என் மலர்tooltip icon

    கார்

    • வரி விதிப்பில் மாற்றம் செய்யப்பட்டதில் இருந்து வாகனங்கள் விற்பனை கணிசமான அளவு அதிகரித்து வருகிறது.
    • இது கடந்த ஆண்டில் இதே காலகட்ட விற்பனையை காட்டிலும் 36 சதவீதம் அதிகமாகும்.

    இந்தியாவில் கடந்த மாதம் 22ஆம் தேதி ஜி.எஸ்.டி. வரிவிதிப்பில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கான வரிவிதிப்பு 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டது.

    வரி விதிப்பில் மாற்றம் செய்யப்பட்டதில் இருந்து வாகனங்கள் விற்பனை கணிசமான அளவு அதிகரித்து வருகிறது. வரி விதிப்புக்கு ஏற்ப வாகனங்கள் விலையை உற்பத்தியாளர்கள் மாற்றியமைத்தது, வாகன விற்பனை விரைந்து அதிகரிக்க முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

    இந்ந நிலையில் ஜெர்மனியை சேர்ந்த பிரபல சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான பென்ஸ் தனது மெர்சிடிசஸ் வகை கார்கள் விற்பனை இந்தியாவில் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. வரி சீர்திருத்த நடவடிக்கைக்கு பின்னர் கடந்த மாதம் 22ஆம் தேதி தொடங்கி இதுவரை 5,119 கார்கள் விற்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இது கடந்த ஆண்டில் இதே காலகட்ட விற்பனையை காட்டிலும் 36 சதவீதம் அதிகமாகும்.

    • 7 சீட்டுக்கு பதிலாக 5 சீட் மட்டுமே இடம் பெற்றுள்ளதால், 3-வது வரிசை இல்லை.
    • 2 வரிசை கொண்ட 5 சீட்டர் கோடியாக் இந்தியாவில் அறிமுகம் ஆவது இதுவே முதல்முறை.

    ஸ்கோடா நிறுவனம் 5 சீட்டர் கொண்ட கோடியாக் லவுஞ்ச் காரை அறிமுகம் செய்துள்ளது. இந்த காரில் 2.0 லிட்டர், 4 சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 204 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும். இத்துடன் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் உள்ளது.

    7 சீட்டுக்கு பதிலாக 5 சீட் மட்டுமே இடம் பெற்றுள்ளதால், 3-வது வரிசை இல்லை. இதனால் பூட் இட வசதி 281 லிட்டரில் இருந்து 786 லிட்டராக அதிகரித்துள்ளது. 2 வரிசை கொண்ட 5 சீட்டர் கோடியாக் இந்தியாவில் அறிமுகம் ஆவது இதுவே முதல்முறை.

    9 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், 3-ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், பனேரமிக் சன்ரூப், டூயல் வயர்லெஸ் சார்ஜர், 9 ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம் உள்ளிட்டவை இதில் இடம் பெற்றுள்ளன. இந்த காரின் விலை ரூ.39.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும்.

    இதுதவிர, இதே என்ஜின் திறன் கொண்ட ஸ்போர்ட் லைன் ரூ.43.76 லட்சம் என்றும் எல் அண்ட் கே சுமார் ரூ.45.96 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    • இந்த காரில் 19.2 கிலோ வாட்ஸ் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.
    • இந்த காரில் 19.2 கிலோ வாட்ஸ் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

    இந்திய சந்தையில் பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்களும் எலெக்ட்ரிக் வாகன பிரிவில் அதிக கவனம் செலுத்த துவங்கியுள்ளன. எலெக்ட்ரிக் வாகன பிரிவில் தொடர்ந்து புது மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில், ரூ.10 லட்சத்திற்குள் இந்திய சந்தையில் கிடைக்கக்கூடிய எலெக்ட்ரிக் கார்களை அறிந்து கொள்வோம்.

    எம்ஜி கோமெட் EV

    நகர்ப்புற பயன்பாட்டிற்காக, இரு கதவுகளுடன் வடிவமைக்கப்பட்ட சிறிய ரக ஹேட்ச்பேக் கார் கோமெட் EV. இந்திய சந்தையில் இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.6.24 லட்சத்தில் தொடங்குகிறது. இதில் 17.3 கிலோ வாட்ஸ் ஹவர் பேட்டரி பொருத்தப்படுகிறது. ஒரு முறை முழு சார்ஜ் செய்தால் இந்த கார் அதிகபட்சம் 230 கிலோமீட்டர்கள் வரை செல்லும் என எம்ஜி கூறுகிறது.

    இந்த காரின் உட்புறம் 10.25 இன்ச் தொடுதிரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், 10.25 இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே என இரட்டைத்திரை அமைப்பு கொண்டுள்ளது. பின் இருக்கைகளுக்கு எளிதாகச் செல்ல முன்பக்க இருக்கைகள் சாய்ந்து நகரும் வசதியைக் கொண்டுள்ளன. நகர்ப்புற பயணிகளுக்கும், பட்ஜெட் விலையில் ஒரு சிறிய காரை விரும்புபவர்களுக்கும் இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.

     


    டாடா டியாகோ EV

    டாடா நிறுவனத்தின் நான்கு கதவுகள் கொண்ட எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் கார் இது. இந்த மாடலின் ஆரம்ப விலை ரூ.7.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). இந்த காரில் 19.2 கிலோ வாட்ஸ் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் கார் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 250 கிலோமீட்டர்கள் வரை ரேஞ்ச் வழங்கும். டி.சி. பாஸ்ட் சார்ஜிங் வசதி இருப்பதால், ஒரு மணி நேரத்திற்கும் குறைவாகவே 10 சதவிகிதம் முதல் 80 சதவிகிதம் வரை சார்ஜ் செய்ய முடியும்.

    டாடா பன்ச் EV

    இது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரத்யேக ஆக்டி.இவி (Acti.ev) பிளாட்பார்மில் கட்டமைக்கப்பட்ட மைக்ரோ எஸ்யூவி கார் ஆகும். இதன் ஸ்மார்ட் வேரியண்ட் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.9.99 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. இந்த ஸ்மார்ட் வேரியண்ட்டில் 25 கிலோ வாட்ஸ் ஹவர் பேட்டரி பொருத்தப்படுகிறது. இது 315 கிலோமீட்டர்கள் வரை 'ரேஞ்ச்' வழங்கும். 

    • சோதிக்கப்பட்ட மாடல் ஐந்து இருக்கைகள் கொண்ட, 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் தானியங்கி வேரியண்ட் ஆகும்.
    • சிட்ரோயன் நிறுவனம் ஏர்கிராஸ் X மாடலுக்கான முன்பதிவுகளை தொடங்கியது.

    சிட்ரோயன் நிறுவனத்தின் C3 ஏர்கிராஸ் மாடல் பாதுகாப்பு சோதனைகளில் அசத்தியுள்ளது. பாரத் புதிய கார் மதிப்பீட்டுத் திட்டத்தில் (பாரத் NCAP) C3 ஏர்கிராஸ் சிறந்த மதிப்பெண்களை பெற்றுள்ளதாக சிட்ரோயன் இந்தியா அறிவித்துள்ளது.

    இந்த SUV பயணிகள் பாதுகாப்பில் (AOP) 27.05/32 மதிப்பெண்களைப் பெற்று, முழு ஐந்து நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்றது. குழந்தை பயணிகள் பாதுகாப்பில் (COP) ஏர்கிராஸ் 40/49 புள்ளிகளைப் பெற்று, நான்கு நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்றது. சோதிக்கப்பட்ட மாடல் ஐந்து இருக்கைகள் கொண்ட, 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் தானியங்கி வேரியண்ட் ஆகும்.

    சிட்ரோயன் C3 ஏர்கிராஸ் மாடலில் ஆறு ஏர்பேக்குகள், ISOFIX குழந்தை இருக்கை நங்கூரங்கள், எலெட்ரிக் ஸ்டேபிலிட்டி கண்ட்ரோல் (ESC), ஹில் ஹோல்ட் அசிஸ்ட், டயர் பிரெஷர் மாணிட்டர் மற்றும் அனைத்து பயணிகளுக்கும் சீட் பெல்ட் ரிமைன்டர் உள்ளிட்ட நிலையான பாதுகாப்பு உபகரணங்களுடன் வருகிறது.

    சமீபத்தில், சிட்ரோயன் நிறுவனம் ஏர்கிராஸ் X மாடலுக்கான முன்பதிவுகளை தொடங்கியது. இது வரும் நாட்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. புதிய மாடல் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பசால்ட் X மற்றும் C3 X போன்ற அப்டேட்களைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • வழக்கமான கார்களுக்கு மாற்றாக, எலெக்ட்ரிக் கார்கள் பிரத்யேகமாக தயாரிக்கப்படும்.
    • வருடாந்திர கணக்கில், சிஎன்ஜி கார்களை விட, எலெக்ட்ரிக் கார்களே சிக்கனம் நிறைந்தவையாக தோன்றுகின்றன.

    பெட்ரோல், டீசல் கார்கள் பழைய டிரெண்ட் ஆகி விட்டன. ஆட்டோமொபைல் துறையில் இப்போதைக்கு, எலெக்ட்ரிக் கார்களும், சிஎன்ஜி கார்களும் தான் அதிகமாக விற்பனையாகின்றன. இந்நிலையில், ஜிஎஸ்டி விலை குறைப்பு நடவடிக்கைகளில், கார் வாங்க திட்டமிடுபவர்கள், பெட்ரோல்-டீசல் மாடல்களுக்கு மாற்றாக எலெக்ட்ரிக் மற்றும் சிஎன்ஜி கார்களை தேர்வு செய்யலாம். ஏனெனில் அதில் நிறைய நன்மைகளும் இருக்கின்றன.

    கார்களில் எலெக்ட்ரிக் சிறந்ததா, இல்லை சிஎன்ஜி சிறந்ததா? என்பதை பற்றி தொடர்ந்து பார்ப்போம்...

    சிஎன்ஜி

    'கம்பிரஸ்ட் நேச்சுரல் கேஸ்' என்பதன் சுருக்கம்தான் சிஎன்ஜி இயல்பான கார்களில், கூடுதலாக கியாஸ் சிலிண்டர்களை பொருத்தி, சிஎன்ஜி கியாஸ் நிரப்பி காரை இயக்குவார்கள்.

    எலெக்ட்ரிக்

    மின்சாரத்தில் இயங்கும் கார் இது. வழக்கமான கார்களுக்கு மாற்றாக, எலெக்ட்ரிக் கார்கள் பிரத்யேகமாக தயாரிக்கப்படும்.

    இயக்கத்திறன்

    எலெக்ட்ரிக்-சிஎன்ஜி-யை விட பெட்ரோல், டீசல் என்ஜின் கார்களை விடவும் எலெக்ட்ரிக் கார்களின் இயக்கத்திறன் அசாத்தியமானது. பெட்ரோல் கார்களை விடவும் மின்னல் வேக இயக்கத்திறனை எலெக்ட்ரிக் கார்கள் பெற்றிருக்கின்றன.

    சிஎன்ஜி - எலெக்ட்ரிக் கார்களை விட, கொஞ்சம் குறைவான இயக்கத்திறனே சிஎன்ஜி கார்களுக்கு உண்டு. இருப்பினும், நெடுஞ்சாலை, மலைப்பாதைகளில் சூப்பராக இயங்கும்.

    எரிபொருள்

    எலெக்ட்ரிக்:

    எலெக்ட்ரிக் கார்களுக்கு தேவையான மின்சக்தியை வழங்கும் இ-சார்ஜிங் ஸ்டேஷன்கள் தமிழகத்தின் நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டு வருகின்றன. நகர பயன்பாட்டில் ஷாப்பிங் மால், சினிமா தியேட்டர்களில் இ-சார்ஜிங் வசதி இருப்பதால், தைரியமாக வாங்கலாம். ஆனால் நெடுஞ்சாலை பயணங்களை மட்டும், கவனமாக திட்டுமிட்டு பயணிக்க வேண்டும்.

    (சார்ஜ் நிரப்ப 30 நிமிடம் தொடங்கி, சில மணி நேரங்கள் ஆகலாம்)

    சிஎன்ஜி:

    சிஎன்ஜி நிரப்பும் ஸ்டேஷன்கள் சென்னையில் நிறைய காணப்படுகிறது. சென்னையை தாண்டினால் நெடுஞ்சாலைகளிலும் நிறைந்திருக்கிறது. அப்படியே, சிஎன்ஜி கியாஸ் தீர்ந்து விட்டாலும் கவலையில்லை, பெட்ரோல் வசதியை தேர்ந்தெடுத்து, பெட்ரோலில் பயணிக்கலாம். இருவிதமான வாய்ப்புகளை, சிஎன்ஜி கார் வழங்குகிறது.

    (பெட்ரோல் நிரப்புவதுபோல சில நிமிடங்களில், சுலபமாக கியாஸ் நிரப்பலாம்)

    சிக்கனம்

    வருடாந்திர கணக்கில், சிஎன்ஜி கார்களை விட, எலெக்ட்ரிக் கார்களே சிக்கனம் நிறைந்தவையாக தோன்றுகின்றன. எலெக்ட்ரிக் வாகனங்கள் சிஎன்ஜி-யை விட குறைவான செலவிலேயே இயங்குகிறது. எலெக்ட்ரிக் காரின் முழு சார்ஜிற்கும் சுமார் 200 ரூபாய் செலவாகலாம். ஆனால் அதன் மூலம் 100 கிலோமீட்டர்கள் பயணம் செய்யலாம். அதுவே, சிஎன்ஜி-யில் 200 ரூபாயில் 60 கிலோமீட்டர்கள் தூரம் மட்டுமே பயணிக்க முடியும்.

    விலை

    கார்களின் விலை நிலவரப்படி, எலெக்ட்ரிக் கார்களை விட சிஎன்ஜி கார்கள் மிக மிக குறைவு. பட்ஜெட் விலையில் கூட சிஎன்ஜி கார்களை வாங்கலாம். உதாரணத்திற்கு, ரூ.10 லட்சத்திலேயே சிஎன்ஜி சாதனத்துடன் அசத்தலான செடான் காரை வாங்கிவிட முடியும். அதுவே எலெக்ட்ரிக் ரகமாக இருந்தால், செடான் மாடலை வாங்க குறைந்தபட்சம் ரூ.15 லட்சம் தேவைப்படும். அதனால் விலை நிலவரப்படி, பட்ஜெட் பிரியர்களின் தேர்வாக இருப்பது, சிஎன்ஜி தான்.

    • மாருதி இன்விக்டோவும் பாதுகாப்பில் வலுவாக பொருத்தப்பட்டுள்ளது.
    • இந்திய சந்தையில் இன்விக்டோ மாடல் மாருதியின் வரிசையில் ஒரு பிரீமியம் MPV ஆக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

    பாரத் NCAP சோதனைகளில், மாருதி சுசுகி இன்விக்டோ 5 நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டைக் பெற்றுள்ளது. மாருதி இன்விக்டோ ஆல்பா+ 7-சீட்டர் மற்றும் ஜீட்டா+ 8-சீட்டர் வேரியண்ட்களில் சோதிக்கப்பட்ட இன்விக்டோ, விசாலமானதாகவும் வசதியாகவும் இருப்பது மட்டுமல்லாமல், பாதுகாப்பிலும் பெரியதாக இருப்பதைக் காட்டியது.

    இன்விக்டோ மாடல் பெரியவர்களுக்கான பாதுகாப்பிற்காக 32 இல் 30.43 புள்ளிகளையும், குழந்தைகளுக்கான பாதுகாப்பிற்காக 49 இல் 45 புள்ளிகளையும் பெற்றுள்ளது. இது இந்தியாவின் பாதுகாப்பான கார் கிளப்பின் ஒரு பகுதியாக அமைந்தது.

    பயணிகள் பாதுகாப்பு மதிப்பீடு: 30.43/32 – கிட்டத்தட்ட குறைபாடற்றது

    முன்பக்க ஆஃப்செட் விபத்து சோதனையில் இன்விக்டோ சிறப்பாக செயல்பட்டது, ஓட்டுநர் மற்றும் பயணி இருவரின் தலை, கழுத்து, முழங்கால்களை பாதுகாத்தது. ஓட்டுநரின் மார்பு "போதுமானதாக" இருந்தது, மீதமுள்ளவை "நல்லதாக" இருந்தன. இருப்பினும், முக்கியமான விஷயம் என்னவென்றால், பாடிஷெல் மற்றும் ஃபுட்வெல் ஆகியவை இன்விக்டோவின் திடமான கட்டமைப்பை பிரதிபலிக்கும் வகையில் நிலையானதாக உள்ளன.

    இன்விக்டோ அனைத்து முக்கிய பகுதிகளிலும் "நல்ல" பாதுகாப்புடன் பக்கவாட்டு சோதனையில் சிறப்பாக செயல்பட்டது. கடினமான பக்கவாட்டு கம்பத்தில் சோதிக்கப்பட்டபோதும், அது சிறப்பாக செயல்பட்டது, பக்கவாட்டு விபத்துகளின் போது MPVகள் பாதிக்கப்படக்கூடிய இடங்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்பதை நிரூபிக்கிறது.

    குழந்தை பயணி பாதுகாப்பு மதிப்பீடு: 45/49 – மிகவும் நல்லது

    பின்புறமாக எதிர்கொள்ளும் ISOFIX மவுண்ட்களை தரநிலையாகக் கொண்டு, 18 மாதங்கள் மற்றும் 3 ஆண்டுகள் பின்புறமாக எதிர்கொள்ளும் டம்மிகளுடன் சோதிக்கப்பட்ட நிலையில், இன்விக்டோ டைனமிக் கிராஷ் செயல்திறனில் அதிகபட்ச புள்ளிகளைப் பெற்றது. பக்கவாட்டு மற்றும் முன்பக்க தாக்கங்கள் சரியான மதிப்பெண் பெற்றன.

    மாருதி இன்விக்டோவும் பாதுகாப்பில் வலுவாக பொருத்தப்பட்டுள்ளது. அடிப்படை பாதுகாப்பை வலியுறுத்தும் ஒரு திடமான தொகுப்புடன் முன், பக்க மற்றும் திரைச்சீலைகளைப் பாதுகாக்கும் ஆறு ஏர்பேக்குகள் அனைத்து வகைகளிலும் நிலையானவை. இது பயணி பாதுகாப்பை முழுமையாக்குகிறது.

    அனைத்து டிரிம்களிலும் எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) கிடைக்கிறது மற்றும் கடினமான ஓட்டுநர் சூழ்நிலைகளில் வாகனம் நிலையாக இருக்க உதவுகிறது.

    இன்விக்டோ ADAS (அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம்ஸ்) உடன் வரவில்லை என்றாலும், அதன் உத்தி நடைமுறைக்குரியது. அதன் வகுப்பிற்குள் உள்ள அனைத்து வேரியண்ட்களிலும் அனைத்து அடிப்படை பாதுகாப்பு அத்தியாவசியங்களையும் உள்ளடக்கியுள்ளது.

    இந்திய சந்தையில் இன்விக்டோ மாடல் மாருதியின் வரிசையில் ஒரு பிரீமியம் MPV ஆக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.24.97 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ.28.61 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ், எம்ஜி ஹெக்டர் பிளஸ் மற்றும் டாடா சஃபாரி ஆகியவற்றுடன் அதன் டாப் எண்ட் மாடல்களுடன் நேரடியாக போட்டியிடுகிறது.

    • வால்வோ நிறுவனம் இதுவரை தயாரித்த மின்சார கார்களில் மிக சிறிய மாடலாக EX30 அமைந்துள்ளது.
    • ஒரு முறை சார்ஜ் செய்தால் 480 கிலோமீட்டர்கள் (WLTP) வரையிலான ரேஞ்ச் வழங்குகிறது.

    வால்வோ இந்தியா நிறுவனம் தனது மிகவும் மலிவு விலை கார்: EX30-ஐ ரூ.41 லட்சம் அறிமுக எக்ஸ்-ஷோரூம் விலையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது. பண்டிகை கால சலுகையின் ஒரு பகுதியாக, வாடிக்கையாளர்கள் இந்த புதிய EV-யை அக்டோபர் 19ஆம் தேதி வரை ரூ.39.99 லட்சத்திற்கு முன்பதிவு செய்து வாங்கலாம். டெலிவரி நவம்பர் மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்திய சந்தையில் வால்வோ நிறுவனத்திற்கு EX30 மாடல் திருப்புமுனையாக இருக்கலாம். ரூ. 40 லட்சத்திற்கும் குறைவான விலையில் (முன்கூட்டிய இருப்பு விலை), இந்த மாடல் கச்சிதமான இடத்தில் அமர்ந்திருக்கிறது. வால்வோ EX40 மற்றும் EC40 மாடலுக்கு கீழே நிலைநிறுத்தப்பட்டுள்ள EX30, நன்கு கட்டமைக்கப்பட்ட மின்சார காரை தேடும் இளம் வாடிக்கையாளர்களுக்கு நல்ல தேர்வாக இருக்கும்.

    வால்வோ நிறுவனம் இதுவரை தயாரித்த மின்சார கார்களில் மிக சிறிய மாடலாக EX30 அமைந்துள்ளது. இந்த கார் பெங்களூரு அருகில் உள்ள வால்வோ நிறுவனத்தின் ஹோஸ்கோட் ஆலையில் உள்ளூரில் அசெம்பிள் செய்யப்படுகிறது. இந்த மின்சார காரில் 69kWh பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 480 கிலோமீட்டர்கள் (WLTP) வரையிலான ரேஞ்ச் வழங்குகிறது.

    இதன் ஒற்றை-மோட்டார், ரியர்-வீல் டிரைவ் செட்டப் 272bhp பவர், 343Nm நியூட்டன் மீட்டர் டார்க் உற்பத்தி செய்கிறது. இத்துடன் 12.3-இன்ச் டச்-ஸ்கிரீன், 9 ஸ்பீக்கர்களுடன் கூடிய 1040 வாட்ஸ் ஹர்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம், டிஜிட்டல் கீ பிளஸ் மற்றும் NFC ஸ்மார்ட் கார்டு, பனோரமிக் சன்ரூஃப், வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் ஆம்பியன்ட் லைட்டிங் தீம்கள் இதன் சிறப்பம்சங்கள் ஆகும்.

    புதிய வால்வோ EX30 மாடலில் லேன் கீப்பிங் அசிஸ்ட், அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல், 360 டிகிரி சரவுண்ட் வியூ கேமரா மற்றும் இன்டர்செக்ஷன் ஆட்டோ-பிரேக் போன்ற ADAS அம்சங்களையும் பெறுகிறது. இந்த கார் மாடலுக்கு வால்வோ நிறுவனம் மூன்று ஆண்டுகள் வாரண்டி, RSA தொகுப்பை வழங்குகிறது. இத்துடன் எட்டு ஆண்டுகள் பேட்டரி வாரண்டி பேக்கேஜ் மற்றும் வால் பாக்ஸ் சார்ஜர் ஆகியவையும் உள்ளன.

    • 7 ஸ்பீடு டி.எஸ்.ஜி. ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் வழங்கப்படுகிறது.
    • இந்த கார் அதிகபட்சமாக மணிக்கு 250 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.

    ஸ்கோடா நிறுவனம், புதிய ஆக்டேவியா ஆர்எஸ் காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த கார் வருகிற நவம்பர் மாதம் அறிமுகமாகும் என்று அந்நிறுவனம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆக்டேவியா சீரிசில் இது 4ஆம் தலைமுறை கார் மாடல் ஆகும். இதில், 2.0 லிட்டர் 4 சிலிண்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் இடம் பெற்றிருக்கும். இத்துடன் 7 ஸ்பீடு டி.எஸ்.ஜி. ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் வழங்கப்படுகிறது. இது அதிகபட்சமாக 265 எச்.பி. பவர், 370 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்தும்.

    இந்த கார் அதிகபட்சமாக மணிக்கு 250 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. மேலும், இது மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 6.4 நொடிகளில் எட்டிவிடும். தோற்றத்தை பொறுத்தவரை, கருப்பு நிற ரேடியேட்டர் கிரில், புதிய வடிவமைப்புடன் கூடிய சக்கரங்கள், ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப், எல்இடி டிஆர்எல்-கள் இடம்பெறும்.

    காரின் உள்புறத்தில் சிவப்பு நிற கோடுடன் கூடிய இன்டீரியர் உள்பட பல அம்சங்கள் இடம்பெறும் என்று நிறுவனம் தரப்பில் கூறப்படுகிறது.

    • உலகளவில், ஹூண்டாய் அதன் மிகச்சிறிய மின்சார எஸ்யூவி-யான இன்ஸ்டெரை விற்பனை செய்கிறது.
    • இன்ஸ்டெர் மாடல் பெரிய பேட்டரி ஆப்ஷனுடன் 355 கிலோமீட்டர்கள் வரை WLTP-சான்றளிக்கப்பட்ட ரேஞ்ச் வழங்குகிறது.

    2027 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் முற்றிலும் புதிய மின்சார SUV-யை அறிமுகப்படுத்தும் என்று ஹூண்டாய் நிறுவனம் உறுதிப்படுத்தி இருக்கிறது. ஹூண்டாய் நிறுவனத்தின் உலகளாவிய மின்சார வாகனங்கள் வரைபடத்தில் புதிய மாடல் இடம்பெற்றுள்ளது. இது இந்தியாவை மையமாகக் கொண்ட வடிவமைப்பு மற்றும் அம்சங்களுடன் உருவாக்கப்பட்ட ஹூண்டாய் நிறுவனத்தின் முதல் மின்சார வாகனம் ஆகும்.

    ஹூண்டாய் நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கும் புதிய காம்பாக்ட் எஸ்யூவி, ஹூண்டாய் இந்தியாவின் வரிசையில் கிரெட்டா எலெக்ட்ரிக் மாடலின் கீழ் நிலைநிறுத்தப்படு. கிரெட்டா EV மாடலில் பெரிய, அம்சங்கள் நிறைந்த குடும்ப EV-யை விரும்பும் வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்ட போதிலும், இந்த புதிய மாடல் குறைந்த விலையில் ஒரு சிறிய, நகரத்திற்கு ஏற்ற மின்சார எஸ்யூவியை தேடுபவர்களை ஈர்க்கும்.

    உலகளவில், ஹூண்டாய் அதன் மிகச்சிறிய மின்சார எஸ்யூவி-யான இன்ஸ்டெரை விற்பனை செய்கிறது. இன்ஸ்டெர் மாடல் பெரிய பேட்டரி ஆப்ஷனுடன் 355 கிலோமீட்டர்கள் வரை WLTP-சான்றளிக்கப்பட்ட ரேஞ்ச் வழங்குகிறது.

    இந்திய சந்தைக்கென உருவாக்கப்படும் காம்பாக்ட் எஸ்யூவி ஒரு முறை சார்ஜ் செய்தால் சுமார் 300 கிலோமீட்டர்கள் வரை செல்லும். அம்சங்களைப் பொறுத்தவரை, கனெக்டெட்டகார் தொழில்நுட்பம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் ஆறு ஏர்பேக்குகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

    இந்த காம்பாக்ட் SUV, உலகளாவிய மாடலின் நேரடி தழுவலாக இல்லாமல், இந்தியாவிற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஹூண்டாயின் முதல் மின்சார வாகனமாக இருக்கும். கிரெட்டா EV மிட் ரேஞ்ச் மின்சார எஸ்யூவி பிரிவில் நிலை நிறுத்தப்படுவதால், இந்த மாடல் காம்பாக்ட் SUV வகையை இலக்காகக் கொண்டிருக்கும்.

    ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய காம்பேக்ட் எஸ்யூவி மாடலுக்கு டாடா மற்றும் மஹிந்திரா நிறுவனங்களின் வரவிருக்கும் மாடல்களுடன் போட்டி தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • இந்திய சந்தையில் ஜிஎஸ்டி 2.0-க்குப் பிறகு மாருதி சுசுகி வாகனங்களின் நெக்சா சீரிஸ் மாடல்கள் விலை குறைப்பு பெற்றுள்ளன.
    • பிரீமியம் டீலர்ஷிப்கள் இந்த நன்மைகளை செப்டம்பர் 22ஆம் தேதி முதல் நுகர்வோருக்கு வழங்க உள்ளன.

    மத்திய அரசு பல்வேறு பொருட்களுக்கு சரக்கு மற்றும் சேவை (ஜிஎஸ்டி) வரி வசூலிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்த வரி விதிப்பில் மாறுதல்களும் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில், பல்வேறு பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி முறையில் மாற்றங்கள் செய்யப்பட்டன.

    இந்த மாற்றங்கள் ஜிஎஸ்டி 2.0 என அழைக்கப்படுகிறது. ஜிஎஸ்டி 2.0 அறிவிப்புக்கு பிறகு பல்வேறு பொருட்களின் விலைகள் மாறியுள்ளன. அதன்படி முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களும் தங்களது வாகனங்கள் விலையை குறைத்து வருகின்றன.

    இந்திய சந்தையில் ஜிஎஸ்டி 2.0-க்குப் பிறகு மாருதி சுசுகி வாகனங்களின் நெக்சா சீரிஸ் மாடல்கள் விலை குறைப்பு பெற்றுள்ளன. பிரீமியம் டீலர்ஷிப்கள் இந்த நன்மைகளை செப்டம்பர் 22ஆம் தேதி முதல் நுகர்வோருக்கு வழங்க உள்ளன. அதன்படி நெக்சா பிராண்டு மாடல்களின் விலை குறைப்பு விவரங்கள் வெளியாகியுள்ளது.

    புதிய விலை விவரங்கள்:

    இக்னிஸ் மாடலின் விலை ரூ. 71,300 குறைக்கப்பட்டு தற்போது ரூ. 5,35,100 என மாறியுள்ளது.

    பலேனோ மாடலின் விலை ரூ. 86,100 குறைக்கப்பட்டு தற்போது ரூ. 5,98,900 என மாறியுள்ளது.

    ஃப்ராங்க்ஸ் மாடலின் விலை ரூ. 1,12,600 குறைக்கப்பட்டு தற்போது ரூ. 6,84,900 என மாறியுள்ளது.

    கிராண்ட் விட்டாரா மாடலின் விலை ரூ. 1,07,000 குறைக்கப்பட்டு தற்போது ரூ. 10,76,500 என மாறியுள்ளது.

    எக்ஸ்எல் 6 மாடலின் விலை ரூ. 52,000 குறைக்கப்பட்டு தற்போது ரூ. 11,52,300 என மாறியுள்ளது.

    ஜிம்னி மாடலின் விலை ரூ. 51,900 குறைக்கப்பட்டு தற்போது ரூ. 12,31,500 என மாறியுள்ளது.

    இன்விக்டோ மாடலின் விலை ரூ. 61,700 குறைக்கப்பட்டு தற்போது ரூ. 24,97,400 என மாறியுள்ளது.

    • ஹெல்மெட் ISI மற்றும் DOT பாதுகாப்பு சான்றிதழ்களை பெற்றிருக்கிறது.
    • ஒவ்வொரு ஹெல்மெட்டிலும் டஸ்ட் ப்ரூஃப் கேரி பேக் மற்றும் EPP தொழில்நுட்பத்தைக் காண்பிக்கும் ஒரு மினியேச்சர் மாடல் வருகிறது.

    ஸ்டீல்பேர்ட் (Steelbird) ஹை-டெக் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் இக்னைட் (IGNYTE) ஹெல்மெட், ரெட்ரோ ஸ்டைலிங் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை இணைக்கும் IGN-58 திறந்த முக ஹெல்மெட்டை அறிமுகம் செய்துள்ளது. குறைந்த விலையில், எக்ஸ்பான்டெட் பாலிப்ரொப்பிலீன் (EPP) லைனர் தொழில்நுட்பத்துடன் வரும் மிகவும் மலிவு மாடல்களில் இந்த ஹெல்மெட் ஒன்றாகும்.

    IGN-58 இன் EPP லைனர் மீண்டும் மீண்டும் ஏற்படும் அதிர்ச்சிகளை உறிஞ்சி, வடிவத்தை மீண்டும் பெறவும், தண்ணீர் மற்றும் ரசாயனங்களின் வெளிப்பாட்டைத் தாங்கவும் முடியும். இது அதன் நீண்டகால பயன்பாட்டிற்கு அதிக ஆயுள் மற்றும் நம்பகத்தன்மையை அளிக்கிறது. ஹெல்மெட் ISI மற்றும் DOT பாதுகாப்பு சான்றிதழ்களை பெற்றிருக்கிறது.



    அதன் வடிவமைப்பில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் ABS ஷெல், UV மற்றும் ஸ்கிராட்ச் ரெசிஸ்டண்ட் உடன் கூடிய பபிள் வைசர் மற்றும் பாதுகாப்பான கட்டுதலுக்கான டபுள் டி-ரிங் பக்கிள் அமைப்பு ஆகியவை பதிக்கப்பட்டுள்ளன. கூடுதல் வசதிக்காக, ஹெல்மெட் ஒவ்வாமை எதிர்ப்பு பேட், சுவாசிக்கக்கூடிய மெஷ் பேனல்கள் மற்றும் நீக்கக்கூடிய சீக் பேட்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு ஹெல்மெட்டிலும் டஸ்ட் ப்ரூஃப் கேரி பேக் மற்றும் EPP தொழில்நுட்பத்தைக் காண்பிக்கும் ஒரு மினியேச்சர் மாடல் வருகிறது.

    IGN-58 540மிமீ முதல் 620மிமீ வரையிலான அளவுகளில் வைட், டெசர்ட் ஸ்டார்ம், அத்தெனா கிரே, பேட்டில் கிரீன், செஸ்ட்நட் ரெட், பிளாக், ஸ்குவாட்ரான் புளூ, டல் ஸ்லேட், டீப் கிரீன், அர்மடா புளூ மற்றும் ரெடிட்ச் புளூ போன்ற வண்ணங்களில் விற்பனை செய்யப்படும். ரைடர்கள் தங்கள் தோற்றத்தைத் தனிப்பயனாக்க ஐந்து ஈகிள் தீம் டெக்கால் செட்களில் இருந்தும் தேர்வு செய்யலாம். இந்திய சந்தையில் இந்த ஹெல்மெட்டின் விலை ரூ. 2,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    • டாப் வேரியண்ட்கள் ஹோண்டா சென்சிங் மூலம் ADAS செயல்பாடுகளையும் வழங்குகின்றன.
    • 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் CVT ஆட்டோமேடிக் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது.

    ஹோண்டா நிறுவனம் தனது மூன்றாம் தலைமுறை அமேஸ் மாடலுக்கு புதிய "கிரிஸ்டல் பிளாக் பேர்ல்" நிறத்தை சேர்த்துள்ளது. இந்தச் சேர்க்கையுடன், அமேஸ் செடான் மாடல் இப்போது லூனார் சில்வர், மீடியோராய்டு கிரே, பிளாட்டினம் ஒயிட், கோல்டன் பிரவுன், ரேடியன்ட் ரெட் மற்றும் அப்சிடியன் புளூ உள்பட மொத்தம் ஏழு வண்ண விருப்பங்களில் வழங்கப்படுகிறது.

    இளம் வாடிக்கையாளர்களிடையே அடர் மற்றும் ஸ்போர்ட்டியர் வண்ணங்களுக்கான தேவை அதிகரித்து வருவதால், புதிய நிறம் சேர்க்கப்பட்டுள்ளதாக ஹோண்டா கூறுகிறது.

    புதிய நிறம் தவிர, இந்த காரில் வேறு எந்த இயந்திர மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. ஹோண்டா அமேஸ் மாடல் தொடர்ந்து 1.2 லிட்டர், 4-சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இது 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் CVT ஆட்டோமேடிக் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது.



    அம்சங்களை பொருத்தவரை அமேஸ் மாடல் DRLகளுடன் ஆட்டோமேடிக் LED ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள், LED ஃபாக் லைட்கள், 15-இன்ச் அலாய் வீல்கள், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்-பிளேவுடன் 7 இன்ச் டச்-ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், குரூயிஸ் கண்ட்ரோல், புஷ்-பட்டன் ஸ்டார்ட் மற்றும் ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    பாதுகாப்பிற்கு முன்பக்கத்தில், ஆறு ஏர்பேக்குகள், ISOFIX மவுண்ட்கள் மற்றும் EBD உடன் ABS ஆகியவற்றைப் பெறுகிறது. அதே நேரத்தில் டாப் வேரியண்ட்கள் ஹோண்டா சென்சிங் மூலம் ADAS செயல்பாடுகளையும் வழங்குகின்றன.

    ஜிஎஸ்டி 2.0 இன் முழு பலனையும் தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதாக ஹோண்டா உறுதிப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, மூன்றாம் தலைமுறை அமேஸ் ரூ. 95,000 வரை விலைக் குறைப்புகளை பெறுகிறது.

    ×