என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "திருவாதிரை திருவிழா"
- அய்யன் குருபூஜை திருவிழா மற்றும் திருவாதிரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
- காலை 6 மணிக்கு ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.
மங்கலம் :
திருப்பூர் மாவட்டம் வி.அய்யம்பாளையம் பகுதியில் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற வாழைத்தோட்டத்து அய்யன்கோவில் உள்ளது.இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் அய்யன் குருபூஜை திருவிழா மற்றும் திருவாதிரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி அய்யம்பாளையம் வாழைத்தோட்டத்து அய்யன்கோவிலில் திருவாதிரை திருவிழா நேற்று முன்தினம் (வியாழக்கிழமை)துவங்கியது.அதன்படி கடந்த 5-ந்தேதி காலை 6 மணிக்கு சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள பக்தர்கள் பொங்கல் வைத்து அய்யனை வழிபட்டனர். பின்னர் இரவு 7 மணிக்கு திருக்காவடி பூஜை நடைபெற்றது.நேற்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு வாழைத்தோட்டத்து அய்யனுக்கு மஹா அபிஷேகம் நடைபெற்றது. காலை 6 மணிக்கு ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.பின்னர் காலை 9 மணிக்கு விநாயகர்,சுப்பிரமணிய சமேத வள்ளி தெய்வானை, வாழைத்தோட்டத்து அய்யன்,நடராஜர் சமேத சிவகாசிஅம்மன் ஆகிய சுவாமிகளின் திருவீதி உலா நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.பின்னர் மதியம் 1மணிக்கு மஹா அன்னதானம் நடைபெற்றது. இன்று (சனிக்கிழமை) இரவு 7 மணிக்கு வாழைத்தோட்டத்து அய்யன் மங்கள இசையுடன் புஷ்பபல்லக்கில் திருவீதி உலா நடைபெறவுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்