என் மலர்
டெல்லி
- அங்கீகரிக்கப்படாத நீரேற்று திட்டங்களை கர்நாடகம் தங்களது பாசனத்துக்காக செயல்படுத்தக்கூடாது என்று வற்புறுத்தினர்.
- தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா மற்றும் புதுச்சேரிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
புதுடெல்லி:
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 46-வது கூட்டம் கடந்த மாதம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் டிசம்பர் மாதத்துக்கு 7.35 டி.எம்.சி. தண்ணீரை தமிழக அதிகாரிகள் கேட்டனர். மேலும் அங்கீகரிக்கப்படாத நீரேற்று திட்டங்களை கர்நாடகம் தங்களது பாசனத்துக்காக செயல்படுத்தக்கூடாது என்றும் வற்புறுத்தினர்.
இந்தநிலையில் ஆணையத்தின் 47-வது கூட்டம் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு டெல்லியில் உள்ள மேலாண்மை ஆணைய அலுவலகத்தில் நடக்கிறது. இதில் பங்கேற்க தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா மற்றும் புதுச்சேரிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
- மற்ற 5 பேருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.
- விசாரணைக்கு முந்தைய சிறை காலத்தை தண்டனையாக கருத முடியாது என நேற்றைய தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020 பிப்ரவரியில் வடகிழக்கு டெல்லியில் நடந்த குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) எதிர்ப்பு போராட்டங்கள் வன்முறையாக மாறிய சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கலவரத்தில் குறைந்தது 53 பேர் கொல்லப்பட்டனர். மொத்தம் 700க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த கலவர வழக்கில் JNU பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் ஷர்ஜீல் இமாம் மற்றும் உமர் காலித் உட்பட 15 பேர் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (UAPA) கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் இமாம் மற்றும் உமர் காலித்தின் ஜாமின் மனுக்கள் 2022 முதல் நிலுவையில் உள்ளது. உச்சநீதிமன்ற அமர்வு அவர்களுக்கு ஜாமின் வழங்க பலமுறை மறுப்பு தெரிவித்தது.
சமீபத்தில் தனது சகோதரியின் திருமணத்திற்காக அவருக்கு 14 நாட்கள் இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டது. ஜாமின் காலம் முடிந்து கடந்த டிசம்பர் 29 காலித் சிறை திரும்பினார்.
இந்நிலையில், உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாம் ஆகியோரின் ஜாமின் மனுவை உச்ச நீதிமன்றம் இன்று நிராகரித்தது.
அதே சமயம், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட குல்ஃபிஷா ஃபாத்திமா, மீரா ஹைதர், ஷிஃபா உர் ரஹ்மான், முகமது சலீம் கான் மற்றும் ஷதாப் அகமது ஆகிய 5 பேருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.

இந்நிலையில் தனக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது குறித்து உமர் காலித் உருக்கமாக பேசியுள்ளார். அவர் பேசியவற்றை குறித்து அவரது தோழி பானோஜ்யோத்ஸ்னா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், "எனக்கு ஜாமீன் கிடைக்கவில்லை என்றாலும், மற்றவர்களுக்குக் கிடைத்திருப்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. இப்போது சிறையே எனது வாழ்க்கை ஆகிவிட்டது. மற்றவர்கள் விடுதலை ஆவதைப் பார்க்கும்போது நான் மிகவும் நிம்மதியாக உணர்கிறேன்" என உமர் காலித் கூறியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒருவருக்கு வழங்கப்படும் விசாரணைக்கு முந்தைய சிறை காலத்தை தண்டனையாக கருத முடியாது என நேற்றைய தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, விசாரணையே இல்லாமல், குற்றம் நிரூபிக்கப்டாமல் கடந்த 5 ஆண்டுகளாக உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாம் சிறையில் வைக்கப்பட்டிருப்பதற்கு எந்த அர்த்தமும் இல்லை என்பதே அதற்கு அர்த்தம்.
- நாளிதழ்கள் மற்றும் பத்திரிகைகள் உள்ளிட்ட அச்சு ஊடகங்களில் விளம்பரங்களுக்கு ஆன செலவே மட்டும்தான் இந்த ரூ. 4.76 கோடி.
- மின்னணு, சமூக ஊடங்கங்கள், விளம்பர பலகைகள், போஸ்டர்கள் ஆகியவற்றை சேர்த்தால் மொத்தத் தொகை இன்னும் பல மடங்கு அதிகமாக இருக்கும்.
நாடு முழுவதும் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த 2017ம் ஆண்டில் மத்திய பாஜக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.
8 வருடங்களுக்கு பிறகு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 4 அடுக்கு ஜி.எஸ்.டி. 2 அடுக்காக குறைத்து அறிவிக்கப்பட்டது. அதாவது, கடந்த செப்டம்பர் மாதம் 22-ந் தேதி, 5% மற்றும் 18% அடுக்குகளை மட்டுமே கொண்டிருக்கும் வரி முறை அமலுக்கு வந்தது. அத்தியாவசிய பொருட்கள் பல 5% அடுக்கில் கொண்டுவரப்பட்டது.
இந்த ஜிஎஸ்டி சீர்த்திருத்தத்தை 'ஜிஎஸ்டி பச்சத் உற்சவ்' - 'ஜிஎஸ்டி சேமிப்பு திருவிழா' என்ற பெயரில் மத்திய பாஜக அரசு நாடு விளம்பரப்படுத்தியது.
இந்நிலையில் இந்த விளம்பரங்களுக்கு செப்டம்பர் 4, 2025 முதல் அக்டோபர் 28, 2025 வரையிலான வெறும் 55 நாட்களில் 4.76 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை மத்திய அரசு செலவிட்டுள்ளது.
மகாராஷ்டிராவை சேர்ந்த அஜய் வாசுதேவ் போஸ் என்பவர் தாக்கல் செய்த ஆர்டிஐ விண்ணப்பத்திற்கு, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தகவல் பணியகம் அளித்த பதிலில் இது தெரியவந்துள்ளது.
நாளிதழ்கள் மற்றும் பத்திரிகைகள் உள்ளிட்ட அச்சு ஊடகங்களில் விளம்பரங்களுக்கு ஆன செலவே மட்டும்தான் இந்த ரூ. 4.76 கோடி. அச்சு ஊடக செலவு மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்னணு, சமூக ஊடங்கங்கள், விளம்பர பலகைகள், போஸ்டர்கள் ஆகியவற்றை சேர்த்தால் மொத்தத் தொகை இன்னும் பல மடங்கு அதிகமாக இருக்கும்.
- இந்தியாவை பிளவுப்படும சக்திகளின் பிரபல முகங்கள் காலித் மற்றும் இமாம்.
- அஃப்சல் குருவில் இருந்து உமர் மற்றும் ஷர்ஜீல் வரை நாட்டின் நலனுக்கு எதிரான கும்பலுக்கு காங்கிரஸ் ஆதரவு.
2020 பிப்ரவரியில் வடகிழக்கு டெல்லியில் நடந்த குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) எதிர்ப்பு போராட்டங்கள் வன்முறையாக மாறிய சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கலவரத்தில் குறைந்தது 53 பேர் கொல்லப்பட்டனர். மொத்தம் 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த கலவர வழக்கில் JNU பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் ஷர்ஜீல் இமாம் மற்றும் உமர் காலித் உட்பட 15 பேர் மீது கலவரத்திற்கு சதி செய்ததாக சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (UAPA) கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் இமாம் மற்றும் உமர் காலித்தின் ஜாமீன் மனுக்கள் 2022 முதல் நிலுவையில் உள்ளது. உச்சநீதிமன்ற அமர்வு அவர்களுக்கு ஜாமீன் வழங்க பலமுறை மறுப்பு தெரிவித்தது.
சமீபத்தில் தனது சகோதரியின் திருமணத்திற்காக அவருக்கு 14 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. ஜாமீன் காலம் முடிந்து கடந்த டிசம்பர் 29 காலித் சிறை திரும்பினார்.
இதனிடையே நியூயார்க் நகரின் புதிய மேயராகப் பதவியேற்றுள்ள ஜோஹ்ரான் மம்தானி ஏற்கனவே உமர் காலித்திற்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். மேலும், உமர் காலித்துக்கு ஜாமீன் வழங்கக் கோரியும், சர்வதேச சட்டங்களின்படி அவருக்கு நியாயமான விசாரணை நடத்த வலியுறுத்தினார்.
இந்நிலையில், உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாம் ஆகியோரின் ஜாமீன் மனுவை உச்ச நீதிமன்றம் இன்று நிராகரித்தது. அதே சமயம், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட குல்ஃபிஷா ஃபாத்திமா, மீரா ஹைதர், ஷிஃபா உர் ரஹ்மான், முகமது சலீம் கான் மற்றும் ஷதாப் அகமது ஆகிய 5 பேருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாம் ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்த உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு காங்கிரஸ் முகத்தில் அறையப்பட்ட மிகப்பெரிய அறை என பாஜக தேசிய தலைவர் ஷேசாத் பூனாவாலா தெரிவித்துள்ளா்.
இது தொடர்பாக பூனாவாலா கூறியதாவது:-
இந்தியாவை பிளவுப்படும சக்திகளின் பிரபல முகங்கள் காலித் மற்றும் இமாம். அவர்களைப் பாதுகாப்பதற்காக, காங்கிரஸ் அமைப்பு "அப்பாவி பாதிக்கப்பட்டவர்கள்" என்று சித்தரித்து வந்தது. உச்சநீதிமன்றம் ஜாமீன் மறுத்துள்ளது காங்கிரஸ் முகத்தில் அறையப்பட்ட மிகப்பெரிய அறை. ஜாமீன் மறுப்பு மூலம் அவர்கள் மீதான முதல்கட்ட குற்றச்சாட்டுகள் உண்மைதான்.
அஃப்சல் குருவில் இருந்து உமர் மற்றும் ஷர்ஜீல் வரை நாட்டின் நலனுக்கு எதிரான கும்பலுக்கு ஆதரவு தெரிவித்த காங்கிரஸ் மன்னிப்பு கேட்டக வேண்டும்.
இவ்வாறு பூனாவாலா தெரிவித்துள்ளார்.
- பழைய பாராளுமன்றத்தின் மைய மண்டபத்தில், இம்மாதம் 14-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை 4 நாட்கள் மாநாடு நடக்கிறது.
- ‘வலிமையான ஜனநாயக அமைப்புகளை பராமரிப்பதில் சபாநாயகர்களின் பங்கு’ என்ற சிறப்பு கருத்தரங்கும் நடைபெறும்.
புதுடெல்லி:
கடந்த 1969-ம் ஆண்டு, காமன்வெல்த் நாடுகளின் பாராளுமன்ற சபாநாயகர்கள் மற்றும் சபைத்தலைவர்கள் அமைப்பு தொடங்கப்பட்டது. அந்த அமைப்பில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது. இதன் மாநாடு, ஆண்டுதோறும் நடந்து வருகிறது.
காமன்வெல்த் நாடுகளின் பாராளுமன்ற சபாநாயகர்களை ஒன்றிணைப்பதுதான் இதன் நோக்கம் ஆகும்.
இந்நிலையில், நடப்பாண்டில், காமன்வெல்த் நாடுகளின் பாராளுமன்ற சபாநாயகர்கள் மற்றும் சபைத்தலைவர்கள் மாநாடு டெல்லியில் நடக்கிறது. இதை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா நடத்துகிறார்.
பழைய பாராளுமன்றத்தின் மைய மண்டபத்தில், இம்மாதம் 14-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை 4 நாட்கள் மாநாடு நடக்கிறது.
15-ந் தேதி, இந்த மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைப்பார் என்று தெரிகிறது.
பாராளுமன்றங்களின் செயல்பாட்டில் செயற்கை நுண்ணறிவு, சமூக வலைத்தளங்கள் ஆகியவற்றை பயன்படுத்துவதுதான் மாநாட்டின் நோக்கமாக இருக்கும் என்று ஓம் பிர்லா கடந்த ஆண்டு தெரிவித்தார்.
அதன்படி, மாநாட்டில், 'பாராளுமன்றத்தில் செயற்கை நுண்ணறிவு', சமூக வலைத்தளங்கள் மற்றும் பாராளுமன்றவாதிகளில் அவற்றின் தாக்கம்', 'பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பு, சுகாதாரம்' ஆகிய தலைப்புகளில் தனித்தனி அமர்வுகள் நடக்கின்றன.
'வலிமையான ஜனநாயக அமைப்புகளை பராமரிப்பதில் சபாநாயகர்களின் பங்கு' என்ற சிறப்பு கருத்தரங்கும் நடைபெறும்.
- தவறான தகவல் மற்றும் பொய்களை பரப்ப வேண்டாம் என்று காங்கிரஸ் கட்சியை கேட்டுக் கொள்கிறேன்.
- அதற்குப் பதிலாக இந்த திட்டத்தை சிறந்ததாக உருவாக்கியதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.
மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், மத்திய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்தை விட, விபி-ஜி ராம் ஜி சட்டம் சிறந்தது எனத் தெரிவித்துள்ளார். மேலும், காங்கிரஸ் இந்த திட்டம் குறித்து தவறான தகவலை பரப்பி வருகிறது என குற்றம்சாட்டினார்.
இது தொர்பாக சிவராஜ் சிங் சவுகான் கூறியதாவது:-
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்தை காப்போம் பிரசாரத்தை தொடங்க இருப்பதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. இது உண்மையில் ஊழலை பாதுகாக்கும் பிரசாரம் ஆகும்.
MGNREGA ஊழலுக்கு இணையான ஒன்றாகிவிட்டது. கிராம சபைகளால் நடத்தப்பட்ட சமூகத் தணிக்கைகளின் கீழ், 10 லட்சத்து 51 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புகார்கள் பெறப்பட்டன. ஒரே வேலை மீண்டும் மீண்டும் செய்யப்பட்டது. வேலை இயந்திரம் மூலம் செய்யப்பட்டது. கால்வாய்கள் மற்றும் சாலைகளைச் சுத்தம் செய்வதாகக் கூறி பணம் முறைகேடாகப் பெறப்பட்டது.
30 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் 60 வயதிற்கு மேலானவர்கள். மோடி அரசின் கீழ் 8.48 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சியல் 2 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வழங்கப்பட்டுள்ளது. நிரந்தரச் சொத்துக்கள் உருவாக்கப்பட்டனவா? அந்தப் பணத்தை மேம்பாட்டுப் பணிகளுக்குப் பயன்படுத்த முடியுமா?
காங்கிரஸ் ஒரு பொய்களின் தொழிற்சாலை. இப்போது அவர்கள் தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்காது என்று கூறுகிறார்கள்.
VB-G RAM G திட்டத்தின் கீழ் ஊழியர்களின் நலன் சிறப்பாக பாதுகாக்கப்படும். அடுத்த நிதியாண்டில் 1,51,282 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். இதில் மத்திய அரசின் பங்கீடு 95,600 கோடி ரூபாயாக இருக்கும். 125 நாட்கள் வேலைக்கான போதுமான பணம் உள்ளது. இது கிராமங்களின் வளர்ச்சியை உறுதி செய்யும்.
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்தை விட விபி-ஜி ராம் ஜி சிறந்த திட்டமாக இருக்கும். தவறான தகவல் மற்றும் பொய்களை பரப்ப வேண்டாம் என்று காங்கிரஸ் கட்சியை கேட்டுக் கொள்கிறேன். அதற்குப் பதிலாக இந்த திட்டத்தை சிறந்ததாக உருவாக்கியதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
- அமைதியான பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுமாறு சம்பந்தப்பட்ட அனைவரையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்
- காரகாஸில் உள்ள இந்தியத் தூதரகம் இந்தியச் சமூகத்தைச் சேர்ந்தவர்களுடன் தொடர்பில் உள்ளது மற்றும் சாத்தியமான அனைத்து உதவிகளையும் தொடர்ந்து வழங்கும்
வெனிசுலா நாட்டின்மீது திடீர் தாக்குதல் நடத்தி, அந்நாட்டு அதிபர் மற்றும் அவரது மனைவியை அமெரிக்கா சிறைபிடித்துள்ளது. மேலும் வெனிசுலாவின் எண்ணெய் இருப்பை இனி தாங்கள்தான் நிர்வகிப்போம் எனவும் அறிவித்துள்ளது.
மறுபுறம் வெனிசுலாவில் பதற்றமான சூழல் நிலவுவதால், அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த அதிகாரமீறலுக்கு உலகின் பலநாடுகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் இந்தியாவும் இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்,
"வெனிசுலாவில் அரங்கேறிவரும் சமீபத்திய நிகழ்வுகள் ஆழ்ந்த கவலையளிக்கின்றன. வெனிசுலாவில் மாறிவரும் ஒவ்வொரு நிலையையும் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். வெனிசுலா நாட்டு மக்களின் நல்வாழ்வு மற்றும் பாதுகாப்பிற்கான தனது ஆதரவை இந்தியா மீண்டும் உறுதிப்படுத்துகிறது. அமைதியான பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுமாறு சம்பந்தப்பட்ட அனைவரையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம், இதன் மூலம் அப்பகுதியில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த முடியும்.
காரகாஸில் உள்ள இந்தியத் தூதரகம் இந்தியச் சமூகத்தைச் சேர்ந்தவர்களுடன் தொடர்பில் உள்ளது மற்றும் சாத்தியமான அனைத்து உதவிகளையும் தொடர்ந்து வழங்கும்." என தெரிவித்துள்ளது.
- கராகஸ் நகரில் சுமார் 7 இடங்களில் அமெரிக்க ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது.
- இதனால் வெனிசுலாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
புதுடெல்லி:
வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப் பொருள் கடத்தப்படுவதாகவும், இதற்கு வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ உடந்தையாக இருப்பதாகவும் அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டி வந்தார்.
வெனிசுலா தலைநகர் கராகஸ் நகரில் நேற்று சுமார் 7 இடங்களில் அமெரிக்க ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதனால் அங்கு அவசரநிலை பிரகடனம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, வெனிசுலா அதிபரும், அவரது மனைவியும் நாடு கடத்தப்பட்டதாகவும், வெனிசுலா நாட்டை அமெரிக்கா நிர்வாகம் செய்யும் என அதிபர் டிரம்ப் அறிவித்தார். அமெரிக்காவின் இந்த அடாவடி நடவடிக்கையால் சர்வதேச அரசியலில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெனிசுலாவில் சமீபத்திய அரசியல் பதட்டங்கள் மற்றும் அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகளால் இந்தியர்கள் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்கும்படி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
வெனிசுலாவில் உள்ள இந்தியர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவும், கராகஸில் உள்ள இந்தியத் தூதரகத்துடன் தொடர்பில் இருக்கவும், அவசரத் தொடர்பு எண்களைப் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்படுகிறார்கள் என தெரிவித்துள்ளது.
- MGNREGA அறக்கட்டளை இல்லை. இது சட்டப்பூர்வ உத்தரவாதம்.
- கோடிக்கணக்கான ஏழை மக்கள் தங்களுடைய சொந்த கிராமத்தில் வேலை பெற்றனர்.
மத்திய அரசு மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்தை திரும்பப் பெற்று, VB GRAM G என்ற பெயரில் புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.
இந்த நிலையில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்தின் மீதான தாக்குதல், கோடிக்கணக்கான மக்கள் மீதான தாக்குதல் என காங்கிரஸ் தலைவர் கார்கே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது:-
காங்கிரஸ் கட்சி தெளிவாக, சந்தேகமின்றி VB GRAM G சட்டத்தை திரும்ப பெற வேண்டும், உரிமை அடிப்படையிலான MGNREGA சட்டத்தை திரும்ப கொண்டு வர வேண்டும், வேலைக்கான உரிமை மற்றும் பஞ்சாயத்திற்கான உரிமையை மீண்டும் வழங்குதல் ஆகிய 3 கோரிக்கைகளை முன் வைக்கிறது. இதனால்தான் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்தை காப்போம் என்ற தேசிய அளவிலான போராட்டத்தை ஜனவரி 10 முதல் பிப்ரவரி 25-ந்தேதி வரை நடத்துகிறோம்.
MGNREGA அறக்கட்டளை இல்லை. இது சட்டப்பூர்வ உத்தரவாதம். கோடிக்கணக்கான ஏழை மக்கள் தங்களுடைய சொந்த கிராமத்தில் வேலை பெற்றனர்.
MGNREGA திட்டம் பசி மற்றும் துயர இடம்பெயர்வைக் குறைத்தது, கிராமப்புற ஊதியத்தை உயர்த்தியது மற்றும் பெண்களின் பொருளாதார கண்ணியத்தை வலுப்படுத்தியது. VB GRAM G இந்த உரிமையை அகற்ற வடிவமைக்கப்பட்டுள்ளது.
நிதி ஒதுக்கீடுகளுக்கு வரம்பு நிர்ணயிக்கப்படும், எனவே நெருக்கடியான காலங்களில் கூட, பணம் தீர்ந்ததும் பணிகள் முடிவடையும். மேலும், நிதியையும் பணிகளையும் மத்திய அரசே தீர்மானிக்கும். இது கிராம சபைகளையும் பஞ்சாயத்துகளையும் பொருத்தமற்ற நிலைக்குத் தள்ளிவிடும்.
MGNREGA-ஐ தாக்குவது கோடிக்கணக்கான தொழிலாளர்களையும் அவர்களின் அரசியலமைப்பு உரிமைகளையும் தாக்குவது போன்றது. ஒவ்வொரு பஞ்சாயத்து முதல் நாடாளுமன்றம் வரை அமைதியாகவும் உறுதியாகவும் நாங்கள் எதிர்ப்போம்.
இவ்வாறு கார்கே தெரிவித்துள்ளார்.
- இந்தியாவை ஆள இந்தியர்களுக்கே உரிமை உண்டு என்பதை வலியுறுத்தினார்.
- வேலுநாச்சியாரின் தியாகமும் தொலைநோக்குத் தலைமையும் பல தலைமுறைகளை ஊக்கப்படுத்தும்.
ராணி வேலு நாச்சியாரின் பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி அவருக்கு புகழாரம் சூட்டி உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
ராணி வேலு நாச்சியாரின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். துணிச்சலையும், வியூகத் திறமையையும் கொண்டிருந்த அவர், இந்தியாவின் துணிச்சல் மிக்க வீராங்கனைகளில் ஒருவராக நினைவுகூரப்படுகிறார்.
காலனித்துவ ஒடுக்குமுறைக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த அவர், இந்தியாவை ஆள இந்தியர்களுக்கே உரிமை உண்டு என்பதை வலியுறுத்தினார்.
நல்லாட்சி மற்றும் கலாச்சார பெருமைக்கான அவரது உறுதிப்பாடும் போற்றத்தக்கது. அவரது தியாகமும் தொலைநோக்குத் தலைமையும் பல தலைமுறைகளை ஊக்கப்படுத்தும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- டெல்லியில் புத்தர் தொடர்பான மாபெரும் சர்வதேச கண்காட்சி இன்று தொடங்குகிறது.
- பிரதமர் மோடி இந்தக் கண்காட்சியை இன்று காலை திறந்து வைக்கிறார்.
புதுடெல்லி:
புத்தர் தொடர்பான புனித பிப்ரஹ்வா நினைவுச் சின்னங்களின் 'ஒளியும் தாமரையும்: ஞானம் பெற்றவரின் நினைவுச் சின்னங்கள்' என்ற மாபெரும் சர்வதேசக் கண்காட்சி டெல்லியில் இன்று தொடங்குகிறது. பிரதமர் நரேந்திர மோடி இந்தக் கண்காட்சியை இன்று காலை 11 மணிக்கு திறந்து வைக்கிறார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:
வரலாறு, கலாசாரம் மற்றும் பகவான் புத்தரின் கொள்கைகள் மீது ஆர்வம் கொண்டவர்களுக்கு ஒரு மிகச் சிறப்பான நாள்.
புத்தரின் உன்னதமான சிந்தனைகளை மேலும் பிரபலப்படுத்துவதற்கான எங்கள் உறுதிப்பாட்டிற்கு இணங்க அமைந்துள்ளது.
இது நமது இளைஞர்களுக்கும் நமது செழுமையான கலாசாரத்திற்கும் இடையிலான பிணைப்பை மேலும் ஆழப்படுத்துவதற்கான ஒரு முயற்சி. இந்த நினைவுச் சின்னங்களைத் தாயகம் கொண்டுவர உழைத்த அனைவருக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
- நியூயார்க் மேயர் மம்தானி உமருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
- நாங்கள் அனைவரும் உங்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறோம் எனக் குறிப்பிட்டிருந்தார்.
அமெரிக்காவின் நியூயார்க் மேயராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜோஹ்ரான் மம்தானி நேற்று பதவியேற்றார். நியூயார்க் நகரின் முதல் முஸ்லீம் மேயரான அவர் திருக்குர்ஆன் மீது சத்தியப் பிரமாணம் செய்து பதவியேற்றார். மேயர் தேர்தலில் மம்தானியை டிரம்ப் கடுமையாக எதிர்த்தது அறிந்ததே.
இந்நிலையில் 2020 டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்ட போராட்டத்தில் வெடித்த வன்முறை தொடர்பான வழக்கில் கைதாகி 5 வருடங்களாக சிறையில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் மாணவர் உமர் காலித்துக்கு மம்தானி கைப்பட கடிதம் ஒன்றை எழுதி அனுப்பி உள்ளார்.
அந்த கடிதத்தில், "அன்புள்ள உமர், கசப்பான அனுபவங்களைப் பற்றியும், அவை நம்மைச் சிதைக்க அனுமதிக்கக் கூடாது என்பதன் முக்கியத்துவத்தைப் பற்றியும் நீங்கள் கூறிய வார்த்தைகளை நான் அடிக்கடி நினைத்துப் பார்க்கிறேன். உங்கள் பெற்றோரைச் சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி. நாங்கள் அனைவரும் உங்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறோம்" என்று மம்தானி குறிப்பிட்டுள்ளார்.
உமர் காலிதின் நண்பர் பனோஜ்யோத்ஸ்னா லாஹிரி இந்த கடிதத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த நிலையில் இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் யாரேனும் தலையிட்டால் இந்தியா பொறுத்துக் கொள்ளாது என பாஜக தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பஜக தேசிய செய்தி தொடர்பாளர் கவுரவ் பாட்டியா கூறுகையில் "இந்திய இறையாண்மைக்கு சவால் ஏற்பட்டால், பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் 140 கோடி மக்களும் ஒன்றிணைந்து நிற்பார்கள். இந்திய மக்கள் நாட்டின் நீதித்துறையின் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளனர்" எனக் குறிப்பிட்டுள்ளார்.






