என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
திருப்பதி கோவிலில் 14-ந்தேதி வைகுண்ட துவாதசி நாளில் அதிகாலை 5 மணி முதல் 6 மணிக்குள் புஷ்கரணியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெறும். இதில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் வழியாக பக்தர்களை அனுமதிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது.தலைமை செயல் அதிகாரி ஜவகர் தலைமை தாங்கினார்.அவர் பேசியதாவது;-
வருகிற 13-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை 10 நாட்களுக்கு சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. இதையொட்டி 13-ந்தேதி அதிகாலை 1.45 மணிக்கு நித்யபூஜைகள் தொடங்கப்படும். வைகுண்ட ஏகாதசி அன்று மாடவீதியில் தங்கரதத்தில் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி தாயாருடன் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.
14-ந்தேதி வைகுண்ட துவாதசி நாளில் அதிகாலை 5 மணி முதல் 6 மணிக்குள் புஷ்கரணியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெறும். இதில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
ஒமைக்ரான் தொற்றைக் கருத்தில் கொண்டு 48 மணி நேரத்திற்கு முன் எடுத்த கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அல்லது தடுப்பூசி இரண்டு டோஸ்கள் போட்டதற்கான சான்றுகளுடன் பக்தர்கள் தரிசனத்திற்கு வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
திருப்பதி மலையில் 2-வது சாலை சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக சேதமடைந்தது.இந்த பாதையில் சீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
சாலையில் வழிகாட்டு பலகை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்படுகிறது. வருகிற 10-ந்தேதி அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடக்கிறது. 11-ந் தேதி முதல் இந்த சாலை பக்தர்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்படுகிறது. இதில் கனரக வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.
திருப்பதி பழைய கெங்கையம்மன் கோவில் அருகே 7 ஏக்கரில் மலர்ச் செடிகள் வளர்க்கப்படுகின்றன. அதிலிருந்து தினமும் ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் பூஜைகள் அலங்காரங்களுக்கு 100 முதல் 150 கிலோ பூக்கள் எடுக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று 29,652 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 14,916 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.2.75 கோடி உண்டியல் காணிக்கை வசூல் ஆனது.
வருகிற 13-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை 10 நாட்களுக்கு சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. இதையொட்டி 13-ந்தேதி அதிகாலை 1.45 மணிக்கு நித்யபூஜைகள் தொடங்கப்படும். வைகுண்ட ஏகாதசி அன்று மாடவீதியில் தங்கரதத்தில் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி தாயாருடன் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.
14-ந்தேதி வைகுண்ட துவாதசி நாளில் அதிகாலை 5 மணி முதல் 6 மணிக்குள் புஷ்கரணியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெறும். இதில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
ஒமைக்ரான் தொற்றைக் கருத்தில் கொண்டு 48 மணி நேரத்திற்கு முன் எடுத்த கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அல்லது தடுப்பூசி இரண்டு டோஸ்கள் போட்டதற்கான சான்றுகளுடன் பக்தர்கள் தரிசனத்திற்கு வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
திருப்பதி மலையில் 2-வது சாலை சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக சேதமடைந்தது.இந்த பாதையில் சீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
சாலையில் வழிகாட்டு பலகை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்படுகிறது. வருகிற 10-ந்தேதி அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடக்கிறது. 11-ந் தேதி முதல் இந்த சாலை பக்தர்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்படுகிறது. இதில் கனரக வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.
திருப்பதி பழைய கெங்கையம்மன் கோவில் அருகே 7 ஏக்கரில் மலர்ச் செடிகள் வளர்க்கப்படுகின்றன. அதிலிருந்து தினமும் ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் பூஜைகள் அலங்காரங்களுக்கு 100 முதல் 150 கிலோ பூக்கள் எடுக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று 29,652 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 14,916 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.2.75 கோடி உண்டியல் காணிக்கை வசூல் ஆனது.
திருச்சேறை ஸ்தலத்தில் (கும்பகோணம் திருவாரூர் பாதையில் உள்ள ஸ்தலம்) சாரபரமேஸ்வரர் ஆலயத்தில் காலபைரவரை வழிபட்ட பின் திருநாவுக்கரசர் பாடிய பதிகம் இது.
விரித்த பல்கதிர்கொள் சூலம்
வெடிபடு தமருகம்கை
தரித்ததோர் கோலகால பைரவனாகி
வேழம் உரித்து உமை அஞ்சக் கண்டு
ஒண்திருமேனி வாய் விள்ளச்
சிரித்தருள் செய்தார் சேறைச்
செந்நெறிச் செல்வனாரே
திருச்சேறை ஸ்தலத்தில் (கும்பகோணம் திருவாரூர் பாதையில் உள்ள ஸ்தலம்) சாரபரமேஸ்வரர் ஆலயத்தில் காலபைரவர் அற்புதமாகக் காட்சி தருகிறார். அவரை வழிபட்ட திருநாவுக்கரசர் பாடிய பதிகம் இது.
வெடிபடு தமருகம்கை
தரித்ததோர் கோலகால பைரவனாகி
வேழம் உரித்து உமை அஞ்சக் கண்டு
ஒண்திருமேனி வாய் விள்ளச்
சிரித்தருள் செய்தார் சேறைச்
செந்நெறிச் செல்வனாரே
திருச்சேறை ஸ்தலத்தில் (கும்பகோணம் திருவாரூர் பாதையில் உள்ள ஸ்தலம்) சாரபரமேஸ்வரர் ஆலயத்தில் காலபைரவர் அற்புதமாகக் காட்சி தருகிறார். அவரை வழிபட்ட திருநாவுக்கரசர் பாடிய பதிகம் இது.
நெல்லையப்பர் கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 12-ந் தேதி நெல்லுக்கு வேலியிட்ட நிகழ்ச்சி நடக்கிறது.
நெல்லை டவுன் நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் கோவிலில் ஆண்டு தோறும் தைப்பூச திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு தைப்பூச திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக அதிகாலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டது. வேத மந்திரங்கள் முழங்க கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது.
நேற்று முழு ஊரடங்கு அமலில் இருந்ததால் பக்தர்கள் இன்றி கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவில் திருநெல்வேலி என்று ஊர் பெயர் வருவதற்கு காரணமாக அமைந்த திருவிளையாடல் புராணமான நெல்லுக்கு வேலியிட்ட நிகழ்ச்சி வருகிற 12-ந் தேதி (புதன்கிழமை) அன்று நடைபெறுகிறது. 18-ந்தேதி தைப்பூசம் அன்று தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறும். கோவிலில் இருந்து சுவாமி, அம்பாள் புறப்பட்டு நெல்லை சந்திப்பு கைலாசபுரத்தில் உள்ள தைப்பூச மண்டபத்தில் எழுந்தருள்கிறார்கள். அங்கு தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரி நடைபெறும். 19-ந் தேதி மதியம் 12 மணிக்கு கோவில் சவுந்தர மண்டபத்தில் நடராஜர் திருநடனம் காட்சி நடைபெறுகிறது. 20-ந் தேதி வெளி தெப்பக்குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.
கொரோனா கட்டுப்பாடுகள் அடிப்படையில் விழா நிகழ்ச்சிகளை கோவில் ஊழியர்கள் செய்து வருகிறார்கள்.
முன்னதாக அதிகாலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டது. வேத மந்திரங்கள் முழங்க கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது.
நேற்று முழு ஊரடங்கு அமலில் இருந்ததால் பக்தர்கள் இன்றி கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவில் திருநெல்வேலி என்று ஊர் பெயர் வருவதற்கு காரணமாக அமைந்த திருவிளையாடல் புராணமான நெல்லுக்கு வேலியிட்ட நிகழ்ச்சி வருகிற 12-ந் தேதி (புதன்கிழமை) அன்று நடைபெறுகிறது. 18-ந்தேதி தைப்பூசம் அன்று தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறும். கோவிலில் இருந்து சுவாமி, அம்பாள் புறப்பட்டு நெல்லை சந்திப்பு கைலாசபுரத்தில் உள்ள தைப்பூச மண்டபத்தில் எழுந்தருள்கிறார்கள். அங்கு தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரி நடைபெறும். 19-ந் தேதி மதியம் 12 மணிக்கு கோவில் சவுந்தர மண்டபத்தில் நடராஜர் திருநடனம் காட்சி நடைபெறுகிறது. 20-ந் தேதி வெளி தெப்பக்குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.
கொரோனா கட்டுப்பாடுகள் அடிப்படையில் விழா நிகழ்ச்சிகளை கோவில் ஊழியர்கள் செய்து வருகிறார்கள்.
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இன்று(திங்கட்கிழமை) அம்மன் மரசிம்ம வாகனத்திலும், நாளை பூத வாகனத்திலும், அதனைத்தொடர்ந்து தினமும் பல்வேறு வாகனங்களில் புறப்பாடாகிறார்.
சக்தி தலங்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச திருவிழா விமரிசையாக நடைபெறும். அதேபோல இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனையொட்டி, உற்சவர் அம்மனுக்கு காலை சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. அதைத்தொடர்ந்து அம்மன் கேடயத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினார். அதைத்தொடர்ந்து கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர், மாரியம்மன் படம் வரையப்பட்ட கொடியினை மேளதாளங்கள் முழங்க கோவில் குருக்கள் கொடிமரத்தில் ஏற்றினர். அதனைத்தொடர்ந்து மாலை 5 மணிக்கு அபிஷேகமும், 6 மணிக்கு தீபாராதனையும், இரவு 8 மணிக்கு அம்மன் மரகேடயத்தில் எழுந்தருளி உள்பிரகாரத்தில் வலம் வந்து இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.
இரண்டாம் நாளான இன்று(திங்கட்கிழமை) அம்மன் மரசிம்ம வாகனத்திலும், நாளை பூத வாகனத்திலும், அதனைத்தொடர்ந்து தினமும் பல்வேறு வாகனங்களில் புறப்பாடாகிறார். திருவிழாவின் 8-ம் நாள் அம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 9-ம் நாள் திருவிழாவன்று காலை 10 மணிக்கு கோவிலில் இருந்து அம்மன் பல்லக்கில் எழுந்தருளுகிறார். தொடர்ந்து மாலை 5 மணிக்கு அபிஷேகமும், இரவு 7 மணிக்கு மகா தீபாராதனையும் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து இரவு 8 மணிக்கு அம்மன் கோவில் உள் பிரகாரத்தில் அமைக்கப்படவுள்ள சிறிய அளவிலான தெப்பத்தில் காட்சி அளிக்கிறார். தொடர்ந்து அம்மன் ஆஸ்தான மண்டபத்தை சென்றடைகிறார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் செல்வராஜ் (கூடுதல் பொறுப்பு) தலைமையில் கோவில் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நேற்று நடைபெற்ற கொடியேற்று விழாவில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
இதனையொட்டி, உற்சவர் அம்மனுக்கு காலை சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. அதைத்தொடர்ந்து அம்மன் கேடயத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினார். அதைத்தொடர்ந்து கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர், மாரியம்மன் படம் வரையப்பட்ட கொடியினை மேளதாளங்கள் முழங்க கோவில் குருக்கள் கொடிமரத்தில் ஏற்றினர். அதனைத்தொடர்ந்து மாலை 5 மணிக்கு அபிஷேகமும், 6 மணிக்கு தீபாராதனையும், இரவு 8 மணிக்கு அம்மன் மரகேடயத்தில் எழுந்தருளி உள்பிரகாரத்தில் வலம் வந்து இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.
இரண்டாம் நாளான இன்று(திங்கட்கிழமை) அம்மன் மரசிம்ம வாகனத்திலும், நாளை பூத வாகனத்திலும், அதனைத்தொடர்ந்து தினமும் பல்வேறு வாகனங்களில் புறப்பாடாகிறார். திருவிழாவின் 8-ம் நாள் அம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 9-ம் நாள் திருவிழாவன்று காலை 10 மணிக்கு கோவிலில் இருந்து அம்மன் பல்லக்கில் எழுந்தருளுகிறார். தொடர்ந்து மாலை 5 மணிக்கு அபிஷேகமும், இரவு 7 மணிக்கு மகா தீபாராதனையும் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து இரவு 8 மணிக்கு அம்மன் கோவில் உள் பிரகாரத்தில் அமைக்கப்படவுள்ள சிறிய அளவிலான தெப்பத்தில் காட்சி அளிக்கிறார். தொடர்ந்து அம்மன் ஆஸ்தான மண்டபத்தை சென்றடைகிறார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் செல்வராஜ் (கூடுதல் பொறுப்பு) தலைமையில் கோவில் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நேற்று நடைபெற்ற கொடியேற்று விழாவில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
சோலை முருகன் கோவில் மூலவர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் நடந்தது.பின்னர் உற்சவர் வள்ளி- தெய்வானை சமேத சுப்பிரமணிய சாமிக்கும் பூஜைகள், சுவாமி புறப்பாடு தீபாராதனை நடந்தது.
மதுரை மாவட்டம் அழகர் மலை உச்சியில் உள்ள பிரசித்தி பெற்ற முருகப் பெருமானின் ஆறாவது படைவீடு சோலை முருகன் கோவில். இந்த கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் தைப்பூச திருவிழாவும் ஒன்றாகும். விழாவில் நேற்று காலையில் மேளதாளம் முழங்க அலங்கரிக்கப்பட்ட தங்க கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது.
தொடர்ந்து மூலவர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் நடந்தது.பின்னர் உற்சவர் வள்ளி- தெய்வானை சமேத சுப்பிரமணிய சாமிக்கும் பூஜைகள், சுவாமி புறப்பாடு தீபாராதனை நடந்தது.
இந்த விழா ஒவ்வொரு நாளும் கோவில் வெளி பிரகாரத்தில் நடைபெறும், வருகிற 18-ந் தேதி இந்த திருவிழா நிறைவு பெறுகிறது. முன்னதாக நேற்று நடந்த விழாவின் போது கொரோனா தொற்று ஊரடங்கு காரணத்தினால் அனுமதிக் கப்பட்ட கோவில் சிவாச்சார்யார்களும், திருக்கோவில் கண்காணிப்பாளர்கள், பணியாளர்கள் மட்டும் கலந்து கொண்டனர். திருவிழா ஏற்பாடுகளை தக்கார் வெங்க டாசலம், துணை ஆணையர் அனிதா மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
தொடர்ந்து மூலவர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் நடந்தது.பின்னர் உற்சவர் வள்ளி- தெய்வானை சமேத சுப்பிரமணிய சாமிக்கும் பூஜைகள், சுவாமி புறப்பாடு தீபாராதனை நடந்தது.
இந்த விழா ஒவ்வொரு நாளும் கோவில் வெளி பிரகாரத்தில் நடைபெறும், வருகிற 18-ந் தேதி இந்த திருவிழா நிறைவு பெறுகிறது. முன்னதாக நேற்று நடந்த விழாவின் போது கொரோனா தொற்று ஊரடங்கு காரணத்தினால் அனுமதிக் கப்பட்ட கோவில் சிவாச்சார்யார்களும், திருக்கோவில் கண்காணிப்பாளர்கள், பணியாளர்கள் மட்டும் கலந்து கொண்டனர். திருவிழா ஏற்பாடுகளை தக்கார் வெங்க டாசலம், துணை ஆணையர் அனிதா மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
சென்னையில் இருந்து செங்கல்பட்டுக்கு செல்லும் வழியில் மறைமலை நகரை அடுத்துள்ள மகேந்திரா சிட்டிக்கு மிக அருகில் மகா பைரவ ருத்ர ஆலயம் கம்பீரமாக எழுந்துள்ளது.
உருவான வரலாறு
பக்தர்கள் கேட்பதை எல்லாம் தரக்கூடியவர் மகா பைரவர். ஆனாலும் என்ன காரணத்தினாலோ தெரியவில்லை. தமிழ்நாட்டில் பைரவருக்கு என்று தனி ஆலயங்கள் நிறைய இடங்களில் இல்லை. பைரவருக்கு என்று பிரத்யேகமாக விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் தனி ஆலயங்கள் உள்ளன.
சென்னையில் மகா பைரவருக்கு என்று தனி கோவில் இல்லை என்ற குறை பக்தர்களிடம் நீண்ட நாட்களாக இருந்தது. அந்த குறையை நிவர்த்தி செய்யும் வகையில் சென்னை புறநகரில் மகா பைரவர் ருத்ர ஆலயத்தை ஸ்ரீபைரவம் சித்தாந்தம் சுவாமிகள் உருவாக்கி இருக்கிறார்.
சென்னையில் இருந்து செங்கல்பட்டுக்கு செல்லும் வழியில் மறைமலை நகரை அடுத்துள்ள மகேந்திரா சிட்டிக்கு மிக அருகில் மகா பைரவ ருத்ர ஆலயம் கம்பீரமாக எழுந்துள்ளது. மனதை மயக்கும் மகேந்திரா சிட்டி நகரின் உட்புறமாக புகுந்து சென்றால், அந்த வழித்தடம் நம்மை திருவடி சூலம் கிராமத்துக்கு அழைத்து செல்லும். அங்கு சுற்றிலும் மலை சூழ்ந்திருக்க, பச்சை பசேல் சூழ்நிலையில் மிகவும் ரம்மியமாக மகா பைரவ ருத்ர ஆலயம் நிர்மானிக்கப்பட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு வரை இந்த இடம் மலையடிவாரத்தில் அடர்ந்த வனப்பகுதியாக இருந்தது. பைரவர் இந்த இடத்தில் எழுந்தருளுவார் என்று அந்த கிராம மக்களே எதிர்பார்க்கவில்லை.
ஆனால் பைரவர் ஒன்றை நினைத்து விட்டால், பிறகு அதை யார் தடுக்க முடியும்?
அப்படித்தான் இந்த மகா பைரவ ருத்ர ஆலயத்தின் தோற்றத்திலும் அற்புதங்கள், மகிமைகள் நிறைந்துள்ளது. அதுபற்றி சொல்லும்போது மகா பைரவ ருத்ர ஆலய நிர்வாகிகள் மெய்சிலிர்த்துப் போகிறார்கள்.
ஏனெனில் 5 மாதத்துக்குள் ஒரு பிரமாண்ட ஆலயத்தை கட்டுவது என்பது எப்படி சாத்தியமாகும்? பைரவர் இட்ட உத்தரவால் எல்லாம் சாத்தியமாயிற்று. ஸ்ரீபைரவம் சித்தாந்தம் சுவாமிகள் மூலம் ஒவ்வொரு அசைவையும் செய்து வரும் மகா பைரவர், இந்த ஆண்டு தொடக்கத்தில் ஒரு உத்தரவை வெளியிட்டார். சென்னையில் ஒரு ஆலயம் உருவாக்கப்பட வேண்டும் என்பதே அந்த உத்தரவு.
மே மாதம் 19-ந்தேதி பைரவர் ஆலயம் கட்டுவதற்கான நிலத்துக்கு அட்வான்ஸ் கொடுக்க வேண்டும் என்று ஸ்ரீபைரவம் சித்தாந்த சுவாமிகள் அருளியிருந்தார். அதன் பேரில் மகா பைரவ ருத்ர ஆலய நிர்வாகிகள் சென்னை புறநகரில் இடம் தேடி அலைந்தனர்.
இந்த நிலையில், எந்த இடத்தில் மகா பைரவர் ஆலயம் அமைய நிலம் கிடைக்கும் என்பது உறுதி செய்யப்படுவதற்கு முன்பே பைரவர் சிலை செய்ய ஸ்ரீபைரவம் சித்தாந்த சுவாமிகள் ஏற்பாடு செய்தனர். அதன்பேரில் கன்னியாகுமரி மாவட்டம் மைலாடியில் உள்ள மலையில் இருந்து கல்எடுத்து பைரவர் சிலை உருவானது.
அதற்குள் மே மாதம் 19-ந்தேதி நெருங்கி விட்டது. மே மாதம் 18-ந்தேதி மாலை வரை பைரவர் ஆலயத்துக்கான இடம் எங்கு கிடைக்கும் என்பதில் ‘சஸ்பென்ஸ்’ நிலவியது.
19-ந்தேதி காலை ஸ்ரீபைரவம் சித்தாந்த சுவாமிகளை அழைத்துக் கொண்டு பக்தர்கள் புறப்பட்டனர். மறைமலைநகர் தாண்டியதும், ‘இடதுபக்கம் போ... ...’ என்று ஸ்ரீபைரவம் சித்தாந்த சுவாமிகள் உத்தரவிட பக்தர்கள் திருவடி சூலம் சாலையில் சென்றனர். அங்கு திருவடிசூலம் ஈச்சங்கரணை என்ற ஊர் அருகே வந்ததும், மலையடிவார பகுதி ஒன்றை ஸ்ரீபைரவம் சித்தாந்த சுவாமிகள் சுட்டிக் காட்டினார்.
அந்த பகுதியில் பூ போட்டு ‘இதுதான் மகா பைரவருக்கு ஆலயம் கட்டப்பட வேண்டிய இடம்’ என்றார்.
உடன் வந்த பக்தர்களுக்கு ஆச்சரியமும், அதிர்ச்சியுமாக இருந்தது.
இந்த நிலம் யாருக்கு சொந்தம் என்று கூட தெரியாதே... ... எப்படி இதை வாங்குவது? என்று தவித்தப்படி இருந்தனர்.
இதை உணர்ந்த ஸ்ரீபைரவம் சித்தாந்தம் சுவாமிகள், ‘கவலைப்படாதீர்கள்... ... இன்னும் 10 நிமிடத்தில் இந்த நிலத்தின் சொந்தக்காரர் இங்கு வருவார்.
உங்களுக்கே அவர் இந்த இடத்தைத் தந்து விடுவார்’ என்றார்.
அவர் சொன்னது போலவே, 10 நிமிடங்கள் கழித்து அந்த நிலத்தின் உரிமையாளர் அங்கு வந்தார். ஆலய நிர்வாகிகளிடம், ‘நீங்கள் யார்? என்ன வேண்டும்?’ என்று கேட்டார்.
ஆச்சரியத்தில் மிதந்த ஆலய நிர்வாகிகள், ‘இந்த இடத்தில் நாங்கள் மகா பைரவருக்கு ஆலயம் கட்ட விரும்புகிறோம். இந்த நிலத்தை கோவில்கட்ட தருவீர்களா?’ என்றனர்.
அந்த நிலத்தின் உரிமையாளர், வேறு எந்த கேள்வியும் கேட்கவில்லை.
‘கோவில் கட்டத்தானே கேட்கிறீர்கள். தாராளமாக எடுத்துக் கொள்ளுங்கள்’ என்றார். அன்றே பைரவர் ஆலய நிலத்துக்கான அட்வான்ஸ் கொடுக்கப்பட்டது. 9 ஏக்கர் 28 சென்ட் இடம் ஸ்ரீமகா பைரவர் ருத்ர ஆலயத்துக்கு சொந்தமானது.
அடுத்த சில நாட்களில் மைலாடியில் தயாராக செய்து வைக்கப்பட்டிருந்த மகா பைரவர் சிலை நேராக இந்த ஆலயத்துக்கு எடுத்து வரப்பட்டது. அதன்பிறகு அங்கு ஒரு மண்டலத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
பின்னர் ஸ்ரீமகா பைரவர் ருத்ர ஆலய கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. 5 மாதத்துக்குள் இடம் வாங்கி, ஆலயத்தை கட்டி, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது என்றால் பைரவர் அருள் இல்லாமல் இந்த அற்புதம் நிகழ வாய்ப்பே இல்லை.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பிறந்த ஸ்ரீபைரவ சித்தாந்தம் சுவாமிகள் பைரவரின் உத்தரவை ஏற்று சென்னை மேற்கு தாம்பரம், கல்யாண்நகர், 4-வது குறுக்குத் தெருவில் மந்திராலயம் அமைத்து, தன்னை நாடி வரும் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைத்து வருகிறார். ஒருவரை பார்த்த உடனேயே அவர் வாழ்க்கையை பற்றி ஸ்ரீபைரவ சித்தாந்த சுவாமிகளால் சொல்ல முடிகிறது. இவர் மாய, மாந்திரீக சக்திகள் எதுவும் செய்வதில்லை. மூட நம்பிக்கைகளை வளர்ப்பதில்லை.
மாறாக பைரவமாக இருந்து மக்களுக்கு வழி காட்டிக் கொண்டிருக்கிறார். பைரவத்தின் அருளை தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் பெற்று பயன் அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் இவர் சென்னை அருகே மகேந்திரா சிட்டி பகுதியில் இருந்து உள் செல்லும் திருவடி சூலம் சாலையில் உள்ள ஈச்சங்கரணையில் மகாபைரவர் ருத்ர ஆலயத்தை அமைத்துள்ளார்.
சுற்றிலும் மலை சூழ்ந்திருக்க உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆலயம் பஞ்ச பூதங்களும் ஆட்சி செய்யும் அருமையான தலமாக உள்ளது. சிவ ஆகம விதிகளின்படி இங்கு பூஜைகள் நடத்தப்படுகிறது. தேய்பிறை அஷ்டமி, பவுர்ணமி, அமாவாசை, கிருத்திகை நாட்களில் இத்தலத்தில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.
அரண்மனை கட்டிடக் கலையில் கோவில் அமைப்பு, ஆடும் கும்ப கலசம், பைரவரின் கூம்பு வடிவ கருவறை என்று இந்த ஆலயம் முழுக்க, முழுக்க மற்ற ஆலயங்களில் இருந்து வித்தியாசப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மகா பைரவ ருத்ர ஆலயத்தின் பிரதான சிறப்பு என்ன தெரியுமா? இந்த கிழமைதான் பைரவரை கும்பிட வேண்டும்.இப்படித் தான் வணங்க வேண்டும் என்று எந்த ஒரு கட்டுப்பாடோ, வரைமுறையோ இங்கு கிடையவே கிடையாது.
உங்களுக்கு எப்போது வசதிப்படுகிறதோ, அப்போது வந்து வழிபடுங்கள் என்கிறார் ஸ்ரீபைரவ சித்தாந்தம் சுவாமிகள். சிலர் பைரவருக்குஅது படைக்க வேண்டுமே.. இது செய்ய வேண்டுமே என்று நினைப்பதுண்டு. அதற்கும் ஸ்ரீபைரவ சித்தாந்தம் சுவாமிகள் விளக்கம் அளித்துள்ளார்.
பைரவருக்கு ஒரு முழம் பூ வாங்கிப் போட்டாலே போதும். அவர் அருள் கிடைத்து விடும் என்கிறார். ஸ்ரீபைரவ சித்தாந்தம் சுவாமிகள் இதுபற்றி கூறுகையில், “பைரவரை இயல்பான நிலையில் வணங்குங்கள். ஆனால் அவரை இறுகப் பற்றிக் கொள்ளுங்கள் உங்களுக்கு கிடைக்க வேண்டியவை எல்லாம் இடையூறு இல்லாமல் கிடைக்கும்‘’ என்கிறார்.
சில ஆலயங்களில் இத்தனை வாரம் வர வேண்டும். இன்னென்ன செய்ய வேண்டும் என்பார்கள். ஆனால் மகாருத்ர பைரவ ஆலயத்தில் அப்படியெல்லாம் சொல்வதில்லை. அதற்கு மாறாக ஆண்டுக்கு ஒரு தடவை இத்தலத்தில் காலடி எடுத்து வைத்து விட்டுச் சென்றாலே போதும் என்கிறார்கள்.
ஆண்டுக்கு ஒரு தடவை வந்து வழிபட்டாலே ஒருவரது ஆத்மா சுத்தமாகி அவருக்கு கிடைக்க வேண்டிய எல்லா பலன்களும் கிடைத்து விடும் என்று ஸ்ரீபைரவ சித்தாந்தம் சுவாமிகள் அருளியுள்ளார். எனவே இது இந்த தலத்துக்கு உரிய தனித்துவமாக உள்ளது. அதன்படி பார்த்தால் மகா ருத்ர ஆலய பைரவரை நெருங்க, நெருங்க உங்கள் கர்ம வினைகள் காணாமல் போய் விடும்.
பக்தர்கள் கேட்பதை எல்லாம் தரக்கூடியவர் மகா பைரவர். ஆனாலும் என்ன காரணத்தினாலோ தெரியவில்லை. தமிழ்நாட்டில் பைரவருக்கு என்று தனி ஆலயங்கள் நிறைய இடங்களில் இல்லை. பைரவருக்கு என்று பிரத்யேகமாக விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் தனி ஆலயங்கள் உள்ளன.
சென்னையில் மகா பைரவருக்கு என்று தனி கோவில் இல்லை என்ற குறை பக்தர்களிடம் நீண்ட நாட்களாக இருந்தது. அந்த குறையை நிவர்த்தி செய்யும் வகையில் சென்னை புறநகரில் மகா பைரவர் ருத்ர ஆலயத்தை ஸ்ரீபைரவம் சித்தாந்தம் சுவாமிகள் உருவாக்கி இருக்கிறார்.
சென்னையில் இருந்து செங்கல்பட்டுக்கு செல்லும் வழியில் மறைமலை நகரை அடுத்துள்ள மகேந்திரா சிட்டிக்கு மிக அருகில் மகா பைரவ ருத்ர ஆலயம் கம்பீரமாக எழுந்துள்ளது. மனதை மயக்கும் மகேந்திரா சிட்டி நகரின் உட்புறமாக புகுந்து சென்றால், அந்த வழித்தடம் நம்மை திருவடி சூலம் கிராமத்துக்கு அழைத்து செல்லும். அங்கு சுற்றிலும் மலை சூழ்ந்திருக்க, பச்சை பசேல் சூழ்நிலையில் மிகவும் ரம்மியமாக மகா பைரவ ருத்ர ஆலயம் நிர்மானிக்கப்பட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு வரை இந்த இடம் மலையடிவாரத்தில் அடர்ந்த வனப்பகுதியாக இருந்தது. பைரவர் இந்த இடத்தில் எழுந்தருளுவார் என்று அந்த கிராம மக்களே எதிர்பார்க்கவில்லை.
ஆனால் பைரவர் ஒன்றை நினைத்து விட்டால், பிறகு அதை யார் தடுக்க முடியும்?
அப்படித்தான் இந்த மகா பைரவ ருத்ர ஆலயத்தின் தோற்றத்திலும் அற்புதங்கள், மகிமைகள் நிறைந்துள்ளது. அதுபற்றி சொல்லும்போது மகா பைரவ ருத்ர ஆலய நிர்வாகிகள் மெய்சிலிர்த்துப் போகிறார்கள்.
ஏனெனில் 5 மாதத்துக்குள் ஒரு பிரமாண்ட ஆலயத்தை கட்டுவது என்பது எப்படி சாத்தியமாகும்? பைரவர் இட்ட உத்தரவால் எல்லாம் சாத்தியமாயிற்று. ஸ்ரீபைரவம் சித்தாந்தம் சுவாமிகள் மூலம் ஒவ்வொரு அசைவையும் செய்து வரும் மகா பைரவர், இந்த ஆண்டு தொடக்கத்தில் ஒரு உத்தரவை வெளியிட்டார். சென்னையில் ஒரு ஆலயம் உருவாக்கப்பட வேண்டும் என்பதே அந்த உத்தரவு.
மே மாதம் 19-ந்தேதி பைரவர் ஆலயம் கட்டுவதற்கான நிலத்துக்கு அட்வான்ஸ் கொடுக்க வேண்டும் என்று ஸ்ரீபைரவம் சித்தாந்த சுவாமிகள் அருளியிருந்தார். அதன் பேரில் மகா பைரவ ருத்ர ஆலய நிர்வாகிகள் சென்னை புறநகரில் இடம் தேடி அலைந்தனர்.
இந்த நிலையில், எந்த இடத்தில் மகா பைரவர் ஆலயம் அமைய நிலம் கிடைக்கும் என்பது உறுதி செய்யப்படுவதற்கு முன்பே பைரவர் சிலை செய்ய ஸ்ரீபைரவம் சித்தாந்த சுவாமிகள் ஏற்பாடு செய்தனர். அதன்பேரில் கன்னியாகுமரி மாவட்டம் மைலாடியில் உள்ள மலையில் இருந்து கல்எடுத்து பைரவர் சிலை உருவானது.
அதற்குள் மே மாதம் 19-ந்தேதி நெருங்கி விட்டது. மே மாதம் 18-ந்தேதி மாலை வரை பைரவர் ஆலயத்துக்கான இடம் எங்கு கிடைக்கும் என்பதில் ‘சஸ்பென்ஸ்’ நிலவியது.
19-ந்தேதி காலை ஸ்ரீபைரவம் சித்தாந்த சுவாமிகளை அழைத்துக் கொண்டு பக்தர்கள் புறப்பட்டனர். மறைமலைநகர் தாண்டியதும், ‘இடதுபக்கம் போ... ...’ என்று ஸ்ரீபைரவம் சித்தாந்த சுவாமிகள் உத்தரவிட பக்தர்கள் திருவடி சூலம் சாலையில் சென்றனர். அங்கு திருவடிசூலம் ஈச்சங்கரணை என்ற ஊர் அருகே வந்ததும், மலையடிவார பகுதி ஒன்றை ஸ்ரீபைரவம் சித்தாந்த சுவாமிகள் சுட்டிக் காட்டினார்.
அந்த பகுதியில் பூ போட்டு ‘இதுதான் மகா பைரவருக்கு ஆலயம் கட்டப்பட வேண்டிய இடம்’ என்றார்.
உடன் வந்த பக்தர்களுக்கு ஆச்சரியமும், அதிர்ச்சியுமாக இருந்தது.
இந்த நிலம் யாருக்கு சொந்தம் என்று கூட தெரியாதே... ... எப்படி இதை வாங்குவது? என்று தவித்தப்படி இருந்தனர்.
இதை உணர்ந்த ஸ்ரீபைரவம் சித்தாந்தம் சுவாமிகள், ‘கவலைப்படாதீர்கள்... ... இன்னும் 10 நிமிடத்தில் இந்த நிலத்தின் சொந்தக்காரர் இங்கு வருவார்.
உங்களுக்கே அவர் இந்த இடத்தைத் தந்து விடுவார்’ என்றார்.
அவர் சொன்னது போலவே, 10 நிமிடங்கள் கழித்து அந்த நிலத்தின் உரிமையாளர் அங்கு வந்தார். ஆலய நிர்வாகிகளிடம், ‘நீங்கள் யார்? என்ன வேண்டும்?’ என்று கேட்டார்.
ஆச்சரியத்தில் மிதந்த ஆலய நிர்வாகிகள், ‘இந்த இடத்தில் நாங்கள் மகா பைரவருக்கு ஆலயம் கட்ட விரும்புகிறோம். இந்த நிலத்தை கோவில்கட்ட தருவீர்களா?’ என்றனர்.
அந்த நிலத்தின் உரிமையாளர், வேறு எந்த கேள்வியும் கேட்கவில்லை.
‘கோவில் கட்டத்தானே கேட்கிறீர்கள். தாராளமாக எடுத்துக் கொள்ளுங்கள்’ என்றார். அன்றே பைரவர் ஆலய நிலத்துக்கான அட்வான்ஸ் கொடுக்கப்பட்டது. 9 ஏக்கர் 28 சென்ட் இடம் ஸ்ரீமகா பைரவர் ருத்ர ஆலயத்துக்கு சொந்தமானது.
அடுத்த சில நாட்களில் மைலாடியில் தயாராக செய்து வைக்கப்பட்டிருந்த மகா பைரவர் சிலை நேராக இந்த ஆலயத்துக்கு எடுத்து வரப்பட்டது. அதன்பிறகு அங்கு ஒரு மண்டலத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
பின்னர் ஸ்ரீமகா பைரவர் ருத்ர ஆலய கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. 5 மாதத்துக்குள் இடம் வாங்கி, ஆலயத்தை கட்டி, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது என்றால் பைரவர் அருள் இல்லாமல் இந்த அற்புதம் நிகழ வாய்ப்பே இல்லை.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பிறந்த ஸ்ரீபைரவ சித்தாந்தம் சுவாமிகள் பைரவரின் உத்தரவை ஏற்று சென்னை மேற்கு தாம்பரம், கல்யாண்நகர், 4-வது குறுக்குத் தெருவில் மந்திராலயம் அமைத்து, தன்னை நாடி வரும் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைத்து வருகிறார். ஒருவரை பார்த்த உடனேயே அவர் வாழ்க்கையை பற்றி ஸ்ரீபைரவ சித்தாந்த சுவாமிகளால் சொல்ல முடிகிறது. இவர் மாய, மாந்திரீக சக்திகள் எதுவும் செய்வதில்லை. மூட நம்பிக்கைகளை வளர்ப்பதில்லை.
மாறாக பைரவமாக இருந்து மக்களுக்கு வழி காட்டிக் கொண்டிருக்கிறார். பைரவத்தின் அருளை தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் பெற்று பயன் அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் இவர் சென்னை அருகே மகேந்திரா சிட்டி பகுதியில் இருந்து உள் செல்லும் திருவடி சூலம் சாலையில் உள்ள ஈச்சங்கரணையில் மகாபைரவர் ருத்ர ஆலயத்தை அமைத்துள்ளார்.
சுற்றிலும் மலை சூழ்ந்திருக்க உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆலயம் பஞ்ச பூதங்களும் ஆட்சி செய்யும் அருமையான தலமாக உள்ளது. சிவ ஆகம விதிகளின்படி இங்கு பூஜைகள் நடத்தப்படுகிறது. தேய்பிறை அஷ்டமி, பவுர்ணமி, அமாவாசை, கிருத்திகை நாட்களில் இத்தலத்தில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.
அரண்மனை கட்டிடக் கலையில் கோவில் அமைப்பு, ஆடும் கும்ப கலசம், பைரவரின் கூம்பு வடிவ கருவறை என்று இந்த ஆலயம் முழுக்க, முழுக்க மற்ற ஆலயங்களில் இருந்து வித்தியாசப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மகா பைரவ ருத்ர ஆலயத்தின் பிரதான சிறப்பு என்ன தெரியுமா? இந்த கிழமைதான் பைரவரை கும்பிட வேண்டும்.இப்படித் தான் வணங்க வேண்டும் என்று எந்த ஒரு கட்டுப்பாடோ, வரைமுறையோ இங்கு கிடையவே கிடையாது.
உங்களுக்கு எப்போது வசதிப்படுகிறதோ, அப்போது வந்து வழிபடுங்கள் என்கிறார் ஸ்ரீபைரவ சித்தாந்தம் சுவாமிகள். சிலர் பைரவருக்குஅது படைக்க வேண்டுமே.. இது செய்ய வேண்டுமே என்று நினைப்பதுண்டு. அதற்கும் ஸ்ரீபைரவ சித்தாந்தம் சுவாமிகள் விளக்கம் அளித்துள்ளார்.
பைரவருக்கு ஒரு முழம் பூ வாங்கிப் போட்டாலே போதும். அவர் அருள் கிடைத்து விடும் என்கிறார். ஸ்ரீபைரவ சித்தாந்தம் சுவாமிகள் இதுபற்றி கூறுகையில், “பைரவரை இயல்பான நிலையில் வணங்குங்கள். ஆனால் அவரை இறுகப் பற்றிக் கொள்ளுங்கள் உங்களுக்கு கிடைக்க வேண்டியவை எல்லாம் இடையூறு இல்லாமல் கிடைக்கும்‘’ என்கிறார்.
சில ஆலயங்களில் இத்தனை வாரம் வர வேண்டும். இன்னென்ன செய்ய வேண்டும் என்பார்கள். ஆனால் மகாருத்ர பைரவ ஆலயத்தில் அப்படியெல்லாம் சொல்வதில்லை. அதற்கு மாறாக ஆண்டுக்கு ஒரு தடவை இத்தலத்தில் காலடி எடுத்து வைத்து விட்டுச் சென்றாலே போதும் என்கிறார்கள்.
ஆண்டுக்கு ஒரு தடவை வந்து வழிபட்டாலே ஒருவரது ஆத்மா சுத்தமாகி அவருக்கு கிடைக்க வேண்டிய எல்லா பலன்களும் கிடைத்து விடும் என்று ஸ்ரீபைரவ சித்தாந்தம் சுவாமிகள் அருளியுள்ளார். எனவே இது இந்த தலத்துக்கு உரிய தனித்துவமாக உள்ளது. அதன்படி பார்த்தால் மகா ருத்ர ஆலய பைரவரை நெருங்க, நெருங்க உங்கள் கர்ம வினைகள் காணாமல் போய் விடும்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தைத்தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைத்தேர் உற்சவம் 17-ந் தேதி நடைபெறுகிறது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பூபதி திருநாள் எனப்படும் தைத்தேர் உற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா வருகிற 19-ந் தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது.
தைத்தேர் உற்சவத்தின் முதல் நாளான நேற்று அதிகாலை 3.45 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அதிகாலை 4.15 மணிக்கு கொடியேற்ற மண்டபம் வந்தடைந்தார். பின்னர் அதிகாலை 4.15 மணிக்கு கொடிப்படம் புறப்பட்டு காலை 5.15 மணிமுதல் காலை 6.15 மணிக்குள் தனுர் லக்னத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னர் காலை 7.15 மணிக்கு நம்பெருமாள் கொடியேற்ற மண்டபத்தில் இருந்து புறப்பட்டு காலை 7.30 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைந்தார். பின்னர், உபயநாச்சியார்களுடன் மாலை 6.30 மணிக்கு திருச்சிவிகையில் புறப்பட்டு கோவில் வளாகத்திலேயே வலம் வந்து சந்தனு மண்டபம் வந்தடைந்தார். அங்கிருந்து இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு யாகசாலையில் திருமஞ்சனம் கண்டருளிய பின்னர் இரவு 1 மணிக்கு கண்ணாடி அறை சென்றடைந்தார்.
இரண்டாம் நாளான இன்று (திங்கட்கிழமை) காலை 5.30 மணிக்கு நம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து ஒற்றை பிரபை வாகனத்தில் புறப்படுகிறார். மாலை 6.30 மணிக்கு ஹம்ச வாகனத்தில் புறப்பாடு நடைபெறுகிறது.
தொடர்ந்த 11-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை பல்வேறு வாகனங்களில் எழுந்தருளுகிறார். 15-ந் தேதி நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளுகிறார். 16-ந் தேதி மாலை குதிரை வாகனத்தில் எழுந்தருளுகிறார்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைத்தேர் உற்சவம் 17-ந் தேதி நடைபெறுகிறது. வழக்கமாக இந்த உற்சவத்தின் போது அலங்கரிக்கப்பட்ட தேரில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் எழுந்தருளியபின் தேர் நான்கு உத்திரை வீதிகளில் வலம்வந்து பின்னர் நிலையை அடையும்.
ஆனால் தற்போது கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால் பெருமாள் தைத்தேரில் எழுந்தருளுவதற்கு பதிலாக கோவில் வளாகத்தில் உள்ள கருட மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளுகிறார். 18-ந் தேதி சப்தாவரணம் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவின் நிறைவு நாளான 19-ந் தேதி நம்பெருமாள் ஆளும் பல்லக்கில் எழுந்தருளுகிறார்.
தைத்தேர் உற்சவத்தின் முதல் நாளான நேற்று அதிகாலை 3.45 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அதிகாலை 4.15 மணிக்கு கொடியேற்ற மண்டபம் வந்தடைந்தார். பின்னர் அதிகாலை 4.15 மணிக்கு கொடிப்படம் புறப்பட்டு காலை 5.15 மணிமுதல் காலை 6.15 மணிக்குள் தனுர் லக்னத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னர் காலை 7.15 மணிக்கு நம்பெருமாள் கொடியேற்ற மண்டபத்தில் இருந்து புறப்பட்டு காலை 7.30 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைந்தார். பின்னர், உபயநாச்சியார்களுடன் மாலை 6.30 மணிக்கு திருச்சிவிகையில் புறப்பட்டு கோவில் வளாகத்திலேயே வலம் வந்து சந்தனு மண்டபம் வந்தடைந்தார். அங்கிருந்து இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு யாகசாலையில் திருமஞ்சனம் கண்டருளிய பின்னர் இரவு 1 மணிக்கு கண்ணாடி அறை சென்றடைந்தார்.
இரண்டாம் நாளான இன்று (திங்கட்கிழமை) காலை 5.30 மணிக்கு நம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து ஒற்றை பிரபை வாகனத்தில் புறப்படுகிறார். மாலை 6.30 மணிக்கு ஹம்ச வாகனத்தில் புறப்பாடு நடைபெறுகிறது.
தொடர்ந்த 11-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை பல்வேறு வாகனங்களில் எழுந்தருளுகிறார். 15-ந் தேதி நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளுகிறார். 16-ந் தேதி மாலை குதிரை வாகனத்தில் எழுந்தருளுகிறார்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைத்தேர் உற்சவம் 17-ந் தேதி நடைபெறுகிறது. வழக்கமாக இந்த உற்சவத்தின் போது அலங்கரிக்கப்பட்ட தேரில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் எழுந்தருளியபின் தேர் நான்கு உத்திரை வீதிகளில் வலம்வந்து பின்னர் நிலையை அடையும்.
ஆனால் தற்போது கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால் பெருமாள் தைத்தேரில் எழுந்தருளுவதற்கு பதிலாக கோவில் வளாகத்தில் உள்ள கருட மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளுகிறார். 18-ந் தேதி சப்தாவரணம் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவின் நிறைவு நாளான 19-ந் தேதி நம்பெருமாள் ஆளும் பல்லக்கில் எழுந்தருளுகிறார்.
திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட் வாங்க குவிந்த உள்ளூர் பக்தர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விடிய விடிய வரிசையில் நின்று பெற்று சென்றனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 13-ந்தேதி வைகுண்ட ஏகாதசி விழா நடக்கிறது. இதையொட்டி 13-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை 10 நாட்கள் சொர்க்க வாசல் வழியாக பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர்.
இதற்காக ரூ.300 கட்டணத்தில் ஆன்லைன் தரிசன டிக்கெட்டில் தினமும் 12 ஆயிரம் பக்தர்களும், ஆன்லைன் இலவச தரிசன டிக்கெட்டில் 10 ஆயிரம் பக்தர்களும் அனுமதிக்கப்பட உள்ளனர்.
திருப்பதியை சேர்ந்த உள்ளூர் பக்தர்கள் சொர்க்க வாசல் வழியாக தரிசனம் செய்யும் வகையில் தினமும் 5 ஆயிரம் பக்தர்கள் வீதம் 10 நாட்களுக்கு 50 ஆயிரம் பேரை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக நேரடி இலவச தரிசன டிக்கெட்டுகள் இன்று காலை முதல் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆனால் இரவு 10 மணி முதலே ராமச்சந்திர புஷ்கரணி, மாநகராட்சி அலுவலகம், பைராகி பட்டடி, விஷ்ணு நிவாசம் உள்ளிட்ட 5 டிக்கெட் கவுண்டர் முன்பாக பக்தர்கள் குவிய தொடங்கினர்.
கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் குவிந்தனர். இதனால் அங்கு தள்ளு முள்ளு ஏற்பட்டது. பக்தர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் திணறினர்.
இதையடுத்து உடனடியாக டிக்கெட் கவுண்டர்கள் திறக்கப்பட்டு இரவு 10 மணி அளவில் டிக்கெட்டுகளை வழங்கினர். பக்தர்கள் விடிய விடிய வரிசையில் நின்று டிக்கெட்டுகளை பெற்று சென்றனர்.
8 மணி நேரத்தில் 50 ஆயிரம் இலவச தரிசன டிக்கெட்டுகளும் காலியானது.
இதற்காக ரூ.300 கட்டணத்தில் ஆன்லைன் தரிசன டிக்கெட்டில் தினமும் 12 ஆயிரம் பக்தர்களும், ஆன்லைன் இலவச தரிசன டிக்கெட்டில் 10 ஆயிரம் பக்தர்களும் அனுமதிக்கப்பட உள்ளனர்.
திருப்பதியை சேர்ந்த உள்ளூர் பக்தர்கள் சொர்க்க வாசல் வழியாக தரிசனம் செய்யும் வகையில் தினமும் 5 ஆயிரம் பக்தர்கள் வீதம் 10 நாட்களுக்கு 50 ஆயிரம் பேரை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக நேரடி இலவச தரிசன டிக்கெட்டுகள் இன்று காலை முதல் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆனால் இரவு 10 மணி முதலே ராமச்சந்திர புஷ்கரணி, மாநகராட்சி அலுவலகம், பைராகி பட்டடி, விஷ்ணு நிவாசம் உள்ளிட்ட 5 டிக்கெட் கவுண்டர் முன்பாக பக்தர்கள் குவிய தொடங்கினர்.
கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் குவிந்தனர். இதனால் அங்கு தள்ளு முள்ளு ஏற்பட்டது. பக்தர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் திணறினர்.
இதையடுத்து உடனடியாக டிக்கெட் கவுண்டர்கள் திறக்கப்பட்டு இரவு 10 மணி அளவில் டிக்கெட்டுகளை வழங்கினர். பக்தர்கள் விடிய விடிய வரிசையில் நின்று டிக்கெட்டுகளை பெற்று சென்றனர்.
8 மணி நேரத்தில் 50 ஆயிரம் இலவச தரிசன டிக்கெட்டுகளும் காலியானது.
கிரகங்கள் எல்லாம் நம்மை ஆட்டிப் படைக்கின்றன. ஆனால், அந்த கிரகங்களை எல்லாம் ஸ்ரீயோக பைரவர் ஆட்டிப் படைத்து ஆட்சி செய்கிறார்.
ஆதிபைரவரிடம் இருந்துதான் முதலில் அசிதாங்க பைரவர், உருபைரவர், சண்ட பைரவர், குரோதன பைரவர், உன்மத்த பைரவர், கால பைரவர், பீஷண பைரவர், சம்ஹார பைரவர் எனும் அஷ்ட பைரவர்கள் தோன்றினர்.
பின்னர் இந்த எட்டு பைரவர் திருமேனி ஒவ்வொன்றிலிருந்தும் எட்டு எட்டாக ஒவ்வொரு காரணத்திற்கேற்ப 64 திருக்கோலங்களில் பைரவர்கள் வாகனத்துடனும், வாகனம் இல்லாமலும் நம் நாட்டில் உள்ள எல்லாக் கோவில்களிலும் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்கள். ஆக, நம் நாட்டில் உள்ள எல்லா ஆலயங்களிலும் எழுந்தருளி அருள்பாலிக்கும் எல்லா பைரவ மூர்த்திகளுக்கும், ஸ்ரீயோக பைரவர்தான் மூலமூர்த்தி ஆவார்.
பைரவரை ஜோதிட நூல்கள் காலமே உருவாய் கொண்ட காலபுருஷனாக கூறுகின்றன. பன்னிரெண்டு ராசிகளும் அவரது உருவின் பகுதிகளாகின்றன.
மேஷம்-சிரசு, ரிஷபம்-வாய், மிதுனம்-இரு கரங்கள், கடகம்-மார்பு, சிம்மம்-வயிறு, கன்னி-இடை, விருச்சிகம்-லிங்கம், தனுசு-தொடைகள், மகரம்-முழந்தாள், கும்பம்-கால்களின் கீழ்பகுதி, மீனம்-அடித்தளங்கள்.
பிரபஞ்சத்தில் சகல ஜீவ ராசிகளும் வான மண்டலத்தில் உள்ள நட்சத்திரங்களும், சூரியன், சந்திரன் சனி, ராகு - கேது ஆகிய நவக்கிரகங்களும் காலச்சக்கரத்தின் ஆளுகைக்கு உட்பட்டதே! காலச் சக்கரத்தினை இயக்கும் பரம்பொருள் பைரவரே!
கிரகங்கள் எல்லாம் நம்மை ஆட்டிப் படைக்கின்றன. ஆனால், அந்த கிரகங்களை எல்லாம் ஸ்ரீயோக பைரவர் ஆட்டிப் படைத்து ஆட்சி செய்கிறார். பைரவர் அரசர் என்றால், அவர் இட்ட கட்டளைகளை நிறைவேற்றும் சேவகர்களே கிரகங்கள். பைரவரின் கட்டளைப்படியே காலச்சக்கரம் சுழல்கிறது. அவர் கட்டளைப்படியே எல்லா கிரகங்களும் செயல்படுகின்றன. அவரைச் சரணடைந்து நெஞ்சம் உருக வழிபட்டால் காலத்தின் கட்டுப்பாட்டையும் மீறி கிரக தோஷங்களை அகற்றி நன்மை புரிவார்.
பின்னர் இந்த எட்டு பைரவர் திருமேனி ஒவ்வொன்றிலிருந்தும் எட்டு எட்டாக ஒவ்வொரு காரணத்திற்கேற்ப 64 திருக்கோலங்களில் பைரவர்கள் வாகனத்துடனும், வாகனம் இல்லாமலும் நம் நாட்டில் உள்ள எல்லாக் கோவில்களிலும் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்கள். ஆக, நம் நாட்டில் உள்ள எல்லா ஆலயங்களிலும் எழுந்தருளி அருள்பாலிக்கும் எல்லா பைரவ மூர்த்திகளுக்கும், ஸ்ரீயோக பைரவர்தான் மூலமூர்த்தி ஆவார்.
பைரவரை ஜோதிட நூல்கள் காலமே உருவாய் கொண்ட காலபுருஷனாக கூறுகின்றன. பன்னிரெண்டு ராசிகளும் அவரது உருவின் பகுதிகளாகின்றன.
மேஷம்-சிரசு, ரிஷபம்-வாய், மிதுனம்-இரு கரங்கள், கடகம்-மார்பு, சிம்மம்-வயிறு, கன்னி-இடை, விருச்சிகம்-லிங்கம், தனுசு-தொடைகள், மகரம்-முழந்தாள், கும்பம்-கால்களின் கீழ்பகுதி, மீனம்-அடித்தளங்கள்.
பிரபஞ்சத்தில் சகல ஜீவ ராசிகளும் வான மண்டலத்தில் உள்ள நட்சத்திரங்களும், சூரியன், சந்திரன் சனி, ராகு - கேது ஆகிய நவக்கிரகங்களும் காலச்சக்கரத்தின் ஆளுகைக்கு உட்பட்டதே! காலச் சக்கரத்தினை இயக்கும் பரம்பொருள் பைரவரே!
கிரகங்கள் எல்லாம் நம்மை ஆட்டிப் படைக்கின்றன. ஆனால், அந்த கிரகங்களை எல்லாம் ஸ்ரீயோக பைரவர் ஆட்டிப் படைத்து ஆட்சி செய்கிறார். பைரவர் அரசர் என்றால், அவர் இட்ட கட்டளைகளை நிறைவேற்றும் சேவகர்களே கிரகங்கள். பைரவரின் கட்டளைப்படியே காலச்சக்கரம் சுழல்கிறது. அவர் கட்டளைப்படியே எல்லா கிரகங்களும் செயல்படுகின்றன. அவரைச் சரணடைந்து நெஞ்சம் உருக வழிபட்டால் காலத்தின் கட்டுப்பாட்டையும் மீறி கிரக தோஷங்களை அகற்றி நன்மை புரிவார்.
அபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாட்டிற்கு அனுமதியில்லை என திருச்செந்தூர் கோவில் முன்பு உள்ள சண்முகவிலாச மண்டபம் முன்பு கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா 3-வது அலை வேகமாக பரவி வருவதையடுத்து அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளது. அனைத்து வழிபாட்டு தலங்களிலும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்களுக்கு அனுமதியில்லை. ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை அறிவித்திருந்தது.
இந்தநிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் தரிசன நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
தமிழ் மாதமான மார்கழியில் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, அதனை தொடர்ந்து 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை மற்றவை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதிகாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
இதையும் படிக்கலாம்...அருணாசலேஸ்வரர் கோவிலில் இவர்கள் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி
இந்தநிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் தரிசன நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
தமிழ் மாதமான மார்கழியில் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, அதனை தொடர்ந்து 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை மற்றவை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதிகாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
ஆனால் கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக இன்று (திங்கட்கிழமை) முதல் அதிகாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். அதேபோல் தங்கதேர் புறப்பாடு ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் அபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாட்டிற்கு அனுமதியில்லை என கோவில் முன்பு உள்ள சண்முகவிலாச மண்டபம் முன்பு கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
நாகூர் தர்காவின் 465-வது சந்தனக்கூடு நிகழ்ச்சிக்காக சந்தனக் கட்டைகளை கல்லில் வைத்து தேய்த்து சந்தனம் எடுக்கும் பணி இரவு பகலாக நடைபெற்று வருகிறது.
உலகப் புகழ் பெற்ற நாகூர் ஆண்டவர் என்றழைக்கப்படும் ஷாஹல் ஹமீது பாதுஷா நாயகம் தர்கா, 465-வது ஆண்டு கந்தூரி விழா கடந்த 4-ந்தேதி, கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக நாகூர் ஆண்டவருக்கு சந்தனம் பூசும் விழா வருகிற 13-ந்தேதி இரவு நாகை யாஹசைன் பள்ளி வாசலில் இருந்து கொடி ஊர்வலமும், 14-ந்தேதி அதிகாலை ஆண்டவருக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இதனை முன்னிட்டு நாகூர் ஆண்டவர் சன்னதி பின்புறம் பாரம்பரிய முறைப்படி விரதம் இருந்து சந்தன கட்டைகளை அரைத்து வருகின்றனர். பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த யாத்திரீகர்கள் 10 நாட்கள் தர்காவில் தங்கி சந்தன கட்டைகளை சிறுசிறு துண்டுகளாக்கி அரைக்கும் பணி துவங்கியது.
சந்தன கட்டைகளை ஜவ்வாது கலந்த பன்னீரில் ஊறவைத்து கருங்கற்களில் அரைத்து எடுக்கப்படும். பின்னர் அரைக்கப்பட்ட சந்தனம், குடங்களில் நிரப்பப்பட்டு, நாகை முஸ்லிம் ஜமாத்தார்களிடம் ஒப்படைக்கப்படும். பின் நாகை யாஹசைன் பள்ளி வாசலில் இருந்து சந்தனக்கூடு ஊர்வலம் புறப்பட்டு அதிகாலை நாகூர் வந்தடையும்.
பின்னர் தர்கா தலைமாட்டு வாசலில் சந்தனக் குடங்கள் இறக்கப்பட்டு, தர்கா சன்னதிக்குள் கொண்டு செல்லப்பட்டு சந்தனம் பூசும் வைபவம் நடைபெறும். இதையடுத்து சந்தனம் யாத்ரீகர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.
இதனை முன்னிட்டு நாகூர் ஆண்டவர் சன்னதி பின்புறம் பாரம்பரிய முறைப்படி விரதம் இருந்து சந்தன கட்டைகளை அரைத்து வருகின்றனர். பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த யாத்திரீகர்கள் 10 நாட்கள் தர்காவில் தங்கி சந்தன கட்டைகளை சிறுசிறு துண்டுகளாக்கி அரைக்கும் பணி துவங்கியது.
சந்தன கட்டைகளை ஜவ்வாது கலந்த பன்னீரில் ஊறவைத்து கருங்கற்களில் அரைத்து எடுக்கப்படும். பின்னர் அரைக்கப்பட்ட சந்தனம், குடங்களில் நிரப்பப்பட்டு, நாகை முஸ்லிம் ஜமாத்தார்களிடம் ஒப்படைக்கப்படும். பின் நாகை யாஹசைன் பள்ளி வாசலில் இருந்து சந்தனக்கூடு ஊர்வலம் புறப்பட்டு அதிகாலை நாகூர் வந்தடையும்.
பின்னர் தர்கா தலைமாட்டு வாசலில் சந்தனக் குடங்கள் இறக்கப்பட்டு, தர்கா சன்னதிக்குள் கொண்டு செல்லப்பட்டு சந்தனம் பூசும் வைபவம் நடைபெறும். இதையடுத்து சந்தனம் யாத்ரீகர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.
கொரோனா பரவல் காரணமாக வார இறுதி நாட்களில் தரிசன தடை உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. எனினும் பழனியில் தைப்பூச திருவிழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
பழனி முருகன் கோவிலில் வருகிற 12-ந்தேதி தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதை முன்னிட்டு கோவிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக வருகின்றனர். இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக வார இறுதி நாட்களில் தரிசன தடை உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது.
எனினும் பழனியில் தைப்பூச திருவிழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. குறிப்பாக பக்தர்கள் ஒருவழி பாதையில் மலைக்கோவிலுக்கு செல்லும் குடமுழுக்கு அரங்கு பகுதிகளில் நிழற்பந்தல் போடும் பணி நடக்கிறது. இதேபோல் தற்காலிக பஸ்நிலையம் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது.
எனினும் பழனியில் தைப்பூச திருவிழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. குறிப்பாக பக்தர்கள் ஒருவழி பாதையில் மலைக்கோவிலுக்கு செல்லும் குடமுழுக்கு அரங்கு பகுதிகளில் நிழற்பந்தல் போடும் பணி நடக்கிறது. இதேபோல் தற்காலிக பஸ்நிலையம் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது.






