search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ராகுல் எம்.பி.பதவி பறிப்பை கண்டித்து கோவையில் காங்கிரசார் ரெயில் மறியல் பெண்கள் உள்பட 75 பேர் கைது
    X

    ராகுல் எம்.பி.பதவி பறிப்பை கண்டித்து கோவையில் காங்கிரசார் ரெயில் மறியல் பெண்கள் உள்பட 75 பேர் கைது

    • காங்கிரஸ் கட்சியினர் 80-க்கும் மேற்பட்டோர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    கோவை:

    கோவையில் ராகுல் காந்தி எம்.பி. தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் 80-க்கும் மேற்பட்டோர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்கள் கோஷமிட்டபடி கோவை ரெயில் நிலையத்தை நோக்கி வந்தனர். பின்னர் ரெயில் நிலையத்துக்குள் செல்ல முயன்றனர்.

    அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆனால் போராட்டக்காரர்கள் போலீசார் அமைத்திருந்த தடுப்புகளை மீறி ரெயில் நிலையத்துக்குள் நுழைய முயன்றனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் ரெயில் நிலையம் முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 5 பெண்கள் உள்பட 75 பேரை கைது செய்தனர்.

    Next Story
    ×