என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா 19-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
விழாவில் நேற்று காலை 6.15 மணிக்கு திருப்பலி, 8 மணி முதல் மாலை 4 மணி வரை நேர்ச்சை கொடிகள் பவனி, 5.30 மணிக்கு திருக்கொடி பவனி, ஜெபமாலை போன்றவை நடந்தது. 6.30 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி கொடியேற்றி வைத்தார். தொடர்ந்து திருப்பலி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து ெகாண்டனர்.
தொடர்ந்து வருகிற விழா நாட்களில் தினமும் திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர், ஜெபமாலை, மாலை ஆராதனை மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.
இன்று (சனிக்கிழமை) முதல் 18-ந் தேதி வரை தினமும் அதிகாலை 5 மணிக்கு பழைய கோவிலில் திருப்பலியும், காலை 8 மணிக்கு திரு இருதய ஆண்டவர் பீடத்தில் நற்கருணை ஆராதனையும் நடக்கிறது.
16, 17-ந் தேதிகளில் இரவு 9 மணிக்கு சப்பர பவனி நடக்கிறது. 18-ந் தேதி இரவு 8 மணிக்கு வானவேடிக்கை, 9 மணிக்கு புனித சூசையப்பர் தங்கத் தேர் பவனி போன்றவை நடைபெறும்.
திருவிழாவின் இறுதி நாளான 19-ந் தேதி அதிகாலை 4.30 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் தங்கத்தேர் திருப்பலியும், 6 மணிக்கு பெருவிழா நிறைவு திருப்பலியும், 8 மணிக்கு ஆங்கில திருப்பலியும் நடைபெறும்.
காலை 9 மணிக்கு மாதா, சூசையப்பர் ஆகிய இரு தங்கத்தேர் பவனி நடக்கிறது. மதியம் 12 மணிக்கு தமிழில் திருப்பலி நடைபெறும். விழாவில் பங்கு மக்கள் அனைவரும் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி முககவசம் அணிந்து கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை திருத்தல அதிபர் ஆண்டனி அல்காந்தர், பங்கு தந்தையர்கள் ஜேக்கப், கிங்ஸ்லி, மெர்வின், பங்கு பேரவை துணைத்தலைவர் செல்வராணி ஜோசப், செயலாளர் சுமன், துணை செயலாளர் பினோ, பொருளாளர் தீபக் மற்றும் பங்கு பேரவை, அன்பிய ஒருங்கிணைப்பாளர்கள் செய்துள்ளனர்.
விழாவில் நேற்று காலை 6.15 மணிக்கு திருப்பலி, 8 மணி முதல் மாலை 4 மணி வரை நேர்ச்சை கொடிகள் பவனி, 5.30 மணிக்கு திருக்கொடி பவனி, ஜெபமாலை போன்றவை நடந்தது. 6.30 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி கொடியேற்றி வைத்தார். தொடர்ந்து திருப்பலி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து ெகாண்டனர்.
தொடர்ந்து வருகிற விழா நாட்களில் தினமும் திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர், ஜெபமாலை, மாலை ஆராதனை மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.
இன்று (சனிக்கிழமை) முதல் 18-ந் தேதி வரை தினமும் அதிகாலை 5 மணிக்கு பழைய கோவிலில் திருப்பலியும், காலை 8 மணிக்கு திரு இருதய ஆண்டவர் பீடத்தில் நற்கருணை ஆராதனையும் நடக்கிறது.
16, 17-ந் தேதிகளில் இரவு 9 மணிக்கு சப்பர பவனி நடக்கிறது. 18-ந் தேதி இரவு 8 மணிக்கு வானவேடிக்கை, 9 மணிக்கு புனித சூசையப்பர் தங்கத் தேர் பவனி போன்றவை நடைபெறும்.
திருவிழாவின் இறுதி நாளான 19-ந் தேதி அதிகாலை 4.30 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் தங்கத்தேர் திருப்பலியும், 6 மணிக்கு பெருவிழா நிறைவு திருப்பலியும், 8 மணிக்கு ஆங்கில திருப்பலியும் நடைபெறும்.
காலை 9 மணிக்கு மாதா, சூசையப்பர் ஆகிய இரு தங்கத்தேர் பவனி நடக்கிறது. மதியம் 12 மணிக்கு தமிழில் திருப்பலி நடைபெறும். விழாவில் பங்கு மக்கள் அனைவரும் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி முககவசம் அணிந்து கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை திருத்தல அதிபர் ஆண்டனி அல்காந்தர், பங்கு தந்தையர்கள் ஜேக்கப், கிங்ஸ்லி, மெர்வின், பங்கு பேரவை துணைத்தலைவர் செல்வராணி ஜோசப், செயலாளர் சுமன், துணை செயலாளர் பினோ, பொருளாளர் தீபக் மற்றும் பங்கு பேரவை, அன்பிய ஒருங்கிணைப்பாளர்கள் செய்துள்ளனர்.
வடபழனி முருகன் கோவிலில் முகூர்த்த நாட்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தி திருமணங்கள் நடத்துவதற்கு 43 முகூர்த்த மண்டபங்கள் அமைக்கப்படவுள்ளன.
சென்னை
சென்னை வடபழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான திருப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
அனைத்து பணிகளும் முடிவு பெற்று கோவில் கும்பாபிஷேகத்திற்கு தயார் நிலையில் உள்ளதால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனைப்படி வருகிற ஜனவரி 23-ந்தேதி அன்று குடமுழுக்கு நடத்த தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது.
இக்கோவிலில் முகூர்த்த நாட்களில் கூட்டம் நிரம்பி வழியும். அவ்வாறான நாட்களில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தி திருமணங்கள் நடத்துவதற்கு 43 முகூர்த்த மண்டபங்கள் அமைக்கப்படவுள்ளன. கும்பாபிஷேகத்தில் பக்தர்கள் பங்கேற்பது குறித்து அப்போதைய கொரோனா கால சூழ்நிலைக்கு ஏற்றவாறு நிச்சயம் அனுமதி அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் ஜெ. குமரகுருபரன், கோவில் தக்கார் ஆதிமூலம், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மயிலை த.வேலு, ஜெ.கருணாநிதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
சென்னை வடபழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான திருப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
அனைத்து பணிகளும் முடிவு பெற்று கோவில் கும்பாபிஷேகத்திற்கு தயார் நிலையில் உள்ளதால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனைப்படி வருகிற ஜனவரி 23-ந்தேதி அன்று குடமுழுக்கு நடத்த தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது.
இக்கோவிலில் முகூர்த்த நாட்களில் கூட்டம் நிரம்பி வழியும். அவ்வாறான நாட்களில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தி திருமணங்கள் நடத்துவதற்கு 43 முகூர்த்த மண்டபங்கள் அமைக்கப்படவுள்ளன. கும்பாபிஷேகத்தில் பக்தர்கள் பங்கேற்பது குறித்து அப்போதைய கொரோனா கால சூழ்நிலைக்கு ஏற்றவாறு நிச்சயம் அனுமதி அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் ஜெ. குமரகுருபரன், கோவில் தக்கார் ஆதிமூலம், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மயிலை த.வேலு, ஜெ.கருணாநிதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதையும் படிக்கலாம்....பைரவர் விரத வழிபாடும்... வழிபாட்டிற்கு உகந்த நேரமும்...
இரவு அர்த்தசாமப் பூஜை முடிந்ததும் பைரவருக்கான சிறப்பு வழிபாடுகள் செய்து ஆலயத்தின் கதவுகளை மூடி ஆலய சாவிக்கொத்தை அவரின் காலடியில் வைப்பது வழக்கம்.
படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் ஆற்றும் இந்த பைரவரின் வழிபாடு வடக்கே இருந்து வந்த கபாலிக வழிபாட்டின் ஒரு பகுதியாகும். அனைத்து சிவாலயங்களில் பரிவார தெய்வ வழிபாடாக வழிபடப்படும் இந்த பைரவ வழிபாடு இல்லங்களில் திரிசூல வழிபாடாகவும் போற்றப்படுகிறது.
வீடுகளில் காவல் தெய்வமான பைரவர் வடிவங்களை சிலைகளாகவோ படமாகவோ வைத்து வழிபடுவதற்குப் பதில் வீட்டின் சுவரில் திரிசூலத்தை வரைந்து அதன் அருகில் திருவிளக்கேற்றி வழிபடுகின்றனர்.
அனைத்து சிவாலயங்களிலும் வழிபாடு சூரியனிடமிருந்து ஆரம்பித்து அர்த்தசாமப் பூஜையாக பைரவருடன் முடிவடைகிறது. இரவு அர்த்தசாமப் பூஜை முடிந்ததும் பைரவருக்கான சிறப்பு வழிபாடுகள் செய்து ஆலயத்தின் கதவுகளை மூடி ஆலய சாவிக்கொத்தை அவரின் காலடியில் வைப்பது வழக்கம். பாதுகாப்பற்ற இந்நாளில் இப்படி சாவிகளை வைப்பதைத் தவிர்த்து பூஜை முடிந்ததன் அடையாளமாக கைமணியையும் அபிஷேக கலசம் அல்லது கைச்செம்பையும் வைக்கின்றனர்.
ஆலயங்களில் நடைபெறும் வருடாந்திர பிரமோற்சவத்திற்கு முன்னும் பின்னும் பைரவருக்குச் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. விசேஷ தினங்களில் இவருக்கு நெய் அபிஷேகம் சிறப்பாக செய்யப்படுகிறது. அந்த விசேஷ தின பூஜையில் எட்டுவித பட்சணங்களும், எட்டுவித அன்னங்களும் நைவேத்தியப் பொருட்களாக நிவேதிக்கப்படுகின்றன. இன்னும் எட்டுவித மலர்களால் அர்ச்சனை செய்து எட்டுவித ஆரத்திகளும் செய்யப்படுகின்றன.
வழிபாட்டிற்கு உகந்த நேரம்
பைரவருக்குரிய வழிபாட்டு நேரம் நள்ளிரவாகும். இந்த அகால நேரத்தில் பராசக்தியானவள் பைரவி என்னும் பெயரில் நடமாடுகின்றாராம். அவளுடன் இறைவனும் பைரவராக தலத்தை வலம் வருவாராம். அதனால் சித்தர்கள் அந்த நள்ளிரவு நேரத்தில் திரிபுர பைரவியையும் பைரவரையும் தியானிக்கின்றார்கள்.
வீடுகளில் காவல் தெய்வமான பைரவர் வடிவங்களை சிலைகளாகவோ படமாகவோ வைத்து வழிபடுவதற்குப் பதில் வீட்டின் சுவரில் திரிசூலத்தை வரைந்து அதன் அருகில் திருவிளக்கேற்றி வழிபடுகின்றனர்.
அனைத்து சிவாலயங்களிலும் வழிபாடு சூரியனிடமிருந்து ஆரம்பித்து அர்த்தசாமப் பூஜையாக பைரவருடன் முடிவடைகிறது. இரவு அர்த்தசாமப் பூஜை முடிந்ததும் பைரவருக்கான சிறப்பு வழிபாடுகள் செய்து ஆலயத்தின் கதவுகளை மூடி ஆலய சாவிக்கொத்தை அவரின் காலடியில் வைப்பது வழக்கம். பாதுகாப்பற்ற இந்நாளில் இப்படி சாவிகளை வைப்பதைத் தவிர்த்து பூஜை முடிந்ததன் அடையாளமாக கைமணியையும் அபிஷேக கலசம் அல்லது கைச்செம்பையும் வைக்கின்றனர்.
ஆலயங்களில் நடைபெறும் வருடாந்திர பிரமோற்சவத்திற்கு முன்னும் பின்னும் பைரவருக்குச் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. விசேஷ தினங்களில் இவருக்கு நெய் அபிஷேகம் சிறப்பாக செய்யப்படுகிறது. அந்த விசேஷ தின பூஜையில் எட்டுவித பட்சணங்களும், எட்டுவித அன்னங்களும் நைவேத்தியப் பொருட்களாக நிவேதிக்கப்படுகின்றன. இன்னும் எட்டுவித மலர்களால் அர்ச்சனை செய்து எட்டுவித ஆரத்திகளும் செய்யப்படுகின்றன.
வழிபாட்டிற்கு உகந்த நேரம்
பைரவருக்குரிய வழிபாட்டு நேரம் நள்ளிரவாகும். இந்த அகால நேரத்தில் பராசக்தியானவள் பைரவி என்னும் பெயரில் நடமாடுகின்றாராம். அவளுடன் இறைவனும் பைரவராக தலத்தை வலம் வருவாராம். அதனால் சித்தர்கள் அந்த நள்ளிரவு நேரத்தில் திரிபுர பைரவியையும் பைரவரையும் தியானிக்கின்றார்கள்.
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசிக்கொடை விழாவின் 6-ம் நாள், பங்குனி மாத மீனபரணி கொடை விழா மற்றும் கார்த்திகை மாத கடைசி வெள்ளிக்கிழமை என வருடத்தில் 3 முறை வலிய படுக்கை பூஜை நடக்கிறது.
பெண்களின் சபரிமலை என போற்றப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் வலியபடுக்கை என்னும் மகாபூஜை நாளை (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு நடக்கிறது.
இந்த கோவிலில் மாசிக்கொடை விழாவின் 6-ம் நாள், பங்குனி மாத மீனபரணி கொடை விழா மற்றும் கார்த்திகை மாத கடைசி வெள்ளிக்கிழமை என வருடத்தில் 3 முறை வலிய படுக்கை பூஜை நடக்கிறது.
அதன்படி கார்த்திகை மாத கடைசி வெள்ளிக்கிழமையான இன்று மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 8.30 மணிக்கு அத்தாழ பூஜை, 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி, நள்ளிரவு 12 மணி முதல் 1 மணிக்குள் வலிய படுக்கை என்னும் மகாபூஜை நடக்கிறது. இதில் பல்வேறு பழ வகைகள், தேன், தினை மாவு, கரும்பு, பொரி, அவல் போன்றவை அம்மன் முன்பு படைக்கப்பட்டு நடத்தப்படும் பூஜையே வலிய படுக்கை என்னும் மகாபூஜை ஆகும். இந்த பூஜையில் கேரளா மற்றும் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
இந்த கோவிலில் மாசிக்கொடை விழாவின் 6-ம் நாள், பங்குனி மாத மீனபரணி கொடை விழா மற்றும் கார்த்திகை மாத கடைசி வெள்ளிக்கிழமை என வருடத்தில் 3 முறை வலிய படுக்கை பூஜை நடக்கிறது.
அதன்படி கார்த்திகை மாத கடைசி வெள்ளிக்கிழமையான இன்று மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 8.30 மணிக்கு அத்தாழ பூஜை, 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி, நள்ளிரவு 12 மணி முதல் 1 மணிக்குள் வலிய படுக்கை என்னும் மகாபூஜை நடக்கிறது. இதில் பல்வேறு பழ வகைகள், தேன், தினை மாவு, கரும்பு, பொரி, அவல் போன்றவை அம்மன் முன்பு படைக்கப்பட்டு நடத்தப்படும் பூஜையே வலிய படுக்கை என்னும் மகாபூஜை ஆகும். இந்த பூஜையில் கேரளா மற்றும் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
நம்பெருமாள் நீள்முடி கிரீடம், ரத்தின அபயகஸ்தம், லட்சுமி பதக்கம், முத்துச்சரம், காசுமாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறும். மார்கழி மாதம் நடைபெறும் திரு அத்யயன உற்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி திருவிழா தனித்துவம் மிக்கது.
பகல்பத்து, ராப்பத்து இயற்பா என மொத்தம் 21 நாட்கள் இந்த விழா நடைபெறும். இந்தாண்டு கார்த்திகை மாதத்திலேயே வைகுண்ட ஏகாதசி திருவிழா நடைபெறுகிறது. 19 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வைபவம் வந்துள்ளது. அதன்படி வைகுண்ட ஏகாதசி திருவிழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் (3-ந்தேதி) தொடங்கியது.
4-ம்தேதி பகல்பத்து உற்சவம் தொடங்கியது. பகல்பத்து நிகழ்ச்சியின் முதல் நாளில் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
2-வது நாளான 5-ம் தேதி நம்பெருமாள் சவுரிகொண்டை, வைரஅபயகஸ்தம், தங்கக்கிளி, நெல்லிக்காய் மாலை, பவள மாலை, பஞ்ஜாயுத மாலை, பருத்திக்காய் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
பகல் பத்து உற்சவத்தின் 3- ம்நாளான 6-ம்தேதி நம்பெருமாள்நித்தியப்படி கிரீடம், புஜகீர்த்தி, வைரஅபயஹஸ்தம், வைர கைகாப்பு, அர்த்த சந்திரன், மகாலட்சுமி பதக்கம், பெருமாள் பதக்கம், காசு மாலை,முத்துமாலை, அடுக்கு பதக்கம் உள்ளிட்ட திருஆபரணங்கள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
4-ம் நாளான 7-ம் தேதி நம்பெருமாள் தொப்பரைக்கொண்டை, மகரி, சந்திர பதக்கம், நெற்றி சரம், ரத்தின அபயஹஸ்தம், மகர கர்ண பத்ரம், அடுக்கு பதக்கங்கள், நெல்லிக்காய் மாலை, முத்துச்சரம், காசு மாலை உள்ளிட்ட திருஆபரணங்கள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
5-ம் நாளான 8-ம் தேதி நம்பெருமாள் ரத்தின பாண்டியன் கொண்டை, வைர அபயஹஸ்தம், வைர கைக்காப்பு, விமான பதக்கம், நெல்லிக்காய் மாலை, முத்துமாலை, அடுக்கு பதக்கம் உள்ளிட்ட திருவாபரணங்கள்அணிந்து சிறப்பு அலங்காரத்தில் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
6-வது நாளான நேற்று நம்பெருமாள் நீள்முடி கிரீடம், ரத்தின அபயகஸ்தம், லட்சுமி பதக்கம், முத்துச்சரம், காசுமாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பகல்பத்து உற்சவத்தின் 10-வது நாள் (13-ந்தேதி) நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.
14-ந்தேதி ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் வைகுண்ட ஏகாதசி திருநாள் ஆகும். அன்றைய தினம் அதிகாலை 3.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அதிகாலை 4.45 மணிக்கு பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசலில் எழுந்தருள்வார். இதையொட்டி நம்பெருமாள் ரத்தின அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
ராப்பத்து ஏழாம் திருநாளான 20-ந்தேதி நம்பெருமாள் திருக்கைத்தல சேவையும், எட்டாம் திருநாளான 21-ந்தேதி திருமங்கைமன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், பத்தாம் திருநாளான 23-ந் தேதி தீர்த்தவாரியும், 24-ந் தேதி நம்மாழ்வார் மோட்சமும், இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சியும் நடைபெறும். இத்துடன் வைகுண்ட ஏகாதசி திருவிழா நிறைவுபெறும்.
பகல்பத்து, ராப்பத்து இயற்பா என மொத்தம் 21 நாட்கள் இந்த விழா நடைபெறும். இந்தாண்டு கார்த்திகை மாதத்திலேயே வைகுண்ட ஏகாதசி திருவிழா நடைபெறுகிறது. 19 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வைபவம் வந்துள்ளது. அதன்படி வைகுண்ட ஏகாதசி திருவிழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் (3-ந்தேதி) தொடங்கியது.
4-ம்தேதி பகல்பத்து உற்சவம் தொடங்கியது. பகல்பத்து நிகழ்ச்சியின் முதல் நாளில் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
2-வது நாளான 5-ம் தேதி நம்பெருமாள் சவுரிகொண்டை, வைரஅபயகஸ்தம், தங்கக்கிளி, நெல்லிக்காய் மாலை, பவள மாலை, பஞ்ஜாயுத மாலை, பருத்திக்காய் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
பகல் பத்து உற்சவத்தின் 3- ம்நாளான 6-ம்தேதி நம்பெருமாள்நித்தியப்படி கிரீடம், புஜகீர்த்தி, வைரஅபயஹஸ்தம், வைர கைகாப்பு, அர்த்த சந்திரன், மகாலட்சுமி பதக்கம், பெருமாள் பதக்கம், காசு மாலை,முத்துமாலை, அடுக்கு பதக்கம் உள்ளிட்ட திருஆபரணங்கள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
4-ம் நாளான 7-ம் தேதி நம்பெருமாள் தொப்பரைக்கொண்டை, மகரி, சந்திர பதக்கம், நெற்றி சரம், ரத்தின அபயஹஸ்தம், மகர கர்ண பத்ரம், அடுக்கு பதக்கங்கள், நெல்லிக்காய் மாலை, முத்துச்சரம், காசு மாலை உள்ளிட்ட திருஆபரணங்கள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
5-ம் நாளான 8-ம் தேதி நம்பெருமாள் ரத்தின பாண்டியன் கொண்டை, வைர அபயஹஸ்தம், வைர கைக்காப்பு, விமான பதக்கம், நெல்லிக்காய் மாலை, முத்துமாலை, அடுக்கு பதக்கம் உள்ளிட்ட திருவாபரணங்கள்அணிந்து சிறப்பு அலங்காரத்தில் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
6-வது நாளான நேற்று நம்பெருமாள் நீள்முடி கிரீடம், ரத்தின அபயகஸ்தம், லட்சுமி பதக்கம், முத்துச்சரம், காசுமாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பகல்பத்து உற்சவத்தின் 10-வது நாள் (13-ந்தேதி) நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.
14-ந்தேதி ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் வைகுண்ட ஏகாதசி திருநாள் ஆகும். அன்றைய தினம் அதிகாலை 3.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அதிகாலை 4.45 மணிக்கு பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசலில் எழுந்தருள்வார். இதையொட்டி நம்பெருமாள் ரத்தின அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
ராப்பத்து ஏழாம் திருநாளான 20-ந்தேதி நம்பெருமாள் திருக்கைத்தல சேவையும், எட்டாம் திருநாளான 21-ந்தேதி திருமங்கைமன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், பத்தாம் திருநாளான 23-ந் தேதி தீர்த்தவாரியும், 24-ந் தேதி நம்மாழ்வார் மோட்சமும், இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சியும் நடைபெறும். இத்துடன் வைகுண்ட ஏகாதசி திருவிழா நிறைவுபெறும்.
கற்குவேல் அய்யனார் கோவில் நிகழ்ச்சிகள் அனைத்தும் உள்ளூர் சேனல்கள் யூடியூப் மூலமாக பக்தர்கள் பார்த்துக்கொள்ளலாம் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவிலில் கள்ளர்வெட்டு திருவிழா வருடந்தோறும் சிறப்பாக நடைபெறும். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் 3 நாள் கோவிலில் தங்கி இருந்து சுவாமி தரிசனம் செய்து விட்டு, புனிதமண் எடுத்துச் செல்வது வழக்கம்.
கடந்த ஆண்டு கொரோனா விழிப்புணர்வு காரணமாக பக்தர்கள் அனுமதி இல்லாமல் திருவிழா நடந்தது. இந்த ஆண்டு திருவிழா கடந்த நவம்பர் 17-ந்தேதி சிறப்பு பூஜையுடன் தொடங்கியது.
விழா தொடங்கியதை யொட்டி தினசரி மாலையில் வில்லிசையும் சிறப்பு பூஜையும் நடந்து வருகிறது. விழாவில் 28-ம் நாளான வருகிற 14-ந்தேதி பகல் 11மணிக்கு ஐவராஜா பூஜையும், மாலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், இரவு 9 மணிக்கு மகா தீபாராதனையும் நடக்கிறது.
29 -ம் நாளான 15-ந் தேதி காலை 11 மணிக்கும், நண்பகல் 12 மணிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனையும், இரவு 9 மணிக்கு உற்சவர் வீதி உலாவும் நடக்கிறது. இந்த இரு நாட்கள் மட்டும் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தவர்கள் தினசரி 6 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். 30-ம் நாளான 16-ந்தேதி (வியாழக் கிழமை) காலை 6 மணிக்கு தாமிரபரணி ஆற்றில் தீர்த்தம் எடுத்து வருதல், தொடர்ந்து கற்குவேல் அய்யனார் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெறும். மாலை 4 மணிக்கு கோவிலுக்கு பின்புறமுள்ள செம்மணல் தேரியில் கள்ளர் வெட்டு நிகழ்ச்சி நடைபெறும். இதைக்காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் கோவிலில் வந்து தங்கியிருந்து சுவாமி தரிசனம் செய்வார்கள்.கள்ளர் வெட்டுநடந்த இடத்தில் புனித மண் எடுத்து வீட்டுக்கு கொண்டு செல்வார்கள்.
இந்த ஆண்டு 16-ந்தேதி மற்றும் 17-ந்தேதி ஆகிய இரு நாட்களும் பக்தர்களுக்கு முழு நேரமும் அனுமதி இல்லை, சிறப்பு நிகழ்ச்சிகள் கிடையாது, கோவில் நிகழ்ச்சிகள் அனைத்தும் உள்ளூர் சேனல்கள் யூடியூப் மூலமாக பக்தர்கள் பார்த்துக்கொள்ளலாம் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில்செயல் அலுவலர் காந்திமதி, தக்கார் அஜீத், உதவி ஆணையர் ரோஜாலி சுமதா மற்றும் ஆலய ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு கொரோனா விழிப்புணர்வு காரணமாக பக்தர்கள் அனுமதி இல்லாமல் திருவிழா நடந்தது. இந்த ஆண்டு திருவிழா கடந்த நவம்பர் 17-ந்தேதி சிறப்பு பூஜையுடன் தொடங்கியது.
விழா தொடங்கியதை யொட்டி தினசரி மாலையில் வில்லிசையும் சிறப்பு பூஜையும் நடந்து வருகிறது. விழாவில் 28-ம் நாளான வருகிற 14-ந்தேதி பகல் 11மணிக்கு ஐவராஜா பூஜையும், மாலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், இரவு 9 மணிக்கு மகா தீபாராதனையும் நடக்கிறது.
29 -ம் நாளான 15-ந் தேதி காலை 11 மணிக்கும், நண்பகல் 12 மணிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனையும், இரவு 9 மணிக்கு உற்சவர் வீதி உலாவும் நடக்கிறது. இந்த இரு நாட்கள் மட்டும் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தவர்கள் தினசரி 6 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். 30-ம் நாளான 16-ந்தேதி (வியாழக் கிழமை) காலை 6 மணிக்கு தாமிரபரணி ஆற்றில் தீர்த்தம் எடுத்து வருதல், தொடர்ந்து கற்குவேல் அய்யனார் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெறும். மாலை 4 மணிக்கு கோவிலுக்கு பின்புறமுள்ள செம்மணல் தேரியில் கள்ளர் வெட்டு நிகழ்ச்சி நடைபெறும். இதைக்காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் கோவிலில் வந்து தங்கியிருந்து சுவாமி தரிசனம் செய்வார்கள்.கள்ளர் வெட்டுநடந்த இடத்தில் புனித மண் எடுத்து வீட்டுக்கு கொண்டு செல்வார்கள்.
இந்த ஆண்டு 16-ந்தேதி மற்றும் 17-ந்தேதி ஆகிய இரு நாட்களும் பக்தர்களுக்கு முழு நேரமும் அனுமதி இல்லை, சிறப்பு நிகழ்ச்சிகள் கிடையாது, கோவில் நிகழ்ச்சிகள் அனைத்தும் உள்ளூர் சேனல்கள் யூடியூப் மூலமாக பக்தர்கள் பார்த்துக்கொள்ளலாம் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில்செயல் அலுவலர் காந்திமதி, தக்கார் அஜீத், உதவி ஆணையர் ரோஜாலி சுமதா மற்றும் ஆலய ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
பல்வேறு காவடிகளை குமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஊர்கள் மற்றும் கோவில்களில் இருந்து எடுத்து வருவது வழக்கம். இந்த ஆண்டு இந்த காவடி ஊர்வலம் இன்று (10-ந் தேதி) தொடங்கியது.
குமாரகோவில் வேளிமலை முருகன் கோவிலுக்கு இன்று பொதுப்பணித்துறை, போலீஸ் துறை மற்றும் பொதுமக்கள் சார்பில் பல்வேறு வகையான காவடிகள் பவனியுடன் சென்றன.
திருவிதாங்கூர் மகாராஜா காலத்தில் நீராதாரம் பெற்று மக்கள் செழிப்புடன் வாழவும், விவசாயம் செழித்தோங்கவும் பொதுப்பணித்துறை சார்பிலும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி குற்றங்கள் குறைந்து மக்கள் அமைதியுடன் வாழ போலீஸ்துறை சார்பிலும், குமாரகோவில் வேளிமலை முருகன் கோவிலுக்கு காவடி ஊர்வலம் செல்வது வழக்கம்.
இந்த காவடி ஊர்வலத்தில் பன்னீர் காவடி, புஷ்ப காவடி, பால் காவடி, வேல் காவடி, சூரிய காவடி, பறக்கும் காவடி, மயில் காவடி, தொட்டில் காவடி உட்பட பல்வேறு காவடிகளை குமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஊர்கள் மற்றும் கோவில்களில் இருந்து எடுத்து வருவது வழக்கம். இந்த ஆண்டு இந்த காவடி ஊர்வலம் இன்று (10-ந் தேதி) தொடங்கியது.
காவடி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தொடர்ந்து 41 நாட்கள் விரதம் இருக்க வேண்டும் என்பது மரபாகும். தென்கரை தோப்பு ஊர் மக்கள் சார்பில் விவசாயிகள் புலியூர்குறிச்சியில் சுமார் 100 மீட்டர் நீளத்திற்கு சாலையில் 1500 வாழை குலைகளை இரு புறங்களிலும் நாட்டி பக்தர்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் பாதசாரிகளை பரவசபடுத்தினர்.
இந்த காவடி பவனி இரணியல், கண்ணாட்டு விளை, பாரதி நகர், தென்கரை, பத்மநாபபுரம், வழிக்கலம்பாடு, கைதோடு, அரசமூடு, கான்வென்ட் சந்திப்பு, குமாரகோவில், கல்குறிச்சி, மணலி, சரல்விளை, முட்டை காடு ஆகிய ஊர்களில் இருந்து பங்கேற்றன.
இதுபோன்று தக்கலை பொதுப்பணித்துறை, போலீஸ் துறை சார்பிலும் காவடி பவனி நடந்தது இதில் தக்கலை டி.எஸ்.பி. கணேசன், இன்ஸ்பெக்டர் சுதேசன், சப்-இன்ஸ்பெக்டர் அருளப்பன், பத்மனாபபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி தீனதயாளன், மத்திய அரசு வக்கீல் வேலுதாஸ் உள்பட பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இது போல் பொதுப் பணித்துறை சார்பில் ஓய்வு பெற்ற என்ஜினீயர் மோகன்தாஸ் தலைமையில் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் இருந்து காவடி புறப்பட்டது. இந்த காவடி ஊர்வலத்தில் முக்கிய நிகழ்ச்சியாக 3 அடி முதல் 12 அடி வரை உள்ள வேல் காவடிகளை பக்தர்கள் அலகு குத்தி செல்வது வியப்புக்குரியதாக இருக்கும்.
இன்று வேளிமலை முருகன் கோவிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு தொடர்ந்து அபிஷேகம், சிறப்பு தீபாராதனை, உஷ பூஜை மற்றும் காவடியுடன் பக்தர்கள் கொண்டுவரும் பஞ்சாமிருதம், நெய், தேன் களபம், பன்னீர், இளநீர் இவைகளுடன் சிறப்பு அபிஷேகம் தீபாராதனை ஆகியவை நடக்கும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.
திருவிதாங்கூர் மகாராஜா காலத்தில் நீராதாரம் பெற்று மக்கள் செழிப்புடன் வாழவும், விவசாயம் செழித்தோங்கவும் பொதுப்பணித்துறை சார்பிலும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி குற்றங்கள் குறைந்து மக்கள் அமைதியுடன் வாழ போலீஸ்துறை சார்பிலும், குமாரகோவில் வேளிமலை முருகன் கோவிலுக்கு காவடி ஊர்வலம் செல்வது வழக்கம்.
இந்த காவடி ஊர்வலத்தில் பன்னீர் காவடி, புஷ்ப காவடி, பால் காவடி, வேல் காவடி, சூரிய காவடி, பறக்கும் காவடி, மயில் காவடி, தொட்டில் காவடி உட்பட பல்வேறு காவடிகளை குமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஊர்கள் மற்றும் கோவில்களில் இருந்து எடுத்து வருவது வழக்கம். இந்த ஆண்டு இந்த காவடி ஊர்வலம் இன்று (10-ந் தேதி) தொடங்கியது.
காவடி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தொடர்ந்து 41 நாட்கள் விரதம் இருக்க வேண்டும் என்பது மரபாகும். தென்கரை தோப்பு ஊர் மக்கள் சார்பில் விவசாயிகள் புலியூர்குறிச்சியில் சுமார் 100 மீட்டர் நீளத்திற்கு சாலையில் 1500 வாழை குலைகளை இரு புறங்களிலும் நாட்டி பக்தர்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் பாதசாரிகளை பரவசபடுத்தினர்.
இந்த காவடி பவனி இரணியல், கண்ணாட்டு விளை, பாரதி நகர், தென்கரை, பத்மநாபபுரம், வழிக்கலம்பாடு, கைதோடு, அரசமூடு, கான்வென்ட் சந்திப்பு, குமாரகோவில், கல்குறிச்சி, மணலி, சரல்விளை, முட்டை காடு ஆகிய ஊர்களில் இருந்து பங்கேற்றன.
இதுபோன்று தக்கலை பொதுப்பணித்துறை, போலீஸ் துறை சார்பிலும் காவடி பவனி நடந்தது இதில் தக்கலை டி.எஸ்.பி. கணேசன், இன்ஸ்பெக்டர் சுதேசன், சப்-இன்ஸ்பெக்டர் அருளப்பன், பத்மனாபபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி தீனதயாளன், மத்திய அரசு வக்கீல் வேலுதாஸ் உள்பட பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இது போல் பொதுப் பணித்துறை சார்பில் ஓய்வு பெற்ற என்ஜினீயர் மோகன்தாஸ் தலைமையில் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் இருந்து காவடி புறப்பட்டது. இந்த காவடி ஊர்வலத்தில் முக்கிய நிகழ்ச்சியாக 3 அடி முதல் 12 அடி வரை உள்ள வேல் காவடிகளை பக்தர்கள் அலகு குத்தி செல்வது வியப்புக்குரியதாக இருக்கும்.
இன்று வேளிமலை முருகன் கோவிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு தொடர்ந்து அபிஷேகம், சிறப்பு தீபாராதனை, உஷ பூஜை மற்றும் காவடியுடன் பக்தர்கள் கொண்டுவரும் பஞ்சாமிருதம், நெய், தேன் களபம், பன்னீர், இளநீர் இவைகளுடன் சிறப்பு அபிஷேகம் தீபாராதனை ஆகியவை நடக்கும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.
கீழ்க்காணும் சௌபாக்கிய லக்ஷ்மி அஷ்டகத்தை வெள்ளிக்கிழமை அன்று பாராயணம் செய்து சகல நலன்களையும் வளங்களையும் பெற்றிடலாம்.
த்யானம்
வந்தே ஸத்குருவரலக்ஷ்மீம்
ஸம்பூர்ணஸௌபாக்யலக்ஷ்மீம்
க்ஷீரஸாஹரோத்பவலக்ஷ்மீ
ஜயஜயகோலக்ஷ்மீம்
ஆனந்த அம்ருதலக்ஷ்மீம் அம்ருத
கடாக்ஷ லக்ஷ்மீம்
ஆபதோத்தாரலக்ஷ்மீம் சாந்தி
ஸௌபாக்ய லக்ஷ்மீம்
ஓம் ஸ்ரீ ஆதிஸந்நான கஜ தனதான்ய
விஜயவீர மஹாலக்ஷ்மியை நமோ நம:
ஸர்வாலங்காரலக்ஷ்மீம் ஸகல
ஸௌபாக்ய லக்ஷ்மீம்
சாரதாரூபலக்ஷ்மீம் ஸகலஸௌ
பாக்யலக்ஷ்மீம்
ஜிஹ்வாநிவாஸலக்ஷ்மீம் ஸார
க்ஷேத்ரப்ர ஸாதலக்ஷ்மீம்
மந்த்ரஸ்வரூபலக்ஷ்மீம்
மானஸோல்லாஸலக்ஷ்மீம்
ஸ்ரீமானஸோல்லால லக்ஷ்மீம்
சரணம் ப்ரபத்யே
விநயவிமலலக்ஷ்மீம் வேதாந்த
சாரலக்ஷ்மீம்
கருணாகடாக்ஷலக்ஷ்மீம் காருண்ய
பாக்யலக்ஷ்மீம்
புத்ர சந்தானலக்ஷ்மீம் புவனதன
தான்யலக்ஷ்மீம்
ஸர்வஸௌ பாக்யலக்ஷ்மீம்
சாந்திஸம்பன்னலக்ஷ்மீம்
ஸ்ரீசாந்திஸம்பன்ன லக்ஷ்மீம்
சரணம்ப்ரபத்யே
வித்யவிசாலலக்ஷ்மீம் வேதாந்தமோக்ஷ
லக்ஷ்மீம்
அக்ஷ்ரபாக்யலக்ஷ்மீம் ஆத்மாநூபூதி
லக்ஷ்மீம்
தாபத்ரயநாசலக்ஷ்மீம் தன்வந்த்ரிரூப
லக்ஷ்மீம்
லோஹஸ்வரூபலக்ஷ்மீம் சுத்தசௌபாக்ய
லக்ஷ்மீம்
ஸ்ரீசுத்தஸௌபாக்யலக்ஷ்மீம் சரணம்
ப்ரபத்யே
ஸ்தாவரஜங்கமலக்ஷ்மீம் கோதான்யா
விருத்திலக்ஷ்மீம்
ஸோமஸோதரபாக்யலக்ஷ்மீம் சிந்தாமணி
ரத்னலக்ஷ்மீம்
க்ஷீரஸௌபாக்யலக்ஷ்மீம் ஸேவிதமோஹ
லக்ஷ்மீம்
ஜயஜவைராக்யலக்ஷ்மீம் சித்தப்ரஹாச
லக்ஷ்மீம்
ஸ்ரீசித்தபிரஹாசலக்ஷ்மீம் சரணம் ப்ரபத்யே
கல்பககாமதேனுலக்ஷ்மீம் கனகஸௌ
பாக்யலக்ஷ்மீம்
தேவேந்தராரோஹணலக்ஷ்மீம் ஐராவத
பூஜ்யலக்ஷ்மீம்
ஸ்ரீகிருஷ்ணமூர்த்திலக்ஷ்மீம் ஸேவ்யஸம்
பன்னலக்ஷ்மீம்
வீர்யவிஜயலக்ஷ்மீம் விஷ்ணுமாயேதி
லக்ஷ்மீம்
ஸ்ரீவிஷ்ணுமாயேதிலக்ஷ்மீம் சரணம்
ப்ரபத்யே
ஜ்வரபயஸோஹ ஹந்த்ரீம் ஸோஹவிநாஸ
மந்த்ரீம்
துஷ்டமிருகவைர்தந்த்ரீம் துர்ஸ்வப்ன நாஸ
யந்த்ரீம்
துர்காஸ்வரூபலக்ஷ்மீம் துரிதஹரமோக்ஷ
லக்ஷ்மீம்
ஸாயுஜ்யஸாம்ராஜ்யலக்ஷ்மீம் ஸத்யஸ்
வரூபலலக்ஷ்மீம்
ஸ்ரீஸத்யஸ்வரூபலக்ஷ்மீம் சரணம் ப்ரபத்யே
ஜயஜயகோஷலக்ஷ்மீம் சோமஸௌபாக்ய
லக்ஷ்மீம்
ஸர்வஸக்தி ஸ்வரூபலக்ஷ்மீம் ஸர்வ
மூர்த்திப்ரபாவ லக்ஷ்மீம்
அனுக்ரஹ ஆச்சார்யலக்ஷ்மீம் பாலகுஹ
யோஹ லக்ஷ்மீம்
ஸர்வஸமய லக்ஷ்மீம் ஜயமங்களஸ்தோத்ர
லக்ஷ்மீம்
ஸ்ரீஜயமங்களஸ்தோத்ரலக்ஷ்மீம் சரணம்
ப்ரபத்யே
ஞானஸ்வரூபலக்ஷ்மீம் நாதாந்தஞான
லக்ஷ்மீம்
ஸ்வரமயகீதலக்ஷ்மீம் ஞானப்ரமோத
லக்ஷ்மீம்
ஹ்ருத்யகமலவாஸலக்ஷ்மீம் சதுர்வேதஸார
லக்ஷ்மீம்
ஸஹஸ்ரகர ஸௌபாக்யலக்ஷ்மீம்
ஸ்ரீஅஷ்டஸௌபாக்ய ஸ்லோகலக்ஷ்மீம்
சரணம் ப்ரபத்யே.
வந்தே ஸத்குருவரலக்ஷ்மீம்
ஸம்பூர்ணஸௌபாக்யலக்ஷ்மீம்
க்ஷீரஸாஹரோத்பவலக்ஷ்மீ
ஜயஜயகோலக்ஷ்மீம்
ஆனந்த அம்ருதலக்ஷ்மீம் அம்ருத
கடாக்ஷ லக்ஷ்மீம்
ஆபதோத்தாரலக்ஷ்மீம் சாந்தி
ஸௌபாக்ய லக்ஷ்மீம்
ஓம் ஸ்ரீ ஆதிஸந்நான கஜ தனதான்ய
விஜயவீர மஹாலக்ஷ்மியை நமோ நம:
ஸர்வாலங்காரலக்ஷ்மீம் ஸகல
ஸௌபாக்ய லக்ஷ்மீம்
சாரதாரூபலக்ஷ்மீம் ஸகலஸௌ
பாக்யலக்ஷ்மீம்
ஜிஹ்வாநிவாஸலக்ஷ்மீம் ஸார
க்ஷேத்ரப்ர ஸாதலக்ஷ்மீம்
மந்த்ரஸ்வரூபலக்ஷ்மீம்
மானஸோல்லாஸலக்ஷ்மீம்
ஸ்ரீமானஸோல்லால லக்ஷ்மீம்
சரணம் ப்ரபத்யே
விநயவிமலலக்ஷ்மீம் வேதாந்த
சாரலக்ஷ்மீம்
கருணாகடாக்ஷலக்ஷ்மீம் காருண்ய
பாக்யலக்ஷ்மீம்
புத்ர சந்தானலக்ஷ்மீம் புவனதன
தான்யலக்ஷ்மீம்
ஸர்வஸௌ பாக்யலக்ஷ்மீம்
சாந்திஸம்பன்னலக்ஷ்மீம்
ஸ்ரீசாந்திஸம்பன்ன லக்ஷ்மீம்
சரணம்ப்ரபத்யே
வித்யவிசாலலக்ஷ்மீம் வேதாந்தமோக்ஷ
லக்ஷ்மீம்
அக்ஷ்ரபாக்யலக்ஷ்மீம் ஆத்மாநூபூதி
லக்ஷ்மீம்
தாபத்ரயநாசலக்ஷ்மீம் தன்வந்த்ரிரூப
லக்ஷ்மீம்
லோஹஸ்வரூபலக்ஷ்மீம் சுத்தசௌபாக்ய
லக்ஷ்மீம்
ஸ்ரீசுத்தஸௌபாக்யலக்ஷ்மீம் சரணம்
ப்ரபத்யே
ஸ்தாவரஜங்கமலக்ஷ்மீம் கோதான்யா
விருத்திலக்ஷ்மீம்
ஸோமஸோதரபாக்யலக்ஷ்மீம் சிந்தாமணி
ரத்னலக்ஷ்மீம்
க்ஷீரஸௌபாக்யலக்ஷ்மீம் ஸேவிதமோஹ
லக்ஷ்மீம்
ஜயஜவைராக்யலக்ஷ்மீம் சித்தப்ரஹாச
லக்ஷ்மீம்
ஸ்ரீசித்தபிரஹாசலக்ஷ்மீம் சரணம் ப்ரபத்யே
கல்பககாமதேனுலக்ஷ்மீம் கனகஸௌ
பாக்யலக்ஷ்மீம்
தேவேந்தராரோஹணலக்ஷ்மீம் ஐராவத
பூஜ்யலக்ஷ்மீம்
ஸ்ரீகிருஷ்ணமூர்த்திலக்ஷ்மீம் ஸேவ்யஸம்
பன்னலக்ஷ்மீம்
வீர்யவிஜயலக்ஷ்மீம் விஷ்ணுமாயேதி
லக்ஷ்மீம்
ஸ்ரீவிஷ்ணுமாயேதிலக்ஷ்மீம் சரணம்
ப்ரபத்யே
ஜ்வரபயஸோஹ ஹந்த்ரீம் ஸோஹவிநாஸ
மந்த்ரீம்
துஷ்டமிருகவைர்தந்த்ரீம் துர்ஸ்வப்ன நாஸ
யந்த்ரீம்
துர்காஸ்வரூபலக்ஷ்மீம் துரிதஹரமோக்ஷ
லக்ஷ்மீம்
ஸாயுஜ்யஸாம்ராஜ்யலக்ஷ்மீம் ஸத்யஸ்
வரூபலலக்ஷ்மீம்
ஸ்ரீஸத்யஸ்வரூபலக்ஷ்மீம் சரணம் ப்ரபத்யே
ஜயஜயகோஷலக்ஷ்மீம் சோமஸௌபாக்ய
லக்ஷ்மீம்
ஸர்வஸக்தி ஸ்வரூபலக்ஷ்மீம் ஸர்வ
மூர்த்திப்ரபாவ லக்ஷ்மீம்
அனுக்ரஹ ஆச்சார்யலக்ஷ்மீம் பாலகுஹ
யோஹ லக்ஷ்மீம்
ஸர்வஸமய லக்ஷ்மீம் ஜயமங்களஸ்தோத்ர
லக்ஷ்மீம்
ஸ்ரீஜயமங்களஸ்தோத்ரலக்ஷ்மீம் சரணம்
ப்ரபத்யே
ஞானஸ்வரூபலக்ஷ்மீம் நாதாந்தஞான
லக்ஷ்மீம்
ஸ்வரமயகீதலக்ஷ்மீம் ஞானப்ரமோத
லக்ஷ்மீம்
ஹ்ருத்யகமலவாஸலக்ஷ்மீம் சதுர்வேதஸார
லக்ஷ்மீம்
ஸஹஸ்ரகர ஸௌபாக்யலக்ஷ்மீம்
ஸ்ரீஅஷ்டஸௌபாக்ய ஸ்லோகலக்ஷ்மீம்
சரணம் ப்ரபத்யே.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி கிடையாது. கொடியேற்றம் நிகழ்ச்சிக்கும் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.
புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் ஆனி திருமஞ்சன விழாவும், மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன விழாவும் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான ஆருத்ரா தரிசன விழா நாளை (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மேலும் 15-ந்தேதி கோபுர தரிசனம் எனும் தெருவடைச்சான் உற்சவமும், 19-ந்தேதி தேரோட்டமும், முக்கிய நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசன விழா 20-ந்தேதியும் நடக்கிறது.
இந்த நிலையில் நடராஜர் கோவிலில் தேரோட்டம் மற்றும் ஆருத்ரா தரிசன விழா நடத்துவது குறித்த அனைத்துத்துறை அதிகாரிகள் பங்கேற்ற ஒருங்கிணைப்பு ஆலோசனை கூட்டம் சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கோட்டாட்சியர் கே.ரவி தலைமை தாங்கினார். சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ்ராஜ், தாசில்தார் ஆனந்தன், நகராட்சி ஆணையாளர் அஜிதாபர்வீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் சார்பில் நவமணி தீட்சிதர், வெங்கடேச தீட்சிதர், ஆலய பாதுகாப்பு சங்க நிர்வாகி செங்குட்டுவன், பா.ஜ.க. நிர்வாகி பாலகிருஷ்ணன், சீனுவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கோட்டாட்சியர் ரவி பேசுகையில், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவில், கோவில்களில் பக்தர்கள் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு வழிபடலாம் என்றும், கோவில் திருவிழாக்கள் மற்றும் கும்பாபிஷேகம் நடத்த அனுமதியில்லை எனவும் அறிவித்துள்ளது.
அதனால் தற்போது நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழாவை கோவிலுக்குள் மட்டுமே நடத்திக் கொள்ள வேண்டும். இதில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி கிடையாது. கொடியேற்றம் நிகழ்ச்சிக்கும் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.
இந்த நிலையில் நடராஜர் கோவிலில் தேரோட்டம் மற்றும் ஆருத்ரா தரிசன விழா நடத்துவது குறித்த அனைத்துத்துறை அதிகாரிகள் பங்கேற்ற ஒருங்கிணைப்பு ஆலோசனை கூட்டம் சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கோட்டாட்சியர் கே.ரவி தலைமை தாங்கினார். சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ்ராஜ், தாசில்தார் ஆனந்தன், நகராட்சி ஆணையாளர் அஜிதாபர்வீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் சார்பில் நவமணி தீட்சிதர், வெங்கடேச தீட்சிதர், ஆலய பாதுகாப்பு சங்க நிர்வாகி செங்குட்டுவன், பா.ஜ.க. நிர்வாகி பாலகிருஷ்ணன், சீனுவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கோட்டாட்சியர் ரவி பேசுகையில், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவில், கோவில்களில் பக்தர்கள் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு வழிபடலாம் என்றும், கோவில் திருவிழாக்கள் மற்றும் கும்பாபிஷேகம் நடத்த அனுமதியில்லை எனவும் அறிவித்துள்ளது.
அதனால் தற்போது நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழாவை கோவிலுக்குள் மட்டுமே நடத்திக் கொள்ள வேண்டும். இதில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி கிடையாது. கொடியேற்றம் நிகழ்ச்சிக்கும் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.
எனவே தமிழகஅரசின் அடுத்த உத்தரவு வந்த பிறகே திருவிழா நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும் என்றார். இதனை ஏற்றுக் கொள்ளாத நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள், தாங்கள் கடலூர் மாவட்ட கலெக்டரை சந்தித்து, பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக கூறி விட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிக்கலாம்...திருப்பதியில் வைகுண்ட ஏகாதசியையொட்டி ஆன்லைனில் தங்கும் அறை முன்பதிவு ரத்து
இத்தல ஸ்தல சயனத்தாரையும், நிலமங்கைத் தாயாரையும் அர்ச்சித்து வழிபட்டால் வீடு, நிலம் வாங்கும் யோகம் அமையும். பூரம் மற்றும் அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் இங்கு வழிபடுதல் மிகச் சிறப்பானது.
108 வைணவ திவ்ய தேசங்களில் 63-வது தலமாக விளங்குகிறது மகாபலிபுரத்தில் உள்ள ஸ்தல சயனப் பெருமாள் கோவில். சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்னர் விஜயநகர மாமன்னர் பராங்குசன் இக்கோவிலை எடுத்துக் கட்டினார் என்று வரலாறு கூறுகிறது.
கடற்கரையைத் தாண்டி ஊருக்குள் கட்டப்பட்டுள்ள இக்கோவிலில் இன்றும் பெருமாள் சயனித்த திருக்கோலத்தில் காட்சி அளித்து, பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்.
நான்கு கரங்களுடன் உள்ள மூலவர் பெருமாளின் வலக்கை, பூமியைத் தொட்டு இருக்க சயன கோலத்தில் காட்சி அளிக்கிறார் பெருமாள். உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் இணைந்து அருள்பாலிக்கிறார். இத்தல ஸ்தல சயனப் பெருமாள் வலது திருக்கரத்தை தன் மார்பின் மீது உபதேச முத்திரையாக வைத்துள்ளார். இவரை வியாழக்கிழமைகளில் வழிபட குருவருளும், திருவருளும் கிட்டும். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம்.
கலிகாலத்தில் நமக்கு வரும் கேடுகளைக் களைய இந்தப் பெருமாளை வழிபடுவது மிகவும் சிறப்பானது.
லட்சுமி நரசிம்மரின் சன்னிதியின் எதிரில் உள்ள சுவரில் லட்சுமி நரசிம்மரின் ‘ரிணவிமோசன ஸ்தோத்திரம்’ பதிக்கப்பட்டுள்ளது. சுவாமி நட்சத்திர தினங்கள், பிரதோஷ காலங்கள், செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அந்திசாயும் மாலை வேளையில் லட்சுமி நரசிம்மருக்கு பானகம் படைத்து, நெய் தீபமேற்றி ‘ரிணவிமோசன ஸ்தோத்திரம்’ பாராயணம் செய்து வழிபட்டால் எத்தகைய கடன் தொல்லையானாலும் உடனே அகன்று விடும். வறுமை அகலும்.
மாசி மகம் நாளன்று இத்திருத்தலத் தீர்த்தத்தில் நீராடினால் ராமேஸ்வரத்தில் நீராடிய புண்ணியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. இழந்த நிலத்தை மீட்பதற்கான பரிகாரத்தலமாக இக்கோவில் உள்ளது.
இத்தல ஸ்தல சயனத்தாரையும், நிலமங்கைத் தாயாரையும் அர்ச்சித்து வழிபட்டால் வீடு, நிலம் வாங்கும் யோகம் அமையும். பூரம் மற்றும் அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் இங்கு வழிபடுதல் மிகச் சிறப்பானது.
கடற்கரையைத் தாண்டி ஊருக்குள் கட்டப்பட்டுள்ள இக்கோவிலில் இன்றும் பெருமாள் சயனித்த திருக்கோலத்தில் காட்சி அளித்து, பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்.
நான்கு கரங்களுடன் உள்ள மூலவர் பெருமாளின் வலக்கை, பூமியைத் தொட்டு இருக்க சயன கோலத்தில் காட்சி அளிக்கிறார் பெருமாள். உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் இணைந்து அருள்பாலிக்கிறார். இத்தல ஸ்தல சயனப் பெருமாள் வலது திருக்கரத்தை தன் மார்பின் மீது உபதேச முத்திரையாக வைத்துள்ளார். இவரை வியாழக்கிழமைகளில் வழிபட குருவருளும், திருவருளும் கிட்டும். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம்.
கலிகாலத்தில் நமக்கு வரும் கேடுகளைக் களைய இந்தப் பெருமாளை வழிபடுவது மிகவும் சிறப்பானது.
லட்சுமி நரசிம்மரின் சன்னிதியின் எதிரில் உள்ள சுவரில் லட்சுமி நரசிம்மரின் ‘ரிணவிமோசன ஸ்தோத்திரம்’ பதிக்கப்பட்டுள்ளது. சுவாமி நட்சத்திர தினங்கள், பிரதோஷ காலங்கள், செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அந்திசாயும் மாலை வேளையில் லட்சுமி நரசிம்மருக்கு பானகம் படைத்து, நெய் தீபமேற்றி ‘ரிணவிமோசன ஸ்தோத்திரம்’ பாராயணம் செய்து வழிபட்டால் எத்தகைய கடன் தொல்லையானாலும் உடனே அகன்று விடும். வறுமை அகலும்.
மாசி மகம் நாளன்று இத்திருத்தலத் தீர்த்தத்தில் நீராடினால் ராமேஸ்வரத்தில் நீராடிய புண்ணியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. இழந்த நிலத்தை மீட்பதற்கான பரிகாரத்தலமாக இக்கோவில் உள்ளது.
இத்தல ஸ்தல சயனத்தாரையும், நிலமங்கைத் தாயாரையும் அர்ச்சித்து வழிபட்டால் வீடு, நிலம் வாங்கும் யோகம் அமையும். பூரம் மற்றும் அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் இங்கு வழிபடுதல் மிகச் சிறப்பானது.
திருவண்ணாமலை மலை உச்சியில் உள்ள அண்ணாமலையார் பாதத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. நிகழ்ச்சியில் கோவில் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த மாதம் 19-ந்தேதி நடைபெற்றது. அன்று காலையில் கோவிலில் பரணிதீபமும், மாலையில் 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகாதீபமும் ஏற்றப்பட்டது. தொடர்ந்து 11 நாட்கள் மகாதீபம் மலை உச்சியில் காட்சி அளித்தது. அப்போது பக்தர்கள் பலர் மலைக்கு சென்று தீப தரிசனம் செய்து வந்தனர்.
திருவண்ணாமலையில் மலையே சிவனாக வணங்கப்படுகிறது. அத்தகைய சிறப்பு வாய்ந்த மலையில் பக்தர்கள் மிதித்து ஏறுவதால் பிராயசித்த பூஜை நடத்தப்படும். அதன்படி இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீப திருவிழா முடிந்த நிலையில் நேற்று பிராயசித்த பூஜை நடந்தது.
இதனையொட்டி அருணாசலேஸ்வரர் கோவிலில் புனிதநீர் நிரப்பப்பட்ட கலசங்கள் வைத்து சிறப்பு ஹோமம் நடத்தி சாமிகளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து புனிதநீர் கலசத்தை மலைக்கு கொண்டு சென்று அங்கு பிராயசித்த பூஜை நடந்தது. பின்னர் மலை உச்சியில் உள்ள அண்ணாமலையார் பாதத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. நிகழ்ச்சியில் கோவில் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலையில் மலையே சிவனாக வணங்கப்படுகிறது. அத்தகைய சிறப்பு வாய்ந்த மலையில் பக்தர்கள் மிதித்து ஏறுவதால் பிராயசித்த பூஜை நடத்தப்படும். அதன்படி இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீப திருவிழா முடிந்த நிலையில் நேற்று பிராயசித்த பூஜை நடந்தது.
இதனையொட்டி அருணாசலேஸ்வரர் கோவிலில் புனிதநீர் நிரப்பப்பட்ட கலசங்கள் வைத்து சிறப்பு ஹோமம் நடத்தி சாமிகளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து புனிதநீர் கலசத்தை மலைக்கு கொண்டு சென்று அங்கு பிராயசித்த பூஜை நடந்தது. பின்னர் மலை உச்சியில் உள்ள அண்ணாமலையார் பாதத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. நிகழ்ச்சியில் கோவில் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
``என்னுடைய சமூகத்தாரே! இவ்வுலக வாழ்க்கையெல்லாம் அற்ப சுகம்தான்; அன்றியும் நிச்சயமாக, மறுமையோ - அதுதான் (என்றென்றுமிருக்கும்) நிலையான வீடு. (திருக்குர்ஆன் 40:39).
ஆசைகளும், பேராசைகளும் மனிதனை அழிக்கும் உயிர்க் கொல்லியாகும். இதுமட்டுமின்றி பாவங்களின் முதல் காரணகர்த்தாவும் இவையே. அதன் நிழல்களைக் கூட அணுகத் தடை செய்கிறது இஸ்லாம். இந்த வாழ்க்கை என்பது பயணம்தான், யாரும் இவ்வுலகில் தங்கி வாழ்பவர் அல்ல. வழிப்போக்கன் போல், சில காலம் தங்கி மறுபடியும் மறுமை நோக்கி பயணிப்பதுதான் நம் வாழ்வின் நோக்கமாகும்.
இம்மை வாழ்வை விட மறுமை வாழ்வு நிலையானது என்கிறது இஸ்லாம். மறுமை வாழ்விற்கான முன்னோட்டம்தான் இவ்வாழ்க்கை. இது, நிரந்தரமற் றது என்பதில் உறுதியாக இருக்கிறது இஸ்லாம். இதனை குர்ஆன் மற்றும் நபி மொழிகள் கோடிட்டுக் காட்டுகின்றன.
``என்னுடைய சமூகத்தாரே! இவ்வுலக வாழ்க்கையெல்லாம் அற்ப சுகம்தான்; அன்றியும் நிச்சயமாக, மறுமையோ - அதுதான் (என்றென்றுமிருக்கும்) நிலையான வீடு. (திருக்குர்ஆன் 40:39).
உலகில் நீ (தாய் நாடு அல்லது சொந்த ஊர் அல்லாத ஓரிடத்தில் வாழும்) ஓர் அந்நியனைப் போல் அல்லது ஒரு வழிப்போக்கனைப் போல் வாழ்வாயாக!’ மண்ணறைவாசிகளை போல் உன்னை நினைத்துக்கொள். உமரின் மகனே! நீ காலைப் பொழுதை அடைந்தால் மாலையை எதிர்பார்க்காதே. நீ மாலையை அடைந்தால் காலையை எதிர்பார்க்காதே. நோயின் பாதிப்புகளுக்கு முன்னால் ஆரோக்கியத்தையும், மரணத்தைச் சந்திப்பதற்காக வாழ்வையும் பயன்படுத்திக் கொள். ஓ அப்துல்லாஹ், நாளை உன் நிலை என்ன என்பது நீ அறியமாட்டாய்’’ என்றார்கள் நபி (ஸல்). (நூல்: திர்மிதி)
உலகத்தின் மையக்கரு என்ன என்பதை இந்த நபிமொழி தெள்ளத் தெளிவாகப் பேசுகிறது. இதனை புரிந்து கொண்டோர்களுக்கு அமைதியான நதியில் மிதக்கும் இலை போன்று வாழ்க்கை அமையும். இந்த உலகத்தின் சாராம்சத்தை அறிய முற்படாமல் மன இச்சைக்கு அடிமையானால், அலையில் சிக்கிய படகு போல் நிம்மதியின் கயிறு அறுந்து நிறம் மாறிப்போகும்.
“அவர்கள் இந்த உலக வாழ்விலிருந்து (அதன்) வெளித்தோற்றத்தையே அறிகிறார்கள் - ஆனால் அவர்கள் மறுமையைப் பற்றி அலட்சியமாக இருக்கிறார்கள்”. (திருக்குர்ஆன்: 30:7.)
இந்த உலகம் வெறும் அலங்காரம் என்பது, வாழும் காலத்தில் நமக்கு புலப்படாது. மரணிக்கும் நேரத்தில் முழுமையாகப் புலப்படும். அப்போது அது பயன் தராது.
அறிந்து கொள்ளுங்கள்: “நிச்சயமாக இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வேடிக்கையும், அலங்காரமுமேயாகும்; மேலும் (அது) உங்களிடையே பெருமையடித்துக் கொள்வதும்; பொருள்களையும், சந்ததிகளையும் பெருக்குவதுமேயாகும்; (இது) மழையின் உதாரணத்துக்கு ஒப்பாகும்; (அதாவது:) அது முளைப்பிக்கும் பயிர் விவசாயிகளை ஆனந்தப்படுத்துகிறது; ஆனால், சீக்கிரமே அது உலர்ந்து மஞ்சள் நிறம் ஆவதை நீர் காண்கின்றீர்; பின்னர் அது கூளமாகி விடுகிறது; (உலக வாழ்வும் இத்தகையதே; எனவே உலக வாழ்வில் மயங்கியோருக்கு) மறுமையில் கடுமையான வேதனையுண்டு; (முஃமின்களுக்கு) அல்லாஹ்வின் மன்னிப்பும், அவன் பொருத்தமும் உண்டு - ஆகவே, இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் சொற்ப சுகமே தவிர (வேறு) இல்லை’’. (திருக்குர்ஆன் 57:20)
ஜனனம், மரணம் இவை இரண்டிற்கும் மத்தியில் உள்ள பயணமே வாழ்க்கை. தீமையான காரியங்களை விட்டு நம் மனதைத் தூரம் போகச் செய்யவேண்டும். இங்கு எதுவும் நிரந்தரமில்லை என்பதை அறிவதில், இம்மை மற்றும் மறுமையின் சந்தோஷங்கள் தொடர் கின்றன.
ஏ.எச். யாசிர்அரபாத் ஹசனி, லால்பேட்டை.
இம்மை வாழ்வை விட மறுமை வாழ்வு நிலையானது என்கிறது இஸ்லாம். மறுமை வாழ்விற்கான முன்னோட்டம்தான் இவ்வாழ்க்கை. இது, நிரந்தரமற் றது என்பதில் உறுதியாக இருக்கிறது இஸ்லாம். இதனை குர்ஆன் மற்றும் நபி மொழிகள் கோடிட்டுக் காட்டுகின்றன.
``என்னுடைய சமூகத்தாரே! இவ்வுலக வாழ்க்கையெல்லாம் அற்ப சுகம்தான்; அன்றியும் நிச்சயமாக, மறுமையோ - அதுதான் (என்றென்றுமிருக்கும்) நிலையான வீடு. (திருக்குர்ஆன் 40:39).
உலகில் நீ (தாய் நாடு அல்லது சொந்த ஊர் அல்லாத ஓரிடத்தில் வாழும்) ஓர் அந்நியனைப் போல் அல்லது ஒரு வழிப்போக்கனைப் போல் வாழ்வாயாக!’ மண்ணறைவாசிகளை போல் உன்னை நினைத்துக்கொள். உமரின் மகனே! நீ காலைப் பொழுதை அடைந்தால் மாலையை எதிர்பார்க்காதே. நீ மாலையை அடைந்தால் காலையை எதிர்பார்க்காதே. நோயின் பாதிப்புகளுக்கு முன்னால் ஆரோக்கியத்தையும், மரணத்தைச் சந்திப்பதற்காக வாழ்வையும் பயன்படுத்திக் கொள். ஓ அப்துல்லாஹ், நாளை உன் நிலை என்ன என்பது நீ அறியமாட்டாய்’’ என்றார்கள் நபி (ஸல்). (நூல்: திர்மிதி)
உலகத்தின் மையக்கரு என்ன என்பதை இந்த நபிமொழி தெள்ளத் தெளிவாகப் பேசுகிறது. இதனை புரிந்து கொண்டோர்களுக்கு அமைதியான நதியில் மிதக்கும் இலை போன்று வாழ்க்கை அமையும். இந்த உலகத்தின் சாராம்சத்தை அறிய முற்படாமல் மன இச்சைக்கு அடிமையானால், அலையில் சிக்கிய படகு போல் நிம்மதியின் கயிறு அறுந்து நிறம் மாறிப்போகும்.
“அவர்கள் இந்த உலக வாழ்விலிருந்து (அதன்) வெளித்தோற்றத்தையே அறிகிறார்கள் - ஆனால் அவர்கள் மறுமையைப் பற்றி அலட்சியமாக இருக்கிறார்கள்”. (திருக்குர்ஆன்: 30:7.)
இந்த உலகம் வெறும் அலங்காரம் என்பது, வாழும் காலத்தில் நமக்கு புலப்படாது. மரணிக்கும் நேரத்தில் முழுமையாகப் புலப்படும். அப்போது அது பயன் தராது.
அறிந்து கொள்ளுங்கள்: “நிச்சயமாக இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வேடிக்கையும், அலங்காரமுமேயாகும்; மேலும் (அது) உங்களிடையே பெருமையடித்துக் கொள்வதும்; பொருள்களையும், சந்ததிகளையும் பெருக்குவதுமேயாகும்; (இது) மழையின் உதாரணத்துக்கு ஒப்பாகும்; (அதாவது:) அது முளைப்பிக்கும் பயிர் விவசாயிகளை ஆனந்தப்படுத்துகிறது; ஆனால், சீக்கிரமே அது உலர்ந்து மஞ்சள் நிறம் ஆவதை நீர் காண்கின்றீர்; பின்னர் அது கூளமாகி விடுகிறது; (உலக வாழ்வும் இத்தகையதே; எனவே உலக வாழ்வில் மயங்கியோருக்கு) மறுமையில் கடுமையான வேதனையுண்டு; (முஃமின்களுக்கு) அல்லாஹ்வின் மன்னிப்பும், அவன் பொருத்தமும் உண்டு - ஆகவே, இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் சொற்ப சுகமே தவிர (வேறு) இல்லை’’. (திருக்குர்ஆன் 57:20)
ஜனனம், மரணம் இவை இரண்டிற்கும் மத்தியில் உள்ள பயணமே வாழ்க்கை. தீமையான காரியங்களை விட்டு நம் மனதைத் தூரம் போகச் செய்யவேண்டும். இங்கு எதுவும் நிரந்தரமில்லை என்பதை அறிவதில், இம்மை மற்றும் மறுமையின் சந்தோஷங்கள் தொடர் கின்றன.
ஏ.எச். யாசிர்அரபாத் ஹசனி, லால்பேட்டை.






