என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ரெயில் மறியல்"
- விவசாயிகள் ரெயில் மறியல் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
- அமிர்தசரசில் தண்டவாளங்களில் அமர்ந்து ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சண்டிகர்:
வேளாண் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தக் கோரிக்கைகளை வென்றெடுக்கும் நோக்கில் பஞ்சாப்பில் இருந்து கடந்த மாதம் 13-ம் தேதி டெல்லி நோக்கி பேரணியாக புறப்பட்ட விவசாயிகள் அரியானா எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் அங்கேயே தங்கியிருந்து போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.
அதேநேரம் இந்தப் போராட்டத்தை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ள அவர்கள் இதற்காக ஞாயிற்றுக்கிழமை ரெயில் மறியலுக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தின் அமிர்த்சரஸ் நகரில் தண்டவாளங்களில் அமர்ந்து ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
இதேபோல தமிழகத்திலும் விவசாயிகள் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் .
#WATCH | Punjab: Farmers organisations hold 'Rail Roko' protest, in Amritsar. pic.twitter.com/kqmSYjd1z9
— ANI (@ANI) March 10, 2024
- மார்ச் 10ம் தேதி நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை ரெயில் மறியல்.
- பேரணி நடத்தும் திட்டத்திலிருந்து பின்வாங்கப் போவதில்லை.
மார்ச் 10ம் தேதி நாடு முழுவதும் ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும் என விவசாய அமைப்புகள் அறிவித்துள்ளது.
டெல்லிக்குள் பேரணி நடத்தும் திட்டத்திலிருந்து பின்வாங்கப் போவதில்லை என்றும் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
அதன்படி, மார்ச் 10ம் தேதி நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும் என விவசாய அமைப்புகள் அறிவித்துள்ளது.
இதற்காக, வரும் 6ம் தேதி விமானம், ரெயில், பேருந்துகள் மூலம் விவசாயிகள் டெல்லி செல்ல விவசாயகிள் திட்டமிட்டுள்ளனர்.
- சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இன்று காலை முதலே விவசாயிகள் திரண்டனர்.
- சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையம் முன்பு ஏராளமான போலீசார் காலை முதலே குவிக்கப்பட்டு இருந்தனர்.
சேலம்:
காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகா அரசை கண்டித்து தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று சேலம் ஜங்ஷனில் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இன்று காலை முதலே விவசாயிகள் திரண்டனர். பின்னர் தலைமை தபால் நிலையம் அருகில் இருந்து ஊர்வலமாக சென்று ரெயில் மறியலுக்கு முயன்றனர்.
இதையொட்டி சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையம் முன்பு ஏராளமான போலீசார் காலை முதலே குவிக்கப்பட்டு இருந்தனர். ஊர்வலமாக சென்று ஜங்ஷன் ரெயில் நிலையம் முன்பு நுழைவு வாயில் பகுதியில் ரெயில் மறியலுக்கு முயன்ற விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது விவசாயிகள் அதனை மீறி உள்ளே நுழைய முயன்றனர். ஆனாலும் தடுத்து நிறுத்திய போலீசார் அவர்களை கைது செய்தனர். இதில் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி தலைமையில் 30 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.
- ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக உழவர் தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.
- தமிழகத்திற்கான காவிரி பங்கீட்டு நீரை வழங்க கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.
நாமக்கல்:
கர்நாடக அரசை கண்டித்து வருகிற 21-ந் தேதி (சனிக்கிழமை) சேலத்தில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக உழவர் தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.
இது குறித்து நாமக்கல்லில் அதன் மாநில தலைவர் வேலுசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்திற்கான காவிரி பங்கீட்டு நீரை வழங்க கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. இதனால் டெல்டா பகுதிகள் நீரின்றி பாலைவனமாகும் சூழல் உருவாகியுள்ளது. உரிய நீரை வழங்க மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து பல்வேறு மாநிலம், மாவட்டங்களில் இருந்து சேலம் ஜங்ஷன் வழியாக கர்நாடகத்திற்கு செல்லும் ரெயில்களை மறித்து வருகிற சனிக்கிழமை காலை 11 மணியளவில் போராட்டம் நடத்த உள்ளோம்.
இதில் உழவர் தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கத்தினர் திரளாக பங்கேற்க உள்ளனர். டெல்டா பாசன விவசாயிகளும், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளும் இந்த மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டு எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- டெல்டா மாவட்டங்களில் சுமார் 5 லட்சம் ஏக்கர் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டது.
- காவிரியில் தண்ணீர் குறைவாக வரும் காரணத்தினால் பல இடங்களில் பயிர்கள் கருக தொடங்கியது.
நாகப்பட்டினம்:
தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சுமார் 5 லட்சம் ஏக்கர் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் காவிரியில் தண்ணீர் குறைவாக வரும் காரணத்தினால் பல இடங்களில் பயிர்கள் கருக தொடங்கியது.
இதைத் தொடர்ந்து விவசாயிகள் மற்ற நீர்நிலைகளை வைத்து காப்பாற்ற போராடி வருகின்றனர். மேலும் பல இடங்களில் குடங்களில் தண்ணீர் கொண்டு சென்று வயல்களில் ஊற்றும் அவலநிலை உள்ளது. காவிரி தண்ணீர் திறந்து விடகோரி விவசாயிகள் பல இடங்களில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று குறுவை சாகுபடிக்கு கர்நாடகா அரசு தண்ணீர் கொடுக்க மறுப்பதை கண்டித்தும், காவிரி நீரை பெற்று தர உரிய அழுத்தம் கொடுக்காத மத்திய, மாநில அரசை கண்டித்தும் நாகை மாவட்டம் கீழ்வேளூர் ரெயில் நிலையத்தில் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பாக ரெயில் மறியல் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர்.
நாகையில் இருந்து திருச்சிக்கு சென்ற பயணிகள் ரெயிலை மறிக்க முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த ரெயில் மறியலில் ஈடுபட்ட சுமார் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
- பல்வேறு அமைப்புகளை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.
- அமிர்தசரஸ்-டெல்லி ரெயில் பாதையில் ஆயிரக்கணக்கில் விவசாயிகள் குவிந்து போராட்டம் நடத்தினர்.
அமிர்தசரஸ்:
பயிர்க்கடன் தள்ளுபடி, குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம், வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக பஞ்சாப் மாநில விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த கோரிக்கைகள் ஏற்கப்படாததை தொடர்ந்து நேற்று அவர்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 3 நாள் ரெயில் மறியல் போராட்டத்தை தொடங்கினர். ரெயில் தண்டவாளங்களில் ஆயிரக்கணக்கில் அமர்ந்து இருந்த அவர்கள், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இந்த போராட்டம் இன்றும் (வெள்ளிக்கிழமை), நாளையும் தொடரும் என விவசாயிகள் அறிவித்து உள்ளனர்.
இந்த போராட்டத்தில் கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டி, பாரதிய கிசான் யூனியன், ஆசாத் கிசான் கமிட்டி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.
அமிர்தசரஸ் அருகே உள்ள தேவிதாஸ் புராவில், அமிர்தசரஸ்-டெல்லி ரெயில் பாதையில் ஆயிரக்கணக்கில் விவசாயிகள் குவிந்து போராட்டம் நடத்தினர்.
இதைப்போல ஜலந்தர், மோகா, ஹோஷியார்பூர், குர்தாஸ்பூர், சங்ரூர், பாட்டியாலா, பதிண்டா, பெரோஸ்பூர் உள்ளிட்ட பல பகுதிகளிலும் ரெயில் மறியல் போராட்டம் நடந்து வருகிறது.
அமிர்தசரசில் நடந்த போராட்டத்தில் பேசிய விவசாய அமைப்பு தலைவர் குர்பசன் சிங், 'வட இந்திய மாநிலங்களுக்கு ரூ.50,000 கோடி வெள்ள நிவாரண நிதி மற்றும் சுவாமிநாதன் கமிஷன் அறிக்கையின்படி பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கை ஆகும்' என தெரிவித்தார். விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களின் ஒட்டுமொத்த பயிர்க்கடனையும் ரத்து செய்ய வேண்டும் எனக்கூறிய அவர், வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
விவசாயிகளின் இந்த ரெயில் மறியல் போராட்டத்தால் பஞ்சாப்பின் பல பகுதிகளில் ரெயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.
- தஞ்சையில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
- கட்சியினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
தஞ்சாவூர்:
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறியது, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கத் தவறியது , தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க மறுப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வரும் மத்திய அரசை கண்டித்து தஞ்சையில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
இதற்கு மாநில செயற்குழு உறுப்பினர் சாமுவேல்ராஜ் தலைமை தாங்கினார்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் செந்தில்குமார், மாநகர செயலாளர் வடிவேலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்தப் போராட்டத்தில் ஏராளமானோர் திரண்டு ரெயிலை மறிப்பதற்காக மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பியவாறு சென்றனர்.
ஆனால் அவர்களை ரயில் நிலையத்துக்குள் செல்ல விடாமல் போலீசார் பேரிகார்டுகள் கொண்டு தடுப்புகள் அமைத்தனர் .
அப்போது கட்சியினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அந்த நேரத்தில் பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் மாற்று வழியாக ரெயில் நிலையத்துக்குள் நுழைந்தனர்.
பின்னர் தண்டவாளத்தில் அமர்ந்து மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டனர். அவர்களை போலீசார் வலுக்கட்டா யமாக அப்புறப்படுத்தினர்.
சிலர் பேரிக்கார்டை தகர்த்து ரயில் நிலையத்துக்குள் செல்ல முயன்றனர். அவர்களையும் போலீசார் அப்புறப்ப டுத்தினர்.
ரயில் மறியல் போராட்ட த்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர்.
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
- கும்பகோணத்தில் இன்று காலை ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
- போராட்டக்காரர்களுக்கும் காவல்துறை இருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
சுவாமிமலை:
விலைவாசி கட்டுப்படுத்திடவும் சமூக பாதுகாப்புடன் கூடிய வேலையை கொடுக்கவும், 100 நாள் வேலையை முழுமையாக வழங்கிட வலியுறுத்தி ஒன்றிய அரசை கண்டித்து கும்பகோணத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இன்று காலை ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
ரெயில் மறியல் போராட்டத்திற்கு சி.பி.எம் மாவட்ட செயலாளர் சின்னை, பாண்டியன் தலைமை வகித்தார்.
மாவட்ட குழு உறுப்பினர் நாகராஜன் மாநகர செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட ஏராளமான சிபிஎம் கட்சியின கலந்து கொண்டு ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவல்துறையினர் முன்னதாகவே ரயில் நிலையம் வந்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற பலரை கைது செய்தனர்.
இருப்பினும் வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் ராமர் உள்ளிட்ட வாலிபர் சங்கத்தினர் மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் காலை 8.40க்கு வந்த ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மறிலில் ஈடுபட்ட போராட்டக்காரர்களுக்கும் காவல்துறை இருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன முழக்கமிட்டு மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர் அனைவரும் கைது செய்யப்பட்டனர். இதன் பின்னர் ரெயில் புறப்பட்டு சென்றது.
- நிர்வாகிகள் பேரணியாக புறப்பட்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பி சென்று கொண்டிருந்தனர்.
- சோழன் எக்ஸ்பிரஸ் ெரயிலை மறித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர்:
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரியும் , காலி பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தியும் , என்.எல்.சி. யில் அவுட் சோர்சிங் முறையை ரத்து செய்து நிரந்தர வேலை வாய்ப்பை அதிகப்படுத்தி உள்ளுர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க கோரி மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ெரயில் மறியல் போராட்டம் அறிவித்திருந்தனர்.
அதன்படி இன்று காலை கடலூர் ஜவான் பவன் சாலை அருகில் இருந்து மாவட்ட செயலாளர் மாதவன் தலைமையில் மாநகர செயலாளர் அமர்நாத், ஒன்றிய செயலாளர் பஞ்சாட்சரம், சிப்காட் செயலாளர் சிவானந்தம் முன்னிலையில் மாவட்ட செயற்குழு சுப்பராயன், ராஜேஷ், கண்ணன் மற்றும் நிர்வாகிகள் பேரணியாக புறப்பட்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பி சென்று கொண்டிருந்தனர். பின்னர் திருப்பாதிரிப்புலியூர் ெரயில் நிலையத்தில் சோழன் எக்ஸ்பிரஸ் ெரயிலை மறித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பி கொண்டிருந்தபோது, போலீசார் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட 40 பெண்கள் உட்பட 200 பேரை கைது செய்தனர்.
- 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11-ந்தேதி சேலத்தில் ரெயில் மறியல் போராட்டம் நடத்த முயன்றனர்.
- இந்த வழக்கு சேலம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு முதலாவது கோர்ட்டில் நடந்து வந்தது.
சேலம்:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி அருள் எம்.எல்.ஏ. உள்பட பா.ம.க.வினர் கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11-ந்தேதி சேலத்தில் ரெயில் மறியல் போராட்டம் நடத்த முயன்றனர்.
இதையடுத்து, ரெயில் மறியல் போராட்டம் நடத்த முயன்றதாக 5 பேர் மீது ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். இந்த வழக்கு சேலம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு முதலாவது கோர்ட்டில் நடந்து வந்தது.
நேற்று இந்த வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பு கூறப்பட்டது. இதில் குற்றம்சாட்டப்பட்ட, பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி, அருள் எம்.எல்.ஏ., மாநில வன்னியர் சங்க செயலாளர் கார்த்தி, மாநகர் மாவட்ட தலைவர் கதிர்ராசரத்தினம் உள்பட 5 பேரை விடுதலை செய்து நீதிபதி கலைவாணி உத்தரவிட்டார். வழக்கில் வக்கீல்கள் விஜயராசா, குமார் ஆகியோர் ஆஜராகினர்.
- மானாமதுரையில் ெரயில் மறியலுக்கு முயன்ற காங்கிரசாரை கைது செய்தனர்.
- சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.ஆர்.பி.முருகேசன் தலைமை தாங்கினார்.
மானாமதுரை
ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்தும் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பழைய பஸ் நிலையத்தில் இருந்து காங்கிரஸ் கட்சியினர் ெரயில் மறியல் செய்ய ஊர்வலமாக புறப்பட்டனர். ெரயில் நிலையத்திற்குள் நுழைய முயன்ற கட்சியினரை டி.எஸ்.பி.கண்ணன், இன்ஸ்பெக்டர் முத்து கணேஷ் உள்ளிட்ட போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இந்த போராட்டத்திற்கு சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.ஆர்.பி.முருகேசன் தலைமை தாங்கினார். மானாமதுரை தொகுதி காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் சஞ்சய், கவுன்சிலர் புருஷோத்தமன் மற்றும் திருப்புவனம், திருப்பாச்சேத்தி, இளையான்குடி பகுதியில் இருந்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து ெரயில் மறியலுக்கு முயன்ற காங்கிரசார் 80 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர்.
- அனைத்து கட்சி சார்பில் ெரயில் மறியல் போராட்டம் வருகிற 28- ந்தேதி கடலூரில் நடக்கிறது.
- கடலூர் -புதுச்சேரி இருப்புப்பாதை திட்டத்தை விரைந்து உருவாக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடலூர்:
கடலூர் மாநகர அனைத்து அரசியல் கட்சிகள் குடியிருப்போர் சங்கங்கள் ஆலோசனை கூட்டம் கடலூர் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் மாதவன் தலைமையில் நடை பெற்றது. கூட்டத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் மாநில செய லாளர் வக்கீல் சந்திர சேகரன், கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜேஷ் கண்ணன், அமர்நாத், குடியிருப்போர் சங்க பொதுச்செயலாளர் மருத வாணன், தலைவர் வெங்கடேசன், மாநகராட்சி கவுன்சிலர் அருள்பாபு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வட்ட செயலாளர் சுந்தர ராஜன், மீனவர் விடு தலை வேங்கை மாநில நிர்வாகிகள் வெங்க டேசன், ரமேஷ், வி. சி. க நகர செயலாளர் செந்தில், , விவசாய சங்க மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில்கொரோனா ஊரடங்கு பிறகு இயக்கப்பட்ட கடலூர் திருப்பாப்புலியூர்ெரயில் நிலையத்தில் நின்று சென்ற மன்னார்குடி, காரைக்கால் விரைவு ரயில்கள் மீண்டும் திருப்பாதிரிப்புலியூர் ெரயில் நிலையத்தில் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் உழவன் எக்ஸ்பிரஸ் இரண்டு வண்டிகளும் கடலூர் முதுநகர்ரயில் நிலை யத்தில் நின்று செல்வ தற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலூர் -புதுச்சேரி இருப்புப்பாதை திட்டத்தை விரைந்து உருவாக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். விழுப்புரம் மயிலாடுதுறை அனைத்து பாசஞ்சர் ரயில்களை முழுமையாக இயக்கிட வேண்டும் முதியோர் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு சலுகை மீண்டும் அளிக்க வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கை களை வலியுறுத்தி அனைத்து கட்சியின் சார்பில் வருகிற ஜூன் 28 ந்தேதி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம் நடத்துவது. இதற்கு அனைத்து பகுதி மக்களும் ஆதரவு அளிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்