என் மலர்
சினிமா

அவர் படம் பிடித்ததை விட அடம் பிடித்ததே அதிகம் - படவிழாவில் பார்த்திபன் பேச்சு
ஜி.வி.பிரகாஷ் - பார்த்திபன் நடிப்பில் உருவாகி இருக்கும் குப்பத்து ராஜா படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில், பார்த்திபன் பேசும் போது, பாபா பாஸ்கர் படம் பிடித்ததை விட அடம் பிடித்ததே அதிகம் என்றார். #KuppathuRaja #Parthiban
எஸ் ஃபோகஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ்குமார், பார்த்திபன், பல்லக் லால்வானி, பூனம் பாஜ்வா, யோகிபாபு நடிக்க, பாபா பாஸ்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் `குப்பத்து ராஜா'. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கும் இந்த படம் வருகிற ஏப்ரல் 5-ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு பேசினர்.
பார்த்திபன் பேசும் போது,
எஸ் ஃபோகஸ் பெயருக்கு ஏற்ற மாதிரியே மிகவும் ஃபோகஸ் உடன் படத்தை மிக கவனமாக எடுத்திருக்கிறார்கள். இயக்குனர் ஒரு ஹிட்லர் மாதிரி, அவர் படம் பிடித்ததை விட அடம் பிடித்ததே அதிகம். அவர் நினைத்ததை செய்யட்டும் என நினைப்பவன் நான். கதை கேட்கும்போது நிறைய நல்ல கதைகளை முதல் 10 நிமிடங்களிலேயே உணர்ந்திருக்கிறேன். இதில் அந்த உணர்வு கிடைத்தது. இது வெறும் தர லோக்கல் படம் மட்டுமல்ல, தரமான லோக்கல் படம்.

எம்.ஜி.ராஜேந்திரன் என்ற கதாபாத்திரத்தில் தொப்பி அணிந்து நடிக்கலாமா என்ற ஒரு குழப்பம் எனக்குள் இருந்தது. ஆனால் அந்த கதாபாத்திரம் மிகவும் நல்லவர். யாரையும் தவறாக சித்தரிக்கும் கதாபாத்திரம் இல்லை என்பதால் நடித்தேன். ஆயிரத்தில் ஒருவன் படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையை பார்த்து மிரண்டிருக்கிறேன். அவர் நடிப்பும் சிறப்பாகவே இருக்கிறது. பாலய்யா, எஸ்வி சுப்பையா மாதிரி நடிகர்கள் இந்த காலத்தில் இல்லையே என்ற ஏக்கத்தை எம் எஸ் பாஸ்கர் போக்கியிருக்கிறார் என்றார். #KuppathuRaja #GVPrakashKumar #Parthiban #PalakLalwani #PoonamBajwa
Next Story






