுமக்கள் தரிசனத்திற்கு தடை விதிப்பது குறித்து பரிசீலிக்கப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
கடலூர் அருகே உள்ள திருவந்திபுரத்தில் பிரசித்தி பெற்ற தேவநாதசுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் நாளை (திங்கட்கிழமை) முதல் வருகிற 17-ந் தேதி வரை தேசிகர் பிரம்மோற்சவம் மற்றும் நவராத்திரி உற்சவம் நடைபெற உள்ளது. இதையொட்டி அரசால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையான கொரோனா வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்றி கோவில் பழக்கவழக்கங்களுக்கு உட்பட்டு, கோவில் வளாகத்திற்குள் குறைந்தளவு பணியாளர்களை கொண்டு சாமி உள்புறப்பாடு நடைபெறும்.மேலும் பொதுமக்கள் வருகை அதிகமாக இருக்கும் என்பதால், கொரோனா நோய் தொற்றுக்கு வழிவகுக்கும். அதனால் பொதுமக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நாளை முதல் 17-ந் தேதி வரை சுவாமி தரிசனத்திற்கு தடை செய்யப்படுகிறது.
ஆனால் மேற்படி திருவிழா காலத்தில் கோவில் வளாகத்தில் சுவாமி உள்புறப்பாடு நடைபெறும் நேரத்தை தவிர்த்து, மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை உள்ளூர் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். கொரோனா 3-வது அலை பரவலை தடுக்கவும், மக்களின் பாதுகாப்பை கருதியும் வெளியூர் பக்தர்கள் தரிசனத்திற்கு வருவதை தவிர்க்க வேண்டும்.
மேலும் அரசு உத்தரவுபடி ஒவ்வொரு வாரமும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் தரிசனத்திற்கான தடை உத்தரவு என்பது தொடரும். அந்நாட்களிலும் பக்தர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும்.
எனவே நாளை முதல் 17-ந் தேதி வரையிலான விழா காலகட்டங்களில் சிறப்பு தரிசனத்தின் போது, கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறும் பட்சத்தில் முழுவதுமாக பொதுமக்கள் தரிசனத்திற்கு தடை விதிப்பது குறித்து பரிசீலிக்கப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
சிவனின் மூல மந்திரத்தை உச்சரித்து வழிபடுபவர்களுக்கு தீவினைகள் அனைத்தும் நீங்கி நன்மைகள் ஏற்படும். தினமும் இந்த மந்திரத்தை ஜபிக்க இயலாதவர்கள் திங்கட்கிழமையில் ஜபிப்பது அவசியம்.
சிவ சிவ என்கிலர் தீவினை யாளர்
சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்
சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவர்
சிவ சிவ என்னச் சிவகதி தானே!
திருமூலர் அருளிய இந்த மந்திரமானது சிவன் மூலமந்திரமாக போற்றப்படுகிறது. நீண்டகால துன்பம் உடையவர்கள், கட்டுக்கடங்காத பண பிரச்சனை உடையவர்கள், தீராத நோய் உடையவர்கள், மன நிம்மதி இன்றி தவிப்பவர்கள் இந்த மந்திரத்தை தினமும் 108 முறை ஜபித்து வர தீராத பிரச்சனைகள் யாவும் விரைவில் தீரும். தினமும் மந்திரத்தை ஜபிக்க இயலாதவர்கள் திங்கட்கிழமையில் ஜபிப்பது அவசியம்.
சிவன் மூல மந்திரம் பலன்கள்
* சிவனின் மூல மந்திரத்தை உச்சரித்து வழிபடுபவர்களுக்கு தீவினைகள் அனைத்தும் நீங்கி நன்மைகள் ஏற்படும்.
* பித்ரு தோஷங்கள் நீங்கும்.
* குல சாபங்கள், பூர்வ ஜென்ம பாவ வினைகள் நீங்கப் பெறுவார்கள்.
* வீட்டில் பணமுடைகள் நீங்கி செல்வம் பெருகும்.
* நோய்கள் அனைத்தும் விரைவில் தீரும்.
* உடல் நலமும் சிந்தனைத் தெளிவும் உண்டாகும்.
* எதிரிகளால் எவ்வித ஆபத்தும் ஏற்படாமல் காக்கும்.
* திருமணம் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லாமல் தவிப்பவர்களுக்கு குழந்தைப்பேறு கிட்டும்.
சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்
சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவர்
சிவ சிவ என்னச் சிவகதி தானே!
திருமூலர் அருளிய இந்த மந்திரமானது சிவன் மூலமந்திரமாக போற்றப்படுகிறது. நீண்டகால துன்பம் உடையவர்கள், கட்டுக்கடங்காத பண பிரச்சனை உடையவர்கள், தீராத நோய் உடையவர்கள், மன நிம்மதி இன்றி தவிப்பவர்கள் இந்த மந்திரத்தை தினமும் 108 முறை ஜபித்து வர தீராத பிரச்சனைகள் யாவும் விரைவில் தீரும். தினமும் மந்திரத்தை ஜபிக்க இயலாதவர்கள் திங்கட்கிழமையில் ஜபிப்பது அவசியம்.
சிவன் மூல மந்திரம் பலன்கள்
* சிவனின் மூல மந்திரத்தை உச்சரித்து வழிபடுபவர்களுக்கு தீவினைகள் அனைத்தும் நீங்கி நன்மைகள் ஏற்படும்.
* பித்ரு தோஷங்கள் நீங்கும்.
* குல சாபங்கள், பூர்வ ஜென்ம பாவ வினைகள் நீங்கப் பெறுவார்கள்.
* வீட்டில் பணமுடைகள் நீங்கி செல்வம் பெருகும்.
* நோய்கள் அனைத்தும் விரைவில் தீரும்.
* உடல் நலமும் சிந்தனைத் தெளிவும் உண்டாகும்.
* எதிரிகளால் எவ்வித ஆபத்தும் ஏற்படாமல் காக்கும்.
* திருமணம் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லாமல் தவிப்பவர்களுக்கு குழந்தைப்பேறு கிட்டும்.
பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளதால் கோவில் மற்றும் வளாகங்கள் முழுவதும் வண்ண வண்ண மின் விளக்குகள் அலங்கார ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர நவராத்திரி பிரம்மோற்சவ விழா வரும் 7-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 15-ந்தேதி வரை நடைபெறுகிறது.
இதையொட்டி நாளை காலை கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடக்கிறது.
காலை 7 மணியில் இருந்து பகல் 12 மணி வரை ஆனந்த நிலையம் முதல் பங்காருவாகிலி வரையிலும், கோவிலில் அனைத்துப் பூஜைகளுக்கும் பயன்படுத்தும் தாமிர, பித்தளை பொருட்களும், துணை சன்னதிகள், கோவில் வளாகம், சுவர்கள், மேற்கூரைகள், தூண்கள், மாடங்கள் ஆகியவை தண்ணீரால் சுத்தம் செய்யப்படும்.
தூய்மைப்பணி முடிந்ததும் மஞ்சள், சந்தனம், குங்குமம், நாமக்கொம்பு, ஸ்ரீகந்தம் சூரணம், கஸ்தூரி மஞ்சள், பச்சையிலை, பச்சை கற்பூரம், கிச்சிலிகட்டை சூரணம் ஆகிய சுகந்த திரவிய பொருட்கள் தூண்கள், மாடங்கள், சுவர்கள், மூலவர் அறை உள்பட பல்வேறு இடங்களில் பூசப்படுகிறது. அதன் பிறகு மூலவருக்கு சிறப்புப் பூஜைகள், நெய்வேத்தியம் செய்யப்படும்.
ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுவதால் நாளை காலை 7 மணி முதல் 12 மணி வரை 5 மணி நேரம் பக்தர்கள் சாமி தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.
அதேபோல் விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட உள்ளதால் விஐபி பிரேக் தரிசனம் சிபாரிசு கடிதங்கள் இன்று தரப்பட மாட்டாது என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளதால் கோவில் மற்றும் வளாகங்கள் முழுவதும் வண்ண வண்ண மின் விளக்குகள் அலங்கார ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இதேபோல் கோவில் முழுவதும் அலங்கரிப்பதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து பூக்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
நேற்று திருப்பதியில் 29,524 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 12,183 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.75 கோடி உண்டியல் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.
இதையொட்டி நாளை காலை கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடக்கிறது.
காலை 7 மணியில் இருந்து பகல் 12 மணி வரை ஆனந்த நிலையம் முதல் பங்காருவாகிலி வரையிலும், கோவிலில் அனைத்துப் பூஜைகளுக்கும் பயன்படுத்தும் தாமிர, பித்தளை பொருட்களும், துணை சன்னதிகள், கோவில் வளாகம், சுவர்கள், மேற்கூரைகள், தூண்கள், மாடங்கள் ஆகியவை தண்ணீரால் சுத்தம் செய்யப்படும்.
தூய்மைப்பணி முடிந்ததும் மஞ்சள், சந்தனம், குங்குமம், நாமக்கொம்பு, ஸ்ரீகந்தம் சூரணம், கஸ்தூரி மஞ்சள், பச்சையிலை, பச்சை கற்பூரம், கிச்சிலிகட்டை சூரணம் ஆகிய சுகந்த திரவிய பொருட்கள் தூண்கள், மாடங்கள், சுவர்கள், மூலவர் அறை உள்பட பல்வேறு இடங்களில் பூசப்படுகிறது. அதன் பிறகு மூலவருக்கு சிறப்புப் பூஜைகள், நெய்வேத்தியம் செய்யப்படும்.
ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுவதால் நாளை காலை 7 மணி முதல் 12 மணி வரை 5 மணி நேரம் பக்தர்கள் சாமி தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.
அதேபோல் விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட உள்ளதால் விஐபி பிரேக் தரிசனம் சிபாரிசு கடிதங்கள் இன்று தரப்பட மாட்டாது என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளதால் கோவில் மற்றும் வளாகங்கள் முழுவதும் வண்ண வண்ண மின் விளக்குகள் அலங்கார ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இதேபோல் கோவில் முழுவதும் அலங்கரிப்பதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து பூக்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
நேற்று திருப்பதியில் 29,524 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 12,183 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.75 கோடி உண்டியல் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.
ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் நாளை (செவ்வாய்க்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (புதன்கிழமை) சாமி தரிசனம் செய்யவும், புனித நீராடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ராமேசுவரம்
மகாளய அமாவாசை நாளன்று புண்ணிய தலமான ராமேசுவரம் உள்பட கடலோரப் பகுதியில் அமைந்துள்ள கோவில்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தும், குடும்ப நலனுக்காக சிறப்பு பூஜைகள் செய்தும் கோவில்களில் சுவாமி தரிசனம்-வழிபாடுகளில் கலந்து கொள்வதை பக்தர்கள் ஐதீகமாக கருதுவார்கள்.
கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களுக்கு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.
நாளை மறுநாள் (6-ந் தேதி) மகாளய அமாவாசைவருகிறது. இந்த நாட்களில் கடலோரப் பகுதிகளில் அமைந்துள்ள புண்ணிய தலங்களில் பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம்-பூஜைகள் செய்து அன்னதானம் வழங்குவது குடும்ப நலனுக்கு நல்லது என கருதி இந்த வழிபாடுகளில் ஈடுபடுவார்கள்.
அமாவாசை நாளன்று பக்தர்கள் அதிகமாக கூடுவார்கள் என்பதால் கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக அமாவாசை நாளுக்கு முந்தைய நாளும், அமாவாசை நாளும் ஆகிய 2 நாட்களுக்கு தமிழக பகுதிகளில் உள்ள கோவில்களில் பக்தர்கள் புனித நீராடவும், சுவாமி தரிசனம் செய்வதற்கும் தமிழக அரசு தடை விதித்தது.
இதனால் இந்தியாவில் உள்ள 12 ஜோதிர் லிங்கத்தில் ஒரு ஜோதி லிங்கம் அமைத்துள்ள சிவதலமான ராமேசுவரத்தில் காசிக்கு நிகராக கருதப்படும் புனித நீரான அக்னிதீர்த்த கடலில் பக்தர்கள் நீராடி சிறப்பு பூஜை செய்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்கு அனுமதி இல்லை. இதனால் பக்தர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

கடந்த வாரத்தில் கோவில்களிலும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களில் தரிசனம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ராமேசுவரம் கோவில் வெறிச்சோடி காணப்பட்டது.
இன்று (திங்கட்கிழமை) ராமேசுவரம் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இன்று ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
நாளை (செவ்வாய்க் கிழமை) மற்றும் நாளை மறுநாள் (புதன்கிழமை) சாமி தரிசனம் செய்யவும், புனித நீராடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மீண்டும் வியாழக்கிழமை மட்டும் கோவில் திறந்து இருக்கும். மீண்டும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி கிடையாது.
மகாளய அமாவாசை நாளன்று புண்ணிய தலமான ராமேசுவரம் உள்பட கடலோரப் பகுதியில் அமைந்துள்ள கோவில்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தும், குடும்ப நலனுக்காக சிறப்பு பூஜைகள் செய்தும் கோவில்களில் சுவாமி தரிசனம்-வழிபாடுகளில் கலந்து கொள்வதை பக்தர்கள் ஐதீகமாக கருதுவார்கள்.
கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களுக்கு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.
நாளை மறுநாள் (6-ந் தேதி) மகாளய அமாவாசைவருகிறது. இந்த நாட்களில் கடலோரப் பகுதிகளில் அமைந்துள்ள புண்ணிய தலங்களில் பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம்-பூஜைகள் செய்து அன்னதானம் வழங்குவது குடும்ப நலனுக்கு நல்லது என கருதி இந்த வழிபாடுகளில் ஈடுபடுவார்கள்.
அமாவாசை நாளன்று பக்தர்கள் அதிகமாக கூடுவார்கள் என்பதால் கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக அமாவாசை நாளுக்கு முந்தைய நாளும், அமாவாசை நாளும் ஆகிய 2 நாட்களுக்கு தமிழக பகுதிகளில் உள்ள கோவில்களில் பக்தர்கள் புனித நீராடவும், சுவாமி தரிசனம் செய்வதற்கும் தமிழக அரசு தடை விதித்தது.
இதனால் இந்தியாவில் உள்ள 12 ஜோதிர் லிங்கத்தில் ஒரு ஜோதி லிங்கம் அமைத்துள்ள சிவதலமான ராமேசுவரத்தில் காசிக்கு நிகராக கருதப்படும் புனித நீரான அக்னிதீர்த்த கடலில் பக்தர்கள் நீராடி சிறப்பு பூஜை செய்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்கு அனுமதி இல்லை. இதனால் பக்தர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

கடந்த வாரத்தில் கோவில்களிலும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களில் தரிசனம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ராமேசுவரம் கோவில் வெறிச்சோடி காணப்பட்டது.
இன்று (திங்கட்கிழமை) ராமேசுவரம் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இன்று ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
நாளை (செவ்வாய்க் கிழமை) மற்றும் நாளை மறுநாள் (புதன்கிழமை) சாமி தரிசனம் செய்யவும், புனித நீராடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மீண்டும் வியாழக்கிழமை மட்டும் கோவில் திறந்து இருக்கும். மீண்டும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி கிடையாது.
இதனால் இந்த வாரம் 7 நாட்களில் 2 நாள் மட்டுமே சாமி தரிசனம் செய்யும் சூழ்நிலை உள்ளது. மற்ற 5 நாட்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லாததால் பக்தர்கள் விடுமுறை நாட்கள் இருந்தும், குடும்ப நலனுக்காகவும் மற்றும் முன்னோர்களுக்காகவும் சிறப்பு பூஜை செய்ய முடியாமலும் சுவாமி தரிசனம் செய்ய முடியாமலும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இதையும் படிக்கலாம்...செவ்வாய் தோஷம்: பரிகாரம் செய்யக்கூடிய, செய்யக்கூடாத காலம் எது?
செவ்வாய் தோஷத்திற்கு பரிகாரம் செய்ய தகுந்த நேரம், காலம் உள்ளது. அந்த நேரங்களில் பரிகாரம் செய்தால் முழு பலனையும் பெற முடியும்.
பரிகார காலம் :
சுபமான பரிகாரங்களை வளர்பிறைகளிலும் துயரம் துக்கம், நீக்கும் பரிகாரங்களை தேய்பிறை பட்சத்திலும் செய்ய வேண்டும். குளத்தங்கரை, கிணற்றங்கரை, நதிக்கரை கடற்கரை, அருவிகரை, கோசாலை, சிவ ஆலயங்கள், விஷ்ணு சன்னதி, குரு ஆலயம் ஆகிய இடங்களில் சுப பரிகாரங்களை செய்யலாம். செவ்வாய் இருக்கும் இடத்தின் அதிபதி என்ன கிழமை குறிக்கிறதோ அந்த கிழமையில் பரிகாரம் செய்யலாம். அவரவர் பிறந்த நட்சத்திரத்தன்றும் பரிகாரம் செய்யலாம். செவ்வாய் கிழமையிலும் பரிகாரம் செய்யலாம்.
பரிகாரம் செய்யகூடாத நேரம்:
ஜென்ம நட்சத்திரத்துக்கு 4, 8, 12 ஆக வரும் நட்சத்திர நாட்களில் பரிகாரங்கள் செய்யக்கூடாது. பரிகாரம் செய்து கொள்பவரின் மனைவியின் நட்சத்திரத்திலிருந்து 4, 8, 12 ஆக வரும் நாட்களிலும் பரிகாரம் செய்யக் கூடாது. இவர்களின் மூத்த குழந்தை ஆணாக இருந்தால் அந்தக் குழந்தையின் 4, 8, 12 நட்சத்திரங்களில் வரும் நாட்களிலும் பரிகாரங்கள் செய்து கொள்ளக் கூடாது.
சுபமான பரிகாரங்களை வளர்பிறைகளிலும் துயரம் துக்கம், நீக்கும் பரிகாரங்களை தேய்பிறை பட்சத்திலும் செய்ய வேண்டும். குளத்தங்கரை, கிணற்றங்கரை, நதிக்கரை கடற்கரை, அருவிகரை, கோசாலை, சிவ ஆலயங்கள், விஷ்ணு சன்னதி, குரு ஆலயம் ஆகிய இடங்களில் சுப பரிகாரங்களை செய்யலாம். செவ்வாய் இருக்கும் இடத்தின் அதிபதி என்ன கிழமை குறிக்கிறதோ அந்த கிழமையில் பரிகாரம் செய்யலாம். அவரவர் பிறந்த நட்சத்திரத்தன்றும் பரிகாரம் செய்யலாம். செவ்வாய் கிழமையிலும் பரிகாரம் செய்யலாம்.
பரிகாரம் செய்யகூடாத நேரம்:
ஜென்ம நட்சத்திரத்துக்கு 4, 8, 12 ஆக வரும் நட்சத்திர நாட்களில் பரிகாரங்கள் செய்யக்கூடாது. பரிகாரம் செய்து கொள்பவரின் மனைவியின் நட்சத்திரத்திலிருந்து 4, 8, 12 ஆக வரும் நாட்களிலும் பரிகாரம் செய்யக் கூடாது. இவர்களின் மூத்த குழந்தை ஆணாக இருந்தால் அந்தக் குழந்தையின் 4, 8, 12 நட்சத்திரங்களில் வரும் நாட்களிலும் பரிகாரங்கள் செய்து கொள்ளக் கூடாது.
திருவிழாவில் பக்தர்கள் தடை செய்யப்பட்ட 7 நாட்களும் பக்தர்கள் யாரும் கோவில் வளாகம் மற்றும் கோவில் சுற்றுப்புற பகுதியில் நடமாடக் கூடாது என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகேயுள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழா தமிழ்நாட்டில் முதலிடம் வகிக்கும் தசரா திருவிழாவாகும்.
இந்த ஆண்டு திருவிழா வருகிற 6-ந் தேதி (புதன் கிழமை) காலை 8 மணிக்கு கோவில் முன்புள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு பல்வேறு சிறப்பு பூஜைகளுடன் தொடங்குகிறது. அன்று முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
2-ம் நாளான 7-ந் தேதி (வியாழக்கிழமை) மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். 3,4,5-ம் நாள் திருவிழா நாட்கள் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை என்பதால் அன்றைய தினமும் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
6-ம் நாளான 11-ந் தேதி (திங்கட்கிழமை), 7-ம் நாளான 12-ந் தேதி (செவ்வாய்க்கிழமை), 8-ம் திருநாளான 13-ந் தேதி (புதன்கிழமை), 9-ம் திருநாளான 14-ந் தேதி (வியாழக்கிழமை) ஆகிய 4 நாட்களுக்கு மட்டும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
தொடர்ந்து 10-ம் திருவிழாவான 15-ந் தேதி நடு இரவு 12 மணிக்கு மகிஷா சூரசம்ஹாரம் கடற்கரைக்கு பதில் கோவில் முன்பு நடைபெறுகிறது. அன்று பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
11-ம் நாளான 16-ந் தேதி (சனிக்கிழமை), 12-ம் திருநாளான 17-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 3 நாட்களுக்கும் தொடர்ந்து பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
மொத்தம் 12 நாள் நடைபெறும் தசரா திருவிழாவில் 5 நாட்களுக்கு மட்டுமே பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
திருவிழாவில் பக்தர்கள் தடை செய்யப்பட்ட 7 நாட்களும் பக்தர்கள் யாரும் கோவில் வளாகம் மற்றும் கோவில் சுற்றுப்புற பகுதியில் நடமாடக் கூடாது என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கடற்கரை மற்றும் கோவிலை சுற்றி எந்த விதமான கலை நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது எனவும், தற்காலிக சிறப்புகடைகள் வைக்கக்கூடாது என்றும், சிறப்பு கலை நிகழ்ச்சி, மேளதாளங்களுடன் தசரா பக்தர்கள் கோவிலுக்குள் வரக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் தேங்காய், பழம், பூ போன்ற அர்ச்சனைப் பொருட்களை கொண்டு வரக்கூடாது என்றும், முககவசம், தனிநபர் இடைவெளி கண்டிப்பாக தேவை என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகமும் கோவில் நிர்வாகமும் செய்து வருகிறது.
தசரா திருவிழாவையொட்டி கோவிலில் வழக்கமாக நடைபெறும் அனைத்து பூஜைகளும் சிறப்புற நடைபெறுவதற்கு தசரா பக்தர்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
திருவிழா தொடர்பான 11 நாள் நிகழ்ச்சிகளும் பக்தர்கள் வசதிக்காக யூ-டியூப் மற்றும் உள்ளூர் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்ய கோவில் நிர்வாகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு திருவிழா வருகிற 6-ந் தேதி (புதன் கிழமை) காலை 8 மணிக்கு கோவில் முன்புள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு பல்வேறு சிறப்பு பூஜைகளுடன் தொடங்குகிறது. அன்று முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
2-ம் நாளான 7-ந் தேதி (வியாழக்கிழமை) மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். 3,4,5-ம் நாள் திருவிழா நாட்கள் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை என்பதால் அன்றைய தினமும் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
6-ம் நாளான 11-ந் தேதி (திங்கட்கிழமை), 7-ம் நாளான 12-ந் தேதி (செவ்வாய்க்கிழமை), 8-ம் திருநாளான 13-ந் தேதி (புதன்கிழமை), 9-ம் திருநாளான 14-ந் தேதி (வியாழக்கிழமை) ஆகிய 4 நாட்களுக்கு மட்டும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
தொடர்ந்து 10-ம் திருவிழாவான 15-ந் தேதி நடு இரவு 12 மணிக்கு மகிஷா சூரசம்ஹாரம் கடற்கரைக்கு பதில் கோவில் முன்பு நடைபெறுகிறது. அன்று பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
11-ம் நாளான 16-ந் தேதி (சனிக்கிழமை), 12-ம் திருநாளான 17-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 3 நாட்களுக்கும் தொடர்ந்து பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
மொத்தம் 12 நாள் நடைபெறும் தசரா திருவிழாவில் 5 நாட்களுக்கு மட்டுமே பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
திருவிழாவில் பக்தர்கள் தடை செய்யப்பட்ட 7 நாட்களும் பக்தர்கள் யாரும் கோவில் வளாகம் மற்றும் கோவில் சுற்றுப்புற பகுதியில் நடமாடக் கூடாது என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கடற்கரை மற்றும் கோவிலை சுற்றி எந்த விதமான கலை நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது எனவும், தற்காலிக சிறப்புகடைகள் வைக்கக்கூடாது என்றும், சிறப்பு கலை நிகழ்ச்சி, மேளதாளங்களுடன் தசரா பக்தர்கள் கோவிலுக்குள் வரக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் தேங்காய், பழம், பூ போன்ற அர்ச்சனைப் பொருட்களை கொண்டு வரக்கூடாது என்றும், முககவசம், தனிநபர் இடைவெளி கண்டிப்பாக தேவை என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகமும் கோவில் நிர்வாகமும் செய்து வருகிறது.
தசரா திருவிழாவையொட்டி கோவிலில் வழக்கமாக நடைபெறும் அனைத்து பூஜைகளும் சிறப்புற நடைபெறுவதற்கு தசரா பக்தர்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
திருவிழா தொடர்பான 11 நாள் நிகழ்ச்சிகளும் பக்தர்கள் வசதிக்காக யூ-டியூப் மற்றும் உள்ளூர் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்ய கோவில் நிர்வாகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.






