என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள கோவில்களில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் திருவாதிரை திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    நெல்லை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற டவுன் நெல்லையப்பர் கோவிலில் திருவாதிரை திருவிழாவையொட்டி இன்று காலை 7 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து வருகிற 20-ந்தேதி வரை தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் திருவெம்பாவை வழிபாடு மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

    நெல்லை அருகே உள்ள ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோவிலில் இன்று காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் திருவாதிரை திருவிழா தொடங்கியது. 7-ம் நாளான வருகிற 17-ந்தேதி காலை 10.30 மணிக்கு அழகிய கூத்தர் சபையில் இருந்து விழா மண்டபத்திற்கு எழுந்தருள்கிறார். 20-ந்தேதி அதிகாலை மகா அபிஷேகம், கோபூஜை, ஆருத்ரா தரிசனம் நடக்கிறது.

    இதேபோல் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஸ்ரீ சங்கரலிங்க சுவாமி கோவிலில் திருவெம்பாவை திருவிழா இன்று காலை 5.46 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. சுவாமி சன்னதி முன்பு உள்ள கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரங்கள் நடைபெற்றன. குற்றாலம் குற்றாலிங்க சுவாமி கோவிலிலும் இன்று திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    இந்த ஆண்டு ஆருத்ரா தரிசன விழா வருகிற 19-ந் தேதி விமரிசையாக நடைபெற உள்ளது. இதற்காக திருவாலங்காடு கோவிலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
    திருவள்ளூரை அடுத்த திருவாலங்காட்டில் உள்ள வடாரண்யேஸ்வரர் கோவில் மிகவும் சிறப்பு வாய்ந்தது. நடராஜபெருமானின் 5 சபைகளில் ரத்தின சபையாக திகழ்கிறது.

    இங்கு ஆண்டு தோறும் மார்கழி மாதம் வரும் திருவாதிரை நாளில் ஆருத்ரா தரிசன விழா விமரிசையாக நடப்பது வழக்கம்.

    கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக ஆருத்ரா தரிசன விழா எளிமையாக நடைபெற்றது. குறைந்த அளவிலான பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.

    இந்த நிலையில் இந்த ஆண்டு ஆருத்ரா தரிசன விழா வருகிற 19-ந் தேதி விமரிசையாக நடைபெற உள்ளது. இதற்காக திருவாலங்காடு கோவிலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஆருத்ரா தரிசன விழாவையொட்டி இன்று கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    விழாவையொட்டி வருகிற 19-ந் தேதி காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெறுகிறது. தொடர்ந்து இரவு ரத்ன சபாபதி பெருமாள் கோவில் வளாகத்தின் பின்புறத்தில் உள்ள ஸ்தல விருட்சகத்தின் கீழ் அபிஷேகம் மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார்.

    இதன் பின்னர் விபூதி அபிஷேகத்துடன் ஆருத்ரா தரிசன விழா தொடங்குகிறது. நடராஜருக்கு நெல்லிப்பொடி, வில்வப்பொடி, பால், தேன் மற்றும் பழங்கள் என பல வகையான அபிஷேகங்கள் விடிய விடிய மறுநாள் காலை வரை நடத்தப்படுகிறது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அபிஷேகம் முடிந்ததும் சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை நடைபெற்று நடராஜபெருமான் ஆலமர பிரகாரத்தை வலம்வந்து கோபுர தரிசனத்திற்கு பின் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருள்வார்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
    வலிய படுக்கை பூஜையின்போது நள்ளிரவில் அம்மனுக்கு மிகவும் பிடித்தமான பழ வகைகள், தேன், தினை மாவு, கரும்பு, அவல், பொரி ஆகியவகைகள் பெரும் படையலாக படைத்து வழிபடுவார்கள்.
    குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலும் ஒன்று. இங்கு கேரள பெண் பக்தர்கள் இருமுடிக்கட்டி வந்து அம்மனை வழிபடுவதால் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது.

    இந்த கோவிலில் மாசிக்கொடை விழா 10 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நடைபெறும். இந்த கோவிலில் மகா பூஜை என்னும் வலியபடுக்கை பூஜை முக்கிய வழிபாடாக கருதப்படுகிறது. இந்த பூஜை ஆண்டுக்கு 3 முறை மட்டுமே நடைபெறும். அதாவது, மாசிக்கொடையின் 6-ம் நாளிலும், பங்குனி மாதம் மீனபரணி கொடைவிழாவன்றும், கார்த்திகை மாதம் கடைசி வெள்ளிக்கிழமையன்றும் இந்த வழிபாடு நடைபெறும்.

    வலிய படுக்கை பூஜையின்போது நள்ளிரவில் அம்மனுக்கு மிகவும் பிடித்தமான பழ வகைகள், தேன், தினை மாவு, கரும்பு, அவல், பொரி ஆகியவகைகள் பெரும் படையலாக படைத்து வழிபடுவார்கள்.

    இந்த ஆண்டில் 3-வது வலிய படுக்கை பூஜை நேற்று நள்ளிரவு நடந்தது. இதை முன்னிட்டு அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 5.30 மணிக்கு உற்சவ மூர்த்திக்கு பஞ்சாபிஷேகம், 6.30 மணிக்கு உஷ பூஜை, நண்பகல் 12.30 மணிக்கு உச்ச கால பூஜை, அன்னதானம், மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 8.30 மணிக்கு அத்தாழ பூஜை, நள்ளிரவு 12 மணிமுதல் 1 மணிக்குள் வலிய படுக்கை பூஜை போன்றவை நடந்தது. இதில் கேரள மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிப்பட்டனர்.
    இத்துதியை தினமும் அல்லது சனிக்கிழமைகளில் பாராயணம் செய்து வந்தால் சகல காரிய சித்திகளும் கிட்டும். புதன் கிரக தோஷங்கள் விலகும்.
    வரதராஜ பெருமாளுக்கு உகந்த இத்துதியை தினமும் பாராயணம் செய்து வந்தால் சகல காரிய சித்திகளும் கிட்டும். புதன் கிரக தோஷங்கள் விலகும்.
    சகல காரிய சித்தி பெற வரதராஜ பெருமாள் ஸ்லோகம்
    ஸத்யவ்ரத க்ஷேத்ரவாஸீ ஸத்யஸ் ஸஜ்ஜனபோஷக:
    ஸர்கஸ்தித்யுபஸம்ஹார காரீஸுகுணவாரிதி:
    வரதாபயஹஸ்தாப்ஜ: வனமாலாவிராஜித:
    ஸங்கசக்ரலஸத்பாணி: ஸரணாகதரக்ஷக:

    - ஸ்ரீ வரதராஜ ஸ்தோத்திரம்.

    பொதுப்பொருள் :

    சத்யவிரதம் என்று போற்றப்படும் காஞ்சிபுரத்தில் அருளும் வரதராஜப் பெருமாளே நமஸ்காரம். அப்பாவிகளைக் கரையேற்றும் ஆபத்பாந்தவரே நமஸ்காரம். படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் மேற்கொண்டிருப்பவரே, ஒரு சமுத்திரம் போல சீரிய கல்யாண குணங்களைக் கொண்டு அருள் மழை பொழிபவரே நமஸ்காரம். தாமரை போன்ற கரங்களில் அபய-வரத முத்திரைகளைத் தாங்கியிருப்பவரே, வனமாலையினால் பிரகாசிக்கின்றவரே, நமஸ்காரம். சங்கம், சக்கரம் தாங்கியவரே, சரணடைந்தோரைக் காப்பவரே, நானும் சரணடைகிறேன், என்னையும் காத்தருளுங்கள்.
    பிள்ளையார்பட்டியில் உள்ள பிரசித்தி பெற்ற கற்பகவிநாயகர் கோவிலில் தைப்பூசம் வரை பகல் முழுவதும் பிள்ளையார்பட்டி கோவிலில் நடை திறந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.
    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பகவிநாயகர் கோவில் உள்ளது. தற்போது கார்த்திகை மாதம் என்பதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான ஐயப்ப பக்தர்கள் கார், வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் இங்கு வந்து தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். இதனால் தற்போது பகல் நேரங்களில் பிள்ளையார்பட்டி கோவிலில் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டு வருகிறது.

    இதேபோல் வரும் ஜனவரி மாதம் 18-ந்தேதி தைப்பூச விழாவையொட்டி சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து பாதயாத்திரையாக பழனிக்கு செல்லும்போது அவர்கள் பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்வது வழக்கம். இதையடுத்து தைப்பூசம் வரை பகல் முழுவதும் பிள்ளையார்பட்டி கோவிலில் நடை திறந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். இத்தகவலை கோவில் டிரஸ்டிகள் கண்டனூர் நா.கருப்பஞ்செட்டியார், ஆ.முத்துப்பட்டிணம் சி.சுப்பிரமணியன் செட்டியார் ஆகியோர் தெரிவித்தனர்.
    உலகில் வேறு எங்கும் காண இயலாத வகையில் தலைகீழாய் அமர்ந்து சிரசாசனத்தில் காட்சி தரும் அதிசய கோவில் ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ளது. அதன் பெயர் யனமதுரு ஸ்ரீ பார்வதி அம்பிகா சமேத சக்தீஸ்வரர் ஆலயம்.
    இறைவன் பக்தர்களுக்கு அருள்புரிய பல கோலங்கள் பூண்டு அதிசயிக்கும் வண்ணம் உருவங்களை மாற்றி காட்சி தருவார். அந்த வகையில் உலகில் வேறு எங்கும் காண இயலாத வகையில் தலைகீழாய் அமர்ந்து சிரசாசனத்தில் காட்சி தரும் அதிசய கோவில் ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ளது. அதன் பெயர் யனமதுரு ஸ்ரீ பார்வதி அம்பிகா சமேத சக்தீஸ்வரர் ஆலயம்.

    முன்னொரு காலத்தில் சம்பாசுரன் என்ற அரக்கன் கடும் தவம் புரிந்து பிரம்மனிடம் இருந்து பல வரங்களை பெற்றான்.

    தன் வரத்தை கொண்டு அனைத்து தேவர்களையும், முனிவர்களையும் துன்புறுத்தி வந்தான். அஷ்டதிக்கு பாலகர்களில் எமனை தவிர அனை வரையும் தோற்கடித்தான்.

    எமன் தனது பலத்தால் போர் புரிந்தார். போர் தொடர்ந்து கொண்டே இருக்க எமன் தன் பலத்தை இழந்து கொண்டே வந்தார். இறுதியாக சம்பாசுரன் எமபுரியை கைப்பற்றினான். தேவர்களை அடிமைப்படுத்தினான். இதனால் எமன் சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிந்தார். அப்போது இறைவன் தற்பொழுது கோவில் உள்ள இடத்தில் ஆழ்ந்த தியானத்தில் சிரசானத்தில் இருந்தார். ஈசனின் தியானம் கலைய வழி அறியாது எமன் நின்றார். எமனின் வேதனை அறிந்த அன்னை பார்வதி காட்சி அளித்தார்.

    எமனிற்கு அசுரனை அழிக்கும் சக்தி வழங்கினார். எமனும் சம்பாசுரனை கொன்று தேவர்களின் குறையை தீர்த்தார். பின் இங்கு வந்து சிரசாசனத்தில் இருந்த இறைவனையும், குழந்தை முருகனுடன் இருந்த பார்வதியையும் பூஜித்தார். எனவே தான் இன்றும் இங்கே இறைவன் சிரசாசனத்தில் தலைகீழாய் காட்சி தருகிறார் என்கிறது தலபுராணம்.

    இங்கே கருவறையில் இறைவன் தலைகீழாய் லிங்கம் இன்றி உருவமாக காட்சி தருகிறார். அதாவது சிரசை பூமியில் பதித்து பாத்தை மேலே தூக்கி நிறுத்தி சிரசாசனத்தில் காட்சி தருகிறார். அருகிலேயே அன்னை வேறு எங்கும் இல்லாத வண்ணம் குழந்தை முருகனை மடியில் கிடத்திக் கொண்டு தாய்மையே வடிவாக பார்வதி தேவி காட்சி அளிக்கிறார். எமன் பூஜித்த தலம் ஆதலால் ஜாதகத்தில் அபமிருத்யு தோஷம் உள்ளவர்கள், ஜாதகத்தில் கண்டம் உள்ளவர்கள் இங்கு வந்து இறைவனையும் அம்பிகையையும் ஒரு சேர தரிசித்து செல்ல எம பயம் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. நவகிரகங்களால் ஏற்படும் பிரச்சினைகள், திருமண தடை, குழந்தையின்மை போன்ற குறைபாடுகளை நீக்கும் தலமாகவும் விளங்குகிறது. ஆந்திர மாநிலம் பீமாவரத்தில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள எனமதுரு கிராமத்தில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.
    ஆருத்ரா தரிசன விழா கொடியேற்ற நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதியில்லை என்பதால் அந்த சமயத்தில் கோவிலின் 4 கோபுர வாசல்களிலும் தடுப்புகள் அமைத்து கோவிலுக்கு வந்த பக்தர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
    உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதம் ஆனித்திருமஞ்சன தரிசனமும் தொன்றுதொட்டு நடைபெற்று வருகிறது.

    அதன்படி இந்த ஆண்டுக்கான ஆருத்ரா தரிசன உற்சவ கொடியேற்றம் இன்று (11-ந் தேதி) காலை நடைபெற்றது. கோவிலின் சித்ர சபை எதிரே உள்ள கொடி மரத்தில் பஞ்சமூர்த்திகள் முன்னிலையில் சுவாமியின் பிரதிநிதியான ஹஸ்தராஜரை முன்நிறுத்தி ஆவாஹனம் செய்து காலை 8.20 மணி அளவில் கொடியேற்றப்பட்டது.

    கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் யாரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதிக்க படமாட்டார்கள் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கபட்டிருந்தது.

    இன்று அதிகாலை சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள 4 கோபுரவாசல்களும் வழக்கம் போல் திறக்கபட்டு பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கபட்டு வந்தனர்.

    ஆருத்ரா தரிசன விழா கொடியேற்ற நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதியில்லை என்பதால் அந்த சமயத்தில் கோவிலின் 4 கோபுர வாசல்களிலும் தடுப்புகள் அமைத்து கோவிலுக்கு வந்த பக்தர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த பக்தர்கள் மற்றும் அந்த பகுதி பா.ஜ.க. முக்கிய நிர்வாகிகள் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கபட்டனர்.

    இதைத்தொடர்ந்து ஆருத்ரா தரிசன விழா கொடியேற்ற நிகழ்ச்சியில் திராளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ஆருத்ரா தரிசன விழா கொடியேற்ற நிகழ்ச்சியை தொடர்ந்து நாளை (12-ந் தேதி) வெள்ளி சந்திர பிரபை வாகன வீதிஉலா, 13-ந் தேதி தங்க சூரிய பிரபை வாகனத்தில் வீதிஉலா, 14-ந் தேதி வெள்ளி பூத வாகனத்தில் வீதிஉலா, 15-ந் தேதி வெள்ளி ரி‌ஷப வாகனத்தில் தெருவடைச்சான் வீதி உலாவும், 16-ந் தேதி வெள்ளி யானை வாகன வீதி உலாவும், 17-ந் தேதி தங்க கைலாச வாகன வீதி உலா 18-ந் தேதி தங்க ரதத்தில் சோமாஸ்கந்தர் வெட்டுக்குதிரையில் வீதி உலாவும் நடைபெறுகிறது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேர்த்திருவிழா வருகிற 19-ந் தேதி கோவில் உள்பிரகாரத்தில் நடக்கிறது. இதற்கும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அன்று இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடைபெறுகிறது.

    20-ந் தேதி அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு மகாபிஷேகம் நடக்கிறது. பின்னர் காலை 10 மணிக்கு சித்ரசபையில் ரகசிய பூஜையும், பஞ்ச மூர்த்தி வீதிஉலா வந்த பின்னர் பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனமும், ஞான காச சித்ரசபா பிரவேசமும் நடைபெறுகிறது.

    21-ந் தேதி பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதிஉலாவுடன் உற்சவம் முடிவடைகிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் பொதுதீட்சிதர்கள் செய்துள்ளனர். உற்சவத்தின் 10 நாட்களும் மாலை 6 மணிக்கு சாயரட்சை பூஜையில் சித்ரசபை முன்பு மாணிக்க வாசகரை எழுந்தருளச் செய்து திருவெம்பாவை உற்சவம் நடைபெறுகிறது.

    கொரோனா தொற்று பரவல் காரணமாக மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில் ஆருத்ரா தரிசன உற்சவம் பக்தர்களின்றி நடைபெறும். அதேவேளையில் தினமும் உற்சவ நேரம் தவிர மற்ற நேரங்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சபரிமலை பக்தர்களின் கோரிக்கையை ஏற்று நீலிமலை, அப்பாச்சி மேடு வழியாக சன்னிதானம் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இதற்காக இந்த பாதையில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.
    திருவனந்தபுரம் :

    கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா நடந்து வருகிறது.

    கொரோனா பரவல் குறைந்து வருவதை தொடர்ந்து சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு கூடுதல் தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது.

    அதன்படி ஆன்லைன் முன்பதிவு மூலம் தினமும் 40 ஆயிரம் பக்தர்களும், உடனடி முன்பதிவு மூலம் 5 ஆயிரம் பக்தர்களும் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இதையடுத்து வெளிமாநில பக்தர்கள் பலரும் கோவிலுக்கு வர தொடங்கி உள்ளனர். இதனால் நாளுக்கு நாள் கூட்டம் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    சபரிமலை செல்லும் பக்தர்கள் சன்னிதானத்திற்கு பாரம்பரிய பாதையான நீலிமலை, அப்பாச்சி மேடு வழியாக செல்வதை அதிகம் விரும்புவார்கள். இது மலைபாங்கான பாதையாகும்.

    கேரளாவில் பெய்த மழை காரணமாக இந்த பாதையை பக்தர்கள் பயன்படுத்த அரசு அனுமதி வழங்கவில்லை. தற்போது மழை குறைந்து விட்டதால் நீலிமலை பாதையை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து தேவசம்போர்டு மந்திரி ராதாகிருஷ்ணன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சபரிமலை பக்தர்களின் கோரிக்கையை ஏற்று நீலிமலை, அப்பாச்சி மேடு வழியாக சன்னிதானம் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இதற்காக இந்த பாதையில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. அப்பாச்சி மேட்டில் சிகிச்சை மையமும் தொடங்கப்பட்டு உள்ளது.

    இதுபோல பம்பையில் பக்தர்கள் குளிக்கவும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அதுபோல அவர்கள் ஆற்றில் பலிதர்ப்பணம் செய்யவும் அனுமதிக்கப்படுவார்கள். ஆற்றில் ஏற்படும் வெள்ளப் பெருக்கை கண்காணித்து பக்தர்கள் குளிப்பது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் முடிவு செய்யும்.

    சபரிமலை சன்னிதானம் செல்லும் பக்தர்கள் அங்கு இரவு நேரத்தில் தங்கவும் அனுமதி வழங்கப்படுகிறது. இதற்காக அங்கு 500 அறைகள் தயார் செய்யப்பட்டு உள்ளன.

    அந்த அறைகளில் அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் படி அறைகளில் தங்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நெல்லை அருகே உள்ள செப்பறை அழகிய கூத்தர் கோவிலில் திருவாதிரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வருகிற 19-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது.
    நெல்லை அருகே ராஜவல்லிபுரத்தில் உள்ள செப்பறை அழகிய கூத்தர் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி திருவாதிரை திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சிறப்பு அலங்காரம், தீபாராதனை, சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.

    7-ம் திருநாளான வருகிற 17-ந் தேதி காலை 10.30 மணிக்கு மேல் அழகிய கூத்தர் சபையில் இருந்து விழா மண்டபத்திற்கு எழுந்தருள்கிறார். மாலை 4 மணிக்கு அபிஷேகம், இரவு 7 மணிக்கு சிவப்பு சாத்தி தரிசனம் நடக்கிறது. 8-ம் திருநாளான 18-ந் தேதி காலை 10 மணிக்கு வெள்ளை சாத்தி தரிசனம், மாலை 5 மணிக்கு பச்சை சாத்தி தரிசனம் நடக்கிறது. இரவு 7 மணிக்கு தீபபூஜை நடக்கிறது.

    9-ம் திருநாளான 19-ம் தேதி காலை 11 மணிக்கு மேல் அழகிய கூத்தர் திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும், தொடர்ந்து தேரோட்டமும் நடக்கிறது. மதியம் 1 மணிக்கு அன்னதானம் நடக்கிறது.

    20-ம் தேதி அதிகாலை 2 மணிக்கு மகாஅபிஷேகம், காலை 5.30 மணிக்கு கோபூஜையும், ஆருத்ரா தரிசனமும் நடக்கிறது. மதியம் 2 மணிக்கு நடன தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து அன்னதானம் நடக்கிறது. மதியம் 3 மணிக்கு அழகிய கூத்தர் திருவீதி உலா வருதல், மாலை 5 மணிக்கு பஞ்சமுக அர்ச்சனை, இரவு 7.30 மணிக்கு பிற்கால அபிஷேகம், இரவு 10 மணிக்கு அழகிய கூத்தர் தாமிரசபைக்கு எழுந்தருளல் நடக்கிறது.

    இதேபோல் நெல்லையப்பர் கோவிலில் இன்று (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு திருவாதிரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வருகிற 14-ந் தேதி இரவு 7 மணிக்கு சுவாமி, அம்பாள் பஞ்ச மூர்த்திகளுடன் வீதி உலா நடக்கிறது. 19-ம் தேதி தாமிர சபையில் இரவு முழுதும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார நடக்கிறது. 20-ந் தேதி அதிகாலை 3 மணிக்கு நடராஜர் திருநடன காட்சியும், ஆருத்ரா தரிசனம் நடக்கிறது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் 20-ந் தேதி வரை பெரிய சபாபதி சன்னதி முன்பு அதிகாலை 5 மணி முதல் 6 மணி வரை திருவெண்பாவை வழிபாடு நடக்கிறது.
    யார் ஒருவர் சபரிமலைக்கு கருப்பு நிற உடை உடுத்தி சென்று ஸ்ரீ தர்ம சாஸ்தாவினைக் காண்கிறார்களோ அவர்களுக்கு சனியின் பாதிப்பு ஏதும் அறவே இருக்காது.
    கருப்பும் உடுத்து பம்பையில் முங்கி சபரிக்கு போம் ஐயப்பன்மார் என்கிற பாடலின் வாயிலாக ஐயன் ஐயப்பனுக்கு ஏற்ற, பிடித்தமான உடை கருப்பு என்பதை அறியலாம். பல்லாயிரக்கணக்கான அன்பர்கள் கருப்பு வேஷ்டி துண்டு அணிந்து தான் மலைக்கு வருகின்றனர்.

    அதிலும் குறிப்பாக ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலிருந்து வருவோர் கருப்பு நிற ஆடை மட்டும் அணிகின்றனர். இதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. ஐயப்ப ஸ்வாமியின் பரிவார தேவதையான ஸ்ரீ கருப்பஸ்வாமி ஸ்ரீ கருப்பாயி தேவி கருமை நிற ஆடை அணிபவர்கள். அவர்களின் வழி பின்பற்றி ஐயப்ப சாமிகளிடம் கருநிற ஆடை அணிகின்றனர்.

    அடுத்து சபரிமலையில் யானைகள் அதிகம் உள்ளன. காட்டு யானைகள் பெருவழியில் அதிகம் நடமாடும். அவை வெள்ளை நிறம் கண்டால் சினம் கொண்டு பிளிரும். கருப்பு நிறம் கண்டால் வெகுண்டு எழாது. மற்றும் வன தேவதைகளை சாந்தி செய்யவும் கருப்பு உடுத்துவது வழக்கமாக உள்ளது.

    மேலும் கருப்பு நிறம் சனீஸ்வர பகவானுக்கு ஏற்றது. யார் ஒருவர் சபரிமலைக்கு கருப்பு நிற உடை உடுத்தி சென்று ஸ்ரீ தர்ம சாஸ்தாவினைக் காண்கிறார்களோ அவர்களுக்கு சனியின் பாதிப்பு ஏதும் அறவே இருக்காது. ஏன் என்றால் சனீஸ்வரன் ஸ்ரீ தர்ம சாஸ்தாவின் பரம அனுக்கிரகம் பெற்றவன்.

    இது தொடர்பாக கூறப்படும் கதை வருமாறு:

    இந்த உலகையும் மற்ற எல்லா கிரகங்களையும் தன் கிரணங்களால் அனுகுகின்றவன் சூரிய பகவான். அவருக்கு உஷா என்ற மனைவி உண்டு. இந்த உஷா விஸ்வகர்மாவின் மகள் ஆவாள். இந்த விஸ்வகர்மா தான் தேவலோகத்து தேவர்களின் ஆணைப்படி பல கட்டிடங்களையும், சிற்ப வேலைப்பாடுகளையும் செய்பவர். தேவலோக சிற்பி ஆவார். இன்றும் விஸ்வகர்மா வகுப்பினர் தங்கம், வெள்ளி ஆபரணங்கள் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருவதை காணலாம்.
    சூரியன் - உஷா தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள். 2 பேர் ஆண்கள். ஒரு மகள்.

    1. வைவஸ்வத மனு - மகன், 2. யமதர்ம ராஜன் - மகன், 3. யமுனா தேவி என்ற மகள். எனவே தான் யமுனா நதி கருப்பாக உள்ளது. (யமதர்ம ராஜனின் சகோதரி என்பதால்). சூரியனின் வெப்பத்தை அவரது மனைவியான உஷா தேவியால் கூட தாங்க இயலவில்லை. இங்கு உஷா தேவியினை மக்களாகவும் கருதி சிந்திக்க வேண்டும். வெயிலின் அருமை நிழலில் தெரியும் என்பார்கள் எனவே உஷா தேவி தன் நிழலை உருவாக்கி சாயா தேவி என்று மாறினாள். சாயா என்றால் நிழல் என்றும் பொருள் வரும். சூரியனை விட்டுவிட்டு விஸ்வகர்மாவாகிய தன் தந்தையிடம் உஷா சென்றுவிட்டாள். இந்த சூரியன் மனைவியாகிய சாயாதேவி தன் கணவரிடமும், உஷா தேவியின் குழந்தைகளிடமும் பிரியமாக நடந்து கொண்டாள். நாளடைவில் இந்த சாயா தேவிக்கும் மூன்று குழந்தைகள் பிறந்தன.

    1. சாவர்ணி மனு - மகன், 2. ச்ருத கர்மா - மகன் மற்றுத் பத்ரை என்ற மகளும் பிறந்தனர்.

    தனக்கு குழந்தைகள் பிறந்ததும் சாயாதேவி உஷா தேவியின் குழந்தைகளை வெறுக்க தொடங்கினாள். குழந்தைகளிடம் கடுமையாகவும் நடந்து கொண்டாள். இதனால் எமதர்மன் மிகவும் துன்பத்திற்கு ஆளானான். ஒரு சமயம் எமதர்மன் காலை தூக்குவதை கண்ட சாயா தேவி தன்னைத்தான் உதைக்க வருவதாக எண்ணி அவன் கால் எழுகக்கடவது என சாபமிட்டாள்.

    தாய் சாபமிடுவதை கண்ட எமன் சந்தேகமுற்றான். நல்ல தாய் தன் மகனை ஒருக்காலும் சபிக்கமாட்டாள். தன் சந்தேகத்தினை சூரிய பகவானான தந்தையிடம் கூறினான். சினம் கொண்ட சூரியன் உண்மையினை கூறும்படி கட்டளையிட்டார். சாயா தேவியும் தான் உஷா தேவி அல்ல என்ற உண்மையினை ஒத்துக்கொண்டாள்.

    சூரிய பகவானும் எமதர்ம ராஜனை பூலோகம் சென்று தாயின் நோய் தீர்க்கும் தயாவான தத்துவனாகிய ஸ்ரீ தர்ம சாஸ்தாவினை நோக்கி தவம் செய்து சாப விமோசனம் பெற வழிகாட்டினார். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதனை உணர்ந்த எமன் பூலோகம் வந்து தவம் இருந்து வேண்டினார். அவனது தவ வலிமையினைக் கண்டு உள்ளம் மகிழ்ந்து ஸ்ரீ தர்ம சாஸ்தா அவன் முன் தோன்றினார். சாப விமோசனம் தந்து எமலோகத்திற்கு அதிபதியாக்கினார்.

    இப்படிப்பட்ட உயர்ந்த நிலையினை ஸ்ரீ தர்ம சாஸ்தாவின் அனுகிரகத்தினால் எமன் கிடைக்கப்பெற்றதனை அறிந்த ஸ்ரீ சாயா தேவியின் இளைய மகனாகிய ச்ருத கர்மா தானும் பூலோகம் வந்து ஸ்ரீ தர்ம சாஸ்தாவை காலையும் மாலையும் பூஜை செய்து வழிபட்டான். பின்னர் கடும் தவம் மேற்கொண்டு சகல வரங்ளையும் அருளும் ஸ்ரீ தர்ம சாஸ்தாவினையே தியானம் செய்து வந்தான்.

    அவனது அன்பு கலந்த பக்தியினால் மகிழ்ந்த ஸ்ரீ தர்ம சாஸ்தா அவன் முன் தோன்றி அவனுக்கு சூரிய மண்டலத்தில் கிரக நிலையினை அருளினார். அவன் மெதுவாக நகர்வதால் (அவன் சூரியனைச் சுற்றிவர 30 ஆண்டுகள் ஆகும்) சனீஸ்வரன் என்ற பெயரும் சூட்டினார். வாரத்தின் கடைசி நாளையும் அவன் பெயரில் அழைக்க அருள்பாலித்தருளினார்.

    மேலும் அந்த சனிக்கிழமையினையே தனக்கு உகந்த நாளாக ஏற்று ஐயப்பன் அருள் செய்தார். இதற்கு பிரிதி உபகாரமாக சனிபகவானும் யார் ஒருவர் கருப்பு நிற உடை உடுத்தி சனிக்கிழமை தோரும் விரதம் இருந்து சபரிமலை வந்து ஸ்ரீ தர்ம சாஸ்தா சொரூபமாகிய ஐயப்பனை அன்புடன் வேண்டுகிறார்களோ அவர்களை கஷ்டங்களுக்கு உள்ளாக்க மாட்டேன் என கூறினார்.

    எனவே தான் சபரிமலைக்கு கருப்பு நிற உடை அணிந்து வரும் பக்தர்களுக்கு 7 1/2 சனியின் தாக்கம் கடுமையாக இருப்பதில்லை.

    திருப்பதி ஏழுமலையானுக்கு 5.3 கிலோ எடையில் வைரம் மற்றும் மாணிக்க கற்கள் பதிக்கப்பட்டு ரூ.3 கோடியில் தங்கத்தால் தயாரிக்கப்பட்ட கைகளை பக்தர் ஒருவர் காணிக்கையாக வழங்கினார்.
    திருமலை

    திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு 5.3 கிலோ எடையில் வைரம் மற்றும் மாணிக்க கற்கள் பதிக்கப்பட்டு ரூ.3 கோடியில் தங்கத்தால் தயாரிக்கப்பட்ட கைகளை பக்தர் ஒருவர் காணிக்கையாக வழங்கினார்.

    அதை, கோவிலில் உள்ள ரெங்கநாயக்கர் மண்டபத்தில் பக்தரிடம் இருந்து திருமலை-திருப்பதி தேவஸ்தான கூடுதல் முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி பெற்றுக் கொண்டார். பின்னர் அந்தப் பக்தருக்கு கோவிலில் சாமி தரிசன ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வைத்தனர்.
    வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் இன்று (சனிக்கிழமை) முதல் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது என்று கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
    வேலூரில் பெய்த தொடர்மழையின் காரணமாக கோட்டை அகழியில் நீர்மட்டம் உயர்ந்தது. இதனால் கடந்த மாதம் 12-ந் தேதி ஜலகண்டேஸ்வரர் கோவிலில் இருந்து அபிஷேகநீர் வெளியே செல்லும் வழியாக அகழி தண்ணீர் கோவிலுக்குள் புகுந்தது. கோவில் வளாகத்தில் குளம்போல் தண்ணீர் தேங்கி நின்றது. தண்ணீரில் நடந்து சென்றபடி பக்தர்கள் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்து வந்தனர்.

    கடந்த மாதம் 29-ந் தேதி கோவிலின் அம்மன் கருவறைக்குள் தண்ணீர் புகுந்தது. அதையடுத்து பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. உற்சவர் மற்றும் அம்மன் தினமும் கோவில் ராஜகோபுரத்திற்கு வெளியே நந்தி வாகனத்தில் சிறப்பு அலங்காரம் செய்து வைக்கப்பட்டது. அதனை கோவிலுக்கு வரும் பக்தர்கள் தரிசனம் செய்து வந்தனர்.

    ஜலகண்டேஸ்வரர் கோவில் வளாகத்தில் தேங்கிய தண்ணீர் மின்மோட்டார் மூலம் கோட்டை விளையாட்டு மைதானத்தில் வெளியேற்றும் பணி நடந்தது. ஆனால் அகழியின் பல்வேறு பகுதியில் இருந்து கோவிலுக்குள் தண்ணீர் வந்து கொண்டேயிருந்தது. அதனால் அனைத்து தண்ணீரையும் உடனடியாக வெளியேற்ற முடியவில்லை.

    இதற்கிடையே கோட்டை அகழி உபரிநீர் பல்வேறு கட்ட முயற்சிக்கு பின்னர் கால்வாய் வழியாக மீன்மார்க்கெட் பகுதியில் வெளியேற தொடங்கியது. அதைத்தொடர்ந்து கடந்த 7-ந் தேதி பெரிய அளவிலான மின்மோட்டார்கள் மூலம் கோவில் வளாகத்தில் தேங்கிய தண்ணீர் இரவு, பகலாக தொடர்ந்து வெளியேற்றப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று மாலை கோவில் வளாகத்தில் தேங்கி காணப்பட்ட தண்ணீர் முற்றிலும் வெளியேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து கோவில் ஊழியர்கள் ஆங்காங்கே காணப்பட்ட சகதியை அப்புறப்படுத்தி கோவில் வளாகத்தை தூய்மைப்படுத்தினார்கள். கோவில் வளாகத்தில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டதால் இன்று (சனிக்கிழமை) முதல் சாமி தரிசனம் செய்ய பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. கோவிலில் வழக்கம்போல் சாமிக்கு பூஜை, அபிஷேகம், ஆராதனை நடைபெறும். அகழியில் இருந்து கோவிலுக்குள் தண்ணீர் வந்தால் அதனை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
    ×