என் மலர்
நீங்கள் தேடியது "thiruvanthipuram"
- மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு கோவில் முழுவதும் விழாக்கோலம் பூண்டது.
- விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
கடலூர் அடுத்த திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவில் 108 வைணவ தளங்களில் முதன்மை பெற்றதாகும். இக்கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 2012-ம் ஆண்டு நடைபெற்று தற்போது 12 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் 2023-ம் ஆண்டு திருப்பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் கும்பாபிஷேகம் 2-ந்தேதி காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் நடைபெறுகிறது. இந்த நிலையில் நேற்று காலை சிறப்பு பூஜைகள் நடைபெற்று மூலவர் சன்னிதானம் மூடப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.
மேலும் கோவில் வளாகம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு கோவில் முழுவதும் விழாக்கோலம் பூண்டது. இதனைத் தொடர்ந்து வருகிற 2-ந்தேதி கும்பாபிஷேகம் முடிவடைந்து சாமி தரிசனம் செய்ய வழக்கம் போல் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
முன்னதாக காலை புண்யாக வாசனம், வாஸ்து சாந்தி, மகா சாந்தி ஹோமம் நடைபெற்றது. பின்னர் மாலையில் ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகள் நேரில் வந்தார். தொடர்ந்து திருப்பதி, பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து 75 பட்டாச்சாரியார்கள் கலந்து கொண்டு வேத மந்திரங்கள் முழங்க யாகசாலை பூஜை தொடங்கியது.
தொடர்ந்து அங்குரார்ப் பணம், வேத திவ்யபிரபந்த தொடக்கம் மற்றும் பூர்ணாஹதி நடைபெற்றது. இதில் ஜி.ஆர்.கே.குழும நிறுவன இயக்குநர் ஜி.ஆர்.துரைராஜ், இயக்குனர் கோமதி துரைராஜ் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி கும்பிட்டனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
இன்று (30-ந்தேதி) அக்னி பாராயணம், நித்ய ஹோமங்கள் நடைபெற்றது. இன்று மாலை மற்றும் நாளை (31-ந் தேதி) கும்ப ஆராதனம் நடைபெறுகிறது. பிப்ரவரி (1-ந் தேதி) காலை அதிவாஸத்ரய ஹோமம், மஹா சாந்தி திருமஞ்சனம், கடம் புறப்பாடு, மாலை சயனா திவாஸம் மற்றும் பூர்ணாஹதி நடைபெறுகிறது.
இதைத் தொடர்ந்து சிகர விழாவான கும்பாபிஷேக விழா வருகிற 2-ந்தேதி நடைபெற உள்ளது. அன்று காலை விஸ்வரூபம் தரிசனம், பிரதான ஹோமம், மகா பூர்ணாஹதி நடைபெற்று கும்ப புறப்பாடு ஊர்வலமாக சென்று கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.
இதனை தொடர்ந்து வேத, திவ்ய பிரபந்த சாற்று முறை, பிரம்ம கோஷம் நடைபெற்று பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
இரவு தங்க விசேஷ வாகனத்தில் தேவநாதசுவாமி உபய நாச்சியாருடன் வீதியுலா நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
தொடர்ந்து ஆண்டாளுக்கும், தேவநாதசாமிக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதையடுத்து சாமிக்கு மாலை மாற்றும் நிகழ்ச்சி மங்கள வாத்தியத்துடன் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் தேவநாதசாமியும், ஆண்டாளும் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். அதன்பிறகு சாமி வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவில் இன்று(திங்கட்கிழமை) ஆண்டாளுக்கும், தேவநாதசாமிக்கும் திருக்கல்யாண உற்சவம் வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது. இதையொட்டி காலையில் சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் மகா தீபாராதனை நடந்து, திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து சாமிக்கு மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்து, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்க இருக்கிறார்கள். பின்னர் சாமி வீதிஉலா புறப்பாடு நடைபெற உள்ளது.
தினசரி செங்கமல தாயாருக்கு காலையில் சிறப்பு பூஜை மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்படும். பின்னர் மாலையில் சாமி வீதி உலா நடைபெறும். இதில் வருகிற 7-ந்தேதி திருவோணம் நட்சத்திரத்தன்று நடைபெறும் தாயார் உற்சவம் சிறப்பு வாய்ந்ததாகும். எனவே இந்த நாளில் வழக்கத்தை விட அதிகளவில் பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நாளை (செவ்வாய்க்கிழமை) ஆங்கில புத்தாண்டையொட்டி தேவநாத சாமி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற இருக்கிறது. இதையொட்டி அதிகாலை 2.30 மணிக்கு சாமிக்கு சிறப்பு பூஜை மற்றும் விஸ்வரூப தரிசனம் நடைபெறுகிறது. இதை தொடர்ந்து மார்கழி மாத பூஜையும் நடக்கிறது. பின்னர் காலை 5.30 மணியில் இருந்து சாமியை தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட இருக்கிறார்கள்.
புத்தாண்டு வழிபாட்டிற்காக கடலூர், விழுப்புரம் மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால், கூட்ட நெரிசலை தவிர்க்க கோவிலில் தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் கோவில் சுற்றிலும் மரக்கட்டைகளால் தடுப்புகளை அமைத்து, பக்தர்கள் வரிசையில் செல்வதற்கு தேவையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.