என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    இந்த புதிய சாதனங்கள் வரும் மார்ச், மே, ஜூன் மாதங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு பல சாதனங்களை அறிமுகம் செய்யவுள்ளது. அவற்றில் 4 புதிய மேக் சாதனங்களும் அறிமுகமாகவுள்ளன. 

    இதுகுறித்து வெளியான தகவலில், அந்நிறுவனம் 13 இன்ச் கொண்ட மேக்புக் ப்ரோ, மேக் மினி, 24 இன்ச் ஐமேக் மற்றும் ரீடிசைன் செய்யப்பட்ட மேக்புக் ஏர் உள்ளிட்ட சாதனங்ளை அறிமுகம் செய்யவுள்ளது. இவை அனைத்திலும் எம்2 சிப் பொருத்தப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது.

    ஆப்பிள் நிறுவனம் சொந்த சிப்பை புதிய சாதனங்களில் பயன்படுத்துவது மூலம் இன்டெல் சிப் கொண்ட சாதனங்களில் இருந்து தொடர்ந்து தன்னை வேறுபடுத்தி காட்டி வருகிறது. எம்1 ப்ரோ மற்றும் எம்1 மேக்ஸ் சிப்செட் கொண்ட ஐமேக் ப்ரோ கணினிகள் 27 இன்ச் ஐமேக் ப்ரோ மற்றும் சிறிய மேக்ப்ரோ கணினிகளால் மாற்றம் செய்யப்ப்படவுள்ளன. இந்த புதிய ஐமேக் ப்ரோவில் 2 அல்லது 4 எம்1 மேக்ஸ் சிப்கள் இருக்கும் என கூறப்படுகிறது.

    மேக் மினி மாடல், எம்1 ப்ரோ கணினியால் மாற்றம் செய்யப்படவுள்ளது. மேலும் ஆப்பிள் நிறுவனம் எம்2 சிப் கொண்ட ஆரம்ப நிலை மேக்புக் ப்ரோவையும் அறிமுகம் செய்யவுள்ளது. இந்த புதிய மாடல் நவம்பர் 2020-ல் வெளியாகி தற்போது பயன்பாட்டில் உள்ள எம்1 மாடலை மாற்றம் செய்யும் என கூறப்படுகிறது.

    இந்த புதிய சாதனங்கள் வரும் மார்ச், மே, ஜூன் மாதங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    பி.எஸ்.என்.எல் நிறுவனம் டி.சி.எஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்த சேவையை நாடு முழுவதும் வழங்கப்போகிறது.
    பி.எஸ்.என்.எல் நிறுவனம் நாடு முழுவதும் 4ஜி சேவையை வரும் சுதந்திர தினத்தன்று அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டாடா கன்சல்டன்சி சர்வீஸ் நிறுவனத்துடன் இணைந்து 4ஜி சேவை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. 

    இதுகுறித்து பி.எஸ்.என்.எல்லின் நுகர்வோர் இயக்க இயக்குனர்
    சுஷில் குமார் மிஸ்ரா கூறியிருப்பதாவது:-

    பி.எஸ்.என்.எல் நிறுவனம் டி.எஸ்.எஸ் நிறுவனத்தை தொழில்நுட்ப பங்குதாரராக கொண்டு 4ஜி சேவையை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. இந்தியாவில் முதன்முறையாக 4ஜி சேவைக்கு உள்நாட்டு தொழில்நுட்பம் பயன்படவுள்ளது. இதற்காக நாடு முழுவதும் 1 லட்சம் தொலைத்தொடர்பு டவர்கள் நிறுவப்படவுள்ளன. 

    பி.எஸ்.என்.எல்

    பீகாரில் மட்டும் 4000 டெலிகாம் டவர்கள் நிறுவப்படும். ஸ்மார்ட் ட்வர்கள்களுக்கு பதிலாக பி.எஸ்.என்.எல் மோனோபோல்களை பயன்படுத்தவுள்ளது. இது குறைந்த விலையில் அதிக பயன் தரக்கூடியதாக இருக்கும்.

    இவ்வாறு சுஷில் குமார் மிஷ்ரா தெரிவித்துள்ளார்.

    இந்தியாவில் இந்த நிதியாண்டில் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்ட நிலையில், பி.எஸ்.என்.எல் மிக தாமதமாக 4ஜி சேவையை அறிமுகம் செய்கிறது. இருந்தாலும் இதன்மூலம் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்கள் கிடைக்கும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    தற்போது சில குறிப்பிட்ட சர்க்கிள்களில் மட்டும் பி.எஸ்.என்.எல் 4ஜி சேவையை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
    மொத்தம் 5 வகை ஜியோ போஸ்ட்பெய்ட் திட்டங்களுடன் இலவச ஓடிடி சந்தாக்கள் வழங்கப்படுகின்றன.
    ஜியோ நிறுவனம் தனது போஸ்ட்பெய்ட் திட்டங்களுடன் இலவச ஓடிடி சந்தாக்களை வழங்கி வருகிறது. இந்த ரீசார்ஜ் திட்டங்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

    இதன்படி ஜியோவின் ரூ.399 போஸ்ட்பெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்பவர்களுக்கு ஒரு மாதம் 75ஜிபி டேட்டா வழங்கப்படும். இந்த டேட்டா முடிவடைந்த பிறகு 1 ஜிபி ரூ.10-க்குப் பெறலாம். 200 ஜிபி வரை டேட்டா ரோல் ஓவர் செய்துகொள்ளலாம். 

    இதை தொடர்ந்து ஜியோ நிறுவனம் ரூ.599-க்கு போஸ்ட் பெய்ட் திட்டத்தை வழங்குகிறது. இதில் 100 ஜிபி டேட்டா ஒரு மாதத்திற்கு வழங்கப்படும். மற்றும் 200 ஜிபி டேட்டாவை ரோல் ஓவர் செய்ய முடியும். 100 ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் 1 ஜிபி ரூ.10-க்கு பெறலாம்.

    ஜியோ ரூ.799 ரீசார்ஜ் திட்டத்தில் மாதம் 150 ஜிபி டேட்டா, 200 ஜிபி ரோல் ஓவர் டேட்டா வழங்கப்படும்.

    ஜியோ

    ஜியோ ரூ.999 ஃபேமிலி போஸ்ட்பெய்ட் திட்டத்தில் 200 ஜிபி டேட்டா, 500 ஜிபி ரோல் ஓவர் டேட்டா வழங்கப்படும்.

    ஜியோ ரூ.1,499 திட்டத்தில் 300 ஜிபி டேட்டா, 500 ஜிபி ரோல் ஓவர் டேட்டா வழங்கப்படும். 

    மேற்கூறிய திட்டங்களுடன் நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மற்றும் ஜியோ டிவி, மூவிஸ் உள்ளிட்டவையின் சந்தாக்கள் இலவசமாக வழங்கப்படும்.
    வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்களுக்கு பயன்தரக்கூடிய புதிய அம்சங்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது.
    உலகம் முழுவதும் பரவலாக பயன்படுத்தப்படும் குறுந்தகவல் பகிரும் செயலியாக வாட்ஸ்அப் இருக்கிறது. இதில் தரப்பட்டுள்ள எளிமையான அம்சங்கள் வாட்ஸ்அப்பை அனைவரும் விரும்பும் வகையில் மாற்றியுள்ளது. வாட்ஸ்அப்பில் குறுந்தகவல் தவிர புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றையும் அனுப்ப முடியும்.

    வாட்ஸ்அப்பில் நாம் அனுப்பும் புகைப்படங்கள், டேட்டாவை குறைப்பதற்காக குறைந்த தரத்திற்கு கம்பரஸ் செய்தே அனுப்பப்படும். அதிக தரம் கொண்ட புகைப்படங்களை அனுப்ப வேண்டும் என்றால் அவற்றை டாக்குமெண்டாக அனுப்ப வேண்டும். 

    வாட்ஸ்அப் பிரிவிவ் அம்சம்

    அவ்வாறு டாக்குமெண்டாக அனுப்பும்போது அவற்றில் பெயர் மட்டுமே காட்டப்படும். அதை டவுன்லோட் செய்தால் மட்டுமே அது என்ன புகைப்படம் என நமக்கு தெரிய வரும். இதனை தவிர்ப்பதற்காக வாட்ஸ்அப் நிறுவனம் புதிய “ப்ரிவீவ்” என்ற அம்சத்தை அறிமுகம் செய்யவுள்ளது.

    இந்த அம்சத்தின் மூலம் நாம் டாகுமெண்ட்டை அனுப்பும்போது அதன் குறைந்த தரத்திலான பிரிவீவ் படத்தையும் அனுப்பலாம். இதன்மூலம் அந்த டாக்குமெண்ட் எதை பற்றியது என்பதை தெரிந்துகொள்ளமுடியும். 

    இந்த அம்சத்தை புகைப்படங்கள் மட்டுமின்றி அனைத்து டாக்குமெண்டுகளுக்கும் பயன்படுத்தலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் வாட்ஸ்அப்பில் லிங்க்கை பகிரும்போதும் இந்த ப்ரிவீவ் அம்சம் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த அம்சம் தற்போது பீட்டா பயனர்களுக்கு தரப்பட்டுள்ளது.
    வைஃபை 6 தொழில்நுட்பமே இன்னும் பரவலாகாத நிலையில் வைஃபை 7-க்கான பரிசோதனையை நிறுவனங்கள் தொடங்கியுள்ளன.
    குவால்காம் நிறுவனம் அடுத்த தலைமுறைக்கான வைஃபை 7 பரிசோதனையில் ஈடுபட்டு வருவதாக அறிவித்துள்ளது. இந்த வைஃபை 7-ஐ கொண்டு குறைந்த லேட்டன்ஸியில் உட்சபட்ச வேகத்தை கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக கூறியுள்ளது. 

    இதேபோன்று மீடியா டெக் நிறுவனம், முதல் சோதனை வைஃபை 7 தொழில்நுட்பத்தை அறிவித்துள்ளது. தொடக்கம் முதலே வைஃபை 7 தொழில்நுட்ப சோதனையில் ஈடுபட்டு வரும் மீடியா டெக் நிறுவனம் 2023-ம் ஆண்டு முதல் அந்த தொழில்நுட்பத்தை சந்தைப்படுத்தபோவதாக அறிவித்துள்ளது.

    இந்த வைஃபை 7-ன் சிறப்பம்சங்கள் குறித்த தகவல்களும் தற்போது  வெளியாகியுள்ளன. 

    குவால்காம் நிறுவனம்

    இதன்படி இந்த வைஃபை 7 தொழில்நுட்பம் உட்சபட்ச வேகத்தையும், குறைந்த லேடன்சியையும், நிலையான இணைப்பையும் உறுதி செய்யும் என கூறப்பட்டுள்ளது. இதற்கு முன் உள்ள வைஃபை போன்று இல்லாமல் வைஃபை 7, 2.4GHz, 5GHz மற்றும் 6GHz என மூன்று ஃப்ரீக்வன்சி பேண்டுகளை வழங்குகிறது. இதனை நாம் தண்டர்போல்ட் 3 போர்ட் வழங்கும் வேகத்துடன் ஒப்பிட முடியும்.

    வைஃபை 7 தொழில்நுட்பம் 3 ஃபிரிக்வன்ஸி பேண்டுகளையும் சிறப்பாக பயன்படுத்தும். ஒரே நேரத்தில் 2 ஃபிரிக்வன்ஸிகளிலும் இயங்ககூடியது. இதன் பேண்ட்வித் 320 MHz வரை விரிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த அதிவேக வைஃபை 7 மூலம் மெட்டாவெர்ஸ், சோசியல் கேமிங், கிளவுட் கம்ப்யூட்டிங், மெய்நிகர் அனுபவம், தொழிற்சாலைக்கான ஐ.ஓ.டி, வீடியோ ஸ்ட்ரீமிங் உள்ளிட்ட பல பலன்களை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பிராட்பேண்டை விட மொபைல் இண்டர்நெட் தான் இந்தியர்கள் அதிகம் பேர் ஆன்லைனில் இயங்குவதற்கு காரணமாக இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    உலகம் முழுவதும் டிஜிட்டல் சூழல் மெட்டாவெர்ஸ் மெய்நிகர் தொழில்நுட்பத்தை நோக்கி நகர்கிறது. இதன் மூலம் அடுத்த 10 வருடங்களில் உலகம் முழுவதும் டேட்டா பயன்பாடு 20 மடங்கு வரை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இந்த மாற்றத்தின் மூலம் இந்தியாவில் ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகிய நிறுவனங்கள் பெரிதாக பயன் அடையும், பல மடங்கு லாபத்தை ஈட்டும் என கிரெடிட் சூசே எனப்படும் சர்வதேச முதலீட்டு வங்கி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தற்போது இண்டர்நெட்டில் 80 சதவீதம் டிராபிக் வீடியோக்களை நோக்கியே செல்கிறது. மேலும் வருடத்திற்கு 30 சதவீதம் வேகத்தில் இது வளர்ந்து வருகிறது. இந்நிலையில் மெட்டாவெர்ஸ் முழு பயன்பாட்டில் வரும் போது மேலும் 37 சதவீத வளர்ச்சி அதிகரிக்கும். இதன்மூலம் அடுத்த 10 வருடங்களில் டேட்டா பயன்பாடு 20 மடங்கு உயரும்.

    மெட்டாவெர்ஸ் பயனர்களின் பார்வை நேரத்தையும், பேண்ட்வித் நுகர்வையும் அதிகமாக எடுத்துக்கொள்ளும்.

    மெட்டா வெர்ஸ் மெய்நிகர் தொழில்நுட்பம்

    விரைவில் மெட்டாவெர்ஸ் பயன்பாட்டிற்காக மெய்நிகர் தொழில்நுட்பம், மிகை மெய் தொழில்நுட்பம் அபார வளர்ச்சி அடையும். 5ஜி தொழில்நுட்பம் மெட்டாவெர்ஸ் சூழலுக்கு உதவும். ஆனால் 6ஜி தொழில்நுட்பம் தான் மெட்டாவெர்ஸை வளர்ச்சியடைய வைக்கும்.

    விரைவில் மெட்டாவெர்ஸின் கேமிங் அதிக அளவில் பிரபலமாகும். இந்தியா கேமிங்கின் ஆரம்ப கட்டத்தில் இருக்கிறது. ஸ்மார்ட்போன்கள், 4ஜி தொழில்நுட்பத்தால் இந்தியர்கள் மொபைல் கேம் நோக்கி ஈர்க்கப்படுகின்றனர். பிராட்பேண்டை விட மொபைல் இண்டர்நெட் தான் இந்தியர்கள் அதிகம் பேர் ஆன்லைனில் இயங்குவதற்கு காரணமாக இருக்கிறது. எதிர்காலத்தில் ஆன்லைன் கேம்களின் வளர்ச்சி அதிகரிக்கும்போது இந்திய மக்கள் அதிகம் இண்டர்நெட்டை செலவிடுவர்.

    இதில் மெட்டாவெர்ஸும் வரும்போது இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல்லும், ஜியோவும் தான் மக்களுக்கு மொபைல் இண்டர்நெட் வழங்குவதில் அதிகம் ஈடுபடும். இதனால் அதன் வளர்ச்சியும், லாபமும் நினைக்கமுடியாததாக இருக்கும்.

    இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ஆப்பிள் சாதனங்கள் பார்ப்பதற்கு ஸ்டைலாகவும், அதேசமயம் அதிக விலை கொண்டதாகவும் இருக்கிறது.
    உலகின் மிக பிரபலமான நிறுவனங்களில் ஒன்று ஆப்பிள். ஆப்பிள் நிறுவனம் ஐபோன், ஐபேட், மேக் உள்ளிட்ட டிஜிட்டல் சாதனங்களை வெளியிட்டு ஆயிரம் கோடிகளில் லாபம் ஈட்டி வருகிறது. ஆப்பிள் பிராண்டிற்கு என்றே தனி மதிப்பு இருக்கிறது. ஆப்பிள் சாதனங்கள் பார்ப்பதற்கு ஸ்டைலாகவும், அதேசமயம் அதிக விலை கொண்டதாகவும் இருக்கிறது.

    ஒவ்வொரு வருடமும் வெளியாகும் ஆப்பிள் ஐபோனை வாங்குவதற்கு கோடிக்கணக்கான மக்கள் காத்திருக்கின்றனர். சிலர் சிறுநீரகத்தை விற்று  ஆப்பிள் போனை வாங்குவதையும் செய்திகளில் நாம் காண்கிறோம். இந்நிலையில் ஏன் மக்கள் ஐபோனுக்காக கைகளையும் தியாகம் செய்ய தயாராக இருக்கிறார்கள் என்று உலக கோடீஸ்வர்களில் ஒருவரான சார்லி மங்கர் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறிவதாவது:-

    ஆப்பிள் நிறுவனத்தின் பலம் என்ன என்பதை அதன்மீது மக்கள் வைத்திருக்கும் விருப்பதை பார்த்தாலே தெரியும். என்னுடைய கோடிக்கணக்கான நண்பர்கள் ஐபோன் வாங்குவதற்காக தங்களுடைய கைகளை கூட தியாகம் செய்ய தயாராக இருக்கிறார்கள். அது போன்ற ஒரு நிலையில் ஆப்பிள் நிறுவனம் இருக்கிறது. இதற்கு காரணம் அந்த நிறுவனத்தின் நிர்வாகம் தான். 

    ஆப்பிள் நிறுவனம்

    மிகவும் சிறந்தமுறையில் நிர்வாகத்தில் ஈடுபடுவதால் தான் விற்பனை ஏனியில் ஆப்பிள் தொடர்ந்து ஏறிக்கொண்டே இருக்கிறது. கொரோனா பெருந்தொற்றும், செமிக்கண்டெக்டர்கள் பற்றாக்குறையும் கூட ஆப்பிளின் வளர்ச்சியை பாதிக்கவில்லை. இந்த வருடமும் ஆப்பிள் ஆர்வத்தை தூண்டும் பல சாதனங்களை வெளியிட திட்டமிட்டுள்ளது.

    இவ்வாறு சார்லி மங்கர் தெரிவித்தார்.
    ட்விட்டரின் புதிய அப்டேட்டில் மேசேஜ்களை எளிதாக தேடி படிப்பது தொடர்பான அம்சம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
    பிரபல சமூக வலைதளமான ட்விட்டர் நிறுவனம் புதிய அம்சம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. 

    இதன்படி ட்விட்டர் பயனார்கள்கள் இனி டைரக்ட் மெசேஜ்களையும் “பின்” செய்துகொள்ள முடியும். இதற்கு முன் டெக்ஸ்ட் உரையாடல்களை மட்டுமே ட்விட்டரில் பின் செய்யும்படி இருந்தது. இனி நேரடியாக இன்பாக்ஸிற்கு வரும் மெசேஜ் உரையாடல்களையும் பின் செய்ய முடியும். 6 திரெட்டுகள் வரை பின் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ட்விட்டரின் புதிய அம்சம்

    இதன்மூலம் நமக்கு தேவையான மேசேஜ்களை தேடாமல் இனி ஈசியாக படிக்க முடியும். அனைத்து வித ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனர்களுக்கும் இந்த அம்சம் புதிய அப்டேட்டில் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக தனியாக ப்ளூ சப்ஸ்கிரிப்ஷன் பெற்றிருக்க வேண்டியது இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு இறுதியில் ரீசார்ஜ் திட்டங்கள் விலை உயர்த்தப்பட்ட நிலையில் ரூ.200-க்கும் குறைவான விலையில் உள்ள திட்டங்களை பார்க்கலாம்.
    இந்தியாவில் ஸ்மார்ட்போன் உபயோகமும், இண்டர்நெட் உபயோகமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்றாற்போல தொலை தொடர்பு நிறுவனங்களும் புதிய புதிய ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகின்றன.

    கடந்த ஆண்டு இறுதியில் இந்தியாவின் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், ஜியோ, விஐ ஆகிய நிறுவனங்கள் விலையை உயர்த்திவிட்டன. இதனால் வாடிக்கையாளர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

    இருப்பினும் வாடிக்கையாளர்கள் பயனடையும் வகையில், ரூ.200-க்கும் குறைவான பட்ஜெட் விலையில் சில திட்டங்களும் உள்ளன. அவற்றை இப்போது பார்க்கலாம்.

    ஏர்டெல்

    ஏர்டெல் நிறுவனம் ரூ.200-க்கும் குறைவான விலையில் 3 ரீசார்ஜ் திட்டங்களை வைத்துள்ளது. இதன்படி ரூ.99-க்கு ரீசார்ஜ் செய்தால் 28 நாட்களுக்கு 200 எம்.பி டேட்டா வழங்கப்படும். அழைப்புகள் இந்த திட்டத்தில் இலவசம் கிடையாது. ஒரு நொடிக்கு ஒரு பைசா வசூலிக்கப்படும். லோக்கல் எஸ்.எம்.எஸ்-க்கு ஒரு ரூபாயும், எஸ்.டி.டி எஸ்.எம்.எஸ்-க்கு ரூ.1.50ம் வசூலிக்கப்படும். 

    அடுத்ததாக ரூ.155 ரீசார்ஜ் திட்டத்தையும் ஏர்டெல் வழங்குகிறது. இதில் அன்லிமிட்டெட் அழைப்புகள், மொத்தமாக 1 ஜிபி டேட்டா, 300 எஸ்.எம்.எஸ்கள் 24 நாட்களுக்கு வழங்கப்படும். அதேபோன்றும் 30 நாட்களுக்கு அமேசான் பிரைமின் மொபைல் எடிஷன் ட்ரெயில், இலவச ஹெலோ டியூன்ஸ், விங்க் மியூசிக் ஆகியவை வழங்கப்படும்.

    ரூ.179 ரீசார்ஜ் திட்டத்திற்கு மொத்தமாக 2 ஜிபி டேட்டா, 300 எஸ்.எம்.எஸ்கள், அன்லிமிடெட் அழைப்புகள் 28 நாட்களுக்கு வழங்கப்படும். இத்துடன் 30 நாட்களுக்கு அமேசான் பிரைமின் மொபைல் எடிஷன் ட்ரெயில், இலவச ஹெலோ டியூன்ஸ், விங்க் மியூசிக் ஆகியவையும் தரப்படுகின்றன.

    ஜியோ

    ஜியோவை பொறுத்தவரை 3 ரீசார்ஜ் திட்டங்கள் ரூ.200-க்கு கீழ் இருக்கின்றன. ரூ.149 திட்டத்தில் தினமும் 1 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள், தினம் 100 எஸ்.எம்.எஸ்கள் 20 நாட்களுக்கு வழங்கப்படும். அதேபோன்று ரூ.179 திட்டத்தில் தினமும் 1 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள், தினம் 100 எஸ்.எம்.எஸ்கள் 24 நாட்களுக்கு வழங்கப்படும்.

    இதேபோன்று ரூ.119-க்கு தினமும் 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள், தினம் 100 எஸ்.எம்.எஸ்கள் 14 நாட்களுக்கு வழங்கப்படுகின்றன. இத்துடன் ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி, ஜியோ கிளவுட் ஆகிய சேவைகளும் வழங்கப்படுகின்றன.

    விஐ

    வி.ஐ வாடிக்கையாளர்களுக்கு 4 ரீசார்ஜ் திட்டங்கள் ரூ.200-க்கும் கீழ் வழங்கப்படுகின்றன. இதன்படி ரூ.155-க்கு ரீசார்ஜ் செய்தால் அன்லிமிடெட் அழைப்புகள், 300 எஸ்.எம்.எஸ், 1 ஜிபி டேட்டா ஆகியவை 24 நாட்களுக்கு வழங்கப்படும். 

    அதேபோன்று ரூ.149-க்கு ரீசார்ஜ் செய்தால் 1 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள் தரப்படும். இந்த திட்டத்தில் இலவச எஸ்.எம்.எஸ்கள் கிடையாது. ரூ.199 திட்டத்தில் தினமும் 1 ஜிபி டேட்டா, 100 எஸ்.எம்.எஸ்கள் மற்றும் அன்லிமிடெட் அழைப்புகள் 18 நாட்களுக்கு வழங்கப்படும். ரூ.179-க்கு அன்லிமிடெட் அழைப்புகள், 2 ஜிபி டேட்டா மற்றும் 300 எஸ்.எம்.எஸ் 28 நாட்களுக்கு வழங்கப்படும்.

    இத்துடன் வி.ஐ மூவிஸ், டிவி ஆகிய சேவைகளும் இலவசமாக வழங்கப்படுகின்றன.
    புதிய புதிய அப்டேட்களை தொடர்ந்து வழங்கும் வாட்ஸ்அப், தற்போது மிகவும் பயனுள்ள அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது.
    இந்தியா மட்டுமின்றி உலகம் முழுக்க பிரபலமான குறுந்தகவல் செயலிகளில் ஒன்றாக வாட்ஸ்அப் இருக்கிறது. பயனர்கள் எளிய வகையில் தகவல்களை பரிமாறிக்கொள்ளும் அம்சம் இதில் இடம்பெற்றிருப்பதால் அனைவரும் விரும்பும் ஒன்றாக இருக்கிறது. 

    இந்த வாட்ஸ்அப் செயலியில் பயனர்கள் தங்கள் குரல்களிலேயே தகவல்களை பதிவு செய்து அனுப்பும் வாய்ஸ் மெசேஜ் வசதியும் உள்ளது. இந்நிலையில் இந்த வாய்ஸ் மெசேஜ் அம்சத்தில் புதிய பயனுள்ள மாற்றத்தை கொண்டு வந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    பொதுவாக வாட்ஸ்அப்பில் யாராவது வாய்ஸ் மெசேஜ் அனுப்பினால் அவருடைய பெயரை கிளிக் செய்து, சேட் விண்டோவில் தான் அவர் அனுப்பிய மெசேஜ்ஜை பார்க்க முடியும். ஒருவருடைய சாட் விண்டோவில் இருந்து வெளியே வந்துவிட்டால் வாய்ஸ் மெசேஜ் தானாக நின்றுவிடும். 

    வெளியாகியுள்ள புதிய வாய்ஸ் மெசேஜ் அப்டேட்

    இந்நிலையில் தற்போது வாட்ஸ்அப்பில் நாம் வாய்ஸ் மெசேஜ்ஜை பிளே செய்துவிட்டு, சேட் விண்டோவில் இருந்து வெளியே வந்தாலும் பின்புறத்தில் வாய்ஸ் பிளே ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று ஆடியோ ஃபைல்களையும் பிளே செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த அப்டேட் தற்போது ஆப்பிள் ஐபோனுக்கு மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. ஐ.ஓஎஸ் வெர்சன் 22.4.75 வைத்திருப்பவர்கள் இந்த அம்சத்தை பயன்படுத்தலாம். ஒருவருடைய வாய்ஸ் மெசேஜ்ஜை கேட்டுக்கொண்டே பிறரிடம் சேட் செய்வதற்கு வசதியாக இந்த அம்சம் வெளியிடப்பட்டுள்ளது.

    இந்த அப்டேட் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு எப்போது தரப்படும் என தகவல் வெளியாகவில்லை. அதேபோன்று வாட்ஸ் ஆப் வெப்பிலும் இந்த அம்சத்தை பயன்படுத்த முடியாது.
    இந்திய கலைஞர்கள் தயாரிக்கும் கைவினைப் பொருள்கள், கைத்தறி பொருள்களுக்கு அமேசான் தளத்தில் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    பிரபல இ-காமெர்ஸ் நிறுவனமான அமேசான் இந்திய பொருட்களை விற்பதற்கு என்று தனி பக்கத்தை உருவாக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. இதற்காக அமேசான் தளத்தில் ஓடிஓபி( ODOP- One district One product) என்று பொருட்கள் தனியாக பட்டியலிடப்பட்டு விற்கப்படுகின்றன.

    இந்திய அரசின் இன்வெஸ்ட் இந்தியா, இந்தியன் இண்டஸ்ட்ரீஸ் அசோசியஷன் ஆகிய அமைப்புகளுடன் இணைந்து அமேசான் இந்த முன்னெடுப்பை எடுத்துள்ளது.

    இதுகுறித்து அமேசான் இந்தியா கூறியதாவது:-

    இந்தியா முழுவதும் மூலை முடுக்குகளில் இருந்து உள்ளூர் தயாரிப்பு பொருட்கள், புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள் ஆகியவற்றை சந்தைப்படுத்துவதற்கும், சிறு குறு தொழில்கள் செய்யும் உற்பத்தியாளர்கள், குடிசைத் தொழில் செய்பவர்களுக்கும் இந்த தளம் பக்கபலமாக இருக்கும்.

    இந்திய கலைஞர்கள் தயாரிக்கும் கைவினைப் பொருள்கள், கைத்தறி பொருள்களுக்கு அமேசான் தளத்தில் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படும். இந்திய தயாரிப்புகள் மீது அதீத காதல் கொண்ட வாடிக்கையாளர்களுக்கு ஒரே இடத்தில் அவர்கள் விரும்பிய அனைத்து பொருட்களையும் பெற்றுக்கொள்ளலாம்.

    அமேசான் ஓடிஓபி

    இந்திய கலாச்சாரம் பாரம்பரியம் கொண்டது. அதனால் இந்திய பொருள்களுடன் அதன் தயாரிப்பு முறை, கலாச்சாரம், வரலாறு ஆகியவற்றையும் காட்சிப்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

    கைவினைப் பொருட்கள், கைத்தறி பொருட்கள் மற்றும் வேளாண் உற்பத்தி பொருள்கள் ஆகியவற்றை ஊக்குவிக்கும் அரசின் முயற்சியை நாங்கள் முன்னெடுப்பது மூலமாக பொருளாதார வளர்ச்சி வேகம் அடையும். வேலைவாய்ப்பு உருவாகும் என்பதோடு, ஊரக குடிசைத் தொழில் நல்ல வளர்ச்சியைக் காணும். இது எங்களுக்கும் மகிழ்ச்சி அளிக்ககூடியது.

    இவ்வாறு அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.
    டிசம்பர் மாதத்தில் பி.எஸ்.என்.எல் நிறுவனம் 11 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது.
    ஜியோ நிறுவனம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் கிட்டதட்ட 1.3 கோடி வாடிக்கையாளர்களை இழந்துள்ளதாக ட்ராய் அமைப்பு அறிவித்துள்ளது.

    அதே மாதத்தில் பி.எஸ்.என்.எல் நிறுவனம் 11 லட்சம் புதிய வாடிக்கையாளர்களையும், ஏர்டெல் 4 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. வோடஃபோன்- ஐடியா நிறுவனம் கடந்த டிசம்பரில் 16 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பி.எஸ்.என்.எல்

    ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் திட்டங்களின் விலைகளை ஏற்றியதே வாடிக்கையாளர் இழப்புக்கு காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறைந்த ஊதியம் வாங்கும் வாடிக்கையாளர்களே பி.எஸ்.என்.எல் நோக்கி தள்ளப்பட்டுள்ளனர்.

    சந்தை பங்குகளை பொறுத்தவரை ரிலையன்ஸ் ஜியோ 36 சதவீத பங்குகளை வைத்துள்ளது. ஏர்டெல் 30.81 சதவீத பங்குகளையும், வோடபோன் 23 சதவீத பங்குகளையும், பி.எஸ்.என்.எல் 9.90 சதவீத பங்குகளையும், எம்.டி.என்.எல் 0.28 சதவீத பங்குகளையும் வைத்துள்ளது.

    1.3 கோடி வாடிக்கையாளர்களை இழந்தாலும் 36.4 கோடி ஆக்டிவ் வாடிக்கையாளர்களுடன் ஜியோ முதலிடத்தில் தான் உள்ளது. ஏர்டெல் 34.8 கோடி வாடிக்கையாளர்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

    ×