search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "devanatha swami temple"

    திருவந்திபுரத்தில் உள்ள புகழ்பெற்ற தேவநாத சாமிகோவிலில் இன்று(திங்கட்கிழமை) ஆண்டாளுக்கும், தேவநாதசாமிக்கும் திருக்கல்யாண உற்சவம் வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது.
    கடலூரை அடுத்த திருவந்திபுரத்தில் உள்ளது புகழ்பெற்ற தேவநாத சாமி கோவில். இங்கு ஆண்டாள் உற்சவம் நேற்று முன்தினம் சிறப்பு திருமஞ்சனத்துடன் தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இந்த உற்சவத்தில், 2-வது நாளான நேற்று காலையில் ஆண்டாளுக்கு திருமஞ்சனம், மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சாமி வீதிஉலா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவில் இன்று(திங்கட்கிழமை) ஆண்டாளுக்கும், தேவநாதசாமிக்கும் திருக்கல்யாண உற்சவம் வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது. இதையொட்டி காலையில் சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் மகா தீபாராதனை நடந்து, திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து சாமிக்கு மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்து, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்க இருக்கிறார்கள். பின்னர் சாமி வீதிஉலா புறப்பாடு நடைபெற உள்ளது.

    நாளை (செவ்வாய்க் கிழமை) தை முதல் நாளான பொங்கல் பண்டிகையன்று தேவநாதசாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் பூஜை நடத்தப்பட்டு மகா தீபாரதனை நடைபெறும். பின்னர் நாளை மறுநாள்(மாட்டுப் பொங்கல் அன்று) மஞ்சு விரட்டு நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. இதில் மாலையில் வெள்ளி குதிரை வாகனத்தில் தேவநாத சாமி எழுந்தருளி பரிவேட்டை செல்வார்.

    அப்போது கெடிலம் ஆற்றில் இறங்கி அலங்காரம் செய்யப்பட்டு உள்ள மாடுகளை சுற்றி வந்து பரிவேட்டை ஆடுவார். தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறும் விழாக்களில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால் பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சாமி தரிசனம் செய்யும் வகையில் முன்னேற்பாடுகளை போலீசார் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
    ×