search icon
என் மலர்tooltip icon

    கார்

    • டெஸ்டிங் செய்யப்படும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.
    • கார் அதன் ப்ரோடக்ஷன் வடிவில் இருப்பதாக தெரிகிறது.

    மாருதி சுசுகி நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் கார் eVX மாடலை 2025 வாக்கில் அறிமுகம் செய்யும் என தெரிகிறது. இந்த நிலையில், மாருதி eVX மாடல் டெஸ்டிங் செய்யப்படும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

    ஸ்பை படங்களின் படி மாருதி eVX மாடலில் ADAS சென்சார் வழங்கப்படும் என தெரிகிறது. அந்த வகையில், மாருதி eVX கார் அறிமுகமாகும் போதே ADAS வசதிகளுடன் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். எனினும், ADAS லெவல் 1 அல்லது லெவல் 2 வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இந்த கார் அதன் ப்ரோடக்ஷன் வடிவில் இருப்பதாகவே தெரிகிறது.

     


    இந்த காரில் ஸ்வெப்ட்பேக் ஹெட்லேம்ப்கள், கன்மெட்டல் நிறம் கொண்ட மல்டி ஸ்போக் அலாய் வீல்கள், பிலைன்ட் ஸ்பாட் மானிட்டர்கள், சி பில்லரில் மவுன்ட் செய்யப்பட்ட கைப்பிடிகள், ஷார்க்-ஃபின் ஆன்டெனா, ஸ்டாப் லேம்ப் வழங்கப்படுகிறது. முன்னதாக eVX மாடல் 2023 ஜப்பான் மொபிலிட்டி விழாவில் காட்சிக்கு வைக்கப்பட்டது.

    • இந்த கார் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
    • 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது.

    சிட்ரோயன் நிறுவனம் இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சிட்ரோயன் C3 ஏர்கிராஸ் ஆட்டோமேடிக் மாடலை அறிமுகம் செய்தது. புதிய சிட்ரோயன் C3 ஏர்கிராஸ் ஆட்டோமேடிக் மாடலின் விலை ரூ. 12 லட்சத்து 85 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    இந்த கார் மேக்ஸ் மற்றும் பிளஸ் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இத்துடன் 5 சீட்டர் மற்றும் 7 சீட்டர் என இருவித ஆப்ஷன்களில் கிடைக்கிறது. சிட்ரோயன் C3 ஏர்கிராஸ் மாடலில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது.

     


    மேனுவல் ஆப்ஷனில் இந்த என்ஜின் 109 ஹெச்.பி. பவர், 190 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. ஆட்டோமேடிக் வேரியன்ட் 109 ஹெச்.பி. பவர், 205 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் வழங்கப்படுகிறது.

    அம்சங்களை பொருத்தவரை ரிமோட் என்ஜின் ஸ்டார்ட், ரிமோட் ஏ.சி. பிரீ-கன்டிஷனிங், 10-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே, 7 இன்ச் டி.எஃப்.டி. கிளஸ்டர், யு.எஸ்.பி. சார்ஜர், ஏ.சி. வென்ட்கள் வழங்கப்படுகின்றன.

    • டியாகோ EV மாடலுக்கு போட்டியாக அமைகிறது.
    • இரு மாடல்களிடையே போட்டி நிலவுகிறது.

    சிட்ரோயன் நிறுவனம் தனது eC3 சீரிசில் புதிதாக டாப் என்ட் மாடல் ஒன்றை அறிமுகம் செய்து இருக்கிறது. eC3 மாடல் சிட்ரோயன் நிறுவனத்தின் ஆல்-எலெக்ட்ரிக் ஹேச்பேக் ஆகும்.

    புதிய eC3 ஷைன் வேரியன்ட் விலை ரூ. 13 லட்சத்து 20 ஆயிரம் என துவங்கி ரூ. 13 லட்சத்து 50 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    இந்திய சந்தையில் சிட்ரோயன் eC3 மாடல் டாடா டியாகோ EV மாடலுக்கு போட்டியாக அமைகிறது. விலை அடிப்படையில் இரு மாடல்களிடையே போட்டி நிலவுகிறது.

     


    சிட்ரோயன் eC3 ஷைன் வேரியன்டில் எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் வசதி கொண்ட விங் மிரர்கள், ரியர் பார்க்கிங் கேமரா, 15 இன்ச் அளவில் டைமன்ட் கட் அலாய் வீல்கள் வழங்கப்படுகின்றன. இத்துடன் ஃபாக்ஸ் ஸ்கிட் பிலேட்கள், லெதரால் சுற்றப்பட்ட ஸ்டீரிங் வீல் வழங்கப்படுகிறது.

    இத்துடன் 10.2 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, 4 ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம், உயரத்தை அட்ஜஸ்ட் செய்யும் வசதி கொண்ட ஓட்டுனர் இருக்கை வழங்கப்பட்டு இருக்கிறது.

    • ஐ.சி. என்ஜின் வெர்ஷனை போன்றே காட்சியளிக்கும் என தகவல்.
    • சில அம்சங்கள் ஐயோனிக் 5 மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படலாம்.

    ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது கிரெட்டா மாடல்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த வரிசையில், ஹூண்டாய் கிரெட்டா EV மாடல் டெஸ்டிங் செய்யப்படும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. அதில் புதிய கிரெட்டா எலெக்ட்ரிக் மாடலும் அதன் ஐ.சி. என்ஜின் வெர்ஷனை போன்றே காட்சியளிக்கும் என தெரியவந்துள்ளது.

    தற்போதைய ஸ்பை படங்களில் கிரெட்டா EV மாடலின் ஹெட்லைட் மற்றும் டெயில் லைட்கள் கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது. எனினும், முன்புறம் க்ளோஸ்டு ஆஃப் கிரில், நோஸ் பகுதியில் மவுன்ட் செய்யப்பட்ட சார்ஜிங் போர்ட் வழங்கப்படுகிறது.

     


    கிரெட்டா EV மாடலில் ஏரோடைனமிக் திறன் கொண்ட அலாய் வீல்கள் வழங்கப்படும் என தெரிகிறது. உள்புறம் கிரெட்டா EV மாடலின் சில அம்சங்கள் ஐயோனிக் 5 மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படலாம்.

    ஏற்கனவே வெளியான தகவல்களின் படி கிரெட்டா EV மாடலில் 45 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்படும் என்றும் இவற்றை எல்.ஜி. நிறுவனம் வினியோகம் செய்யும் என்றும் கூறப்படுகிறது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 250 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும். இது எம்.ஜி. ZS EV மாடலில் உள்ள 50.3 கிலோவாட் ஹவர் பேட்டரியை விட அளவில் சிறியதாகும்.

    • கார்களின் விலை விவரங்கள் மாத இறுதியில் அறிவிக்கப்படுகிறது.
    • இவை ஏற்கனவே சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன.

    மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் புத்தாண்டை புது கார் வெளியீட்டுடன் கொண்டாட இருக்கிறது. அதன்படி இம்மாத இறுதியில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட GLA மற்றும் AMG GLE 53 கூப் மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. அதன்படி இந்த கார்களின் விலை விவரங்களை மெர்சிடிஸ் நிறுவனம் ஜனவரி 31-ம் தேதி அறிவிக்க இருக்கிறது.

    அப்டேட்களை பொருத்தவரை ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட GLA மாடலில் ரிடிசைன் செய்யப்பட்ட முன்புற கிரில், டுவீக் செய்யப்பட்ட பம்ப்பர்கள், புதிய எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், வீல் ஆர்ச்களில் பிளாஸ்டிக் ட்ரிம்கள் வழங்கப்படுகின்றன.

     


    காரின் உள்புறம் ஹை-பீம் அசிஸ்ட் மற்றும் ரிவர்ஸ் கேமரா, மேம்பட்ட MBUX இன்டர்ஃபேஸ் வழங்கப்படுகிறது. 2024 GLA மாடலில் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இரு என்ஜின்களுடன் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படுகிறது.

    மெர்சிடிஸ் பென்ஸ் AMG GLE 53 கூப் மாடலில் ஸ்லோபிங் ரூஃப்லைன், புதிய அலாய் வீல் டிசைன் வழங்கப்படுகிறது. இந்த காரில் 3.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின், 48 வோல்ட் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 429 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்துகிறது. இத்துடன் 9 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. 

    • காஸ்மடிக் அப்டேட்கள் மற்றும் கேபின் பகுதிகளில் மாற்றங்கள் செய்யப்படலாம்.
    • மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம்.

    இந்திய சந்தையில் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களும் தங்களின் புதிய கார் மாடல்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் இந்திய சந்தையில் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் நான்கு புதிய கார் மாடல்கள் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

     


    மஹிந்திரா XUV300 ஃபேஸ்லிஃப்ட்:

    ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட மஹிந்திரா XUV300 மாடல் இன்னும் ஒன்றிரண்டு மாதங்களுக்குள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. இந்த மாடலில் காஸ்மடிக் அப்டேட்கள் மற்றும் கேபின் பகுதிகளில் மாற்றங்கள் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். இந்த காரில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின், இவற்றுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படும் என தெரிகிறது.

     


    டாடா கர்வ்:

    டாடா நிறுவனம் தனது கர்வ் ப்ரோடக்ஷன் வெர்ஷனை வரும் மாதங்களில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதற்கட்டமாக இந்த காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் அறிமுகமாகும் என தெரிகிறது. இந்த கார் சிங்கில் மற்றும் டூயல் எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப் உடன் கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 500 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என தெரிகிறது.

     


    புதிய தலைமுறை மாருதி சுசுகி ஸ்விஃப்ட்:

    மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய தலைமுறை ஸ்விஃப்ட் மாடல் நீண்ட காலமாக டெஸ்டிங் செய்யப்படும் நிலையில், வரும் மாதங்களில் இந்த கார் அறிமுகமாகும் என எதிர்பார்க்கலாம். முன்னதாக டோக்கியோவில் நடைபெற்ற ஜப்பான் மொபிலிட்டி நிகழ்வில் கான்செப்ட் வடிவில் இந்த கார் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கார் இன்டீரியர் அப்டேட் செய்யப்பட்டு, மைல்டு ஹைப்ரிட் பெட்ரோல் என்ஜினுடன் விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது.

     


    டொயோட்டா அர்பன் குரூயிசர் டைசர்:

    மாருதி சுசுகி நிறுவனத்தின் ஃபிரான்க்ஸ் மாடல் தான் டொயோட்டா பிரான்டிங்கில் அர்பன் குரூயிசர் டைசர் எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த எஸ்.யு.வி. கூப் மாடல் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும் என்றும் இதில் 1.2 லிட்டர் NA பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களாக வழங்கப்படும் என தெரிகிறது.

    • டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 11 கார்களை விற்பனை செய்து வருகிறது.
    • கார்களின் விலை மாற்றம் பிப்ரவரியில் அமலுக்கு வருகிறது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது கார் மாடல்கள் விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது. விலை உயர்வு பிப்ரவரி 1-ம் தேதி அமலுக்கு வருகிறது. ஐ.சி. என்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் கார் மாடல்கள் என அனைத்தின் விலையும் உயர்த்தப்படுகிறது. இந்த முறை கார்களின் விலை 0.7 சதவீதம் உயர்த்தப்படுகிறது.

    தற்போது ஏழு ஐ.சி. என்ஜின் கார்கள் மற்றும் நான்கு எலெக்ட்ரிக் கார்களை இந்திய சந்தையில் டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்து வருகிறது. இதில் டியாகோ, டியாகோ EV, டிகோர், டிகோர் EV, பன்ச், பன்ச் EV, அல்ட்ரோஸ், நெக்சான், நெக்சான் EV, ஹேரியர் மற்றும் சஃபாரி உள்ளிட்டவை அடங்கும்.

     


    சமீபத்தில் தான் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது பன்ச் EV மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ. 10 லட்சத்து 99 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. இது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நான்காவது எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும். இந்த எலெக்ட்ரிக் கார் நான்கு வேரியன்ட்களில் கிடைக்கிறது. 

    • மாருதி சுசுகி தனது வாகனங்கள் விலையை மாற்றி இருக்கிறது.
    • பலேனோ மாடல் நான்கு வேரியன்ட்களில் கிடைக்கிறது.

    மாருதி சுசுகி லிமிடெட் நிறுவனம் தனது நெக்சா பிரான்டு கார்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது. இந்திய சந்தையில் இக்னிஸ், பலேனோ, ஃபிரான்க்ஸ், ஜிம்னி, சியாஸ், XL6 மற்றும் கிரான்ட் விட்டாரா போன்ற மாடல்கள் நெக்சா பிரான்டிங்கில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டை போன்றே இந்த ஆண்டும் மாருதி சுசுகி தனது வாகனங்கள் விலையை மாற்றி இருக்கிறது.

    அதன்படி இக்னிஸ் ஹேச்பேக் மாடலின் விலை ரூ. 5 லட்சத்து 84 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் என்ட் மாடல் விலை ரூ. 8 லட்சத்து 25 ஆயிரம் ஆகும். இந்த மாடலின் AMT வேரியன்ட்களுக்கு ரூ. 5 ஆயிரம் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் மேனுவல் வேரியன்ட்களின் விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

     


    மாருதி சுசுகி பலேனோ மாடலின் மேனுவல் மாடல்கள் விலை ரூ. 5 ஆயிரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதன் AMT மாடல்கள் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்திய சந்தையில் பலேனோ மாடல் சிக்மா, டெல்டா, சீட்டா மற்றும் ஆல்ஃபா போன்ற வேரியன்ட்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 6 லட்சத்து 66 ஆயிரம் என துவங்குகிறது. டாப் என்ட் மாடல் விலை ரூ. 9 லட்சத்து 88 ஆயிரம் ஆகும்.

    கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மாருதி சுசுகி ஃபிரான்க்ஸ் 1.2 லிட்டர் NA பெட்ரோல், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இந்தியாவில் இதன் 1.0 லிட்டர் AT மாடல் விலை ரூ. 10 ஆயிரம் குறைக்கப்பட்டு இருக்கிறது. மற்ற மேனுவல் வேரியன்ட்களின் விலை ரூ. 5 ஆயிரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது.

     


    மாருதி சுசுகி கிரான்ட் விட்டாரா மாடல்களின் விலை ரூ. 10 ஆயிரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதன் விலை ரூ. 10 லட்சத்து 80 ஆயிரம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 20 லட்சத்து 09 ஆயிரம் ஆகும். மாருதி சுசுகி ஜிம்னி மாடல்களின் விலை ரூ. 10 ஆயிரம் வரை குறைக்கப்பட்டு இருக்கிறது. இதன் விலை ரூ. 12 லட்சத்து 74 ஆயிரம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 14 லட்சத்து 95 ஆயிரம் என மாறியுள்ளது.

    XL6 மாடல்கள் விலை ரூ. 5 ஆயிரம் உயர்த்தப்பட்டு தற்போது இதன் விலை ரூ. 12 லட்சத்து 56 ஆயிரத்தில் இருந்து ரூ. 14 லட்சத்து 77 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. மாருதி சுசுகி இன்விக்டோ மாடல்களின் விலை ரூ. 50 ஆயிரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் விலை தற்போது ரூ. 25 லட்சத்து 21 ஆயிரம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 29 லட்சத்து ஆயிரத்து 500 ஆக மாறி இருக்கிறது.

    மாருதி சுசுகியின் செடான் மாடல் சியாஸ் விலை ரூ. 10 ஆயிரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் விலை தற்போது ரூ. 9 லட்சத்து 40 ஆயிரம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 12 லட்சத்து 45 ஆயிரம் ஆகும்.

    அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    • கியா செல்டோஸ் தற்போது 5 வேரியன்ட்களில் கிடைக்கிறது.
    • டீசல் மேனுவல் வெர்ஷனை கியா இந்தியா அறிமுகம் செய்தது.

    கியா இந்தியா நிறுவனம் தனது மேம்பட்ட செல்டோஸ் மாடலை கடந்த ஆண்டு ஜூலை மாதம் அறிமுகம் செய்தது. தற்போது இந்த காரின் டீசல் மேனுவல் வெர்ஷனை கியா இந்தியா அறிமுகம் செய்துள்ளது.

    கியா செல்டோஸ் புதிய வெர்ஷன் விலை ரூ. 11 லட்சத்து 99 ஆயிரத்து 900 என துவங்கி அதிகபட்சம் ரூ. 18 லட்சத்து 27 ஆயிரத்து 900 என நிர்ணயம் செய்துள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

     


    இதுவரை 114 ஹெச்.பி. பவர், 250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டீசல் என்ஜினுடன் 6 ஸ்பீடு iMT மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆப்ஷன்கள் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலை தற்போது மாறியுள்ள நிலையில், வாடிக்கையாளர்கள் 6 ஸ்பீடு டீசல் மேனுவல் ஆப்ஷனையும் தேர்வு செய்ய முடியும்.

    அம்சங்களை பொருத்தவரை கியா செல்டோஸ் மாடலில் இரட்டை 10.25 இன்ச் டிஸ்ப்ளேக்கள், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், டூயல்-பேன் பானரோமிக் சன்ரூஃப், எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக், 17 இன்ச் அளவில் டைமன்ட் கட் அலாய் வீல்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    • இன்டீரியர் அம்சங்கள் பன்ச் EV மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படலாம்.
    • பன்ச் EV மாடலில் உள்ள பவர்டிரெயின் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம்.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது அல்ட்ரோஸ் EV கார் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என அறிவித்து இருக்கிறது. அந்த வகையில், இந்த எலெக்ட்ரிக் கார் 2025 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் காட்சிக்கு வைக்கப்படும் என எதிர்பார்க்கலாம். அல்ட்ரோஸ் EV மாடலின் இன்டீரியர் அம்சங்கள் பன்ச் EV மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படும் என தெரிகிறது.

    முன்னதாக 2020 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் காட்சிக்கு வைக்கப்பட்ட அல்ட்ரோஸ் EV மாடல் இந்த ஆண்டே விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், நெக்சான், டியாகோ, டிகோர் மற்றும் பன்ச் உள்ளிட்ட மாடல்களால் இதன் வெளியீடு தாமதமாகி இருக்கிறது. இந்த கார்களின் ஐ.சி. என்ஜின் வேரியன்ட் அதிக பிரபலமாக இருந்ததே இவற்றின் எலெக்ட்ரிக் வெர்ஷன் அறிமுகமாக முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகிறது.

    டிசைன் மற்றும் அம்சங்கள் அடிப்படையில், அல்ட்ரோஸ் மாடல் பெற்றிருக்கும் மிக சமீபத்திய அப்டேட்கள் அனைத்தும் அதன் எலெக்ட்ரிக் வெர்ஷனிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். இந்த காரிலும் பன்ச் EV மாடலில் உள்ள பவர்டிரெயின் ஆப்ஷன்களே வழங்கப்படும் என தெரிகிறது. தற்போதைக்கு எலெக்ட்ரிக் ஹேச்பேக் மாடலுக்கு இந்திய சந்தையில் வேறு எந்த மாடலும் போட்டிக்கு இல்லை.

    எதிர்காலத்தில் மாருதி சுசுகி, டொயோட்டா மற்றும் கியா, ஹூண்டாய் போன்ற நிறுவனங்களின் எலெக்ட்ரிக் கார்கள் விலை அடிப்படையில் டாடா அல்ட்ரோஸ் EV மாடலுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது. 

    • டாடா பன்ச் EV மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கிவிட்டது.
    • டாடா பன்ச் EV முன்புறம் நெக்சான் EV போன்றே காட்சியளிக்கிறது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பன்ச் எலெக்ட்ரிக் கார் விவரங்களை கடந்த வாரம் அறிவித்தது. தற்போது இந்த கார் ஜனவரி 17-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. புதிய பன்ச் எலெக்ட்ரிக் கார் மாடல் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நான்காவது எலெக்ட்ரிக் கார் ஆகும்.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஜென் 2 EV ஆர்கிடெக்ச்சரில் உருவாக்கப்படும் முதல் கார் இது ஆகும். இந்திய சந்தையில் புதிய டாடா பன்ச் EV மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 21 ஆயிரம் ஆகும். டாடா பன்ச் EV மாடலின் முன்புறம் நெக்சான் EV போன்றே காட்சியளிக்கிறது.


     

    இந்த கார் எம்பவர்டு ஆக்சைடு டூயல் டோன், சீட்வுட் டூயல் டோன், ஃபியர்லெஸ் ரெட் டூயல் டோன், டேடோனா கிரே டூயல் டோன் மற்றும் ப்ரிஸ்டைன் வைட் டூயல் டோன் என ஐந்து வித ஆப்ஷன்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் ஸ்மார்ட், ஸ்மார்ட் பிளஸ், அட்வென்ச்சர், எம்பவர்டு மற்றும் எம்பவர்டு பிளஸ் என ஐந்து வேரியண்ட்களில் கிடைக்கும்.

    இந்தியாவில் புதிய டாடா பன்ச் எலெக்ட்ரிக் கார் பன்ச்.EV மற்றும் பன்ச்.EV லாங் ரேன்ஜ் என இரண்டு வெர்ஷன்களில் கிடைக்கும். இத்துடன் 3.3 கிலோவாட் பாக்ஸ் சார்ஜர் ஸ்டான்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது.

    இதன் லாங் ரேன்ஜ் வெர்ஷனுடன் 7.2 கிலோவாட் ஃபாஸ்ட் ஹோம் சார்ஜர் வழங்கப்படுகிறது. இந்த காரின் ஸ்டான்டர்டு மற்றும் லாங் ரேன்ஜ் வெர்ஷன்களில் முறையே 25 கிலோவாட் ஹவர் மற்றும் 35 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். டாடா பன்ச் EV மாடல் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 400 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என்று தெரிகிறது. 

    • தேவையான சக்கரங்களின் இணைப்பை மட்டும் திருப்புவது என இந்த காரில் அதிக முக்கிய அம்சங்கள் இருக்கின்றன.
    • முன் சக்கரங்கள் உள்நோக்கிச் சுழலும் மற்றும் பின் சக்கரங்கள் வெளிப்புறமாகச் சுழன்று 360 டிகிரி செயலற்ற திருப்பத்தை நிறைவு செய்கின்றன.

    ஹூண்டாய் ஐயோனிக் 5 மின்சார வாகனத்தில் புதிய படைப்பை கொண்டு வந்துள்ளது. இது டெஸ்லாவின் மின்சார வாகனங்கள் உட்பட மற்ற மின்சார வாகனங்களில் இருந்து வேறுபடுத்தும் பல தனித்துவமான அம்சங்களைக் கொண்டுள்ளது.

    இந்த புதிய படைப்புக்கு ஹூண்டாயின் இ-கார்னர் அமைப்பு காரணமாகும். இ-கார்னர் அமைப்பு என்பது ஹூண்டாய் ஐயோனிக் 5 மின்சார வாகனத்தின் சோதனை கண்டுபிடிப்பு ஆகும். இது முதலில் அதன் காட்சியை உருவாக்கி காட்டியது. மேலும், சக்கர கோணங்களை மாற்றுவதன் மூலம் மற்றும் குறுகிய தெருவில் இருந்து வெளியேற 180-டிகிரி திருப்புதல் செய்வதன் மூலம் இறுக்கமான இடங்களில் வாகன நிறுத்தம் போன்ற திறன்களை கொண்டது.

    பக்கவாட்டாக ஓட்டுவது மற்றும் 360 டிகிரி வட்டத்தில் திரும்புவது, தேவையான சக்கரங்களின் இணைப்பை மட்டும் திருப்புவது என இந்த காரில் அதிக முக்கிய அம்சங்கள் இருக்கின்றன.

    இந்த வாகனம் "ஜீரோ டர்ன்" திருப்பு முறையில் செயல்படுகிறது. இதில் முன் சக்கரங்கள் உள்நோக்கிச் சுழலும் மற்றும் பின் சக்கரங்கள் வெளிப்புறமாகச் சுழன்று 360 டிகிரி செயலற்ற திருப்பத்தை நிறைவு செய்கின்றன.

    இந்த செயல்பாடு, குறைந்த இயக்கத்துடன் ஒரு சிறிய இடத்தில் வாகனத்தின் திசையை எளிதாக மாற்றுவதற்கு, பார்க்கிங் பிரச்சனைகளுக்கு தீர்வாக ஓட்டுநருக்கு உதவுகிறது.

    நண்டின் நடையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த கார், அமெரிக்காவின் லாஸ் வேகாசில் நடைபெறும் நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது.

    ×