என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    அமேசானின் ஃபேப் டிவி ஃபெஸ்ட் விற்பனையில் இந்த குறைந்த விலைக்கு சாம்சங் 32 இன்ச் டிவியை வாங்கலாம்.
    அமேசான் நிறுவனம் ஃபேப் டிவி ஃபெஸ்ட் விற்பனையை பிப்ரவரி 28-ம் தேதி வரை நடத்தி வருகிறது. இதில் ஸ்மார்ட் டிவிக்களை தள்ளுபடியுடன் வாங்க முடியும். இதில் சாம்சங் டிவிக்கான சிறப்பு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

    சாம்சங் நிறுவனத்தின் 32 இன்ச் வொண்டர்டெயின்மெண்ட் சிரீஸ் ஹெச்.டி ரெடி எல்.இ.டி ஸ்மார்ட் UA32T4340AKXXL டிவியை தள்ளுபடி விலையில் ரூ.8,700-க்கு வாங்கலாம். 

    இதன் உண்மையான விலை ரூ.19,900 ஆகும். அமேசானின் ஃபேப் டிவி ஃபெஸ்ட் தள்ளுபடியில் இந்த ஸ்மார்ட் டிவி 15% தள்ளுபடியில் ரூ.16,999-க்கு வாங்கலாம். இந்த டிவியை எச்.டி.எஃப்.சி வங்கியின் கிரெடிட் அல்லது டெபிட் கார்ட் பயன்படுத்தி வாங்கினால் ரூ.1,500 ரூபாய் உடனடி தள்ளுபடி கிடைக்கும். இதன்மூலம் இந்த ஸ்மார்ட் டிவியை ரூ.15,499-க்கு வாங்க முடியும்.

    அமேசான் ஃபேப் டிவி ஃபெஸ்டில் எக்ஸ்சேஞ்ச் சலுகையும் அழங்கப்படுகிறது. இதன்படி சாம்சங் 32 இன்ச் வொண்டர்டெயின்மெண்ட் சீரிஸ் டிவிக்கு ரூ.6,799 வரை எக்ஸ்சேஞ்ச் வழங்கப்படுகிறது. இந்த சலுகையையும் பயன்படுத்தினால் ரூ.8,700-க்கு இந்த டிவியை வாங்கிவிடலாம்.

    சாம்சங் 32 இன்ச் டிவி

    இந்த சாம்சங் 80 செமீ (32 இன்ச்) வொண்டர்டெயின்மெண்ட் சீரிஸ் எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் டிவி 32 இன்ச்சில் எல்இடி டிஸ்ப்ளே, எச்டி ரெடி டிஜிட்டல் வீடியோ ஃபார்மேட், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1,366 x 768 பிக்சல்கள் ரெசல்யூஷன் ஆகியவை தரப்பட்டுள்ளன. 

    இந்த டிவி Tizen ஓஎஸ்ஸில் இயங்குகிறது. இதில் நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ மற்றும் யூடியூப், 20W ஆடியோ, 2 HDMI போர்ட்கள், ஒரு USB போர்ட் மற்றும் WiFi போன்ற பயன்பாடுகளுக்கான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. 

    இந்த டிவிக்கு ஒரு வருடம் வாரண்டி வழங்கப்பட்டுள்ளது.
    இந்த அம்சம் டேட்டா அதிகம் செலவாவதை தடுக்கவும், இணைய பக்கங்கள் வேகமாக செயல்படவும் உதவியது.
    கூகுள் நிறுவனம், கடந்த 2014-ம் ஆண்டு முதல் மொபைல் பயனர்களுக்கு டேட்டாவை சேமிக்கும் வகையில் குரோம் செயலியில் ‘லைட் மோட்’ என்ற சேவையை வழங்கி வந்தது. இந்த சேவை, இணைய பக்கங்களை கம்ப்ரஸ் செய்து வேகமாக செயல்பட உதவியது. மேலும் தேவையில்லாத இடங்களில் டேட்டாவை குறைத்து அதிகம் செலவாகாமல் தடுத்தது.

    2015-ம் ஆண்டு இந்த லைட் சேவையில் டேட்டாவை குறைப்பதற்கு புகைப்படங்களை பிளாக் செய்யும் அம்சத்தையும் கூகுள் கொண்டு வந்தது. இதுவும் பயனர்களுக்கு பெரிதும் உதவியது. இந்நிலையில் தற்போது இந்த லைட் மோட் அம்சத்தை நீக்கப்போவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. 

    குரோம் லைட் மோட்

    இதுகுறித்து கூகுள் நிறுவனம் கூறியதாவது:-

    முன்பு டேட்டாக்கள் குறைந்த அளவிலேயே தொலைத்தொடர்பு நிறுவனங்களால் வழங்கப்பட்டு வந்தன. இதனால் டேட்டாவை சேமிப்பதற்காக லைட் மோட் தொடங்கப்பட்டது. ஆனால் இப்போது பல்வேறு நாடுகளிலும் குறைந்த விலையில் டேட்டாக்கள் கிடைக்கின்றன. 

    மேலும் அனைத்து நிறுவனங்களும் அன்லிமிடெட் டேட்டாவை வழங்குகின்றன. இதனால் டேட்டாவை சேமிப்பதற்கான தேவை இல்லாததால் லைட் மோட் அம்சத்தை நீக்க முடிவு செய்துள்ளோம்.

    லைட்மோட் நீக்கப்பட்டாலும் போதுமான டேட்டாவில் வேகமாக இணையதளங்களை பயன்படுத்துவதற்கு குரோம் செயலி உதவும்.

    இவ்வாறு தெரிவித்துள்ளது.
    கூகுள் மேப்பை அடிப்படையாக கொண்டு இயங்கும் இரண்டு தொழில்கள் மூலம் பணம் சம்பாதிக்கலாம்.
    இன்று உலகம் முழுவதும் பயணிகளுக்கு வழி காட்டும் செயலியாக கூகுள் மேப் இருக்கிறது. பெரிய நகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை கூகிள் மேப்பில் இல்லாத இடங்களே இல்லை. கடைகள், சுற்றுலா தளங்கள் என நமக்கு வேண்டிய இடங்களையும் கூகுள் மேப் மூலம் கண்டடையலாம். இந்நிலையில் கூகுள் மேப் மூலம் பணம் சம்பாதிக்கவும் முடியும் என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கூகுள் மேப்பை மேம்படுத்தும் வகையில் அந்நிறுவனம் புதிய கொள்கையை வெளியிட்டுள்ளது. இதன்படி கூகுள் மேப்பில் காட்டப்படும் அனைத்து வணிக நிறுனங்களும் சரிபார்க்கப்படவேண்டும். இல்லையென்றால் அந்த நிறுவனங்கள் மேப்பில் இருந்து நீக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து இந்த சரிபார்க்கும் தொழிலையே அடிப்படையாக கொண்டு சில நிறுவனங்கள் இயங்குகின்றன. இந்த நிறுவனங்கள் சிறு கடைகள் உள்ளிட்ட வணிக உரிமையாளர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி கூகுள் எதிர்பார்க்கும் வகையில் வணிகத்தை மேப்பில் நிறுவுவது எப்படி என ஆலோசனை வழங்குகின்றன. 

    அதேபோல கூகுள் மேப்பில் இல்லாத கடைகளை அடையாளம் கண்டுபிடித்து, அவர்களிடம் இருந்து முழுமையான தகவல்களை பெற்று, கூகுள் மேப்பில் அப்டேட் செய்யலாம். இவ்வாறாக அந்த கடைகளுக்கும் உதவுவது மூலம் பணம் சம்பாதிக்கலாம்.

    கூகுள் மேப்

    இதற்காக நிறுவனங்கள் அதிகபட்சம் 3700 ரூபாய் வரை வசூலிக்கின்றன. இந்த சேவையை தனிப்பட்ட நபர்களும் வணிக நிறுவனங்களை தொடர்புகொண்டு செய்யலாம். 

    அதேபோல ’மேப் அனலிசிஸ்ட்’ என்ற சேவையையும் தனிப்பட்ட நபர்கள் வழங்கலாம். இதன்படி கூகுள் நிறுவனம் தனது மேப்பில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் சரியானதாக இருக்கிறதா என்பதை உறுதி செய்வதற்காக லயன்பிரிட்ஜ் உள்ளிட்ட ஆன்லைன் ஆய்வு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறது. 

    இந்த ஆய்வு நிறுவனங்கள் தனிப்பட்ட நபர்களை தொடர்புகொண்டு தேவையான தகவல்களை திரட்டுகின்றன. இதற்காக குறிப்பிட்ட தொகையையும் வழங்குகின்றன. தனிநபர்கள் இதற்கு உதவுவது மூலம் குறிப்பிட்ட தொகையை சம்பாதிக்கலாம்.
    பெயர் மாற்றம் செய்த ஒரே நாளில் ரூ.24,000 கோடி டாலர்கள் மதிப்பையும் ஃபேஸ்புக் இழந்துள்ளது.
    பேஸ்புக் நிறுவனம் கடந்த ஆண்டு மெட்டா என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அந்நிறுவனம் வடிவமைத்து வரும் மெட்டாவெர்ஸ் என்ற புதிய தொழில்நுட்பத்திற்கு ஏற்ப இந்த புதிய பெயர் மாற்றப்பட்டுளது. மெட்டாவெர்ஸின் அறிவிப்பால் தொழில்நுட்ப நிறுவனங்கள் மெய்நிகர் தொழில்நுட்பத்தில் தங்களது கவனத்தை திருப்பியுள்ளன.

    உலகம் முழுவதும் மெட்டாவின் பக்கம் திரும்பி இருக்கும் அதே நேரத்தில், ஃபேஸ்புக் நிறுவனம் மெட்டா என்று பெயர் மாற்றப்படும் என மார்க் ஜுக்கர்பெர்க் அறிவித்ததால், அந்நிறுவனம் ரூ.50,000 கோடி டாலர் முதலீட்டு மதிப்பை கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் இழந்துள்ளது. 

    மார்க் ஜுக்கர்பெர்க்

    பெயர் மாற்றம் செய்த ஒரே நாளில் ரூ.24,000 கோடி மதிப்பையும் அந்நிறுவனம் இழந்துள்ளது. மேலும் அதிக மதிப்புமிக்க நிறுவனங்களின் பட்டியலில் 6-வது இடத்தில் இருந்த ஃபேஸ்புக் (மெட்டா) 10-வது இடத்திற்கும் கீழ் சென்றுள்ளது.

    இது தவிர ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்களின் விளம்பர கொள்கைகளில் ஏற்பட்ட மாற்றமும் மெட்டா நிறுவனம் தடுமாறுவதற்கு காரணமாக இருக்கிறது. ஆப்பிள் மற்றும் கூகுளின் புதிய விளம்பர கொள்கைகள் ஃபேஸ்புக் நிறுவனம், பயனர்கள் குறித்த சில முக்கிய தரவுகளை எடுப்பதற்கு தடை விதித்துள்ளது. 

    ஃபேஸ்புக்கிற்கு அதிக லாபத்தை வழங்கி வந்த இந்த தரவுகளை தற்போது சேகரிப்பது கடினமாகியுள்ளதால் ஃபேஸ்புக் மதிப்பை இழந்துள்ளது. 
    இன்று பலரும் வீடுகளில் இருந்து பணியாற்றுவதால் இண்டர்நேட் சேவை கட்டாயமாக தேவைப்படும்பட்சத்தில் குறைந்த விலை பிராட்பேண்ட் திட்டங்கள் பெரிதும் உதவுகின்றன.
    இந்தியாவில் இண்டர்நெட் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியர்களில் பெரும்பாலானோர் மொபைல் டேட்டா தான் இண்டர்நெட்டுக்காக பயன்படுத்தி வந்தாலும், கொரோனா ஏற்படுத்தியுள்ள ஊரடங்கு சூழல் பலரையும் வீடுகளில் இருந்து வேலை பார்க்கும் வகையில் மாற்றியுள்ளது.

    வீடுகளில் இருந்து வேலை பார்ப்பவர்களுக்கும், அதிகமாக இண்டர்நெட் பயன்படுத்துபவர்களுக்கும் ஆரம்பகட்ட குறைந்தவிலை பிராட்பேண்ட் திட்டங்களை ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் வழங்குகின்றன. அவை என்னென்ன என்பதை இப்போது பார்க்கலாம்.

    இதன்படி ஜியோ தனது ஜியோ ஃபைபர் அடிப்படை திட்டத்தில் மாதம் ரூ.399-க்கு 30 Mbps வேகத்தில் எஃப்.யூ.பி லிமிட்டில் 3.3 டி.பி டேட்டா வழங்குகிறது. 

    ஏர்டெல்லை பொறுத்தவரை அடிப்படை திட்டத்தில், மாதம் ரூ.499-க்கு 40 Mbps வேகத்தில், 3.3 டிபி டேட்டா எஃப்.யூ.பி லிமிட்டில் வழங்கப்படுகிறது.

    தொலைத்தொடர்பு நிறுவனங்கள்

    பி.எஸ்.என்.எல் ஃபைபர் பேசிக் பிளான் திட்டத்தில் மாதம் ரூ.449-க்கு 30 Mbps வேகத்தில், 3.3 டிபி டேட்டா எஃப்.யூ.பி லிமிட்டுடன் வழங்கப்படுகிறது.

    ஆக்ட் நிறுவனம் மாதம் ரூ.549-க்கு 40 Mbps வேகத்தில் 500 ஜிபி டேட்டா எஃப்யூபி லிமிட்டுடன் கிடைக்கிறது.

    இந்த திட்டங்களில் ஜி.எஸ்.டி விலை சேர்க்கப்படவில்லை. 
    இந்தியாவில் வாட்ஸ்அப் செயலியை தவறாக பயன்படுத்துவதை தடுக்கவே இந்த முன்னெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது.
    வாட்ஸ் ஆப் செயலி இந்தியாவில் குறுஞ்செய்தி அனுப்பும் செயலிகளில் முன்னணி செயலியாக இருக்கிறது.

    இந்த செயலியில் குறுஞ்செய்திகள் மட்டும் இன்றி ஆடியோ, வீடியோ, வாய்ஸ் கால், வீடியோ கால் உள்ளிட்ட பல அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.

    இந்தியாவில் சிறியவர் முதல் பெரியவர் வரை பெரும்பாலான மக்கள் வாட்ஸ்அப் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவர்களின் பாதுகாப்புக்காக வாட்ஸ் ஆப் நிறுவனம் “சேஃப்டி இன் இந்தியா” என்ற தகவல் சேவையை அறிமுகம் செய்துள்ளது.

    சேஃப்டி இன் இந்தியா தளத்திற்கு சென்று பயனர்கள் வாட்ஸ்அப் பயன்படுத்துவது குறித்த அனைத்து தகவல்களையும் பெற முடியும்.

    2 ஸ்டெப் வெரிஃபிகேஷன், ஃபார்வெர்ட் லிமிட்ஸ், பிளாக், ரிப்போர்ட், டிஸ்ஸப்பியரிங் மெசேஜ் உள்ளிட்ட அம்சங்கள் குறித்த சந்தேகங்களை பயனர்கள் தீர்த்துகொள்ள முடியும். 

    வாட்ஸ்அப்

    வாட்ஸ்அப்பில் வரும் தகவல்களை உண்மை தானா என உறுதி செய்யவும் இந்த தளம் பயன்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல வாட்ஸ்அப் மூலம் யாரும் தொந்தரவு செய்தால் புகார் அளிக்கும் வகையிலும் இந்த சேவை வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் வாட்ஸ்அப் செயலியை தவறாக பயன்படுத்துவதை தடுக்கவே இந்த முன்னெடுப்பு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இந்த தொழில்நுட்பம் மெட்டாவெர்ஸில் இடம்பெறும் என்று மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.
    மெட்டா நிறுவனம் மெட்டாவெர்ஸ் உருவாக்கத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. மெய்நிகர் தொழில்நுட்பத்தில் உருவாகும் மெட்டாவெர்ஸ் உலகில் நாம் விரும்பிய விஷயங்கள் அனைத்தையும் செய்யலாம் என கூறப்பட்டுள்ளது. 

    இந்நிலையில் தற்போது மெட்டாவெர்ஸில் மனிதர்கள் ஒருவருக்கு ஒருவர் உரையாடுவதற்கு அனைத்து மொழிகளையும் உள்ளடக்கிய மொழி பெயர்ப்பு அம்சம் ஒன்றை உருவாக்கி வருவதாக மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

    மெட்டாவெர்ஸ் உலகம்

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    பல்வேறு பின்னணியில் இருந்து வரும் மக்கள் மெட்டாவெர்ஸ் மெய்நிகர் உலகத்தில் பங்கேற்கும்போது அவர்கள் தங்களுக்குள் தொடர்புகொள்வதற்கு தடை எதுவும் இருக்கக்கூடாது. அவர்கள் எந்த மொழியில் பேசினாலும், எழுதினாலும் அதை உடனுக்குடன் மொழிபெயர்ந்து சம்பந்தப்பட்ட நபர் புரிந்துகொள்ளும் வகையில் மெட்டாவெர்ஸ் இயங்கும். 

    மொழிகளில் உள்ள நுண்ணிய அர்த்தங்களையும் புரிந்துகொள்ளும் வகையில் இந்த மொழிபெயர்ப்பு அம்சம் வடிவமைக்கப்படும். சிறியது, பெரியது என உலகில் உள்ள அனைத்து மொழிகளும் இதில் இடம்பெறும். செயற்கை நுண்ணறிவு மூலம் மக்களை ஒன்றிணைக்க முடியும் என்பதை நாங்கள் நிரூபிக்க இருக்கிறோம்.

    இவ்வாறு மார்க் ஜுக்கர்பெர்க் கூறினார்.
    2018-ம் ஆண்டு இன்ஸ்டாகிராமில் பயனர்கள் செலவிடும் நேரத்தை கணக்கிட்டு கட்டுப்படுத்துவதற்காக ‘டெய்லி லிமிட்’ என்ற அம்சத்தை அந்நிறுவனம் அறிமுகம் செய்தது.
    உலக அளவில் மிகவும் பிரபலமான சமூக வலைதளங்களில் ஒன்றாக இன்ஸ்டாகிராம் இருந்து வருகிறது. 

    இது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வதற்காக பயன்படுத்தப்படும் செயலி என்பதால் பிற சமூக வலைதளங்களை விட அதிகம் பயனர்களை ஈர்க்கிறது. இதனால் பலரும் இன்ஸ்டாகிராம் செயலிக்கு அடிமையாகி அத்தளத்தில் அதிக நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் 2018-ம் ஆண்டு இன்ஸ்டாகிராமில் பயனர்கள் செலவிடும் நேரத்தை கணக்கிட்டு கட்டுப்படுத்துவதற்காக ‘டெய்லி லிமிட்’ என்ற அம்சத்தை அந்நிறுவனம் அறிமுகம் செய்தது.

    இன்ஸ்டாகிராம் டெய்லி லிமிட் அம்சம்

    இதில் சென்று பயனர்கள் தங்களுக்கான செலவிடும் நேரத்தை தேர்வு செய்துகொள்ளலாம். அந்த நேரத்தை பயனர்கள் எட்டியவுடன் தானாக அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படும்.

    குறைந்தது 10 நிமிடத்தில் இருந்து இந்த ‘டெய்லி லிமிட்’ நேரத்தை தேர்வு செய்யலாம் இருந்த நிலையில், தற்போது குறைந்தபட்ச நேரம் 30 நிமிடமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. 

    இனி இன்ஸ்டாகிராம் பயனர்கள் தங்களுக்கான டெய்லி லிமிட் நேரத்தை 30 நிமிடங்கள், 45 நிமிடங்கள், ஒரு மணி நேரம், 2 மணி நேரம், 3 மணி நேரம் என வைத்துக்கொள்ளலாம்.
    பிற நிறுவனங்கள் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவை மட்டுமே இலவசமாக வழங்கும் நிலையில் ஜியோ பிரீமியம் சந்தாவை இலவசமாக வழங்குகிறது.
    ஜியோ நிறுவனம் 2 புதிய ரீசார்ஜ் திட்டங்களை வெளியிட்டுள்ளது. இந்த திட்டங்களில் வாடிக்கையாளர்களுக்கு ரூ.1499 மதிப்புள்ள டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது.

    இதன்படி ஜியோவின் ரூ.1499 புதிய திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள், தினமும் 100 மெசேஜ்கள், ஜியோ செயலிகளுக்கான இலவச சந்தாக்கள் 84 நாட்களுக்கு வழங்கப்படும். இந்த திட்டத்துடன் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தாவும் 84 நாட்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பிரீமியத்தை தனியாக வாங்கினாலே ரூ.1,499 வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

    டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பிரீமியம்

    இதேபோன்று மற்றொரு ரீசார்ஜ் திட்டமான ரூ.4199-ல் தினசரி 4ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள், தினமும் 100 எஸ்.எம்.எஸ்.கள், அனைத்து ஜியோ செயலிகளுக்குமான சந்தா ஒரு வருடத்திற்கு வழங்கப்படும். இத்துடன் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தாவும் கூடுதல் கட்டணம் எதுவும் இல்லாமல் ஒரு 365 நாட்களுக்கு வழங்கப்படும்.

    ஜியோ நிறுவனம் மட்டுமே டிஸ்னி+ ஹாட்ஸ் ஸ்டார் பிரீமியம் சந்தாவை தனது ப்ரீபெய்ட் திட்டங்களுடன் இலவசமாக வழங்குகிறது. பிற நிறுவனங்கள் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவை மட்டுமே மட்டுமே வழங்குகின்றன. 
    சமீபத்தில் ஃபேஸ்புக் பயனர்கள் பலர் டிக்டாக்கில் இணைந்தனர். அவர்களை மீண்டும் பெறுவதற்கு ஃபேஸ்புக் முயற்சி செய்து வருகிறது.
    மெட்டா நிறுவனம் இன்று முதல் ஃபேஸ்புக் ரீல்ஸ் சேவையை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே இன்ஸ்டாகிராமில் உள்ள இந்த ரீல்ஸ் சேவை இன்று முதல் பேஸ்புக் செயலியிலும் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் 150 நாடுகளில் இந்த பேஸ்புக் ரீல்ஸ் சேவை அறிமுகமாகியுள்ளது. 

    இதுகுறித்து ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் கூறுகையில், ரீல்ஸ் வகை வீடியோக்கள் இன்று உலகம் முழுவதும் பெரும் வளர்ச்சியை கண்டு வருகின்றன. இதையடுத்து இன்று முதல் ரீல்ஸ் சேவை பேஸ்புக்கிலும் கிடைக்கும் என கூறினார்.

    மெட்டா நிறுவனம் ரீல்ஸ் வீடியோவை உருவாக்குபவர்களுக்காக புதிய எடிட்டிங் சேவையையும் வழங்குகிறது. இதில் ரீமிக்ஸ், டிராஃப்ட், வீடியோ கிளிப்பிங் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெறும். 

    இதுகுறித்து பேஸ்புக் கூறுகையில், இந்த ரீமிக்ஸ் அம்சத்தின் மூலம் பயனர்கள் புதிய ரீல்ஸ் வீடியோக்களையும் உருவாக்கலாம், அதேசமயம் ஏற்கனவே பகிரப்பட்டிருக்கும் ரீல்ஸ் வீடியோக்களையும் எடிட் செய்யலாம். டிராப்ட் அம்சத்தில் ரீல் வீடியோக்களை பயனர்கள் சேகரித்து வைக்கலாம். வீடியோ கிளிப்பிங் அம்சத்தில் நீளமான வீடியோக்களை உருவாக்கலாம் என தெரிவித்துள்ளது. ஃபேஸ்புக்கில் 60 நொடிகளுக்கு ரீல் வீடியோக்களை உருவாக்கும் வகையில் இந்த சேவை வழங்கப்பட்டுள்ளது.  பேஸ்புக்கில் ஸ்டோரிஸ், வாட்ச், நியூஸ் ஃபீட் ஆகிய இடங்களில் ரீல்ஸ் சேவை காண கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    டிக்டாக் பேஸ்புக்


    இது தவிர மெட்டா நிறுவனம் ஃபேஸ்புக் ரீல் வீடியோ உருவாக்குபவர்களுக்கு மானிடைசேஷன் அம்சத்தையும் வழங்கியுள்ளது. இதன்மூலம் ரீல்ஸ் வீடியோ உருவாக்குபவர்கள் வருமானமும் பெறலாம்.

    தகுதியான நாடுகளில் இருந்து வரும் ரீல்ஸ் வீடியோக்களுக்கு சிறப்பு தொகை வழங்குவதற்காக ரூ.26 லட்சம் தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ரீல்ஸ் மூலம் பல்வேறு வகையில் விளம்பரம் செய்யும் செயல்பாட்டையும் பேஸ்புக் சோதனை செய்து வருகிறது.

    இந்த ரீல்ஸ் சேவையை ஃபேஸ்புக் அறிமுகம் செய்வதற்கு காரணம் அதன் தினசரி பயனர்கள் சமீபத்தில் குறைந்ததே என கூறப்படுகிறது. பேஸ்புக்கிற்கு கடும் போட்டியாக டிக்டாக் நிறுவனம் நிலவி வருகிறது. இதுவரை இல்லாத அளவில் டிக்டாக் அதீத வளர்ச்சியை சந்தித்து வருகிறது. தினமும் லட்சக்கணக்கான பயனர்கள் டிக்டாக்கில் இணைந்து வருகின்றனர். 

    இதனால் டிக்டாக் போலவே உள்ள ரீல்ஸ் சேவையை பேஸ்புக்கிலும் அறிமுகம் செய்வதற்கான சூழ்நிலையில் அந்நிறுவனம் தள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம் தான் இழந்த பயனர்களை மீண்டும் பெறலாம் என பேஸ்புக் நம்பி வருகிறது.
    ஃபிளிப்கார்டில் இன்று நடைபெறும் எலக்ட்ரானிக்ஸ் டே விற்பனையில் இந்த சிறப்பு விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது.
    ஃபிளிப்கார்ட்டின் எலக்ட்ரானிக்ஸ் டே விற்பனை இன்று நடைபெறுகிறது. இதில் தாம்ஸன் மற்றும் ப்ளூபங்க்ட் ஸ்மார்ட் டிவிகள் மற்றும் தாம்ஸன் வாஷிங் மெஷின்களுக்கு அதிரடி விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது.

    இதன்படி ப்ளூபங்க்ட்  ஸ்மார்ட் டிவிகளுக்கு ரூ.3000 வரை தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. 32 இன்ச் ப்ளூபங்க்ட்  சைபர் சவுண்ட் ஸ்மார்ட் டிவிக்கு ரூ.1000 குறைக்கப்பட்டு ரூ.12,999-க்கும், ப்ளூபங்க்ட் சைபர்சவுண்ட் 42 இன்ச் ஸ்மார்ட் டிவி ஃப்ள் ஹெச்.டி டிஸ்ப்ளே, 40W ஸ்பீக்கர்கள் உள்ள டிவி ரூ.2000 குறைக்கப்பட்டு ரூ.19,999-க்கும், 43 இன்ச் ப்ளூபங்க்ட் ஸ்மார்ட் டிவி ரூ.3000 குறைக்கப்பட்டு ரூ.27,999-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    தாம்ஸன் ஸ்மார்ட் டிவி மற்றும் வாஷிங் மெஷின்

    இன்றைய எலக்ட்ரானிக் டே விற்பனையில் ப்ளூபங்க்ட் ஸ்மார்ட் டிவிக்களை ஐசிஐசிஐ கார்ட் கொண்டு வாங்குபவர்களுக்கு 10 சதவீதம் கேஷ்பேக் சலுகையும் உண்டு.

    இதேபோல தாம்ஸன் ஸ்மார்ட் டிவிகள் ரூ.5000 வரை விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளன. தாம்ஸனின் பாத், ஓத் ப்ரோ, ஓத் ப்ரோ மேக்ஸ் உள்ளிட்ட டிவிகளுக்கு தள்ளுபடிகள் வழங்கப்பட்டுள்ளன.

    தாம்ஸன் டிவிகளின் விலை ரூ.8,499-ல் இருந்து தொடங்குகிறது.

    தாம்ஸனின் செமி மற்றும் ஃபுள்ளி ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷின்களுக்கு ரூ.1,500 வரை தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

    தாம்ஸன் வாஷிங் மெஷனின்களின் விலை ரூ.5,490-ல் இருந்து தொடங்குகிறது.
    இந்த இயர்போன் 2020-ம் ஆண்டு வெளியான புல்லட்ஸ் ஒயர்லெஸ் Z-க்கு மாற்றாக இருக்கும் என கூறப்படுகிறது.
    ஒன்பிளஸ் நிறுவனத்தின் புல்லட்ஸ் ஒயர்லெஸ் Z2 இயர்போன்ஸ் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நெக்பேண்ட் ஸ்டைலில் வெளியாகும் இந்த இயர்போன் 2020-ம் ஆண்டு வெளியான புல்லட்ஸ் ஒயர்லெஸ் Z-க்கு மாற்றாக இருக்கும் என கூறப்படுகிறது.

    அடுத்த மாதம் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படும் இந்த புல்லட் இயர்போன் குறித்த பிற விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. 

    இதில் ப்ளூடூத் v5.0 கனெக்டிவிட்டி அம்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

    ஒன்பிளஸ் புல்லட்ஸ் ஒயர்லெஸ் Z இயர்போனின் விலை இந்தியாவில் ரூ.1,999-ஆக அறிமுகம் ஆன நிலையில், இந்த புதிய இயர்போனின் விலை ரூ.2,5000-க்குள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ×