என் மலர்
நீங்கள் தேடியது "thiruvanthipuram devanatha swamy"
- மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு கோவில் முழுவதும் விழாக்கோலம் பூண்டது.
- விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
கடலூர் அடுத்த திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவில் 108 வைணவ தளங்களில் முதன்மை பெற்றதாகும். இக்கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 2012-ம் ஆண்டு நடைபெற்று தற்போது 12 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் 2023-ம் ஆண்டு திருப்பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் கும்பாபிஷேகம் 2-ந்தேதி காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் நடைபெறுகிறது. இந்த நிலையில் நேற்று காலை சிறப்பு பூஜைகள் நடைபெற்று மூலவர் சன்னிதானம் மூடப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.
மேலும் கோவில் வளாகம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு கோவில் முழுவதும் விழாக்கோலம் பூண்டது. இதனைத் தொடர்ந்து வருகிற 2-ந்தேதி கும்பாபிஷேகம் முடிவடைந்து சாமி தரிசனம் செய்ய வழக்கம் போல் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
முன்னதாக காலை புண்யாக வாசனம், வாஸ்து சாந்தி, மகா சாந்தி ஹோமம் நடைபெற்றது. பின்னர் மாலையில் ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகள் நேரில் வந்தார். தொடர்ந்து திருப்பதி, பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து 75 பட்டாச்சாரியார்கள் கலந்து கொண்டு வேத மந்திரங்கள் முழங்க யாகசாலை பூஜை தொடங்கியது.
தொடர்ந்து அங்குரார்ப் பணம், வேத திவ்யபிரபந்த தொடக்கம் மற்றும் பூர்ணாஹதி நடைபெற்றது. இதில் ஜி.ஆர்.கே.குழும நிறுவன இயக்குநர் ஜி.ஆர்.துரைராஜ், இயக்குனர் கோமதி துரைராஜ் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி கும்பிட்டனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
இன்று (30-ந்தேதி) அக்னி பாராயணம், நித்ய ஹோமங்கள் நடைபெற்றது. இன்று மாலை மற்றும் நாளை (31-ந் தேதி) கும்ப ஆராதனம் நடைபெறுகிறது. பிப்ரவரி (1-ந் தேதி) காலை அதிவாஸத்ரய ஹோமம், மஹா சாந்தி திருமஞ்சனம், கடம் புறப்பாடு, மாலை சயனா திவாஸம் மற்றும் பூர்ணாஹதி நடைபெறுகிறது.
இதைத் தொடர்ந்து சிகர விழாவான கும்பாபிஷேக விழா வருகிற 2-ந்தேதி நடைபெற உள்ளது. அன்று காலை விஸ்வரூபம் தரிசனம், பிரதான ஹோமம், மகா பூர்ணாஹதி நடைபெற்று கும்ப புறப்பாடு ஊர்வலமாக சென்று கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.
இதனை தொடர்ந்து வேத, திவ்ய பிரபந்த சாற்று முறை, பிரம்ம கோஷம் நடைபெற்று பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
இரவு தங்க விசேஷ வாகனத்தில் தேவநாதசுவாமி உபய நாச்சியாருடன் வீதியுலா நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
அதன்படி, இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவத்தையொட்டி நித்திய உற்சவர் தேவநாதசுவாமி, பல்லக்கில் எழுந்தருளி புற்றுமண் எடுத்து வரும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து நேற்று பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டது. பின்னர் விஸ்வரூப தரிசனம் நடந்தது. இதைத்தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி சமேத தேவநாதசுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. அதன்பிறகு உற்சவ மூர்த்திகள் காலை 5 மணிக்கு கோவில் கொடி மரம் அருகே எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். தொடர்ந்து கொடி மரத்திற்கு பட்டாச்சாரியார்கள் சிறப்பு பூஜை நடத்தி, பிரம்மோற்சவ கொடியை ஏற்றினர். அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் ‘கோவிந்தா, கோவிந்தா’ என்ற பக்தி கோஷங்களை எழுப்பி சாமிதரிசனம் செய்தனர். பின்னர் காலையில் சூரிய பிரபை வாகனத்திலும், இரவு வெள்ளி சிம்ம வாகனத்திலும் சாமி வீதிஉலா நடைபெற்றது.
பிரம்மோற்சவத்தையொட்டி தினமும் காலை, மாலை நேரங்களில் சிம்மம், யாளி, சேஷம், யானை போன்ற பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதிஉலா நடைபெற உள்ளது.
விழாவில் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான கருட சேவை உற்சவம் 15-ந்தேதி இரவு நடக்கிறது. பின்னர் 17-ந்தேதி தெருவடைச்சான் உற்சவமும், 18-ந்தேதி காலை பேட்டை உற்சவமும், இரவு வெள்ளி குதிரை வாகனத்தில் சாமி வீதிஉலாவும் நடைபெறுகிறது.
பிரம்மோற்சவத்தின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 19-ந்தேதி சித்ரா பவுர்ணமியையொட்டி தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று அதிகாலை தேவநாதசுவாமிக்கு விசேஷ பூஜைகள் நடைபெற்று அதிகாலை 4.15 மணி முதல் 5.50 மணிக்குள் அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டு தேரோட்டம் நடைபெறுகிறது.
தொடர்ந்து தீர்த்தவாரியும், மாலையில் மதுர கவி ஆழ்வார் உற்சவ சாற்றுமுறையும், இரவு பானக பூஜையும் நடக்கிறது. 20-ந்தேதி காலையில் மட்டையடி உற்சவமும், தங்கப்பல்லக்கில் சுவாமி வீதிஉலாவும், இரவு தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது. 21-ந்தேதி விடையாற்றி உற்சவத்துடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.






