என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    இயக்குநர் மகேந்திரன் உடல்நலக்குறைவால் இன்று காலமான நிலையில், அவரது மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார். #Mahendran #RIPMahendran
    இயக்குனர் மகேந்திரன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பலரும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில் கூறியிருப்பதாவது,

    இயக்குநர் மகேந்திரன் மறைவுக்கு நவீன சினிமா கண்ணீர் சிந்துகிறது. செயற்கை நாடகத்தன்மை கொண்ட தமிழ்த் திரைப் படங்களைச் செவ்வியல் தன்மைக்கு உயர்த்திக் காட்டிய இயக்குநர்களில் உன்னதமானவர் மகேந்திரன். தமிழ் சினிமாவுக்கு இந்திய உயரம் கொடுத்தவர். நாவல்களைத் திரைப் படமாக்கிப் படைப்பிலக்கியத்திற்குப் பக்கத்தில் திரைப்படத்தைக் கொண்டுவந்தவர்.


    புதுமைப்பித்தனின் சிற்றன்னை என்ற நாவலைத் தழுவிப் படைக்கப்பட்ட அவரது உதிரிப்பூக்கள் இந்திய சினிமாவின் நல்ல படங்களுள் ஒன்று. ‘வலிகளுக்கு மத்தியில் உள்ள சுகந்தான் வாழ்க்கை’ என்பது மகேந்திரன் படைப்புகளில் உள்ள கலைச் செய்தி.

    இன்னும் நீண்ட காலங்களுக்கு அவர் நினைக்கப்படுவார். இத்தனை பெரிய கலை இயக்குநரின் நதிமூலம் ஒரு பத்திரிகையாளர் என்பது பெருமைக்குரியது. அவரை இழந்துவாடும் குடும்பத்தார்க்கும் கலையன்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டு எனக்கு நானே ஆறுதல் சொல்லிக் கொள்கிறேன்.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். #DirectorMahendran #RIPMahendran #Mahendran 

    மணிரத்னமின் கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் கார்த்தி நடிப்பதாக கூறப்படும் நிலையில், குந்தவையாக கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக கூறப்படுகிறது. #PonniyinSelvan
    கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை படமாக்க பல காலகட்டங்களில் முயற்சிகள் நடந்தன. எம்.ஜி.ஆர், கமல்ஹாசன் ஆகியோருக்கும் இதை படமாக்கும் ஆசை இருந்தது. தொடர்ந்து இயக்குனர் மணிரத்னமும் இந்த முயற்சியில் ஈடுபட்டார்.

    படத்துக்கு பெரிய தொகை செலவிட வேண்டி இருந்தது. நாவலில் இடம் பெற்றுள்ள வந்தியதேவன், ராஜராஜ சோழன், பெரிய பழுவேட்டரையர், ஆழ்வார்க்கடியான், சேந்தன் அமுதன், ஆதித்த கரிகாலன், குந்தவை, வானதி, நந்தினி உள்ளிட்ட கதாபாத்திரங்களுக்கு முன்னணி நடிகர்-நடிகைகளை தேர்வு செய்வதும் சவாலாக இருந்தது.

    இதனால் பட வேலைகளை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இப்போது மணிரத்னம் அனைத்து வேலைகளையும் முடித்து படப்பிடிப்புக்கு தயாராகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. லைகா நிறுவனம் படத்தை தயாரிக்கிறது.



    இந்த படத்தில் வந்தியதேவன் கதாபாத்திரத்துக்கு கார்த்தியும், குந்தவை கதாபாத்திரத்தில் நடிக்க கீர்த்தி சுரேசும் தேர்வாகி உள்ளனர். விக்ரம், ஜெயம்ரவி, அமிதாப்பச்சன், மோகன்பாபு ஆகியோரும் இந்த படத்தில் நடிக்கின்றனர். விக்ரம் ஜோடியாக வானதி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் நடிப்பார் என்று தெரிகிறது.

    கீர்த்தி சுரேசிடம் சமீபத்தில் மணிரத்னம் கதை சொன்னதும் உடனே நடிக்க ஒப்புக்கொண்டார். தற்போது மலையாளத்தில் மோகன்லால் ஜோடியாக அரபிக்கடலன்டே சிம்ஹம் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து முடித்துள்ளார். அமித் சர்மா இயக்கும் இந்தி படத்திலும் நடிக்க உள்ளார். அதன்பிறகு பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பை வருகிற டிசம்பர் மாதம் தொடங்க திட்டமிட்டு உள்ளனர். #PonniyinSelvan

    இயக்குநர் மகேந்திரன் உடல்நலக்குறைவால் இன்று காலமான நிலையில், அவரது மறைவுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். #Mahendran #RIPMahendran #MKStalin
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

    தமிழ் திரையுலக இயக்குநர்களில் “கதாநாயகராக” விளங்கிய சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல இயக்குநர் மகேந்திரன் தனது 79-வது வயதில் சென்னையில் மறைந்து விட்டார் என்ற சோகச்செய்தி கேட்டு மிகுந்த துயரத்திற்குள்ளானேன். அவரது மறைவிற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

    வாழ்நாள் முழுவதும் எளிமைக்கு “இலக்கணமாக” விளங்கிய அவர் ஒரு “யதார்த்த சினிமா இயக்குநர்” என்று திரையுலகில் இமயத்திற்கு நிகரான பெயரைப் பெற்றவர்.


    தமிழ் உலகின் தலைசிறந்த கதாநாயகர்களுக்கு எல்லாம் திரைக்கதை வசனம் எழுதி தனி முத்திரை பதித்தவர்! மகேந்திரன் கதை வசனம் எழுதி, இயக்கிய சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த “முள்ளும் மலரும்” திரைப்படம் இன்றைக்கும் “அண்ணன்- தங்கை பாசத்திற்கு” அடையாளமாகவும், அத்தாட்சியாகவும் திகழ்வதை நாம் காண்கிறோம்.

    அழகப்பா கல்லூரியில் படித்த காலத்திலேயே கையெழுத்துப் பத்திரிகை நடத்தி மாணவர்கள் மத்தியில் பிரபலமானவர் மட்டுமல்ல “துக்ளக்” போன்ற பத்திரிகையில் சினிமா விமர்சனமும் எழுதியவர். இளம் இயக்குநர்களுக்கு எல்லாம் மிகச் சிறந்த உதாரணமாகவும் எதிர்காலத் தலைமுறையினருக்கு வழிகாட்டியாகவும் திகழ்ந்த அவர் உதிரிப்பூக்கள், ஜானி, கை கொடுக்கும் கை, மட்டுமின்றி லேட்டஸ்டாக வெளிவந்த தெறி, பேட்ட படங்களிலும் தனி முத்திரை பதித்து தமிழ் திரைப்படத்துறைக்கு பெருமை சேர்த்த இயக்குநர்களில் மிக முக்கியமானவர்.

    பத்திரிகையாசிரியர், திரைப்பட வசனகர்த்தா, இயக்குநர், நடிகர் என்று பன்முகத்திறமை கொண்ட அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், தமிழ் திரையுலகிற்கும் எனது அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Mahendran #RIPMahendran #MKStalin
    ஜி.வி.பிரகாஷ் - பார்த்திபன் நடிப்பில் உருவாகி இருக்கும் குப்பத்து ராஜா படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில், பார்த்திபன் பேசும் போது, பாபா பாஸ்கர் படம் பிடித்ததை விட அடம் பிடித்ததே அதிகம் என்றார். #KuppathuRaja #Parthiban
    எஸ் ஃபோகஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ்குமார், பார்த்திபன், பல்லக் லால்வானி, பூனம் பாஜ்வா, யோகிபாபு நடிக்க, பாபா பாஸ்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் `குப்பத்து ராஜா'. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கும் இந்த படம் வருகிற ஏப்ரல் 5-ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு பேசினர்.

    பார்த்திபன் பேசும் போது,

    எஸ் ஃபோகஸ் பெயருக்கு ஏற்ற மாதிரியே மிகவும் ஃபோகஸ் உடன் படத்தை மிக கவனமாக எடுத்திருக்கிறார்கள். இயக்குனர் ஒரு ஹிட்லர் மாதிரி, அவர் படம் பிடித்ததை விட அடம் பிடித்ததே அதிகம். அவர் நினைத்ததை செய்யட்டும் என நினைப்பவன் நான். கதை கேட்கும்போது நிறைய நல்ல கதைகளை முதல் 10 நிமிடங்களிலேயே உணர்ந்திருக்கிறேன். இதில் அந்த உணர்வு கிடைத்தது. இது வெறும் தர லோக்கல் படம் மட்டுமல்ல, தரமான லோக்கல் படம். 



    எம்.ஜி.ராஜேந்திரன் என்ற கதாபாத்திரத்தில் தொப்பி அணிந்து நடிக்கலாமா என்ற ஒரு குழப்பம் எனக்குள் இருந்தது. ஆனால் அந்த கதாபாத்திரம் மிகவும் நல்லவர். யாரையும் தவறாக சித்தரிக்கும் கதாபாத்திரம் இல்லை என்பதால் நடித்தேன். ஆயிரத்தில் ஒருவன் படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையை பார்த்து மிரண்டிருக்கிறேன். அவர் நடிப்பும் சிறப்பாகவே இருக்கிறது. பாலய்யா, எஸ்வி சுப்பையா மாதிரி நடிகர்கள் இந்த காலத்தில் இல்லையே என்ற ஏக்கத்தை எம் எஸ் பாஸ்கர் போக்கியிருக்கிறார் என்றார். #KuppathuRaja #GVPrakashKumar #Parthiban #PalakLalwani #PoonamBajwa

    இயக்குநர் மகேந்திரன் உடல்நலக்குறைவால் இன்று காலமான நிலையில், அவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #Mahendran #RIPMahendran
    தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற இயக்குனரான மகேந்திரன் (79) சிறுநீரக கோளாறு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார்.

    உதிரிப்பூக்கள், முள்ளும் மலரும், ஜானி, காளி, கை கொடுக்கும் கை உள்ளிட்ட பல படங்களை இயக்கியிருக்கிறார். மகேந்திரன் இயக்கிய நெஞ்சத்தை கிள்ளாதே திரைப்படம் 3 தேசிய விருதுகளை பெற்றுள்ளது. பல படங்களில் நடித்தும் இருக்கிறார். இவரது படங்கள் பல்வேறு இளம் இயக்குநர்களுக்கு சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தை கொடுத்துள்ளது. இவரது மறைவுக்கு திரைப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


    இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், திரைப்பட இயக்குநர்கள் பலருக்கும் முன்னோடியாக திகழ்ந்த இயக்குநர் மகேந்திரனின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை தருகிறது. நீங்களும், உங்களது படங்களும் என்றென்றும் எங்களது இதயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஐயா. என்று குறிப்பிட்டுள்ளார்.

    இயக்குநர் சீனு ராமசாமி, தமிழ் சினிமாவின் இலக்கிய பூ உதிர்ந்து விட்டது. வரலாறு மறக்க முடியாத  இந்திய சினிமாவிற்கு பெருமை சேர்த்த தமிழ் படைப்பாளி என் முன்னோடி ஆசான் இயக்குனர் மகேந்திரன் அவர்கள். இதய அஞ்சலி சார்.

    இயக்குநர் பார்த்திபன், முள்ளும் மலரும் மரணம்?
    இன்னும் நூறு வருடமாவது 
    வாழும் மகேந்'திறன்'!!!


    இயக்குநர் சேரன் ட்விட்டரில், முள்ளும் மலரும் என்று சொன்ன நீங்கள் மீண்டும் மலரவேண்டும். உதிரிப்பூக்கள் எடுத்த நீங்கள் எங்கள் இதயத்தில் என்றும் உதிராப்பூக்கள்.... உங்கள் படைப்புகளோடு என்றும் எங்களோடு வாழ்வீர்கள்... நீங்கள் இல்லையென்ற செய்தி வந்தபோது உங்கள் படைப்புகளின் ஆயிரம் காட்சிகள் கோர்வையாக வந்துபோகிறது.


    இயக்குநரும், நடிகருமான மனோபாலா, ஒரு நாள் முன்னதாக அவரை சந்தித்தேன். அருமையான மனிதர். அவர் தன் கண்களை திறந்து மூடினார். இளைஞர்களுக்கான முன்னோடி, அவரது ஆத்மா அமைதியடையட்டும்.


    இயக்குநர் லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் தனது ட்விட்டரில், எங்கள் காலத்தின் ஆகச்சிறந்த படைப்பாளரான மகேந்திரன் அவர்களுக்கு எனது வேண்டுதலும், மரியாதையும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர். #DirectorMahendran #RIPMahendran #Mahendran 

    பிரபல திரைப்பட இயக்குனர் மகேந்திரன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். #Mahendran
    தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற இயக்குனர் மகேந்திரன் (79). சிறுநீரக கோளாறு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மகேந்திரன், சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார். 

    மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரன் அவரது ட்விட்டர் பக்கத்தில் இதனை தெரிவித்துள்ளார்.


    மகேந்திரன் இயக்கிய உதிரிப்பூக்கள் என்ற திரைப்படம் தமிழ் திரையுலக வரலாற்றின் மிகச் சிறந்த படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இவர் ரஜினியை வைத்து முள்ளும் மலரும், ஜானி, காளி, கை கொடுக்கும் கை உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர். சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான தெறி, ரஜினியின் பேட்ட, விஜய்சேதுபதியின் சீதக்காதி, அதர்வாவின் பூமராங் உள்ளிட்ட பல படங்களில் முக்கிய தோற்றத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மகேந்திரனின் மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #DirectorMahendran #RIPMahendran

    வெங்கட் பிரபு தயாரிப்பில் சரவண ராஜன் இயக்கத்தில் வைபவ் நடிப்பில் உருவாகி இருக்கும் `ஆர்.கே.நகர்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #RKNagar #Vaibhav
    இயக்குனர் வெங்கட் பிரபு தனது பிளாக் டிக்கெட் கம்பெனி நிறுவனம் மூலம் தயாரித்துள்ள `ஆர்.கே.நகர்'. சரவண ராஜன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் வைபவ் நாயகனாகவும், சனா அல்தாஃப் நாயகியாகவும் நடித்துள்ளனர்.

    இனிகோ பிரபாகரன், சம்பத் ராஜ், அஞ்சனா கீர்த்தி, சந்தான பாரதி, சுப்பு பஞ்சு, கருணாகரன், அரவிந்த் ஆகாஷ், டி.சிவா, ஸ்ரீகுமார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அரசியல் கலந்த காமெடி படமாக உருவாகி இருக்கும் இந்த படம் வருகிற ஏப்ரல் 12-ந் தேதி திரைக்கு வரவிருப்பதாக வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


    பிரேம்ஜி அமரன் இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கு வெங்கடேஷ்.எஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரவீன்.கே.எல். படத்தொகுப்பையும், விதேஷ் கலை பணிகளையும் மேற்கொண்டுள்ளனர். #RKNagar #Vaibhav #SanaAlthaf

    தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் சமந்தா திருமணத்திற்கு பிறகும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நிலையில், தனது சம்பளத்தை உயர்த்தியிருக்கிறாராம். #Samantha
    சென்னையில் பிறந்து வளர்ந்த சமந்தாவின் அம்மா மலையாளம், அப்பா தெலுங்கு. சென்னை பல்லாவரத்தில் வளர்ந்த சமந்தா, ஹோலி ஏஞ்செல்ஸ் பள்ளியில் படித்தவர். ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் பி.காம் படித்த சமந்தா, அப்போதே தனது செலவுகளுக்காக மாடலிங் துறையைத் தேர்வுசெய்து சில விளம்பரங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

    1940-களில் ஹாலிவுட்டில் பெரும் புகழுடன் இருந்த நடிகை ஆட்ரே ஹெப்பர்ன் தான் சமந்தாவின் ரோல் மாடல். தமிழில் ரேவதி நடித்த படங்கள் இவரது பேவரிட். கண்ணாடி முன்பாக நின்று நடித்துப் பழகும்போது பேசுகிற வசனங்கள், இவர்கள் இருவரது வசனங்களாகத்தான் இருக்கும் என்று கூறி இருக்கிறார், சமந்தா. இரண்டு கோடி ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த சமந்தா, ‘யூ டர்ன்’ படத்துக்குப் பிறகு தனது சம்பளத்தை இரண்டரைக் கோடி ரூபாயாக உயர்த்தியிருக்கிறார்.



    மலையாளத்தில் ‘அம்மா’ அமைப்பைப் போல், தமிழ் சினிமா நடிகைகளுக்கு ஏற்படும் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு ஓர் அமைப்பை நிறுவ இருக்கின்றனர், தமிழ் நடிகைகள். அதில், சமந்தாவுக்கு முக்கியப் பொறுப்புத் தரப்பட இருக்கிறது. #Samantha

    விஜய் குமார் இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகி இருக்கும் `உறியடி 2' படத்தின் முன்னோட்டம். #Uriyadi2 #VijayKumar
    2டி என்டர்டெயிண்மென்ட் சார்பில் நடிகர் சூர்யா தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `உறியடி 2'.

    விஜய் குமார் நாயகனாகவும், விஸ்மயா நாயகியாகவும் நடித்துள்ள இந்த படத்தில் சுதாகர், ஷங்கர் தாஸ், அப்பாஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    ஒளிப்பதிவு - பிரவீன் குமார்.என், இசை - கோவிந்த் வசந்தா, படத்தொகுப்பு - லினு.எம், கலை - ஏழுமலை ஆதிகேசவன், சண்டைப்பயிற்சி - விக்கி, ஒலி வடிவமைப்பு - ஆர்.கிருஷ்ணமூர்த்தி, பாடல்கள் - விஜய் குமார் & நாகராஜி, வி.எஃப்.எக்ஸ் - ரமேஷ் ராவ் & ஜஹிர் அஹமத், ஆடை வடிவமைப்பு - ஆர்.கீர்த்திவாசன், தயாரிப்பு மேற்பார்வை - பி.செந்தில் குமார், தயாரிப்பு மேலாளர் - விஜய்.ச, இணை தயாரிப்பு - ராஜ்சேகர் கற்பூரசுந்தரபாண்டியன் & விஜய் குமார், தயாரிப்பு - சூர்யா, எழுத்து & இயக்கம் - விஜய் குமார்.



    படம் பற்றி இயக்குநர் கூறும்போது,

    "தற்போதைய சமூகத்தில் சாதிப்பிரிவினை தான் பெரும் பிரச்சனை. அதுதான் உறியடி, உறியடி 2 வருவதற்கான காரணம். எனக்குக் கம்யூனிச சிந்தனையோ, புத்தகம் படிக்கிற பழக்கமோ இல்லை. எனக்கு ரொம்ப பிடிச்சது சினிமா. அதை ஆத்மார்த்தமா கொடுக்கிறது தான் என் திறமைக்கு நான் கொடுக்குற மரியாதை. களத்துல இறங்கி மக்களுக்காக நான் எதுவும் செய்யவில்லை. ஆனா, மக்களைச் சுலபமா அணுகுற விசயம் சினிமா. சாதி அரசியலையும், சாதிய ஒடுக்கு முறைகளையும் கேள்வி கேட்டு அதற்கான தீர்வைச் சொல்லும் படமாக உறியடி 2 வந்துள்ளது.

    இந்த படம் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இல்லாமல் வேறுவிதமாக உருவாக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தில் நடித்த நடிகர்கள், சுதாகர் உள்ளிட்ட யூடியூப் பிரபலங்களும் நடித்திருக்கிறார்கள். உறியடியில் பணிபுரிந்த தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் இதிலும் பணிபுரிந்துள்ளனர் என்றார்.

    படம் வருகிற ஏப்ரல் 5-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது. #Uriyadi2 #VijayKumar #Vismaya

    உறியடி 2 டிரைலர்:

    அறிமுக இயக்குநர் குமரன் இயக்க கதிர் நாயகனாக நடிக்கும் ஜடா படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், படத்தின் டப்பிங் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #Jada #Kathir
    பரியேறும் பெருமாள், சிகை, சத்ரு படங்களை தொடர்ந்து கதிர் தற்போது ஜடா, விஜய்யுடன் இணைந்து தளபதி 63 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

    இதில் ஜடா படத்தை அறிமுக இயக்குநர் குமரன் இயக்குகிறார். இதில் கதிர் கால்பந்தாட்ட வீரராக நடித்திருக்கிறார். ரோஷினி நாயகியாகவும், சமுத்திரக்கனி, யோகி பாபு, கார்த்திக் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடிக்கின்றனர்.



    தமிழகத்தைச் சேர்ந்த கால்பந்து விளையாட்டு வீரர் ஒருவனின் வாழ்க்கையில் நடக்கும் சுவாரஸ்யமான நிகழ்வுகளையும், சமூகத்தில் நடக்கும் பிரச்சினைகளையும் பேசுகிற படமாக இந்த படம் உருவாகி இருக்கிறது. படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், படத்தின் டப்பிங் பணிகள் தற்போது தொடங்கியிருக்கிறது. நடிகர் கதிர் தனது காட்சிகளுக்கான டப்பிங்கிற்காக பணியாற்றி வருகிறார்.

    பொயட் ஸ்டுடியோ மற்றும் சனா ஸ்டுடியோ இணைந்து தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.சூர்யா ஒளிப்பதிவு செய்ய, சாம்.சி.எஸ். இசையமைக்கிறார். ரிச்சர்ட் கெவின் படத்தொகுப்பை கவனிக்கிறார். படத்தின் டிரைலர் மற்றும் இசை விரைவில்  வெளியாக இருக்கிறது. #Jada #Kathir

    பிரபல தெலுங்கு இயக்குநர் ராம் கோபால் வர்மா இயக்கத்தில் சசிகலாவின் வாழ்க்கை படமாக உருவாகி இருக்கும் நிலையில், அதற்கான பணிகள் விரைவில் துவங்கவிருப்பதாக வர்மா கூறியிருக்கிறார். #SasikalaBiopic
    தெலுங்கு இயக்குனர் ராம்கோபால் வர்மா சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றவர். ஆந்திராவில் என்.டி.ஆர் வாழ்க்கையை மையமாக வைத்து அவரது மகன் பாலகிருஷ்ணா நடித்து, தயாரித்த படங்களான ‘என்.டி.ஆர் கதாநாயகுடு’ மற்றும் ‘என்.டி.ஆர் மகாநாயகுடு’ 2 படங்களும் படுதோல்வியை சந்தித்தன. இதனை தொடர்ந்து ராம் கோபால் வர்மா தனது இயக்கத்தில் ‘லட்சுமியின் என்.டி.ஆர்’ என்ற படத்தை இயக்கத் தொடங்கினார்.

    பாலகிருஷ்ணா தயாரித்த படத்தில் ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடுவை நல்லவிதமாக காட்டி இருப்பதாகவும், ஆனால் தான் உண்மைத் தகவல்களை வைத்து இயக்கி வருவதாகவும் ராம்கோபால் வர்மா தரப்பில் தகவல் வெளியானது.

    இதனால் ஆந்திர அரசியல் களத்தில் பெரும் சர்ச்சை உருவானது. ஆந்திராவில் படம் வெளியிட தடை விதிக்கப்பட்டது. ஆந்திராவில் வெளியிடுவது தொடர்பாக ராம்கோபால் வர்மா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர இருக்கிறார்.

    இந்த சர்ச்சை ஒரு பக்கம் இருக்க ராம்கோபால் வர்மா சசிகலா வாழ்க்கை வரலாற்றையும் கையில் எடுத்துள்ளார். ‘அறிவிப்பதில் சந்தோ‌ஷப்படுகிறேன். விரைவில்’ என்று ட்வீட் செய்து அதனுடன் சசிகலா பயோபிக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளார்.


    ராம் கோபால் வர்மாவின் இந்த திடீர் அறிவிப்பு சமூக வலைதளத்திலும் பெரும்சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.

    ராம்கோபால் வர்மா 2017-ம் ஆண்டு ‘சசிகலா’ பயோபிக் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். ஆனால் அதற்குப் பிறகு பல்வேறு படங்களை இயக்கி வந்ததால், ‘சசிகலா’ பயோபிக் குறித்து எந்த வொரு தகவலையும் வெளியிடாமல் இருந்து வந்தார்.

    ராம்கோபால் வர்மா சசிகலா பற்றி கூறும்போது ‘சசிகலா படம், சசிகலாவின் பின்புலம் பற்றிய கதையின் கதையாக இருக்கும். ஜெயலலிதாவின் ஆன்மா சசிகலாவின் சிறை அறைக்கு வரும் என நான் நிச்சயமாக நினைக்கிறேன். போயஸ் கார்டன் பணியாளர்கள் சொன்னதின் படி, ஜெயலலிதா, சசிகலாவுக்கு இடையே இருந்த உறவுக்குப் பின் இருக்கும் உண்மை, நினைத்துப் பார்க்க முடியாத அளவு இருக்கிறது. அதை என் படத்தில் காட்டுவேன்’.

    இவ்வாறு ராம் கோபால் வர்மா தெரிவித்து இருக்கிறார். #SasikalaBiopic

    தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்திற்கு வரவேற்பும், கண்டனமும் எழுந்து வரும் நிலையில் நடிகர் நட்டியும் சூப்பர் டீலக்ஸ் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். #SuperDeluxe
    தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் கடந்த மார்ச் 29-ந் தேதி வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. விஜய் சேதுபதி, சமந்தா, பகத் பாசில், ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின், பகவதி பெருமாள் என நட்சத்திரப் பட்டாளங்கள் பலரும் நடித்திருக்கும் இந்தப் படம் பலதரப்பட்ட விமர்சனங்களை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. 

    ஒரு தரப்பினர் படத்தை கொண்டாடி வரும் வேளையில் மற்றும் சிலர் படம் குறித்து கடுமையான விமர்சினங்களை வெளியிட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் ‘சதுரங்க வேட்டை’ நடிகர் நட்டி நட்ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘சூப்பர் டீலக்ஸ்’ பற்றி தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார். அதில்,’’அசிங்கங்களையும் அவலங்களையும் போற்றுவது தான் தரமா?... விலகி நிற்க விரும்புகின்றேன் இந்த தரங்களுடன்’’ என்று குறிப்பிட்டுள்ளார். #SuperDeluxe #VijaySethupathi #FahadhFassil #Samantha

    ×