என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பச் செய்திகள்
X
இன்ஸ்டாகிராம் வெளியிட்டுள்ள திடீர் அறிவிப்பு- இனி இந்த செயலி இயங்காது..
Byமாலை மலர்1 March 2022 7:04 AM GMT (Updated: 1 March 2022 7:04 AM GMT)
இணையவாசிகள் அதிக அளவில் வீடியோக்களை பார்ப்பதில் நேரம் செலவிடுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இன்ஸ்டாகிராம் நிறுவனம் தனது ஐஜிடிவி செயலியை நிறுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.
இன்ஸ்டாகிராம் நிறுவனம் வீடியோக்களை அடிப்படியாக கொண்டு ஐஜிடிவி சேவையை கடந்த 2018-ம் ஆண்டு அறிமுகம் செய்தது. பிறகு இன்ஸ்டாகிராமில் இருந்து அந்த சேவையை நிறுத்தி, ஐஜிடிவியை தனி செயலியாக மாற்றியது. இந்நிலையில் தற்போது ஐஜிடிவி சேவையை முழுவதுமாக நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது.
ஐஜிடிவியில் வழங்கப்பட்டு வந்த அனைத்து அம்சங்களும், வீடியோ சேவைகளும் இனி இன்ஸ்டாகிராம் செயலியிலேயே வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
மேலும் தற்போது உள்ள இன்ஸ்டாகிராம் ரீல் வீடியோக்களில் விளம்பரங்கள் இடம்பெறும் வகையிலும் இன்ஸ்டாகிராம் மாற்றம் செய்து வருகிறது. இதன்மூலம் வீடியோ கிரியேட்டர்கள் ரீல்ஸ் மூலம் வருமானமும் பெறலாம் என கூறியுள்ளது.
இணையவாசிகள் தற்போது அதிக அளவில் வீடியோக்களை பார்ப்பதிலேயே நேரம் செலவிட்டு வருவதால், தனியாக இயங்கும் ஐஜிடிவி சேவையை நிறுத்தி, இன்ஸ்டாகிராமில் உள்ள வீடியோ அம்சத்தை மேம்படுத்தும் வேலையில் அந்நிறுவனம் இறங்கியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X