search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பி.எஸ்.என்.எல்"

    • விஜய் வசந்த் எம்.பி. வலியுறுத்தல்
    • கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் 4 ஜி சேவைகள், மக்களுக்கு கிடைக்க செய்ய வேண்டும்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் வாட்டர் டேங்க் ரோட்டில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவல கத்தில் வைத்து பி.எஸ்.என்.எல். தொலைபேசி தொழில்நுட்ப ஆலோசனை குழு கூட்டம் விஜய் வசந்த் எம்.பி. தலைமையில் நடைபெற்றது. துணை பொதுமேலாளர் எழில் சைமன் வரவேற்றார். பொது மேலாளர் பிஜு பிரதாப் அறிமுக உரை யாற்றினார். துணை பொது மேலாளர் விஜயன் விளக்க உரையாற்றினார்.

    கூட்டத்தில் விஜய்வசந்த் எம்.பி. பேசியதாவது:-

    பி.எஸ்.என்.எல்/ சிம் கார்டு விற்பனை அதிகரித்து உள்ளது பாராட்டுக்குரியது. வாடிக்கையாளர்கள் அதிக அளவில் வெளியேற காரணமான குறைகளை அறிந்து நிவர்த்தி செய்ய வேண்டும். பி.எஸ்.என்.எல் சிக்னல் குறைவாக உள்ளதால், பலர் வேறு இணைப்புகளுக்கு செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இவற்றை விரைவில் நிவர்த்தி செய்ய வேண்டும்.

    இந்த வருட இறுதிக்குள் அதிக அலைவரிசை கோபுரங்கள் அமைத்து கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் 4 ஜி சேவைகள், மக்களுக்கு கிடைக்க செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் உறுப்பி னர்கள் பகவதி பெருமாள், பால்ராஜ், அன்பழகன், ஆரோக்கிய ராஜன், சஹானா, துரை, அந்தோணி ராஜேஷ், காங்கிரஸ் மாநகர மாவட்ட தலைவர் நவீன்குமார் மற்றும் பி.எஸ்.என்.எல் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் 19 ரூபாய்க்கு ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் ஒரு மாத வேலிடிட்டி கொண்டதாகும்.
    • உங்கள் சிம்மை ஆக்டிவாக வைக்க இதுவே சிறந்த திட்டமாகும்.

    தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடாபோன் ஐடியா ஆகியவை தான் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. பெரும்பாலான பயனர்கள் இந்த மூன்று நிறுவனங்களில் ஏதாவது ஒன்றைத் தான் பயன்படுத்தி வருகின்றன. பயனர்களை கவர்வதற்காக குறைந்த விலையில் அதிக பலன்களை வழங்கும் திட்டங்களை இந்நிறுவனங்கள் வழங்கி வந்தன.

    ஆனால் கடந்த ஆண்டு இறுதியில் இருந்து, இந்த மூன்று நிறுவனங்களும் தங்கள் திட்டங்களின் விலைகளை கிடுகிடுவென உயர்த்தி விட்டன. அந்நிறுவனங்கள் மலிவான விலையில் வழங்கி வந்த திட்டங்களின் விலையும் தற்போது உயர்த்தப்பட்டு உள்ளன. இந்த நிலையில், பி.எஸ்.என்.எல் நிறுவனம் ப்ரீபெய்ட் பயனர்களுக்காக குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டம் ஒன்றை ரகசியமாக அறிமுகப்படுத்தி உள்ளது.


    அதன்படி பி.எஸ்.என்.எல் நிறுவனம் 19 ரூபாய்க்கு ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் சிறப்பு என்னவென்றால், இது ஒரு மாத வேலிடிட்டி கொண்டதாகும். இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்த பிறகு, அழைப்பு கட்டணம் 20 பைசாவாக குறைகிறது. இதன்பின் வேறு எந்த ரீசார்ஜும் செய்ய வேண்டியதில்லை. நீங்கள் கவலையின்றி மாதம் முழுவதும் காலிங்க் வசதியை பெறலாம். உங்கள் சிம்மை ஆக்டிவாக வைக்க இதுவே சிறந்த திட்டமாகும்.

    இந்தியாவில் முதல்முறையாக அப்ளிகேசன் மூலம் இயங்கும் தொலைபேசி சேவையை பி.எஸ்.என்.எல் அறிமுகம் செய்துள்ளது.
    சென்னை :

    பி.எஸ்.என்.எல். தொலைத்தொடர்பு நிறுவனத்தின் (தமிழ்நாடு) தலைமை பொதுமேலாளர் ஆர்.மார்ஷல் அந்தோனி லியோ சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் குறிப்பிட்டுள்ளதாவது :-

    இந்தியாவில் முதல்முறையாக அதிநவீன என்.ஜி.என் எனப்படும் அடுத்த தலைமுறை நெட்வொர்க் மூலம் இயங்கும் இணையதள தொலைபேசி சேவையை பி.எஸ்.என்.எல் அறிமுகம் செய்துள்ளது.

    இதற்காக ‘விங்ஸ்’ என்ற பெயரில் அப்ளிகேசன் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அப்ளிகேசனை செல்போன், கம்ப்யூட்டர், லேப்டாப் போன்றவற்றில் பதிவிறக்கம் செய்து, இந்தியாவில் உள்ள அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனத்தின் செல்போன் மற்றும் தொலைபேசி எண்களில் இருந்து அழைப்புகளை இலவசமாக ஏற்கவும், பேசவும் முடிவும்.

    இந்திய புதிய சேவை வருகிற 25-ந் தேதி முதல் செயல்பாட்டுக்கு வர உள்ளது. இந்த புதிய சேவையை பெறுவதற்கு ஓராண்டு கட்டணமாக ரூ.1,099 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    ஆனால், விங்ஸ் ஆப் மூலம் குறுந்தகவல், படங்கள், வீடியோ போன்றவற்றை அனுப்பவும், பகிரவும் முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார். 
    ×