search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "attukal bhagavathy temple"

    • பொங்கலிட்ட பெண் பக்தர்கள் மீது ஹெலிகாப்டர் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது.
    • தெருக்கள் மட்டுமின்றி சாலையோரமும் பெண்கள் பொங்கலிட இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் உள்ளது.

    பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் பொங்காலை விழா நடைபெறும். இதில் லட்சக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு பொங்கலிட்டு வழிபடுவார்கள்.

    இந்த ஆண்டுக்கான பொங்காலை விழா கடந்த மாதம் 27-ந் தேதி தொடங்கியது. பிரசித்தி பெற்ற பொங்காலை விழா இன்று நடந்தது.

    இதற்காக திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் முன்புறம் அமைக்கப்பட்டுள்ள பண்டார அடுப்பில் காலை 10.30 மணிக்கு கோவில் பூசாரி தீ மூட்டி பொங்காலை விழாவை தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து திருவனந்தபுரம் நகர் முழுக்க பெண்கள் அடுப்பு மூட்டி பொங்கலிட்டனர்.

    திருவனந்தபுரம் முழுக்க பொங்கலிட்ட பெண் பக்தர்கள் மீது ஹெலிகாப்டர் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது. இதுபோல மலர்களும் தூவப்பட்டது.

    இன்று மதியம் 2.30 மணிக்கு பொங்கல் நைவேத்தியம் வழங்கப்படுகிறது.அதன்பிறகு தொடர்ந்து விழா நடைபெறுகிறது.

    ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்காலை விழாவை முன்னிட்டு திருவனந்தபுரம் முழுக்க பெண்கள் அடுப்பு மூட்டி பொங்கலிட்டதால் எங்கும் புகை மூட்டமாக காணப்பட்டது.

    மேலும் தெருக்கள் மட்டுமின்றி சாலையோரமும் பெண்கள் பொங்கலிட இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதனால் நகரில் பல இடங்களில் போக்குவரத்து மாற்றிவிடப்பட்டிருந்தது.

    • லட்சக்கணக்கான பெண்கள் இந்த பொங்கலை வழிபாட்டில் பங்கேற்கிறார்கள்.
    • 8-ந்தேதி யானை மீது அம்மனை வைத்து ஊர்வலம் நடைபெறும்.

    கேரளாவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுவது, ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில். இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் நடைபெறும் பொங்காலை விழா உலகப் பிரசித்தி பெற்றது ஆகும்.

    இந்த விழாவின் போது உள்நாட்டு பக்தர்கள் மட்டுமின்றி வெளிநாட்டு பக்தர்களும் வந்து பொங்கல் வைத்து வழிபாடு நடத்துவார்கள். லட்சக்கணக்கான பெண்கள் இந்த பொங்கலை வழிபாட்டில் பங்கேற்பது வழக்கம்.

    கடந்த 2009-ம் ஆண்டு இங்கு நடந்த பொங்காலை விழாவில் அதிக அளவிலான பெண்கள் பங்கேற்று பொங்கலிட்டது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்று உள்ளது குறிப்பிடத்தக்கதாகும். சிறப்பு வாய்ந்த இந்த பொங்காலை விழா இந்த ஆண்டு கடந்த மாதம் 27-ந் தேதி தொடங்கியது.

    விழாவையொட்டி தினமும் பகவதி அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. விழாவின் சிகர நிகழ்ச்சியான பொங்காலை திருவிழா நாளை (7-ந் தேதி) நடைபெற உள்ளது. இதில் பங்கேற்று பொங்கல் வைப்பதற்காக பெண் பக்தர்கள் கோவிலில் குவிந்துள்ளனர்.

    நாளை அதிகாலை 4.30 மணிக்கு பள்ளியுணர்த்தல், 5 மணிக்கு நிர்மால்ய தரிசனம், 5.30 மணிக்கு அபிஷேகம், 6 மணிக்கு தீபாராதனை போன்றவை நடக்கிறது.

    தொடர்ந்து பல்வேறு பூஜைகள் நடக்கின்றன. 10.30 மணிக்கு கோவில் வளாகத்தில் உள்ள பண்டார அடுப்பில் தீ மூட்டப்படுகிறது. அப்போது பெண்கள் குலவையிடுவார்கள்.

    செண்டை மேளம், வாண வேடிக்கை போன்றவையும் நிகழ்த்தப்படும். இதனை தொடர்ந்து கோவிலைச் சுற்றிலும் சுமார் 20 கி.மீட்டர் சுற்றளவில் லட்சக்கணக்கான பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்துவார்கள்.

    அப்போது ஹெலிகாப்டர் மூலம் வானில் இருந்து பொங்கல் பானைகள் மீது பூக்கள் தூவப்படும். பிற்பகல் 2.30 மணிக்கு அம்மனுக்கு பொங்கல் நிவேத்தியம் செய்யப்படும். இதில் சுமார் 300-க்கும் மேற்பட்ட பூசாரிகள் ஈடுபடுவார்கள்.

    வருகிற 8-ந்தேதி காலை 8 மணிக்கு யானை மீது அம்மனை வைத்து ஊர்வலம் நடைபெறும் தொடர்ந்து வழக்கமான பூஜைகளுடன் இரவு 1 மணிக்கு குருதி சமர்ப்பணத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

    பொங்காலை விழாவில் பங்கேற்க கேரளாவின் பல பகுதிகளில் இருந்து மட்டுமின்றி அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டில் இருந்தும் பெண் பக்தர்கள் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் குவிந்துள்ளனர். இதனால் திருவனந்தபுரம் நகர் முழுவதும் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

    பொங்காலை வழிபாட்டில் பங்கேற்க வரும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகின்றன. பாதுகாப்பு நடவடிக்கையில் 4 போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் 3 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    • ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான விழா கடந்த மாதம் 27-ந் தேதி தொடங்கியது.
    • பிரசித்தி பெற்ற பொங்கல் விழா வருகிற 7-ந்தேதி நடக்கிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ளது ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில்.

    இக்கோவிலில் நடைபெறும் பொங்கல் விழாவில் லட்சக்கணக்கானோர் பொங்கிலிட்டு வழிபடுவார்கள்.

    இதனால் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ள இக்கோவிலில் இந்த ஆண்டுக்கான விழா கடந்த மாதம் 27-ந் தேதி தொடங்கியது. பிரசித்தி பெற்ற பொங்கல் விழா வருகிற 7-ந்தேதி நடக்கிறது.

    இக்கோவிலில் முதன்மை அர்ச்சகராக இருந்தவர் நாராயணன் நம்பூதிரி. இவர் ஆற்றுக்கால் கோவில் பரம்பரையை சேர்ந்தவர். இவரது மகன் சாந்தனு. நாகர்கோவிலில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் பி.இ. பட்டப்படிப்பு படித்த சாந்தனு, படிப்பு முடிந்த பின்னர் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியில் சேர்ந்தார்.

    அதன்பின்பு வெளிநாட்டிலும் வேலை பார்த்தார். இந்தநிலையில் அவருக்கு ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலின் பூசாரியாக வேண்டும் என்ற எண்ணம் பிறந்தது.

    இதையடுத்து அவர் சாப்ட்வேர் என்ஜினீயர் வேலையை ராஜினாமா செய்து விட்டு ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் அர்ச்சகராக பணியில் சேர்ந்தார். இது பற்றி அவர் கூறியதாவது:-

    வருமானம் தரும் சாப்ட்வேர் என்ஜினீயராக இருந்தாலும் நான் குடும்பத்தைவிட்டு பிரிந்தே இருக்க வேண்டிய நிலை இருந்தது. இதனால் எனக்கு கோவில் அர்ச்சகராக வேண்டும் என்ற ஆர்வம் பிறந்தது.

    இதுபற்றி தந்தையிடம் கூறியபோது அவர் என் மனதுக்கு பிடித்ததை செய்யும்படி அறிவுறுத்தினார். எனது மனைவியும் என் விருப்பத்துக்கு குறுக்கே நிற்கவில்லை. இதனால் நான் ஆற்றுக்கால் பகவதி அம்மனுக்கு சேவை செய்யும் வாய்ப்பை பெற்றுள்ளேன். இது மனதுக்கு நிம்மதியாக உள்ளது, என்றார்.

    • 6 வயது முதல் 12 வயது வரையிலான சிறுவர்களுக்கு குத்தியோட்டம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
    • 8-ந் தேதி குருதி தர்ப்பணத்துடன் திருவிழா நிறைவுபெறும்.

    கேரள மாநிலத்தில் பிரசித்திபெற்ற கோவில்களில் திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது.

    இந்த கோவிலில் பொங்கல் திருவிழா வருகிற 27-ந் தேதி தொடங்குகிறது. இதுகுறித்து திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் செயற்குழு உறுப்பினர்கள் சந்தீப்குமார், நந்தகுமார் ஆகியோர் நேற்று முன்தினம் நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

    ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் வருகிற 27-ந் தேதி அதிகாலை 4.30 மணிக்கு அம்மனுக்கு காப்புகட்டி குடியிருத்தும் நிகழ்ச்சியும், தொடர்ந்து கொடியேற்றமும் நடைபெறும்.

    வரலாற்று சிறப்பு மிக்க பொங்கல் விழா அடுத்த மாதம் (மார்ச்) 7-ந் தேதி நடைபெறும்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான குத்தியோட்டம், தாலப்பொலி நிகழ்வுக்காக திருவிழாவின் 3-வது நாள் குழந்தைகள் விரதம் தொடங்குகின்றனர். முன்பு 6 வயது முதல் 12 வயது வரையிலான சிறுவர்களுக்கு குத்தியோட்டம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த ஆண்டு 10 வயது முதல் 12 வயது வரை உள்ள 743 சிறுவர்கள் குத்தியோட்டம் நிகழ்வில் கலந்து கொள்கின்றனர்.

    8-ந் தேதி இரவு 9.15 மணிக்கு காப்பு அவிழ்த்து குடியிறக்கிய பின்னர் நள்ளிரவு 1 மணிக்கு நடக்கும் குருதி தர்ப்பணத்துடன் திருவிழா நிறைவுபெறும்.

    ஆற்றுக்கால் பொங்கல் விழா அன்று காலை 10.30 மணிக்கு பண்டார அடுப்பில் தீ மூட்டப்படுவதை தொடர்ந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பொங்கலிடுவார்கள். 2021 மற்றும் 2022-ம் ஆண்டுகளில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பொங்கல் விழா பெரிய அளவில் நடைபெறவில்லை. அவரவர் வீடுகளில் பக்தர்கள் பொங்கலிட்டனர். கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு 2 ஆண்டுகளுக்கு பிறகு பொங்கல் விழா நடைபெறுவதால் 40 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கலந்துகொண்டு பொங்கலிடுவார்கள் என எதிர்பார்க்கிறோம். திருவிழா தொடங்கும் அன்று மாலை 6 மணிக்கு கலை நிகழ்ச்சிகளை சினிமா நடிகர் உண்ணி முகுந்தன் தொடங்கி வைக்கிறார்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழாவின் நிறைவாக அம்மன் பவனி நடந்தது. அலங்கரிக்கப்பட்ட யானையில் பவனியாக கொண்டுவரப்பட்ட அம்மனை பக்தர்கள் வழிநெடுக மலர் தூவி வரவேற்றனர்.
    திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் பொங்கல் விழா கடந்த 12- ந் தேதி தொடங்கியது. நேற்று முன்தினம் பொங்கல் விழா கோலாகலமாக நடந்தது. லட்சக்கணக்கான பெண்கள் சுமார் 50 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு பொங்கலிட்டு வழிபட்டனர்.

    தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு அம்மன் பவனி ஆற்றுக்கால் கோவிலில் இருந்து மணக்காடு அய்யப்பன் கோவிலுக்கு புறப்பட்டது. அய்யப்பன் கோவிலில் இரவு ஓய்வுக்கு பிறகு மீண்டும் அம்மன் பவனி நேற்று காலை 8 மணிக்கு அய்யப்பன் கோவிலில் இருந்து புறப்பட்டது.

    அலங்கரிக்கப்பட்ட யானையில் அம்மன் ஊர்வலமாக ஆற்றுக்கால் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டார். வழிநெடுகே பக்தர்கள் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். வீடுகளின் முற்றத்தில் தேங்காய் பழத்தட்டுடன், குத்துவிளக்கு ஏற்றி ஆண்களும் பெண்களும் பக்தி பரவசத்துடன் அம்மன் பவனிக்கு வரவேற்பு அளித்தனர். பல இடங்களில் மலர் தூவி வரவேற்றனர். மதியம் 12 மணிக்கு பவனி கோவிலை வந்தடைந்தது. தொடர்ந்து உச்ச பூஜை, தீபாராதனை, உச்ச ஸ்ரீபலி ஆகியன நடந்தது.

    அப்போது அங்கு கூடி இருந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் அம்மனை வழிபட்டனர். குத்தியோட்ட சிறுவர்கள், தாலப்பொலி நேர்ச்சை சிறுமிகள் இறுதி நேர்ச்சைக்காக கோவிலுக்குள் அழைத்து வரப்பட்டனர். இரவு 9.15 மணிக்கு அம்மனுக்கு காப்பு அவிழ்ப்பு நிகழ்ச்சி நடந்தது. இரவு 12.15 மணிக்கு நடைபெற்ற குருதி தர்ப்பணத்துடன் பொங்கல் விழா நிறைவடைந்தது.
    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பிரசித்திபெற்ற ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் பொங்காலை திருவிழாவை முன்னிட்டு இன்று லட்சக்கணக்கான பெண்கள் பொங்கல் வைத்து பகவதி அம்மனை வழிபாடு செய்தனர்.
    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பிரசித்திபெற்ற ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் நடைபெறும் பொங்காலை திருவிழா உலக புகழ்பெற்றது.

    இந்த கோவிலில் பெண்கள் மட்டுமே பங்கேற்று பொங்கல் வைத்து வழிபாடு நடத்தும் நிகழ்ச்சி ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும். இந்த பொங்காலை விழாவில் லட்சக்கணக்கான உள்நாட்டு, வெளிநாட்டு பெண் பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    ஒரே இடத்தில் அதிக பெண்கள் திரண்டு பொங்கல் வழிபாடு நடத்திய வகையில் இந்த பொங்காலை திருவிழா 2 முறை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்று உள்ளது.

    ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கி நடந்து வருகிறது. இன்று காலை முக்கிய நிகழ்ச்சியான பொங் காலை திருவிழா நடந்தது.

    ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் முன்பு உள்ள பெரிய பண்டார அடுப்பில் முதலில் தீ மூட்டப்பட்டது. காலை 10.15 மணிக்கு கோவில் தந்திரி வாசுதேவன் நம்பூதிரி பண்டார அடுப்பில் தீ வைத்ததும் கோவிலை சுற்றி அமைக்கப்பட்டு இருந்த அடுப்பில் பெண் பக்தர்கள் தீ மூட்டி பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினார்கள்.

    திருவனந்தபுரம் நகரின் முக்கிய வீதிகளில் ஏற்கனவே பொங்கல் அடுப்புகளுடன் இடம்பிடித்து இருந்த லட்சக்கணக்கான பெண் பக்தர்களும் பொங்கல் வைத்து பகவதி அம்மனை வழிபட்டனர்.

    பொங்காலை திருவிழாவையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். பெண் கமாண்டோ போலீசாரும், பெண் போலீசாரும் கோவில் வளாகத்தில் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர்.
    ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் நாளை பொங்கல் திருவிழா நடைபெறுகிறது. இதில் லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்பார்கள் என்பதால் போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு உள்ளது.

    திருவனந்தபுரம், பிப். 19-

    திருவனந்தபுரம் ஆற்றுக் கால் பகவதி அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற அம்மன் கோவில் களில் ஒன்றாக திகழ்கிறது.

    இந்த கோவிலில் ஆண்டு தோறும் பொங்காலை திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான பொங்காலை திருவிழா கடந்த 12-ந்தேதி தொடங்கியது. இதையொட்டி நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளை நடிகர் மம்முட்டி தொடங்கி வைத்தார். தொடர்ந்து விழா நடந்து வருகிறது.

    கேரளா மட்டுமின்றி குமரி மாவட்டம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதி களை சேர்ந்த பக்தர்கள் கோவிலுக்கு சென்று அம்மனை தரிசனம் செய் வதால் அங்கு கூட்டம் அலை மோதுகிறது. பல மணிநேரம் காத்திருந்த பிறகே பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்ய முடிகிறது.

    இங்கு நடைபெறும் பொங்காலை திருவிழாவில் பெண்கள் மட்டுமே பங்கேற்று பொங்கல் வைத்து அம்மனை வழிபடுவதால் இந்த கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப் படுகிறது. பிரசித்திபெற்ற பொங்காலை திருவிழா நாளை (20-ந்தேதி) நடை பெறுகிறது.

    நாளை காலை 10.20 மணிக்கு கோவில் வளாகத் தில் உள்ள அடுப்பில் தந்திரி பரமேஸ்வரன் வாசுதேவன், மேல்சாந்தி விஷ்ணு நம்பூதிரி ஆகியோர் தீ பற்றவைப்பார்கள். அதை தொடர்ந்து கோவில் மற்றும் சுற்றுப்பகுதியில் லட்சக் கணக்கான பெண்கள் ஒரே நேரத்தில் பொங்கல் வைத்து அம்மனை வழிபடுவார்கள்.

    இதையொட்டி கோவில் வளாகம் மற்றும் சுற்றுப் பகுதியில் இப்போதே பக்தர் கள் இடம்பிடிக்க தொடங்கி விட்டனர். பொங்கல் அடுப்பு, பானை மற்றும் பூஜை பொருட்களுடன் அவர்கள் பொங்காலைக்கு தயாராக உள்ளனர். ஏற்கனவே இங்கு நடைபெற்று உள்ள பொங் காலை திருவிழா கின்னஸ் சாதனை புத்த கத்தில் இடம் பெற்று உள்ளது. எனவே நாளை பொங்காலை திருவிழாவில் பல லட்சம் பெண் பக்தர்கள் திரள்வார்கள் என்பதால் போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு உள்ளது.

    கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருவனந் தபுரத்திற்கு சிறப்பு ரெயில், பஸ்கள் விடவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. * * * ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் பொங்கல் வைக்க பானைகளை வாங்கிச் செல்லும் பெண் பக்தர்கள்.

    பகவதி அம்மன் ஆலயங்களிலேயே திருவனந்தபுரம் ஆற்றுக்கால் என்ற இடத்தில் உள்ள ‘ஆற்றுக்கால் பகவதி அம்மன்’ கோவிலுக்கு தனிச் சிறப்பு உண்டு.
    மகாவிஷ்ணுவின் அவதாரமாக கருதப்படுபவர் பரசுராமர். இவர் 108 சிவாலயங்களையும், 108 பகவதி அம்மன் கோவில்களையும் நிறுவியதாக கூறப்படும் இடம் இன்றைய கேரளா. இப்படி இறைவனின் ஆட்சியும் இயற்கையின் ஆட்சியும் நடப்பதால் தான், கேரளாவிற்கு ‘கடவுளின் தேசம்’ என்றும் பெயர் வந்தது. கேரளாவில் உள்ள அம்மன் கோவில்களுக்கென்று தனியாக பெயர்கள் இல்லை. அனைத்து அம்மனுமே ஊரின் பெயரோடு இணைத்து ‘பகவதி அம்மன்’ என்றே அறியப்படுகிறார்கள்.

    பகவதி அம்மன் ஆலயங்களிலேயே திருவனந்தபுரம் ஆற்றுக்கால் என்ற இடத்தில் உள்ள ‘ஆற்றுக்கால் பகவதி அம்மன்’ கோவிலுக்கு தனிச் சிறப்பு உண்டு. இங்கு ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும் பொங்கல் திருவிழா, இந்த ஆலயத்தின் சிறப்புக்கு காரணமாக அமைந்துள்ளது. கோவிலைச் சுற்றி சுமார் 10 கிலோமீட்டர் சுற்றளவுக்கு, திருவனந்தபுரம் நகரில் சாலை ஓரங்கள், வீட்டு வளாகங்கள், தெருக்கள் என்று பல இடங்களிலும் பெண்கள் கூடி பொங்கல் வைப்பார்கள்.

    இந்த விழாவானது, பல லட்சம் பேர் அதுவும் பெண்களால் மட்டுமே வைக்கப்படும் பொங்கல் விழாவாகும். அதோடு இந்த பொங்கல் விழா கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளது. 1997-ம் ஆண்டு நடந்த பொங்கல் விழாவில் 15 லட்சம் பெண்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்ததாக, இந்த கோவில் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது. அதே போல் 2009-ம் ஆண்டு 30 லட்சம் பெண்கள் பங்கேற்று பொங்கல் வைத்தது, முந்தைய சாதனையை முறியடித்தது. இப்படி ஆண்டு தோறும் இந்த ஆலயத்தில் பொங்கல் வைப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.

    மதுரையை எரித்த பிறகு, கண்ணகி கேரள தேசம் சென்றதாக சொல்லப்படுகிறது. அங்கு சென்ற கண்ணகி தேவியை, மன அமைதி அடையச் செய்வதற்காக பெண்கள் பலரும் அவளுக்கு பொங்கல் வைத்து நைவேத்தியம் படைப்பதாக ஐதீகம். மகிஷாசுரனை வதம் செய்த அம்பாள், பக்தர்களின் முன்பாக காட்சி தந்தாள். அவளை வரவேற்கும் விதமாக, பெண்கள் பலரும் பொங்கல் வைத்தனர். அதை நினைவுகூரும் விதமாகத்தான் இந்த பொங்கல் விழா நடைபெறுகிறது என்று மற்றொரு ஐதீகமும் சொல்லப்படுகிறது.

    ஆலய வரலாறு :

    ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் தோன்றியதற்கான ஆதி கதையை தெரிந்து கொள்வோம். சிலப்பதிகாரத்தின் நாயகியும், கற்புக்கரசியுமான கண்ணகி தான், ஆற்றுக்கால் பகவதி அம்மன் என்று கூறப்படுகிறது. தன் கணவன் கள்வன் அல்ல என்பதை, பாண்டிய மன்னனிடம் நிரூபணம் செய்து விட்டு, மதுரையை தீக்கு இரையாக்கினாள் கண்ணகி. பின்னர் அங்கிருந்து கன்னியாகுமரி வழியாக கேரள மாநிலத்தில் கொடுங்கல்லூர் என்ற இடத்திற்கு செல்லும் வழியில், ஆற்றுக்கால் என்ற இடத்தில் இளைப்பாறினாள். அதன் நினைவாகவே இங்கு ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் அமைக்கப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள்.

    தவிர ஆற்றுக்கால் பகவதி அம்மன் தோன்றியதற்கு மற்றொரு கதையும் சொல்லப்படுகிறது. பராசக்தியின் பக்தர் ஒருவர், கிள்ளி என்ற ஆற்றில் நீராடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு தெய்வீக அம்சம் பொருந்திய அழகுச் சிறுமி ஒருத்தி வந்தாள். அந்த சிறுமியைக் கண்ட பக்தர், அம்மனே சிறுமியின் உருவில் வந்திருப்பதாக எண்ணினார்.

    அதே நேரம் பக்தரைப் பார்த்து அந்த சிறுமி, “ஐயா! என்னை இந்த ஆற்றின் மறுகரையில் கொண்டு போய் விட முடியுமா?” என்று கேட்டாள்.

    ஆனால் அன்னையின் உருவமாக அந்த சிறுமியைக் கண்ட பக்தருக்கு அவளை பிரிய மனம் வரவில்லை. எனவே அவளை தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்று உபசரிக்க நினைத்தார். அதை அந்த சிறுமியிடம் அவர் சொல்ல முற்பட்டபோது, சிறுமி மறைந்தாள். சிறுமி வடிவில் வந்தது அம்பாள் தான் என்பதை எண்ணி, பக்தர் மனம் மகிழ்ந்தார்.

    அன்று இரவு பக்தரின் கனவில் தோன்றிய அதே சிறுமி, “தென்னை மரங்கள் அடர்ந்த பகுதியில் மூன்று கோடுகள் தென்படும். அந்த இடத்தில் கோவில் அமைத்து என்னை குடியமர்த்துங்கள்” என்றாள்.

    மறுநாள் சிறுமி கனவில் சுட்டிக்காட்டிய இடத்திற்கு சென்ற பக்தர், அங்கு மூன்று கோடுகள் இருப்பதைக் கண்டு ஆனந்தம் அடைந்தார். தொடர்ந்து அந்த இடத்தில் சிறிய கோவில் ஒன்றைக் கட்டி, அம்மனை வழிபட்டார். அதுவே நாளடைவில் ஆற்றுக்கால் பகவதி அம்மன் ஆலயமாக எழுச்சியுற்றதாக கோவில் வரலாறு சொல்கிறது.

    கோவில் அமைப்பு:

    ஆற்றுக்கால் பகவதி அம்மன் ஆலயம் முழுவதும் செம்புத் தகடால் வேயப்பட்டது. கோவில் இருக்கும் ஸ்ரீசக்கரத்தை ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள்ளார். கோவில் தூண்கள் மற்றும் சுவரில் மகிஷாசுரமர்த்தினி, காளி, ராஜராஜேஸ்வரி, சிவ பார்வதியின் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. கோபுரத்தின் ஒரு பகுதியில் கண்ணகியின் வரலாற்றைக் கூறும் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன.

    ஆலய நுழைவு வாசலின் மேல் பகுதியில் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கத்தி, கேடயம், சூலம், அட்சயபாத்திரம் போன்றவற்றை தாங்கி, அரக்கியை அடக்கி அவள் மேல் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறாள். கருவறையில் இரண்டு அம்மன் சிலைகள் உள்ளன. மூல விக்ரகத்தில் ரத்தினங்கள் பதித்து, தங்க அங்கி சாத்தப்பட்டுள்ளது. அம்மனின் கருவறை ‘ஸ்ரீகோவில்’ என்று அழைக்கப்படுகிறது. ஆலய வளாகத்தைச் சுற்றி கணபதி, சிவன், நாகர், தட்சிணாமூர்த்தி, ஆஞ்சநேயர் சன்னிதிகள் உள்ளன.

    சிறுமிகளின் ஊர்வலம்:

    இந்த ஆலயத்தின் பொங்கல் விழா நடைபெறும் அன்று காலையில், சிறுமிகள் பலர் தங்களை அலங்கரித்த நிலையில் அம்மன் சன்னிதானத்திற்கு, குடும்பத்துடன் வந்து அம்மனை வழிபட்டு திரும்புவார்கள். இதை ‘தாலிப்பொலி’ என்று கூறுகிறார்கள். எல்லா சிறுமிகளும் புத்தாடை அணிந்து, தலையில் மலர் கிரீடம் சூடி, கையில் தாம்பாளம் ஏந்தி, அதில் அம்மனுக்குரிய பூஜை பொருட்களை வைத்து, தீபத்தையும் ஏற்றி வைத்து கொண்டு வருவார்கள். சிறுமிகளுடன் அவர்களது பெற்றோர், உறவினர்கள் வருவார்கள். இந்த வழிபாட்டால், சிறுமிகளுக்கு நோய் நொடி வராது. அவர்களது அழகும், செல்வமும் அதிகரிக்கும். எதிர்காலத்தில் நல்ல வரன்கள் அமையும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

    சிறுவர்களின் குத்தியோட்டம் :

    ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழாவில், சிறுவர்களின் குத்தியோட்டமும் சிறப்புமிக்கதாகும். அதாவது 13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் இந்த வழிபாட்டை நடத்துகிறார்கள். அவர்கள் அனைவரும் மகிஷாசுரமர்த்தினியுடன் ேபாரில் கலந்துெகாண்டு காயமடைந்த படைவீரர்களாக கருதப்படுகிறார்கள். திருவிழா தொடங்கிய மூன்றாம் நாள் சிறுவர்கள் தலைமை அர்ச்சகரிடம் பிரசாதம் பெற்று, கோவிலில் தனி இடத்தில் 7 நாட்கள் தங்கியிருந்து விரதம் கடைப்பிடிப்பார்கள். அந்த 7 நாட்களில் தினமும் நீராடி அம்மனுக்கு சன்னிதியில் ஈர உடையுடன் நின்றபடி 1008 நாமங்களை சொல்லி வழிபட வேண்டும். இந்த விரதத்தை மேற்கொள்வதால், சிறுவர்கள் எதிர்காலம் சிறப்பாக அமையும் என்பது ஐதீகம்.

    இந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
     
    அமைவிடம் :

    திருவனந்தபுரத்தில் இருந்து கிழக்கு கோட்டை சிட்டி பஸ் நிலையத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் ஆற்றுக்கால் திருத்தலம் அமைந்துள்ளது. 
    ×