என் மலர்
நீங்கள் தேடியது "ரத சப்தமி"
- சூரிய கதிர்களை கிரகிக்கும் சக்தி எருக்கன் இலைக்கு உண்டு.
- நாம் அளிக்கும் பச்சரிசியை ஒரு எறும்பு சாப்பிட்டால் ஒரு லட்சம் பேருக்கு அன்னதானம் அளித்த பலன் கிடைக்கும்.
உலகிற்கு ஒளி தரும் சூரிய பகவானுக்கு உரிய விரதங்களில் மிக முக்கியமானது ரத சப்தமி.
சூரிய பகவான் தனது 7 குதிரைகள் பூட்டிய ரதத்தை வடக்கு நோக்கி திருப்பிப் பயணத்தைத் தொடங்கும் புனித நாளே 'ரத சப்தமி'. தை மாத வளர்பிறை சப்தமி திதியில் கொண்டாடப்படும் இந்த நாள், சூரிய பகவானின் பிறந்த நாளாகவும் (சூரிய ஜெயந்தி) போற்றப்படுகிறது.
இந்த ஆண்டு ரத சப்தமி நாளை (ஞாயிற்றுக்கிழமை) வருகிறது. சப்தமி திதி நாளை அதிகாலை 12:39 மணிக்கு தொடங்கி இரவு 11:10 மணிக்கு முடிவடைகிறது. இதையொட்டி அதிகாலை 4:56 முதல் 6:36-க்குள் புனித நீராடுவது நல்லது.
ரத சப்தமி அன்று மிக முக்கியமான வழிபாடு 'எருக்கன் இலை' வைத்து நீராடுவது ஆகும். ஆண்கள் 7 எருக்கன் இலைகளுடன் அட்சதை மற்றும் விபூதி வைத்து நீராட வேண்டும். பெண்கள் 7 எருக்கன் இலைகளுடன் அட்சதை மற்றும் மஞ்சள் தூள் வைத்து நீராட வேண்டும்.
இவ்வாறு செய்வதால் கடந்த 7 ஜென்மங்களில் செய்த பாவங்கள் நீங்கும் என்பதும், தீராத நோய்கள் குணமாகி ஆரோக்கியம் மேம்படும் என்பதும் ஐதீகம். அர்க்கன் என்றால் சூரியன் என்று பொருள். அர்க்கன் இலை என்பதே மருவி எருக்கன் இலை என மாறிவிட்டது.
சூரிய கதிர்களை கிரகிக்கும் சக்தி எருக்கன் இலைக்கு உண்டு. சூரிய கதிர்களில் உள்ள நல்ல சக்திகளை உடலுக்குள் செலுத்தும். தீபாவளியன்று நீராடுவது எவ்வளவு விசேஷமானதாக கருதப்படுகிறதோ அதேபோல, ரத சப்தமி நீராடலும் முக்கியமானது.
ரத சப்தமி அன்று வாசலில் சூரிய ரதம் போன்ற கோலமிட்டு, அதன் நடுவில் சூரிய-சந்திரர்களை வரைய வேண்டும். சூரிய ஒளிபடும் இடத்தில் புதுப்பானையில் பால் பொங்க வைத்து, சர்க்கரைப் பொங்கல் மற்றும் உளுந்து வடை நிவேதனம் செய்வது சிறப்பு.
இந்த உலகில் தோன்றிய பழமையான வழிபாடுகளில் ஒன்று சூரிய வழிபாடு. கண்கண்ட கடவுளாக நாள்தோறும் தோன்றி மறைந்து உயிர் இயக்கத்துக்குத் தேவையான ஒளியையும் உணவையும் அருள்பவர் சூரியன்.
சிவனும் நாராயணனும் சூரிய வடிவிலே துதிக்கப்படுவது வழக்கம். தெய்வங்களில் நாராயணனைப் போன்று சங்கு சக்கரம் தரித்தவர் சூரியபகவான். 7 குதிரைகள் பூட்டப்பட்ட தேரில் ஏறி அவர் வலம் வருவதாகப் புராணங்கள் சொல்கின்றன.
சூரியன் ஒளித் தேரில் பவனி வருகிறான். ஒளியின் 7 வண்ணங்களே 7 குதிரை களாகச் சொல்லப்படுகின்றன. ரத சப்தமி நாளில் புனித நீராடி சூரியனை வழிபட வேண்டும்.
சூரிய பகவான் நாராயணனின் அம்சமாகவும் இருப்பதால் விஷ்ணு சஹஸ்ரநாமப் பாராயணமும் செய்வது நன்மையைத் தரும். சூரியன் ஆரோக்கியத்துக்கு உரிய கிரகம். சூரியனை வழிபடுவதன்மூலம் அவரின் அருளையும் ஆரோக்கியத்தையும் பெறலாம்.
ரத சப்தமி அன்று சூரியனுக்கு ஒரு எளிய பரிகாரத்தை செய்வதால் வாழ்க்கையில் அளவில்லாத மாற்றங்களை பெற முடியும். அதன்படி ரத சப்தமி அன்று ஒரு சிறிய பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீருடன் சிறிதளவு பால், மஞ்சள் ஆகியவற்றை கலந்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த தண்ணீரை எடுத்துச் சென்று, வெள்ளை எருக்கம் செடிக்கு ஊற்ற வேண்டும்.
"ஓம் ஸ்ரீசிவசூரிய நாராயண சுவாமியே நமஹ" என்ற மந்திரத்தை 3 முறை சொல்லி அந்த தண்ணீரை வெள்ளை எருக்கம் செடிக்கு ஊற்ற வேண்டும். மிக எளிமையான இந்த பரிகாரத்தை செய்தால் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும் என்கின்றனர் பெரியவர்கள்.
நகரத்தில் இருப்பவர்கள் வெள்ளை எருக்கம் செடியை கண்டுபிடிக்க முடியாது. அதனால் இந்த பரிகாரத்தை செய்ய முடியாதவர்கள் சிறிதளவு பச்சரிசி மாவை எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் சிறிதளவு வெல்லம் கலந்து, மனிதர்கள் கால்படாத இடமாக பார்த்து தூவி விடலாம்.
நாம் அளிக்கும் பச்சரிசியை ஒரு எறும்பு சாப்பிட்டால் ஒரு லட்சம் பேருக்கு அன்னதானம் அளித்த பலன் கிடைக்கும் என்பார்கள். அதனால் பாவங்கள் நீங்கி, புண்ணிய பலன்களையும், சூரிய பகவானின் அருளையும் பெறுவதற்கு எறும்புகளுக்கு பச்சரிசி மாவை சாப்பிட கொடுப்பது நல்லது.
ரத சப்தமியன்று துவங்கும் தொழில், பணிகள் மிகவும் சிறப்பாக இருக்கும் என்பதும், இந்த நாளில் செய்யப்படும் தர்மத்துக்கு பல மடங்கு புண்ணியம் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை. ஜோதிட ரீதியாக தந்தை ஸ்தானத்துக்கு உரியவர் சூரியன். பிதுர் லோகத்துக்கு அதிபதியும் இவர். இவரே, நாம் செய்யும் தர்ப்பண பலனை முன்னோர்களிடம் ஒப்படைக்கிறார்.
ஆத்மகாரனாகவும் இருக்கிறார். இவரை வணங்குபவர்கள் உடல் ஆரோக்கியமும், மன ஆரோக்கியமும் பெறுவர். பெண்கள் இந்த விரதத்தை அனுஷ்டித்தால், நல்ல குணங்களைப் பெறுவர்.
தலைமைப் பொறுப்புகளைப் பெற வேண்டி வழிபடக்கூடிய முக்கியமான கடவுள் சூரிய பகவான். அரசு வேலையில் உயர் பதவி வேண்டுவோர், பதவி தொடர்பாக தடைகள் உள்ளவர்கள், வழக்குகளில் வெற்றி வேண்டுபவர்கள் ரத சப்தமி விரதமிருந்து சூரிய பகவானை வழிபடுவது நன்மை தருவதாகும்.
கோவில்களில் நவகிரக சன்னதியில் சூரியனுக்கு சிவப்பு வஸ்திரம் அணிவித்து சிவப்பு மலர்களால் அர்ச்சனை செய்து நெய் விளக்கு ஏற்றி வழிபடலாம். ரத சப்தமி அன்று முதல் கதிரோன் தன் ஒளிக்கற்றையின் அளவைச் சிறுகச் சிறுக அதிகரித்து, பூமியின் வெம்மையைக் கூட்டுகிறான். அதைக் குறிக்கும்விதமாகவும் அன்று சூரியனுக்கு வழிபாடு நடத்தப்படுகிறது.
- ரத சப்தமி நாளில் செய்யப்படும் தர்மத்திற்கு பல மடங்கு புண்ணியம் உண்டு.
- சூரியனுக்கு உகந்த நைவேத்தியம் சர்க்கரைப் பொங்கல்.
ரத சப்தமி என்பது இந்துக்களின் மிக முக்கியமான வழிபாட்டு நாளாகும். அமாவாசைக்குப் பிறகு வரும் 7-வது நாள் திதியை 'சப்தமி' என்பார்கள். தை அமாவாசைக்குப் பிறகு வரும் சப்தமி திதி 'ரத சப்தமி' என்று அழைக்கப்படுகிறது. இது சூரியன் அவதரித்த தினமாக கருதப்படுகிறது. எனவே இந்த நாளை 'சூரிய ஜெயந்தி' என்றும் கொண்டாடுகிறார்கள். இந்த நாளில் சூரிய பகவானை வழிபட்டால் பலவிதமான நன்மைகளை பெறலாம்.
காஷ்யப முனிவரின் மனைவியர்களில் ஒருவர் அதிதி. இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஒரு சமயத்தில், கணவருக்கு உணவு பரிமாறிக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில் வீட்டின் வெளியே ஒரு அந்தணர், "மிகவும் பசியாக இருக்கிறது. உணவு இருந்தால் கொடுங்கள்" என்று யாசகம் கேட்டு நின்றார். நிறைமாத கர்ப்பிணி என்பதால் கணவருக்கு உணவு பரிமாறிவிட்டு, மெதுவாக உணவு எடுத்து வந்து யாசகரிடம் கொடுத்தார்.
அப்போது கோபம் அடைந்த யாசகர், "உணவு எடுத்துவர இவ்வளவு தாமதமா? என்னை அவமானம் செய்துவிட்டாய். எனவே உன் வயிற்றில் வளரும் குழந்தை இறப்பான்" என்று சாபமிட்டார். இதனால் பயந்து போன அதிதி, இது பற்றி தனது கணவரிடம் தெரிவித்தார். அவரோ, "கவலைப்படாதே, நமக்கு தேவலோகத்தில் இருந்து அழிவில்லாத ஒரு மகன் கிடைப்பான்" என்று கூறினார். அதன்படி, அதிதிக்கு மகனாக பிரகாசமான ஒளியுடன் சூரியன் பிறந்தார். இந்த தினமே 'ரத சப்தமி' ஆகும்.
இந்த ஆண்டு ரத சப்தமி மார்கழி மாதம் 11-ம் நாள் (25-1-2026) நாளை ஞாயிற்றுக்கிழமை வருகிறது. ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் பவனி வருபவர், சூரிய பகவான். ரத சப்தமி அன்று சூரிய பகவானை வழிபாடு செய்வதால் எண்ணற்ற பலன்கள் கிடைக்கும். சூரியனுக்கு உகந்ததாக எருக்கம் இலை உள்ளது. ரத சப்தமி அன்று, ஏழு எருக்கம் இலைகளை தலையில் வைத்து நீராட வேண்டும். இதனால் ஆரோக்கியமும், செல்வ வளமும் உண்டாகும் என்கிறார்கள்.

ரத சப்தமி நாளில் செய்யப்படும் தர்மத்திற்கு பல மடங்கு புண்ணியம் உண்டு. இந்த நாளில் தொடங்கும் தொழில் பெருகும். பெண்கள் உயர்நிலையை அடைவர். கணவனை இழந்தவர்கள் இந்த விரதம் இருந்தால் அடுத்து வரும் பிறவிகளில் முன்னேற்றங்கள் கிடைக்கும் என்கின்றன புராணங்கள். இந்த நாளில் தியானம், யோகா செய்வது சிறந்தது.
ரத சப்தமியில் சூரிய உதயத்தின்போது குளித்து விரதம் இருந்தால் செல்வந்தராக உயர்வார்கள் என்கின்றது புராணம். அன்றைய தினம் சூரியனுக்கு சிவப்பு வஸ்திரம் அணிவித்து சிவப்பு மலர்களால் அர்ச்சனை செய்து, ஒரு நெய்விளக்கு ஏற்றி வைத்து வழிபட்டால் சூரியனால் ஏற்படும் தோஷங்கள் விலகும் என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. சூரியனாருக்கு உகந்த தானியம், கோதுமை. எனவே நைவேத்தியத்தில் கோதுமை உணவு இருப்பது சிறப்பு.

அன்றைய தினம் குளித்து முடித்தபின் சூரியனை வணங்க வேண்டும். அதன்பின் சூரிய துதிகளைச் சொல்ல வேண்டும். சூரியனுக்கு உகந்த நைவேத்தியம் சர்க்கரைப் பொங்கல். எனவே சூரிய பகவானுக்கு பொங்கல் நைவேத்தியம் படைத்து, பின்பு அதை பிறருக்கு கொடுப்பது சிறப்பான பலன் தரும். ரத சப்தமி நாளில் வீட்டு வாசலிலும், பூஜை அறையிலும் தேர்க் கோலம் போடுவது வழக்கம்.
திருமாலின் அம்சமே சூரியன் என்பதால் ரத சப்தமி நாளில் பெருமாள் ஆலயங்களில் சூரிய பிரபையில் எம்பெருமான் எழுந்தருள்வார். அன்றைய தினம் விரதம் இருப்பது நீடித்த ஆயுளையும், குறையாத ஆரோக்கியத்தையும் அளிக்கும் என்பது நம்பிக்கை. இவ்விரதம் இருப்பது சுமங்கலித்துவம் நிலைக்கச் செய்யும் எனவும் சிலர் கூறுவர்.
சூரிய பகவானை ரத சப்தமி தினத்தில் வழிபடும்போது சூரியனை நோக்கி, 'ஓம் நமோ ஆதித்யாய.. ஆயுள், ஆரோக்கியம், புத்திர் பலம் தேஹிமே சதா!' என்று சொல்லி வணங்கலாம். சூரியனை பொங்கல் அன்றும், ரத சப்தமி நாளிலும் மட்டும் வணங்காமல் தினமும் வழிபட்டு வாழ்வில் தீவினை என்னும் இருள் விலகி, நன்மை என்னும் ஒளி பரவ செய்வோம்.
- “எருக்கம்பூ பயத்தை ஒழித்து தைரியம் கொடுக்கக்கூடிய தன்மை உடையது”.
- சூரியனுக்கும் எருக்கம் பூ மலர்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.
கடவுள்களுக்கு உகந்த வெள்ளெருக்கு
சிவனுக்குரிய அஷ்டபுஷ்பங்களில் முதன்மையானது வெள்ளெருக்கமலர்.
சிவபெருமானின் ஜடாமுடியில் விரும்பி அணியக்கூடிய பாக்கியம் பெற்ற மலராக வெள்ளெருக்கம் மலர் திகழ்கிறது.
"எருக்கம்பூ பயத்தை ஒழித்து தைரியம் கொடுக்கக்கூடிய தன்மை உடையது".
இதனால் புதுச்சேரிஅன்னை இந்த மலருக்கு "தைரியம்" என்று பெயர் சூட்டியுள்ளார்.
எருக்கம் மலர்களை அன்னையின் பாதத்தில் வைத்துவிட்டு காரியங்களைச்செய்தால் மனதில் தானே தைரியம் வந்து உட்கார்ந்து கொள்ளுமாம்.
சாதாரண எருக்கம் பூவானாலும் சரி... சிறப்புத்தன்மை கொண்ட வெள்ளெருக்கு மலரானாலும் சரி... அது ஐயப்பனுக்கும் உரியதாகும்.
இதை தை பொங்கல் சமயத்தில் பந்தளம் அரண்மனையிலிருந்து எடுத்துச் செல்லப்படும் திருவாபரணப்பெட்டிகள் எடுத்துரைக்கின்றன.
ஐயப்பனுக்கும், எருக்கம் பூவுக்கும் என்ன சம்பந்தம்?
சபரி சாஸ்தாவுக்குச் சாத்துவதற்காக ஆபணங்களைக் கொண்ட மூன்று பெட்டிகள் திருவாபரணப்பெட்டி, வெள்ளிப்பெட்டி, கொடிப்பெட்டி... கொண்டு வரப்படும் அவற்றுள் திருவாபரணப்பெட்டி மட்டும்தான் ஐயப்பன் சன்னதிக்குச் செல்லும் .
அதனுள் திருமுகக் கவசம், சூரிகைகள், யானை விக்ரகம் , புலி விக்ரகம், வலம்புரிச்சங்கு, பூர்ண புஷ்கலா தேவியர் உருவம், பூக்கள் வைப்பதற்கான தங்கத்தட்டு, நவரத்தின மோதிரம், சரப்பளிமாலை, நவரத்தின மாலை, தங்க இதழ்களாலான வில்வமாலை ஆகியவற்றுடன் தங்கத்தாலான எருக்கம்பூக்களாலான மாலையும் வைக்கப்பட்டிருக்கும்.
இத்தனை மலர்களை விட்டுவிட்டு எருக்கம் பூமாலைக்கு மட்டும் ஏன் இத்தனை விசேஷம்? எளிய பொருட்களையும் இறைவன் ஏற்றுக்கொள்வார் என்பதை உணர்த்துவதற்குத்தான் ஐயப்பன் எருக்கம் பூவை தன்னுடன் வைத்துள்ளார்.
சூரியனுக்கும் எருக்கம் பூ மலர்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.
ரதசப்தமியன்று (சூரியன் தனது ரதத்தை தென்திசையிலிருந்து வடக்கு நோக்கித்திருப்பும் தினம்) ஏழு எருக்க இலைகளுடன், மஞ்சள் பொடி, பசுஞ்சாணம், அருகம்புல், அட்சதை ஆகியவற்றை சேர்த்து தலையில் இருதோள்களில், இருபாதங்களில் வைத்துக்கொண்டு சூரிய திசை நோக்கி, கங்கையை நினைத்துக்கொண்டு ஸ்நானம் செய்யவேண்டும்.
இதனால் ஏழு ஜென்மங்களின் பாவம் அகல்வதுடன் சூரிய பகவானின் பரிபூரண அருளும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
கும்பகோணம் அருகே உள்ள சூரியனார் கோவிலில் வெள்ளெருக்கு மரம்தான் தல மரமாக விளங்குகிறது.
வெள்ளெருக்கு தலமரமாக அமைந்த விசேஷ ஆலயங்களும் உண்டு.
திருமங்கலக்குடி பிராண நாதேஸ்வரர், மங்களநாயகி ஆலயத்தில் தல விருட்சமாக வெள்ளெருக்கு உள்ளது.
இங்கு ஞாயிறு மதியம் உச்சிக்காலத்துப்பிறகு வெள்ளெருக்கு உள்ளது.
இலையில் தயிர் சாதம் நைவேத்யமாகப் படைக்கப்பட்டு பிரசாதமாகவும் வழங்கப்படுகிறது.
இத்திருக்கோவிலில் ஒரு கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமை தொடங்கி தொடர்ந்து 12 ஞாயிற்றுக்கிழமை தயிர்சாதத்தை வெள்ளெருக்கு இலையில் வைத்து நைவேத்யம் செய்து உண்டு வர, எப்பேர்ப்பட்ட நோயும் விலகிவிடுமென்பது நிதர்சனம்.
கடந்த சில ஆண்டுகளாக வெள்ளெருக்கு மரம் உண்டாவதே அரிதாகிவிட்டது.
எளிதாகத் தோன்றுவதும் இல்லை. நவரத்தினங்களும், பொக்கிஷங்களும், தெய்வத் திருவுருவங்களும் புதைந்திருக்கும் இடங்களிடையே வெள்ளெருக்கு முளைக்குமாம்.
அது முளைத்த இடத்தில் ஐஸ்வர்யங்கள் இருப்பதற்கு வாய்ப்புண்டு என்று சொல்கிறார்கள்.
இத்தகைய அரிய வெள்ளெருக்கு வேரில் செதுக்கப்படாமலே பிள்ளையார் தோன்றுவதுதான் விசேஷம்.
அப்படியே செதுக்குவதற்கும் வேர் எடுக்க நினைத்தாலும் அது சாதாரண செயலல்ல.
இன்ன திதியில், நேரத்தில் கிழமைகளில் என்று கணித்து மரத்துக்கு காப்புகட்டி, சில வழிபாடுகளைச் செய்து, குறிப்பாக வடக்கு முகமாகச் செல்லும் வேர்களை எடுத்து மஞ்சள் சந்தனக் காப்புகளை சாத்தி, பக்குவப்படுத்தி உருவாக்கிய பிள்ளையாரின் சக்திக்கு அளவே இல்லை.
மாந்தரீக ஆற்றல் கொண்ட வெள்ளெருக்குக்கு பாம்பு பயந்து ஓடும். பூதப் பிசாசு துர்பயங்கள் விலகும். துர்சக்திகளை நினைத்து பயம் உள்ளவர்கள் வெள்ளெருக்குப்பட்டையைப் பதப்படுத்தி நூல் திரித்து விளக்காக ஏற்றிவர, இல்லமும் இதயமும் பயமின்றித்தெளிவடையும்.
திருவோணம் நட்சத்திரக்காரர்கள் எருக்கஞ்செடி நட்டு, புண்ணியம் தேடிக்கொள்ளலாம்.
- ரத சப்தமி புண்ணியம் மிக்க நாளாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.
- எருக்கன் இலை என்பது அருக்கன் இலை என்பதில் இருந்து மருவி வந்துள்ளது.
ரத சப்தமி புண்ணியம் மிக்க நாளாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.
அன்றைய தினம் அதிகாலையில் எழுந்து கிழக்கு நோக்கி சூரியனை பார்த்து வணங்கியபின்,
தாய், தந்தையரை வணங்கி ஆசி பெறுவது இந்துக்களின் முக்கிய வழிமுறையாகும்.
அன்றைய தினம் குளிப்பதற்கு முன்பு ஏழு எருக்கம் இலைகளை தலை முதல் கை, தோள்பட்டைகள்,
காதுகள் என வைத்து சூரிய பகவானை பிரார்த்தித்து தலையில் நீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.
எருக்கன் இலை என்பது அருக்கன் இலை என்பதில் இருந்து மருவி வந்துள்ளது.
அருக்கன் என்றால் சூரியன்.
இந்த இலையில் சூரியனின் சாரம் உள்ளது.
எனவேதான் ஆண்டுக்கு ஒருமுறை எருக்கன் இலை வைத்து குளிக்கும் வழிபாடு ஏற்பட்டது.
- தியானம், யோகாவைத் தொடங்க ரத சப்தமி சிறந்த தினமாக பார்க்கப்படுகிது.
- 7 எருக்கம் இலைகளை தலையில் வைத்து நீராடுவது மிகவும் அவசியம்.
அமாவாசைக்கு பிறகு வரும் 7-வது நாள் திதியை 'சப்தமி' என்பார்கள். இது சூரியன் அவதரித்த தினம் என்பதால், இதனை ரத சப்தமி' என்று போற்றுகிறார்கள்.

காசியப முனிவருக்கு பல மனைவிகள் உண்டு. அவர்களில் ஒருவர், அதிதி. ஒரு முறை அவர் தன் கணவரான காசியபருக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்தார். அப்போது வாசலில் யாசகம் கேட்டு ஒரு அந்தணர் வந்து நின்றார். அப்போது அதிதி, நிறைமாத கர்ப்பிணியாக இருந்ததால், மெதுவாக நடந்து சென்று அந்தணருக்கான உணவை எடுத்துக் கொண்டு வந்தார்.
அப்போது யாசகம் கேட்டு வந்த அந்தணர், "உணவு எடுத்துவர இவ்வளவு தாமதமா? நீ என்னை உதாசீனப்படுத்தி விட்டாய். எனவே உன் வயிற்றில் வளரும் குழந்தை இறப்பான்" என்று சாபம் கொடுத்து விட்டுச் சென்றார்.
பயந்து போன அதிதி, இதுபற்றி தனது கணவரிடம் தெரிவித்தார். காசியபரோ, "நீ வருந்த வேண்டாம். தேவர் உலகத்தில் இருந்து அழிவில்லாத ஒரு மகன் நமக்கு கிடைப்பான்" என்று கூறினார்.
அதன்படியே பிரகாசமான ஒளியுடன் சூரியன், அதிதிக்கு மகனாகப் பிறந்தார். அவர் பிறந்த தினமே 'ரத சப்தமி' ஆகும். அன்றைய தினம் சூரியனை நாம் வழிபாடு செய்தால், எண்ணற்ற பலன்கள் கிடைக்கும்.
அன்றைய தினம் செய்யும் தர்மங்களுக்கு அதிக புண்ணியம் வந்துசேரும். அதேபோல் இந்நாளில் தொடங்கும் தொழில், சிறப்பான வளர்ச்சியைப் பெறும். கணவனை இழந்த பெண்கள், இந்த வழிபாட்டை மேற்கொண்டால் அடுத்த பிறவியில் இந்த நிலை வராது என்கிறது புராணங்கள்.
தியானம், யோகாவைத் தொடங்க ரத சப்தமி சிறந்த தினமாக பார்க்கப்படுகிது. ரத சப்தமி அன்று சூரியனுக்கு சிவப்பு நிற ஆடை அணிவித்து, சிவப்பு நிற மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்து, நெய் விளக்கேற்றி வழிபட்டால் சூரியனால் ஏற்படும் தோஷங்கள் விலகும்.
சூரியனுக்கு உகந்த தானியம், கோதுமை. எனவே ரத சப்தமி அன்று சூரியனுக்கான நைவேத்தியத்தில் கோதுமையால் செய்யப்பட்ட உணவு இருப்பது பெரும் புண்ணியம் தரும்.
ரத சப்தமி அன்று அதிகாலையில் எழுந்து நீராடி விட்டு, சூரியனை வணங்க வேண்டும். பின்னர் சூரியனுக்குரிய துதிகளைச் சொல்ல வேண்டும். ரத சப்தமி அன்று சூரியனுக்கு அர்க்கியம் விடுவது முக்கியத்துவம் வாய்ந்தது.

சூரியனுக்கு உகந்த நைவேத்தியம், சர்க்கரைப் பொங்கல். அதனை சூடாக இருக்கும் போதே நைவேத்தியம் செய்துவிட வேண்டும். வழிபாட்டிற்குப் பிறகு அந்த சர்க்கரைப் பொங்கலை, மற்றவர்களுக்கு வழங்கி நாமும் சாப்பிட வேண்டும்.
ரத சப்தமி நாளில் வீட்டு வாசலிலும், பூஜை அறையிலும் தேர்க்கோலம் போடுங்கள். சூரியனுக்கு உகந்த பத்ரம் (இலை), எருக்கம் இலை ஆகும். ரத சப்தமி அன்று ஏழு எருக்கம் இலைகளை தலையில் வைத்து நீராடுவது மிகவும் அவசியம். இதனால் ஆரோக்கியமும் செல்வ வளமும் பெருகும்.
நீராடும் போது ஏழு என்ற எண்ணிக்கையில் எருக்கம் இலைகளை எடுத்து அடுக்கிவைத்து, அதன் மீது அட்சதை, எள் வைக்க வேண்டும். ஆண்கள் என்றால் அதனுடன் விபூதியும், பெண்கள் என்றால் அதனுடன் மஞ்சளும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அந்த இலை அடுக்கை, தலை மீது வைத்து நீராட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலமாக, மின்சாரம் எப்படி உலோகக் கம்பி வழியே பாய்கிறதோ. அப்படி சூரியனின் ஏழு வகைக் கதிர்களும் அன்று மட்டும் எருக்கன் இலை வழியே இழுக்கப்பட்டு, நம் உடலில் பாய்ந்து,உடல் உபாதைகளையும், நோய்களையும் நீக்கும் என்பது ஐதீகம்.
சூரியன், நாராயணரின் அம்சம் என்பதால், ரத சப்தமி தினம் அன்று, பெருமாள் கோவில்களில் அவர் சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் வழங்குவார். சூரியன் வழிபாட்டை தினமும் கூட செய்யலாம்.
இப்படி தினமும் அதிகாலை நீராடி சூரியனை வழிபடுவதன் மூலமாக செல்வந்தராக உயரும் வாய்ப்பு கிடைக்கும் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.
- பீஷ்மர் இறுதி வரை பிரம்மச்சரியத்தை கடைபிடித்தவர்.
- மனதாலும், உடலாலும் மற்றொருவருக்கு செய்வது மட்டுமே தீமை, அநீதி என்றாகாது.
குருச்சேத்திர போர்க்களத்தில் உடல் முழுவதும் அம்புகள் துளைக்கப்பட்டு, அந்த அம்புகளே படுக்கைகளாக மாறிய நிலையில் படுத்திருந்தார், பீஷ்மர். அவரது உடல் முழுவதும் வேதனையில் துடித்தது.
பீஷ்மரின் தந்தை, நீ விரும்பும் நேரத்தில் தான் உன் உயிர் பிரியும்' என்ற வரத்தை பீஷ்மருக்கு அளித்திருந்தார். ஆனால் தற்போது அவர் உடல் அடையும் வேதகனையால், தன் உயிர் இப்போதே பிரிந்தால் என்ன என்ற எண்ணம் அவருக்கு வந்தது.

அப்போது அங்கு வந்த வியாசரிடம், தன்னுடைய இந்த நிலைக்கு என்ன காரணம்? என்று கேட்டார். அதற்கு வியாசர். "ஒருவர் மனதாலும், உடலாலும் மற்றொருவருக்கு செய்வது மட்டுமே தீமை, அநீதி என்றாகாது.
நம் முன்பாக ஒரு கெட்ட செயல் நடக்கும்போது, அதனை தடுக்காமல் இருப்பதும் கூட பாவம் தான். அதற்கான தண்டனையையும் அந்த நபர் அனுபவித்தே ஆக வேண்டும். அதைத்தான் இப்போது நீ அனுபவிக்கிறாய்" என்றார்.
சிறந்த புத்திசாலியான பீஷ்மர், கவுரவ சபையில் திரவுபதிக்கு அநீதி நிகழ்ந்த போது, அதனை கண்டும் காணாமல் இருந்ததால், தனக்கு ஏற்பட்ட விளைவு இது என்பதை உடனடியாக உணர்ந்து கொண்டார். அதனால் வியாசரிடம். "இதற்கு பரிகாரம் ஒன்றும் இல்லையா?" என்று கேட்டார்.

உடனே வியாசர், "ஒருவர், 'தான் செய்தது மகா பாவம்' என்று உணர்ந்து வருந்தும்போதே, அவரது பாவம் அகன்றுவிடும். அதேநேரம் திரவுபதி, கவுரவ சபையில் அனைவரும் முன்னிலையில் காப்பாற்றும்படி கதறும் போது, கேட்காதது போல் இருந்த உன் செவிகள், பாராததுபோல் இருந்த உன் கண்கள். இது அநீதி என்று சொல்லத் தவறிய உன் வாய், அளப்பரிய வீரம் இருந்தும் உபயோகமின்றி இருந்த உன் வலுவான தோள்கள், வாள் எடுத்து எச்சரிக்காத உன் கைகள், இருக்கையில் இருந்து எழாமல் இருந்த உன் கால்கள், நல்லது எது? கெட்டது எது? என்று சிந்திக்கத் தவறிய உன் புத்தி இருக்கும் தலை ஆகியவற்றிற்கு தண்டனை உண்டு. அந்த வேதனையைப் போக்க சூரியனின் அனுக்கிரகம் தேவை" என்றார்.

பின்னர் எருக்கம் இலைகளைக் கொண்டுவரச் செய்து, பீஷ்மரின் கண், காது, வாய், கை,கால், தோள், தலை ஆகிய 7 அங்கங்களையும் அந்த எருக்கம் இலை வேதனை குறைந்தது. கொஞ்சம் கொஞ்சமாக மன அமைதி அடைந்த பீஷ்மர், தான் நினைத்த நொடியிலேயே தன்னுடைய உயிரைத் துறந்தார்.
அப்படி அவர் மரணித்த தினம், ரத சப்தமிக்கு மறுதினமான 'அஷ்டமி திதி' ஆகும். எனவே அதனை 'பீஷ்மாஷ்டமி என்பார்கள்.
பீஷ்மர் இறுதி வரை பிரம்மச்சரியத்தை கடைபிடித்தவர். எனவே பீஷ்மாஷ்டமி அன்று, புனித நீர் நிலைகளுக்குச் சென்று பீஷ்மருக்கும், தன் முன்னோர்களுக்கும் தர்ப்பணம் செய்பவர்களுக்கு எண்ணிய வாழ்க்கை அமையும், வாழ்வில் இன்பம் நிலைபெறும் என்பது ஐதீகம்.
- மினி பிரம்மோற்சவம் எனப்படும் ரத சப்தமி விழா இன்று நடந்தது.
- பக்தர்கள் விண்ணதிரும் வகையில் கோவிந்தா என கோஷங்களை எழுப்பினர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மினி பிரம்மோற்சவம் எனப்படும் ரத சப்தமி விழா இன்று நடந்தது.
இன்று ஒரே நாளில் அதிகாலை முதல் இரவு வரை ஏழுமலையான் 7 வாகனங்களில் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
இன்று அதிகாலை 5.30 மணி முதல் 8 மணி வரை ஏழுமலையான் சூரிய பிரபை வாகனத்தில் 4 மாட வீதிகளில் உலா வந்தார். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் 4 மாட வீதிகளில் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.
அப்போது பக்தர்கள் விண்ணதிரும் வகையில் கோவிந்தா என கோஷங்களை எழுப்பினர்.
இதனைத் தொடர்ந்து 9 மணி முதல் 10 மணி வரை சின்ன சேஷ வாகனத்திலும், 11 மணி முதல் 12 மணி வரை கருட வாகனத்திலும், மதியம் 1 முதல் 2 மணி வரை அனுமந்த வாகனத்தில் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
பகல் 2 மணி முதல் 3 மணி வரை கோவில் வளாகத்தில் உள்ள புஷ்கரணியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்தது.
தீர்த்தவாரி முடிந்தவுடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புஷ்கரணியில் புனித நீராடினர். அசம்பாவித சம்பவங்களை தவிக்க தேவஸ்தானம் சார்பில் நீச்சல் வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.
மாலை 4 மணி முதல் 5 மணி வரை கல்ப விருட்ச வாகனம், 6 மணி முதல் 7 மணி வரை சர்வ பூபால வாகனம், 8 மணி முதல் 9 மணி வரை சந்திரபிரபை வாகனங்களில் ஏழுமலையான் எழுந்தருளிகிறார்.
பக்தர்களை கட்டுப்படுத்துவதற்காக ஆயிரக்கணக்கான போலீசார் மற்றும் திருப்பதி தேவஸ்தான விஜிலன்ஸ் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தன்னார்வலர்கள் மூலம் பக்தர்களுக்கு பால், காபி, உணவு, குடிநீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன. நேரடி இலவச தரிசனத்தில் 18 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.






