search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    காட்பாடி, ஆரணியில் காங்கிரசார் ரெயில் மறியல்
    X

    காட்பாடி, ஆரணியில் காங்கிரசார் ரெயில் மறியல்

    • மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
    • காட்பாடியில் வேலூர் மாநகர் மாவட்ட தலைவர் டீக்காராமன் தலைமையில் காங்கிரசார் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    வேலூர்:

    ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து ஆரணி அருகே களம்பூர் ரெயில் நிலையத்தில் மாவட்ட தலைவர் அண்ணாமலை தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருப்பதியிலிருந்து விழுப்புரம், ஆரணி மார்க்கமாக சென்ற அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயிலை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட ஆரணி டி.எஸ்.பி ரவிசந்திரன் தலைமையிலான போலீசார் காங்கிரஸ் கட்சியினர் சுமார் 100-க்கும் மேற்பட்டோரை கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

    காட்பாடியில் வேலூர் மாநகர் மாவட்ட தலைவர் டீக்காராமன் தலைமையில் காங்கிரசார் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர்.

    Next Story
    ×