என் மலர்
கார்
- கிரெட்டா எலெக்ட்ரிக் மாடல் இரண்டு பேட்டரி ஆப்ஷன்களுடன் விற்பனைக்கு கிடைக்கிறது.
- 420 கிலோமீட்டர்கள் ரேஞ்ச் வழங்கும் 42kWh பேக் மற்றும், 510 கிலோமீட்டர்கள் ரேஞ்ச் வழங்கும் 51.4kWh யூனிட் ஆகியவை அடங்கும்.
ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் தனது கிரெட்டா எலெக்ட்ரிக் வரிசையில் மூன்று புதிய வேரியண்களைச் சேர்த்துள்ளது. இது மிட்ரேஞ்ச் மின்சார SUV பிரிவில் அதன் எண்ணிக்கையை விரிவுபடுத்துகிறது. புதிய வேரியண்ட்கள் Excellence (42 kWh), Executive Tech (42 kWh) மற்றும் Executive (O) (51.4 kWh) ஆகும்.
கிரெட்டா எலெக்ட்ரிக் மாடல் இரண்டு பேட்டரி ஆப்ஷன்களுடன் விற்பனைக்கு கிடைக்கிறது. இவற்றில் 420 கிலோமீட்டர்கள் ரேஞ்ச் வழங்கும் 42kWh பேக் மற்றும், 510 கிலோமீட்டர்கள் ரேஞ்ச் வழங்கும் 51.4kWh யூனிட் ஆகியவை அடங்கும். இங்கு குறிப்பிடப்பட்டு இருக்கும் ரேஞ்ச் ARAI சான்றளிக்கப்பட்டவை ஆகும்.
புதிய Excellence (42 kWh) வேரியண்ட் லெவல் 2 ADAS, 360-டிகிரி வியூ மானிட்டர், பிளைண்ட்-ஸ்பாட் மானிட்டர், முன்பக்க பார்க்கிங் சென்சார்கள், டேஷ் கேமரா, பின்புற வயர்லெஸ் சார்ஜர், ஓட்டுநர் மற்றும் பயணிகள் இருக்கைகள், முன்புற இருக்கைகள் வென்டிலேஷன் வசதி மற்றும் மடிக்கக்கூடிய செட்பேக் மேசையுடன் வருகிறது.

கிரெட்டா எலெக்ட்ரிக் Executive Tech (42 kWh) காரில் குரல்-செயல்படுத்தப்பட்ட பனோரமிக் சன்ரூஃப், இகோ-லெதர் சீட்கள், முன்புறத்தில் வென்டிலேட்டெட் இருக்கைகள் மற்றும் பின்புறம் சன்ஷேட் விண்டோ போன்ற அம்சங்கள் உள்ளன. அதே நேரத்தில் Executive (O) (51.4 kWh) காரில் நீண்ட தூர பேட்டரி மற்றும் ஸ்மார்ட் பனோரமிக் சன்ரூஃப் போன்ற பிரீமியம் அம்சங்கள் உள்ளன.
அனைத்து கிரெட்டா எலெக்ட்ரிக் வேரியண்ட்களும் இப்போது வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே வசதியை அடாப்டர் வழியாகப் பெறுகின்றன. அதே நேரத்தில் டாப் எண்ட் வேரியண்ட்களில் டேஷ் கேமரா மற்றும் வயர்லெஸ் ரியர் சார்ஜிங் போன்ற அம்சங்கள் சேர்க்கப்படுகின்றன. இந்த கார்களில் ஹூண்டாய் தற்போது மேட் பிளாக் மற்றும் ஷேடோ கிரே வண்ண விருப்பங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
- 5 ஸ்டார் மதிப்பீட்டைப் பெற்ற 2வது மாருதி சுசூகி கார் என்ற பெருமையைப் பெற்றுள்ளது விக்டோரிஸ்.
- மாருதி சுசூகி விக்டோரிஸ் கார் மொத்தம் 10 கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
நாட்டின் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசூகி, விக்டோரிஸ் என்கிற புதிய எஸ்யுவி காரை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.
ப்ரீமியம் எஸ்யூவி காரை விரும்புவோருக்கு இந்த மாருதி சுசூகி விக்டோரிஸ் கார் வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். இந்த கார் மாருதி பிரெஸ்ஸா காரை விட பெரியது, மாருதி கிராண்ட் விட்டாரா காரை விடச் சிறியதாகும்.
மாருதி சுசூகி விக்டோரிஸ் கார் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் ஸ்ட்ராங் ஹைப்ரிட் எஞ்சின் என இரண்டு விருப்பங்களில் கார் கிடைக்கிறது. இதேபோல், 5 ஸ்பீட் மேனுவல் மற்றும் 6 ஸ்பீட் டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமெட்டிக் அல்லது சிவிடி தேர்விலும் விக்டோரிஸ் கார் கிடைக்கிறது.
Bharat NCAP தர குறியீடு, குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கன பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் 5 ஸ்டார்களை பெற்றுள்ளது. இதன்மூலம், 5 ஸ்டார் மதிப்பீட்டைப் பெற்ற 2வது மாருதி சுசூகி கார் என்ற பெருமையைப் பெற்றுள்ளது விக்டோரிஸ்.
இந்த காரில் மிதக்கும் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், காற்றோட்டமான இருக்கைகள், பனோரோமிக் சன்ரூஃப் உள்ளிட்ட ப்ரீமியம் அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும், 360 டிகிரி கேமரா உள்பட 60க்கும் மேற்பட்ட இணைக்கப்பட்ட அம்சங்கள் காரில் இடம்பெற்றுள்ளன. மாருதி சுசூகி விக்டோரிஸ் கார் மொத்தம் 10 கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், ஸ்கோடா குஷாக் உள்ளிட்ட பல பிரீமியம் எஸ்யூவி கார்களுக்குப் போட்டியாளராக இது கருதப்படுகிறது.
மாருதி சுசூகியின் விக்டோரிஸ் காரின் விலை குறித்து அறிவிக்கப்படவில்லை. என்றாலும், பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய விக்டோரிஸ் காரின் விலை சுமார் 10- 11 லட்சம் ரூபாயாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
- புதிய அம்சங்கள் நெக்சான் EV எம்பவர்டு+ A வேரியண்ட் எனப்படும் புதிய வேரியண்டில் கிடைக்கும்.
- ஒரு முறை சார்ஜ் செய்தால் 489 கிலோமீட்டர்கள் வரை செல்லும் என்று கூறப்பட்டுள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது நெக்சான் எலெக்ட்ரிக் மாடலில் புதிய வேரியண்ட்டை அறிமுகப்படுத்த உள்ளது. புதிய வேரியண்ட் விலை விவரங்கள் வரும் வாரங்களில் அறிவிக்கப்படும். டாடா நிறுவனத்தின் பிரபல எலெக்ட்ரிக் கார் விரைவில் ஒரு குறிப்பிடத்தக்க அப்டேட்டை பெற இருக்கிறது.
அதன்படி டாடா நிறுவனம் விரைவில் நெக்சான் EV-இல் லெவல் 2 ADAS சூட் பொருத்த இருக்கிறது. டாடா நிறுவனம் தனது சப் 4-மீட்டர் எஸ்யூவிக்கு இதுவரை மேம்பட்ட ஓட்டுநர் உதவி அமைப்பான ADAS சூட் வழங்கவில்லை. இந்த புதிய அம்சங்கள் நெக்சான் EV எம்பவர்டு+ A வேரியண்ட் எனப்படும் புதிய வேரியண்டில் கிடைக்கும். இதில் A என்ற எழுத்து ADAS சூட்-ஐ குறிக்கிறது.
புதிய அப்டேட் உடன் வரும் நெக்சான் எலெக்ட்ரிக் காரில் டாடா தற்போது வழங்கும் அனைத்து சலுகைகளுடன் வரும். கூடுதலாக, இது 45kWh பேட்டரி பேக் பதிப்பில் மட்டுமே வழங்கப்படும். இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 489 கிலோமீட்டர்கள் வரை செல்லும் என்று கூறப்பட்டுள்ளது.
நெக்சான் EV பெறக்கூடிய லெவல் 2 ADAS அம்சங்களில் ஓட்டுநர் தூக்கத்தில் இருக்கிறாரா என்பதை கண்டறிதல், அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல், ரியர் கிராஸ் டிராஃபிக் அலெர்ட், ரியர் கொலிஷன் வார்னிங், லேன் கீப் அசிஸ்ட், லேன் டிபார்ச்சர் வார்னிங், ஆட்டோமேடிக் எமர்ஜென்சி பிரேக்கிங் மற்றும் கொலிஷன் வார்னிங் ஆகியவை அடங்கும்.
- 'பசால்ட் எக்ஸ்' பேட்ஜைத் தவிர, எஸ்யூவியின் உட்புறத்தில் கான்ட்ராஸ்ட் பினிஷ்கள் இருக்கும்.
- 2WD மாடலில், புதிய VF7 204 ஹெச்பி திறன் கொண்ட மோட்டார் பயன்படுத்துகிறது.
பண்டிகை காலம் நெருங்கி வருவதால், கார் தயாரிப்பாளர்கள் தங்கள் புதிய மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தத் தயாராகி வருகின்றனர். எனவே, செப்டம்பர் 2025 ஆட்டோ ஆர்வலர்களுக்கு அதிரடியானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். இந்த மாதம் இந்திய சாலைகளில் வரவிருக்கும் ஐந்து அற்புதமான கார்களைப் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
மாருதி சுசுகி எஸ்யூவி
மாருதி சுசுகி தனது புதிய காம்பாக்ட் எஸ்யூவியை வெளியிட உள்ளது. இந்த காரின் பெயர் இன்னும் வெளியிடப்படவில்லை. இருப்பினும், இதற்கு முந்தைய தகவல்கள் மாருதி சுசுகி இந்த காரை எஸ்குடோ என்று அழைக்கலாம் என கூறின. இது மாருதி சுசுகி பிரெஸ்ஸாவிற்கும், நிறுவனத்தின் அரினா வரிசையில் உள்ள மாருதி சுசுகி கிராண்ட் விட்டாராவிற்கும் இடையில் நிலைநிறுத்தப்படும். மேலும், இந்த காரில் கிராண்ட் விட்டாராவை விட சற்று பெரிய இருக்கைகளைப் பெறும் என்றும், உள்புறத்தில் அதிக இடவசதி இருக்கும் என்றும் எதிர்பார்க்கலாம். இது 3 வரிசை இருக்கை அமைப்பையும் கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
சிட்ரோயன் பாசால்ட் எக்ஸ்
சிட்ரோயன் இந்தியா நிறுவனம் வருகிற 5-ந்தேதி இந்திய சந்தையில் பசால்ட் எக்ஸ் காரை அறிமுகப்படுத்த உள்ளது. மேலும் முன்பதிவுகள் ஏற்கனவே ரூ.11,000 டோக்கன் தொகையில் தொடங்கிவிட்டன. முன்னதாக, இந்த நிறுவனம் ஹேட்ச்பேக்கின் மேம்படுத்தப்பட்ட மாடலான C3X-ஐ அறிமுகப்படுத்தியது. வரவிருக்கும் சிட்ரோயன் பசால்ட் எக்ஸ், C3X ஐ விட அதிக மேம்படுத்தல்களைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 'பசால்ட் எக்ஸ்' பேட்ஜைத் தவிர, எஸ்யூவியின் உட்புறத்தில் கான்ட்ராஸ்ட் பினிஷ்கள் இருக்கும்.

வின்ஃபாஸ்ட் VF6
வியட்நாமை சேர்ந்த வின்ஃபாஸ்ட், வருகிற 6-ந்தேதி இந்திய சந்தையில் வின்ஃபாஸ்ட் VF6 எலெக்ட்ரிக் எஸ்யூவியை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவியில் 59.6 kWh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதில் 204 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் மோட்டார் வழங்கப்படுகிறது. இந்த எலெக்ட்ரிக் கார் ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 480 கிலோமீட்டர்கள் வரை செல்லும் என்று தெரிகிறது.
வின்ஃபாஸ்ட் VF7

VF6 உடன், வின்ஃபாஸ்ட் நிறுவனம் வருகிற 6-ந்தேதி VF7 மின்சார எஸ்யூவி-யையும் வெளியிடுகிறது. வின்ஃபாஸ்ட் VF7 2WD மற்றும் 4WD ஆப்ஷன்களில் கிடைக்கும். இரண்டு ஆப்ஷன்களிலும், இது 70.8kWh பேட்டரி பேக் மூலம் இயக்கப்படுகிறது. 2WD மாடலில், புதிய VF7 204 ஹெச்பி திறன் கொண்ட மோட்டார் பயன்படுத்துகிறது. அதே நேரத்தில் AWD மாடலில் பின்புற மோட்டாரும் அடங்கும். இவை இணைந்து 350 ஹெச்பி பவர் மற்றும் 500 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்தும்.
மஹிந்திரா தார் ஃபேஸ்லிஃப்ட்
இந்திய வாகன உற்பத்தியாளரான மஹிந்திரா, செப்டம்பர் மாதம் மஹிந்திரா தார் ஃபேஸ்லிஃப்டை அறிமுகப்படுத்துவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இதுவரை வெளியாகி இருக்கும் ஸ்பை படங்களில் புதிய மஹிந்திரா தார் ஃபேஸ்லிஃப்ட் தார் ராக்ஸ்ஸைப் போலவே செங்குத்து ஸ்லாட் கிரில்லைப் பெறும் என்பதை குறிக்கின்றன. இது ஐந்து-கதவுகள் கொண்ட வெர்ஷனில் இருந்ததை போன்ற ஹெட்லைட்களை கொண்டிருக்கும். இத்துடன் C-வடிவ DRLகளுடன் கூடிய LED ப்ரொஜெக்டர் அமைப்பைக் கொண்டுள்ளது. கூடுதலாக, முன் பம்பர் மற்றும் ஃபாக் லைட்கள் உள்ளன.
- டெஸ்லாவின் மினிமலிஸ்ட் டிசைனை வழங்குவதோடு பிரீமியம் அனுபவத்தையும் வழங்குகின்றன.
- புதிய "மாடல் Y பெர்ஃபார்மன்ஸ்" டூயல் மோட்டார் AWD அமைப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.
டெஸ்லா நிறுவனம் முற்றிலும் புதிய "மாடல் Y பெர்ஃபார்மன்ஸ்" வெளியிட்டு இருக்கிறது. இதன் மூலம் டெஸ்லா நிறுவனம் தனது அதிகம் விற்பனையாகும் மின்சார SUVயின் உயர் செயல்திறன் மாடலை மீண்டும் உயிர்ப்பித்துள்ளது. ஜூனிபர் அப்டேட் என்றும் அழைக்கப்படும் புதிய வேரியண்ட், இப்போது டெஸ்லாவின் உலகளாவிய போர்ட்ஃபோலியோவில் புதுப்பிக்கப்பட்ட RWD மற்றும் நீண்ட தூர வேரியண்ட்களின் மேல் அமர்ந்திருக்கிறது.
ஸ்டான்டர்டு மாடல்களுடன் ஒப்பிடும்போது, "மாடல் Y பெர்ஃபார்மன்ஸ்" மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பம்பர்கள், கார்பன் ஃபைபரால் ஆன பின்புற ஸ்பாய்லர், பிரத்யேகமாக 21-இன்ச் அராக்நிட் 2.0 அலாய் வீல்கள் மற்றும் சிவப்பு நிற பிரேக் காலிப்பர்கள் கொண்ட வெளிப்புற தொகுப்பைப் பெறுகிறது. இது காருக்கு ஸ்போர்ட் தோற்றத்தை ஏற்படுத்துகிறது. குறைக்கப்பட்ட சஸ்பென்ஷன் அமைப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட காற்றியக்கவியல் அதன் செயல்திறன் சார்ந்த நிலைப்பாட்டை மேலும் வலியுறுத்துகின்றன.

உள்ளே, கார்பன் ஃபைபர் அசென்ட்கள், அல்ட்ரா HD தெளிவுத்திறனுடன் கூடிய பெரிய 16-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்ப்ளே மற்றும் ஹீட்டிங், கூலிங் வசதியுடன் எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் முன்புற இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. இவை டெஸ்லாவின் மினிமலிஸ்ட் டிசைனை வழங்குவதோடு பிரீமியம் அனுபவத்தையும் வழங்குகின்றன.
புதிய "மாடல் Y பெர்ஃபார்மன்ஸ்" டூயல் மோட்டார் AWD அமைப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. இது சுமார் 460bhp பவர் மற்றும் 751Nm டார்க் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இது SUV மணிக்கு 0–100 கிலோமீட்டர்கள் வேகத்தை மூன்று வினாடிகளுக்குள் எட்டிவிடும். இந்த கார் அதன் பிரிவில் வேகமான மாடல்களில் ஒன்றாகும்.
- இது 360 டிகிரி சரவுண்ட் வியூ கேமராவுடன் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
- சிட்ரோயன் பசால்ட் எக்ஸ், நிலையான மாடலில் உள்ள அதே 1.2 லிட்டர், மூன்று சிலிண்டர் டர்போ-பெட்ரோல் எஞ்சினைக் கொண்டிருக்கும்.
சிட்ரோயன் இந்தியா நிறுவனம் செப்டம்பர் 5 ஆம் தேதி இந்திய சந்தையில் பசால்ட் எக்ஸ் காரை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த வாகனத்தை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் ரூ.11,000 டோக்கன் தொகையை செலுத்தி முன்பதிவு செய்யலாம். நாட்டில் அதன் வரம்பை மேம்படுத்துவதற்கான நிறுவனத்தின் புதிய உத்தியின் ஒரு பகுதியாக இந்த கார் அறிமுகம் செய்யப்படுகிறது. முன்னதாக, இந்த நிறுவனம் ஹேட்ச்பேக்கின் மேம்படுத்தப்பட்ட மாடலான C3X-ஐ அறிமுகப்படுத்தியது.
வரவிருக்கும் சிட்ரோயன் பசால்ட் எக்ஸ், C3X போன்ற மேம்படுத்தல்களைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 'பசால்ட் X' பேட்ஜைத் தவிர, வாகனத்தில் கூடுதல் மாற்றங்கள் எதுவும் இருக்காது. வண்ண விருப்பங்கள் மற்றும் வடிவமைப்பு அம்சங்கள் தற்போதைய பசால்ட்டின் அம்சங்களுடன் ஒத்துப்போகும். இது நிலையான பசால்ட்டை விட பிரீமியம் மாறுபாடாக நிலைநிறுத்தப்பட வாய்ப்புள்ளது.
அதன் அம்சங்களைப் பொறுத்தவரை, சிட்ரோயன் பசால்ட் எக்ஸ், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே ஆகியவற்றுக்கான ஆதரவுடன் 10.25 இன்ச் டச்-ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 7 இன்ச் TFT கலர் டிஜிட்டல் டிஸ்ப்ளே, ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல் மற்றும் வயர்லெஸ் போன் சார்ஜிங் ஆகியவற்றை உள்ளடக்கியிருக்கும். பாதுகாப்பிற்காக, இந்த கூபே எஸ்யூவியில் ஆறு ஏர்பேக்குகள், EBD உடன் கூடிய ABS, ஹில் ஹோல்ட் அசிஸ்ட், ESP (எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம்), டயர் பிரஷர் கண்காணிப்பு அமைப்பு மற்றும் பல அம்சங்கள் வழங்கப்படும்.
முந்தைய டீஸர்களின் அடிப்படையில், சிட்ரோயன் பசால்ட் எக்ஸ் காரில் குரூயிஸ் கண்ட்ரோல், எஞ்சின் ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன் மற்றும் லெதரெட் ஃபினிஷ் செய்யப்பட்ட டேஷ்போர்டு ஆகியவை இடம்பெறும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அம்சங்கள் ஏர்கிராஸ் உட்பட பிற சிட்ரோயன் மாடல்களிலும் கிடைக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 360 டிகிரி சரவுண்ட் வியூ கேமராவுடன் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சிட்ரோயன் பசால்ட் எக்ஸ், நிலையான மாடலில் உள்ள அதே 1.2 லிட்டர், மூன்று சிலிண்டர் டர்போ-பெட்ரோல் எஞ்சினைக் கொண்டிருக்கும். இந்த எஞ்சின் 108 bhp பவர் வெளிப்படுத்தும். வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் டிரான்ஸ்மிஷனை பொறுத்து 205 Nm வரை டார்க் வெளிப்படுத்தும்.
- டாடா ஹாரியர் EV மாடல் Boost, Sport, City மற்றும் ECO என நான்குவித டிரைவிங் மோட்களை கொண்டிருக்கிறது.
- இந்த காரில் வேரியண்டிற்கு ஏற்ப 65 கிலோவாட் ஹவர் மற்றும் 75 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் ஆப்ஷன்களாக வழங்கப்படுகிறது.
டாடா நிறுவனத்தின் புதுவரவு எலெக்ட்ரிக் கார் ஹாரியர் EV. சமீபத்தில் வெளியான இந்த ஃபுல் சைஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடல் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த கார் வாங்க பலரும் ஆவலோடு காத்திருக்கும் நிலையில், சென்னையில் இதன் வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது.
சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள மெட்ராஸ் ஆஃப்-ரோடு அகாடமியில் முற்றிலும் புதிய ஹாரியர் EV-இன் செயல்திறன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதற்கான நிகழ்வில் டாடா வல்லுநர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். வந்தவர்கள் டாடா ஹாரியர் EV கரடு முரடான பாதையில் செய்த சம்பவங்களை பார்த்து வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்திருந்தனர்.

முற்றிலும் புதிய ஹாரியர் EV இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்களுடன் வருகிறது. இவை இரண்டும் இணைந்து அதிகபட்சமாக 504 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளன. இந்த எலெக்ட்ரிக் கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர்கள் வேகத்தை வெறும் 6.3 நொடிகளில் எட்டிவிடும். கரடு முரடான பாதையில் சீரான பயணத்தை உறுதி செய்ய ஏதுவாக இந்த காரில் ஆஃப்-ரோடு அசிஸ்ட் வழங்கப்பட்டுள்ளது.
டாடா ஹாரியர் EV மாடல் Boost, Sport, City மற்றும் ECO என நான்குவித டிரைவிங் மோட்களை கொண்டிருக்கிறது. இந்த காரில் வேரியண்டிற்கு ஏற்ப 65 கிலோவாட் ஹவர் மற்றும் 75 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் ஆப்ஷன்களாக வழங்கப்படுகிறது. இவ்விரண்டிற்கும் வெவ்வேறு மைலேஜ்கள் அமைந்துள்ளது. இவற்றுடன் 7.2 கிலோவாட் AC ஃபாஸ்ட் சார்ஜிங் யூனிட் வழங்கப்படுகிறது.
- 8 இன்ச் டச்-ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன் மற்றும் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டு இருக்கிறது.
- 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
ரெனால்ட் நிறுவனம் புதுப்பிக்கப்பட்ட கைகர் மாடல் காரை இந்திய சந்தையில் ரூ.6.29 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் அறிமுகம் செய்துள்ளது. இத்துடன் சற்றே சக்திவாய்ந்த டர்போ வேரியண்ட் ரூ.9.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டிரைபர் ஃபேஸ்லிஃப்ட் அறிமுகத்தைத் தொடர்ந்து எஸ்யூவியின் சமீபத்திய மாடல் வருகிறது.
இந்திய சந்தையில் மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் எஸ்யூவிகளில் ஒன்று கைகர். தோற்றத்தில் தொடங்கி, ரெனால்ட் கைகர் ஃபேஸ்லிஃப்ட் அதன் முந்தைய மாடலை விட சிறிதளவு மாற்றங்களுடன் வருகிறது. இது இப்போது மெலிதான கிரில்லைச் சுற்றி டி.ஆர்.எல்.களுக்கான நேர்த்தியான வடிவமைப்புடன் வித்தியாசமான கவர்ச்சியை வழங்குகிறது.
மையத்தில் நிறுவனத்தின் புதிய லோகோ இடம்பெற்றிருக்கிறது. மேலும், ஃபாக் லேம்ப்-களுடன் புதிதாக வடிவமைக்கப்பட்ட பம்பருடன், ஹெட்லேம்ப் ஹவுசிங்கின் வடிவமைப்பு மாற்றப்பட்டுள்ளது. இதற்கிடையில், 16 இன்ச் அலாய் வீல்களுக்கான புதிய வடிவமைப்புடன் வாகனத்தின் ஒட்டுமொத்த தோற்றம் அப்படியே உள்ளது. இவை அனைத்தும் ஒரு புதிய பச்சை நிற ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது.
உட்புறத்தில், புதுப்பிக்கப்பட்ட எஸ்யூவி கிட்டத்தட்ட அதே அமைப்பைப் பெறுகிறது. எனினும், டேஷ்போர்டில் பிளாக் மற்றும் கிரே நிறங்களைக் கொண்ட புதிய டூயல்-டோன் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. கவனத்தை ஈர்க்கும் மற்றொரு விஷயமாக, 8 இன்ச் டச்-ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன் மற்றும் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த எஸ்யூவி-க்கான அம்சங்களின் பட்டியலில் வென்டிலேட் செய்யப்பட்ட முன் இருக்கைகள், 360-டிகிரி கேமரா, ஆட்டோ விளக்குகள் மற்றும் வைப்பர்கள், வயர்லெஸ் சார்ஜர் மற்றும் பல உள்ளன. பயணிகளின் பாதுகாப்பிற்காக, இந்த எஸ்யூவி-இல் ஆறு ஏர்பேக்குகள் தரநிலையாக, ESP, டயர் பிரஷர் மானிட்டர், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் மற்றும் பல போன்ற அம்சங்களைப் பெறுகிறது.
புதிய ரெனால்ட் கைகர் ஃபேஸ்லிஃப்ட் இப்போது 72 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் எஞ்சின் மற்றும் 100 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன்களை வழங்குகிறது. இவற்றுடன் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் எஞ்சின் AMT உடன் கிடைக்கிறது, அதே நேரத்தில் டர்போ-பெட்ரோல் எஞ்சின் CVT ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷனுடன் வழங்கப்படுகிறது.
- ரேஞ்ச் அல்லது சார்ஜிங் கிடைக்கும் தன்மை குறித்து எந்த கவலையும் இல்லாமல் சீரான மின்சார இயக்கத்தை உறுதி செய்கிறது.
- ஒவ்வொரு 300 கிலோமீட்டருக்கும் சார்ஜர்கள் பொருத்தப்பட்டுள்ளன.
பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம் 5,000 மின்சார வாகனங்களை விநியோகம் செய்த முதல் சொகுசு கார் தயாரிப்பாளராக மாறியுள்ளது. இது அதன் மின்-இயக்கப் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கிறது. இந்த சாதனையை நினைவுகூரும் வகையில், வடக்கிலிருந்து தென்னிந்தியா வரை 4,000 கிமீ நீளமுள்ள பாதையில் உயர் சக்தி சார்ஜிங் பாதையை அறிமுகப்படுத்துவதாக நிறுவனம் அறிவித்துள்ளது.
தற்போது, பிஎம்டபிள்யூ இந்தியா முன்னணி பொது சார்ஜிங் நெட்வொர்க்குகளுடன் கூட்டணி அமைத்து நாடு முழுவதும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சார்ஜிங் மையங்களை பயன்படுத்த வழி செய்கிறது. கூடுதல் வசதிக்காக இந்த சார்ஜிங் மையங்கள் அனைத்தையும் myBMW செயலி மூலம் கண்டுபிடித்து அணுக முடியும்.
இந்த வழித்தடம் 4,000 கிலோமீட்டர் நீளத்தை உள்ளடக்கியது. இதில் ஒவ்வொரு 300 கிலோமீட்டருக்கும் சார்ஜர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் ரேஞ்ச் அல்லது சார்ஜிங் கிடைக்கும் தன்மை குறித்து எந்த கவலையும் இல்லாமல் சீரான மின்சார இயக்கத்தை உறுதி செய்கிறது.
இந்த பாதை மூலோபாய ரீதியாக தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் டெல்லி-ஜெய்ப்பூர்- அகமதாபாத்- மும்பை- புனே-ஹுப்ளி-பெங்களூரு-கோயம்புத்தூர்-மதுரை போன்ற முக்கிய நகரங்களை உள்ளடக்கியுள்ளது. மின்-இயக்கத்தை அதிக அளவில் ஏற்றுக்கொள்வதையும் வசதியையும் ஊக்குவிக்க, பிஎம்டபிள்யூ குரூப் இந்தியா நாட்டில் உள்ள அனைத்து எலெக்ட்ரிக் வாகன பிராண்டுகளின் வாடிக்கையாளர்களுக்கும் அணுகலைத் திறந்துள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளாக, பிஎம்டபிள்யூ நிறுவனம், ஆடம்பர எலெக்ட்ரிக் வாகன பிரிவில் முன்னணியில் தனது நிலையைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. 2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் இந்த ஆதிக்கம் தொடர்ந்தது ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் 1,322 பிஎம்டபிள்யூ மற்றும் மினி மின்சார வாகனங்கள் விற்பனையாகி, ஆண்டுக்கு ஆண்டு 234 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
இந்தியாவில் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் மொத்த விற்பனையில் எலெக்ட்ரிக் வாகனங்கள் இப்போது 18 சதவீதத்தைக் கொண்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில் அதிகம் விற்பனையாகும் மின்சார கார் மாடலாக பிஎம்டபிள்யூ iX1 லாங் வீல்பேஸ் உருவெடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து பிஎம்டபிள்யூ i7 இரண்டாவது இடத்தில் உள்ளது.
- ஸ்கோடாவின் கைலாக், குஷக் மற்றும் ஸ்லாவியா ஆகியவற்றில் இந்த அனிவர்சரி எடிஷன் வெளியிடப்படும்.
- 360 டிகிரி கேமரா, அன்டர்பாடி லைட்டுகள் போன்ற வசதிகள் வேரியண்டுக்கு ஏற்ப வழங்கப்படும்.
ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் கால் பதித்து 25 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் வகையில், 25-வது அனிவர்சரி லிமிடெட் எடிஷன் கார்களை அறிமுகம் செய்துள்ளது. ஸ்கோடாவின் கைலாக், குஷக் மற்றும் ஸ்லாவியா ஆகியவற்றில் இந்த அனிவர்சரி எடிஷன் வெளியிடப்படும். குஷக் மோன்டி கார்லோ, ஸ்லாவியா மற்றும் கைலாக்கில் உள்ள பிரஸ்டீஜ், சிக்னேச்சர் பிளஸ் டாப் வேரியண்ட்களில் இது கிடைக்கும்.
அனிவர்சரி அடையாளத்துடன் தோற்றப் பொலிவு கொண்டதாக கார் அமைக்கப்பட்டுள்ளது. 360 டிகிரி கேமரா, அன்டர்பாடி லைட்டுகள் போன்ற வசதிகள் வேரியண்டுக்கு ஏற்ப வழங்கப்படும்.
1.0 லிட்டர் டி.எஸ்.ஐ. எம்.டி., 1.0 லிட்டர் டி.எஸ்.ஐ. ஏ.டி. மற்றும் 1.5 லிட்டர் டி.எஸ்.ஜி. என்ஜின் வேரியண்ட்களில் கிடைக்கும். குஷக் மோன்டி கார்லோ அனிவர்சரி லிமிடெட் எடிஷனின் 1.0 லிட்டர் டி.எஸ்.ஐ. மேனுவல் டிரான்ஸ்மிஷன் வேரியண்ட் ஷோரூம் விலை சுமார் ரூ.16.39 லட்சம். டாப் வேரியண்ட் சுமார் ரூ.19.09 லட்சம். இதுபோல், ஸ்லாவியா மோன்டி அனிவர்சரி எடிஷன் தொடக்க விலை சுமார் ரூ.15.63 லட்சம் எனவும், டாப் வேரியண்ட் ரூ.18.33 லட்சம் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கைலாக் அனிவர்சரி எடிஷன் (சிக்னேச்சர் பிளஸ் மற்றும் பிரஸ்டீஜ்) சுமார் ரூ.11.25 லட்சம் மற்றும் சுமார் ரூ.12.89 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- புதிய மேட் பிளாக் வேரியண்ட் அலாய் வீல்களை கொண்டுள்ளது.
- புதிய மாடல் கேம்ரி சீரிசில் ஸ்போர்ட் தோற்றம் கொண்ட வேரியண்ட்டை இணைக்கிறது.
டொயோட்டா நிறுவனம் இந்திய சந்தையில் புதிய கேம்ரி ஸ்பிரிண்ட் மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய கேம்ரி மாடலின் விலை ரூ. 48.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய மாடல் கேம்ரி சீரிசில் ஸ்போர்ட் தோற்றம் கொண்ட வேரியண்ட்டை இணைக்கிறது. அதே நேரத்தில் அதன் செயல்திறன் சார்ந்த அம்சங்களைத் தக்க வைத்துக் கொள்கிறது.
வெளிப்புறமாக, இந்த மாடலின் போனெட், ரூஃப் மற்றும் பூட் மூடியில் மேட் பிளாக் ஃபினிஷ் செய்யப்பட்டு டூயல் டோன் ஸ்டைலிங் கொண்டிருக்கிறது. புதிய மேட் பிளாக் வேரியண்ட் அலாய் வீல்களை கொண்டுள்ளது. இது முன் மற்றும் பின்புற பாடி கிட்களைச் சேர்க்கும் பிரத்யேக ஸ்போர்ட்ஸ் கிட் மற்றும் பின்புற ஸ்பாய்லருடன் வருகிறது.
ஸ்பிரிண்ட் மாடல் மேட் பிளாக் உடன் எமோஷனல் ரெட் மற்றும் மேட் பிளாக் உடன் பிளாட்டினம் ஒயிட் பியர்ல் உள்ளிட்ட ஐந்து டூயல்-டோன் நிற ஆப்ஷன்களில் வழங்கப்படுகிறது. இந்த செடான் காற்றோட்டமான முன் இருக்கைகள், 10-வழிகளில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுநர் இருக்கை, பேடில் ஷிஃப்டர்கள், வயர்லெஸ் சார்ஜர், ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
பாதுகாப்பு அம்சங்களில் ஒன்பது ஏர்பேக்குகள், 360-டிகிரி கேமரா, டைனமிக் ரேடார் குரூயிஸ் கண்ட்ரோல், லேன் டிரேசிங் அசிஸ்ட் மற்றும் TPMS ஆகியவை அடங்கும். புதிய வேரியண்ட் தற்போதுள்ள 2.5 லிட்டர் பெட்ரோல்-ஹைப்ரிட் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இது e-CVT அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. ஹைப்ரிட் சிஸ்டம் 230 ஹெச்பி பவர் மற்றும் லிட்டருக்கு 25.49 கிலோமீட்டர்கள் மைலேஜ் வழங்குகிறது.
புதிய டொயோட்டா கேம்ரி ஸ்பிரிண்ட் வேரியண்டிற்கான முன்பதிவுகள் டொயோட்டா அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் நாடு தழுவிய டீலர்ஷிப்களில் நடைபெறுகின்றன.
- டேஷ்போர்டில் டிரைவர் டிஸ்ப்ளே, புதிய ஸ்டீயரிங் வீல் நேர்த்தியான அமைப்பை வழங்குகிறது.
- வாகனத்தின் சார்ஜிங் போர்ட் பின்புறம் இடதுபுற பேனலில் அமைந்துள்ளது.
வால்வோ கார்ஸ் இந்தியா நிறுவனம், EX30 எலெக்ட்ரிக் SUV-யை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. வால்வோவின் மின்சார வாகனம் சில காலமாகவே விற்பனையில் உள்ளது. இருப்பினும், வரவிருக்கும் எலெக்ட்ரிக் கார்களின் வெளியீட்டைக் குறிக்கும் வகையில், இந்த நிறுவனம் வெளியிட்ட முதல் டீசர்களில் இதுவும் ஒன்றாகும். இந்த EV ஏற்கனவே சர்வதேச சந்தையில் விற்பனையில் உள்ளது மற்றும் இந்தியாவில் CKD யூனிட்களாக விற்கப்படும். அறிமுகம் செய்யப்பட்டதும், அது EX40 மாடலின் கீழ் நிலைநிறுத்தப்படும்.
புதிய வால்வோ EX30 தோற்றத்தில், வால்வோ வடிவமைப்பு மொழியைப் பின்பற்றுகிறது. இது ஒரு நேர்த்தியான அழகியலை வெளிப்படுத்துகிறது. இதில் பிளான்க்டு-ஆஃப் கிரில், LED ஹெட்லைட்கள், தோர் ஹேமர் டே-டைம் ரன்னிங் லைட்கள், பிக்சலேட்டெட் டெயில் லைட்கள் மற்றும் EVகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஏரோடைனமிக் சக்கரங்கள் வழங்கப்படுகின்றன. வாகனத்தின் சார்ஜிங் போர்ட் பின்புறம் இடதுபுற பேனலில் அமைந்துள்ளது.
உள்புறத்தில் கூகுள் சார்ந்து இயங்கும் 12.3-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்ப்ளே, அத்துடன் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே வழங்கப்படுகிறது. டேஷ்போர்டில் டிரைவர் டிஸ்ப்ளே, புதிய ஸ்டீயரிங் வீல் நேர்த்தியான அமைப்பை வழங்குகிறது. புதிய வால்வோ EX30 மாடலில் 360-டிகிரி கேமரா, ஏராளமான ஏர்பேக்குகள் மற்றும் லேன்-கீப்பிங் அசிஸ்ட் மற்றும் அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல் போன்ற ADAS (அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம்ஸ்) உள்ளிட்ட பாதுகாப்பு தொழில்நுட்பங்களுடன் பொருத்தப்பட்டுள்ளது.
கீலியின் SEA பிளாட்ஃபார்மில் கட்டமைக்கப்பட்ட வால்வோ EX30, முறையே 344 கிலோமீட்டர்கள் மற்றும் 480 கிலோமீட்டர்கள் வரையிலான ரேஞ்ச் வழங்கும் இரண்டு பேட்டரி ஆப்ஷன்களுடன் வருகிறது. இருப்பினும், சர்வதேச சந்தையில், இதே கார் மூன்று விதமான பேட்டரி பேக் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த காரின் ஒற்றை-மோட்டார் வேரியண்ட் 268 ஹெச்பி பவர் மற்றும் 343 நியூட்டன் மீட்டர் டார்க்கை வெளிப்படுத்துகிறது. அதே நேரத்தில் இரட்டை-மோட்டார் வேரியண்ட் 422 ஹெச்பி பவர் மற்றும் 543 நியூட்டன் மீட்டர் டார்க்கை வழங்குகிறது.
இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டதும், புதிய வால்வோ EX30 மாடல் மெர்சிடிஸ் பென்ஸ் EQA, ஹூண்டாய் ஐயோனிக் 5, பிஓய்டி Sealion 7 மற்றும் பிஎம்டபிள்யூ iX1 போன்ற கார்களுக்கு போட்டியாக அமையும்.






