என் மலர்tooltip icon

    கார்

    • யூனிட் உடன் மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் வழங்கப்படுகிறது.
    • மேனுவல் அல்லது சி.வி.டி. கியர் பாக்ஸ் உள்ளது.

    நிசான் நிறுவனம், தன்னுடைய மேக்னைட் காரில் புதிய குரோ எடிஷனை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. குரோ என்றால் ஜப்பானிய மொழியில் கருப்பு எனப் பொருள். பெயருக்கேற்ப முழுக்க முழுக்க கருப்பு வண்ணத்தில் மேக்னைட் எஸ்.யு.வி. அடிப்படையில் இந்தக் கார் உருவாக்கப்பட்டுள்ளது.

    கேபின், டேஷ் போர்ட் ஸ்டீரிங் வீல், கன்சோல், ரூஃப், முன்புற கிரில், பம்பர், அலாய் வீல்கள் என அனைத்தும் கருப்பு வண்ணத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

    இதில் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 71 எச்.பி. பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இந்த யூனிட் உடன் மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் வழங்கப்படுகிறது. இதன் 1.0 லிட்டர் டர்போ பெட்ரால் எஞ்சின் வேரியண்ட் அதிகபட்சமாக 98 எச்.பி. பவரை வெளிப்படுத்தும். இதில் மேனுவல் அல்லது சி.வி.டி. கியர் பாக்ஸ் உள்ளது.

    இந்த காரில் டுயல் டிஜிட்டல் ஸ்கிரீன், அர்காமிஸ் சவுண்ட் சிஸ்டம், ஆட்டோ-டிம்மிங் வசதியுடன் கூடிய ரியர் வியூ மிரர், கிளைமேட் கண்ட்ரோல், பின்புற இருக்கைகளுக்கு ஏ.சி. வெண்ட்கள் உட்பட பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

    புதிய மேக்னைட் மாடலின் விலை சுமார் ரூ.8.3 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டாப் வேரியண்டான 1.0 லிட்டர் சி.வி.டி. சுமார் ரூ.10.86 லட்சம். ரூ.11 ஆயிரம் செலுத்தி காரை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    • இந்திய சந்தையில் விற்கப்படும் மிகச் சில மலிவு விலை கூப்-எஸ்யூவி-களில் சிட்ரோயன் பசால்ட் மாடலும் ஒன்றாகும்.
    • யூனிட் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் கிடைக்கிறது.

    சிட்ரோயன் இந்தியா நிறுவனம், தனது பசால்ட், ஏர்-கிராஸ் மற்றும் சி3 உள்ளிட்ட மாடல்கள், வடிவமைப்பு அடிப்படையில் புதுப்பிப்பு மற்றும் அம்சப் பட்டியலில் மாற்றங்கள் செய்யப்படும் என்று அறிவித்துள்ளது. இந்தப் புதுப்பிப்பின் மூலம், மூன்று மாடல்களின் விற்பனையையும் மேம்படுத்த நிறுவனம் இலக்கு வைத்துள்ளது.

    இருப்பினும், இந்த மாடல்களின் வெளியீட்டு காலக்கெடுவை நிறுவனம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இது அதன் '2.0 - ஷிப்ட் டு சேஞ்ச்' என்ற உத்தியின் ஒரு பகுதியாக வருகிறது.

    பயணிகள் வசதியை மேம்படுத்தும் வகையில் தோற்றம் மற்றும் தொழில்நுட்பத்தில் திருத்தங்கள் வடிவில் புதுப்பிப்புகள் இருக்கும் என்று சிட்ரோயன் நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய மாடல்களில் ஏற்படும் மாற்றங்கள் நுகர்வோர் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இந்திய சந்தையில் விற்கப்படும் மிகச் சில மலிவு விலை கூப்-எஸ்யூவி-களில் சிட்ரோயன் பசால்ட் மாடலும் ஒன்றாகும். இதன் ஆரம்ப விலை ரூ.8.32 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். இந்தியாவில் பசால்ட் இரண்டு வித எஞ்சின் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது. இவற்றில் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்ட 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஒன்றாகும். மற்றொன்று 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் எஞ்சின் ஆகும். இந்த யூனிட் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் கிடைக்கிறது.

    இதற்கிடையில், ஏர்-கிராஸ் பல்வேறு வகை நுகர்வோருக்கு சேவை செய்கிறது மற்றும் ரூ.8.62 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) தொடக்க விலையில் வருகிறது. இதற்கிடையில், C3 தான் இந்த வரம்பில் மிகவும் மலிவு மற்றும் சிறியது. இது ரூ.6.23 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) தொடக்க விலையில் விற்கப்படுகிறது.

    இந்த உத்தி சிட்ரோயனின் சில்லறை மற்றும் சேவை வலையமைப்பின் முக்கிய வளர்ச்சியுடன் ஒத்துப்போகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் சிட்ரோயன் நிறுவனம் தனது விற்பனையகங்கள் எண்ணிக்கையை 80 இலிருந்து 150 ஆக அதிகரிக்க இலக்கு வைத்துள்ளது.

    • சி.என்.ஜி. என்பது கம்பிரஸ்ட் நேச்சுரல் கேஸ் எனப்படும் இயற்கை எரிவாயுவில் இயங்கக்கூடியது.
    • பெட்ரோல் விலையைவிட கொஞ்சம் குறைவானது.

    ஆட்டோமொபைல் சந்தையில் பெட்ரோல், டீசல் கார்களுடன் எலெக்ட்ரிக், சி.என்.ஜி. கார்களும் விற்பனையாகின்றன. எலெக்ட்ரிக் மோகம் அதிகரித்திருந்தாலும், சி.என்.ஜி. மாடல் கார்களின் விற்பனை கொஞ்சம் மந்தமாகவே இருக்கின்றன.

    உண்மையில், சி.என்.ஜி. கார்களை நம்பி தைரியமாக வாங்கலாம். ஏனெனில் சி.என்.ஜி. என்பது கம்பிரஸ்ட் நேச்சுரல் கேஸ் எனப்படும் இயற்கை எரிவாயுவில் இயங்கக்கூடியது. இது சுற்றுப்புறச்சூழலுக்கு ஏற்றது. பெட்ரோல் விலையைவிட, கொஞ்சம் குறைவானது. அதிக மைலேஜ் தரக்கூடியது.

    அதனால் பெட்ரோல், டீசல் கார்களுக்கு மாற்றாக எலெக்ட்ரிக் மட்டுமல்ல, சி.என்.ஜி. கார்களையும் துணிந்து வாங்கலாம். செயல்பாடுகளும் திருப்திகரமாக இருக்கும்.

    • 1.5 லிட்டர், 3-சிலிண்டர் டர்போ-பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.
    • 7-ஸ்பீடு டூயல்-கிளட்ச் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

    பி.எம்.டபிள்யூ. நிறுவனம் புதியதாக 2-சீரிஸ் கிரான் கூபே சொகுசு காரை அறிமுகம் செய்துள்ளது. இருவிதமான வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த காரில் 1.5 லிட்டர், 3-சிலிண்டர் டர்போ-பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.

    இந்த யூனிட் அதிகபட்சமாக 156 ஹெச்.பி. பவர் மற்றும் 230 நியூட்டன் மீட்டர் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய இந்த எஞ்சினுடன் 7-ஸ்பீடு டூயல்-கிளட்ச் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

    கிட்னி வடிவ கிரில் அமைப்பு, 10.7 இன்ச் இன்போடெயின்மெண்ட் ஸ்கிரீன், 10.25 இன்ச் டிரைவர் டிஸ்பிளே, கேபின் கேமரா போன்ற சிறப்பு அம்சங்களை கொண்டிருக்கிறது. இந்த கார் ரூ.46.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்கிற ஆரம்ப விலையில் விற்பனைக்கு வந்திருக்கிறது.

    • வி.எப்.7 மாடலை போலவே, எஸ்.யூ.வி. வகையை சேர்ந்தது தான் வி.எப்.6 மாடல்.
    • இதில் 59.6 கிலோவாட்ஸ் ஹவர் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதன் சக்கர அளவு, 18 இன்ச் ஆகும்.

    வியட்நாமை சேர்ந்த வின்பாஸ்ட் நிறுவனம் தூத்துக்குடியில் உற்பத்தி ஆலை அமைத்து எலெக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்து வருகிறது. அந்தவகையில், வி.எப்.6 மற்றும் வி.எப். 7 ஆகிய எலெக்ட்ரிக் கார்கள் சந்தையில் அறிமுகமாகி உள்ளன.

    வின்பாஸ்ட் வி.எப்.7

    வின்பாஸ்ட் நிறுவனத்தின் வி.எப்.7 எலெக்ட்ரிக் கார் 70.8 கிலோவாட்ஸ் ஹவர் பேட்டரி பேக்குடன் சந்தைக்கு வந்திருக்கிறது. 19 இன்ச் சக்கரங்கள், லெவல்-2 ADAS பாதுகாப்பு, வண்ணமயமான ஹெட் அப் டிஸ்பிளே, எல்.இ.டி. விளக்குகள், டியூல் சோன் ஏ.சி., வேகான் லெதர் உள் அலங்காரங்கள், முன்பக்க இருக்கையில் வென்டிலேஷன் வசதி, எட்ஜ் டூ எட்ஜ் பனோரமிக் ரூப் என செயல்திறனிலும், வடிவமைப்பிலும் சிறப்பானதாக, இந்த எலெக்ட்ரிக் காரை தயாரித்துள்ளனர்.



    வின்பாஸ்ட் வி.எப்.6

    வி.எப்.7 மாடலை போலவே, எஸ்.யூ.வி. வகையை சேர்ந்தது தான் வி.எப்.6 மாடல். இதில் 59.6 கிலோவாட்ஸ் ஹவர் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதன் சக்கர அளவு, 18 இன்ச் ஆகும். இதிலும் லெவல்-2 ADAS பாதுகாப்பு வசதிகள் நிறைந்துள்ளன. இத்துடன் முழுமையாக எல்.இ.டி. லைட்டிங், கனெக்டட் கார் வசதி, ஹெட் அப் டிஸ்பிளே, இருவண்ண உள் அலங்காரம், பரந்து விரிந்த பனோரமிக் ரூப் உள்ளிட்ட சிறப்பம்சங்கள் நிறைந்துள்ளன.

    • அனைத்துப் பிரிவுகளிலும் நாட்டில் அதிகம் விற்பனையாகும் மாடலாக உருவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • இந்த காலகட்டத்தில் 1,17,458 யூனிட்கள் விற்பனை.

    ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் (HMIL) அதன் SUV, ஹூண்டாய் க்ரெட்டா ஜனவரி முதல் ஜூலை 2025 வரை அனைத்துப் பிரிவுகளிலும் நாட்டில் அதிகம் விற்பனையாகும் மாடலாக உருவெடுத்துள்ளதாகக் தெரிவித்துள்ளது.

    இந்த காலகட்டத்தில் 1,17,458 யூனிட்கள் விற்பனையாகி, ஆண்டுக்கு ஆண்டு 8% வளர்ச்சியுடன் (ஜனவரி முதல் ஜூலை 2024 வரை), ஹூண்டாய் க்ரெட்டா தொடர்ந்து "இந்திய வாகன நிலப்பரப்பில் ஆதிக்கம் செலுத்தி, வாடிக்கையாளர்களிடையே ஒரு சிறந்த தேர்வாக அதன் நற்பெயரை உறுதிப்படுத்துகிறது" என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட்டின் முழுநேர இயக்குநரும் தலைமை இயக்க அதிகாரியுமான தருண் கார்க் கூறுகையில், "ஹூண்டாய் கிரெட்டாவின் பத்தாண்டுகளைக் கொண்டாடும் வேளையில், எங்கள் வாடிக்கையாளர்களின் அசைக்க முடியாத அன்பு மற்றும் நம்பிக்கையால் நாங்கள் உண்மையிலேயே பணிவுடன் இருக்கிறோம். ஜனவரி - ஜூலை 2025 காலகட்டத்தில் அனைத்துப் பிரிவுகளிலும் இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் காராக மாறுவது ஒரு விற்பனை மைல்கல் மட்டுமல்ல, பல ஆண்டுகளாக கிரெட்டா உருவாக்கிய உணர்ச்சிபூர்வமான தொடர்பையும் இது பிரதிபலிக்கிறது.

    நாங்கள் முன்னேறும்போது, வாடிக்கையாளர் அனுபவத்தைத் தொடர்ந்து உயர்த்துவதில் எங்கள் உறுதிப்பாடு உறுதியாக உள்ளது" என்று அவர் கூறினார்.

    • ஆப்பிள் கார்-பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி கொண்ட 8 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொண்டிருக்கிறது.
    • பாதுகாப்பிற்காக, காரில் ஆறு ஏர்பேக்குகள் தரநிலையாக, முன் பார்க்கிங் சென்சார்கள், 360 டிகிரி கேமரா மற்றும் பல உள்ளன.

    ரெனால்ட் சமீபத்தில் இந்திய சந்தையில் டிரைபர் ஃபேஸ்லிஃப்டை ரூ.6.29 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து, இந்த MPV புதுப்பிப்பைப் பெறுவது இதுவே முதல் முறை. மேலும் இது இந்திய சந்தையில் மிகவும் மலிவு விலை MPV ஆகக் கருதப்படுகிறது.

    ரெனால்ட் டிரைபர் ஃபேஸ்லிஃப்ட் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இதன் டெலிவரி குறித்த நற்செய்தி வெளியாகி உள்ளது. அந்த வகையில், புதிய மாடல் தற்போது டீலர்ஷிப்களை அடையத் தொடங்கியுள்ளன.

    ரெனால்ட் டிரைபர் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 1.0 லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் 3-சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின், 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் AMT கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடன் வழங்கப்படுகிறது. இத்துடன் மறுசீரமைக்கப்பட்ட CNG எஞ்சின் ஆப்ஷன்களையும் பெறுகிறது.

    ரெனால்ட் டிரைபர் ஃபேஸ்லிஃப்ட் அதன் முன்னோடியுடன் ஒப்பிடும்போது முற்றிலும் புதிய வடிவமைப்புடன் வருகிறது. அதே யூனிட்டில் LED DRLகளுடன் ஹெட்லைட்களுக்கான புதிய வடிவமைப்பின் வடிவத்தில் புதிய கூறுகள் தெரியும் வகையில் புதிய முன்பக்கத் தோற்றத்தைப் பெறுகிறது.



    புதிய ரெனால்ட் டிரைபர் ஃபேஸ்லிஃப்ட் பிளாக் மற்றும் கிரே நிற சீட் கவர்களுடன், புதுப்பிக்கப்பட்ட டேஷ்போர்டு, புதிய லோகோவைக் கொண்ட ஸ்டீயரிங் வீல் ஆகியவற்றுடன் புதிய அமைப்பைப் பெற்றுள்ளது. இது ஆப்பிள் கார்-பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி கொண்ட 8 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொண்டிருக்கிறது. புதிய டிரைபர் ஃபேஸ்லிஃப்டின் பிற அம்சங்களில் க்ரூயிஸ் கன்ட்ரோல், ஆட்டோ வைப்பர்கள், ஆட்டோ ஹெட்லேம்ப்கள், ஆட்டோ ஃபோல்ட் ORVMகள் மற்றும் பல அடங்கும். பாதுகாப்பிற்காக, காரில் ஆறு ஏர்பேக்குகள் தரநிலையாக, முன் பார்க்கிங் சென்சார்கள், 360 டிகிரி கேமரா மற்றும் பல உள்ளன.

    • இந்த ஆண்டின் முதல் காலாண்டில் நிறுவனம் மொத்தம் 5,27,861 வாகனங்களை விற்றுள்ளது.
    • உள்நாட்டு விற்பனை 4,30,889 யூனிட்கள் மற்றும் ஏற்றுமதி 96,972 யூனிட்கள் அடங்கும்.

    மாருதி சுசுகி இந்தியா நிறுவனம், ஜூன் மாதம் வரையிலான காலாண்டில் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.3,792 கோடியாக அதிகரித்துள்ளது. உள்நாட்டு விற்பனையில் ஏற்பட்ட சரிவை ஈடுகட்டும் வகையில், வெளிநாட்டு ஏற்றுமதிகள் அதிகரித்துள்ளன. நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பாளரான மாருதி சுசுகி இந்தியா நிறுவனம், கடந்த நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் ரூ.3,760 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.

    ஜூன் காலாண்டில் மொத்த வருமானம் ரூ.40,493 கோடியாக அதிகரித்துள்ளது. இது முந்தைய நிதியாண்டின் இதே காலத்தில் ரூ.36,840 கோடியாக இருந்தது. தனித்த அடிப்படையில், மாருதி நிறுவனம் ரூ.3,712 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது, இது முந்தைய நிதியாண்டின் ஜூன் வரையிலான காலாண்டில் ரூ.3,650 கோடியுடன் ஒப்பிடும்போது 2 சதவீதம் அதிகமாகும்.

    முதல் காலாண்டில் நிகர விற்பனை ரூ.36,625 கோடியாக அதிகரித்துள்ளது, இது முந்தைய ஆண்டு இதே காலத்தில் ரூ.33,875 கோடியாக இருந்தது.

    மாருதி ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் போன்ற மாடல்களை வெளியிடும் நிறுவனம், ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் உள்நாட்டு பயணிகள் வாகனத் துறை தொடர்ந்து மந்தமான தேவை சூழலைக் கண்டதாகக் குறிப்பிட்டது.

    இந்த ஆண்டின் முதல் காலாண்டில் நிறுவனம் மொத்தம் 5,27,861 வாகனங்களை விற்றுள்ளது. இதில் உள்நாட்டு விற்பனை 4,30,889 யூனிட்கள் மற்றும் ஏற்றுமதி 96,972 யூனிட்கள் அடங்கும். நிறுவனத்தின் பங்குகள் பிஎஸ்இயில் 0.1 சதவீதம் உயர்ந்து ரூ.12,634.45 ஆக இருந்தது.

    • இந்தியாவில் 69 kWh NMC பேட்டரி பேக்கை ஒற்றை மோட்டார் மற்றும் இரட்டை மோட்டார் AWD வேரியண்ட்களுடன் வழங்க வாய்ப்புள்ளது.
    • இந்த யூனிட் 427 bhp பவர், ஒருமுறை சார்ஜ் செய்தால் 474 கிலோமீட்டர்கள் வரையிலான ரேஞ்ச் வழங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்திய சந்தையில் தனது கார் மாடல்களை பல்வகைப்படுத்த வால்வோ தயாராகி வருகிறது. இதற்காக அந்நிறுவனம் புதிய மாடல்களை பட்டியலில் கொண்டு வருகிறது. சமீபத்தில், இந்த நிறுவனத்தின் வரவிருக்கும் வாகனமான வால்வோ EX30, இந்திய சாலைகளில் சோதனை செய்யப்பட்டு வருவது தெரியவந்துள்ளது.

    வால்வோ EX300 மிகச்சிறிய மற்றும் மிகவும் மலிவு விலை மின்சார SUV என்று கூறப்படுகிறது. மேலும் இது சர்வதேச சந்தையில் வால்வோ EX40 மற்றும் EC40 மாடல்களின் கீழே வைக்கப்பட்டுள்ளது.

    எதிர்பார்க்கப்படும் பவர்டிரெய்ன்:

    சர்வதேச சந்தையில் விற்கப்படும் வால்வோ EX30, நிறுவனத்தின் சஸ்டெயினபிள் எக்ஸ்பீரியன்ஸ் ஆர்கிடெக்ச்சர் தளத்தை அடிப்படையாகக் கொண்டது. அதன் சர்வதேச மாடல்கள் இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களைப் பெற்றாலும், இந்த நிறுவனம் இந்தியாவில் 69 kWh NMC பேட்டரி பேக்கை ஒற்றை மோட்டார் மற்றும் இரட்டை மோட்டார் AWD வேரியண்ட்களுடன் வழங்க வாய்ப்புள்ளது.



    இந்த யூனிட் 427 bhp பவர், ஒருமுறை சார்ஜ் செய்தால் 474 கிலோமீட்டர்கள் வரையிலான ரேஞ்ச் வழங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

    எதிர்பார்க்கப்படும் வடிவமைப்பு:

    வால்வோ EX30 அதன் வடிவமைப்பு அம்சங்களை வால்வோ EX90 எஸ்யூவி-யில் இருந்து பெற்றதாகத் தெரிகிறது. சோதனையில் ஈடுபடுத்தப்பட்ட கார் பெரிதும் உருமறைப்பு செய்யப்பட்டிருந்தாலும், நேர்த்தியான LED ஹெட்லைட்கள், சிக்னேச்சர் தோர் ஹேமர் LED DRLகள், பிக்சல்-ஸ்டைல்டு டெயில்-லைட்கள் போன்ற வெளிப்புற சிறப்பம்சங்களை கொண்டிருக்கும் என்று தெரிகிறது.

    எதிர்பார்க்கப்படும் இன்டீரியர்:

    உள்புறத்தில், வால்வோ EX30 சர்வதேச மாடல்களில் காணப்படும் அதே வடிவமைப்பைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 12.3-இன்ச் செங்குத்தாக பொருத்தப்பட்ட டச் ஸ்கிரீனுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட கூகுள் சார்ந்த இன்ஃபோடெயின்மென்ட் ஓஎஸ் உடன் இயக்கப்படுகிறது.

    வெளியீடு மற்றும் எதிர்பார்க்கப்படும் விலை:

    வால்வோ EX30 காரை உள்ளூரில் அசெம்பிள் செய்வதற்கான திட்டங்களை நிறுவனம் மதிப்பீடு செய்து வருவதாகவும், இது மலிவு விலையில் கிடைக்கக்கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மின்சார எஸ்யூவி-யின் வெளியீட்டு தேதியை நிறுவனம் இன்னும் கூறவில்லை. இருப்பினும், பண்டிகை காலத்தில் ரூ.42-45 லட்சம் விலையில் இது அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா 2.4 லிட்டர் டீசல் எஞ்சினுடன் வருகிறது.
    • 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் சமீபத்தில் இந்திய சந்தையில் தனது வாகனங்கள் விலையை மாற்றியுள்ளது. இது பல்வேறு மாடல்களில் மேல்நோக்கிய திருத்தத்தின் வடிவத்தில் வருகிறது. இந்தப் பட்டியலில் புதிதாக இணைந்த கார் இன்னோவா கிரிஸ்டா. இந்த மாடலின் விலை தற்போது ரூ. 26,000 வரை உயர்ந்துள்ளது.

    விவரங்களைப் பொறுத்தவரை, டொயோட்டா இன்னோவா கிரிஸ்டாவின் VX மற்றும் ZX வேரியண்ட்களின் விலை உயர்வு பெறப்பட்டுள்ளது. விலையில் ஏற்பட்ட இந்த மாற்றம் வாகனத்தின் ஏழு மற்றும் எட்டு இருக்கைகள் கொண்ட வேரியண்ட்களுக்கு பொருந்தும். இதன் மூலம், எம்பிவி-யின் விலைகள் இப்போது ரூ.19.99 லட்சத்தில் இருந்து ரூ.27.08 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது. இது GX, GX+, VX மற்றும் ZX உள்ளிட்ட நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    இன்னோவா கிரிஸ்டாவைத் தவிர, அர்பன் க்ரூஸர் டைசர் மற்றும் ரூமியன் போன்ற மாடல்களின் விலைகளும் மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளன. இருப்பினும், நாட்டில் மிகவும் பிரபலமான வாகனங்களில் ஒன்றான இன்னோவா கிரிஸ்டாவிற்கு விலை உயர்வு அதிகமாக உள்ளது.

    டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா 2.4 லிட்டர் டீசல் எஞ்சினுடன் வருகிறது. இது 147 hp பவரையும் 343 Nm பீக் டார்க்கையும் உற்பத்தி செய்யும் வகையில் டியூன் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    இந்த MPV காரில் ஆறு ஏர்பேக்குகள், சீட் பெல்ட் ரிமைன்டர், EBD உடன் ABS, வெஹிகில் ஸ்டேபிலிட்டி கண்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், பேக் மானிட்டர் மற்றும் பல பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. 8-வழிகளில் பவர் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய டிரைவர் இருக்கை, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்-பிளேவுடன் கூடிய டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், க்ரூஸ் கண்ட்ரோல், டில்ட் மற்றும் டெலஸ்கோபிக் ஸ்டீயரிங் வீல் உள்ளிட்டவை இந்த அம்சங்களில் அடங்கும்.

    • இந்தியாவில் உள்ள அனைத்து உபகரண உற்பத்தியாளர்களும் (OEMகள்) தங்கள் சலுகைகளில் தேவையான மாற்றங்களைச் செயல்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
    • 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸுடன் கிடைக்கிறது.

    மாருதி சுசுகி நிறுவனம் பல்வேறு மாடல்களில் ஆறு ஏர்பேக்குகளை ஒரு நிலையான அம்சமாக மாற்றுவதன் மூலம் அதன் வாகனங்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்தப் பட்டியலில் சமீபத்தில் இணைந்திருப்பது அதன் பிரீமியம் எம்பிவி மாடலான XL6 ஆகும். இந்த மாற்றம் உடனடியாக அமலுக்கு வருகிறது. இதன் விளைவாக மாடலுக்கான விலை 0.8 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இதனால் வேரியண்ட்டைப் பொறுத்து காரின் விலை ரூ.7,000 முதல் ரூ.10,000 வரை அதிகரித்துள்ளது. எனவே, மாடலின் விலைகள் இப்போது ரூ.11.92 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகின்றன.

    இந்த அப்டேட் உடன், XL6 இப்போது நெக்சா மற்றும் அரினா வரிசையில் உள்ள மற்ற மாடல்களுடன் இணைகிறது. இதில் எர்டிகா, பலேனோ, ஆல்டோ K10, செலெரியோ, வேகன்ஆர், ஈகோ, ஸ்விஃப்ட், டிசையர், பிரெஸ்ஸா, கிராண்ட் விட்டாரா, ஜிம்னி மற்றும் இன்விக்டோ ஆகியவை அடங்கும். இவை அனைத்தும் இப்போது நிலையாக ஆறு ஏர்பேக்குகளுடன் வருகின்றன. XL6 க்கு முன்பு, இந்த மேம்படுத்தலைப் பெற்ற மிகச் சமீபத்திய மாடல்கள் எர்டிகா மற்றும் பலேனோ ஆகும்.

    முன்னதாக, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் (MoRTH) அக்டோபர் 2025 க்குள் அனைத்து புதிய பயணிகள் கார்களிலும் ஆறு ஏர்பேக்குகள் தரநிலையாக பொருத்தப்படும் என்று அறிவித்திருந்தது. இதன் விளைவாக, இந்தியாவில் உள்ள அனைத்து உபகரண உற்பத்தியாளர்களும் (OEMகள்) தங்கள் சலுகைகளில் தேவையான மாற்றங்களைச் செயல்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

    இந்த மேம்படுத்தலுக்கு முன்பு, மாருதி சுசுகி XL6 நான்கு ஏர்பேக்குகளைக் கொண்டிருந்தது மற்றும் EBD உடன் ABS, எலெக்ட்ரிக் ஸ்டேபிலிட்டி, சீட் பெல்ட் ரிமைன்டர், டயர் பிரெஷர் கண்காணிப்பு அமைப்பு, டிஃபோகர், 360-டிகிரி கேமரா மற்றும் பல போன்ற பாதுகாப்பு அம்சங்களுடன் வந்தது.

    இதற்கிடையில், காரின் மீதமுள்ள விவரங்கள் அப்படியே உள்ளன. மாருதி சுசுகி XL6, மைல்ட்-ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் கூடிய 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் கொண்டிருக்கிறது. இது 102 hp பவர் மற்றும் 137 Nm டார்க் உற்பத்தி செய்கிறது. இது 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸுடன் கிடைக்கிறது. இந்த மாடலில் CNG பவர்டிரெய்ன் ஆப்ஷனும் உள்ளது.

    • பிராண்டின் எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார், ஆக்ரோஷமான, லோ-ப்ரோஃபைல் வடிவமைப்பைக் கொண்டுள்ளது.
    • எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் 77 kWh பேட்டரி பேக் மூலம் இயக்கப்படுகிறது.

    எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம், சைபர்ஸ்டர் ஸ்போர்ட்ஸ் காரை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த தயாராக உள்ளது. இது முன்னதாகவே இந்திய சந்தைக்காக வெளியிடப்பட்டது. எனினும் இதன் விலை விவரங்கள் நாளை அறிவிக்கப்பட இருக்கிறது. "உலகின் வேகமான MG" என்று அழைக்கப்படும் இது, M9 எம்பிவி மாடலை தொடர்ந்து, நிறுவனத்தின் செலக்ட் டீலர்ஷிப் மூலம் விற்கப்பட இருக்கும் இரண்டாவது வாகனமாகும்.

    இந்த பிராண்டின் எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார், ஆக்ரோஷமான, லோ-ப்ரோஃபைல் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இது நேர்த்தியான, ஸ்வெப்ட்-பேக் LED ஹெட்லைட்களால் சிறப்பிக்கப்படுகிறது. இது அதன் ஸ்போர்ட் தோற்றத்தை மேம்படுத்துகிறது. இந்த வடிவமைப்பை பூர்த்தி செய்யும் வகையில் இந்த காரில் சிசர் டோர் வழங்கப்பட்டுள்ளது.

    உள்புறத்தில் எம்ஜி சைபர்ஸ்டர் மூன்று டிஜிட்டல் டிஸ்ப்ளேக்களுடன் பல கண்ட்ரோல்களை கொண்ட தட்டையான ஸ்டீரிங் வீலைக் கொண்டுள்ளது. சென்டர் கன்சோலில் ரூஃப் மெக்கானிசம், டிரைவ் செலக்டர் மற்றும் HVAC கட்டுப்பாடுகளை மேற்கொள்ள மற்றொரு திரை மற்றும் பொத்தான்கள் உள்ளன.

    ஸ்டைலான வெளிப்புறத்தின் கீழே, இந்த இரண்டு இருக்கைகள் கொண்ட மின்சார வாகனம் ஒவ்வொரு ஆக்சிலும் நிலைநிறுத்தப்பட்ட இரட்டை மின்சார மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளது. இது ஆல்-வீல் டிரைவ் திறன்களை வழங்குகிறது. இந்த பவர்டிரெய்ன் 510 hp பவர் மற்றும் 725 Nm பீக் டார்க்கை உருவாக்குகிறது.

    இந்த எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் 77 kWh பேட்டரி பேக் மூலம் இயக்கப்படுகிறது, AWD உள்ளமைவை உருவகப்படுத்த ஒவ்வொரு ஆக்சிலும் இரண்டு ஆயில்-கூல்டு மோட்டார்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 3.2 வினாடிகளில் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர்கள் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. CLTC சுழற்சியின்படி ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 580 கிலோமீட்டர் தூரம் செல்லும் என்று எம்ஜி கூறுகிறது.

    ×