என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
![புனித பவுல் புனித பவுல்](https://img.maalaimalar.com/Articles/2022/Feb/202202081145357523_Tamil_News_Paul-the-Apostle-church-festival_SECVPF.gif)
X
புனித பவுல்
மெஞ்ஞானபுரம் பரிசுத்த பவுலின் ஆலய பிரதிஷ்டை பண்டிகை இன்று தொடங்குகிறது
By
மாலை மலர்8 Feb 2022 6:15 AM GMT (Updated: 8 Feb 2022 6:15 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
மெஞ்ஞானபுரம் பரிசுத்த பவுலின் ஆலய 175-வது பிரதிஷ்டை பண்டிகை மற்றும் அசன விழா இன்று இரவு 7 மணிக்கு கலைநிகழ்ச்சியுடன் தொடங்குகிறது.
பிரசித்தி பெற்ற கிறிஸ்தவ தேவாலயங்களில் ஒன்றான மெஞ்ஞானபுரம் பரிசுத்த பவுலின் ஆலய 175-வது பிரதிஷ்டை பண்டிகை மற்றும் அசன விழா இன்று இரவு 7 மணிக்கு கலைநிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. 9-ந்தேதி நாகர்கோவில் இரட்சிப்பார் ஊழியங்கள் நடத்தும் பார்வையற்றோர் கிறிஸ்தவ இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. 10, 11-ந்தேதி இரவில் நற்செய்தி கூட்டங்கள் நடைபெறுகிறது. 12-ந்தேதி மதியம் 3 மணிக்கு திடப்படுத்தல் ஆராதனையை தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல பேராயர் தேவசகாயம் நடத்துகிறார். இரவு 7.30 மணிக்கு பொதுமகமை சங்கத்தாரின் அமலிபால் வழங்கும் கிறிஸ்தவ இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது.
13, 14-ந்தேதிகளில் இரவு 7.30 மணிக்கு பஜனை பிரசங்கம் நடக்கிறது. 15-ந்தேதி இரவு 7.30 மணிக்கு ஸ்தாபனங்களின் கலைநிகழ்ச்சி நடக்கிறது. 16-ந்தேதி தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல பேராயர் தலைமையில் பிரதிஷ்டை பண்டிகை நடக்கிறது. காலை 9 மணிக்கு எலியட் டக்ஸ்போர்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள கணம் ரேனியஸ் சிற்றாலயத்தில் திருவிருந்து ஆராதனை நடக்கிறது. காலை 11 மணிக்கு அசன வைபவ மங்களகால் நடுதல், மாலை 4 மணிக்கு பரிசுத்த ஞானஸ்நான ஆராதனையும், இரவு 7 மணிக்கு ஆயத்த பண்டிகை ஆராதனையை கன்னியாகுமரி திருமண்டல பேராயர் செல்லையா நடத்துகிறார்.
வருகிற 17-ந்தேதி அதிகாலை 3.30 மணிக்கு ஆலய பிரதிஷ்டை பண்டிகை ஆராதனையை நெல்லை திருமண்டல பேராயர் பர்னபாஸ் நடத்துகிறார். காலை 8 மணிக்கு கணம் ஜான் தாமஸ் ஐயர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துதல், 6.15 மணிக்கு உலை ஏற்றும் வைபவம், மதியம் 3 மணிக்கு அசன வைபவம், இரவு 8.30 மணிக்கு வாணவேடிக்கையும் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை மெஞ்ஞானபுரம் பொதுமகமை சங்க தலைவர் ஜெயபோஸ், துணை தலைவர் ஜெரால்டு ஜான்சன், செயலாளர் நவமணி ராபர்ட், இணை செயலாளர் செல்வின், பொருளாளர் சொர்ணராஜ், தலைமை குருவானவர் கோல்டுவின், உதவி குருவானவர் ஐசக்துரை ஜோயல், திருப்பணிவிடையாளர் எட்வின் ஜெபராஜ், சபை ஊழியர் பிளசிங் ஜிம்ரோஸ் மற்றும் சபைமக்கள் செய்து வருகின்றனர்.
13, 14-ந்தேதிகளில் இரவு 7.30 மணிக்கு பஜனை பிரசங்கம் நடக்கிறது. 15-ந்தேதி இரவு 7.30 மணிக்கு ஸ்தாபனங்களின் கலைநிகழ்ச்சி நடக்கிறது. 16-ந்தேதி தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல பேராயர் தலைமையில் பிரதிஷ்டை பண்டிகை நடக்கிறது. காலை 9 மணிக்கு எலியட் டக்ஸ்போர்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள கணம் ரேனியஸ் சிற்றாலயத்தில் திருவிருந்து ஆராதனை நடக்கிறது. காலை 11 மணிக்கு அசன வைபவ மங்களகால் நடுதல், மாலை 4 மணிக்கு பரிசுத்த ஞானஸ்நான ஆராதனையும், இரவு 7 மணிக்கு ஆயத்த பண்டிகை ஆராதனையை கன்னியாகுமரி திருமண்டல பேராயர் செல்லையா நடத்துகிறார்.
வருகிற 17-ந்தேதி அதிகாலை 3.30 மணிக்கு ஆலய பிரதிஷ்டை பண்டிகை ஆராதனையை நெல்லை திருமண்டல பேராயர் பர்னபாஸ் நடத்துகிறார். காலை 8 மணிக்கு கணம் ஜான் தாமஸ் ஐயர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துதல், 6.15 மணிக்கு உலை ஏற்றும் வைபவம், மதியம் 3 மணிக்கு அசன வைபவம், இரவு 8.30 மணிக்கு வாணவேடிக்கையும் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை மெஞ்ஞானபுரம் பொதுமகமை சங்க தலைவர் ஜெயபோஸ், துணை தலைவர் ஜெரால்டு ஜான்சன், செயலாளர் நவமணி ராபர்ட், இணை செயலாளர் செல்வின், பொருளாளர் சொர்ணராஜ், தலைமை குருவானவர் கோல்டுவின், உதவி குருவானவர் ஐசக்துரை ஜோயல், திருப்பணிவிடையாளர் எட்வின் ஜெபராஜ், சபை ஊழியர் பிளசிங் ஜிம்ரோஸ் மற்றும் சபைமக்கள் செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)