என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
சாதாரண பக்தர்கள் அனைவரும் மத்திய விசாரணை அலுவலகத்தில் (சி.ஆர்.ஓ.) உள்ள கவுண்டர்களில் நேரடியாக வந்து தங்கள் அறைகளை முன்பதிவு மூலம் பெற்றுக் கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருப்பதி :
திருப்பதியில் வருகிற 2022-ம் ஆண்டு ஜனவரி 13-ந்தேதி வைகுண்ட ஏகாதசி, 14-ந்தேதி வைகுண்ட துவாதசி உள்ளிட்ட உற்சவங்களை முன்னிட்டு அடுத்த மாதம் 11 முதல் 14-ந்தேதி வரை திருமலையில் உள்ள வாடகை அறையின் இணைய தளம் முன்பதிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அந்த நாட்களில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் நேரடி முன்பதிவு மூலமாக மட்டுமே அறைகளை வழங்க முடிவு செய்துள்ளது.
எம். பி. சி. 34, கவுஸ்துபம் ஓய்வறை, டி.பி.சி. கவுண்ட்டர், ஏ.ஆர்.சி. கவுண்டர்களில் ஜனவரி மாதம் 11-ந்தேதி நள்ளிரவு 12 மணி முதல் 14-ந்தேதி நள்ளிரவு 12 மணி வரை வாடகை அறைகள் வழங்கப்படமாட்டாது.
நன்கொடையாளர்களுக்கு அறை வழங்குவதில் முன்னுரிமை கிடையாது. தரிசனத்துக்கு வரும் வி.ஐ.பி.களுக்கு வெங்கடாசல நிலையம், ராமராஜு நிலையம், சீதா நிலையம், சந்நிதானம், கோவிந்தசாய் ஓய்வறை உள்ளிட்ட இடங்களில் அறைகள் வழங்கும் கவுண்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டு அதன் மூலமாக மட்டுமே அறைகள் வழங்கப்படும்.
நேரடியாக வரும் வி.ஐ.பி.களுக்கு அதிகபட்சம் 2 அறைகள் மட்டுமே வழங்கப்படும்.
சாதாரண பக்தர்கள் அனைவரும் மத்திய விசாரணை அலுவலகத்தில் (சி.ஆர்.ஓ.) உள்ள கவுண்டர்களில் நேரடியாக வந்து தங்கள் அறைகளை முன்பதிவு மூலம் பெற்றுக் கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருப்பதியில் வருகிற 2022-ம் ஆண்டு ஜனவரி 13-ந்தேதி வைகுண்ட ஏகாதசி, 14-ந்தேதி வைகுண்ட துவாதசி உள்ளிட்ட உற்சவங்களை முன்னிட்டு அடுத்த மாதம் 11 முதல் 14-ந்தேதி வரை திருமலையில் உள்ள வாடகை அறையின் இணைய தளம் முன்பதிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அந்த நாட்களில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் நேரடி முன்பதிவு மூலமாக மட்டுமே அறைகளை வழங்க முடிவு செய்துள்ளது.
எம். பி. சி. 34, கவுஸ்துபம் ஓய்வறை, டி.பி.சி. கவுண்ட்டர், ஏ.ஆர்.சி. கவுண்டர்களில் ஜனவரி மாதம் 11-ந்தேதி நள்ளிரவு 12 மணி முதல் 14-ந்தேதி நள்ளிரவு 12 மணி வரை வாடகை அறைகள் வழங்கப்படமாட்டாது.
நன்கொடையாளர்களுக்கு அறை வழங்குவதில் முன்னுரிமை கிடையாது. தரிசனத்துக்கு வரும் வி.ஐ.பி.களுக்கு வெங்கடாசல நிலையம், ராமராஜு நிலையம், சீதா நிலையம், சந்நிதானம், கோவிந்தசாய் ஓய்வறை உள்ளிட்ட இடங்களில் அறைகள் வழங்கும் கவுண்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டு அதன் மூலமாக மட்டுமே அறைகள் வழங்கப்படும்.
நேரடியாக வரும் வி.ஐ.பி.களுக்கு அதிகபட்சம் 2 அறைகள் மட்டுமே வழங்கப்படும்.
சாதாரண பக்தர்கள் அனைவரும் மத்திய விசாரணை அலுவலகத்தில் (சி.ஆர்.ஓ.) உள்ள கவுண்டர்களில் நேரடியாக வந்து தங்கள் அறைகளை முன்பதிவு மூலம் பெற்றுக் கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
பூதத்தாழ்வார் தனது பாசுரத்தில் இத்தலத்தில் பெருமாள் விரும்பி உறைவதாகக் குறிப்பிடுகிறார். பூதத்தாழ்வாரும், திருமங்கையாழ்வாரும் இத்தலத்தை மங்களாசாசனம் செய்துள்ளனர்.
108 வைணவ திவ்ய தேசங்களில் 63-வது தலமாக விளங்குகிறது மகாபலிபுரத்தில் உள்ள ஸ்தல சயனப் பெருமாள் கோவில். இங்குதான் பூதத்தாழ்வாரின் திரு அவதாரம் நிகழ்ந்தது. சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்னர் விஜயநகர மாமன்னர் பராங்குசன் இக்கோவிலை எடுத்துக் கட்டினார் என்று வரலாறு கூறுகிறது.
பல்லவர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட பல கோவில்களை கடல் சூழ்ந்து கொண்டது. கடற்கரையைத் தாண்டி ஊருக்குள் கட்டப்பட்டுள்ள இக்கோவிலில் இன்றும் பெருமாள் சயனித்த திருக்கோலத்தில் காட்சி அளித்து, பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்.
நான்கு கரங்களுடன் உள்ள மூலவர் பெருமாளின் வலக்கை, பூமியைத் தொட்டு இருக்க சயன கோலத்தில் காட்சி அளிக் கிறார் பெருமாள். உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் இணைந்து அருள் பாலிக்கிறார். இத்தல ஸ்தல சயனப் பெருமாள் வலது திருக்கரத்தை தன் மார்பின் மீது உபதேச முத்திரையாக வைத்துள்ளார். இவரை வியாழக்கிழமைகளில் வழிபட குருவருளும், திருவருளும் கிட்டும். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம்.
இத்தல உற்சவர் திருநாமம் ‘உலகுய்ய நின்றான்’ என்பதாகும். இந்தக் கோவிலை எழுப்பிய மன்னன் பாராங்குசன், பாம்பு புற்றினுள் மறைந்திருந்த இந்த உற்சவரைக் கோவிலில் எழுந்தருள்வித்தான்.
கலிகாலத்தில் நம்மை எல்லாம் காத்து இந்தப் புவியை உய்விக்க வந்தவர் இந்த பெருமாள். இந்த உற்சவரின் கையில் புண்டரீகரின் தாமரை மலர் மொட்டு உள்ளது. அதனை உற்சவர், மூலவரின் பாதங்களில் சேர்ப்பிப்பதாக ஐதீகம். உற்சவப்பெருமாள் கையில் தாமரை மலருடன் நிற்கும் ஒரே திருத்தலம் இதுதான்.
மாமல்லையில் பெருமாளின் கவுமோதகி என்ற கதாயுதத்தின் அம்சமான பூதத்தாழ்வார் அவதரித்தார். அவர் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் முதன்மை ஆழ்வார்கள் எனக் குறிப்பிடப்பட்ட மூன்று ஆழ்வார்களுள் ஒருவராகப் போற்றப்பட்டவர். இவர் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் உள்ள இரண்டாம் திருவந்தாதியை இயற்றியுள்ளார். இதில் பெருமாளைப் போற்றும் நூறு வெண்பாக்கள் உள்ளன. பூ என்ற வேர்ச் சொல்லைக் கொண்டு அமைந்தது பூதம் என்ற சொல். இதற்குச் சத்து அறிவு என்று பொருள். பெருமாளின் திருக்குணங்களை அனுபவித்தே இந்தச் சத்து எனும் பூதத்தைப் பெற்றதால், இந்த ஆழ்வார் பூதத்தாழ்வார் ஆனார்.
திருமாலின் கதாயுத அம்சமான பூதத்தாழ்வார் கி.பி. 7ம் நூற்றாண்டில் ஐப்பசி வளர்பிறை நவமியில், அவிட்டம் நட்சத்திரத்தில் கோவில் முன்பு உள்ள பூந்தோட்டத்தில் குருக்கத்தி மலரில் அவதரித்தார். பூதத்தாழ்வார் தனது பாசுரத்தில் இத்தலத்தில் பெருமாள் விரும்பி உறைவதாகக் குறிப்பிடுகிறார். பூதத்தாழ்வாரும், திருமங்கையாழ்வாரும் இத்தலத்தை மங்களாசாசனம் செய்துள்ளனர்.
கலியுகத்தின் முடிவில் தான் மேற்கொள்ளப்போகும், கல்கி அவதாரத்தை இந்த ஸ்தல சயனப் பெருமாள் முன்னதாகவே திருமங்கையாழ்வாருக்குக் காண்பிக்க ஆழ்வாரும் ஞானக் கண்ணால் கண்டு, ‘கடும்பரிமேல் கல்கியை நான் கண்டு கொண்டேன், கடிபொழில் சூழ் கடல்மல்லைத் தல சயனத்தே’ என்று தனது பாசுரத்தில் அருளியிருக்கிறார். இதன் மூலம் ஸ்தல சயனப்பெருமாளே கல்கி அவதாரம் எடுக்கப்போகிறார் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
பூமி பிராட்டியை கடலின் அடியில் சென்று அழுத்திய அசுரனை, வராஹ அவதாரம் எடுத்து மீட்டருளினார் பகவான். வராஹமூர்த்தி யால் மீட்கப்பட்ட பூமிப்பிராட்டி, நிலமங்கை என்ற பெயருடன் இங்கே எழுந்தருளியிருப்பது கூடுதல் சிறப்பாகும். இவர் களோடு, பூமிப் பிராட்டியை தன் வலப்புறம் தாங்கி ‘திருவல எந்தை’யாக, ஞானப் பிரானான வராஹ மூர்த்தியும் இங்கே எழுந்தருளியிருக்கிறார்.
கலிகாலத்தில் நமக்கு வரும் கேடுகளைக் களைய இந்தப் பெருமாளை வழிபடுவது மிகவும் சிறப்பானது. இத்தலத்தில் தனிச் சன்னிதியில் பெருமாளின் இருபுறமும், நிலமங்கைத் தாயாரும், ஆண்டாளும் அருள் பாலிக்கிறார்கள். கோவில் வெளிச்சுற்றில் ஆஞ்சநேயர், ராமர், பூதத்தாழ்வார், கருடன், ஆழ்வார்கள் மற்றும் லட்சுமி நரசிம்மருக்கும் தனித்தனி சன்னிதிகள் உள்ளன.
லட்சுமி நரசிம்மரின் சன்னிதியின் எதிரில் உள்ள சுவரில் லட்சுமி நரசிம்மரின் ‘ரிணவிமோசன ஸ்தோத்திரம்’ பதிக்கப்பட்டுள்ளது. சுவாமி நட்சத்திர தினங்கள், பிரதோஷ காலங்கள், செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அந்திசாயும் மாலை வேளையில் லட்சுமி நரசிம்மருக்கு பானகம் படைத்து, நெய் தீபமேற்றி ‘ரிணவிமோசன ஸ்தோத்திரம்’ பாராயணம் செய்து வழிபட்டால் எத்தகைய கடன் தொல்லையானாலும் உடனே அகன்று விடும். வறுமை அகலும்.
அரசன் மல்லேஸ்வரன் நாள்தோறும் சுமார் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கி வந்தான். இதனால் அவன் ஆட்சியை மக்கள் போற்றி வந்தனர். மன்னனிடம் ஒரு கட்டத்தில் இந்த அன்னதானத்தைத் தொடர்ந்து செய்யப் பொருளில்லை. அதனால் அன்னதானம் செய்வதை நிறுத்திவிட்டான். இதனால் மக்கள் பசி பட்டினியில் வாடினர். மன்னனையும் வசைபாடினர். இதனைக் கண்டு அங்கே வந்த முனிவர்கள், அங்கிருந்த குளத்தைக் காட்டி இதோ இந்தக் குளத்து முதலையாக ஆவாய் என்று மன்னனுக்குச் சாபமிட்டார்கள்.
மல்லேஸ்வரன் மீளும் வழி தெரியாமல் குளத்திலேயே முதலையாக இருந்து காலத்தைக் கழித்து வந்தான். அக்குளம் தாமரைக் குளமானதால் ஆயிரம் தாமரை மொட்டுக்கள் பூத்திருந்தன. அக்குளம் நோக்கி வந்தார் புண்டரீக மகரிஷி.
பூக்களைக் கண்டார், புளங்காகிதம் அடைந்தார். அதன் கரையில் நின்று பூக் களைப் பறிப்பது எப்படி என்று ஆலோசித்துக் கொண்டிருந்தார்.
அழகிய அத்தாமரைப் புஷ்பங்களை கண்டதும் பெருமாளுக்கு அளிக்க வேண்டும் என்று ஆவல் கொண்டார். அப்போது நீருக்கு மேல் மூக்கை நீட்டிக் கொண்டு வந்தது, அந்த சாபம் பெற்ற முதலை. ரிஷியைக் கண்டதும் தன் துயரைச் சொல்லி வருந்தியது. சாப விமோசனம் அளிக்கக் கோரியது.
இம்மன்னன் செய்த குற்றத்தினை ஞான திருஷ்டியில் கண்ட ரிஷியும், ஆயிரம் பேர் பசி பட்டினியால் வாடிய பாவத் தினால் இந்த சாபத்தைப் பெற்றதால், அது நீங்க இக்குளத்தில் பூத்துள்ள ஆயிரம் தாமரை மலர்களை பறித்துத் தந்தால் அதனை இங்குள்ள பெருமாளுக்குப் பூஜித்து, சாப விமோசனம் பெற்றுத் தருவதாகக் கூறினார்.
மன்னனும் அவ்வாறே செய்ய, புண்டரீக மகரிஷி பெருமாளுக்குப் பூக்களால் பூஜை செய்தார். அவரது பூஜையில் மனம் மகிழ்ந்த பெருமாள், வரம் கேட்கக் கோரினார். மகரிஷியும் உலக மக்கள் பசி, பட்டினி இன்றி நிம்மதியாக இருக்க வேண்டும் என்றும், மன்னன் சாபம் நீங்க வேண்டும் என்றும் வேண்டினார்.
பெருமாளும் அவ்விதமே அருள்பாலித்தார். மன்னனும் தன் ஆட்சிக்கு உட்பட்ட நிலத்தை மீண்டும் பெற்றான். இக்குளத்திற்கு மகரிஷியின் பெயரையொட்டி, புண்டரீக புஷ்கரணி என்ற பெயரும் ஏற்பட்டது. இக்குளத்தில்தான் ஆண்டுதோறும் ஸ்தல சயனப் பெருமாளுக்குத் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.
மாசி மகம் நாளன்று இத்திருத்தலத் தீர்த்தத்தில் நீராடினால் ராமேஸ்வரத்தில் நீராடிய புண்ணியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. இழந்த நிலத்தை மீட்பதற்கான பரிகாரத்தலமாக இக்கோவில் உள்ளது.
இத்தல ஸ்தல சயனத்தாரையும், நிலமங்கைத் தாயாரையும் அர்ச்சித்து வழிபட்டால் வீடு, நிலம் வாங்கும் யோகம் அமையும். பூரம் மற்றும் அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் இங்கு வழிபடுதல் மிகச் சிறப்பானது.
பல்லவர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட பல கோவில்களை கடல் சூழ்ந்து கொண்டது. கடற்கரையைத் தாண்டி ஊருக்குள் கட்டப்பட்டுள்ள இக்கோவிலில் இன்றும் பெருமாள் சயனித்த திருக்கோலத்தில் காட்சி அளித்து, பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்.
நான்கு கரங்களுடன் உள்ள மூலவர் பெருமாளின் வலக்கை, பூமியைத் தொட்டு இருக்க சயன கோலத்தில் காட்சி அளிக் கிறார் பெருமாள். உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் இணைந்து அருள் பாலிக்கிறார். இத்தல ஸ்தல சயனப் பெருமாள் வலது திருக்கரத்தை தன் மார்பின் மீது உபதேச முத்திரையாக வைத்துள்ளார். இவரை வியாழக்கிழமைகளில் வழிபட குருவருளும், திருவருளும் கிட்டும். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம்.
இத்தல உற்சவர் திருநாமம் ‘உலகுய்ய நின்றான்’ என்பதாகும். இந்தக் கோவிலை எழுப்பிய மன்னன் பாராங்குசன், பாம்பு புற்றினுள் மறைந்திருந்த இந்த உற்சவரைக் கோவிலில் எழுந்தருள்வித்தான்.
கலிகாலத்தில் நம்மை எல்லாம் காத்து இந்தப் புவியை உய்விக்க வந்தவர் இந்த பெருமாள். இந்த உற்சவரின் கையில் புண்டரீகரின் தாமரை மலர் மொட்டு உள்ளது. அதனை உற்சவர், மூலவரின் பாதங்களில் சேர்ப்பிப்பதாக ஐதீகம். உற்சவப்பெருமாள் கையில் தாமரை மலருடன் நிற்கும் ஒரே திருத்தலம் இதுதான்.
மாமல்லையில் பெருமாளின் கவுமோதகி என்ற கதாயுதத்தின் அம்சமான பூதத்தாழ்வார் அவதரித்தார். அவர் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் முதன்மை ஆழ்வார்கள் எனக் குறிப்பிடப்பட்ட மூன்று ஆழ்வார்களுள் ஒருவராகப் போற்றப்பட்டவர். இவர் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் உள்ள இரண்டாம் திருவந்தாதியை இயற்றியுள்ளார். இதில் பெருமாளைப் போற்றும் நூறு வெண்பாக்கள் உள்ளன. பூ என்ற வேர்ச் சொல்லைக் கொண்டு அமைந்தது பூதம் என்ற சொல். இதற்குச் சத்து அறிவு என்று பொருள். பெருமாளின் திருக்குணங்களை அனுபவித்தே இந்தச் சத்து எனும் பூதத்தைப் பெற்றதால், இந்த ஆழ்வார் பூதத்தாழ்வார் ஆனார்.
திருமாலின் கதாயுத அம்சமான பூதத்தாழ்வார் கி.பி. 7ம் நூற்றாண்டில் ஐப்பசி வளர்பிறை நவமியில், அவிட்டம் நட்சத்திரத்தில் கோவில் முன்பு உள்ள பூந்தோட்டத்தில் குருக்கத்தி மலரில் அவதரித்தார். பூதத்தாழ்வார் தனது பாசுரத்தில் இத்தலத்தில் பெருமாள் விரும்பி உறைவதாகக் குறிப்பிடுகிறார். பூதத்தாழ்வாரும், திருமங்கையாழ்வாரும் இத்தலத்தை மங்களாசாசனம் செய்துள்ளனர்.
கலியுகத்தின் முடிவில் தான் மேற்கொள்ளப்போகும், கல்கி அவதாரத்தை இந்த ஸ்தல சயனப் பெருமாள் முன்னதாகவே திருமங்கையாழ்வாருக்குக் காண்பிக்க ஆழ்வாரும் ஞானக் கண்ணால் கண்டு, ‘கடும்பரிமேல் கல்கியை நான் கண்டு கொண்டேன், கடிபொழில் சூழ் கடல்மல்லைத் தல சயனத்தே’ என்று தனது பாசுரத்தில் அருளியிருக்கிறார். இதன் மூலம் ஸ்தல சயனப்பெருமாளே கல்கி அவதாரம் எடுக்கப்போகிறார் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
பூமி பிராட்டியை கடலின் அடியில் சென்று அழுத்திய அசுரனை, வராஹ அவதாரம் எடுத்து மீட்டருளினார் பகவான். வராஹமூர்த்தி யால் மீட்கப்பட்ட பூமிப்பிராட்டி, நிலமங்கை என்ற பெயருடன் இங்கே எழுந்தருளியிருப்பது கூடுதல் சிறப்பாகும். இவர் களோடு, பூமிப் பிராட்டியை தன் வலப்புறம் தாங்கி ‘திருவல எந்தை’யாக, ஞானப் பிரானான வராஹ மூர்த்தியும் இங்கே எழுந்தருளியிருக்கிறார்.
கலிகாலத்தில் நமக்கு வரும் கேடுகளைக் களைய இந்தப் பெருமாளை வழிபடுவது மிகவும் சிறப்பானது. இத்தலத்தில் தனிச் சன்னிதியில் பெருமாளின் இருபுறமும், நிலமங்கைத் தாயாரும், ஆண்டாளும் அருள் பாலிக்கிறார்கள். கோவில் வெளிச்சுற்றில் ஆஞ்சநேயர், ராமர், பூதத்தாழ்வார், கருடன், ஆழ்வார்கள் மற்றும் லட்சுமி நரசிம்மருக்கும் தனித்தனி சன்னிதிகள் உள்ளன.
லட்சுமி நரசிம்மரின் சன்னிதியின் எதிரில் உள்ள சுவரில் லட்சுமி நரசிம்மரின் ‘ரிணவிமோசன ஸ்தோத்திரம்’ பதிக்கப்பட்டுள்ளது. சுவாமி நட்சத்திர தினங்கள், பிரதோஷ காலங்கள், செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அந்திசாயும் மாலை வேளையில் லட்சுமி நரசிம்மருக்கு பானகம் படைத்து, நெய் தீபமேற்றி ‘ரிணவிமோசன ஸ்தோத்திரம்’ பாராயணம் செய்து வழிபட்டால் எத்தகைய கடன் தொல்லையானாலும் உடனே அகன்று விடும். வறுமை அகலும்.
அரசன் மல்லேஸ்வரன் நாள்தோறும் சுமார் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கி வந்தான். இதனால் அவன் ஆட்சியை மக்கள் போற்றி வந்தனர். மன்னனிடம் ஒரு கட்டத்தில் இந்த அன்னதானத்தைத் தொடர்ந்து செய்யப் பொருளில்லை. அதனால் அன்னதானம் செய்வதை நிறுத்திவிட்டான். இதனால் மக்கள் பசி பட்டினியில் வாடினர். மன்னனையும் வசைபாடினர். இதனைக் கண்டு அங்கே வந்த முனிவர்கள், அங்கிருந்த குளத்தைக் காட்டி இதோ இந்தக் குளத்து முதலையாக ஆவாய் என்று மன்னனுக்குச் சாபமிட்டார்கள்.
மல்லேஸ்வரன் மீளும் வழி தெரியாமல் குளத்திலேயே முதலையாக இருந்து காலத்தைக் கழித்து வந்தான். அக்குளம் தாமரைக் குளமானதால் ஆயிரம் தாமரை மொட்டுக்கள் பூத்திருந்தன. அக்குளம் நோக்கி வந்தார் புண்டரீக மகரிஷி.
பூக்களைக் கண்டார், புளங்காகிதம் அடைந்தார். அதன் கரையில் நின்று பூக் களைப் பறிப்பது எப்படி என்று ஆலோசித்துக் கொண்டிருந்தார்.
அழகிய அத்தாமரைப் புஷ்பங்களை கண்டதும் பெருமாளுக்கு அளிக்க வேண்டும் என்று ஆவல் கொண்டார். அப்போது நீருக்கு மேல் மூக்கை நீட்டிக் கொண்டு வந்தது, அந்த சாபம் பெற்ற முதலை. ரிஷியைக் கண்டதும் தன் துயரைச் சொல்லி வருந்தியது. சாப விமோசனம் அளிக்கக் கோரியது.
இம்மன்னன் செய்த குற்றத்தினை ஞான திருஷ்டியில் கண்ட ரிஷியும், ஆயிரம் பேர் பசி பட்டினியால் வாடிய பாவத் தினால் இந்த சாபத்தைப் பெற்றதால், அது நீங்க இக்குளத்தில் பூத்துள்ள ஆயிரம் தாமரை மலர்களை பறித்துத் தந்தால் அதனை இங்குள்ள பெருமாளுக்குப் பூஜித்து, சாப விமோசனம் பெற்றுத் தருவதாகக் கூறினார்.
மன்னனும் அவ்வாறே செய்ய, புண்டரீக மகரிஷி பெருமாளுக்குப் பூக்களால் பூஜை செய்தார். அவரது பூஜையில் மனம் மகிழ்ந்த பெருமாள், வரம் கேட்கக் கோரினார். மகரிஷியும் உலக மக்கள் பசி, பட்டினி இன்றி நிம்மதியாக இருக்க வேண்டும் என்றும், மன்னன் சாபம் நீங்க வேண்டும் என்றும் வேண்டினார்.
பெருமாளும் அவ்விதமே அருள்பாலித்தார். மன்னனும் தன் ஆட்சிக்கு உட்பட்ட நிலத்தை மீண்டும் பெற்றான். இக்குளத்திற்கு மகரிஷியின் பெயரையொட்டி, புண்டரீக புஷ்கரணி என்ற பெயரும் ஏற்பட்டது. இக்குளத்தில்தான் ஆண்டுதோறும் ஸ்தல சயனப் பெருமாளுக்குத் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.
மாசி மகம் நாளன்று இத்திருத்தலத் தீர்த்தத்தில் நீராடினால் ராமேஸ்வரத்தில் நீராடிய புண்ணியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. இழந்த நிலத்தை மீட்பதற்கான பரிகாரத்தலமாக இக்கோவில் உள்ளது.
இத்தல ஸ்தல சயனத்தாரையும், நிலமங்கைத் தாயாரையும் அர்ச்சித்து வழிபட்டால் வீடு, நிலம் வாங்கும் யோகம் அமையும். பூரம் மற்றும் அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் இங்கு வழிபடுதல் மிகச் சிறப்பானது.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கோடி அர்ச்சனை மற்றும் வழிபாடுகள் 19 மாதங்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளது.
கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பக்தர்களின் தரிசனத்துக்காக தினமும் அதிகாலை 4-30 மணிக்கு திறக்கப்பட்டு பகல் 12-30 மணிக்கு அடைக்கப்படும்.
பின்னர் மாலை 4 மணிக்கு கோவில்நடை திறக்கப்பட்டு இரவு 8.30 மணிக்கு அடைக்கப்படுவது வழக்கம். இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் வந்து அம்மனை தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள். இங்கு வரும் பக்தர்கள் அம்மனுக்கு அர்ச்சனை மற்றும் வழிபாடு செய்து வழிபடுவது வழக்கம்.
அம்மனுக்கு அபிஷேகம், தங்க ஆபரணங்கள்மற்றும் வைரக்கிரீடம் அணிவித்தல், சந்தன காப்பு அலங்காரம், நகை அலங்காரம், பட்டுப் புடவை சாத்துதல், அங்கி சாத்துதல், கன்னியாபூஜை, குழந்தைகளுக்கு சோறு கொடுத்தல், அன்னதானம் செய்தல் போன்ற பல்வேறு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழிபாடுகளை நடத்த விரும்பும் பக்தர்கள் அதற்கான கட்டணம் செலுத்தி இந்த வழிபாட்டில் கலந்து கொள்ளலாம். இதேபோல அர்ச்சனை நடத்தும் பக்தர்களுக்கு வசதியாக இந்த கோவிலில் கோடி அர்ச்சனை திட்டமும் செயல் படுத்தப்பட்டு உள்ளது.
இந்த கோடி அர்ச்சனை மற்றும் வழிபாடுகள் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் 18-ந்தேதி முதல் நிறுத்தப்பட்டது. தற்போது கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து கோவில்களில் பக்தர்கள் அர்ச்சனை மற்றும் வழிபாடுகள் நடத்துவதற்கான கட்டுப்பாடுகளும் விலக்கப்பட்டு உள்ளன.
அந்த அடிப்படையில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கோடி அர்ச்சனை மற்றும் வழிபாடுகள் 19 மாதங்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து பக்தர்கள் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் கோடி அர்ச்சனை மற்றும் வழிபாடுகளை நடத்தி வருகிறார்கள். வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் இந்த கோடி அர்ச்சனை மற்றும் வழிபாடுகளை ஆன்-லைன் மூலம் முன்பதிவு செய்தும் இந்த கோடி அர்ச்சனை மற்றும் வழிபாடுகளை நடத்தி அதில் பங்கேற்று வருகிறார்கள்.
பின்னர் மாலை 4 மணிக்கு கோவில்நடை திறக்கப்பட்டு இரவு 8.30 மணிக்கு அடைக்கப்படுவது வழக்கம். இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் வந்து அம்மனை தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள். இங்கு வரும் பக்தர்கள் அம்மனுக்கு அர்ச்சனை மற்றும் வழிபாடு செய்து வழிபடுவது வழக்கம்.
அம்மனுக்கு அபிஷேகம், தங்க ஆபரணங்கள்மற்றும் வைரக்கிரீடம் அணிவித்தல், சந்தன காப்பு அலங்காரம், நகை அலங்காரம், பட்டுப் புடவை சாத்துதல், அங்கி சாத்துதல், கன்னியாபூஜை, குழந்தைகளுக்கு சோறு கொடுத்தல், அன்னதானம் செய்தல் போன்ற பல்வேறு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழிபாடுகளை நடத்த விரும்பும் பக்தர்கள் அதற்கான கட்டணம் செலுத்தி இந்த வழிபாட்டில் கலந்து கொள்ளலாம். இதேபோல அர்ச்சனை நடத்தும் பக்தர்களுக்கு வசதியாக இந்த கோவிலில் கோடி அர்ச்சனை திட்டமும் செயல் படுத்தப்பட்டு உள்ளது.
இந்த கோடி அர்ச்சனை மற்றும் வழிபாடுகள் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் 18-ந்தேதி முதல் நிறுத்தப்பட்டது. தற்போது கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து கோவில்களில் பக்தர்கள் அர்ச்சனை மற்றும் வழிபாடுகள் நடத்துவதற்கான கட்டுப்பாடுகளும் விலக்கப்பட்டு உள்ளன.
அந்த அடிப்படையில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கோடி அர்ச்சனை மற்றும் வழிபாடுகள் 19 மாதங்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து பக்தர்கள் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் கோடி அர்ச்சனை மற்றும் வழிபாடுகளை நடத்தி வருகிறார்கள். வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் இந்த கோடி அர்ச்சனை மற்றும் வழிபாடுகளை ஆன்-லைன் மூலம் முன்பதிவு செய்தும் இந்த கோடி அர்ச்சனை மற்றும் வழிபாடுகளை நடத்தி அதில் பங்கேற்று வருகிறார்கள்.
மழை வெள்ளம் வருவதற்கு முன்பாகவே நம்முடைய வீட்டை (வாழ்க்கையை) சோதித்து பலப்படுத்தி கொண்டால், பெருமழை-புயல் காலத்திலும் (தீர்ப்பு நாட்களில்) தைரியமாக இருக்க முடியும்.
கலிலேயாவில், மலைப்பொழிவில் இயேசு கூறியது. ‘‘நான் சொல்பவற்றைச் செய்யாது, என்னை, ‘ஆண்டவரே, ஆண்டவரே’ என ஏன் கூப்பிடுகிறீர்கள்? என்னை நோக்கி, ‘ஆண்டவரே, ஆண்டவரே’ எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர்.
அந்நாளில் பலர் என்னை நோக்கி, ‘ஆண்டவரே, ஆண்டவரே, உம் பெயரால் நாங்கள் இறைவாக்கு உரைக்கவில்லையா?, உம் பெயரால் பேய்களை ஓட்டவில்லையா?, உம் பெயரால் வல்ல செயல்கள் பல செய்யவில்லையா?’ என்பர். அதற்கு நான் அவர்களிடம், ‘உங்களை எனக்குத் தெரியவே தெரியாது. நெறிகேடாகச் செயல்படுவோரே, என்னைவிட்டு அகன்று போங்கள்’ என வெளிப்படையாக அறிவிப்பேன்.
ஆகவே, என்னிடம் வந்து, நான் சொல்லும் இவ்வார்த்தைகளைக் கேட்டு, இவற்றின்படி செயல்படுகிற எவரும், யாருக்கு ஒப்பாவார் என உங்களுக்கு எடுத்துக்காட்டுகிறேன். அவர் ஆழமாய்த் தோண்டி, பாறையின் மீது அடித்தளம் அமைத்து, வீடு கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவார். மழை பெய்தது, ஆறு பெருக்கெடுத்து ஓடியது, பெருங்காற்று வீசியது. அவை அவ்வீட்டின் மேல் மோதியும் அதை அசைக்க முடியவில்லை. ஏனெனில் பாறையின்மீது அதன் அடித்தளம் இடப்பட்டு நன்றாகக் கட்டப்பட்டிருந்தது.
நான் சொல்லும் இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவற்றின்படி செயல்படாத எவரும், அடித்தளம் இல்லாமல் மணல் மீது தம் வீட்டைக் கட்டிய அறிவிலிக்கு ஒப்பாவார். மழை பெய்தது, ஆறு பெருக்கெடுத்து ஓடியது, பெருங்காற்று வீசியது. அவை அவ்வீட்டைத் தாக்க, அது விழுந்தது. இவ்வாறு பேரழிவு நேர்ந்தது’’ என கூறி, அதன் வழியாக நற்செய்தியை அறிவித்தார்.
இந்த நற்செய்தி நமக்கு ஒரு கேள்வியை முன்வைக்கிறது. நாம் அனைவரும் ‘இறையாட்சிக்காக வாழ்கிறோமா..?, இல்லை வெளிவேடத்திற்காக வாழ்கிறோமா..?’ என்பதுதான் அது. அதேபோல இந்த உவமையில் அடித்தளம் இல்லாமல் மணல்மீது வீட்டைக் கட்டியவர் யார்?, இயேசுவை அறியாதவர்களா?, இயேசுவின் நற்செய்தியைக் கேட்காதவர்களா?, இல்லை. நற்செய்தியைக் கேட்டும், கேட்காமல் இருப்பவர்களை குறித்தே இயேசு இந்த உவமையைக் கூறுகிறார்.
ஞாயிற்றுக்கிழமைகளில் கோவிலுக்குப் போவதும், நற்செய்தியைப் பற்றி பேசுவதும், இறைவனைப் போற்றிப் புகழ்வதும், சடங்குகளைக் கைக்கொள்வதும் நம் முடைய பழக்கமாக இருக்கலாம். ஆனால் அது இறையாட்சிக்கான வாழ்க்கையாக கருதப்படுவதில்லை. மாறாக, நற்செய்தியின்படி வாழ்வதும், நல்ல காரியங்களில் நம்மை ஐக்கியப்படுத்திக் கொள்வதுமே, இயேசுவுக்கு உகந்த வாழ்க்கை வாழ்வதுமே, நம்மை இறையாட்சிக்குள் அழைத்து செல்லும்.
கிறிஸ்தவர்களாகிய நம்மிடமே அன்பு, பரிவு, இரக்கம் போன்ற தூய ஆவியின் கனிகள் இல்லை. நம் உலக வாழ்வு ஆழமாகத் தோண்டாமல், மேலோட்டமாக, மணல்மேல் கட்டப்பட்ட வீடாகவே இருக்கிறது. நாம் வெளிவேடக்காரர் என்பதை அறியாமல், மீட்கப்பட்டவர்கள் என்றும் இறையாட்சியைப் பெற்றவர்கள் என்றும் நம்பி உலகில் வாழ்கிறோம்.
நாம் கட்டிய வீடு (நம்முடைய வாழ்க்கை) மிகச் சிறந்த வீடாகவே நமக்குத் தோன்றுகிறது. ஆனால் இறையாட்சிக்கு முன்பாக பலமிழந்து, பேரழிவை சந்திக்கக்கூடியதாகவே இருக்கிறது. அதை பலப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அவ்வாறு மழை வெள்ளம் வருவதற்கு முன்பாகவே நம்முடைய வீட்டை (வாழ்க்கையை) சோதித்து பலப்படுத்தி கொண்டால், பெருமழை-புயல் காலத்திலும் (தீர்ப்பு நாட்களில்) தைரியமாக இருக்க முடியும். இல்லையேல், புயல் வேளையில் (தீர்ப்பு நாட்களில்) ‘ஆண்டவரே, ஆண்டவரே’ என கூப்பாடு போடுவதில் எந்த பயனும் இல்லை, என்பதை இயேசு சுருக்கமாக, அழகாக விளக்கியிருக்கிறார்.
அந்நாளில் பலர் என்னை நோக்கி, ‘ஆண்டவரே, ஆண்டவரே, உம் பெயரால் நாங்கள் இறைவாக்கு உரைக்கவில்லையா?, உம் பெயரால் பேய்களை ஓட்டவில்லையா?, உம் பெயரால் வல்ல செயல்கள் பல செய்யவில்லையா?’ என்பர். அதற்கு நான் அவர்களிடம், ‘உங்களை எனக்குத் தெரியவே தெரியாது. நெறிகேடாகச் செயல்படுவோரே, என்னைவிட்டு அகன்று போங்கள்’ என வெளிப்படையாக அறிவிப்பேன்.
ஆகவே, என்னிடம் வந்து, நான் சொல்லும் இவ்வார்த்தைகளைக் கேட்டு, இவற்றின்படி செயல்படுகிற எவரும், யாருக்கு ஒப்பாவார் என உங்களுக்கு எடுத்துக்காட்டுகிறேன். அவர் ஆழமாய்த் தோண்டி, பாறையின் மீது அடித்தளம் அமைத்து, வீடு கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவார். மழை பெய்தது, ஆறு பெருக்கெடுத்து ஓடியது, பெருங்காற்று வீசியது. அவை அவ்வீட்டின் மேல் மோதியும் அதை அசைக்க முடியவில்லை. ஏனெனில் பாறையின்மீது அதன் அடித்தளம் இடப்பட்டு நன்றாகக் கட்டப்பட்டிருந்தது.
நான் சொல்லும் இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவற்றின்படி செயல்படாத எவரும், அடித்தளம் இல்லாமல் மணல் மீது தம் வீட்டைக் கட்டிய அறிவிலிக்கு ஒப்பாவார். மழை பெய்தது, ஆறு பெருக்கெடுத்து ஓடியது, பெருங்காற்று வீசியது. அவை அவ்வீட்டைத் தாக்க, அது விழுந்தது. இவ்வாறு பேரழிவு நேர்ந்தது’’ என கூறி, அதன் வழியாக நற்செய்தியை அறிவித்தார்.
இந்த நற்செய்தி நமக்கு ஒரு கேள்வியை முன்வைக்கிறது. நாம் அனைவரும் ‘இறையாட்சிக்காக வாழ்கிறோமா..?, இல்லை வெளிவேடத்திற்காக வாழ்கிறோமா..?’ என்பதுதான் அது. அதேபோல இந்த உவமையில் அடித்தளம் இல்லாமல் மணல்மீது வீட்டைக் கட்டியவர் யார்?, இயேசுவை அறியாதவர்களா?, இயேசுவின் நற்செய்தியைக் கேட்காதவர்களா?, இல்லை. நற்செய்தியைக் கேட்டும், கேட்காமல் இருப்பவர்களை குறித்தே இயேசு இந்த உவமையைக் கூறுகிறார்.
ஞாயிற்றுக்கிழமைகளில் கோவிலுக்குப் போவதும், நற்செய்தியைப் பற்றி பேசுவதும், இறைவனைப் போற்றிப் புகழ்வதும், சடங்குகளைக் கைக்கொள்வதும் நம் முடைய பழக்கமாக இருக்கலாம். ஆனால் அது இறையாட்சிக்கான வாழ்க்கையாக கருதப்படுவதில்லை. மாறாக, நற்செய்தியின்படி வாழ்வதும், நல்ல காரியங்களில் நம்மை ஐக்கியப்படுத்திக் கொள்வதுமே, இயேசுவுக்கு உகந்த வாழ்க்கை வாழ்வதுமே, நம்மை இறையாட்சிக்குள் அழைத்து செல்லும்.
கிறிஸ்தவர்களாகிய நம்மிடமே அன்பு, பரிவு, இரக்கம் போன்ற தூய ஆவியின் கனிகள் இல்லை. நம் உலக வாழ்வு ஆழமாகத் தோண்டாமல், மேலோட்டமாக, மணல்மேல் கட்டப்பட்ட வீடாகவே இருக்கிறது. நாம் வெளிவேடக்காரர் என்பதை அறியாமல், மீட்கப்பட்டவர்கள் என்றும் இறையாட்சியைப் பெற்றவர்கள் என்றும் நம்பி உலகில் வாழ்கிறோம்.
நாம் கட்டிய வீடு (நம்முடைய வாழ்க்கை) மிகச் சிறந்த வீடாகவே நமக்குத் தோன்றுகிறது. ஆனால் இறையாட்சிக்கு முன்பாக பலமிழந்து, பேரழிவை சந்திக்கக்கூடியதாகவே இருக்கிறது. அதை பலப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அவ்வாறு மழை வெள்ளம் வருவதற்கு முன்பாகவே நம்முடைய வீட்டை (வாழ்க்கையை) சோதித்து பலப்படுத்தி கொண்டால், பெருமழை-புயல் காலத்திலும் (தீர்ப்பு நாட்களில்) தைரியமாக இருக்க முடியும். இல்லையேல், புயல் வேளையில் (தீர்ப்பு நாட்களில்) ‘ஆண்டவரே, ஆண்டவரே’ என கூப்பாடு போடுவதில் எந்த பயனும் இல்லை, என்பதை இயேசு சுருக்கமாக, அழகாக விளக்கியிருக்கிறார்.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலின் வேதப் பண்டிதர்கள், அர்ச்சகர்கள், அதிகாரிகள், பக்தர்கள் தெரிந்தும் தெரியாமலும் செய்த தவறுகளால் ஏற்பட்ட தோஷ நிவர்த்திக்காக நேற்று புஷ்ப யாகம் நடந்தது.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கடந்த நவம்பர் மாதம் 30-ந்தேதியில் இருந்து 8-ந்தேதி வரை 9 நாட்கள் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா நடந்தது. அதில் கோவிலின் வேதப் பண்டிதர்கள், அர்ச்சகர்கள், அதிகாரிகள், பக்தர்கள் தெரிந்தும் தெரியாமலும் செய்த தவறுகளால் ஏற்பட்ட தோஷ நிவர்த்திக்காக நேற்று புஷ்ப யாகம் நடந்தது.
அதையொட்டி நேற்று காலை மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், தேன், இளநீர் ஆகிய சுகந்த திரவியங்களால் உற்சவர் பத்மாவதி தாயாருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. கோவில் அருகில் உள்ள ஸ்ரீகிருஷ்ணர் முக மண்டபத்தில் பாஞ்சராத்ரா ஆகம ஆலோசகரும் கங்கணப்பட்டருமான சீனிவாசாச்சாரியார் தலைமையில் மாலை 4 மணியில் இருந்து இரவு 7 மணிவரை சாமந்தி, சம்பங்கி, கன்னேறு, ரோஜா, மல்லிகை, முல்லை, கனகாம்பரம், தாமரை, முகலி, மானு சம்பங்கி, மருவம், தவனம், பில்வம், துளசி, கதிரி பச்சை என 12 வகையான மலர்களால் புஷ்ப யாகம் நடந்தது.
அதற்காக தமிழகம், கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களை சேர்ந்த பக்தர்களிடம் இருந்து காணிக்கையாக ெபறப்பட்ட 3½ டன் எடையிலான மலர்கள் பயன்படுத்தப்பட்டன. புஷ்ப யாகத்துக்காக ஸ்ரீகிருஷ்ணர் முக மண்டபம் கருப்பு, பச்சை நிற திராட்சை பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
அதையொட்டி நேற்று காலை மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், தேன், இளநீர் ஆகிய சுகந்த திரவியங்களால் உற்சவர் பத்மாவதி தாயாருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. கோவில் அருகில் உள்ள ஸ்ரீகிருஷ்ணர் முக மண்டபத்தில் பாஞ்சராத்ரா ஆகம ஆலோசகரும் கங்கணப்பட்டருமான சீனிவாசாச்சாரியார் தலைமையில் மாலை 4 மணியில் இருந்து இரவு 7 மணிவரை சாமந்தி, சம்பங்கி, கன்னேறு, ரோஜா, மல்லிகை, முல்லை, கனகாம்பரம், தாமரை, முகலி, மானு சம்பங்கி, மருவம், தவனம், பில்வம், துளசி, கதிரி பச்சை என 12 வகையான மலர்களால் புஷ்ப யாகம் நடந்தது.
அதற்காக தமிழகம், கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களை சேர்ந்த பக்தர்களிடம் இருந்து காணிக்கையாக ெபறப்பட்ட 3½ டன் எடையிலான மலர்கள் பயன்படுத்தப்பட்டன. புஷ்ப யாகத்துக்காக ஸ்ரீகிருஷ்ணர் முக மண்டபம் கருப்பு, பச்சை நிற திராட்சை பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
திருநாராயணபுரத்தில் கிடைக்கும் ஒரு வகை வெள்ளை மண்ணில் செய்யப்படுவதே நாமக்கட்டியாகும்,. இதனை நாமம் இட்டுக் கொள்வதே திருமண் காப்பு ஆகும்.
வைணவர்கள் தங்களுடைய நெற்றியில் திருமண் எனப்படும் நாமக்கட்டியால் நாமம் இட்டுக் கொள்வார்கள். திருநாராயணபுரத்தில் கிடைக்கும் ஒரு வகை வெள்ளை மண்ணில் செய்யப்படுவதே நாமக்கட்டியாகும்,. இதனை நாமம் இட்டுக் கொள்வதே திருமண் காப்பு ஆகும். பரமனின் பாதார விந்தமே உயிருக்குக் கதி என்பதை உணர்த்தும் வகையில் திருவடி போன்று இது இடப்படுகிறது.
இரண்டு வெள்ளை கோடுகளும், நடுவில் சிவப்பு கோடும் அந்த நாமத்தில் இடம் பெற்று இருக்கும். இதில் வெள்ளை கோடுகள் திருமாலை குறிக்கும், நடுவில் இருக்கும் சிவப்பு லட்சுமியை குறிக்கும். நெற்றிக்கு நாமம் அணிவதால் அவர்கள் இருவரின் அருளும் நமக்குக் கிடைக்கும். லட்சுமி ஒரு போதும் திருமாலை பிரியமாட்டார். அதனால் வெள்ளை கோடுகளுக்கு இடையே சிவப்பு செந்நிற கோட்டை போடுகிறார்கள்.
இரண்டு வெள்ளை கோடுகளும், நடுவில் சிவப்பு கோடும் அந்த நாமத்தில் இடம் பெற்று இருக்கும். இதில் வெள்ளை கோடுகள் திருமாலை குறிக்கும், நடுவில் இருக்கும் சிவப்பு லட்சுமியை குறிக்கும். நெற்றிக்கு நாமம் அணிவதால் அவர்கள் இருவரின் அருளும் நமக்குக் கிடைக்கும். லட்சுமி ஒரு போதும் திருமாலை பிரியமாட்டார். அதனால் வெள்ளை கோடுகளுக்கு இடையே சிவப்பு செந்நிற கோட்டை போடுகிறார்கள்.
தன்னை நம்பும் பக்தர்களிடம் அத்தனை அன்பும், கருணையும் நரசிம்மருக்கு உண்டு. ஆதலால்தான் அவருக்கு ‘பக்தவத்சலன்’ என்ற திருநாமம் ஏற்பட்டது.
நரசிம்மருடைய அவதாரத் தோற்றம், சிம்ம முக உருவில் பயங்கரமாகவும், பக்தனான குழந்தை பிரகலாதனுக்கு இரணியகசிபு இழைத்த கொடுமைகளினால் உக்கிரமான கோபம் கொண்டவராகவும் சேவை சாதிப்பதால், அவரை பூஜிப்பது கடினம் என்று பலர், தவறான கருத்தை கொண்டுள்ளனர்.
ஏனெனில் தன்னை நம்பும் பக்தர்களிடம் அத்தனை அன்பும், கருணையும் அவருக்கு உண்டு. ஆதலால்தான் ‘பக்தவத்சலன்’ என்ற திருநாமம் ஏற்பட்டது. அதாவது, தன் பக்தர்களுக்கு குழந்தை போன்றவன் என்பது பொருள்.
தனக்கு அபசாரம் செய்தவர்களை நரசிம்மர் பொறுத்துக் கொள்வார். ஆனால் தனது பக்தர்களுக்கு அநீதி செய்பவர்களை பொறுத்துக் கொள்ள அவரால் முடியாது.
சர்வேஸ்வரனின் திருவடிவமான பைரவர் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பைரவராகக் காட்சி தருகிறார். எந்தெந்த மாதத்தில் எந்த பைரவர் ஆட்சி புரிகிறாரோ அந்த பைரவரை வழிபட்டு நன்மை அடையலாம்.
சித்திரை - அம்சுமான் - சண்ட பைரவர்
வைகாசி - தாதா - ருரு பைரவர்
ஆனி - ஸவிதா - உன்மத்த பைரவர்
ஆடி - அரியமான் -கபால பைரவர்
ஆவணி - விஸ்வான் -ஸ்வர்ணாகர்ஷண பைரவர்
புரட்டாசி - பகன் - வடுக பைரவர்
ஐப்பசி - பர்ஜன்யன் - க்ஷத்ரபால பைரவர்
கார்த்திகை - துவஷ்டா - பீஷண பைரவர்
மார்கழி - மித்திரன் -அசிதாங்க பைரவர்
தை - விஷ்ணு - குரோதன பைரவர்
மாசி - வருணன் - ஸம்ஹார பைரவர்
பங்குனி - பூஷா -சட்டநாத பைரவர்.
வைகாசி - தாதா - ருரு பைரவர்
ஆனி - ஸவிதா - உன்மத்த பைரவர்
ஆடி - அரியமான் -கபால பைரவர்
ஆவணி - விஸ்வான் -ஸ்வர்ணாகர்ஷண பைரவர்
புரட்டாசி - பகன் - வடுக பைரவர்
ஐப்பசி - பர்ஜன்யன் - க்ஷத்ரபால பைரவர்
கார்த்திகை - துவஷ்டா - பீஷண பைரவர்
மார்கழி - மித்திரன் -அசிதாங்க பைரவர்
தை - விஷ்ணு - குரோதன பைரவர்
மாசி - வருணன் - ஸம்ஹார பைரவர்
பங்குனி - பூஷா -சட்டநாத பைரவர்.
ஸ்ரீகாளஹஸ்தியில் ஏழு கங்கையம்மன் திருவிழா நடந்தது. அதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். ஒருசில பக்தர்கள் கோழி, ஆடு ஆகியவற்றை பலியிட்டு தங்களின் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
ஸ்ரீகாளஹஸ்தி நகரில் பிரசித்திப் பெற்ற கங்கையம்மன் கோவில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கங்கையம்மனுக்கு திருவிழா நடப்பது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு திருவிழா நேற்று நடந்தது.
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் திருக்கல்யாண மண்டபம் அருகில் அங்காளம்மன், பேரிவாரி மண்டபம் அருகில் முத்து மாரியம்மன், சிவன் கோவில் ராஜகோபுரம் அருகில் பொன்னாலம்மன், சன்னதி வீதி அருகில் கருப்பு கங்கையம்மன், காந்தி வீதியில் செங்காளம்மன், கொத்தப்பேட்டையில் புவனேஸ்வரியம்மன், ஜெயராம்ராவ் தெருவில் ரேணுகாம்பாள் போன்ற அலங்காரத்தில் உற்சவர்கள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
ஏழு பகுதியிலும் தனித்தனி கமிட்டி அமைத்து கங்கையம்மன்களுக்கு பல வண்ண மலர்களாலும், மின் விளக்குகளாலும் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. அதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். ஒருசில பக்தர்கள் கோழி, ஆடு ஆகியவற்றை பலியிட்டு தங்களின் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
விழாவையொட்டி ஸ்ரீகாளஹஸ்தி துணை போலீஸ் சூப்பிரண்டு விஸ்வநாதன் தலைமையில் ஏராளமான போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கங்கையம்மன் திருவிழாவையொட்டி திருப்பதி, நெல்லூரில் இருந்து ஸ்ரீகாளஹஸ்திக்கு வந்த பஸ்கள் பைபாஸ் வழியாக ஸ்ரீகாளஹஸ்தி பஸ் நிலையத்துக்கு திருப்பி விடப்பட்டன.
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் திருக்கல்யாண மண்டபம் அருகில் அங்காளம்மன், பேரிவாரி மண்டபம் அருகில் முத்து மாரியம்மன், சிவன் கோவில் ராஜகோபுரம் அருகில் பொன்னாலம்மன், சன்னதி வீதி அருகில் கருப்பு கங்கையம்மன், காந்தி வீதியில் செங்காளம்மன், கொத்தப்பேட்டையில் புவனேஸ்வரியம்மன், ஜெயராம்ராவ் தெருவில் ரேணுகாம்பாள் போன்ற அலங்காரத்தில் உற்சவர்கள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
ஏழு பகுதியிலும் தனித்தனி கமிட்டி அமைத்து கங்கையம்மன்களுக்கு பல வண்ண மலர்களாலும், மின் விளக்குகளாலும் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. அதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். ஒருசில பக்தர்கள் கோழி, ஆடு ஆகியவற்றை பலியிட்டு தங்களின் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
விழாவையொட்டி ஸ்ரீகாளஹஸ்தி துணை போலீஸ் சூப்பிரண்டு விஸ்வநாதன் தலைமையில் ஏராளமான போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கங்கையம்மன் திருவிழாவையொட்டி திருப்பதி, நெல்லூரில் இருந்து ஸ்ரீகாளஹஸ்திக்கு வந்த பஸ்கள் பைபாஸ் வழியாக ஸ்ரீகாளஹஸ்தி பஸ் நிலையத்துக்கு திருப்பி விடப்பட்டன.
முருகனின் மந்திரத்தை ஜெபிக்கும் ஒருவருக்கு அறிவும் திறமையும் தைரியமும் பெருகும் என்று கந்த புராணத்தில் கூறப்பட்டுள்ளது. அந்த வகையில் ஒருவரின் அறிவையும் ஆற்றலையும் ஒளிரச்செய்யும் முருகன் காயத்ரி மந்திரம் இதோ.
ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹாஸேனாய தீமஹி
தன்ன: ஷண்முக ப்ரசோதயாத்
பொது பொருள்:
தேவர்களுக்கெல்லாம் சேனாதிபதியாக விளங்கும் மகா சேனாதிபதியாகிய முருகப்பெருமானே உங்களை வணங்குகிறேன். அடியேனை ஆட்கொண்டு என்னையும் வழி நடத்த உங்களை வேண்டுகிறேன்.
இந்த மந்திரத்தை தினமும் 108 முறை என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) ஜெபிப்பதன் பலனாக முருகப்பெருமானின் அருள் பறி பூரணமாக கிடைக்கும். அதோடு குரு பகவானின் அருளும் கிடைக்கும். இந்த மந்திரத்தை தினமும் ஜபிக்க முடியாதவர்கள் செவ்வாய் கிழமைகளில் ஜெபிக்கலாம்.
மஹாஸேனாய தீமஹி
தன்ன: ஷண்முக ப்ரசோதயாத்
பொது பொருள்:
தேவர்களுக்கெல்லாம் சேனாதிபதியாக விளங்கும் மகா சேனாதிபதியாகிய முருகப்பெருமானே உங்களை வணங்குகிறேன். அடியேனை ஆட்கொண்டு என்னையும் வழி நடத்த உங்களை வேண்டுகிறேன்.
இந்த மந்திரத்தை தினமும் 108 முறை என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) ஜெபிப்பதன் பலனாக முருகப்பெருமானின் அருள் பறி பூரணமாக கிடைக்கும். அதோடு குரு பகவானின் அருளும் கிடைக்கும். இந்த மந்திரத்தை தினமும் ஜபிக்க முடியாதவர்கள் செவ்வாய் கிழமைகளில் ஜெபிக்கலாம்.
பூதப்பாண்டி பூதலிங்கசாமி, சிவகாமி அம்பாள் கோவிலில் தை பெருந்திருவிழா அடுத்த மாதம் (ஜனவரி) 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 18-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது
பூதப்பாண்டி பூதலிங்கசாமி, சிவகாமி அம்பாள் கோவிலில் தை பெருந்திருவிழா அடுத்த மாதம் (ஜனவரி) 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 18-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. இந்த திருவிழாவுக்கான கால்நாட்டு நிகழ்ச்சி நேற்று காலையில் நடந்தது.
விழாவானது அடுத்த மாதம் 9-ந்தேதி காலையில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழா நாட்களில் தினமும் இரவு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. தொடர்ந்து திருவிழாவின் 9-ம் நாள் காலையில் தேரோட்டமும், 10-ம் நாள் இரவு தெப்ப உற்சவம் ஆகியவை நடக்கிறது.
இந்தநிலையில் தேரோட்டத்தையொட்டி விழாவின் 9-ம் நாளான 16-ந் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விழாவானது அடுத்த மாதம் 9-ந்தேதி காலையில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழா நாட்களில் தினமும் இரவு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. தொடர்ந்து திருவிழாவின் 9-ம் நாள் காலையில் தேரோட்டமும், 10-ம் நாள் இரவு தெப்ப உற்சவம் ஆகியவை நடக்கிறது.
இந்தநிலையில் தேரோட்டத்தையொட்டி விழாவின் 9-ம் நாளான 16-ந் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் நீடித்து வருவதால் பக்தர்களின் வருகையை கட்டுக்குள் வைத்திருக்கும் வகையில் திருப்பதி தேவஸ்தானம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது.
ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.
இவர்கள் பஸ், ரெயில், தனியார் வாகனங்கள் மூலம் திருமலையை வந்தடைகின்றனர்.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் நீடித்து வருவதால் பக்தர்களின் வருகையை கட்டுக்குள் வைத்திருக்கும் வகையில் திருப்பதி தேவஸ்தானம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது.
அதன் ஒருபகுதியாக 300 ரூபாய் கட்டண சிறப்பு தரிசனம் முறை மட்டும் அமலில் இருந்து வந்தது.
கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்த பின்னர் இலவச தரிசனம் டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழகத்தில் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் விதமாக வெளிமாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு பஸ் டிக்கெட்டுடன் 300 ரூபாய் தரிசன டிக்கெட் வழங்கப்பட்டு வந்தது.
கொரோனா நெருக்கடி காரணமாக இந்த திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது திருமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது.
இதையொட்டி பஸ் டிக்கெட் உடன் தரிசன டிக்கெட் வழங்கும் திட்டம் மீண்டும் தொடங்க உள்ளனர். அதன்படி, நாள்தோறும் ஆயிரம் டிக்கெட்களை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக ஹைதராபாத், விஜயவாடா, விசாகப்பட்டினம், ராஜமுந்திரி, பெங்களூரு, சென்னை, வேலூர் ஆகிய நகரங்களில் இருந்து புறப்படும் ஆந்திர அரசு பஸ்களில் சூப்பர் டீலக்ஸ் மற்றும் ஏசி பஸ்களில் திருப்பதிக்கு செல்ல முன்பதிவு செய்யும் போது கூடுதலாக ரூ 300 கட்டணம் செலுத்தினால் ஏழுமலையான் தரிசன டிக்கெட்டும் வழங்கப்படும்.
விரைவில் இந்த திட்டம் அமலுக்கு கொண்டு வரப்படும் சென்னை, வேலூரில் தினமும் 1000 டிக்கெட்டுகள் ஒரு மாதத்துக்கு முன்பாக பதிவு செய்து கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவர்கள் பஸ், ரெயில், தனியார் வாகனங்கள் மூலம் திருமலையை வந்தடைகின்றனர்.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் நீடித்து வருவதால் பக்தர்களின் வருகையை கட்டுக்குள் வைத்திருக்கும் வகையில் திருப்பதி தேவஸ்தானம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது.
அதன் ஒருபகுதியாக 300 ரூபாய் கட்டண சிறப்பு தரிசனம் முறை மட்டும் அமலில் இருந்து வந்தது.
கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்த பின்னர் இலவச தரிசனம் டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழகத்தில் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் விதமாக வெளிமாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு பஸ் டிக்கெட்டுடன் 300 ரூபாய் தரிசன டிக்கெட் வழங்கப்பட்டு வந்தது.
கொரோனா நெருக்கடி காரணமாக இந்த திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது திருமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது.
இதையொட்டி பஸ் டிக்கெட் உடன் தரிசன டிக்கெட் வழங்கும் திட்டம் மீண்டும் தொடங்க உள்ளனர். அதன்படி, நாள்தோறும் ஆயிரம் டிக்கெட்களை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக ஹைதராபாத், விஜயவாடா, விசாகப்பட்டினம், ராஜமுந்திரி, பெங்களூரு, சென்னை, வேலூர் ஆகிய நகரங்களில் இருந்து புறப்படும் ஆந்திர அரசு பஸ்களில் சூப்பர் டீலக்ஸ் மற்றும் ஏசி பஸ்களில் திருப்பதிக்கு செல்ல முன்பதிவு செய்யும் போது கூடுதலாக ரூ 300 கட்டணம் செலுத்தினால் ஏழுமலையான் தரிசன டிக்கெட்டும் வழங்கப்படும்.
விரைவில் இந்த திட்டம் அமலுக்கு கொண்டு வரப்படும் சென்னை, வேலூரில் தினமும் 1000 டிக்கெட்டுகள் ஒரு மாதத்துக்கு முன்பாக பதிவு செய்து கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.






