என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் வலியபடுக்கை பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்பு
Byமாலை மலர்11 Dec 2021 7:48 AM GMT (Updated: 11 Dec 2021 7:48 AM GMT)
வலிய படுக்கை பூஜையின்போது நள்ளிரவில் அம்மனுக்கு மிகவும் பிடித்தமான பழ வகைகள், தேன், தினை மாவு, கரும்பு, அவல், பொரி ஆகியவகைகள் பெரும் படையலாக படைத்து வழிபடுவார்கள்.
குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலும் ஒன்று. இங்கு கேரள பெண் பக்தர்கள் இருமுடிக்கட்டி வந்து அம்மனை வழிபடுவதால் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது.
இந்த கோவிலில் மாசிக்கொடை விழா 10 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நடைபெறும். இந்த கோவிலில் மகா பூஜை என்னும் வலியபடுக்கை பூஜை முக்கிய வழிபாடாக கருதப்படுகிறது. இந்த பூஜை ஆண்டுக்கு 3 முறை மட்டுமே நடைபெறும். அதாவது, மாசிக்கொடையின் 6-ம் நாளிலும், பங்குனி மாதம் மீனபரணி கொடைவிழாவன்றும், கார்த்திகை மாதம் கடைசி வெள்ளிக்கிழமையன்றும் இந்த வழிபாடு நடைபெறும்.
வலிய படுக்கை பூஜையின்போது நள்ளிரவில் அம்மனுக்கு மிகவும் பிடித்தமான பழ வகைகள், தேன், தினை மாவு, கரும்பு, அவல், பொரி ஆகியவகைகள் பெரும் படையலாக படைத்து வழிபடுவார்கள்.
இந்த ஆண்டில் 3-வது வலிய படுக்கை பூஜை நேற்று நள்ளிரவு நடந்தது. இதை முன்னிட்டு அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 5.30 மணிக்கு உற்சவ மூர்த்திக்கு பஞ்சாபிஷேகம், 6.30 மணிக்கு உஷ பூஜை, நண்பகல் 12.30 மணிக்கு உச்ச கால பூஜை, அன்னதானம், மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 8.30 மணிக்கு அத்தாழ பூஜை, நள்ளிரவு 12 மணிமுதல் 1 மணிக்குள் வலிய படுக்கை பூஜை போன்றவை நடந்தது. இதில் கேரள மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிப்பட்டனர்.
இந்த கோவிலில் மாசிக்கொடை விழா 10 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நடைபெறும். இந்த கோவிலில் மகா பூஜை என்னும் வலியபடுக்கை பூஜை முக்கிய வழிபாடாக கருதப்படுகிறது. இந்த பூஜை ஆண்டுக்கு 3 முறை மட்டுமே நடைபெறும். அதாவது, மாசிக்கொடையின் 6-ம் நாளிலும், பங்குனி மாதம் மீனபரணி கொடைவிழாவன்றும், கார்த்திகை மாதம் கடைசி வெள்ளிக்கிழமையன்றும் இந்த வழிபாடு நடைபெறும்.
வலிய படுக்கை பூஜையின்போது நள்ளிரவில் அம்மனுக்கு மிகவும் பிடித்தமான பழ வகைகள், தேன், தினை மாவு, கரும்பு, அவல், பொரி ஆகியவகைகள் பெரும் படையலாக படைத்து வழிபடுவார்கள்.
இந்த ஆண்டில் 3-வது வலிய படுக்கை பூஜை நேற்று நள்ளிரவு நடந்தது. இதை முன்னிட்டு அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 5.30 மணிக்கு உற்சவ மூர்த்திக்கு பஞ்சாபிஷேகம், 6.30 மணிக்கு உஷ பூஜை, நண்பகல் 12.30 மணிக்கு உச்ச கால பூஜை, அன்னதானம், மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 8.30 மணிக்கு அத்தாழ பூஜை, நள்ளிரவு 12 மணிமுதல் 1 மணிக்குள் வலிய படுக்கை பூஜை போன்றவை நடந்தது. இதில் கேரள மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிப்பட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X