என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
பீஷ்மாஷ்டமி அன்று, ஒருவர் தன்னுடைய முன்னோர்களுக்குச் செய்யும் தர்ப்பணம், பீஷ்மருக்கானதாகவும் மாறுகிறது. இதன் மூலம் முன்னோர்களின் ஆசியையும், பீஷ்மரின் ஆசியையும் ஒருசேரப் பெறலாம்.
9-2-2022 பீஷ்மாஷ்டமி
மகாபாரத இதிகாசக் கதையின் ஆணி வேராக இருப்பவர், பீஷ்மர். இவர் தன் தந்தைக்காக தன்னுடைய இல்லற வாழ்வையே துறந்தவர். இதனால் அவரது தந்தை சந்தனுவிடம் இருந்து, ‘நீ விரும்பும் நேரத்தில்தான் உன்னுடைய மரணம் நிகழும்’ என்ற வரத்தை பெற்றிருந்தார். இதையடுத்து அவர் அஷ்தினாபுரத்தின் அரசாட்சியை நிலை நிறுத்துவதிலும், தன் சகோதரர் களின் பிள்ளைகளை சிறப்பானவர்களாக உருவாக்குவதிலும் கவனம் செலுத்தி வந்தார்.
பின்னாளில் கவுரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை, குருசேத்திரப் போருக்கு வழிவகுத்தது. ஆனால் அந்தப் போரில் நியாயத்தின் பக்கம் நிற்காமல், தன்னுடைய அரசாட்சியை தலைமையேற்று நடத்தும் கவுரவர்களுக்கு ஆதரவாகவே நின்றார் பீஷ்மர். 18 நாட்கள் நடைபெற்ற குருசேத்திரப் போரில், 10-ம் நாள் அம்புகள் துளைக்க போர்க்களத்தில் வீழ்ந்தார் பீஷ்மர். அவரது உடலில் துளைத்திருந்த அம்புகள், அவரது உடலை தரையில் விழாதபடி, படுக்கையாக நின்று தாங்கிப்பிடித்திருந்தன.
ஆனால் அவரது உயிர் பிரியவில்லை. ஏனெனில் தை மாதத்தில் வரும், உத்தராயன புண்ணிய காலத்தில் தான் மரணிக்க வேண்டும் என்று பீஷ்மர் காத்திருந்தார். மரணப் படுக்கையில் இருக்கும்போது, அவர் கூறிய அறிவுரைகள் ஏராளம். அவர் இறைவனை ஆயிரம் நாமங்களால் பாடியது, ‘விஷ்ணு சகஸ்ரநாமம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த நிலையில் உத்தராயன புண்ணிய காலம்தொடங்கியும், பீஷ்மரின் உயிர் பிரியவில்லை. அவர் வேதனையில் தவித்து வந்தார்.
அப்போது போர்க்களத்திற்கு வந்த வியாசரிடம், “நான் விரும்பியும் கூட என் உயிர் பிரியாததற்கு என்ன காரணம்?. நான் செய்த பாவம் என்ன?” என்று கேட்டார். அதற்கு பதிலளித்த வியாசர், “ஒரு காாியத்தைச் செய்வதால் ஏற்படும் தவறான வினையின் காரணமாக நிகழ்வது மட்டுமே பாவம் அல்ல. நம்மால் முடியும் என்றாலும், எதுவும் செய்யாமல் நிற்பதன் காரணமாக ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால் அதுவும் பாவத்தில்தான் சேரும். உனக்கு அதிகாரம் இருந்தும், ஆற்றல் இருந்தும் திரவுபதிக்கு சபையில் நடந்த அநீதியை தடுக்காமல் நின்ற பாவம்தான், உன்னை மரணிக்க விடாமல் தடுத்து நிற்கிறது” என்றார்.
பின்னர் அதில் இருந்து விடுபடுவதற்கான வழியையும் வியாசரே கூறினார். “திரவுபதிக்கு சபையில் நடந்த அநீதியை நினைத்து நீ பலமுறை வருந்தியிருக்கிறாய். ஒருவர், தான் செய்தது மகா பாவம் என்று உணர்ந்து விட்டாலே, அந்தப் பாவம் அகன்று விடுவதாக வேதம் சொல்கிறது. அந்த வகையில் உன் பாவம் நீங்கிவிட்டது. என்றாலும் திரவுபதி, தன்னை காப்பாற்றும்படி கதறியபோது, கேட்கும் திறன் இருந்தும் கேட்காததுபோல் இருந்த உன்னுடைய காதுகள், கூர்மையான பார்வை இருந்தும் பாராமுகம் காட்டிய உன் கண்கள், உன் சொல்லை அனைவரும் கேட்பார்கள் என்ற போதிலும் திறக்காத உன் வாய், சரியான நேரத்தில் பயன்படுத்தப்படாத உன் வலிமையான தோள், வாளெடுத்து எச்சரிக்காத உன் கரங்கள், ஆரோக்கியத்துடன் இருந்தும் எழுந்து தடுக்க முயலாமல், தளர்ந்து அமர்ந்திருந்த உன் கால்கள், நல்லது கெட்டதை அந்த நேரத்தில் யோசிக்காத உன் புத்தி இருக்கும் தலை ஆகியவற்றுக்கு தண்டனை கிடைத்தே ஆகவேண்டும். அதனால்தான் இப்போது நீ வேதனையை அடைந்து கொண்டிருக்கிறாய்.
பீஷ்மா.. உன்னுடைய இந்த பாவங்களை எல்லாம் பொசுக்கும் ஆற்றல் சூரியனுக்கு மட்டுமே இருக்கிறது. சூரியனுக்கு உகந்த எருக்கம் இலைகளைக் கொண்டு உன்னுடைய அங்கங்களை அலங்கரித்தால், அது உன்னுடைய வேதனையை குறைத்து, உன்னை புனிதப்படுத்தும்” என்றவர், அதன்படியே செய்தார்.
இதையடுத்து கொஞ்சம் கொஞ்சமாக மன நிம்மதி அடைந்த பீஷ்மர், உடலில் இருந்து வேதனைகள் அகன்று, தியானத்தில் ஆழ்ந்து ரதசப்தமிக்கு அடுத்த நாளில் முக்தியை அடைந்தார். அந்த தினம் ‘பீஷ்மாஷ்டமி’ என்று அழைக்கப்படுகிறது.
பீஷ்மர் இறுதிவரை பிரம்மச்சரியத்தை கடைப்பிடித்தவர். இதனால் ‘அவருக்கு பித்ரு கடன் செய்வது யார்?’ என்று வருந்தினான், யுதிஷ்டிரன். அப்போது வியாசர், “தா்மா.. ஒழுக்கம் தவறாத பிரம்மச்சாரிக்கும், தூய்மை விலகாத துறவிக்கும் பித்ரு கடன் அவசியமே இல்லை. அந்த வகையில் பீஷ்மர், சொல் தவறாத நேர்மையாளர், தூய்மையானவர். வரும் காலத்தில் பீஷ்மருக்காக இந்த பாரத தேசமே பித்ரு கடன் செய்யும். அதற்கான புண்ணியத்தை அனைவரும் அடைவர்” என்றார்.
அதன்படி பீஷ்மாஷ்டமி அன்று, ஒருவர் தன்னுடைய முன்னோர்களுக்குச் செய்யும் தர்ப்பணம், பீஷ்மருக்கானதாகவும் மாறுகிறது. இதன் மூலம் முன்னோர்களின் ஆசியையும், பீஷ்மரின் ஆசியையும் ஒருசேரப் பெறலாம்.
மகாபாரத இதிகாசக் கதையின் ஆணி வேராக இருப்பவர், பீஷ்மர். இவர் தன் தந்தைக்காக தன்னுடைய இல்லற வாழ்வையே துறந்தவர். இதனால் அவரது தந்தை சந்தனுவிடம் இருந்து, ‘நீ விரும்பும் நேரத்தில்தான் உன்னுடைய மரணம் நிகழும்’ என்ற வரத்தை பெற்றிருந்தார். இதையடுத்து அவர் அஷ்தினாபுரத்தின் அரசாட்சியை நிலை நிறுத்துவதிலும், தன் சகோதரர் களின் பிள்ளைகளை சிறப்பானவர்களாக உருவாக்குவதிலும் கவனம் செலுத்தி வந்தார்.
பின்னாளில் கவுரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை, குருசேத்திரப் போருக்கு வழிவகுத்தது. ஆனால் அந்தப் போரில் நியாயத்தின் பக்கம் நிற்காமல், தன்னுடைய அரசாட்சியை தலைமையேற்று நடத்தும் கவுரவர்களுக்கு ஆதரவாகவே நின்றார் பீஷ்மர். 18 நாட்கள் நடைபெற்ற குருசேத்திரப் போரில், 10-ம் நாள் அம்புகள் துளைக்க போர்க்களத்தில் வீழ்ந்தார் பீஷ்மர். அவரது உடலில் துளைத்திருந்த அம்புகள், அவரது உடலை தரையில் விழாதபடி, படுக்கையாக நின்று தாங்கிப்பிடித்திருந்தன.
ஆனால் அவரது உயிர் பிரியவில்லை. ஏனெனில் தை மாதத்தில் வரும், உத்தராயன புண்ணிய காலத்தில் தான் மரணிக்க வேண்டும் என்று பீஷ்மர் காத்திருந்தார். மரணப் படுக்கையில் இருக்கும்போது, அவர் கூறிய அறிவுரைகள் ஏராளம். அவர் இறைவனை ஆயிரம் நாமங்களால் பாடியது, ‘விஷ்ணு சகஸ்ரநாமம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த நிலையில் உத்தராயன புண்ணிய காலம்தொடங்கியும், பீஷ்மரின் உயிர் பிரியவில்லை. அவர் வேதனையில் தவித்து வந்தார்.
அப்போது போர்க்களத்திற்கு வந்த வியாசரிடம், “நான் விரும்பியும் கூட என் உயிர் பிரியாததற்கு என்ன காரணம்?. நான் செய்த பாவம் என்ன?” என்று கேட்டார். அதற்கு பதிலளித்த வியாசர், “ஒரு காாியத்தைச் செய்வதால் ஏற்படும் தவறான வினையின் காரணமாக நிகழ்வது மட்டுமே பாவம் அல்ல. நம்மால் முடியும் என்றாலும், எதுவும் செய்யாமல் நிற்பதன் காரணமாக ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால் அதுவும் பாவத்தில்தான் சேரும். உனக்கு அதிகாரம் இருந்தும், ஆற்றல் இருந்தும் திரவுபதிக்கு சபையில் நடந்த அநீதியை தடுக்காமல் நின்ற பாவம்தான், உன்னை மரணிக்க விடாமல் தடுத்து நிற்கிறது” என்றார்.
பின்னர் அதில் இருந்து விடுபடுவதற்கான வழியையும் வியாசரே கூறினார். “திரவுபதிக்கு சபையில் நடந்த அநீதியை நினைத்து நீ பலமுறை வருந்தியிருக்கிறாய். ஒருவர், தான் செய்தது மகா பாவம் என்று உணர்ந்து விட்டாலே, அந்தப் பாவம் அகன்று விடுவதாக வேதம் சொல்கிறது. அந்த வகையில் உன் பாவம் நீங்கிவிட்டது. என்றாலும் திரவுபதி, தன்னை காப்பாற்றும்படி கதறியபோது, கேட்கும் திறன் இருந்தும் கேட்காததுபோல் இருந்த உன்னுடைய காதுகள், கூர்மையான பார்வை இருந்தும் பாராமுகம் காட்டிய உன் கண்கள், உன் சொல்லை அனைவரும் கேட்பார்கள் என்ற போதிலும் திறக்காத உன் வாய், சரியான நேரத்தில் பயன்படுத்தப்படாத உன் வலிமையான தோள், வாளெடுத்து எச்சரிக்காத உன் கரங்கள், ஆரோக்கியத்துடன் இருந்தும் எழுந்து தடுக்க முயலாமல், தளர்ந்து அமர்ந்திருந்த உன் கால்கள், நல்லது கெட்டதை அந்த நேரத்தில் யோசிக்காத உன் புத்தி இருக்கும் தலை ஆகியவற்றுக்கு தண்டனை கிடைத்தே ஆகவேண்டும். அதனால்தான் இப்போது நீ வேதனையை அடைந்து கொண்டிருக்கிறாய்.
பீஷ்மா.. உன்னுடைய இந்த பாவங்களை எல்லாம் பொசுக்கும் ஆற்றல் சூரியனுக்கு மட்டுமே இருக்கிறது. சூரியனுக்கு உகந்த எருக்கம் இலைகளைக் கொண்டு உன்னுடைய அங்கங்களை அலங்கரித்தால், அது உன்னுடைய வேதனையை குறைத்து, உன்னை புனிதப்படுத்தும்” என்றவர், அதன்படியே செய்தார்.
இதையடுத்து கொஞ்சம் கொஞ்சமாக மன நிம்மதி அடைந்த பீஷ்மர், உடலில் இருந்து வேதனைகள் அகன்று, தியானத்தில் ஆழ்ந்து ரதசப்தமிக்கு அடுத்த நாளில் முக்தியை அடைந்தார். அந்த தினம் ‘பீஷ்மாஷ்டமி’ என்று அழைக்கப்படுகிறது.
பீஷ்மர் இறுதிவரை பிரம்மச்சரியத்தை கடைப்பிடித்தவர். இதனால் ‘அவருக்கு பித்ரு கடன் செய்வது யார்?’ என்று வருந்தினான், யுதிஷ்டிரன். அப்போது வியாசர், “தா்மா.. ஒழுக்கம் தவறாத பிரம்மச்சாரிக்கும், தூய்மை விலகாத துறவிக்கும் பித்ரு கடன் அவசியமே இல்லை. அந்த வகையில் பீஷ்மர், சொல் தவறாத நேர்மையாளர், தூய்மையானவர். வரும் காலத்தில் பீஷ்மருக்காக இந்த பாரத தேசமே பித்ரு கடன் செய்யும். அதற்கான புண்ணியத்தை அனைவரும் அடைவர்” என்றார்.
அதன்படி பீஷ்மாஷ்டமி அன்று, ஒருவர் தன்னுடைய முன்னோர்களுக்குச் செய்யும் தர்ப்பணம், பீஷ்மருக்கானதாகவும் மாறுகிறது. இதன் மூலம் முன்னோர்களின் ஆசியையும், பீஷ்மரின் ஆசியையும் ஒருசேரப் பெறலாம்.
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி பெருவிழா 10 நாட்கள் நடக்கிறது. வருகிற 15-ந்தேதி அன்று இரவு திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற உள்ளது.
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் புலி வாகனம், வெள்ளி மயில் வாகனம், சிங்க வாகனம், ஆட்டுக்கடா வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வள்ளி தெய்வயானை சமேதராய் முருகக்கடவுள் உற்சவ மூர்த்தி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.
வருகிற 15-ந்தேதி அன்று இரவு திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற உள்ளது.
விழாவை முன்னிட்டு தினசரி மூலவர் கடவுளுக்கு சிறப்பு அபிஷேகம் பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்று வருகிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி, அதிகாரிகள் செய்து வருகின்றனர். தற்போது கொரோனா கட்டுபாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளதால் பக்தர்கள் அதிகளவு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் புலி வாகனம், வெள்ளி மயில் வாகனம், சிங்க வாகனம், ஆட்டுக்கடா வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வள்ளி தெய்வயானை சமேதராய் முருகக்கடவுள் உற்சவ மூர்த்தி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.
வருகிற 15-ந்தேதி அன்று இரவு திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற உள்ளது.
விழாவை முன்னிட்டு தினசரி மூலவர் கடவுளுக்கு சிறப்பு அபிஷேகம் பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்று வருகிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி, அதிகாரிகள் செய்து வருகின்றனர். தற்போது கொரோனா கட்டுபாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளதால் பக்தர்கள் அதிகளவு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சித்திரை திருவிழாவையொட்டி தஞ்சை பெரிய கோவிலில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதன் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஏப்ரல் மாதம் 13-ந் தேதி நடக்கிறது.
தஞ்சை பெரியகோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இது தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகிறது. இந்தக் கோவிலுக்குப் தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
உலக பாரம்பரிய சின்னமாக விளங்கும், தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டுதோறும், சித்திரை பெருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. ஆனால் கடந்த ஆண்டும் அதற்கு முந்தைய ஆண்டும் கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் சித்திரை பெருவிழா கொண்டாடப்படவில்லை. இதையடுத்து தேரோட்டம் நடைபெறவில்லை.
அதன்படி, இந்த ஆண்டு சித்திரை பெருவிழா அடுத்த மாதம், (மார்ச்) 30-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, ஏப்ரல், 16-ந் தேதி வரை 18 நாட்கள் கொண்டாடப்படுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான பஞ்சமூர்த்தி புறப்பாடு ஏப்ரல் 12-ந் தேதியும், தேரோட்டம் ஏப்ரல் 13-ந் தேதியும் நடைபெறுகிறது.
இந்த விழாவுக்கான, பந்தல்கால் நடும் விழா, கோவில் வளாகத்தில் நேற்று நடை பெற்றது. இதையொட்டி, பால், சந்தனம் உள்ளிட்ட மங்கல பொருள்களால் அபிஷேகம் செய்யட்ட, பந்தல்க்கால் நடப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் கிருஷ்ணன், அறநிலையத் துறை கண்காணிப்பாளர் சந்திரசேகரன், சிவச்சாரியார்கள் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
உலக பாரம்பரிய சின்னமாக விளங்கும், தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டுதோறும், சித்திரை பெருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. ஆனால் கடந்த ஆண்டும் அதற்கு முந்தைய ஆண்டும் கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் சித்திரை பெருவிழா கொண்டாடப்படவில்லை. இதையடுத்து தேரோட்டம் நடைபெறவில்லை.
அதன்படி, இந்த ஆண்டு சித்திரை பெருவிழா அடுத்த மாதம், (மார்ச்) 30-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, ஏப்ரல், 16-ந் தேதி வரை 18 நாட்கள் கொண்டாடப்படுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான பஞ்சமூர்த்தி புறப்பாடு ஏப்ரல் 12-ந் தேதியும், தேரோட்டம் ஏப்ரல் 13-ந் தேதியும் நடைபெறுகிறது.
இந்த விழாவுக்கான, பந்தல்கால் நடும் விழா, கோவில் வளாகத்தில் நேற்று நடை பெற்றது. இதையொட்டி, பால், சந்தனம் உள்ளிட்ட மங்கல பொருள்களால் அபிஷேகம் செய்யட்ட, பந்தல்க்கால் நடப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் கிருஷ்ணன், அறநிலையத் துறை கண்காணிப்பாளர் சந்திரசேகரன், சிவச்சாரியார்கள் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இத்தல மூலவர் காலையில் சிறுவனாகவும், உச்சிப் பொழுதில் இளைஞர் போலவும், மாலையில் முதியவர் போலவும், ஒரு நாளில் மூன்று கோலங்களில் காட்சி தருகிறார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளது, ஆண்டார்குப்பம். இங்குள்ள பாலசுப்பிரமணியர் திருக்கோவிலைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
* முருகப்பெருமான் ஆண்டி கோலத்தில் சிறுவனாக வந்து காட்சி தந்த தலம் என்பதால், இத்தலம் ‘ஆண்டியர்குப்பம்’ என்று அழைக்கப்பட்டு, பின்னர் ‘ஆண்டார்குப்பம்’ ஆனதாக சொல்கிறார்கள். ஆளும் தோரணையில் முருகப்பெருமான் இருப்பதாலும் இப்பெயர் வந்ததாக கூறப்படுகிறது.
* அருணகிரிநாதரால் பாடப்பெற்ற இத்தல முருகப்பெருமானின், திருநாமம், ‘பால சுப்பிரமணியர்’ என்பதாகும்.
* முருகனுக்கு அருகில் இரண்டு யானை வாகனம் இருக்கிறது. அதிகார தோரணையில் இருப்பதால், இவரை ‘அதிகார முருகன்’ என்றும் அழைப்பார்கள்.
* இத்தல மூலவர் காலையில் சிறுவனாகவும், உச்சிப் பொழுதில் இளைஞர் போலவும், மாலையில் முதியவர் போலவும், ஒரு நாளில் மூன்று கோலங்களில் காட்சி தருகிறார்.
* மூலவரான முருகப்பெருமான், தன்னுடைய கரங்களில் எந்த ஆயுதங்களையும் ஏந்தாமல், இடுப்பில் கரங்களை வைத்தபடி அருள்கிறார்.
* மூலவரின் சன்னிதிக்கு எதிரில் பிரம்மன், நீள்வட்ட சிலை வடிவில் இருக்கிறார். அவருக்கு உருவம் இல்லை. பிரம்மனுக்குரிய தாமரை, கமண்டலம், அட்சர மாலை மட்டும் இருக்கிறது.
* பொறுப்பான பதவிகள் கிடைக்க, அதிகாரம் உள்ள பதவியில் இருப்பவர்களின் பணி சிறக்க, புத்திசாலித்தனமாக பிள்ளைகள் பிறக்க, இங்கு பக்தர்கள் வழிபாடு செய்கிறார்கள். கோரிக்கை நிறைவேறியதும், முருகனுக்கு பாலாபிஷேகம் செய்தும், சந்தனக் காப்பு சாத்தியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
* திருவள்ளூரில் இருந்து சுமார் 33 கிலோமீட்டர் தூரத்திலும், சென்னை எழும்பூரில் இருந்து சுமார் 22 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது, ஆண்டார்குப்பம்.
இந்த ஆலயத்திற்கு வந்த அடியவரான ஒரு முருக பக்தர், இத்தலத்தில் நீராட நினைத்தார். அங்கிருந்த ஆண்டிகளிடம், “இங்கே நீராடும் இடம் எங்கே இருக்கிறது?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “அப்படி தீர்த்தம் எல்லாம் இந்த ஆலயத்திற்கு கிடையாது” என்றனர். அப்போது ஆண்டி கோலத்தில் சிறுவனாக அங்கு வந்த முருகன், தீர்த்தம் இருக்கும் இடத்தைக் காட்டுவதாகக் கூறி அழைத்துச் சென்றார். பின்னர் ஓரிடத்தில் தன்னிடம் இருந்த வேலால் குத்தினார். அந்த இடத்தில் இருந்து நீர் பெருக்கெடுத்து வந்து குளமாக மாறியது. அதுவே இங்கு ‘வேலாயுத தீர்த்தம்’ என்ற பெயரில் உள்ளது.
தல வரலாறு
ஒரு முறை கயிலாயம் வந்த பிரம்மன், சிறுவன் என்பதால் முருகப்பெருமானை அலட்சியம் செய்தார். ஆனால் முருகப்பெருமான், பிரம்மனிடம் படைக்கும் தொழிலுக்கு ஆதாரமாக இருக்கும் பிரணவத்திற்கு பொருள் கேட்டார். அது பிரம்மனுக்கு தெரியவில்லை. இதையடுத்து பிரம்மனை, முருகப்பெருமான் சிறையில் அடைத்ததோடு, தானே படைப்புத் தொழிலை மேற்கொண்டார். பிரம்மனிடம் கேள்வி கேட்டபோது, அதிகாரத் தோரணையில் இரு கரங்களையும் இடுப்பில் வைத்துக் கொண்டிருந்த தோற்றத்தில் முருகப்பெருமான் இங்கு காட்சி தருகிறார்.
* முருகப்பெருமான் ஆண்டி கோலத்தில் சிறுவனாக வந்து காட்சி தந்த தலம் என்பதால், இத்தலம் ‘ஆண்டியர்குப்பம்’ என்று அழைக்கப்பட்டு, பின்னர் ‘ஆண்டார்குப்பம்’ ஆனதாக சொல்கிறார்கள். ஆளும் தோரணையில் முருகப்பெருமான் இருப்பதாலும் இப்பெயர் வந்ததாக கூறப்படுகிறது.
* அருணகிரிநாதரால் பாடப்பெற்ற இத்தல முருகப்பெருமானின், திருநாமம், ‘பால சுப்பிரமணியர்’ என்பதாகும்.
* முருகனுக்கு அருகில் இரண்டு யானை வாகனம் இருக்கிறது. அதிகார தோரணையில் இருப்பதால், இவரை ‘அதிகார முருகன்’ என்றும் அழைப்பார்கள்.
* இத்தல மூலவர் காலையில் சிறுவனாகவும், உச்சிப் பொழுதில் இளைஞர் போலவும், மாலையில் முதியவர் போலவும், ஒரு நாளில் மூன்று கோலங்களில் காட்சி தருகிறார்.
* மூலவரான முருகப்பெருமான், தன்னுடைய கரங்களில் எந்த ஆயுதங்களையும் ஏந்தாமல், இடுப்பில் கரங்களை வைத்தபடி அருள்கிறார்.
* மூலவரின் சன்னிதிக்கு எதிரில் பிரம்மன், நீள்வட்ட சிலை வடிவில் இருக்கிறார். அவருக்கு உருவம் இல்லை. பிரம்மனுக்குரிய தாமரை, கமண்டலம், அட்சர மாலை மட்டும் இருக்கிறது.
* பொறுப்பான பதவிகள் கிடைக்க, அதிகாரம் உள்ள பதவியில் இருப்பவர்களின் பணி சிறக்க, புத்திசாலித்தனமாக பிள்ளைகள் பிறக்க, இங்கு பக்தர்கள் வழிபாடு செய்கிறார்கள். கோரிக்கை நிறைவேறியதும், முருகனுக்கு பாலாபிஷேகம் செய்தும், சந்தனக் காப்பு சாத்தியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
* திருவள்ளூரில் இருந்து சுமார் 33 கிலோமீட்டர் தூரத்திலும், சென்னை எழும்பூரில் இருந்து சுமார் 22 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது, ஆண்டார்குப்பம்.
இந்த ஆலயத்திற்கு வந்த அடியவரான ஒரு முருக பக்தர், இத்தலத்தில் நீராட நினைத்தார். அங்கிருந்த ஆண்டிகளிடம், “இங்கே நீராடும் இடம் எங்கே இருக்கிறது?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “அப்படி தீர்த்தம் எல்லாம் இந்த ஆலயத்திற்கு கிடையாது” என்றனர். அப்போது ஆண்டி கோலத்தில் சிறுவனாக அங்கு வந்த முருகன், தீர்த்தம் இருக்கும் இடத்தைக் காட்டுவதாகக் கூறி அழைத்துச் சென்றார். பின்னர் ஓரிடத்தில் தன்னிடம் இருந்த வேலால் குத்தினார். அந்த இடத்தில் இருந்து நீர் பெருக்கெடுத்து வந்து குளமாக மாறியது. அதுவே இங்கு ‘வேலாயுத தீர்த்தம்’ என்ற பெயரில் உள்ளது.
தல வரலாறு
ஒரு முறை கயிலாயம் வந்த பிரம்மன், சிறுவன் என்பதால் முருகப்பெருமானை அலட்சியம் செய்தார். ஆனால் முருகப்பெருமான், பிரம்மனிடம் படைக்கும் தொழிலுக்கு ஆதாரமாக இருக்கும் பிரணவத்திற்கு பொருள் கேட்டார். அது பிரம்மனுக்கு தெரியவில்லை. இதையடுத்து பிரம்மனை, முருகப்பெருமான் சிறையில் அடைத்ததோடு, தானே படைப்புத் தொழிலை மேற்கொண்டார். பிரம்மனிடம் கேள்வி கேட்டபோது, அதிகாரத் தோரணையில் இரு கரங்களையும் இடுப்பில் வைத்துக் கொண்டிருந்த தோற்றத்தில் முருகப்பெருமான் இங்கு காட்சி தருகிறார்.
காஞ்சீபுரம் காமாட்சி அம்மனுக்கு பிரம்மோற்சவத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மூலவர் காமாட்சி அம்மன் தங்கக் கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா இன்று காலை கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி அதிகாலையில் மூலவர் காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மூலவர் காமாட்சி அம்மன் தங்கக் கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதனைத் தொடர்ந்து கோவில் அலங்கார மண்டபத்தில் இருந்து லட்சுமி சரஸ்வதி தேவியுடன் காமாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கோவில் கொடிமரத்துக்கு அருகில் உள்ள வெளி அலங்கார மண்டபத்துக்கு எழுந்தருளினார்.
பின்னர் காமாட்சி அம்மன் உருவம் பொறித்த கொடி பட்டம் கோவில் சுற்றுப்பிரகாரத்தில் சிவவாத்தியங்கள், மங்கள மேள வாத்தியங்களுடன் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக கோவிலில் உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் மற்றும்சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன. விழாவில் கோவில் ஸ்ரீ காரியம் சுந்தரேச அய்யர், மேலாளர் செல்லா விஸ்வநாத சாஸ்திரிகள், கோவில் செயல் அலுவலர் நதியாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவை முன்னிட்டு கோவில் முழுவதும் வண்ண விளக்குகளாலும், வண்ண மலர் மற்றும் கரும்புகளாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. வருகிற 12-ந்தேதி தங்கப் பல்லக்கும், 14-ந் தேதி தேரோட்டமும், 16-ந்தேதி இரவு வெள்ளித் தேரோட்டமும் நடைபெறுகிறது.
வருகிற 17-ந் தேதி தீர்த்தவாரியும் 19-ந் தேதி விடையாற்றி உற்சவத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது.
இதையொட்டி அதிகாலையில் மூலவர் காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மூலவர் காமாட்சி அம்மன் தங்கக் கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதனைத் தொடர்ந்து கோவில் அலங்கார மண்டபத்தில் இருந்து லட்சுமி சரஸ்வதி தேவியுடன் காமாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கோவில் கொடிமரத்துக்கு அருகில் உள்ள வெளி அலங்கார மண்டபத்துக்கு எழுந்தருளினார்.
பின்னர் காமாட்சி அம்மன் உருவம் பொறித்த கொடி பட்டம் கோவில் சுற்றுப்பிரகாரத்தில் சிவவாத்தியங்கள், மங்கள மேள வாத்தியங்களுடன் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக கோவிலில் உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் மற்றும்சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன. விழாவில் கோவில் ஸ்ரீ காரியம் சுந்தரேச அய்யர், மேலாளர் செல்லா விஸ்வநாத சாஸ்திரிகள், கோவில் செயல் அலுவலர் நதியாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவை முன்னிட்டு கோவில் முழுவதும் வண்ண விளக்குகளாலும், வண்ண மலர் மற்றும் கரும்புகளாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. வருகிற 12-ந்தேதி தங்கப் பல்லக்கும், 14-ந் தேதி தேரோட்டமும், 16-ந்தேதி இரவு வெள்ளித் தேரோட்டமும் நடைபெறுகிறது.
வருகிற 17-ந் தேதி தீர்த்தவாரியும் 19-ந் தேதி விடையாற்றி உற்சவத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது.
ரத சப்தமி தினத்தையொட்டி இன்று வைத்திய வீரராகவ பெருமாள் கோவிலில் சூரிய பகவானை வழிபட்டால் நோய் நொடிகளை போக்கி நீண்ட ஆயுளும், நிறைவான செல்வமும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
திருவள்ளூர் வைத்திய வீரராகவ பெருமாள் கோவிலில் தை மாதத்தில் வளர்பிறை 7-ம் நாள் வரும் சப்தமி திதியாக ரத சப்தமி திதி வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.
இந்த தினம் சூரிய ஜெயந்தியாகவும் கொண்டாடப்படுகின்றது.
இந்த ரத சப்தமி தினத்தையொட்டி இன்று வைத்திய வீரராகவ பெருமாள் கோவிலில் சூரிய பகவானை வழிபட்டால் நோய் நொடிகளை போக்கி நீண்ட ஆயுளும், நிறைவான செல்வமும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
விழாவையொட்டி இன்று காலை உற்சவர் வீரராகவ பெருமாள் ரத சப்தமி அலங்காரத்தில் எழுந்தருளி சன்னதி தெருவில் உள்ள நான்கு கால் மண்டபத்தில் உலா வந்து அருள்பாலித்தார். கூட்ட நெரிசலை தடுக்க பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
இந்த தினம் சூரிய ஜெயந்தியாகவும் கொண்டாடப்படுகின்றது.
இந்த ரத சப்தமி தினத்தையொட்டி இன்று வைத்திய வீரராகவ பெருமாள் கோவிலில் சூரிய பகவானை வழிபட்டால் நோய் நொடிகளை போக்கி நீண்ட ஆயுளும், நிறைவான செல்வமும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
விழாவையொட்டி இன்று காலை உற்சவர் வீரராகவ பெருமாள் ரத சப்தமி அலங்காரத்தில் எழுந்தருளி சன்னதி தெருவில் உள்ள நான்கு கால் மண்டபத்தில் உலா வந்து அருள்பாலித்தார். கூட்ட நெரிசலை தடுக்க பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு சிவ வடிவங்களும் ஒவ்வொரு சிறப்பு வாய்ந்தவை. அந்த வகையில் எந்த சிவ வடிவத்தை வழிபாடு செய்தால் என்ன பிரச்சனை தீரும் என்று பார்க்கலாம்.
* லிங்கோத்பவர் - முக்தி கிடைக்கும்
* திரிமூர்த்தி - குழந்தைப்பேறு அமையும்
* கல்யாண சுந்தரர் - திருமண பாக்கியம் வந்துசேரும்
* சுகாசனர் - நியாயமான ஆசைகள் நிறைவேறும்
* கங்காதரர் - பாவங்கள் விலகும்
* நடேசர் - மகப்பேறு கிட்டும்
* சண்டேச அனுக்ரகர் - கெட்ட எண்ணம் நீங்கும்
* ரிஷபாரூடர் - நல்ல முயற்சிகளில் வெற்றி வந்துசேரும்
* நீலகண்டர் - விஷ பூச்சிகளின் ஆபத்து நீங்கும்.
* ஹரிஹர மூர்த்தி - வழக்குகள் வெற்றியாகும்.
* ஏகபாத மூர்த்தி - தம்பதியினரிடையே ஒற்றுமை நிலவும்
* உமாசகாயர் - துணையின் உடல்நலம் சீராகும்
* அர்த்தநாரீஸ்வரர் - தம்பதியர் கருத்து வேறுபாடு மறையும்
* தட்சிணாமூர்த்தி - கலை ஞானம், கல்வி ஞானம் வளரும்
* சோமாதி நாயகர் - சகல சவுபாக்கியமும் கிடைக்கும்
* சோமாஸ்கந்தர் - பிள்ளைகள் ஆரோக்கியமாக இருப்பர்
* சந்திர மவுலீஸ்வரர் - தனமும் தானியமும் சேரும்
* வீரபத்திரர் - எதிரி பயம் விலகும்
* காலசம்ஹாரர் - மரண பயமும், அகால மரணமும் நேராது
* காமாந்தகர் - தடைகள் நீங்கும், ஞானம் சித்திக்கும்
* கஜசம்ஹாரர் - பிறர் செய்த தீவினையின் பாதிப்பு அகலும்
* திரிபுர சம்ஹாரர் - பிறவிப் பிணி தீரும், எம பயம் வராது
* பிட்சாடனர் - மோக மாயை விலகும்
* ஜலந்தர சம்ஹாரர் - விரோதிகள் விலகுவர்
* சரப மூர்த்தி - மாயை, கன்மம் விலகும்
* பைரவர் - இறையருள் எப்போதும் காக்கும்.
* திரிமூர்த்தி - குழந்தைப்பேறு அமையும்
* கல்யாண சுந்தரர் - திருமண பாக்கியம் வந்துசேரும்
* சுகாசனர் - நியாயமான ஆசைகள் நிறைவேறும்
* கங்காதரர் - பாவங்கள் விலகும்
* நடேசர் - மகப்பேறு கிட்டும்
* சண்டேச அனுக்ரகர் - கெட்ட எண்ணம் நீங்கும்
* ரிஷபாரூடர் - நல்ல முயற்சிகளில் வெற்றி வந்துசேரும்
* நீலகண்டர் - விஷ பூச்சிகளின் ஆபத்து நீங்கும்.
* ஹரிஹர மூர்த்தி - வழக்குகள் வெற்றியாகும்.
* ஏகபாத மூர்த்தி - தம்பதியினரிடையே ஒற்றுமை நிலவும்
* உமாசகாயர் - துணையின் உடல்நலம் சீராகும்
* அர்த்தநாரீஸ்வரர் - தம்பதியர் கருத்து வேறுபாடு மறையும்
* தட்சிணாமூர்த்தி - கலை ஞானம், கல்வி ஞானம் வளரும்
* சோமாதி நாயகர் - சகல சவுபாக்கியமும் கிடைக்கும்
* சோமாஸ்கந்தர் - பிள்ளைகள் ஆரோக்கியமாக இருப்பர்
* சந்திர மவுலீஸ்வரர் - தனமும் தானியமும் சேரும்
* வீரபத்திரர் - எதிரி பயம் விலகும்
* காலசம்ஹாரர் - மரண பயமும், அகால மரணமும் நேராது
* காமாந்தகர் - தடைகள் நீங்கும், ஞானம் சித்திக்கும்
* கஜசம்ஹாரர் - பிறர் செய்த தீவினையின் பாதிப்பு அகலும்
* திரிபுர சம்ஹாரர் - பிறவிப் பிணி தீரும், எம பயம் வராது
* பிட்சாடனர் - மோக மாயை விலகும்
* ஜலந்தர சம்ஹாரர் - விரோதிகள் விலகுவர்
* சரப மூர்த்தி - மாயை, கன்மம் விலகும்
* பைரவர் - இறையருள் எப்போதும் காக்கும்.
திருவனந்தபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்காலை விழா நாளை தொடங்குகிறது. இந்த ஆண்டும் வீடுகளிலேயே பொங்கலிட பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் திருவனந்தபுரம் அருகே உள்ள ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும்.
இக்கோவிலில் ஆண்டு தோறும் மாசி மாதம் பொங்காலை விழா நடைபெறும். 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் பல லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்காலை விழாவன்று திருவனந்தபுரம் நகர் முழுக்க பல லட்சம் பெண்கள் ஒரே இடத்தில் கூடி பொங்கலிடுவார்கள்.
இக்கோவிலில் கடந்த 1997-ம் ஆண்டு நடந்த பொங்கல் விழாவில் 15 லட்சம் பெண்கள் கலந்து கொண்டு பொங்கலிட்டனர். இது கின்னஸ் சாதனையாக கருதப்பட்டது.
இது போல 2009-ம் ஆண்டு நடந்த பொங்கல் விழாவில் 25 லட்சம் பெண்கள் கலந்து கொண்டு பொங்கலிட்டனர். இதுவும் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது.
இத்தகு சிறப்பு மிக்க ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான பொங்கல் விழா, நாளை தொடங்குகிறது. இதுபற்றி கோவில் நிர்வாகிகள் கூறியதாவது:-
ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் நடைபெறும் பொங்கல் விழா நாளை தொடங்கி 18-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
ஒவ்வொரு நாளும் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. 9-ம் திருவிழாவான 17-ந் தேதி பொங்கல் விழா நடக்கிறது. அன்று காலை 10.50 மணிக்கு கோவிலின் பண்டார அடுப்பில் தீ மூட்டப்படும்.
தொடர்ந்து பக்தர்கள் பொங்கலிடும் நிகழ்ச்சி தொடங்கும். இவ்விழாவில் 200 பேர் வரை பங்கேற்கலாம் என அரசு அனுமதி வழங்கி உள்ளது.
கொரோனா பிரச்சினை காரணமாக கடந்த ஆண்டு பக்தர்களை வீடுகளிலேயே பொங்கலிடுமாறு அறிவுறுத்தியிருந்தோம். இந்த ஆண்டும் கொரோனா பரவல் முடிவுக்கு வரவில்லை. எனவே பக்தர்களை இந்த ஆண்டும் வீடுகளிலேயே பொங்கலிட்டுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
அதே நேரம் கோவிலில் திருவிழா காலங்களில் வழக்கமாக நடைபெறும் வழிபாடுகள் மற்றும் பண்டார ஓட்டம் ஆச்சாரமுறைப்படி நடைபெறும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இக்கோவிலில் ஆண்டு தோறும் மாசி மாதம் பொங்காலை விழா நடைபெறும். 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் பல லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்காலை விழாவன்று திருவனந்தபுரம் நகர் முழுக்க பல லட்சம் பெண்கள் ஒரே இடத்தில் கூடி பொங்கலிடுவார்கள்.
இக்கோவிலில் கடந்த 1997-ம் ஆண்டு நடந்த பொங்கல் விழாவில் 15 லட்சம் பெண்கள் கலந்து கொண்டு பொங்கலிட்டனர். இது கின்னஸ் சாதனையாக கருதப்பட்டது.
இது போல 2009-ம் ஆண்டு நடந்த பொங்கல் விழாவில் 25 லட்சம் பெண்கள் கலந்து கொண்டு பொங்கலிட்டனர். இதுவும் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது.
இத்தகு சிறப்பு மிக்க ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான பொங்கல் விழா, நாளை தொடங்குகிறது. இதுபற்றி கோவில் நிர்வாகிகள் கூறியதாவது:-
ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் நடைபெறும் பொங்கல் விழா நாளை தொடங்கி 18-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
ஒவ்வொரு நாளும் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. 9-ம் திருவிழாவான 17-ந் தேதி பொங்கல் விழா நடக்கிறது. அன்று காலை 10.50 மணிக்கு கோவிலின் பண்டார அடுப்பில் தீ மூட்டப்படும்.
தொடர்ந்து பக்தர்கள் பொங்கலிடும் நிகழ்ச்சி தொடங்கும். இவ்விழாவில் 200 பேர் வரை பங்கேற்கலாம் என அரசு அனுமதி வழங்கி உள்ளது.
கொரோனா பிரச்சினை காரணமாக கடந்த ஆண்டு பக்தர்களை வீடுகளிலேயே பொங்கலிடுமாறு அறிவுறுத்தியிருந்தோம். இந்த ஆண்டும் கொரோனா பரவல் முடிவுக்கு வரவில்லை. எனவே பக்தர்களை இந்த ஆண்டும் வீடுகளிலேயே பொங்கலிட்டுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
அதே நேரம் கோவிலில் திருவிழா காலங்களில் வழக்கமாக நடைபெறும் வழிபாடுகள் மற்றும் பண்டார ஓட்டம் ஆச்சாரமுறைப்படி நடைபெறும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பீஷ்மாஷ்டமி அன்று குளிக்கும்போது இந்த ஸ்லோகத்தை சொல்லி வழிபாடு செய்தால் தெரிந்தோ, தெரியாமலோ, செய்த நம்முடைய பாவங்கள் அனைத்தும் நீங்கும்.
ஸப்த ஸப்திப்ரியே தேவி ஸப்த லோகைக பூஜிதே!
ஸப்த ஜன்மார்ஜிதம் பாபம் ஹர ஸப்தமி !
ஸத்வரம் யத் யத் கர்ம க்ருதம் பாபம் மயா ஸப்தஸு ஜன்மஸு
தன்மே ரோகம் ச மாகரீ ஹந்து ஸப்தமீ நெளமி ஸப்தமி !
தேவி! த்வாம் ஸப்த லோகைக மாதரம் ஸப்தா(அ)ர்க்க பத்ர ஸ்நானேன
மம பாபம் வ்யபோஹய !
ஸப்த ஜன்மார்ஜிதம் பாபம் ஹர ஸப்தமி !
ஸத்வரம் யத் யத் கர்ம க்ருதம் பாபம் மயா ஸப்தஸு ஜன்மஸு
தன்மே ரோகம் ச மாகரீ ஹந்து ஸப்தமீ நெளமி ஸப்தமி !
தேவி! த்வாம் ஸப்த லோகைக மாதரம் ஸப்தா(அ)ர்க்க பத்ர ஸ்நானேன
மம பாபம் வ்யபோஹய !
திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவில் மாசி மக தெப்ப உற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 16-ந்தேதி தெப்ப உற்சவம் நடக்கிறது.
திருப்பத்தூர் அருகே உள்ளது திருக்கோஷ்டியூர். இங்கு பிரசித்தி பெற்ற சவுமிய நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மக தெப்ப உற்சவம் 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும். இந்தாண்டிற்கான இந்த விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக நேற்று முன்தினம் மாலை காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை 7 மணிக்கு சவுமிய நாராயண பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருடன் சிறப்பு அலங்காரத்தில் கல்யாண மண்டபத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது.
அதன் பின்னர் காலை கோவிலை சுற்றி கொடி வீதி உலா வந்து காலை 10.10 மணிக்கு கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டு விழா தொடங்கியது. தொடர்ந்து கொடிமரத்தில் பால், பன்னீர், திருமஞ்சனம் உள்ளிட்ட பல்வேறு திரவிய பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இரவு பல்லக்கில் சாமி திருவீதி உலா புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவிழா நடைபெறும் 10 நாட்களும் இரவில் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் தாயார்களுடன் காட்சியளிக்கிறார். அதன்படி 2-ம் திருநாளான இன்று சிம்ம வாகனத்திலும், 3-வது நாள் அனுமன் வாகனத்திலும், 4-வது நாள் தங்க கருட சேவையிலும், 5-ம் நாள் தங்க சேஷ வாகனத்திலும் சுவாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
6-ம் திருநாளான வருகிற 12-ந்தேதி மாலையில் ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது. 7-ம் நாள் அன்று மாலை தெப்பக்குளத்தில் முகூர்த்த கால் நடுதல் நிகழ்ச்சியும், இரவு தங்கத் தோளுக்கினியானில் சாமி திருவீதி புறப்பாடு நிகழ்ச்சியும் நடக்கிறது.
8-ம் நாள் தங்க குதிரை வாகனத்திலும், 9-ம் நாள் காலையில் வெண்ணைத்தாழி சேவையில் திருவீதி புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது. அதன் பின்னர் பகல் 10.50 மணி முதல் 11.46 மணிக்குள் தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சியும், இரவு தங்க பல்லக்கில் திருவீதி உலா புறப்பாடு நிகழ்ச்சியும் நடக்கிறது. 10-ம் திருநாளான வருகிற 16-ந்தேதி காலையில் தங்கத் தோளுக்கினியானில் திருவீதி புறப்பாடும், அதன் பின்னர் பகல் 10.50 மணி முதல் 11.46 மணிக்குள் பகல் தெப்பமும், இரவு 9 மணிக்கு இரவு தெப்பம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. மறுநாள் காலை தீர்த்தவாரி நிகழ்ச்சியும், இரவு தங்க தோளுக்கினியானில் ஆஸ்தானத்திற்கு எழுந்தருளல் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
தெப்ப திருவிழாவிற்கான ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணி டி.எஸ்.கே. மதுராந்தகிநாச்சியார் உத்தரவின் பேரில் தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் சேவற்கொடியான் ஆகியோர் செய்து வருகின்றனர்.
முன்னதாக நேற்று முன்தினம் மாலை காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை 7 மணிக்கு சவுமிய நாராயண பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருடன் சிறப்பு அலங்காரத்தில் கல்யாண மண்டபத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது.
அதன் பின்னர் காலை கோவிலை சுற்றி கொடி வீதி உலா வந்து காலை 10.10 மணிக்கு கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டு விழா தொடங்கியது. தொடர்ந்து கொடிமரத்தில் பால், பன்னீர், திருமஞ்சனம் உள்ளிட்ட பல்வேறு திரவிய பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இரவு பல்லக்கில் சாமி திருவீதி உலா புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவிழா நடைபெறும் 10 நாட்களும் இரவில் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் தாயார்களுடன் காட்சியளிக்கிறார். அதன்படி 2-ம் திருநாளான இன்று சிம்ம வாகனத்திலும், 3-வது நாள் அனுமன் வாகனத்திலும், 4-வது நாள் தங்க கருட சேவையிலும், 5-ம் நாள் தங்க சேஷ வாகனத்திலும் சுவாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
6-ம் திருநாளான வருகிற 12-ந்தேதி மாலையில் ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது. 7-ம் நாள் அன்று மாலை தெப்பக்குளத்தில் முகூர்த்த கால் நடுதல் நிகழ்ச்சியும், இரவு தங்கத் தோளுக்கினியானில் சாமி திருவீதி புறப்பாடு நிகழ்ச்சியும் நடக்கிறது.
8-ம் நாள் தங்க குதிரை வாகனத்திலும், 9-ம் நாள் காலையில் வெண்ணைத்தாழி சேவையில் திருவீதி புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது. அதன் பின்னர் பகல் 10.50 மணி முதல் 11.46 மணிக்குள் தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சியும், இரவு தங்க பல்லக்கில் திருவீதி உலா புறப்பாடு நிகழ்ச்சியும் நடக்கிறது. 10-ம் திருநாளான வருகிற 16-ந்தேதி காலையில் தங்கத் தோளுக்கினியானில் திருவீதி புறப்பாடும், அதன் பின்னர் பகல் 10.50 மணி முதல் 11.46 மணிக்குள் பகல் தெப்பமும், இரவு 9 மணிக்கு இரவு தெப்பம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. மறுநாள் காலை தீர்த்தவாரி நிகழ்ச்சியும், இரவு தங்க தோளுக்கினியானில் ஆஸ்தானத்திற்கு எழுந்தருளல் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
தெப்ப திருவிழாவிற்கான ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணி டி.எஸ்.கே. மதுராந்தகிநாச்சியார் உத்தரவின் பேரில் தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் சேவற்கொடியான் ஆகியோர் செய்து வருகின்றனர்.
மெஞ்ஞானபுரம் பரிசுத்த பவுலின் ஆலய 175-வது பிரதிஷ்டை பண்டிகை மற்றும் அசன விழா இன்று இரவு 7 மணிக்கு கலைநிகழ்ச்சியுடன் தொடங்குகிறது.
பிரசித்தி பெற்ற கிறிஸ்தவ தேவாலயங்களில் ஒன்றான மெஞ்ஞானபுரம் பரிசுத்த பவுலின் ஆலய 175-வது பிரதிஷ்டை பண்டிகை மற்றும் அசன விழா இன்று இரவு 7 மணிக்கு கலைநிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. 9-ந்தேதி நாகர்கோவில் இரட்சிப்பார் ஊழியங்கள் நடத்தும் பார்வையற்றோர் கிறிஸ்தவ இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. 10, 11-ந்தேதி இரவில் நற்செய்தி கூட்டங்கள் நடைபெறுகிறது. 12-ந்தேதி மதியம் 3 மணிக்கு திடப்படுத்தல் ஆராதனையை தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல பேராயர் தேவசகாயம் நடத்துகிறார். இரவு 7.30 மணிக்கு பொதுமகமை சங்கத்தாரின் அமலிபால் வழங்கும் கிறிஸ்தவ இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது.
13, 14-ந்தேதிகளில் இரவு 7.30 மணிக்கு பஜனை பிரசங்கம் நடக்கிறது. 15-ந்தேதி இரவு 7.30 மணிக்கு ஸ்தாபனங்களின் கலைநிகழ்ச்சி நடக்கிறது. 16-ந்தேதி தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல பேராயர் தலைமையில் பிரதிஷ்டை பண்டிகை நடக்கிறது. காலை 9 மணிக்கு எலியட் டக்ஸ்போர்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள கணம் ரேனியஸ் சிற்றாலயத்தில் திருவிருந்து ஆராதனை நடக்கிறது. காலை 11 மணிக்கு அசன வைபவ மங்களகால் நடுதல், மாலை 4 மணிக்கு பரிசுத்த ஞானஸ்நான ஆராதனையும், இரவு 7 மணிக்கு ஆயத்த பண்டிகை ஆராதனையை கன்னியாகுமரி திருமண்டல பேராயர் செல்லையா நடத்துகிறார்.
வருகிற 17-ந்தேதி அதிகாலை 3.30 மணிக்கு ஆலய பிரதிஷ்டை பண்டிகை ஆராதனையை நெல்லை திருமண்டல பேராயர் பர்னபாஸ் நடத்துகிறார். காலை 8 மணிக்கு கணம் ஜான் தாமஸ் ஐயர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துதல், 6.15 மணிக்கு உலை ஏற்றும் வைபவம், மதியம் 3 மணிக்கு அசன வைபவம், இரவு 8.30 மணிக்கு வாணவேடிக்கையும் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை மெஞ்ஞானபுரம் பொதுமகமை சங்க தலைவர் ஜெயபோஸ், துணை தலைவர் ஜெரால்டு ஜான்சன், செயலாளர் நவமணி ராபர்ட், இணை செயலாளர் செல்வின், பொருளாளர் சொர்ணராஜ், தலைமை குருவானவர் கோல்டுவின், உதவி குருவானவர் ஐசக்துரை ஜோயல், திருப்பணிவிடையாளர் எட்வின் ஜெபராஜ், சபை ஊழியர் பிளசிங் ஜிம்ரோஸ் மற்றும் சபைமக்கள் செய்து வருகின்றனர்.
13, 14-ந்தேதிகளில் இரவு 7.30 மணிக்கு பஜனை பிரசங்கம் நடக்கிறது. 15-ந்தேதி இரவு 7.30 மணிக்கு ஸ்தாபனங்களின் கலைநிகழ்ச்சி நடக்கிறது. 16-ந்தேதி தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல பேராயர் தலைமையில் பிரதிஷ்டை பண்டிகை நடக்கிறது. காலை 9 மணிக்கு எலியட் டக்ஸ்போர்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள கணம் ரேனியஸ் சிற்றாலயத்தில் திருவிருந்து ஆராதனை நடக்கிறது. காலை 11 மணிக்கு அசன வைபவ மங்களகால் நடுதல், மாலை 4 மணிக்கு பரிசுத்த ஞானஸ்நான ஆராதனையும், இரவு 7 மணிக்கு ஆயத்த பண்டிகை ஆராதனையை கன்னியாகுமரி திருமண்டல பேராயர் செல்லையா நடத்துகிறார்.
வருகிற 17-ந்தேதி அதிகாலை 3.30 மணிக்கு ஆலய பிரதிஷ்டை பண்டிகை ஆராதனையை நெல்லை திருமண்டல பேராயர் பர்னபாஸ் நடத்துகிறார். காலை 8 மணிக்கு கணம் ஜான் தாமஸ் ஐயர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துதல், 6.15 மணிக்கு உலை ஏற்றும் வைபவம், மதியம் 3 மணிக்கு அசன வைபவம், இரவு 8.30 மணிக்கு வாணவேடிக்கையும் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை மெஞ்ஞானபுரம் பொதுமகமை சங்க தலைவர் ஜெயபோஸ், துணை தலைவர் ஜெரால்டு ஜான்சன், செயலாளர் நவமணி ராபர்ட், இணை செயலாளர் செல்வின், பொருளாளர் சொர்ணராஜ், தலைமை குருவானவர் கோல்டுவின், உதவி குருவானவர் ஐசக்துரை ஜோயல், திருப்பணிவிடையாளர் எட்வின் ஜெபராஜ், சபை ஊழியர் பிளசிங் ஜிம்ரோஸ் மற்றும் சபைமக்கள் செய்து வருகின்றனர்.
ஈத்தாமொழி அருகே உள்ள பெரியகாடு புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி வருகிற 20-ந் தேதி வரை நடக்கிறது.
ஈத்தாமொழி அருகே உள்ள பெரியகாடு புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழா வருகிற 20-ந் தேதி வரை நடக்கிறது. முதல் நாளில் மாலை 6 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் ஜெபமாலை, கொடியேற்றம், திருப்பலி போன்றவை நடைபெறும். தொடர்ந்து வருகிற விழா நாட்களில் தினமும் காலையில் திருப்பலி, மாலையில் ஜெபமாலை, திருப்பலி நடைபெறுகிறது.
19 -ந் தேதி மாலை 6 மணிக்கு ஜெபமாலையும், சிறப்பு மாலை ஆராதனையும் நடக்கிறது. 20-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு திருவிழா திருப்பலியும், 7 மணியில் இருந்து தொடர்ந்து திருப்பலிகளும், மாலை 6 மணிக்கு கொடியிறக்கமும் நடைபெறும். விழா ஏற்பாடுகளை பங்குதந்தை பிரான்சிஸ் பேர்ஜியா, பங்கு பேரவையினர் மற்றும் ஊர் மக்கள் செய்து வருகிறார்கள்.
19 -ந் தேதி மாலை 6 மணிக்கு ஜெபமாலையும், சிறப்பு மாலை ஆராதனையும் நடக்கிறது. 20-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு திருவிழா திருப்பலியும், 7 மணியில் இருந்து தொடர்ந்து திருப்பலிகளும், மாலை 6 மணிக்கு கொடியிறக்கமும் நடைபெறும். விழா ஏற்பாடுகளை பங்குதந்தை பிரான்சிஸ் பேர்ஜியா, பங்கு பேரவையினர் மற்றும் ஊர் மக்கள் செய்து வருகிறார்கள்.






